Tuesday 31 May 2016

கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா? -ஈ.வே.ரா ஆவேசம்

கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா?
-ஈ.வே.ரா ஆவேசம்

”தீண்டாமை விலக்கு என்பதும்
கோவில் பிரவேசம் என்பதும்
சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானசூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?

*பறையன் கீழ்சாதி* என்பது மாற்றப்படவில்லையானால்
அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை *நடுசாதியாக இருந்த சூத்திரர்* என்பவர்கள்
இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள்.
ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு
– வீரமணி)

நன்றி: பெரியாரின் மறுபக்கம் (தொடர்)

Monday 30 May 2016

சங்ககாலப் பெண்பாற்புலவர்கள்

சங்ககாலப் பெண்பாற்புலவர்கள்

(1)ஔவையார் -
புறநானூறு 33 பாடல்கள்
(87 – 104, 140, 187, 206, 231, 232, 235, 269, 290, 295, 311, 315, 367, 390, 392)
நற்றிணை 7 பாடல்கள்
(129, 187, 295, 371, 381, 390, 394)
குறுந்தொகை 15 பாடல்கள்
(15, 23, 28, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388),
அகநானூறு 4 பாடல்கள்
(11, 147, 273, 303) -
மொத்தம் 59 பாடல்கள்

(2) அஞ்சில் அஞ்சியார் -
நற்றிணை 1 (90)

(3) அஞ்சியத்தை மகள் நாகையார்–
அகநானூறு 1 (356)

(4)அள்ளூர் நன்முல்லையார் -
அகநானூறு 1 (46) ,
புறநானூறு 1 (306),
குறுந்தொகை 9
(32, 67, 68, 96, 140, 157, 202, 237)

(5) அணிலாடு முன்றிலார் -
குறுந்தொகை 1 (41)

(6) ஆதிமந்தி -
குறுந்தொகை 1 (31)

(7) ஊண் பித்தையார் -
குறுந்தொகை 1 (232)

(8) ஒக்கூர் மாசாத்தியார் -
அகநானூறு 2 (324, 384),
புறநானூறு 1 (279),
குறுந்தொகை 5
(126, 139, 186, 220, 275)

(9) ஓரிற் பிச்சையார் -
குறுந்தொகை 1 (277)

(10)கச்சிப்பேட்டு நன்னாகையார் -
குறுந்தொகை 6
(30, 172, 180, 192, 197, 287)

(11) கழார்க்கீரன் எயிற்றியார் –
அகநானூறு 4,
குறுந்தொகை 3 (35, 261, 330) ,
நற்றிணை 2 (281, 312)

(12) காக்கைப்பாடினி நச்செள்ளையார் –
புறநானூறு 1 (278),
குறுந்தொகை 1 (210),
பதிற்றுப்பத்து 10 (51 – 60)

(13) காவற்பெண்டு -
புறநானூறு 1 (86)

(14 )காமக்கணி நப்பசலையார் -
அகநானூறு 2 (204) ,
நற்றிணை 2 (243, 304)

(15) குறமகள் குறிஎயினி -
புறநானூறு 1 (157),
நற்றிணை 1 (357)

(16) குமுழி ஞாழல் நப்பசையார் -
அகநானூறு 1

(17) தாயங்கண்ணியார் -
புறநானூறு 1 (250)

(18)பாரிமகளிர் -
புறநானூறு 1 (112)

(19) பூங்கணுத்திரையார் (பூங்கண்
உத்திரையார்) -
புறநானூறு 1 (277),
குறுந்தொகை 2 (48, 171)

(20) பெருங்கோப்பெண்டு -
புறநானூறு 1 (246)

(21) பேய்மகள் இளவெயினியார் –
புறநானூறு 1 (11)

(22) பொன்மணியார் –
குறுந்தொகை 1 (391)

(23) பொன்முடியார் -
புறநானூறு 3 (299, 310, 312)

(24) பொதும்பில் புல்லளங்கண்ணியார் -
அகநானூறு 1

(25) பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் -

அகநானூறு 1 (252),
புறநானூறு 3 (83, 84, 85),
நற்றிணை 2 (19, 87)

(26) நல்வெள்ளியார் -
அகநானூறு 1 (32),
குறுந்தொகை 1 (365),
நற்றிணை 2 (7)

(27) நன்னாகையார் –
குறுந்தொகை 2 (118, 325)

(28) நெடும்பல்லியத்தையார் –
குறுந்தொகை 1 (178)

(29) மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் -
நற்றிணை 2 (250, 369)

(30) மதுரை நல்வெள்ளியார் –
குறுந்தொகை 1 (365)

(31) மாற்பித்தியார் -
புறநானூறு 2 (251, 252)

(32) மாறோகத்து நப்பசலையார் -

புறநானூறு 7
(37, 39, 126, 174, 226, 280, 383)
நற்றிணை 1 (304)

(33) முடத்தாமக் கண்ணியார் –
பொருநராற்றுப்படை 1(பத்துபாட்டில் ஒன்று)

(34) முள்ளியூர் பூதியார் – 1 அகநானூறு 1

(35) வருமுலையாரித்தி –
குறுந்தொகை 1 (176)

(36) வெறி பாடிய காமக்கண்ணியார் –
புறநானூறு 1 (271),
அகநானூறு 2 (22, 98),
நற்றிணை 1 (268)

(37) வெண்மணிப்பூதியார் –
குறுந்தொகை 1 (299)

(38)வெள்ளி வீதியார் -
அகநானூறு 2 (45, 362),
குறுந்தொகை 8
(26, 44, 58, 130,146, 149, 169, 386), நற்றிணை 3 (70, 335, 348)

நன்றி Kamakshi Narayan

வீரப்பனார் எத்தனை யானைகளைக் கொன்றார்?

வீரப்பனார் எத்தனை யானைகளைக் கொன்றார்?

1972-85 ஆண்டுகளுக்கிடையில் இந்திய யானைகளின் மொத்தத் தொகையே சுமார் 10,000 தான்.

அவற்றில் தமிழ்நாட்டில் சுமார் 1500 மட்டுமே இருந்திருக்கலாம்.

வீரப்பனின் இருப்பிடம், மொத்த தமிழ்நாடோ, இந்தியாவோ அல்ல.

குறிப்பிட்ட சுமார் 600 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட அடர்த்தியற்ற ஒரு குறுமரக் காட்டுப்பகுதிதான்.

ஏனெனில் ஒரு யானைக் கூட்டத்திற்கு சராசரியாக 100 ச.கி.மீ. காடுகள் தேவை.

(நன்றி: ச.முகமது)

ஆக ஆறு யானைக்கூட்டங்கள்தான் வாழ்ந்திருக்கவேண்டும்.

ஒரு யானைக் கூட்டத்தில் ஐம்பதில் இருந்து அறுபது யானைகள் வரை இருக்கும்.

ஆக அதிகப்படியாக 350 யானைகள்தான் மொத்தமே இருந்திருக்கும்.

வீரப்பனார் வேட்டைக்காரர்தான்.
ஆனால் அவர் வேட்டையாடிய காலம் மிகவும் குறைவு.

அவர் என்னமோ ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்றதாகக் கூறுகின்றனர்.

படம்: தமிழகத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பல வழிபாட்டுச் சிலைகளில் ஒன்று.

Thursday 26 May 2016

2006ல் காலில்போட்டு மிதித்ததுடன் 2016ல் காறியும் துப்பிய மலையாளி

2006ல் காலில்போட்டு மிதித்ததுடன்
2016ல் காறியும் துப்பிய மலையாளி

தமிழகத்தின் எல்லைக்குள் புகுந்து செண்பகவல்லி அணையை உடைத்த மலையாள வனத்துறை.

சிவகிரி விவசாயிகள் சங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு
8 வார காலத்திற்குள் அணைகட்ட 03.08.2006 அன்று உத்தரவிடப்பட்டது.

பத்து ஆண்டுகளாக அந்த தீர்ப்பை மதிக்கவில்லை மலையாள அரசு.

எட்டு வாரத்தை பத்து ஆண்டுகளாக எண்ணிக்கொண்டேயிருக்கும் கையாலாகாத உச்சநீதிமன்றமும் ஒன்றும் செய்யவில்லை.

தமிழக வந்தேறி அரசுகள் அதனைக் கண்டுகொள்ளவும் இல்லை.
என்ன செய்தன தெரியுமா?

1981ல் கேரள வனத்துறை தமிழக எல்லைக்குள் வந்து செண்பகவல்லி அணையை உடைத்துவிட்டு போனது.
அன்றைய முதல்வர் மலையாள எம்.ஜி.ஆர் அதைத் தட்டிக்கேட்கவில்லை.

கருணாநிதி 1987-1991 வரை மலையாளிகளை கெஞ்சிக்கொண்டிருந்தார்.
உடைந்த அணையையாவது கட்டித்தாருங்கள் என்று.

அதன்பிறகு ஜெயலலிதா 5,50,000 ரூபாய் பணம் கொடுத்து கெஞ்சினார்.

பணத்தையும் வாங்கிக்கொண்டு செண்பகவல்லி அணையைக் கட்டித்தரவும் இல்லை மலையாளிகள்.

வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள்
சிவகிரி பகுதியில் 33 குளங்கள் நிரம்ப நீராதாரமாகவும்,

சங்கரன்கோயில் வட்டத்தில் 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும்,
அப்பகுதிக்கு மக்களுக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை இன்று இல்லை.

திருநெல்வேலிக்காரன் பெருமை பேசுபவர் இதனையும் சேர்த்து பேசுங்களேன்
மலையாளிகள் உங்கள் இடத்தில் புகுந்து உங்கள் சோற்றில் மண்ணள்ளிப் போட்டு வயிற்றில் அடித்ததை.

இது 1773ல் சிவகிரி ஜமீனால் கட்டப்பட்டது.
சிவகிரி ஜமீன் பற்றி பெருமையாக எழுதும் மறவர் சாதி வலைத்தளங்கள் இதனை மட்டும் ஏனப்பா குறிப்பிடவில்லை?

போனவாரம் அணையின் மீதமிருந்த தடுப்புச் சுவரையும் இடித்தது மலையாள அரசு.

கேரளாவில் பஞ்சமோ தண்ணீர் பற்றாக்குறையோ இல்லை.

  உச்சநீதி மன்றத்தை மதிக்காத
அப்பாவி தமிழ் மக்களின் உணவையும் தண்ணீரையும் பிடுங்கும் மலையாள அரசு.
இதன் மூலம் தமிழர்கள் மீதான இனவெறியைத்தான் காட்டுகிறது.

எட்டு கோடி தமிழர்களே
நீங்கள் ஒன்றரை கோடி சிங்களவனிடம் அடி வாங்குங்கள்.
அவனிடம் ஒரு இராணுவம் இருக்கிறது.

ஆனால் உணவுக்கு உங்களை நம்பியிருக்கும்
ஒன்றரை கோடி மலையாளிகளிடம்
அடிவாங்குவது
எந்த வகையிலும் சகிக்கவே முடியாதது.

Tuesday 24 May 2016

என் கனவு

என் கனவு

ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான (ஆழம் குறைந்த) கடலை மண் போட்டு நிரப்பி நிலத்தொடர்பை ஏற்படுத்தவேண்டும்.

அதில் கடல் அடைபட்டுக் கிடக்காமலிருக்க மண் பரப்பில் நீரோட்டத்திற்கு ஓடை போன்று வழி விட்டு அதன்மேல் பாலம் கட்டவேண்டும்.

தென்னிந்திய நிலப்பரப்பில் குறுகிய பகுதியில் ஒரு நேர்க்கோடு வரைந்து அதனை வடக்கு எல்லையாகக் கொள்ளவேண்டும்.

அதாவது தற்போதைய கர்நாடகாவின் Kondapura என்ற ஊருக்கு சற்று மேல் கடல் உள்வாங்கியுள்ள இடத்திலிருந்து

சற்று சாய்வாக மேல்நோக்கி செல்லும் நேர்கோடு

தற்போதைய ஆந்திராவின் Singarayakonda அருகே கடல் உள்வாங்கியுள்ள இடம் வரை வரையவேண்டும்.

இந்த கோடு
நீளம் குறைவானதாகவும்
ஏற்ற இறக்கம் அதிகம் இல்லாமலும் இருப்பதால்
இதனை பாதுகாப்பது எளிது.

அதற்குத் தெற்கே இருக்கும் அனைத்தும் நமக்கு உரித்தானது.

இந்த பரந்த நிலத்தினை
தனி நாடாக்கி,
எவருக்கும் பணியாமல் முப்படையுடன் தமிழர் தம் சொந்த பலத்தினால் ஆள்தல்.

இதுதான் "அகன்ற தமிழர்நாடு".
சங்ககாலத் தமிழகத்தின் மறு நிறுவல்.
வரலாற்றினை ஆராயாமல்
நியாய-அநியாயம் பற்றி சிந்திக்காமல் இத்தீர்வினை நோக்கி முன்னேறுதல்.

இதுதான் நாம் அழிந்துபோவதிலிருந்து தப்பிப்பிழைக்க ஒரே வழி.

மேலும் அறிய,

ஈழத்திற்கு பாலம் கட்டுவோம்
vaettoli.blogspot.in/2014/12/blog-post_91.html?m=1

அகன்ற தமிழர்நாடு
vaettoli.blogspot.in/2016/04/blog-post_24.html?m=1

நெருப்புக்குத் தீப்பொறி
தமிழ்க் குடியரசுக்கு ஈழப்பொறி
vaettoli.blogspot.in/2014/11/blog-post_20.html?m=1

அத்தியாவசியக் கொலைகள்
vaettoli.blogspot.in/2015/11/blog-post_86.html?m=1

சங்ககாலத் தமிழகம் (எல்லைகள்)
vaettoli.blogspot.in/2016/04/blog-post_97.html?m=1

Sunday 22 May 2016

சீமான் இடத்தில் இப்போது நான் இருந்தால்

சீமான் இடத்தில் இப்போது நான் இருந்தால்

கடலூரில் நாம்தமிழருக்கு வாக்குபோட்ட 12,597 பேரை தேடிப்பிடித்து அவர்கள் நா.த.க வுக்கு வாக்களித்ததை அவர்களின் விருப்பத்தின்பேரில் பேட்டி கொடுக்கச்சொல்லி கையெழுத்தும் வாங்கிக்கொள்வேன். காணொளி ஆதாரம் வைத்துக்கொள்வேன்.

பதிவான வாக்குகள் 12,497.
மீதி நூறு வாக்குகள் எங்கே போயின என்று தேர்தலாணையத்தைக் கேட்பேன்.

இதனால் என்ன நடக்கும் என்றால்,
மக்களுக்கு வாக்குபதிவில் முறைகேடு நடந்தது புரியும்.

அடுத்தமுறை வாக்குசீட்டு மூலம் தேர்தல் நடத்த வலியுறுத்தும்போது மக்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விடாதீங்க சீமான் அண்ணே!

வாக்கு இயந்திரங்கள் அவர்கள் கையில் இருக்கும்வரை
நீங்கள் என்னதான் உழைத்தாலும் மக்கள் எத்தனை வாக்குகள் போட்டாலும்
எல்லாம் வீண்தான்.

கடலூரில் நாம்தமிழருக்கு வாக்களித்ததை துணிச்சலாக ஒத்துக்கொள்ளும் 13000 பேர் கூடவா இல்லாமல் போவான்?!

நடத்தது ஒரு மோசடி தேர்தல் (சான்றுகள்)
vaettoli.blogspot. in/2016/05/blog-post_21.html?m=1

வங்காள இனப்பற்று

வங்காள இனப்பற்று
.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.

மேற்கு வங்க மாநிலமும் வங்கதேசநாடும் வங்காள மொழிபேசும் ஒரே இனத்தவர்.

ஆனால் வெவ்வேறு மதத்தவர்.

பங்களாதேசிலிருந்து இந்தியாவிற்குள் அகதிகள் நுழைவது அதிகரித்து வருவதை ஒட்டி

மேற்குவங்கத்தில் பாஸ்போட் இன்றி ஊடுருவியுள்ள பங்களாதேஸ் நாட்டினரை வெளியேற்றுவேன் என்று மோடி கூறினார்.

இதனால் கோபமடைந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி
"எங்கள் சகோதரர்களை வெளியேற்ற மோடி யார்"

"துணிச்சலிருந்தால் தொட்டுப்பார்"
என்று கடுமையாக சாடியுள்ளார்.

The BJP's prime ministerial candidate had threatened to deport illegal immigrants from the neighbouring country if his party won the Lok Sabha elections.

"Modi has no right to say he will oust Bangladeshis from West Bengal. Who is he? He is nobody," Banerjee, chief of the Trinamool Congress, said.

"I dare you to touch them [Bangladeshis]. Modi is playing divisive politics in West Bengal," said Banerjee, whose state borders Bangladesh.

முன்பாவது இந்தியா பங்களாதேஷ் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாமல் இருந்தன.
இருதரப்பிலும் சில கிராமங்கள் எல்லைதாண்டி இருந்தன.
எல்லைதாண்டிய கிராமங்களை  அவரவர்களே எடுத்துக்கொள்ளுமாறு செய்து மோடி அரசு அதனை சரி செய்தது.

அதன்பிறகும் வங்காளதேச மக்கள் இந்தியாவிற்குள் எந்த தடையுமில்லாமல் வந்து போவதற்குக் காரணம் மேற்குவங்க மாநிலத்தின் இனப்பாசம்தான்.

ம.பொ.சி கூறினார். வங்காளியரின் இனப்பற்றுக்கு ஈடான ஒன்று இந்த உலகில் உண்டோ?

அந்த இனப்பற்றுதானேஅந்தமானைத் தமிழரிடமிருந்து அவர்கள் பறித்துக்கொள்ள உதவியது?!

நான் நமது ஈழத்தமிழனை நினைத்து கண்ணீர் விட்டேன்.

-ஆதி பேரொளி

Saturday 21 May 2016

நடத்தது ஒரு மோசடி தேர்தல் (சான்றுகள்)

காலம் கடந்துவிடவில்லை.
நாம் தேர்தலை வெல்லலாம்.

நடத்தது ஒரு மோசடி தேர்தல் (சான்றுகள்)

போன நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று வென்ற அன்புமணி
இந்த முறை எப்படி தோற்றார்?

சீமானின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் குறைந்தது ஒரு லட்சம் பேராவது தவறாமல் கூடுவார்கள்
அவருக்கு 15000 வாக்குகள் கூட கிடைக்காமல் டெபாசிட் போனது எப்படி?

வாக்கு எண்ண ஆரம்பித்து வெறும் 30 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னணியில் இருந்தபோது மோடி ஜெயலலிதா வெற்றிக்கு வாழ்த்துகள் சொன்னது எதை வைத்து?

எல்லாவற்றுக்கும் மேல் தஞ்சாவூர் அருகே பாபநாசம் தொகுதியில் பறக்கும்படையிடம் பிடிபட்ட 500 போலி வாக்குபதிவு இயந்திரங்கள் பற்றி மே 14 அன்று செய்தித்தாள்களில் வந்தது.
அதன்பிறகு மற்ற இயந்திரங்களை சரிபார்க்க எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன்?

எல்லாவற்றிற்கும் பதில் இந்த வீடியோவில்
( https:// m.youtube. com/watch?v=apkSkb6Ak3I

India's Electronic Voting Machines ( EVM ) are vulnerable to fraud _யூட்யூப்)
உள்ளது.
இந்த வாக்குபதிவு இயந்திரத்தில் ஏமாற்ற மூன்று வழிகள்உள்ளன.

அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற அறிவியலில் முன்னேறிய வல்லரசு நாடுகள் அனைத்துமே வாக்குசீட்டு மூலமே தேர்தல் நடத்துகின்றன.

தனக்கென ஒரு சிறிய போர் விமானத்தைக்கூட வடிவமைக்க அறிவில்லாத
உலகில் தரமான 100 கல்லூரிகளில் ஒன்று கூட தன்னிடம் இல்லாத
தனக்கென சொந்த கண்டுபிடிப்பு என உருப்படியாக எதுவும் இல்லாத
கொள்ளைக்கார அரசியல்வாதிகள் நிறைந்த இந்தியா
தானே சொந்தமாகத் தயாரித்ததுதான் இந்த வாக்குபதிவு இயந்திரம்.

இதன் மூலம் பதியப்படும் ஒருவருக்கு பதியப்படும் வாக்கு
மற்றொருவருக்கு போகுமாறு செய்யமுடியும் என்று இதுவரை இரண்டுபேர் நிரூபித்தும் உள்ளனர்.

தமிழகத்தில் நடந்தது ஒரு மோசடி தேர்தல்.

ஆகவே, நாம் தமிழர் மற்றும் பா.ம.க இணைந்து மீதி இருக்கும் இரண்டு தொகுதிகளில் வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடத்த பெரிய போராட்டத்தை நடத்தவேண்டுஆகவே, நாம் தமிழர் மற்றும் பா.ம.க இணைந்து மீதி இருக்கும் இரண்டு தொகுதிகளில் வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடத்த பெரிய போராட்டத்தை நடத்தவேண்டும்.

அதில் அ.தி.மு.க, தி.மு.க குறைந்த வாக்கு பெற்றால் தேர்தலை மீண்டும் நேர்மையாக நடத்த வலியுறுத்தவேண்டும்.

காணொளிக்கு நன்றி :
அண்ணன் ஏனாதி பூங்கதிர்வேல்.

Thursday 19 May 2016

சீமான் ஏன் தோற்றார் தெரியுமா?

சீமான் ஏன் தோற்றார் தெரியுமா?

கொஞ்சநாளைக்கு கட்சி அரசியல் பேசுறத விட்ரலாம்னு யோசிச்சேன்.

அப்றம்தான் புரிஞ்சது
நாமதான் கட்சி அரசியல் பேசினதே இல்லையே!

சீமான் அண்ணனுக்கு சாதகமா 3,4 பதிவு போட்டேன்.

மற்றபடி ஆயுத அரசியல்தான் எப்போதும் பேசுறேன்.

ஓட்டு அரசியல்லாம் சரி வராது.
விடுதலை ஆயுதம் ஏந்தினாதான் கிடைக்கும்னு முடிவு பண்ணினது எவ்வளவு சரியா இருக்குது.

ஆம்ம்ம்மா....??????

பத்துவயசு பையன் வரைக்கும் காறி காறி துப்பின தி.மு.க காங்கிரஸ் கூட்டணி இவ்வளவு இடம் வெல்றதும் ?!

அ.தி.மு.க மீது மக்களுக்கு இருந்த வெறுப்பையும் மீறி அது பெருவாரியா வெல்றதும் ?!

பா.ம.க ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாம தோற்கறதும் ?!

திருமாவளவன், கிருஸ்ணசாமி வெறும் 100 வாக்குகள்ல தோக்றதும்

நாம் தமிழர் எந்த இடத்திலும் 10,000 வாக்குகூட வாங்காம போனதும் கூட ஏத்துக்கலாம்

சீமான் தோற்றதகூட ஏத்துக்கலாம்

ஆனா எந்த ஊடகமும் இல்லாமலே 2லட்சம் பேர் வரை மக்களைக் கூட்டி மேடைபோட்ட சீமானுக்கு வைப்புதொகை(டெபாசிட்) கூட கிடைக்காம போனதுலாம் ரொம்ம்ம்ம்ம்ப அதிகம்.

இத ஒரு நேர்மையான தேர்தல்னு கேணப்பயதா நம்புவான்

அதெப்படிப்பா முன்னேறிய நாடுகள் கூட வாக்குசீட்டு பயன்படுத்தும்போது

தொடர்வண்டி பயணச்சீட்டை பதிவு பண்ணும் அரச இணையதளம் கூட உருப்படியா வடிவமைக்கத் துப்பில்லாத இவனுக வாக்கு இயந்திரம் சொந்தமா தயாரிச்சு பயன்படுத்துறது??

அதுல மாற்றி வாக்குபதிவு ஆகும்னு ரெண்டுபேர் நிரூபிச்ச பிறகும் அந்த வாக்கு இயந்திரத்த நாங்க நம்பணுமா??

#விலைக்கு_வாங்கப்பட்ட_தேர்தல்
#ஆயுதமே_ஒரே_வழி

அண்ணன் சீமானும் தந்தை செல்வாவும்

தந்தை செல்வா அவர்கள்
1949ல் தனியாக கட்சி தொடங்கி
1952ல் போட்டியிட்ட முதல் தேர்தலில் தோல்விதான் அடைந்தார்.

(1944ல் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்)

அவர் ஈழத்தின் தந்தையாக உருவெடுவில்லையா?!

எவன் என்ன சொன்னா என்ன!

என்னைப் பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் சீமான் அண்ணன்தான்.

#சீமான்

Wednesday 18 May 2016

ஈழம் போதுமா?!

தமிழினத்திற்கு ஈழம்
யானைப்பசிக்கு சோளப்பொறி

Monday 16 May 2016

"எம்டன்" செண்பகராமன் - ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு

"எம்டன்" செண்பகராமன்
- ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு

செண்பகராமன் 1891ல் திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட தமிழர் மண்ணான திருவனந்தபுரத்தில் "நாஞ்சில் வெள்ளாளர்" குடியில் பிறந்த தமிழர்.
அவரது பெற்றோர் திரு.சின்னசாமிப்பிள்ளை, திரு.நாகம்மாள் ஆகியோராவர்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த செண்பகராமன்.
மாணவர் பருவத்திலேயே விடுதலை உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
ஆங்கிலேயர்கள் மாணவர்களின் குடும்பத்தினரை எச்சரித்தனர்.
மாணவர்களின் தலைவர் போல இருந்த செண்பகராமனுக்கு கல்லூரி நிர்வாகத்திடமிருந்தும் எச்சரிக்கை வந்தது.
இதனால் அவருக்கு நெருக்கடி முற்றியது.
இது பற்றி அறிந்த சர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட் என்ற ஒரு ஜெர்மன் உளவாளி அவரை ஜெர்மனிக்கு அழைத்துசென்றார்.

1908-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் திகதி தனது 17வது அகவையில் என். எல். ஜி. யோர்க் என்ற ஜெர்மனிய கப்பலில் ஏறி செண்பகராமன் தலை மறைவானார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த செண்பகராமன் ஐரோப்பா சென்று மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆள் ஆனார்.
இத்தாலியில் போய் இறங்கி சிறிது காலம் அங்கே வாழ்ந்தார்.
அங்கு இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றார்.
பிறகு சுவிட்சர்லாந்திற்குச் சென்றார்.
அங்குள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் செண்பகராமன் பட்டம் பெற்றார்.

பிறகு சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்குச் சென்றார்.
அங்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.

வேலை செய்து படித்துக்கொண்டே சக இந்தியர்களைத் திரட்டி கூட்டம் போட்டார்.
இந்திய விடுதலை நிகழ்வுகளில் பங்குபெற்று சொற்பொழிவாற்றினார்.
இந்த நேரத்தில்தான் "ஜெய்ஹிந்த்" என்ற சொல்லை உருவாக்கினார்.

ஜெர்மானியர்களிடம் இருந்த பிரிட்டிஷ் வெறுப்புணர்வை புரிந்துகொண்ட செண்பகராமன் அங்கேயே நிலைகொண்டு போராட்டத்தைத் தொடர முடிவெடுத்தார்.
“இந்திய ஆதரவு சர்வதேச கமிட்டி” ஒன்று நிறுவினார்.
டாக்டர் செண்பகராமனே அதற்கு தலைவராக இருந்து “ப்ரோ இந்தியா” (Pro-India) எனும் ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகளில் இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.

1914ல் ஜெர்மானியப் பேரரசராக இருந்த அப்போதிருந்த கெய்சர் வில்ஹெம் செண்பகராமனை அழைத்து ஆங்கில அரசுக்கெதிராக செயல்பட தான் உதவுவதாகக் கூறினார்.
செண்பகராமனின் தோற்றத்தையும் அறிவாளித்தனத்தையும் பார்த்த கெய்சர் அவரைத் தனது நண்பராக ஏற்றுக்கொண்டார்.
அரசு விழாக்களில் தன்னுடன் அழைத்துச்சென்றார்.
ஜெர்மன் அரசின் உயரிய பட்டமான "வொன்" செண்பகராமனுக்கு வழங்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான் ஆங்கிலேய அரசு தான் நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த அந்த தீவிரவாத மாணவன் ஜெர்மனியில் தொடமுடியாத உச்சத்தில் இருப்பது தெரிந்தது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்தியரைத் திரட்டி ஆங்கில அரசுக்கெதிரான செருமானிய நடவடிக்கைகளில் ஒத்துழைக்க செண்பகராமன் முயல்வதும் தெரியவந்தது.

1914 முதல் உலகப்போர் மூண்டது.
ஜெர்மனியில் வாழும் இந்தியரைத் திரட்டி ஐ.என்.ஏ (Indian national volunteers) என்ற தொண்டர் படையை நிறுவினார்.

ஜெர்மனியின் எம்டன் (Emden) என்ற போர்க்கப்பலை செண்பகராமன் பெற்றுக்கொண்டு இந்தியப் பெருங்கடலில் ஆங்கில அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தாக்கினார்.

1914ல் செப்டம்பர் 22 எம்டன் கப்பல் கடலில் நின்றபடி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை தாக்கிவிட்டு மறைந்தது.
அது தாக்கிய விதத்தை மக்கள் இன்றும் மறக்கவில்லை.
பயங்கரமான ஆட்களை எம்டன் என்ற பெயர்கொண்டு இன்றும் சென்னை மக்கள் அழைக்கிறார்கள்.

அன்று அந்த கப்பலின் தலைமைப் பொறியாளராகவும் இரண்டாம்கட்ட தளபதியாகவும் இருந்தது ஒரு 23 வயதான தமிழர் என்ற உண்மை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

1915ல் வீரேந்தர்நாத் சட்டோபாத்யாய் என்பவர் மூலம் வங்காள ஆயுத போராளிகளான ஜுகாந்தர் குழுவிற்கு ஆயுதங்களை அனுப்பிவைத்து உதவினார்.

1916 ஆப்கானிஸ்தான் மீது பிரிட்டிஷ் படை எடுத்தது.
அப்போது காபூலில் 'நாடுகடந்த இந்திய அரசாங்கத்தை' ஜெர்மனியின் கூட்டுப்படைகளின் ஆதரவுடன் இந்திய தலைவர்கள் ஏற்படுத்தினர்.
அதில் வெளியுறவு அமைச்சராக செண்பகராமன் நியமிக்கப்பட்டார்.

ஜெர்மனி போரில் தோற்றதும் 1919 ல் அங்கிருந்து ரஷ்யா தப்பிச்சென்று லெனினைச் சந்தித்து உரையாடினார்.

ஜெர்மனி சரணடைந்து வெர்ஸெயிர்ல்ஸ் உடன்படிக்கை கையெழுத்தானபோது செண்பகராமனை பிரிட்டனிடம் ஒப்படைக்க ஆங்கிலேயர் கோரினர்.
ஆனால் தமக்கு பெரிதும் உதவிய செண்பகராமனை ஜெர்மானியர் ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.

பிறகு ஜெர்மனி திரும்பிய செண்பகராமன் ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

உலகில் அத்தனை மூலைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதைக் கண்ட செண்பகராமன் “ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்”
“ கீழ் நாட்டவர் சங்கம்” ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.
இவற்றின் கிளைகளை நிறுவுவதற்காக பன்னிரண்டு மொழிகளில் மிகச் சரளமாக பேசும் திறமைபெற்ற செண்பகராமன் பட்டேவியா, பர்மா, சயாம், சீனா, எகிப்து, துருக்கி, அமெரிக்கா, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.

அமெரிக்கா சென்றபோது செண்பகராமன்  கறுப்பர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று சொற்பொழிவாற்றினார்.
கறுப்பின மக்களுக்காக அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனை சந்தித்து நெடுநேரம் உரையாடினார்.

பிறகு தென்னாப்பிரிக்கா சென்றார்.
ஆங்கில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தென்னாப்பிரிக்காவில் செண்பகராமன் நுழைந்தது தெரிந்ததும் பிரிட்டிஷ் அரசு அவர் தலைக்கு ஒரு லட்சம் பவுண்ட் அறிவித்தது.

அவர் பயணம் செய்த எல்லா இடத்திலும் பிரிட்டிஷ் உளவாளிகள் அவரைப் பிடிக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருந்தனர்.
மாறுவேடமிடுவதிலும் பெயர்மாற்றிக்கொண்டு எல்லையைக் கடப்பதிலும் வல்லவரான செண்பகராமனை அவர்களால் பிடிக்கவேமுடியவில்லை.
அவர் உலகின் பல மூலைகளில் தோன்றி மறைந்து பிரிட்டிஷ் அரசைக் குழப்பினார்.

இறுதியில் பெர்லினுக்கே திரும்பிவிட்டார்.

1930-ம் ஆண்டில் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பெற்றார்.
பெர்லின் நகரில் வாழ்ந்துவந்த மணிப்பூரைச் சேர்ந்த லஷ்மி பாய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

முதலாம் உலகப்போர் முடிந்திருந்த நேரம் ஒரு உணவு விடுதியில் செண்பகராமன் அமர்ந்திருந்தபோது
அடால்ப் ஹிட்லர் என்ற ஒரு இளைஞன் ஜெர்மானியர் உயர்ந்த ஆரிய இனமென்றும்
அவர்களே உலகை ஆளவேண்டும் என்றும்
இந்தியர்கள் ஜெர்மானியரால் ஆளப்படவேண்டிய கீழ்மக்கள் என்றும் ஒரு சிறிய குழு முன் நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

உடனே அருகிலிருந்த செண்பகராமன் அவனை விவாதத்திற்கு அழைத்து இந்தியர்கள் ஒன்றும் கீழ்மக்கள் இல்லை என்று வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவி அவனது திமிரை அடக்கினார்.
ஹிட்லர் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்ட பிறகே அவனை விட்டார்.
( அன்று அதிகம் அறியப்படாத அந்த இளைஞனே பின்னாளில் ஜெர்மனிய அதிபராகி
தன் உயிரைப் பறிப்பான் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்)

ஜெர்மனி செல்லும் இந்திய தலைவர்கள் அனைவரும் செண்பகராமனை போய்ப் பார்க்காமல் வருவதில்லை.
சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, அவரது தந்தை பண்டித மோதிலால் நேரு, லால்சந்த், ஹீராசந்த், விட்டல்பாய் பட்டேல் ஆகியோர் டாக்டர்.பிள்ளையின் வீட்டில் தங்கியவர்கள் ஆவர்.

நேரு தனது சுயசரிதையில் பொறாமையுடனும் வெறுப்புடனும்
கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
"நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவரான டாக்டர் செண்பகராமன் பிள்ளையைச் சந்தித்தோம்.
அவர் பழைய யுத்தகோஷ்டியைச் சேர்ந்தவர்களில் பெயர்பெற்ற அங்கத்தவர்.
பெர்லினில் அவர் மிக படாடோபமாக வாழ்ந்துவந்தார்.
அங்குள்ள இளம் மாணவர்கள் அவருக்கு பொருத்தமற்ற பட்டம் ஒன்றை வழங்கினர்.
டாக்டர் பிள்ளை தேசியம் ஒன்றில் மட்டுமே தம் சிந்தனையைச் செலுத்தினார்.
பொருளாதார, சமூக பிரச்சனைகளில் போதிய அக்கறை காட்டவில்லை.
உருக்கு தொப்பி அணிந்த ஜெர்மனிய தேசியவாதிகளுடன் எவ்வித வேறுபாடுமின்றி மிக சகஜமாகப் பழகினார்.
நாஜிக்களுடன் கலந்து சற்றும் பயமின்றி பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் டாக்டர் பிள்ளை முதன்மையானவர்.
நான் மீண்டும் சிறையில் இருந்த காலத்தில் பெர்லின் நகரில் டாக்டர் பிள்ளை மரமடைந்ததைக் கேள்வியுற்றேன்"

17வயதில் தலைமறைவான செண்பகராமன் பிள்ளை.
1933 அக்டோபர் 7 அன்று தனது  தலைமறைவு வாழ்க்கையின் 25வது ஆண்டைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்தார்.
ஜெர்மனியின் பெரிய மனிதர்கள் அனைவரும் அதில் கலந்துகொண்டனர்.

ஹிட்லரை அடியபணிய வைத்த அந்த வீரத்தமிழ்மகன் ஹிட்லர் ஆட்களால் மெல்லக்கொல்லும் நஞ்சு கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1934 மே 26 அன்று செண்பகராமன் சாகும் முன் தன் மனைவியிடம் கடைசி ஆசையாக,
தன் அன்னையின் அஸ்தி கரைக்கப்பட்ட அதே கரமனை ஆற்றில் தன் அஸ்தியில் பாதியைக் கரைத்துவிட்டு நாஞ்சில் நாட்டு வயல்களில் மீதி அஸ்தியைத் தூவுமாறு கூறிவிட்டு இறந்தார்.

நாஜிகள் அவரது உடலை எரியூட்டியபிறகு அவரது மனைவி கெஞ்சி கதறி அவரது அஸ்தியை வாங்கிக்கொண்டார்.
பிறகு அவர் நாஜிக்களால் மனநல மருத்துவமனையில் அடைத்துவைக்கப்பட்டார்.
அங்கிருந்து தப்பி இத்தாலி சென்று ஸ்பெயின் வழியே 1936ல் மும்பை வந்து சேர்ந்தார்.
அதன்பிறகு அவர் தன் கணவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற 30 ஆண்டுகள் படாதபாடு பட்டார்.
நேருவும் காந்தியும் கூட அவரது அஸ்தியை இந்தியா கொண்டுவர ஒத்துழைக்கவில்லை.

Free Press Journal of Bombay என்ற பத்திரிக்கை செம்டம்பர் 12, 1966 அன்று வெளியிட்ட செய்தி கீழ்வருமாறு
" In early 1930's Dr.Pillai incurred the wrath of Hitler whose ominous rumblings were just beginning to be heard.
In May 1934, Pillai died of suspected slow poisoning.
His body was cremated in Berlin."

லட்சுமிபாயின் பெருமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாக செண்பகராமன் இறந்து 32ஆண்டுகள் கழித்து 1966 செபடம்பர் 19ல் இந்தியாவின் முதல் போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.டெல்லி மூலம்,
மும்பையிலிருந்து எர்ணாகுளம் வரை செண்பகராமனின் அஸ்தி எடுத்துவரப்பட்டு கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது.
ஆனால் நாஞ்சில் வயல்களில் தூவப்படவில்லை.
அந்த தமிழனின் கடைசி ஆசை கூட அரைகுறையாகத்தான் நிறைவேற்றப்பட்டது.

செண்பகராமனைப் பற்றி அவர் உதவி செய்த வங்காள ஆயுத போராளிகள் மூலம் அறிந்த சுபாஷ் சந்திரபோஸ் அவரை ஒருமுறை சந்தித்தார்.
அவர் இறந்துபோன பிறகு அவர் வழியிலேயே போராட முடிவு செய்தார்.
காங்கிரசிலிருந்து விலகினார்.
1941ல் ஆங்கிலேயரிடமிருந்து தப்பி ஜெர்மனி சென்று அதன் அதிபர் ஹிட்லரிடம் உதவி கேட்டார்.
ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல் மூலம் தனது நட்பு நாடான ஜப்பானுக்கு ஹிட்லர் அவரை அனுப்பினார்.
ஜப்பானிடம் இருந்த இந்திய கைதிகளைக் கொண்டு செண்பகராமனனின் I.N.V போலவே I.N.A ஐத் தொடங்கி செண்பகராமனின் முழக்கமான ஜெய்ஹிந்தையே தனது முழக்கமாகவும் வைத்துக்கொண்டார் நேதாஜி.
ஆக நேதாஜியின் குரு செண்பகராமனே.

உசாத்துணை:-
நூல்: மாவீரன் செண்பகராமன் (1968)
ஆசிரியர்: யோகா பாலச்சந்திரன்
வெளியீடு: கொழும்பு கலைச் சங்கம்

படம்: நக்கீரன்
-------------------------
செண்பகராமன் ஒரு குசராத்தியாகவோ தெலுங்கராகவோ இருந்திருந்தால் சாலைகள், கல்லூரிகள், நிலையங்கள், சிலைகள், பாடப்பகுதி என்று தூள்கிளப்பியிருப்பார்கள்.
தமிழன் என்பதால் பெயர்கூட வெளிவரவில்லை.
தமிழகத்தில் படேல் சாலையும், காந்தி நகரும், நேரு அரங்கமும், ஓமந்தூரார் கட்டடமும் இருக்கும்.

ஆனால் செண்பகராமனுக்கு தமிழகத்தில் ஓரே ஒரு சிலைதான் உள்ளது.
அதுவும் இறந்து 75 ஆண்டுகள் கழித்து 2009ல்தான் நிறுவப்பட்டது.

தமிழகத்துக்கு வெளியே ஒரு முட்டுசந்துக்குக் கூட ஒரு தமிழ்த்தலைவர் பெயர்கூட இல்லையே அது ஏன்?

டெல்லியில் பாரதி பெயரில் ஒரு சாலை உள்ளது.
அவர் பார்ப்பனத் தமிழராக இல்லையென்றால் அதுகூட இருக்காது.

தமிழர்கள் இந்திய சுதந்திரத்திற்காக சிந்திய குருதி அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் வீணாகப் போனதே?!

இந்தியா தமிழர்களுக்கான நாடா?

Saturday 14 May 2016

தமிழக முதலமைச்சர் சீமான் அவர்களுக்கு,

தமிழக முதலமைச்சர் சீமான் அவர்களுக்கு,

தாய்நாடான தமிழ்நாட்டின் மீது நாட்டுப்பற்று கொண்ட ஒரு குடிமகனின் விண்ணப்பம்.

தங்களின் பாடத்திட்டவரைவில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஒரு விருப்பப்பாடம் என்ற கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.

இந்த பதிவினைத் திறந்த மடலாக எண்ணி,

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மட்டும் பள்ளிகளில் கற்பிக்கப்பட ஆணை பிறப்பிக்குமாறு தங்களை தமிழ் மக்கள் சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி.

திராவிடம் எனும் பகடைக்காய்

தமிழ்மக்களின் வடயிந்திய எதிர்ப்புணர்வுதான் திராவிடத்தை தமிழகத்தில் நுழைய விட்டது.

அன்று பகடைக்காயாக திராவிடர்களைப் பயன்படுத்தினோம்.

இன்று அந்த காயை வெட்டும் நேரம் வந்துவிட்டது.

vaettoli.blogspot.in/2015/07/blog-post_81.html?m=1

Thursday 12 May 2016

கோவணா ஆண்டியின் ஓட்டு

கோவண ஆண்டி ஜவுளிக்கடைக்காரனைப் பார்த்து சவால் விட்ட கதைதான்.

அவனவன் கொள்ளையடிச்சு பத்து தலைமுறைக்கு சொத்துசேத்துட்டான்.

இவன் அவனுகளுக்கு வாக்குபோடம பழிவாங்கிருவானாம்.
ஒழிச்சுகட்டிருவானாம்.

கோவணத்தயாவது காப்பாத்திக்கோங்கடா.

நல்லவனா நம்ம ஆளா பாத்து ஓட்டுபோட்டுங்க.

#சீமான்
#அன்புமணி

Wednesday 11 May 2016

தாய்லாந்து (தாய்)மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்

தாய்லாந்து (தாய்)மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்
------------------------------------
தங்கம் -> தொங்கம்
கப்பல் -> கம்பன்
மாலை -> மாலே
கிராம்பு -> கிலாம்பு
கிண்டி -> கெண்டி
அப்பா -> பா
தாத்தா -> தா
அம்மா -> மே, தான்தா
பட்டணம் -> பட்டோம்
ஆசிரியர் -> ஆசான்
பாட்டன் -> பா, புட்டன்
திருப்பாவை -> திரிபவாய்
வீதி -> வீதி
மூக்கு -> சாமுக்
நெற்றி -> நெத்தர்
கை -> கை
கால் -> கா
பால் -> பன்
கங்கை -> கோங்கா
தொலைபேசி -> தொரசாப்
தொலைக்காட்சி -> தொரதாட்
குலம் -> குல்
நங்கை -> நங்
துவரை -> துவா
சிற்பம் -> சில்பா
நாழிகை -> நாளிகா
வானரம் -> வானரா
வேளை -> வேளா
மல்லி -> மல்லி
நெய் -> நெய்யி
கருணை -> கருணா
விநாடி -> விநாடி
பேய்/பிசாசு -> பிச/பிசாத்
கணம் -> கணா
விதி -> விதி
போய் -> பாய்
சந்திரன் -> சாந்
ரோகம் -> ரூகி
தூக்கு -> தூக்
மாங்காய் -> மாங்க்
மேகம் -> மேக்,மீக்
பிரான், -> எம்பிரான் பிரா
யோனி -> யூனி
சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
சங்கு -> சான்க்
தானம் -> தார்ன்
பிரேதம் -> பிரீதி
நகரம் -> நகான்
பார்வை -> பார்வே
ஆதித்தன் -> ஆதித்
உலகம் -> லூகா
மரியாதை -> மார-யார்ட்
தாது -> தாட்
உலோகம் -> லூகா
குரோதம் -> குரோதீ
சாமி -> சாமி
பார்யாள் -> பார்ய
திருவெம்பாவை -> த்ரீயம்பவாய்

நன்றி: தமிழ்த் தொண்டு (முகநூல்)

யாழி (யாளி)

யாழி(யாளி)
******************
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்?

யாழிகள் - தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம்.
கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம்.

சிங்க உடலும் அதனுடன் யானையின் துதிக்கையும் தந்தமும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.

சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,
ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,
யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம்,
பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.

பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது.

அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.
சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால்,
இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள்.

அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம்.
ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த ன யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது.

உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது.

மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும்,
அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன.
உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.
குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை.

நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும்,
இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்.
அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.

யாழிக்கு எத்தனை கோவில்களில்,
எத்தனை விதமான சிலைகள் உள்ளன?
யாழியில் எத்தனை வகைகள் உள்ளன?
பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா?
யாழி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா?
யாழியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன?
யாழி என்ற உயிரினம் கற்பனையா?
இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா?
யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா?
வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன?
குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்?
பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
எதற்குமே பதில் இல்லை !!!!

என்னைப்பொருத்தவரை....
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட...

சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...

எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...

தமிழரின் புராதன விலங்கு யாழி அவை போற்றப்பட வேண்டும்

நன்றி: பழங்காலத் தமிழர் வரலாறு (முகநூல்)