Thursday 31 July 2014

தமிழ் வளரத் தமிழரல்லா

தமிழ் வளர தமிழரல்லாத அறிஞர்களின் கருத்து

மமமமமமமமமமமமமமமம

உல்ரிச் நிக்கோலஸ் (ஜெர்மனி) :-

“நிலாச்சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள்.
அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம், என்று ஆயிரம் கதைகள் அழகுத் தமிழில் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் இருந்தே தமிழோடு இணைந்து குழந்தைகள் நடந்தால் அவர்களும் வளர்வார்கள்,
தமிழும் தானாக வளரும். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரும், ரெயின் ரெயின் கோ அவே-வும் இத்தனை ஆண்டுகளாக
நமக்கு எதைச் சாதித்துத் தந்துவிட்டன?
தமிழை அழித்தததைத் தவிர!”

சைமன் (நெதர்லாந்து):-

ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. தமிழர்களைச் சென்றடைய வேண்டிய செய்திகளைச் செந்தமிழில் இல்லாவிட்டாலும் நடைமுறைத் தமிழிலாவது தர வேண்டும். இங்கு ஆங்கில ஆதிக்கம் நிரம்பி வழிகிறது. எனவே,
இனி வரும் காலங்களில் இனிய தமிழோடு மக்களைச் சந்திக்கலாமே!”

டிமிடா (ஜெர்மனி):-

தமிழகப் பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க்
கல்வி வந்துள்ளதாக அறிகிறேன்.
தமிழ்நாட்டிலேயே தமிழில் படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை வந்தது வெட்கக்கேடு. இருந்தாலும்
பரவாயில்லை. இன்று ஆரம்பித்திருக்கும் கல்விப் பயணம் எந்த ஒரு அரசியல்
மாற்றத்தினாலும் மாறக் கூடாது. சில நேரங்களில் உணவைக் குழந்தைகளுக்குத்
திணித்து ஊட்டுகிறோமே. அது போலத்தான் இதுவும். நாள்பட நாள்பட இந்த உணவு பிடித்துப் போகும்.

தாம்ஸ் லேமன் (ஜெர்மனி):-

ஆங்கிலத்தில் பேசினால்தான் கவுரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மனத்தில்
புதைந்து இருக்கிறது. மிகமோசமான கிருமி இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதையும்
உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது.
உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில்
ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி.
நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள்.
அதாவது தமிழிலேயே கதையுங்கள்.
ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம். தமிழனாய் வாழ்வோம்.

கலையரசி (சீனா):-

இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை ஞாபகம் கொள்கிறீர்கள்.
பிறகு மறந்து போவீர்கள்தானே?
இங்கேயே பார்த்துவிட்டேன்.
என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல
பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம்?
நியாயப்படி எனக்குத்தான் சிரிப்பு வர வேண்டும்.
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும் ஆண்களும் நித்தம் நித்தம் தமிழ்க் கொலை புரிதலைச் சகிக்க
முடியவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்த சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனிதில்
பதியும்? ஆகவே ஆரோக்கியமான தமிழ் வாழும் இடமாக உங்கள்
சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ் மீது கொண்ட
காதலால்தான் என் பெயரைக் கலையரசி என்று மாற்றியுள்ளேன்.
எவ்வளவு இனிமையான பெயர்!

பிருந்தா பெர் (கனடா):-

சமுதாயத்துக்கு எந்த ஓர் உணர்வையும் அழுந்த ஊட்டுவதில் ஈடு இணையில்லாத வலிமை,
கலை மற்றும் இலக்கியத்தின் வசம்தான் இருக்கிறது. பட்டிதொட்டியில் ஆரம்பித்து நவநாகரிக நகரம் வரை தமிழ்மொழியின் நங்கூரத்தை அழுத்திப் பாய்ச்ச நல்ல தமிழில் நயமான இலக்கியங்கள் தேவை.
காலத்துக்கு ஏற்றபடி புதுவித இலக்கிய
வடிவங்கள் உடனடியாகத் தமிழில் வேண்டும்.
அது சுவையுடன் இருத்தல் அவசியம்.

அஸ்கோ பர்போலா (பின்லாந்து):-

பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு 'உலகமயமாக்கல்’ என்ற
கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது.
இதற்குத் தமிழும் தப்பவில்லை.
உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான்
நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும்
என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள்.
நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
‘உலகமயமாக்கல்
போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின்
நடக்கிறேன். அப்போதுதான் இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்’
என்பது வெற்று உளறல்.
தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும்
நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா?
எனவே எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்.

அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா):-

உங்கள் மொழியைப் படிக்க ரஷ்ய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள்.
தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்… பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை.
தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது. அதன் அனைத்துப் பாடல்களும் மனிதாபிமானம் பேசுகின்றன, மனிதத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால்தான் அதைப் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட
ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவர் ஆனவுடன்தான் நான் இந்த
மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன்பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக
இல்லாமல் இலக்கியம் படியுங்கள்.

கிரிகோரி ஜேம்ஸ் (பிரிட்டன்):-
இது போன்ற மாநாடுகளை 10ஆண்டுகளுக்கு ஒரு முறையோ 15ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடுகளைத்
தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த
ஒரு விழிப்புணர்பை ஏற்படுத்த முடியும்.
இவையே மொழிக்கு உந்து சக்தியாக அமையும்.
இது போன்ற நிகழ்வுகள் வெறும் விளம்பரங்களாக இல்லாமல் ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்!”

ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா):-

நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன்பிறகுதான் தமிழைப் படித்தவன்.
உங்களது மொழியில் அனைத்துத் தன்மைகளுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது தமிழிச்
செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப்
பல்வேறு ஆதாரங்களுடன் எழுதி அனுப்பியவன் நான். இது போன்ற வரலாற்றையும் மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டு போய்ச்சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.
எப்படிப்பட்ட வரலாற்றுக்கு வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும்
வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். அதைச்
செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்!”
நன்றி:-
விடுதலைமலேசியாஇன்று
( http://thirutamil.blogspot.com/2010/07/blog-post_21.html?m=1 )

//செவுளில் அறைந்தது போல் இருக்கிறதா?
இவ்வறிஞர்களுக்கு தாம் வந்திருக்கும் இச்செம்மொழி மாநாட்டை நடத்துபவனே தமிழன் இல்லை என்பதோ தமிழினம் அழிவைச் சந்திக்கும்போதெல்லாம் தமிழ் மொழிக்கு சில எலும்புத்துண்டுகளை வீசியெறியும் அரசியல்தான் இங்கே நடக்கிறது என்றோ தெரியுமா???

Saturday 26 July 2014

விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்

விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்

/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/

நீங்கள் '1958 சந்த்ரா' என்று கேள்விப்பட்டதுண
்டா?
இது விண்ணில் சுற்றிவரும் கோளும் அல்லாத
பாறையும் அல்லாத ஒரு குறுங்கோள் ஆகும்;
இதில் 'சந்த்ரா' என்ற பெயர்
ஒரு தமிழனை பெருமைப் படுத்தும் விதத்தில்
சூட்டப்பட்ட பெயர் ஆகும்;
அந்த தமிழர்தான் திரு.சுப்பிரமணியம்
சந்திரசேகர்;
1910ல் தற்போது பாகிஸ்தானில் உள்ள
லாகூரில் ஆங்கில அரசில் பணிபுரிந்துவந்த
இவரது தந்தை (சர்.சி.வி.ராமனின் அண்ணன்)
வசித்தபோது பிறந்தார்;
பிறகு தமிழகம் திரும்பி 1930களில்
அமெரிக்கா சென்று குடியேறுகிறார்;
அங்கே பல்வேறு சாதனைகளும் விருதுகளும்
குவித்து பெயர்பெற்ற அறிவியலாளராக(வி
ஞ்ஞானி) வளர்கிறார்;
1983ல் இவரது 'விண்மீன்களின் பரிணாமம்'
பற்றிய ஆய்வைப் பாராட்டி இயற்பியலுக்கான
நோபல் பரிசு வழங்கப்படுகிறது;
இந்த ஆய்வு விண்மீன்களின் வயதையும்
ஆயுளையும் கணிக்க உதவுகிறது; கதிரவனின்
வயதைக் கணித்தவர் இவர்தான்
என்று நம்பப்படுகிறது;
வானியல் ஆய்வாளர் 'சந்திரசேகர் எல்கை'
என்பதைப் பயன்படுத்துகின்றனர்;
இயற்பியலாளர்கள் 'சந்திரசேகர் எண்' என்பதைப்
பயன்படுத்துகின்றனர்;
இத்தனை பெருமைமிக்க ஒரு தமிழனைப்
பற்றி எந்த தமிழனுக்கும் தெரியாது;
திராவிடக் கட்சிகள் இவர் ஒரு தமிழ்ப் பார்ப்பனர்
என்பதாலேயே இவரை மறைத்துவிட்டனர்;
இவரது சித்தப்பாவான சர்.சி.வி.ராமனும்
ஒரு நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்; அவர்
திராவிடம் தலைதூக்கும்
முன்பே பரிசு பெற்றவராதலால்
அவரை மறைக்கமுடியவில்லை;
கதை இதோடு முடியவில்லை;
சி.வி.ராமனின் மகனான திரு.வெங்கடராமன்
ராமகிருஷ்ணன் என்பவர் 2009ல்
வேதியியலுக்கான நோபல்
பரிசு வழங்கி பாராட்டப்பட்டார்; இதுவும்
பலருக்குத் தெரியாது;
ஆக தமிழர்களில் இதுவரை 3பேர் உலகின்
மிகச்சிறந்த விருதாகக் கருதப்படும் நோபல்
பரிசு பெற்றுள்ளனர்;
இன்னும் இருக்கிறது;
ராமானுஜம் மிக
இளவயதிலேயே இறந்துவிட்டார்
இல்லாவிட்டால் அவருக்கும் நோபல்
பரிசு கட்டாயம் கிடைத்திருக்கும்;
சி.வி.ராமனின் மாணவரான ஜி.என்.ராமச்சந்திரன்
நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்
ஆனால்
அது கிடைக்கவில்லை (எப்படி கிடைக்கும்,
அவர் ஒரு வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்திரு
ந்தால் கிடைத்திருக்கும்);
ஏ.ஆர்.ரகுமான் கூட ஒரு ஐரோப்பிய
படத்திற்கு இசையமைக்கவில்லை என்றால்
அவருக்கும் 'ஆஸ்கார்' கிடைத்திருக்காது;
இதேபோல சிவசங்கர நாராயணப்பிள்ளை,
கே.எஸ்.கிருஷ்ணன் என்று உலகளாவிய
புகழ்பெற்ற பல தமிழ் மேதாவிகள் இருந்தனர்.
நமக்கு இவர்களின் பெயரெல்லாம் தெரியாது;
நமக்குத் தெரிந்ததெல்லாம் நோபல்
பரிசை ஏற்படுத்தியர் ஆல்பிரட் நோபல்
என்பதும், நோபல் பரிசு பெற்றவர்களில்
அன்னை தெரசா, ரவீந்தரநாத் தாகூர்,
அமர்த்தியா சென் போன்ற ஹிந்தியர்களின்
பெயர்களும் மேலும் கல்பனா சாவலா,
மேத்தா பட்கர், அருந்ததி ராய் போன்ற
தமிழரல்லாதவர்களின் பெயரும்தான் தெரியும்.
நம் மொழி பேசும், நம் இனத்தைச் சேர்ந்த, நம்
மண்ணில் பிறந்த மேதாவிகளை அவர்கள் பிறந்த
சாதியைக் காரணம்காட்டி மறைத்துவிடும்
கீழான அரசியலைத்தான் நாம்
அரியணை ஏற்றி வைத்திருக்கிறோம்.
https://m.facebook.com/photo.php?fbid=470592359711089&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr&refid=13#470604516376540

ஈழம் நோக்கிப் புறப்பட்ட தமிழகம்

ஈழம் நோக்கிப் புறப்பட்ட தமிழகம்

$S$S$S$S$S$S$S$S$S$S$S$

ஈழத்தில் கருப்பு யூலைக் கலவரம்
நடந்தபோது தமிழகத்தில்
பல்வேறு போராட்டங்கள் தமிழக மக்களால்
நடத்தப்பட்டது; வேற்றினத்தார் ஆட்சியில்
சிக்குண்டுள்ள 'ஏழைத் தமிழகம்' தம்மால்
முடிந்த எதிர்ப்பைத் தெரிவித்தது;
அதில் முத்தாய்ப்பான போராட்டம்
பழ.நெடுமாறன் அவர்கள் நடத்திய 'தியாக
பயணம்' போராட்டம்;
கருப்பு யூலைக் கலவரம்
முடிந்து ஒவ்வொரு செய்தியாக வெளிவெரத்
தொடங்கியபோது தமிழக மக்கள்
அதிர்ந்துபோனார்கள்;
ஈழம் நோக்கிச் செல்லவும் துணிந்த
பழ.நெடுமாறன் துணிவுள்ள இளைஞர்கள்
மதுரையில் கூடும்படி அழைப்பு விடுத்தார்;
சுமார் ஐயாயிரம் இளைஞர்கள் மதுரையில்
திரண்டனர்;
7,ஆகஸ்ட்,1983 அன்று குன்றக்குடி அடிகளார்
தொடங்கிவைக்க மதுரையிலிருந்து பேரணியாக
ராமேசுவரம் சென்றனர்;
வழிநெடுக மக்கள் வரவேற்பளித்தவாறும்
விருந்தோம்பல் செய்தும் கூட்டத்தில்
சேர்ந்தவாறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள்
ராமேசுவரம் வந்தடைந்தனர்;
காவல்துறையினர் இந்த எழுச்சிபெற்றக்
கூட்டத்தைச் சமாளிக்கமுடியாமல்
திணறிக்கொண்டிருந்தனர்;
என்ன செய்வது ஈழத்திற்கும் தமிழகத்திற்கும்
இடையில் இந்தப் பாழாய்ப்போன கடல்
இருக்கிறதே!
காவல்துறையினர் முன்னேற்பாடாக படகுகளைப்
பறிமுதல் செய்துவிட்டிருந்தனர்;
ராமேசுவர மீனவர்களையும் போராட்டக்காரர்க
ளுக்கு படகு தரக்கூடாது என்று மிரட்டிவைத்திரு
ந்தனர்;
ஆனாலும் கிடைத்த ஒரு படகுகளில்
ஏறிக்கொண்டு பழ.நெடுமாறன் தலைமையில்
புறப்பட்டனர்;
பலர் முடிந்த
தொலைவு வரை கூடவே நீந்திச்சென்றனர்;
நடுக்கடலில் கடலோரக் காவல்படையால்
வழிமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
சட்டமன்றத்தில் ம.கோ.இரா (எம்ஜிஆர்)
மீது படகுகளைப் பறிமுதல் செய்ததாகக்
குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கடுமையான
கண்டம் தெரிவிக்கப்பட்டது;
"ஆமாம், நான்தான் பறிமுதல் செய்தேன்;
சிறிலங்கா கடற்படை சுட்டால்
தடுப்பதற்கு அவர்களிடம் மனத்துணிவைத் தவிர
என்ன இருக்கிறது?"
என்ற மகோஇரா பதிலளித்தார்.
(இதே போல பண்டாரவன்னியனுக
்கு தமிழகத்திலிருந்து 'ரகுநாத நாயக்கர்' என்ற
தெலுங்கு மன்னர் படையுதவி செய்துள்ளார்;
ஈழத்திற்கு வேற்றினத்தார் செய்த
உதவிகளை மறைக்கக்கூடாது என்பதற்காக
இதை இங்கே கூறுகிறேன்)
இதில் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும்;
கருப்பு ஜூலை என்பது 25ம்
தேதியிலிருந்து 30ம் தேதி வரையான கலவரம்
ஆகும்.
ஆனால், 8நாட்கள் கழித்துதான் தமிழகம்
தமது பெரியளவிலான போராட்டத்தைத்
தொடங்குகிறது;
இதேபோல 2009
இனவழிப்பிற்கு பிறகு தமிழகத்தின்
பெரியளவிலான போராட்டங்கள் 2013ல்தான்
நடக்கிறது;
இதேபோலத்தான் கர்நாடக,ஆந்திர,கேரள
மாநிலங்களில் உள்ள தமிழர்கள் படும்
அல்லல்களும் அவர்களது போராட்டங்களும்
கூட தமிழக மக்களுக்குத் தெரியவராது;
என்றால் அந்தமான்,மலேசிய,சிங்கப்பூர்
தமிழரைப் பற்றி கூறவும் வேண்டுமா?
இதற்குக் காரணம் வேற்றினத்தார்
ஊடகங்களைக்கூட பெரும்பாலும்
கைப்பற்றி அரசியல் ரீதியாக
ஒரு இரும்புத்திரைக்குள் தமிழக
மக்களை வைத்திருப்பதுதான்.
ஈழமக்களும் மேற்குலக நாடுகளில்
பரப்புரை செய்வதில் காட்டும் அக்கறையைத்
தமிழ் மக்களிடம் பரப்புரை செய்வதில்
காட்டுவதில்லை;
தமிழகத்தின் ஈழ ஏதிலிகள்(அகதி) கடுமையான
கண்கானிப்பில் அடக்கி வைக்கப்பட்டிருப
்பது இந்த காரணத்தினாலேயே ஆகும்.
https://m.facebook.com/photo.php?fbid=470103026426689&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Sunday 20 July 2014

குறுக்கே வந்து அடிபடாதீர்

காந்தி சொன்ன கணிப்பு

ஞஞஞஞஞஞஞஞஞஞ

காந்தி ஒருமுறை சொன்னார்
"இந்தியா வெள்ளையர் கையைவிட்டுப்
போகுமேயானால் அவர்களது ஏகாதிபத்திய
நாடுகளும் அவர்கள் கையைவிட்டுப்
போய்விடும்;
எனவே ஆங்கிலேயர் பிடித்துவைத்திருக்கும்
நாட்டுமக்கள் இந்தியாவின்
விடுதலையை முக்கியத்துவம்
கொடுத்து ஆதரிக்கவேண்டும்".
அவர்
கூறியது போலவே இந்தியாவை ஆங்கிலேயர்
விட்டுவிட்டு வெளியேறிய பத்தாண்டுகளுக்குள்
அதுவரை உலகிலேயே பெரிய பேரரசாக விளங்கிய
ஆங்கில பேரரசு முடிவுக்கு வந்தது.

இதையே நமது சூழலுக்கு பொருத்திப் பார்ப்போம்.
ஹிந்தியாவின் கைகளிலிருந்து தமிழகம் விடுபடுமேயானால் பல்வேறு நாடமை(தேசிய)
இனங்களும் அதன் கையைவிட்டுப் போய்விடும்;

எனவே ஹிந்தியா பிடித்துவைத்திருக்கும்
நாடமை இனங்களே, நீங்கள்
ஆதரவு தராவிட்டாலும்
பரவாயில்லை,
குறுக்கே வந்து அடிபடாமல் இருங்கள்.
https://m.facebook.com/photo.php?fbid=468720669898258&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=48

ஓ டயரைக் கொன்றால் போராளி, ராஜீவைக் கொன்றால் தீவிரவாதியா?

ஓ டயரை கொன்றால் போராளி
ராசீவைக் கொன்றால் குற்றவாளியா?

?????????????

1919 ஜாலியன் வாலா பாக் பஞ்சாபி சீக்கியர்
படுகொலைக்கு பழிவாங்க லண்டன்
சென்று 22ஆண்டுகள் கழித்து ஜெனரல் ஓ
டயரைச் சுட்டுக்கொன்ற உதம் சிங்
(பஞ்சாபி சீக்கியர்) இந்திய
அரசுக்கு போராளி என்றால்
அமைதிப்படை அனுப்பி ஆறாயிரம்
தமிழ்மக்களைக் கொன்று 800 தமிழ்ப்
பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய
ராசீவைக் கொன்ற தனு எங்களுக்கு போராளியே.
நன்றி: சனவரி 14 'நம்வேர்கள்'

Saturday 19 July 2014

பிலிப்பைன்ஸ் தமிழர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தமிழ்
ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ
படத்தைப் பார்த்தாலே தமிழின் இழிநிலை விளங்கும்;
பிலிப்பைன்ஸில் வாழும் தமிழர்
பற்றி ஏதாவது தெரிந்தால் இங்கே பகிரவும்;
தெரியாத மற்றவருக்கு இந்த பதிவைப் பகிரவும்.
சில தரவுகள்:-
Jose dalman மாவட்ட ஆட்சி மொழிகளில் ஒன்று தமிழ்;
cainta,rizal என்ற இடத்தில் 1794ல்
ஆங்கிலப்படை அழைத்து சென்ற தமிழர்
அங்கேயே குடியமர்ந்தனர்;
தலைநகர் மனிலா ல் வெரித்தாஸ், கிருபை ஆகிய
இரு தமிழ் கிறித்துவ வானொலிகள் உள்ளன;
வெரித்தாசு வானொலியில் பணிபுரிந்த திரு.ஜெகத்
கஸ்பர்
http://nakkheeran.in/users/frmNews.aspx?N=1
9781
தமிழில் ஜெபம் பாடும் பிலிப்பினோ கிறித்தவர்
http://m.youtube.com/watch?v=rb0bL1booEM
சம்போங்கா தமிழ் மழலையர் பள்ளி
http://www.zamboanga.com/z/index.php?title=
File%3AElementary_school_tamil_jose_dalman_za
mboanga_del_norte.jpg
கலைநிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்
http://m.youtube.com/watch?v=UCgZECm6nlA
பிலிப்பைன்சு புரட்சியாளர் ஈழவிடுதலைக்கு ஆதரவு
http://naamtamilar.org/செய்திகள்/புலம்பெயர்-
தேசங்கள்/பிலிப்பைன்ஸ்-நாட்டின்-கி
பிலிப்பைன்சு சூறாவளியில் பாதிக்கப்பட்ட தமிழர்
பேட்டி
http://www.bbc.co.uk/tamil/global/2013/11/
131110_phillipinescyclone.shtml
தமிழருக்கும் பிலிப்பினோவுக்கும் பிறந்தவரின்
கட்டுரை
http://tamilculture.ca/navigating-through-my-
tamil-filipino-world-an-account-of-a-mixed-
first-generation-kid/
https://m.facebook.com/photo.php?fbid=421580777945581&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

மரியாதைக்குரிய பள்ளர்

மரியாதைக்குரிய பள்ளர்
சன்னதியில் பரிவட்டம்
யானை மீது ஊர்வலம்
வெண்கொற்றக்குடை நிழல்
மள்ளர் குலப்பெருமை மணிமுடியாய்த் தரித்த
தமிழினம்
தமிழ்நாட்டின் பழம்பெரும் கோவில்களான
மதுரை மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் ,
பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன்
கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் ,
நெல்லையப்பர் , சங்கரன் கோவில் மற்றும்
கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில்
பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு இன்று வரையி
லும் முதல் மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த பல
விழாக்களும் நடைபெறுகின்றன ,
திருப்பரங்குன்றம் கோவிலில்
http://mallarchives.blogspot.in/2012/
11/3874.html?m=1
பழனி
http://devendrarkural.blogspot.in/2014/01/blog-
post_8121.html?m=1
மதுரை மீனாட்சி கோவில்
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_9550.html?m=1
திருநெல்வேலி நெல்லையப்பர் சிவன்கோவில்
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_4.html?m=1
பேரூர் (கோவை மாவட்டம்)
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_6.html?m=1
https://m.facebook.com/photo.php?fbid=422122847891374&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

ஜெ. பாவாடைக்குள் மன்மோகன்

ஜெயலலிதா பாவாடைக்குள் எட்டிப்பார்க்கும் மன்மோகன்
'லக்பிம' சிங்கள பத்திரிக்கையில் வந்த படம்
(9செப்டம்பர்2012)
https://www.colombotelegraph.com/index.php/
lakbimanews-cartoon-controversy-why-i-stand-
by-our-cartoon/lakbima-cartoon/
இதுதான் 7கோடி தமிழர்களின்
முதல்வருக்கு கிடைக்கும் மரியாதை; எவனும்
தட்டிக்கேட்கவும் இல்லை, கண்டனமும் தெரிவிக்கவில்லை.
செல்வி.ஜெயலலிதா திருவாய் மலர்ந்தவை
“புலிகள் இயக்கத்தை ஓர் அரசியல் இயக்கமாக
நாங்கள் கருதவில்லை. அது ஒரு பயங்கரவாதக்
கும்பல். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின்
பெயர்கள் புலிகளின் கொலைப்பட்டியலில்
இடம்பெற்றுள்ளன. எனவே, அந்த அமைப்பைத்
தடை செய்ய வேண்டும்.
அதற்கு சரியான தருணம் இது"(ஜனவரி1992)
“போர்
என்றால் பொது மக்கள் சாவது இயற்கை தான்"(மே2009)
"இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக
இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம்
ஒப்படைப்பதற்கு மத்திய
அரசு உடனடி நடவடிக் கையை மேற்கொள்ள
வேண்டும் என்று இச்சட்டப்
பேரவை வற்புறுத்துகிறது"(14ஏப்ரல்2002)
வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால் உள்ளிட்ட
9பேரை புலிகள் பெயரைச் சொல்லி பொடா மூலம்
பழிவாங்கியது(2003)
http://www.koodal.com/news/tamilnadu.asp?id
=2043&title=tamilnadu-news-headlines-in-tamil
வரப்போகும் தேர்தலில்
காங்கிரசு செல்வாக்கை சரிக்கவும், தமிழ்மக்களின்
உணர்வுகளில் ஆதாயம் கறக்கவும், (நோயுற்ற
தந்தையைக்காண நளினிக்கு பரோல் கிடைக்கவிடாத
அம்மையார்) இப்போது அறிவித்த எழுவர்
விடுதலை 'தமிழன் காதில் சுற்றிய பூ'
http://www.vinavu.com/2014/03/03/rajiv-
assasination-case-jayalalitha-drama/
http://www.thinakkural.lk/article.php?article
%2Fgdgprwljzy4574ddac1f6f13
9414vzbhcbb372a177804adcd3b8a31e7djr
இவர்கள் விடுதலையானால் 2000ல் தர்மபுரியில்
3மாணவிகளை எரித்துக்கொன்ற அதிமுக
குற்றவாளிகளும் விடுதலை ஆக காய்நகர்த்த
வாய்ப்பு உண்டு.
http://m.oneindia.in/tamil/news/2007/12/06/tn-
dharmapuri-bus-burning-hc-confirms-death-pe
nalt.html
எவனுமே மதிக்காத 'இலங்கைக்கு பொருளாதாரத்
தடை கோரிய தமிழக சட்டமன்ற தீர்மானம்'
http://www.maalaimalar.com/2011/06/
08123813/tamilnadu-assembly-jayalalitha.html
(மதிக்கவில்லை http://www.vikatan.com/new/
article.php?page=2&module=news&
mid=9&sid&aid=3117&type=all )
மீனவர் பிரச்சனையில் முடிந்தது 'கடிதமும்
கண்டனமும்' மட்டுமே
http://www.cmr.fm/thamilfm/NewClients/
NewsDetail.aspx?ID=12310 http://
www.maalaimalar.com/2014/03/07024516/
Fishermen-about-prime-minister.html
2011 தேர்தல் நேரத்தில்
ஈழத்திற்கு இந்தியப்படை அனுப்புவேன் என்ற
வாய்ச்சவடால்
http://m.youtube.com/watch?v=LAVlrAF9mu0
(சேலம்)
http://m.youtube.com/watch?v=6d1ftpMR
c5w&rl=yes&guid&hl=en-GB&client=mv-
google&gl=IN (நாமக்கல்)
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு முன்
இடிந்தகரை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக
அணுவுலைப் பணிகளை நிறுத்த அமைச்சரவைத் தீர்மானம்
http://www.dinamani.com/tamilnadu/
article710128.ece?service=print
இடைத்தேர்தல் முடிந்த பிறகு கூடங்குளம்
அணுவுலை திறக்க ஒப்புதல் தீர்மானமும்,
கேரளாவிலிருந்து மலையாள காவல்படை 37
வண்டிகளும்அருளிய அம்மையார் (மே 2012)
http://www.vikatan.com/new/article.php?modu
le=news&aid=7918
போராட்டக்காரர்கள் மீது தடியடி (செம்டம்பர்2012)
http://m.oneindia.in/tamil/news/2012/09/10/
tamilnadu-kudankulam-unrest-jaya-convenes-
higher-officials-meet-161205.html
அணுவுலை முற்றுகையைத் தடுக்க 5000காவலர்கள்
குவிப்பு (அக்டோபர் 2012)
http://www.dailythanthi.com/node/7945
போராட்டக்காரர்களை ஒடுக்க 2000 காவல்படையினர்
(மார்ச்2013)
http://www.cinema.dinakaran.com/
News_Detail.asp?Nid=45713
ஈழ ஏதிலிகளுக்கு மாத உதவித்தொகை அதிகரிப்பு
http://news.vikatan.com/article.php?modu
le=news&aid=2973
அகதிமுகாம்களின் உண்மை நிலை கொடுமையானது
http://www.vinavu.com/2013/05/16/eelam-
refugees-tn-prisons/
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு
http://www.tamilwin.com/show-RUmrzBSXMZh
v4.html
இதே அம்மையாரிடம் பிரதமர் முன்னிலையில் கர்நாடக
முதல்வர் "ஒரு சொட்டுத் தண்ணீர் தரமுடியாது"
என்று சொல்லி வெளியேறியபோது
http://www.viduthalai.in/home/viduthalai/
rationalism/44761-cauvery-news-water-news-s
upreme-court-news.html
பரமகுடியில் காவல்துறை சுட்டுக்கொன்ற 7பேர்
http://www.vinavu.com/2011/09/12/dalits-
killed/
சமச்சீர்கல்விக்கு தடை
http://www.dinamalar.com/news_detail.asp?
id=247309&Print=1
தடையை நீக்கிய நீதிமன்றம்
http://www.thoothuonline.com/சமச்சீர்-கல்வி-த
ொடரவேண்ட/
குளறுபடிகளால் 4மாதம் படிப்பு பாழ்
http://www.dinamani.com/tamilnadu/
article688805.ece?service=print
அண்ணாநூலகத்தை மருத்துவமனையாக
http://m.oneindia.in/tamil/news/2011/11/03/
library-issue-govt-s-decision-is-insane-ramado
ss-aid0128.html
அண்ணாநூலகம் திருமண மண்டபமாக
http://www.dinakaran.com/News_Detail.asp?
Nid=17881
மக்கள் நலப்பணியாளர் 13000பேர் நீக்கம், நீதிமன்றம்
தடை
http://www.dailythanthi.com/2014-01-04-Gover
nment-to-the-High-Court-notices
மாற்றி மாற்றி மின்வெட்டு அறிக்கைகள்
------12அக்டோபர்2012-----------
அடுத்த ஆண்டு இறுதியில் மின்வெட்டு நீங்கும்
http://www.bbc.co.uk/tamil/india/2012/10/
121026_jayaonpowercut.shtml
------8பிப்ரவரி2013------
நடப்பாண்டின் இறுதியில் மின்வெட்டு முழுமையாக
நீங்கும்
http://m.oneindia.in/tamil/news/2013/02/08/
tamilnadu-jayalalithaa-promises-no-power-cut-f
rom-dec-169440.html
------2அக்டோபர்2011------
அடுத்தாண்டு ஆகஸ்டுக்குள்
மின்வெட்டு அறவே நீக்கப்படும்
http://tamil.webdunia.com/newsworld/news/
tnnews/1110/02/1111002010_1.htm
------25அக்டோபர்2013------
இந்த ஆண்டு இறுதியில் மின்மிகை மாநிலம் ஆகும்
http://tamil.thehindu.com/tamilnadu/தமிழகம்-
மிக-விரைவில்-மின்-மிகை-மாநிலமாகும்-ஜெய
லலிதா/article5271707.ece
------17டிசம்பர்2013------
ஆறுமாதத்தில் மின்வெட்டு நீங்கும்
http://www.dinamani.com/tamilnadu/
2013/12/17/ஆறு-மாதங்களில்-மின்வெட்டு-அ/
article1949361.ece
------3பிப்ரவரி2014------
விரைவில் மின்வெட்டு இருக்காது
http://www.dailythanthi.com/2014-02-03-Jayal
alithaa-Speak-on-Electricity-Production
நான்கு நாட்கள் உண்ணாமல் போராடிய
லயோலா மாணவர்களை நள்ளிரவில்
காவல்துறை விட்டு தூக்கியதால் ஒருகோடி மாணவர்
களமிறங்கிய போராட்டம் வெடிக்கக் காரணமான நிகழ்வு
http://www.dinamalar.com/news_detail.asp?
id=664634
முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவரை அங்குலம்
தவறாது அளந்து இடித்தபோது,
பொது இடத்தை தாராளமாக
ஆக்கிரமித்தபடி ஜெயலலிதாவோடு குடும்பம் நடத்திய
தெலுங்கு கூத்தாடி நடிகன் 'சோபன் பாபு'
சிலை தமிழக தலைநகர் சென்னையில் பல
கோரிக்கைகளையும் மீறி சிரித்தபடி நிற்கிறது.
http://www.satrumun.net/2013/11/can-
government-remove-shoban-babu.html?m=1
(சோபன் பாபுவுடன் குமுதத்தில் பேட்டி
http://maatrangal.blogspot.in/2012/02/blog-
post_14.html?m=1 )
இனியும் கண்டவர்களை 'அம்மா' என்று சொல்லாதீர்கள்
https://m.facebook.com/photo.php?fbid=422858017817857&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739