Wednesday 19 July 2023

புறந்தூய்மை

புறந்தூய்மை

 ஏற்றத்தாழ்வை ஒழிக்க ஒரு புதுமையான வழி சொல்லவா?

 தாராளமாக தண்ணீர் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்துவிட்டால் போதும்!

 அனைவரும் நன்கு குளித்து துவைத்த ஆடைகள் போட்டுக்கொண்டாலே ஏற்றத்தாழ்வு ஒழிந்துவிடும் என்பது என் கருத்து.

 இத்தோடு சோப்பு போடும் பழக்கத்தைக் கைவிட்டாலே வியர்வை துர்நாற்றம் பெருமளவு குறைந்துவிடும். 

 சோப்பு இல்லாமல் எப்படி குளிக்க வேண்டும் என்றால் நன்றாக தலை முதல் கால் வரை நனைத்துவிட்டு இரண்டொரு நிமிடம் ஊறவிடுங்கள் (இந்த நேரத்தை பல் துலக்க பயன்படுத்தலாம்) . பிறகு உடல் முழுவதும்  கைகளாலால் முடிந்தவரை தேய்த்தபடி தண்ணீர் ஊற்றவேண்டும். பிறகு உடல் முழுவதும் அரை நிமிடம் தொடர்ந்து நனையும்படி தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பூந்தூரல் (shower) இருப்பது மிகவும் உதவும். இப்போது பாதி வேலை முடிந்தது (வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிக்கலாம்).

 பிறகு துவைத்த காய்ந்த துண்டு மூலம் அழுத்தி துவட்டிக் கொண்டால் மீதி வேலை முடிந்தது.
 இந்த துண்டை அப்படியே துவைக்கப் போட்டுவிட வேண்டும். 

 இப்படி செய்யும்போது சென்ட், பவுடர், மேக்கப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். தலையில் எண்ணெய் தேய்ப்பது கூட தேவைப்படாது.
தோலும் முடியும் வலுப்படும். அதிகம் வியர்க்காது. அதிகம் குளிராது. முகமும் தலைமுடியும் பொலிவாக இருக்கும்.

 இப்போது துவைப்பது எப்படி என்று பார்ப்போம்.
 இரண்டு வாளி வைத்துக் கொள்ளவும். 
 ஒரு வாளியில் தண்ணீரில் துணிகளைப் போட்டு கொஞ்சம் சோப்பு பொடி போட்டு சில மணிநேரம் ஊறவைக்கவும். இன்னொரு வாளியில் நல்ல தண்ணீர் வைத்துக் கொள்ளவும். முதல் வாளித் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு நிமிடம் தண்ணீரை வடிய விடவும். இப்போது இரண்டாவது வாளியில் போடவும். துணியில் இருக்கும் சோப்பு அழுக்கோடு வெளிவந்து நல்ல தண்ணீரில் கலக்கும் இதற்கு ஒரு 5 நிமிடம் ஆகலாம். இப்போதும் இந்த துணிகளை ஒரு நிமிடம் தண்ணீர் வடியும்படி வைக்கவும். இன்னொரு வாளியில் (நன்கு அலசிவிட்டு) அதில் நல்ல தண்ணீர் பிடித்துக் கொள்ளவும். தண்ணீர் வடிந்த துணிகளை அதில் போட்டு பின் ஒவ்வொன்றாக எடுத்து பிழிந்து காயப்போடவும். வெயில் நேரடியாகப் படாமல் ஆனால் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் காயப்போடுவது சிறந்தது.
 இந்த எளிமையாக முறையில் 3 வாளித் தண்ணீரில் அரை வாளித் துணிகளை துவைக்கலாம்.

 தூய்மையாகத் தோற்றம் அளிப்பது தாழ்வு மனப்பான்மை வராமல் செய்யும்.

 நாளை எப்படி பல் விளக்கினால் ஏற்றத்தாழ்வு ஒழியும் என்று பார்ப்போம்.

 
 
 
 

Friday 14 July 2023

கிருஷ்ணசாமி பற்றி சுருக்கமாக

கிருஷ்ணசாமி பற்றி சுருக்கமாக

 1997 இல் பசுபதி பாண்டியன் ஒடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக கருணாநிதியால் அடையாளம் காட்டப்பட்டார்..

 1995 தூத்துக்குடி சாதிக் கலவரத்தில் முன்னின்று போராடினார்.
 அது ஜெயலலிதா அரசால் கொடியன்குளம் சம்பவத்தில் முடிந்தது.
1996 தேர்தலில் நின்று வென்றார் 

 1999 மாஞ்சோலை தேயிலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். 
அது  கருணாநிதி அரசால் தாமிரபரணி படுகொலையில் முடிந்தது.

  2001 தேர்தலில் திமுக வுடன் கூட்டணி வைத்தார்.

 2011 தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்தார்.

2014 இல் மீண்டும் திமுக வுடன் கூட்டணி வைத்தார்

2019 இல் பாஜக வின் கூட்டணியில் இணைந்தார்.

 

Wednesday 12 July 2023

சாதியே இனம்

சாதியே இனம்

 தேசிய வாதத்தின் தாயகம் ஐரோப்பா என்று கூறுவர். ஆனால் உலகத்தில் தமிழர்கள்தான் மொழிவழி அமைந்த இன தேசியத்தை முதன்முதலில் எழுதியவர்கள்.
 உலகிலேயே முதன்முதலில் மொழியின் பெயரால் இனத்தையும் தேசத்தை குறிப்பிட்டு எழுதியதும் மொழியின் பெயரால் அரசுகளின் கூட்டணி அமைத்ததும் தமிழர்தான்.
  அந்த வகையில் தேசியத்திற்கான முதல் வரையறையை எடுத்துக் கொடுத்தது தமிழ் இலக்கியம் தான். 
 நாம் நெடுங்காலமாக வெற்றியை ஈட்டி வல்லரசாக திகழ்ந்து வந்தோம்.
 பிறகு நமது வீழ்ச்சி இனக்கலப்பினாலும் ஒற்றுமை இன்மையினாலும் வந்தேறிகளின் சதியினாலும் தொடங்கியது. 
 ஆம், கிமு வில் இருந்து கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை வல்லரசாக வீற்றிருந்த காலங்களில் பொறாமை கொண்டு நம் மீது எத்தனையோ பேரரசுகள் சிற்றரசுகள் தாக்குதல் நடத்தின. மத ரீதியான குழப்பங்கள் ஏற்படுத்தி நம்மை சிதைக்கவும் முயன்றன. பல நெடுங்காலம் நமது இனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இறுதியில் வெற்றியடைந்து நாம் வீழ்த்தப்பட்டோம். 
 வீழ்ந்தும் 800 ஆண்டுகளில் எத்தனையோ முறை எழ முயன்றோம். இன்று வரை வெற்றி அடைய முடியவில்லை என்றாலும் இன்று நம்மிடம் மிக உறுதியான இனவெழுச்சி ஏற்பட்டுள்ளது.
 நமது இளைஞர்களின் இனரீதியான எழுச்சி என்பது தமிழகத்திலே பக்கம் பக்கமாக எழுதிய எழுத்தாளர்களால் வந்தது இல்லை. வீதி வீதியாக பேசிய இயக்கங்களால் வந்ததில்லை. இது இனப்பற்றை மட்டுமே முதல் தகுதியாகக் கொண்ட ஒரு தலைவன் தனது ராணுவ சிந்தனையின் மூலம் ஈழத்தில் இனரீதியான படைகட்டி தாய் நிலத்தை மீட்டு வரிசையாகப் புரிந்த சாதனைகளினால் ஏற்பட்டது. ஆம், உலக வல்லரசுகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அந்த தலைவனை வீழ்த்திய போதும் இறுதி நொடி வரை அவருடைய உறுதியான நிலைப்பாடு இன்று உலகத் தமிழர்கள் மனத்தில் விடுதலைத் தீயை மூட்டி இன்று இளைஞர்கள் தமிழ் தேசியத்தின் மீது விருப்பம் கொண்டு சாதி, மொழி, மதம், நாடு என அனைத்தையும் கடந்து இனமாக திரண்டு நிற்க காரணம்.
 இன்றைய சூழலில் பழைய கருத்தியல்வாதிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வதுடன் ஒருவரை ஒருவர் 'குடி தேசியம்' என்றும் 'மாநில தேசியம்' என்றும் 'வரட்டு வாதம்' என்றும் தூற்றிக்கொண்டு தற்கால இளைஞர்களை குழப்புகின்றனர்.
 சாதி இல்லாமல் வந்தேறிகளை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை.

 உலகில் புரட்சி செய்த மக்கள் தங்களுடைய இன, மத, ஜாதி அடையாளங்களை ஒழித்து விட்டு ஒன்று சேரவில்லை.
 உலகம் போற்றும் புரட்சியாளர்கள் தங்கள் குடிப்பெயருடனும் மொழி அடையாளத்துடனும் மத அடையாளத்துடனும் இருந்தார்கள்.
 தன்னுடைய உண்மையான எந்த அடையாளத்தையும் மறைக்காமல்தான் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி புரட்சி செய்தனர்.

 தமிழகத்தில் (இன)தேசியத்தை 'மொழித் தேசியம்' என்றாக்கி 'தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர்' என்ற மாயையை உருவாக்கி தமிழை நன்கு கற்ற பிற வந்தேறி இனங்கள் தமிழை வைத்தே தமிழரை வீழ்த்தி தமிழர் தலையில் அமர்ந்து சுரண்டி கொழுப்பது பல ஆண்டுகளாக நடக்கிறது.

  இந்த வேளையில் நாம் மொழியை மட்டும் வைத்துக்கொண்டு நம்மை அடையாளப்படுத்தினால் இச்சதியை வீழ்த்த முடியாது.
 அதே நேரத்தில் இனத்திற்கான எந்தவித ஆவணச் சான்றும் நம்மிடம் இல்லை.
 பிற மாநிலங்களில் ஆவணங்களில் தாய்மொழி இன்னது என்று சான்றிதழ்களில் இருக்கும். அதை தமிழகத்தில் திராவிடம் நீக்கிவிட்டது.
 அதனால் தான் நாம் இனத்தின் உட்பிரிவான சாதியை இன அடையாளமாக கொண்டு 'முதலில் சாதிய சமத்துவம் பிறகு சாதி ஒழிப்பு' என்கிற திட்டத்துடன் குடிவழி இனத்தேசியத்தை முன்னெடுத்து வருகிறோம்.

 எந்த ஒரு தோல்வி அடைந்த குருவும் வெற்றியடையும் சீடனை பார்த்து பொறாமை கொள்வது இயல்பு.
 நடைமுறைச் சூழல் புரியாமல் கருத்தியலில் ஊறிப்போன பழைய தலைவர்கள் இதை சாதிய எழுச்சியாக பார்ப்பதும் பழைய திராவிட சதிகாரர்கள் பேசிய அதே சினிமா வசனங்களை இவர்களும் பேசுவதும் எங்களுக்கு வருத்தமாக இருந்தாலும் எங்களை இது பாதிக்கப் போவதில்லை.
 எங்களது குடி அடையாளத்துடன் எங்கள் குடி எங்கள் பின்னே வருகிறதா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் நாங்கள் தமிழ் தேசியத்தின் கொள்கைகளை ஏற்று இந்த உலகம் ஏற்கனவே சாதித்த நடைமுறை வழியில் நாங்களும் செல்ல முற்பட்டு உள்ளோம். அடையாளத்திற்காக குடியை முன்வைக்கிறோமே தவிர 'சுய சாதி ஆதிக்கத்தை' நிறுவ அல்ல.
 கருத்தியலில் ஊறிப் போய்விட்ட பெரியவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை. தர்க்க ரீதியான விவாதத்தில் அவர்களுடன் சரிக்கு சரியாக மோத எங்களால் முடியும் இருந்தாலும் அவர்களை நாங்கள் எதிரிகளாக கருதவில்லை.
 ஆனாலும் எங்களை ஒத்த இளைஞர்களுக்கும் எங்களையும் விட சிறிய வயதினரான இளைஞர்களுக்கும் அவர்களையும் விட இளைய சிறுவர்களுக்கும் நாங்கள் விளக்கம் கண்டிப்பாக அளிக்க விரும்புகிறோம்.

  சில உதாரணங்களை பார்ப்போம்.

  புலிகள் இயக்கம் எழுந்த பொழுது அதிலே அனைத்து சாதி, மத, பிரதேச தமிழர்களும் இணைந்தார்கள். பிறகு ஒரு காலகட்டத்தில் அவர்கள் மீது மத ரீதியான பிளவு ஏற்படுத்தப்பட்டபோது புலிகளிடம் எங்களிலும் பலர் அந்த சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று காட்ட தரவுகள் இல்லை.
 இன்றும் புலிகளிலே எந்த ஜாதியினர் எந்த மதத்தினர் எவ்வளவு என்கிற தரவு கிடையாது. புலிகள் அத்தனை பேரையும் வெறும் தமிழர்களாக மட்டுமே பார்த்தார்கள். அதனால் அவர்கள் மீது சாதி ரீதியான மத ரீதியான பிரதேச ரீதியான விமர்சனங்கள் வைக்கப்பட்ட போது அவர்களால் அதை எதிர் கொள்ள முடியவில்லை.

 ஈழத்தை விட தமிழகத்தில் சிக்கல் அதிகம். எல்லா இடங்களிலும் மூலைக்கு மூலை வந்தேறிகள் புகுந்துள்ளனர். இவர்களே சாதிய மோதலை உருவாக்கி நடுவில் அமர்ந்து இனம் கடந்த சித்தாந்தம் (திராவிடம், மதவாதம், இந்தியம், தலித்தியம், பொதுவுடைமை, மனித நேயம்) பேசி பலன் பெறுகின்றனர். 
 இவர்களைப் பிரித்தறியவும் வேண்டும்.  அதே நேரத்தில் சாதிய பிளவுகள் மறைய வேண்டும். அதே நேரத்தில் தத்துவமும் வேண்டும். 
 இதற்காக சாதி அடையாளத்துடன் சாதிய சமத்துவம் பேசும் தமிழ்த் தேசியவாதிகள் தேவைப்படுகிறார்கள். 

 உதாரணத்திற்கு தற்போதைய பிரச்சனையான மேல் பாதி கோவில் பிரச்சனை எடுத்துக் கொள்வோம். இதிலே வன்னியர் பறையர் மோதல் ஏற்பட்டபோது வன்னியர் என்கிற பெயரை தாங்கிய ஒருவரும் பறையர் என்கிற பெயரை தாங்கிய ஒருவரும் கூட்டாக சேர்ந்து சமாதானம் ஏற்படுத்த முயன்ற போது தான் அந்தப் பிரச்சனை (அரசாங்கம் சதி செய்த போதும்) மக்கள் மத்தியில் பிளவுகளையோ கலவரங்களையோ தூண்டாமல் நீர்த்துப் போனது.

  சாதியப் பட்டதை பின்னால் போட்டுக் கொண்டு போட்டுக் கொண்டு புரட்சி செய்ய முடியாது என்பது உலகின் நடைமுறைக்கு ஒத்து வராத கூற்று.

 தமிழர்கள் தங்கள் குடிப்பட்டத்தை போட்டுக்கொண்டு குடி அடையாளத்துடன் தேசியம் பேசுவது மட்டுமே மொழித்தேசியம் என்று இத்தனை நாள் தமிழர்களை ஏமாற்றி வந்த வந்தேறிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

 இப்படி குடி அடையாளத்துடன் தேசியம் பேசும் எந்த தலைவரும் சாதிவெறி பிடித்தவர் என்றோ பிற சாதி மீது வன்மம் கொண்டவர் என்றோ பெரும்பாலும் இருப்பதில்லை.

  சில சாதியவாதிகள் கூட இந்த அரசியலின் பலம் அறிந்து தமது பிழைப்புக்காகவேணும் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பது போல பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டனர். ஆனால் அந்த புத்திசாலித்தனம் கூட இல்லாம தத்துவப் பெரியவர்கள் பழைய வரட்டு போக்கிலேயே இருக்கிறார்கள்.

 ஆக இங்கே குடிவழி தமிழ் தேசியம் தான் தற்போது ஒரே வழி. இது நாங்கள் விரும்பி உருவாக்கியது அல்ல காலம் கட்டாயப்படுத்தும் வழிமுறை.

 தமிழர்கள் கைக்கு அதிகாரம் வந்த பிறகு (அது மாநில அரசாக இருந்தாலும் அல்லது தனி நாடு அமைத்த ராணுவ அரசாக இருந்தாலும்) நாங்கள் சாதிகளை நீக்கி இனம் என்கிற ஆவணங்களை கொண்டு வந்து இனரீதியான சான்றுகள் அனைவருக்கும் கிடைக்கப் பெற்ற பிறகு சாதியும் சாதிய பட்டங்களும் இல்லாமல் போய் தமிழர் என்கிற ஒற்றை அடையாளத்துடன் வருங்காலங்களில் வாழ்வோம்.

 அதுவரை வந்தேறிகளின் சதியை முறியடிக்க,
 நடைமுறையை கருத்தில் கொண்டு,
தமிழ் சாதிகளில் எந்த சாதியும் இழிவானது இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு,
 சக தமிழ் குடிகளின் மீது பாசம் கொண்டு,
 அனைவரும் தமது குடி அடையாளத்துடன்,
 மத அடையாளத்துடன்,
 பிரதேச அடையாளத்துடன்,
 பாலின அடையாளத்துடன்,
தமது எந்த ஒரு அடையாளம் மறைப்பும் இல்லாமல்
 தமிழராக ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தை வெல்வோம்!

  இயல்பான இனப்பற்றுடன் இனத்திற்காக உழைக்க முன்வருபவனிடம் 
"நீ போய் ஜாதியை ஒழித்து விட்டு வா"
"மதத்தை ஒழித்து விட்டு வா"
"உன்னுடைய பழக்க வழக்கங்களை ஒழித்துவிட்டு வா"
"தூய தமிழில் பேசிக்கொண்டு வா"
"கருத்தியல் ரீதியில் தெளிந்து விட்டு வா"
என்று விரட்டி விடுவது இந்த இனத்தின் பெரிய கேடாக இருக்கிறது.

 அண்டை இனங்களிடம் நாம் பாடம் கற்க ஏராளம் உள்ளது.
 அண்டை இனங்கள் நம்மை விட பெரிய அளவில் சாதிய ஏற்றத்தாழ்வு  உள்ளவர்கள்.
அவர்கள் இன்று சாதிய அடையாளத்துடனே இனமாக திரண்டு தங்கள் தாய்நிலங்களில் தங்களது இன உரிமைகளையும் தத்தமது குடிக்கான உரிமைகளையும் மீட்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
 இவர்களில் யாருமே அதிமேதாவிகள் அல்ல.
 இன்று நாம் தப்பி பிழைக்க வேண்டும் என்றால் இயல்பான இனப்பற்று இருக்கும் நமது மக்களை இயல்பான வழியில் ஒன்று திரட்டி கூட்டான முயற்சியின் மூலம் வேற்றின ஆதிக்கத்தைத் தடுத்து வாழ்ந்துகொள்ள முடியும்.

 தலைவர் பிரபாகரன் "ஒவ்வொரு தமிழனும் தமிழனாக தனது இயல்பான சிறிய பங்களிப்பை செய்து விட்டால் எனக்கு அவசியம் இருக்காது" என்று கூறியது போல நாம் செயல்பட வேண்டும்.

 தமிழர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட பழைய சாதிய பகை உணர்வை மறந்து இன்று ஒன்று திரண்டு வெற்றிப் பாதையை நோக்கி செல்லும் இதே 'குடி வழி தமிழ் தேசியத்தை' தொடர வேண்டும்!

 இதுவும் கூட எளிதானது அல்ல!
 தமிழ் சாதிகளில் ஒன்று ஓரணியில் திரண்ட போது கூட திராவிடம் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளது.
 ஆகவே ஒரு சாதி தனியாக திரண்டு விடக்கூடாது என்பதில் கூட வந்தேறிகள் கவனமாக இருக்கிறார்கள். 

 அண்ணன் சீமான் சொல்வது போல "கன்னியாகுமரியில் பெரும்பான்மையாக வாழும் நாடார் சாதியினரை இரண்டு மதங்களாக பிரித்துள்ளனர், அதற்கு அடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை மதமாக பிரிக்காமல் 3 ஜாதிகளாக பிரித்துள்ளனர்" 

 அப்படி ஒரே மதத்தில் ஒரே ஜாதியாக திரண்டு இருக்கின்ற தமிழர்களை கூட இவர்கள் மொழித் தேசியம் என்றும் இடதுசாரி வலது சாரி என்றும் பல்வேறு வகையில் பிரித்து கருத்தில் ரீதியில் குழப்புகின்றனர்.

  இன்று தமிழ்ச் சாதிகளில் பெரும்பான்மையான சாதிகளில் இளைஞர்கள் தமிழ் தேசியத்தின் பக்கம் கணிசமாக வந்துவிட்டனர்.
 பழைய வந்தேறி அரசுகளால் தாழ்த்தப்பட்ட சில சாதிகள் தமிழ் தேசியத்தின் பக்கம் வருவதற்கு தயங்கிக் கொண்டிருக்கின்றன.
 அவர்களை 'நாம் தாழ்ந்தவர்கள்' என்ற உளவியலில் இருந்து விடுபட்டு தமிழ்க் குடியாக தமிழர்களாக தமிழ் தேசியத்தில் இணைவதும் கூடிய சீக்கிரம் நடக்க இருக்கிறது.
 அப்படி தமிழ்தேசியத்தின் பக்கம் அத்தனை சாதி இளைஞர்களும் வந்துவிட்டாலே தமிழினம் பாதி வெற்றியை அடைந்து விட்ட தாக அர்த்தம்.

 ஒழிப்பதற்கு எத்தனையோ முயற்சி செய்தும் குளறுபடி செய்தும் தமிழினத்திடம் சாதிதான் எஞ்சி நிற்கிறது. கடைசி வாய்ப்பாக சாதியைப் பயன்படுத்தி இனத்தைக் காப்பாற்றுவோம்! 

 தமிழ் இனமே ஒரு சாதி!
இனத்திற்காக உழைப்பவர் உயர்ந்த சாதி!
தயங்கி நிற்பவர் தாழ்ந்த சாதி! 

 

Saturday 8 July 2023

கற்பனையில் கொல்லப்பட்ட நந்தனார்

கற்பனையில் கொல்லப்பட்ட நந்தனார்

 நந்தனார் பற்றிய முதல் குறிப்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது.
 அதில் ‘செம்மையே! திருநாளைப் போவார் அடியாருக்கும் அடியேன்’ என்று மட்டும் வருகிறது.
 அதாவது சிவ பக்தி உள்ளவர்களுக்கு நான் அடிபணிகிறேன் என்று பல சிவ பக்தர்களைக் குறிப்பிடும்போது 'நாளைப் போவார்' என்று அறியப்பட்ட ஒரு சிவ பக்தரைக் குறிக்கிறார்.
 இதில் அவர் இயற்பெயரோ ஊரோ சாதியோ செயல்களோ எதுவுமே குறிக்கப்படவில்லை.

 அதன் பிறகு 200 ஆண்டுகள் கழித்து பத்தாம் நூற்றாண்டில் 'நம்பியாண்டார் நம்பி' மேற்கண்ட குறிப்பை தம் கற்பனையால் கொஞ்சம் விரித்து எழுதுகிறார்.

 'நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலை போய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே'
 எனது பார்வையில் இதன் பொருள்,
"தில்லை நடராஜர் அருள் பெற்ற நாளைப் போவான் என்பவன், வெளியே இருந்த தொண்டன், தன் அசுத்தம் நீங்கி, தில்லை அந்தணர்களும் வணங்கும் முனிவன் ஆனான்" என்கிறார். இவருடைய ஊர் ஆதனூர் என்றும் குறிக்கிறார்.  

  இதில் வரும் புன்புலை என்கிற சொல்லே எல்லா குழப்பத்திற்கும் காரணம்.
 புன் மற்றும் புலை இரண்டுமே அசுத்தமான எனும் பொருளும் தரும். எனவே 'புன்புலை போய்'  என்பதன் பொருள்  'பாவ அசுத்தம் நீங்கி' என்று என்று நான் கொள்கிறேன். ஒருவர் அசுத்தமானவர் என்கிற எண்ணம் பார்த்தவுடன் வருகிறது என்றால் அது தொழுநோய் போன்ற நோயாளிகள் மீதுதான் வரும். அத்தகையோரை 'செய்த பாவத்தின் பலன்' என்று மக்கள் தூற்றுவது உண்டு. எனவே நோய்த் தொற்று கொண்ட ஒருவர் சிவனைச் சரண்டைந்து கோவிலுக்குள் போகாமல் வெளியே இருந்து வணங்கி வந்துள்ளார் என்று கொள்ளலாம். அவர் காண்போரிடம் நம்பிக்கையுடன் தான் குணம் பெற்று கோவிலுக்குள் 'நாளைப் போவேன்' என்று நெடுங்காலம் கூறியதால் அவருக்கு 'நாளைப் போவார்' சாமி என்று பெயர் வந்திருக்கலாம். அவர் நாள்தோறும் தில்லை அந்தணர் ஓதுவதைக் கேட்டு மனப்பாடம் செய்து தானும் வெளியே ஓதியிருக்கலாம். திடீரென்று அந்த நோய் நீங்கப் பெற்று நன்கு ஓதும் திறத்தால் தில்லை அந்தணரை விட உயரிய அடியார் நிலையை அடைந்துள்ளார். 
 எனது பார்வையில் 'நம்பியாண்டார் நம்பி' கூறவந்த கருத்து இதுவே! 
 இதுவும் அவருடைய ஊகமாகவோ அல்லது கற்பனையாகவோ இருக்க வேண்டும்.


 மேலும் இந்த புலை எனும் சொல் புலையரைக் குறிக்காது.  ஏனென்றால் புலையர் பற்றி இழிவாக தமிழ் இலக்கியத்தில் இல்லை. உயர்வாகவே குறிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில்களும் செய்துள்ளனர்.

 நம்பியாண்டார் நம்பி காலத்திற்குப் பிறகு 200 ஆண்டுகள் கழித்து பனிரெண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் மேற்கண்டவற்றை தம் கற்பனையால் மேலும் விரிவாக்குகிறார்.

 'நாளைப் போவார்' சேக்கிழாரால் 'நந்தன்' என்று பெயர்பெறுகிறார். இதில் "புன்புலை" என்ற சொல் சேக்கிழாரால் தவறாகப் பொருள் உணரப்பட்டு அவர் புலையர் என்று எழுதுகிறார் (சங்க காலத்தில் புலை, புலையர் இரண்டும் வெவ்வேறு பொருள் வழங்கி வந்துள்ளது. வள்ளுவர் கூட புலை வினைஞர் என்றுதான் கூளியுள்ளார்). 
 தான் புலையர் என்பதால் கோவிலுக்குள் வரத் தயங்கிய நந்தனாரின் கனவில் இறைவன் தோன்றி தீயில் இறங்கி உடலைத் துறந்து தன்னை அடையச் சொன்னதாகவும் அதேபோல தில்லை அந்தணர் கனவிலும் சொன்னதாகவும் அவ்வாறே நந்தன் வந்து தீயில் இறங்கி அந்தண வடிவெடுத்து இறைவனை அடைந்ததாகவும்  எழுதுகிறார். 

 அதாவது உண்மையான திருநாளைப் போவாருக்கும் சேக்கிழார் உருவாக்கிய நந்தனுக்கும் குறைந்தது 350 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது.

புலையர் கீழ்ச்சாதி என்று கூறவரும் அதே சேக்கிழார் புலையர் பற்றி கூறுவதில் கூட இழிவாக எதுவும் இல்லை. 
அன்றைய புலைப்பாடி எப்படி இருந்தது என்று சேக்கிழார் கூறுகிறார்,
 ஊருக்கு வெளியே வயல்வெளிகள் அருகே திறந்தவெளி நிலம்,
 சமூக ஒற்றுமையுடன் வாழ்கின்ற உழும் தொழில் செய்யும் உழவர்கள்,
 வைக்கோல் கூரை வேயப் பெற்ற சிறிய குடிசைகள்,
 அவற்றின் மீது சுரைக்காய் கொடிகள், 
வாசல் முன்பு கிழித்து காயத் தொங்கவிடப்பட்ட தோல் பட்டைகள், 
குஞ்சுகளுடன் மேயும் கோழிகள், 
நாய்களின் குட்டிகளைக் கவர்ந்து விளையாடும் இரும்பு சலங்கை அணிந்த சிறுவர்கள், 
உழத்தியர் (பெண் உழவர்கள்) தோலாலான தொட்டிலில் குழந்தைகளை உறங்குவித்தல், 
வஞ்சி மர நிழலடியில் புதைக்கப்பட்ட பானைகளில் கோழிகள் முட்டையுடன் அடைகாத்தல், 
தோல் வார்கள் கட்டிய பறைகள் தொங்குகின்ற மாமரங்கள், 
வங்குள்ள தென்னை மரங்கள் அவற்றினுள் ஈன்ற குட்டிகளுடன் உறங்கும் தாய் நாய்கள், 
இரவில் காவல் காக்கும் சாமக் கடைஞர்கள் அவர்களைக் கூவி அழைக்கும் சேவல்கள்,
 காஞ்சிமரத்தின் நிழலில் நெல் குத்தியபடி புலை மகளிரின் பாடுதல்,
(விசேச நாட்களில்) அருவிக் கரை சென்று நெற்கதிர்களையும் குவளை மலர்களையும் கூந்தலிற் செருகிய புலைச்சிகள் பறையொலிக்கு ஏற்ப கள்ளுண்டு ஆடுதல், (சங்க காலத்தில் இருந்து பெண்கள் கள் குடித்ததும் விற்றதும் சர்வ சாதாரணம்).

 இப்படியான புலைப்பாடியில் காவல் காக்கும் கடைஞர் இருந்த பகுதியில் நந்தன் வாழ்கிறார்.  இவருக்கு அரசு ஒதுக்கிய புன்செய் நிலம் இருந்தது (பறைத்துடவை - அதாவது பறையடித்து ஏலம் விட்டு கொடுக்கப்படும் நிலம்) அதன் உணவு உரிமை அதாவது குத்தகைக்கு விட்டு (இன்று பணம் பெறுவது போல அன்று) விளைச்சலில் ஒரு பகுதி பெறுவது அவருக்குக் கிடைத்தது. இவர் வெட்டிய மாடுகளில் இருந்து கிடைக்கும் தோல், நரம்புகள் மற்றும் பசு வயிற்றில் கிடைக்கும் ஒரு வகை வாசனைத் திரவியம் போன்றவற்றை கோவிலுக்குக் கொடையளித்து வந்துள்ளார். 
 நந்தன் விவசாயம் செய்தாரா?! அல்லது புலைப்பாடியில் கடைஞர் பகுதியில் இருந்ததால் பயிர் காவல் புரிந்தாரா? அல்லது மாடு வெட்டும் தொழில் செய்தாரா என்பது தெரியவில்லை. 
 மேற்கண்ட எதுவும் இழிவானதாகவும் தெரியவில்லை.

  நந்தன் தன் பிறப்பு தாழ்ந்தது என்று எதன் காரணமாக எண்ணினார் என்பது விளக்கப்படவில்லை. உயிர்க் கொலையும் சைவ மதத்தில் கண்டிக்கப்பட வில்லை. சேக்கிழாரே சிவன் சிவனடியார் வேடத்தில் வந்து கன்றுக் கறி கேட்டதாக எழுதியுள்ளார். 

 சேக்கிழாருக்கு 800 ஆண்டுகள் கழித்து கோபாலகிருஷ்ண பாரதியார் கி.பி.1850 களில் நந்தன் சரித்திரம் எழுதுகிறார். இதில் நந்தன் ஒரு பிராமண ஜமீன்தாரிடம் வதை படுவதாக எழுதுகிறார்.  அதன் பிறகு அயோத்தி தாசர் தனது பௌத்த கற்பனைகளைக் கலந்து எழுதுகிறார். நந்தன் சிற்றரசன் என்றும் அவர் பௌத்தர் என்பதால் கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அரசர் நுழையும் சிறப்பு வாசல் தான் தற்போது நந்தன் வாசல் என்றும் எழுதுகிறார்.  அதன் பிறகு திராவிட எழுத்தாளர்கள் நந்தனை சிதம்பரம் தீட்சிதர்கள் எரித்து கொன்றுவிட்டதாக எழுதினர்.
 பிறகு 1942 இல் நந்தன் ஒரு தீண்டத்தகாத பறையன் என்று உருவகித்து திரைப்படம் ஒன்றும் வந்தது. 

 இப்படி ஆளாளுக்கு 'நாளைப் போவார்' மீது தமது கற்பனைகளைத் திணித்துள்ளனர்.

 எவருடைய கற்பனையிலோ உதித்து இறந்த நந்தனின் கொலைப் பழியை இன்று வரை உயிருடன் இருக்கும் தீட்சிதர்கள் சுமக்கிறார்கள்.

 சீதை தீக்குளித்து உயிருடன் வந்தாள் என்றும் கண்ணகி ஆணைப்படி தீ மதுரையை எரித்தது என்றும் நாம் புராணம் படித்திருக்கிறோம்.
  அது போல ஒரு கற்பனை கதைதான் நந்தன் தீயில் விழுந்து ஆதி அந்தணரான பிரம்மன் உருவில் எழுந்து சிவனை அடைந்தார் என்பதும்.

 

Friday 7 July 2023

அம்பேத்கரின் பின்புலம்

அம்பேத்கரின் பின்புலம்

 எல்லோரும் நினைப்பது போல அம்பேத்கர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கிடையாது. அம்பேத்கரின் அப்பா ஒரு ராணுவ மேஜர். 
அவரது பெயர் ராம்ஜி சக்பால்.
இவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் 1865 முதல் 1893 வரை பணிபுரிந்துள்ளார். 1880 களில் ஆங்கிலேயர் ராணுவத்தில் சாதிய அடிப்படையில் பார்த்தால் அதிகமாக இருந்தவர்கள் மகர்கள். பிற்பாடு பாம்பே மாகாண ராணுவத்தில் 25% மகர்களே இருந்தனர்.
அதிலும் குறிப்பாக ரத்னகிரி பகுதி மகர்கள். அன்றைய ரத்னகிரி மகர்களில் ஆறில் ஒருவர் ராணுவத்தில் இருந்தார். இவர்களில் ஒருவர்தான் அம்பேத்கர் அப்பா. அவர் 27 ஆண்டுகள் ராணுவத்தில் இருந்து பின் பணி ஓய்வு பெறும்போது சுபேதார் ஆக பதவி வகித்தவர். அதாவது இன்றைய மேஜர் அல்லது கேப்டன் போன்ற உயர்பதவி. அதாவது அடிநிலையில் இருந்து (சிப்பாய்) ஏழாவது படிநிலை (சுபேதார்). இவர் அவரை விட உயரதிகாரி ஒருவரின் மகளை மணமுடித்தார். அம்பேத்கருக்கு 18 வயது இருந்தபோதே அவரது சிறிய கிராமத்தில் 106 பேர் ராணுவப் பணியில் இருந்தனர். அன்று ராணுவத்தில் இருந்தவர்களுக்கு மில் தொழிலாளி போன்ற சம்பளம் இருந்தாலும் அவர்களது குடும்பத்துக்கு இலவச தங்குமிடம், இலவச மருத்துவம், குறைந்த விலையில் உணவு மற்றும் உடை, ஓய்வூதியம் ஆகியன உண்டு. இதைவிட முக்கியம் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கப்பட்டது. சமூகத்தில் மரியாதையும் இருந்தது. ராணுவம் நடத்திய பள்ளிகளில் படித்த ராணுவ வீரர்கள் ஆசிரியர்களாகவும் பணியாற்றினர். அப்படி அம்பேத்கரின் அப்பா ஒரு சிறிய பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார். இவரது அனைத்து பிள்ளைகளுக்கும் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் எதிர்ப்பை அடக்கிய பிறகு ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்தது பிரிட்டிஷ் அரசு. அப்படி ராம்ஜி வேலையை விட்டபோது அம்பேத்கர் கைக்குழந்தை. வேலையை இழந்த பிறகு ராணுவப் பள்ளிகளில் தமது குழந்தைளுக்கு  இடம் கேட்டு ராணுவ ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது (இப்படியாக அம்பேத்கர் சேர்ந்த பள்ளியில் தீண்டாமையை எதிர்கொள்கிறார். அதனால் பள்ளியிலேயே இவருடைய ஆசிரியர் அம்பேத்கர் (பிராமணர்) என்பவர் தன் பெயரைச் சேர்த்து எழுதி அட்மிசன் போட்டார். அம்பேத்கர் ஊர் அம்படாவே என்பது, இதுவே அவரது பெயரானது என்போரும் உண்டு. ஆனால் அம்பேத்கரின் உடன்பிறந்தோர் சக்பால் என்றே இன்று வரை பெயர்வைத்துள்ளனர்).
1895 இல் இந்த ராணுவ ஓய்வூதியர் சங்கம் கோபால்பாபா வாலங்கர் எனும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தலைமையில் 'தவறுகள் நீக்கும் ஆரியர் அல்லாதார் சங்கம்' (Non Aryan assosiation for removal of wrongs)' எனும் பெயரில் ஒரு இயக்கம் தொடங்கி மீண்டும் மகர்களை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள கோரிக்கை மனு வைக்கிறது. இந்த மனுவில் உயர் சாதியினர் வெளியில் இருந்த வந்து தங்களை அடிமைப் படுத்தியதாக எழுதப்பட்டுள்ளது. இது அன்று ஆங்கிலேயர் கொண்டுவந்த பிரித்தாளும் தத்துவமான ஆரியர் - திராவிடர் கொள்கையை அடியொற்றி உள்ளது. 

 இந்த கோரிக்கை அப்போது நிறைவேறவில்லை ஆனாலும் 20 ஆண்டுகள் கழித்து 1914 இல் முதலாம் உலகப் போர் தொடங்கியதும் ராணுவ ஆளெடுப்பு தொடங்கியது. மகர்கள் மீண்டும் வேலை பெற்றனர். அப்படியாக 1917 இல் '111 மகர்கள்' எனும் படையணி மீண்டும் உருவானது.  இது 1919 இல் '71 பஞ்சாபிகள்' என்ற படையணியுடன் இணைக்கப்பட்டு உலகப் போர் முடிந்த பிறகு அதுவும் 1922 இல் கலைக்கப்பட்டது. 

 அதன் பிறகு 1939 இல் இரண்டாம் உலகப் போர் தொடங்குகிறது. இப்போது மீண்டும் ராணுவத்திற்கு ஆளெடுப்பு நடக்கிறது. இந்தியர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் (நேதாஜி- காந்தி முரண்பாடு). ஆங்கிலேயரை ஒடுக்கப்பட்டோரின் மீட்பர்களாகப் போற்றி வந்த அம்பேத்கர் ஆங்கிலேயரிடம் பேரம் பேசுகிறார். 1941 இல் பிரிட்டிஷ் ராணுவ ஆலோகர் பதவி பெறுகிறார் (Defence Advisory Committee of the Viceroy's Executive Council). உலகப் போரில் ஆங்கிலேயருக்கு உதவ தமது சாதியினரை மீண்டும் ராணுவத்திற்கு அழைக்கிறார். மகர்கள் மீண்டும் ராணுவத்தில் சேருகிறார்கள். இவ்வாறாக அம்பேத்கர் முயற்சியால் மகர் படையணி மீண்டும் உருவாகிறது. இவர்கள் ஆங்கிலேயரின் நம்பகமான படையணியாக இருந்ததால் நவீன வலுவான ஆயுதங்கள்  இவர்களிடம் மட்டுமே வழங்கப்பட்டன.   (1956 இல் மூன்று படையணிகள் இணைக்கப்பட்டு இன்று பல்வேறு சாதியினர் இருந்தாலும்) இன்று வரை மகர் எனும் பெயரில் அப்படையணி இருக்கிறது. எப்போதும் 'சாதியை ஒழிக்க வேண்டும்' என்று கூறி வந்த அம்பேத்கர் கடைசி வரை தன் சாதிப் பெயரால் ஒரு அரசாங்க ராணுவ படையணி இருப்பதைப் பற்றி பேசவே இல்லை. அதைக் கலைக்கவோ அல்லது பெயர் மாற்றவோ கூட கடைசி வரை நினைக்கவில்லை. அவர் கடைசியாக புத்த மதத்தின் புதிய பிரிவிற்கு மாறிய போது அவருடன் மாறியதும் அவரது சாதியினரே! இன்று அந்த புத்தமதப் பிரிவில் இருப்போர் 90% மகர் சாதியினரே!

 ஆங்கிலேயர் ஆயுத நாட்டாமையைத் தொடங்கியபோது இங்கே பெரும் சவாலாக இருந்தது மராத்திய பேரரசு. அது பிராமணர்களால் ஆளப்பட்டது. அதில் தீண்டாமை நிலவியது. எனவே ஆங்கிலேயர் அப்படி தீண்டப்படாத சமூகங்களை தமது ராணுவத்தில் சேர்த்து மராத்திய பேரரசை முறியடிக்கின்றனர். அப்படி ஆங்கிலேய விசுவாசிகளாக மாறிப் போன மகர் சமுதாயம் பல சலுகைகளைப் பெறுகிறது.
 அப்படி முழுக்க ஆங்கிலேயருக்கு ஆதரவான சமூகத்தில்
 முழுக்க ஆங்கிலேயருக்கு ஆதரவான வட்டாரத்தில்
முழுக்க ஆங்கிலேயருக்கு ஆதரவான குடும்பத்தில்
பிறந்த அம்பேத்கரை ஆங்கிலேயர் தமது அரசியலுக்காக வளர்த்து எடுத்தனர் எனலாம்.

 அப்படி வளர்ந்த அம்பேத்கர் ஆங்கிலேயருக்கும் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகும் அவர்களுக்கும் என ஆள்பவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

 அவரது பௌத்த மதமாற்றம் கூட பூச்சாண்டி காட்டத்தான். பௌத்தர்களை இந்து என்று சட்டம் எழுதியதே அவர்தான். இது மகர்களுக்கு தனி அடையாளம் உருவாக்க செய்யப்பட்டது எனலாம்.

 அம்பேத்கர் ஒரு தனிமனிதர் இல்லை!
 ஒரு சாதியின் அரசியல் நகர்வின் அடையாளம்!