Sunday 31 December 2023

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்

 999 ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.பி.1025 ஆம் ஆண்டு சோழர்கள் தமிழகத்தில் இருந்து 3000 கி.மீ  கடலில் பயணித்து ஸ்ரீவிஜயம் அரசின் (தற்போது இந்தோனேசியா) தென்முனையில் படையை இறக்கிப் போர்தொடுத்தனர்.

 யானைகளை ஏற்றிக்கொண்டு 150 கப்பல்கள்  நடுக்கடலில் நேர்கோட்டில் சென்ற இதுவே முதல் "பெருங்கடல் கடந்த படையெடுப்பு" ஆகும்.
 
 கங்கை, இமயம், இலங்கை, மலேசியா, இந்தோனேசியா என பரவிய சோழப் பேரரசு  கி.பி. 1035 இல் அதன் உச்சநிலையை அடைந்தது.

 இதுவே உலகின் முதல் " பெருங்கடல் கடந்த பேரரசு" ஆகும்.

 500 க்கும் 1000 க்கும் கண்ட வடுக வந்தேறிகளிடம் கையேந்தி நிற்கும் நமது இன்றைய நிலையை நினைத்தால் கூட அவ்வளவு கவலையில்லை.

 ஆனால் அன்று அந்த நிலையில் இருந்து இந்த நிலைக்கு வீழ்ந்து விட்டோமே என்று நினைக்கும்போது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.

 

Friday 29 December 2023

இசக்கி தாத்தா

இசக்கி தாத்தா

  அது தொல்லைபேசிகள் இல்லாத காலம்.
மாரியம்மாளும் உலகம்மாளும் அக்கா தங்கைகள்.
 அக்கா மாரியம்மாள் ஆலங்குளத்திலும் தங்கை உலகம்மாள் கோவில்குளத்திலும் வாழ்க்கைப்பட்டு இருந்தனர்.
 மாரியம்மாளுக்கு நான்கு குழந்தைகள் உலகம்மாளுக்கு குழந்தைகள் இல்லை.
 இருவரது இருப்பிடமும் 8 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.
 பகலில் ஓரிரு பேருந்துகள் உண்டு.
 உலகம்மாள் மாரியம்மாள் வீட்டுக்கு அடிக்கடி போய் இரண்டொரு நாட்கள் இருந்து விட்டு வருவது வழக்கம்.
 பேருந்து இருந்தால் பேருந்திலும் பேருந்து இல்லை என்றால் கால்நடையாகவும் போய் வருவாள்.

 ஒரு நாள் மாலை உலகம்மாள் கால்நடையாக கிளம்பினாள் வயல்வெளிகள் வழியாகவும் ஆற்றங்கரை ஓரமாகவும் மண்பாதை உண்டு அன்று உலகம்மாள் பாதி தூரம் வந்த போது மழை பொழிந்து பயணத்தை தடை செய்தது.
 ஒரு சிறிய கோவிலில் மழைக்கு ஒதுங்கி விட்டாள்.
 மழை நின்று கிளம்பும்பொழுது இருட்டிவிட்டது.
 ஆற்றங்கரை மேட்டில் சுற்றிலும் புதர்கள் வழியே செல்லும் மண் பாதையில் ஆள் நடமாட்டம் இல்லை.
 அவள் பயத்துடன் வேகவேகமாக சென்று கொண்டிருந்தாள்.
 அன்று தேய்பிறை நிலா வெளிச்சமும் மிகக் குறைவு.
 பாதி வழியில் கவனித்தால் அவள் வழி மாறி வந்துவிட்டாள்.

 பாதை இரண்டாகப் பிரியும் இரண்டு இடங்கள் அடுத்தடுத்து ஒரே போல இருக்கும்.
 இருட்டில் தவறான பாதையில் வந்துவிட்டதை அவள் உணர்ந்தாள்.
 அவளை பயம் தொற்றிக் கொண்டது.
 புதர் நடுவே ஒரு சிறிய இசக்கியம்மன் கோவில் உண்டு.
அங்கே தீ வெளிச்சம் தெரிந்தது.
 அதன் அருகே சென்றாள். அங்கே நிமிர்ந்த நெஞ்சுடன் 60, 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் பெரிய தடியுடன் நெருப்பு மூட்டி அதனருகே நின்று கொண்டிருந்தார்.
உடலில் போர்த்திய கருப்பு போர்வை, நெற்றியில் பெரிய பட்டை,  நரைத்த முறுக்கு மீசை, பெரிய தோல் செருப்பு.
இவளை கண்டதும் வெளியே வந்து "என்ன தாயி?! இந்நேரம் இந்த பக்கம்?!" என்று கேட்டார்.
 உலகம்மாள் "மழைல வழிதவறி வந்துட்டேன்!  ஆலங்குளத்துக்கு எப்படி போகணும்?!" என்று கேட்டாள்.
 அந்த முதியவர் தடியை எடுத்துக்கொண்டு தோல் செருப்பு சத்தத்துடன் கம்பீரமாக நடந்து வந்தார்.
 சிறிது தூரம் அந்த பெண் வந்த வழியிலேயே கூட்டிவந்து குறுக்காக செல்லும் ஒரு ஒற்றையடி பாதையை காண்பித்தார்.
 "இந்த வழியா போ தாயி! கொஞ்ச தொலவுல நீ தவறவிட்ட பாதைய பிடிச்சிரலாம்" என்று சொன்னார்.
 உலகம்மாள் சரி என்று கூறிவிட்டு அந்தப் பாதையில் நடந்து ஆலங்குளம் பாதையைப் பிடித்தாள்.
 அப்போது வேகமாக காற்றடித்தது நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது.
 அவளை பயம் தொற்றிக் கொண்டது.
 அவள் திரும்பி பார்த்தாள்.
 ஆனால் அங்கே அவள் வந்த ஒற்றையடிப் பாதை இல்லை. 
 அங்கிருந்து எட்டிப் பார்த்தாள்.
 கோவில் இருந்த இடத்தில் புதர்களுக்கு மேலே நெருப்பு வெளிச்சம் தெரியவில்லை.

 அவள் பயத்துடன் விறுவிறுவென நடந்து அக்கா மாரியம்மாள் வீட்டை அடைந்தாள்.
 நடந்த அனைத்தையும் கூறினாள்.
 தன் குலதெய்வமான சுடலைமாடன் தான் நேரில் வந்து உதவியதாக அவள் கூறினாள்.
 அதற்கு  மாரியம்மாள் "அவரு இசக்கி தாத்தா! அந்த கோவில்ல தங்கி இருக்காரு! பகல்ல பூசாரியா இருப்பாரு!  பக்கத்துல  இருக்க தோப்புகளுக்கு அவர்தான் காவலாளி!" என்று கூறினாள்.

 ஓரிரு மாதங்கள் கழித்து உலகம்மாள் இசக்கி தாத்தாவை சந்தையில் வைத்து பார்த்தாள்.
 அவரிடம் போய் "தாத்தா நல்லா இருக்கீங்களா?! நல்லவேள அன்னைக்கு நீங்க என்ன கடவுளா வந்து காப்பாத்துனீங்க?! வீட்டுக்கு வாங்களேன் ஒரு வாய் சாப்டுட்டு போலாம்" என்று கூப்பிட்டாள்.
 அந்த தாத்தா கண்களை சுருக்கி பார்த்துவிட்டு "யாரு தாயி நீ?! ஆள் அடையாளம் தெரியலையே?! வேற யாரோனு என்கிட்ட பேசிட்டு இருக்க"  என்று சொல்லிவிட்டு புலம்பியபடி போய்விட்டார்.
அன்று பார்த்தபோது இந்த முதியவர் கம்பீரமாக இருந்தார். தற்போது பார்க்கும் போது அப்படி இல்லையே என்று நினைத்தாள்.

 சில நாட்கள் கழித்து உலகம்மாள் மாரியம்மாளிடம் இதை கூறினாள். அதற்கு மாரியம்மா அவளிடம் "அதுவா இசக்கி தாத்தா வயசாயி போனதால எதுவும் நெனவு இருக்காது! காலையில் நடந்ததை சாயங்காலம் மறந்துடுவாரு!  பகலைல அடங்கி ஒடுங்கி இருப்பாரு!  பொழுது சாஞ்சதும் கோயில்ல நடை சாத்தி சாமி கும்புட்டுட்டு திர்நீறு பூசிக்கிடுவாரு! உடனே சாமி அவர் உடம்புக்குள்ள வந்துடும்! ஒடம்ப உலுக்கிக்கிட்டு நெஞ்ச நிமித்திக்கிட்டு வெறைப்பா ஆயிடுவாரு!"   என்று கூறினாள்.

 சில நாட்கள் கழித்து உலகம்மாள் மாரியம்மாள் வீட்டுக்கு வந்திருந்த போது மாலை நேரத்தில் இசக்கி தாத்தா இறந்து விட்டதாக தகவல் சொன்னார்கள்.
 மாரியம்மாள் உலகம்மாளை வீட்டுக்கு போக சொல்லிவிட்டு தான் இழவு வீட்டுக்கு கிளம்பினாள். உலகம்மாளும் வீட்டிற்கு வந்து விட்டாள்.
 மறுநாள் காலை இசக்கி தாத்தா இறுதி சடங்கில் கலந்துகொள்ள அவள் நினைத்திருந்தாள் ஆனால் அவளது கணவன் தொழில் விசயமாக ஊருக்குக் கிளம்பியதால் அவளால் போக முடியவில்லை.
 அன்று மாலையே மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என்று உலகம்மாளை வரச் சொல்லி தகவல் வந்தது.

  உலகம்மாள் உடனே கிளம்பி கால்நடையாக சென்றாள். அப்பொழுதும் மழை பெய்தது. சிறிது நேரம் ஒதுங்கி நின்றவள் இருட்டத் தொடங்கியதும் நனைந்துகொண்டே ஆலங்குளம் நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தாள்.
 அப்போது பாதை இரண்டாகப் பிரியும் இடத்தில் இசக்கி தாத்தா நனைந்துகொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.

 அதை பார்த்த உலகம்மாள் பயத்தில் வெலவெலத்துப் போய் விட்டாள்.
 இசக்கி தாத்தா அவளை அழைத்து "என்ன தாயி?! இருட்டிப் போச்சு இப்போ எங்க போற?! என்று கேட்டார்.
 "ஆலங்குளம் போறேன்! எல்லாம் இந்த மழையால வந்தது" என்று நடுங்கியபடி கூறினாள்.
 "சரி தாயி போ !" என்று கூறி இசக்கி தாத்தா அவளுக்கு காவலாக பின்தொடர்ந்து ஆலங்குளம் எல்லை வரை வந்து விட்டுவிட்டுப் போனார்.

 இதையும் மாரியம்மாளிடம் உலகம்மாள் கூறினாள். அதற்கு மாரியம்மாள் "இசக்கி தாத்தா எறந்த சேதி கேட்டு எல்லாரும் போனமா.. அப்ப உள்ள கட்டில்ல செத்து கிடந்த அவரு காணாம போய்ட்டாரு னு அவங்க வீட்ல சொன்னாங்க! எல்லாரும் தேடினாங்க கடைசில கோவில்ல எப்பவும் போல இருந்தார்"  என்று கூறினாள்.
  சில நாட்கள் கழித்து உண்மை வெளிவந்தது.

  இசக்கி தாத்தா சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது மூத்த மகனும் மருமகளும் திட்டமிட்டு அவருக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்தனர்.
அதைக் குடித்துவிட்டு படுத்த இசக்கி தாத்தா அசைவில்லாமல் படுத்திருந்தார்.
  அவர் எப்படியும் இறந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற தகவலை ஊருக்குள் கூறிவிட்டனர்.
  ஆனால் அவர் இறக்காமல் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.
 எனவே அவர்கள் தலையணையை வைத்து முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயற்சித்தனர்.
 ஆனால் தாத்தா அவர்களை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து வீட்டின் பின்பக்கமாக ஓடி வாய்க்கால் பக்கம் போய்விட்டார்.
  அங்கே சேரும் சகதியுமான வாய்க்கால் தண்ணீரை வயிறு முட்ட குடித்துவிட்டு வயிறு அமுங்கும்படி குப்புறப் படுத்து தொண்டையில் கைவிட்டு வயிற்றில் இருந்த எல்லாவற்றையும் வாந்தி எடுத்துவிட்டு தனக்குத் தெரிந்த விஷமுறிப்பு மூலிகைகளை வாயில் பறித்து போட்டுக் கொண்டு கோவிலுக்கு ஓடிவந்து படுத்துவிட்டார்.
 அப்படியே நடந்தவற்றையும் மறந்து விட்டார்.

 அவர் வாய்க்கால் பக்கம் வந்தபோது பார்த்த ஒரு சிறுவன் மூலம் பிற்பாடு அனைவருக்கும் உண்மை தெரிந்தது.

Thursday 28 December 2023

தேமுதிக நாயுடு கட்சி

தே.மு.தி.க நாயுடு கட்சி

தேமுதிக தெலுங்கருக்கான கட்சியா?
 தமிழருக்கான கட்சியா?

 தேமுதிக சார்பில் 2014 மக்களவை தேர்தலில் 14 தொகுதிகளில் 9 எம்.பி வேட்பாளர்கள் நாயுடுகள்.

 2011 சட்டமன்ற தேர்தலில் 42 இல் 20 தொகுதி வேட்பாளர்கள் நாயுடுகள்.

 2016 இல் தே.மு.தி.க வில், விஜயகாந்த் அவர்களின் மைத்துனர் சுதீஷ் அவர்கள்தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுதான் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்தது.
 அதாவது இவர்கள்தான் அக்கட்சியின் அதிகார மையம்

 அக்குழுவில் இருந்தவர்கள் :
1) சுதீஷ் நாயுடு(தெலுங்கர் )
2) பொருளாளர் இளங்கோவன் நாயுடு (தெலுங்கர் )
3) சந்திரகுமார் நாயுடு(தெலுங்கர்)
4) பார்த்தசாரதி நாயுடு(தெலுங்கர்)
5) வெங்கடேஷ் நாயுடு(தெலுங்கர்)
6) பேராசிரியர் ரவீந்திரன் ரெட்டி (தெலுங்கர்)
7) மோகன்ராஜ் வன்னியர் (தமிழர்)

இதுமட்டுமில்லை விஜயகாந்திடம் அவரது கட்சி MLA மூன்று பேர் அடிவாங்கியுள்ளனர்.
மோகன் ராஜ் எம்.எல்.ஏ.,
பாஸ்கரன் எம்.எல்.ஏ.,
பார்த்திபன் எம்.எல்.ஏ.,
 மூவரும் தமிழர் (வன்னியர்) ஆவர்.

ஆரம்ப காலம் முதலே அவர் அப்படித்தான்.
அவர் தயாரித்து நடித்த வல்லரசு திரைப்படத்தில் ராமதாசு உருவம் போல் ஒப்பனை செய்யப்பட்ட சாதி சங்கத் தலைவரை உதைத்து ரத்தம் சிந்த வைத்து ஜாதி சங்க எதிர்ப்பு வசனம் பேசி அதே வல்லரசு படத்தை தெலுங்கில் கமிஷ்னர் நரசிம்ம நாயுடு  என்று பெயர் வைத்தவர் விஜயகாந்த்.

 
நன்றி: வசந்தன் ரகுந்தன்
நன்றி: அச்சமில்லை 

Tuesday 26 December 2023

பண்ணையார்களைக் காத்த தெலுங்கர்

பண்ணையார்களைக் காத்த தெலுங்கர்

 1950 இல் குமாரசாமி ராஜா (தெலுங்கு ராஜூ) ஆட்சியில் வாட்டக்குடி இரணியன் (அகமுடையார்), சாம்பவனோடை சிவராமன் (அகமுடையார்) போன்ற 5 முக்கியமான கம்யூனிஸ்ட் போராளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றது.
மஜூம்தார் காட்டிய வழியில் இவர்கள் நடத்திய "பண்ணையார் அழித்தொழிப்பு" நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப் பட்டது .
 அவர்கள் இருந்திருந்தால் கீழவெண்மணி படுகொலை நடந்திருக்காது.
 அழித்தொழிப்பு கம்யூனிஸ்டுகள் மறைந்து வந்தேறி கால்நக்கி கம்யூனிஸ்டுகள் தோன்றியிருக்கவும் மாட்டார்கள்.

Friday 22 December 2023

ஆற்காடு நவாபு விநாயகர் கோவிலுக்கு அளித்த தானம்

சென்னைக்கு அருகில் உள்ள ஆற்காட்டை தலைநகராகக் கொண்ட இஸ்லாமியர்களான நவாப்புகள், கர்நாடக பகுதிகளை, 1690 முதல் 1801 வரை ஆண்டனர். நவாப்புகளில் பலர் மத அடையாளங்களைக் கடந்த மனிதநேயர்களாக இருந்துள்ளனர்.
அவர்கள், அனைத்து மதத்தினரின் வழிபாட்டு உரிமைகளையும் மதித்ததுடன், அரசின் சார்பில் வழிபாட்டு சடங்குகளுக்கு உதவிகளையும் செய்தனர்.
அந்த வகையில், திருநெல்வேலி குறவர் தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நித்திய அபிேஷகம், நைவேத்தியம் செய்ய லாலுகான் சாய்பு, தான அறக்கட்டளை நிறுவியதும், அசாது வால சாய்பு, இஸ்மாலி ராவுத்தர் ஆகியோர், குற்றாலநாதர் கோவிலுக்கு நித்திய பூஜைக்காக தானமளித்த செய்திகள், ஏற்கனவே கிடைத்த செப்பேடுகள் வாயிலாக தெரியவந்தன.
இந்நிலையில், ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் கிடைத்துள்ள செப்பு பட்டயங்கள், 1774ல் வெட்டப்பட்டுள்ளன.
அதில், ராச மானியார் அசாது நவாப்பு என்பவருக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கோவிலின் அருகில் உள்ள கிராம மக்கள், கோவில்களுக்கு தானம் அளித்துள்ளனர்.
அதாவது, ஆயிரத்தெண் விநாயகர் கோவிலின் பூஜைக்கும், மாறமங்கலத்தில் உள்ள சந்திரசேகர சுவாமி கோவிலின் திருப்பணிக்கும் தானியங்களையும், நிலத்தையும் தானமளித்து, அதற்கான தர்மக்கட்டளையை நிறுவியுள்ளனர்.
அதாவது, அரசுக்கு சேர வேண்டிய வரியின் ஒரு பகுதியை, ஆட்சியாளரின் பெயரில், கோவிலுக்கு வழங்க, முஸ்லிம் ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

22.12.2023 தினமலர் செய்தி 

Friday 15 December 2023

துணைநகர வணிகம்

துணைநகர வணிகம்

 ஒரு புதுமாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வேலையை விட்டுவிட்டு உள்ளூரில் ஒரு வேலைக்கு சென்றபோது அங்கே அந்த முதலாளி ஏறத்தாழ திவால் ஆகி இருந்தார்.
 வங்கியிலும் கந்துவட்டியிலும் வாங்கிய கடன் அவர் கழுத்தை நெறித்தது.  
 அவர் முதலீடு செய்திருந்த கார்ப்பரேட் நிறுவனம் அவர் ரத்தத்தை உறிஞ்சி துப்பிவிட்டது!
 அவர் வீடு, நகைகள் எல்லாம் கரைந்துவிட்டது!
 மீதமிருந்த அந்த நிறுவனத்தின் பொருட்களை திரும்ப ஒப்படைத்து கணக்கு முடிக்கத்தான் அவன் வந்திருந்தான்.

 அவனுக்கு வணிகம் பற்றி எதுவும் தெரியாது.
ஆனால் அவன் தன் முதலாளி இழந்த எல்லாவற்றையும் மீட்டு அந்த பெரிய நிறுவனத்தை பழிவாங்குவான் என்று அப்போது யாருக்கும் தெரியாது.

 கதையை முதலில் இருந்து தொடங்குவோம்! 
அது ஒரு பெருநகரம்! அதற்கும் 25 கி.மீ தொலைவில் இருந்த மாநில எல்லைக்கும் இடையில் ஒரு துணைநகரம் இருந்தது.
இந்த துணைநகரம்தான் கதைக்களம்!

 ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனம்! நாடு முழுவதும் ஏன் அண்டைநாடுகள் வரை கோலோச்சும் நிறுவனம்!
நூறாண்டு கடந்த வெள்ளைக்கார நிறுவனம்! தொலைக் காட்சியில் வரும் விளம்பரங்களில் பாதி அதன் தயாரிப்புகள்தான்.

 அந்த துணைநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அந்நிறுவனப் பொருட்கள் (வாங்கி வைத்து விற்பனை செய்யும்) விநியோக உரிமையை அந்த துணைநகரத்தின் வியாபாரி ஒருவர் பெருமுயற்சி செய்து வாங்கினார்.

 அந்த நிறுவனத்தின் பொருட்கள் சந்தையில் தினசரி வீட்டு உபயோகப் பொருட்களில் 40% அளவுக்கு புழக்கத்தில் இருந்தது.
 கடை ஒன்று நடத்தி 30 ஆண்டுகாலம் ஏற்படுத்திய சேமிப்பை இதில் முதலீடு செய்தார். வியாபாரிகள் பலரும் அந்த நிறுவனம் பற்றி எச்சரித்தனர். இருந்தாலும் அவர் நம்பிக்கையுடன் இதில் இறங்கினார்.

 முதல்கட்டமாக 30 லட்சம் கொடுத்து பொருட்கள் வாங்கினார். மாதம் ஒரு கோடிக்கு மேல் புரளும். அதன் 4% அதாவது நான்கு லட்சம் லாபமாக நிற்கும் என்பது அந்த நிறுவனம் அளித்த வாக்குறுதி.

ஊருக்கு சற்று வெளியே மூன்று பெரிய அறைகள் உள்ள தகரம் வேய்ந்த கிட்டங்கி வாடகைக்கு எடுத்தார். இரண்டு சின்னயானை வண்டிகள், நான்கு பைக் வண்டிகள், ஒரு எக்செல் வண்டி தவணையில் வாங்கினார்.

 கல்லூரி செல்லமுடியாத ஓரளவு ஆங்கிலம் தெரிந்த இளைஞர்கள் 4 பேர் பெரிய கடைகள் முதல் பெட்டி கடைகள் வரை பைக்கில் சென்று கைபேசியில் ஆர்டர் எடுப்பார்கள். 
கணினிக்கு  ஒரு ஆள்! பொருட்களை எடுத்து வைத்து கடை வாரியாக பெட்டியிட நான்கு படித்த பெண்கள். வண்டிகளுக்கு இரண்டு ஓட்டுநர்கள். வரவு செலவு பார்க்க ஒருவர் உதவிக்கு சிலர் என மொத்தம் 15 பேர் வரை வேலைவாய்ப்பு பெற்றனர். இதுபோக வாரம் இருமுறை பாதி லாரி அளவு 10 லட்சம் வரை பெறுமானமுள்ள பொருட்கள் வரவழைக்கப்பட்டு இறக்கி அடுக்கப்படும்.

 மொத்தம் 300 கடைகள், 350 வகையான பொருட்கள், அவற்றில் ஒரு நாளைக்கு தோராயமாக 50 என்று ஒவ்வொரு வாரமும் கடைகள் சப்ளை செய்யப்படும். 

 அந்நிறுவனம் கெட்டுப்போகாத பொருட்கள் தயாரித்து விற்கும். சோப், ஷாம்பு, க்ரீம், பற்பசை, கழுவும் திரவங்கள், தேயிலை, காபி, வாசனை திரவியம், பவுடர் ஆகியன அடங்கும்.

 முன்பு ஒரு நகரத்தில் எது எவ்வளவு எப்போது விற்கும் எது விற்காது போன்ற விபரங்கள் இப்படி விநியோகஸ்தர் கூறித்தான் நிறுவனத்திற்கு தெரியும். எதையாவது அழுத்தி விற்கவேண்டும் என்றால் அதற்கு நிறுவன பிரதிநிதி வருவார். விளம்பரம், சலுகை, இலவசம் என செய்து தள்ளிவிடுவார்கள். 

 சரக்குகள் தொழிற்சாலையில் உற்பத்தி ஆகி அங்கிருந்து மைய  கிடங்கு அங்கிருந்து கிட்டங்கி  அங்கிருந்து பெரிய கடை அங்கிருந்து சிறிய கடை அங்கிருந்து வாடிக்கையாளர் என்று போகும்.
அதாவது மனிதர்கள் வணிகம் செய்தனர். 

 தொடுதிரை கைபேசி வந்தபிறகு எல்லாம் மாறிவிட்டது. ஒரு பெட்டிக்கடை என்னென்ன பொருட்கள் வாங்குகிறது என்பது வரை தரவுகள் மென்பொருளில் சேகரிக்கப்பட்டு செயற்கை மூளை அதைப் பதிந்து வைத்துக்கொள்ளும். 


 மனிதர்கள் இல்லாமலேயே நிறுவன மென்பொருள் கடைகளை வகைப்படுத்தி ஆர்டர்களைக் கண்கானித்து மனிதர்களுக்கு கட்டளை இடும்.
 ஒரு பெட்டிக்கடையில் 10 பொருட்கள் விற்றால் அடுத்தமுறை 11 பொருட்கள் விற்கச் சொல்லும். கடைகளுக்கு இலக்கு நிர்ணயித்து அதைத் தாண்டினால் சலுகை என்று முடிவு செய்யும்.

 வணிகத்திற்கு மனிதர்கள் தேவையில்லாமல் போனார்கள். முன்பெல்லாம் விநியோகஸ்தர்கள் அனுபவம் வியாபாரத்திற்கு தேவையாக இருந்தது இப்போது அந்த அனுபவம் மென்பொருள் வசம் இருக்கும்.

 காலையில் கைபேசியுடன் ஒரு புதிதாக வேலைக்கு வந்த பையன் கிளம்பினாலும் அதுவே வழிகாட்டி அதுவே ஆர்டர் கேட்கச் செய்து அதுவே புதிய பொருளைப் பரிந்துரைத்து அதுவே பில் ரெடி செய்து அனுப்பிவிடும். போட்டிப் பொருட்களையும் விசாரித்து தெரிந்துகொள்ளும்.

 பொருட்களுக்கு விநியோகஸ்தர் விலை வைக்கமுடியாது. பில்லைப் பார்த்து பொருட்களை எடுத்து சரிபார்த்து பெட்டியிட வேண்டும்.
 வாகனங்களில் ஏற்றி மறுநாள் கடைகளுக்கு சப்ளை செய்து வசூல் செய்து வரவு செலவு பார்க்கவேண்டும். சிறுசிறு கடைகள் வரை சப்ளை செய்ய அந்நிறுவனம் கட்டாயப் படுத்தியது. இதனால் வண்டிக்கான செலவு அதிகரித்தது. 

 100 ரூபாய் பொருள் அனுப்பினால் 50 ரூ வசூல் 50 ரூ பற்று என்று நிற்கும். இப்படி முதலீட்டில் ஒரு பகுதி பற்று என்று வெளியே நிற்கும். பொருள் போய்ச் சேர்வது மட்டுமே நிறுவனத்தின் கவலை பணம் வசூலிப்பது விநியோகஸ்தர் பாடு. கடைசியில் கணக்கு பார்த்தால் 1% அல்லது 1.5% சதவீதமே லாபம் நிற்கும். கடைக்காரருக்கு 8% அதுபோக விநியோகஸ்தர் கடனும் தரவேண்டும். உடனடி பணம் அளித்தால் 2% தள்ளுபடி தரவேண்டும்.

 இப்படியாக தினசரி இலக்கை முடித்து மாத இறுதியில் நிறுவனம் நிர்ணயித்த இலக்கை நெருங்க வேண்டும். அதை அடைந்துவிட்டால் 2% லாபம் நிறுவனம் தரும்.

 ஆரம்பத்தில் ராஜாவாக இருந்த விநியோகஸ்தர்கள் இப்போது வேலைக்காரர்கள் ஆயிருந்தனர்.
 அவர்களுக்கு இலக்கை அடைந்து 2% வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை. நிறுவன பிரதிநிதி தன் பங்குக்கு அழுத்தம் கொடுப்பார். இலக்கை அடையாவிட்டால் ஒரே இரவில் கூட விநியோக உரிமை பறிக்கப்படலாம்.

 அந்த நிறுவனத்தில் ஒரேயொரு நல்ல கொள்கை இருந்தது. விற்காத பொருட்களை அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டால் திருப்பிக் கொடுத்து அசலை வாங்கிக்கொள்ளலாம்.
 ஆனால் இதையும் கெடுக்க பிரதிநிதிகள் இலக்கை அடைய விற்காத பொருட்களை விற்றதாக காட்டச் சொல்வர். இந்த படித்த ஏமாற்றுக்கார பிரதிநிதிகளை நம்பி அந்த முதலாளி மோசம் போனார். 

 இதுபோக அருகில் இருக்கும் பெருநகரத்தில் பெரிய கடைகளில் இந்நிறுவன சரக்கு வாங்கி இந்த துணைநகரத்தில் வந்து விற்கும் சிலர் இருந்தனர். இவர்கள் சிறு திருடர்கள்.
 ஒரு கடை ஒரு சோப்பு வாங்கும் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர் சோப்புகளை வாங்கி அது கிடைக்க அதிகம் விற்காத இன்னொரு சோப்பை வாங்க கட்டாயப் படுத்தப்பட்டு அதையும் வாங்கி கடைக்கு போனால் அந்த சோப்பு ஏற்கனவே அந்த சிறுதிருடன் மூலம் அங்கே வந்திருக்கும். 
 கடைக்காரர் ஒரு முறை அவனிடம், ஒருமுறை விநியோகஸ்தரிடம் என வாங்கி இருவரிடமும் பாக்கி வைத்து கடன் பெற்றுக் கொள்வார். 

 அந்த முதலாளி இதைக் கூட சமாளித்துவிட்டார்.

 ஆனால் ஒரு விநியோகஸ்தர் எல்லைக்குள் இன்னொரு விநியோகஸ்தர் வந்து சப்ளை செய்வதும் நடந்தது. நிறுவன மேலிடத்தில் புகாரளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படமாட்டாது. இதனால் இந்த புதிய விநியோகஸ்தர் மிகவும் திணறினார். 

 அப்போதும் பிரதிநிகள் தவறான யோசனை கொடுத்தனர். அத்துமீறும் விநியோகஸ்தர் எல்லைக்குள் ஒரு பெரிய கடைக்கு குறைந்த விலைக்கு சப்ளை செய்து இதை ஈடுகட்டுமாறு கூறினர். இரவில் திருட்டுத்தனமாக ஒரு வண்டி சரக்குகள் குறைந்த விலைக்கு எல்லை தாண்டி அந்த பெரிய கடைக்குள் சென்று இறக்கப்பட்டன. 

 இதையெல்லாம் விட ஒவ்வொரு கடைக்காரருக்கும் கைபேசியில் அந்நிறுவன (சலுகைகளை அறிந்து ஆர்டர் போடும் வகையில்) செயலியை கொண்டுசேர்த்தனர்.
 இப்போது கடைக்காரர் பொருட்களை சலுகை விலை, இலவச இணைப்பு போன்ற வசதிகளைப் பார்த்து எந்நேரமும் ஆர்டர் செய்வார். விற்க சிரமமான பொருட்களைத் தள்ளிவிடுவது மேலும் சிரமமானது.

 இப்படியாக உள்ளே முதலீடு செய்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது. இதைவிட்டு விட்டு ஓட்டல் தொடங்கலாம் என்ற முடிவை எடுத்தபோது காலம் கடந்துவிட்டது.

 இந்த நிலையில் அந்த புதியவன் வந்தான். அப்போது அந்த விநியோகஸ்தர் திவாலாகும் நிலையில் இருப்பது வெளியே தெரியாது. அதனால் வேலையாட்கள் விட்டுச் செல்லாமல் இருந்தனர். 30 லட்சம் புழங்க வேண்டிய இடத்தில் 7 லட்சம் அதுவும் மிகவும் கடினப்பட்டு புழங்கிக் கொண்டிருந்தது.
 அவன் வந்தவுடனே அவன் தன் உறவினன் என்பதால் முதலாளி தன் நிலையை அவனிடம் மட்டும் கூறினார். 

 அவன் முதலில் ஒரு மாதம் உன்னிப்பாக கவனித்தான். பிறகு களத்தில் இறங்கினான்.பெரிய கடைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடச் சொல்லிவிட்டான்.
 விற்காத பொருட்களை கணக்கெடுத்தான்.
ஒவ்வொரு கடைக்காரராக அழைத்து வந்து காட்டி அசல் விலைக்கு முடிந்தவரை பொருட்களைத் தள்ளிவிட்டான். விற்றதாகக் காட்டப்பட்ட மீதி பொருட்களை மென்பொருளுக்கு உள்ளே கொண்டுவர அதை விற்ற கடைக்காரர்கள் திருப்பித் தந்தது போல காட்டி நிறுவன மென்பொருளின் இருப்பிற்குள் கொண்டுவந்து அவற்றை திரும்ப ஒப்படைத்து அசலை வாங்கினான்.
 இப்படியாக பொருட்கள் காலியாகி அந்த பணம் கைக்கு வந்தது.
 வாகனங்களையும் ஆட்களையும் பாதியாகக் குறைத்தான்.
 கடைக்காரர்கள் வைத்திருக்கும் பாக்கியை வசூலிக்க திறமையான ஒரு பையனை நியமித்தான். 
 
 இப்படி ஒவ்வொரு ரூபாயும் முதலாளிக்கு கிடைக்கும்படி செய்தான். இப்போது முதலாளியின் கடன் கொஞ்சம் குறைந்தது. கணக்கு முடித்து பணத்தை வாங்க பிரதிநிதி உதவவில்லை. நிறுவனமும் அலைக்கழித்தது. அவனுக்கு அந்த நிறுவனத்தின் மீது கோபத்தை வரவழைத்தது.
 எல்லைக்குள் வந்து விற்றவனுக்கே விநியோக உரிமையை அளித்தது அவனுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது. 

 கட்டிடத்தையும் வாகனங்களையும் அந்த புதிய அராஜக விநியோகஸ்தரிடரிமே விற்றுவிட்டு வேலையாட்களும் அங்கேயே வேலைக்கு சேர்ந்துகொள்ள முதலாளி முடிவு செய்துவிட்டார்.
 பூர்வீக வீட்டை விற்று மீதி கடனைக் கொடுக்க அவர் நினைத்தார்.
அப்போதும் அவருக்கு 8 லட்சம் வரை கடன் இருக்கும்.
  
 அவனால் இதைப் பொறுக்க முடியவில்லை. நிறுவனத்தின் இலக்கை நியாயமாக எட்ட முடியாமல் விநியோகஸ்தரை ஏமாற்றி போலி விற்பனையைக் காட்டிய பிரதிநிதி, அடுத்தவன் எல்லைக்குள் அத்துமீறி சப்ளை செய்து அவனை விரட்டி அந்த பகுதியைக் கைப்பற்றும் இன்னொரு விநியோகஸ்தன், இதை கண்டுகொள்ளாமல் லாபவெறியில் இயங்கும் நிறுவனம் என அனைவரையும் பழிவாங்க அவன் முடிவெடுத்தான்.

 முதலாளியிடம் தன் திட்டத்தைக் கூறினான். அவனுக்கு வழிகாட்டி அந்த சிறுதிருடன். முதலில் அந்த சிறுதிருடனைப் பிடித்து உதைத்து அவனிடம் அருகில் இருக்கும் பெருநகரத்தின் பெரிய கடையின் விபரங்களைக் கேட்டறிந்தான். அந்த பெரிய கடை மொத்தமாக பெரிய அளவில் பொருட்களை வாங்குவதால் பெரிய சலுகை கிடைக்கும். அவர்களால் விநியோகஸ்தரை விட குறைந்த விலைக்கு தரமுடியும். ஆனால் சில கிடைக்காத அல்லது ஸ்பெசலான பொருட்கள் விநியோகஸ்தரிடம் மட்டுமே கிடைக்கும். இதுதான் வித்தியாசம்.

 அந்த பெரிய கடைக்கு தன் முதலாளியை அழைத்துச் சென்றான். அங்கே ஒரு ஊரின் கடைவீதியில் இருக்கும் அத்தனை கடைகளுக்கும் தேவையான அத்தனை பொருட்களும் மொத்தமாகக் கிடைக்கும்.
 தங்கள் கிட்டங்கியைக் கடையாக மாற்றி மொத்த வியாபாரம் செய்யப் போவதாகவும் கடனாகப் பொருள் கொடுத்தால் விற்க விற்க காசு தருவதாகவும் கூறி உதவி கேட்டனர்.
 இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்ன அந்த பெரிய கடைக்காரர் அந்த துணைநகரத்தில் அவருக்கு இருந்த மரியாதையை விசாரித்து அறிந்துகொண்டு முதல்கட்டமாக 5 லட்ச ரூபாய்க்கு சரக்கு தரத் தயாராக இருந்தார்.

 அவன் வேகமாக விற்கும் பொருட்களை வாங்கினான்.
 அந்நிறுவன சரக்குகள் கடைவாரியாக எது விற்கும் என்பது அவனுக்கு மென்பொருள் புண்ணியத்தில் தெரியும் அதுமட்டுமின்றி அந்நிறுவனத்திற்கு போட்டியான பொருட்களையும் (கடைக்காரர்களிடமும் ஆர்டர் எடுக்கும் பையன்களிடமும்) விசாரித்து வைத்திருந்தான். 
அந்த பொருட்களை வாங்கி கிட்டங்கியில் வைத்தான்.
 கிட்டங்கியை கடை போன்று காட்டிக்கொள்ள பெயர்பலகை மாட்டினான்.

 துணைநகரத்தி்ல் பெரிய கடைகள் பத்துதான்.
 அவற்றில் போய் அனைத்து நிறுவன பொருட்களையும் ஆர்டர் எடுத்தான்.
 ஒரு நாளைக்கு இரண்டு கடை என்று அவன் சப்ளை செய்தான். ஒவ்வொருவரிடமும் நயமாகப் பேசி முடிந்த அளவு 'பணம் கொடுத்த பிறகே பொருள் ஒப்படைப்பது' என்ற முறையில் வியாபாரம் செய்தான்.
 விநியோகஸ்தரை விட குறைவான விலை என்பதால் முக்கிய கடைகள் அவனிடமே பொருள் வாங்குவதாக வாக்களித்தனர்.
  ஒரு வாரத்திற்குள் 4 லட்சம் திருப்பிக் கொடுத்து அடுத்த கட்டமாக பத்துலட்ச ரூபாய் சரக்கு வாங்கி வந்தான்.
 
 இப்போது அராஜக விநியோகஸ்தன் பதறிக்கொண்டு நிறுவனத்தில் புகாரளித்தான்.
 கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்கிறார்கள் என்று.
 பிரதிநிதி ஓடோடி வந்தான். "நீங்கள் எங்கள் நிறுவன பொருட்களை வாங்கி விற்பது எங்கள் விதிமுறைக்கு புறம்பானது" என்றான். 
  "ஆனால் பொதுவான விதிமுறைப்படி அது தவறில்லையே! ஒரு கடை வேறொரு கடையில் மொத்தமாக பொருள் வாங்கக்கூடாது என்றோ இன்னொரு கடைக்கு பொருட்கள் விற்கக் கூடாது என்றோ சட்டமில்லையே?" இவன் திருப்பிக் கேட்டான். "எந்த கடை இன்னொரு கடைக்கு டோர் டெலிவரி செய்கிறது?" பிரதிநிதி வாக்குவாதம் செய்ய அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான்.
 பிரதிநிதி கைகளை நெறித்தபடி அந்த விநியோகஸ்தன் முன்னால் போய் நின்றான். 
" இங்கே இத்தனை கட்டுமானம் செய்து ஆட்களைப் போட்டு  வரி கட்டி விற்பதற்கு கடினமான பொருட்களில் முதல் முடக்கி ஒவ்வொரு சந்துக்குள்ளும் வண்டியை ஓட்டி நான் வியாபாரம் நடத்துகிறேன். அவன் ஒரு பழைய நோட்டில் ஆர்டர் எழுதி மறுநாள் கொடுத்துவிடுகிறான். இலக்கு இல்லை. தேவையற்ற அழுத்தம் இல்லை. மெதுவாக விற்கும் பொருட்களில் முதல் முடக்கமில்லை. எல்லா நிறுவன பொருட்களும் கிடைக்கும். வாசல் வரை சப்ளை வேறு, இனி நான் எப்படி இங்கே பெரிய கடைகளுக்கு பொருட்களை விற்பேன்?!" என்று பொருமினான்.

அவர்களது கிட்டங்கி அந்த துணைநகரத்தில் இருந்து பெருநகரை நோக்கி செல்லும் சாலையிலேயே அமைந்திருந்தது வசதியாக இருந்தது. இதனால் அந்த துணைநகரத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெருநகரம் சென்று பொருட்கள் வாங்கும் சிறு வியாபாரிகள் அதே விலைக்கு இவன் கடையிலேயே வாங்கினர். அதாவது பெருநகரத்தில் இருக்கும் அந்த பெரிய கடையின் ஒரு கிளை துணைநகரக்கு அருகே வந்துவிட்டதாகவே இதைக் கொள்ளலாம். பழைய முறைப்படி இவன் விலை வைக்க முடிந்தது. பெரிய கடைகள் மூலம் சிறிய கடைகளுக்கு பொருள் போய்ச் சேர்ந்தது.

 துணைநகரின் பெரிய கடைகள் விநியோகஸ்தர் வழியே பொருட்களை வாங்குவது மிகவும் குறைந்து போனது சிறிது காலத்தில் அந்த அராஜக விநியோகஸ்தன் நஷ்டத்துடன் இந்த எல்லையை விட்டுவிட்டு தன் எல்லைக்குள் போய்விட்டான். அருகிலுள்ள வேறொரு விநியோகஸ்தருக்கு இந்த எல்லையை சேர்க்க நிறுவனம் முயல அவர்கள் இந்த விநியோகஸ்தன் பின்வாங்கிய கதை அறிந்து மறுத்துவிட்டனர். அது மாநில எல்லை என்பதால் அருகே வேறு விநியோகஸ்தரும் இல்லை. 

 இப்போது நிறுவனம் அந்த துணைநகரத்தில் வேறு புதிய விநியோகஸ்தரை பிடிக்க முயன்றது. இவரின் நிலைகண்டு எவரும் அதற்குத் தயாராக இல்லை. 
 இப்போது அந்த நிறுவனம் இறங்கி வந்து அவரிடம் மண்டல பிரதிநிதியை அனுப்பி பேசியது. உங்களுக்கே விநியோக உரிமை தருகிறோம். மேற்கொண்டு அரை பைசா வட்டியில் 30 லட்சம் கடனும் தந்து சரக்கும் தருகிறோம். ஒரு வாரம் கழித்து சரக்குக்கு பணம் போட்டால் போதும் எந்த வகையிலும் அழுத்தம் இருக்காது என்று கெஞ்சியது.

 முதலாளி அவனிடம் கேட்டார் அவன் முடியாது என்று கூறிவிட்டான்.  இப்படியாக சில ஆண்டுகள் அந்தப் பகுதியில் பாதி விற்பனையை இழந்தது அந்த நிறுவனம். அதை அந்த முதலாளி அடைந்தார். அதன் பிறகு ஒரு பெரும்பணக்காரர் விநியோக உரிமை வாங்கினார். அவர் இந்த மோதல் போக்கைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

 இப்போது முதலாளி கடனை அடைத்து பிள்ளைகளை ஆளாக்கி வீடும் கட்டிவிட்டதால் இந்த தொழிலை அவனிடமே ஒப்படைப்பதாக சொன்னார்.
அவனுக்கு ஏனோ இந்த தொழிலை தொடர விருப்பம் இல்லை. புதிய விநியோகஸ்தரும் வேலைக்கு அழைத்தார் அங்கும் அவன் செல்லவில்லை.

  ஒருநாள் அந்நிறுவன அதிகாரிகள் அவன் வீடு தேடி வந்தனர். 
"நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பிரதிநிதியாக சேரமுடியுமா?" என்று கேட்டனர். 

அதற்கும் அவன் மறுத்துவிட்டான்.
கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டு வாழ்வது அவனுக்குப் பிடிக்கவில்லை.

 அவன் அந்த பெருநகர கடை முதலாளியிடம் போய் சேர்ந்துகொண்டான்
 
 
 

Wednesday 13 December 2023

நாயக்கர்களை சேதுபதிகள் துவைத்து காயப்போட்ட வரலாறு

 நாயக்கர்களை சேதுபதிகள் துவைத்து காயப்போட்ட வரலாறு 

 ஒரு மனநலம் பாதித்த மறவர் (?) ஒரு பேட்டியில் 'நாயக்கர்கள் மறவர்களுக்கு பிச்சை போட்ட அரசுரிமையே சேது சீமை' என்றும் 'சேதுபதிகள் மதுரை நாயக்க மன்னர்களை கடவுளாக நினைத்தனர்' என்றும் உளறியுள்ளார்.

 ஆனால் உண்மை வரலாறு வேறாக இருக்கிறது!

 அதாவது ராஜராஜ சோழனின் பேரன் காலத்தில் சோழர்கள் கன்னட சாளுக்கியருடன் கலந்து மக்கள் ஆதரவு இழந்து பலவீனமான பிறகு அவர்களை வீழ்த்தி பாண்டியர் (இன்றைய கேரளா, பாதி கர்நாடகா, பாதி ஆந்திரா,  பாதி இலங்கை வரை கைப்பற்றி) பேரரசாக எழுந்தனர்.

 பிறகு இரண்டு பாண்டிய வாரிசுகளுக்கு இடையே மோதல் வெடித்து உள்நாட்டு போர் நடக்கிறது. இப்படி உள்நாட்டு போர் மற்றும் குழப்பத்தால் சிதைந்து கிடந்த பாண்டிய பேரரசின் மீது டெல்லி சுல்தானிய பேரரசு (துருக்கியர்) படையெடுத்து மதுரை வரை கைப்பற்றுகிறது.
 (இந்த படையெடுப்பில் பாதிக்கப்பட்ட தெலுங்கர்கள் கொங்குநாட்டில் தஞ்சமடைந்து வாழ்கின்றனர்)
  இப்போது டெல்லி அரசின் சார்பாக மதுரையைப் பிடித்த தளபதி (அரேபியர்) டெல்லி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மதுரையை தனி சுல்தானியமாக (தனிநாடாக) அறிவிக்கிறார். 43 ஆண்டுகள் மதுரை சுல்தான்கள் என்கிற பெயரில் இவர்கள் பாதி தமிழகத்தை ஆள்கின்றனர். 

 தென்தமிழகம் அப்போதும் பாண்டியரின் கீழ் இருக்கிறது. சுல்தான்களும் பாண்டியரும் மோதிக் கொண்டு இருந்த சமயம் கர்நாடக ஆந்திர எல்லையில் (டெல்லி சுல்தானிய முன்னாள் தளபதிகளான) ஹரிஹரன் மற்றும் புக்கர் (கன்னடர்) விஜயநகர பேரரசை நிறுவி மதுரை மீது படையெடுத்து  சுல்தான்களை ஒழித்து மதுரையைப் பிடிக்கின்றனர்.

 இப்போது மதுரையை மீட்க வந்த பாண்டியர்களை அரியநாத முதலியார் எனும் தமிழர் தலைமையில் படைகளை அனுப்பி முறியடிக்கின்றனர்.
 கன்னடர்கள் தமிழகத்தில் தமது நிர்வாகிகளாக (நாயக்கர்களாக) தெலுங்கரை நியமிக்கின்றனர்.
 பிறகு டெல்லி சுல்தானியத்தில் இருந்து பிரிந்த தென்னக சுல்தானிய அரசுகள் கூட்டு சேர்ந்து விஜயநகர பேரரசை வீழ்த்துகின்றன. 

 இதனால் விஜயநகரத்துக்கு அடங்கியிருந்த தமிழக நாயக்கர்கள் (தெலுங்கர்) தனிநாடாக ஆனார்கள்.
 இந்த நேரத்தில் பெரிய அளவில் தெலுங்கர்கள் தமிழகத்தில் குடியேறுகின்றனர். 

 மதுரையை மீட்க முடியவில்லை என்றாலும் தெற்கே பாண்டியர் ஆட்சி தொடர்கிறது.
 ஏற்கனவே தொடர்ச்சியான போர்களால் பலவீனமாக இருந்த பாண்டியர் காலப் போக்கில் வலுகுன்றி நாயக்கர்கள் கை ஓங்குகிறது. சிறிது சிறிதாக பாண்டிய நாடும் நாயக்கர் ஆட்சியின் கீழ் வருகிறது.
 நாயக்க மன்னர் பாண்டிய நாட்டை 72 சிறுசிறு துண்டுகளாக (பாளையங்களாக) பிரித்து அதில் முக்கால்வாசி பாளையங்களில் தெலுங்கரையும்  கால்வாசிப் பாளையங்களில் மறவர்களை நிர்வாகிகளாக நியமிக்கின்றனர். 
 இதுவே பாளையக்கார முறை.
 ஆனால் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் மட்டும் மிக குறுகிய காலத்தில் தனியரசு ஆயினர்.
 அதாவது தமிழகத்தில் நாயக்கர் காலம் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் கி.பி.1529 இல் தொடங்குகிறது.
 அவரது மகன் காலத்திலேயே சேதுபதிகள் தனியரசு ஆகிவிட்டனர். 
 இந்த சேதுநாட்டிற்கும் மதுரை நாயக்க அரசிற்கும் (ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடிக்கும் வரை) தொடர்ந்து மோதல் நடந்துகொண்டே இருந்தது.
அதில் 5 பெரிய போர்கள் அடங்கும்.
1) கி.பி 1635
திருமலை நாயக்கர் - இரண்டாம் சடையக்க தேவர்
2) கி.பி 1667
சொக்கநாத நாயக்கர் - ரகுநாத தேவர் (திருமலை ரகுநாத சேதுபதி)
3) கி.பி 1682
சொக்கநாத நயக்கர் - கிழவன் சேதுபதி
4) கி.பி 1686
மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் - கிழவன் சேதுபதி
5) கி.பி 1702
ராணி மங்கம்மாள் ( தளவாய் நரசப்பையா) - கிழவன் சேதுபதி.
இந்த ஐந்து போர்களில் கி.பி 1635 ஆம் ஆண்டு நடந்த முதல் போரில் மட்டும் திருமலை நாயக்கர் தளபதி ராமப்பய்யன் வெற்றி பெறுகிறார். அதுவும் பெருத்த சேதம் அடைந்து கடைசியில் போர்த்துகீசியர் காலில் விழுந்து உடன்படிக்கை செய்து கொண்டு பல நவீன ஆயுதம் கொண்டு கடல் வழி நிலம் வழி என இரண்டு விதமான தாக்குதல் நடத்தி வெற்றி பெறுகிறார்.
 ஆனால் அடுத்து நடந்த நான்கு போர்களிலும் சேதுபதி மன்னர்களே வெற்றி வாகை சூடினர்.
 இது போக முகலாயர், மராத்தியர், மைசூர், ஆற்காடு நவாப், ஆங்கிலேயர் என தொடர்ச்சியான பல போர்களால் நாயக்கர் அரசுகள் வலுகுன்றி கி.பி. 1700 களில் பல சிறிய பாளையங்களாக சிதறியது. அப்போது தென் மாவட்ட மறவர்களும் தனது பாளையங்களை தனியரசாக ஆக்கிக் கொண்டனர். 
 இந்த சிதறிய தமிழ்நாட்டில் தெலுங்கு பாளையங்கள் மொத்தமாக ஆங்கிலேயருக்கு அடிபணிய சேதுபதிகளும் மறவர் பாளையங்களும் எதிர்த்து நின்று போராடி இறுதியில் தோற்றன.
( ஆங்கிலேயர் பாளையக்கார முறையை ஒழித்து இவர்களை ஜமீன்களாக்கி நிலத்தை சொந்தமாக எழுதிக்கொடுத்து ஜமீன்தாரி முறையைக் கொண்டுவருகின்றனர். இப்படித்தான் தமிழக நிலவுடைமை தெலுங்கர் கைக்கு போனது. இந்த தெலுங்கு ஜமீன் வகையறா போட்ட குட்டிதான் திராவிடமும் நீதிக் கட்சியும்)

 நாயக்கர் மறவர் தொடர்ச்சியாக மோதிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. மைசூர் படையெடுப்பு மற்றும் ஆங்கிலேயர் படையெடுப்பு போன்ற சில சோதனையான காலகட்டங்களில் நாயக்கர் மறவர் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
 மற்றபடி ஆண்ட பரம்பரையான நாயக்கர் களுக்கு மறவர்கள்தான் அடியாட்கள் என்பது வந்தேறிகள் தம் சுய இன்பத்திற்காக உருட்டிய திரிப்பு! 
 
 

Monday 11 December 2023

அண்ணாதுரை to கருணாநிதி

அண்ணாதுரை to கருணாநிதி

அண்ணாதுரை பட்டப் படிப்பு முடித்து நீதிக் கட்சியில் 1935 இல் சேர்ந்தார். அதன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருந்தார்.  1937 இல் ஈ.வே.ரா வுடன் இணைந்து செயல்பட்டு அவரது குடியரசு இதழின் ஆசிரியர் ஆனார். பின் ஈ.வே.ரா வுக்கு போட்டியாக 1942 இல் திராவிட நாடு என்ற பத்திரிக்கை தொடங்கினார். 1944 இல்  தி.க உருவானபோதும் ஈ.வே.ரா வுடன் இருந்தார்.
1949 இல் ஈ.வே.ரா தனது வளர்ப்பு மகள் மணியம்மை யை திருமணம் செய்து தி.க இயக்கத்தையும் அதன் ஐந்து லட்ச ரூபாய் பெறுமான சொத்தையும் அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
ஈ.வே.ரா வுக்கு பிறகு தலைமைக்கு வர அடுத்த நிலையில் காத்திருருந்த அண்ணாதுரை இதை எதிர்த்தார் ( தனது 14 ஆண்டு உழைப்பை இரண்டு ஆண்டுகளில் குறுக்கு வழியில் ஒரு பெண் பறிப்பதை அவர் எதிர்த்தது நியாயமே).
தன் ஆதரவாளர்களுடன் வேலைநிறுத்தம் போன்று செய்தார்.
அப்போது அவரோடு நின்ற 32 பேரில் கருணாநிதி இல்லை.

சான்று :-

"தமது திருமண விஷயமாயும் இயக்க விஷயமாயும் கொண்டுள்ள ஏற்பாட்டை ரத்து செய்யாதவரை ஒத்துழைக்க முடியா தென்பதையும் தெரிவித்து விடவேண்டுமெனத் தீர்மானிக்கப் பட்டது.

கூட்டத்திற் கலந்து கையொப்பமிட்டவர்கள்..

அரசு,
காஞ்சி மணிமொழியார்,
மா. இளஞ்செழியன்
வேணு
மணி
தங்கராசு
பாலசுந்தரம்
வி. சங்கரநாராயணன்
பா. கோவிந்தராசன்
பாண்டியன்
முத்துசாமி
திராவிடமணி
கோவிந்தசாமி
தேவசகாயம்
பெரியசாமி
அங்கமுத்து
ஜெயராமன்
கன்னியப்பன்
தருமன்,
மதுரை ராசன்
பெருமாள்
சுப்பராயலு
பக்தவச்சலம்
எஸ். ராமன்
கா. சொக்கலிங்கம்
கண்ணபிரான்
பால்ராஜ்
சங்கரன்
கணேசன்
சுந்தரமூர்த்தி
நடராசன்,
ம.சு. முத்து,

– அண்ணாதுரை
(திராவிட நாடு – 03.07.1949)

பிறகு அண்ணா தனது ஆதரவாளர்களுடன் வெளியேறுகிறார். அப்போது வேலைநிறுத்தம் செய்த 32 பேரில் 4 பேர் மட்டுமே (அரசு, மணிமொழியார், நடராசன், முத்து) அவருடன் வெளியே வருகின்றனர்.

பாரதிதாசன் ஆதரவுடன் புதிய ஆதரவாளர்களைத் திரட்டி பொத்தாம்பாளையம் பழனிச்சாமி என்பவர் செலவில் 28 பேருடன் முதல் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்.
கடைசியாகச் சேர்ந்த 28 ஆவது நபர் கருணாநிதி.
27 ஆவதாக சேர்ந்த அன்பழகனுடன் சேர்ந்து இவர்களுக்குப் பின்னால்1953 இல் திமுக வுக்கு வந்த எம்ஜிஆர் ஆதரவுடன் கட்சியைக் கைப்பற்றுகிறார்.

சான்று படம் காண்க:-
தி.மு.க முதல்கூட்ட சுவரொட்டி (18.09.1949)

அதாவது 32 ஆண்டுகள் உழைத்து 1967 இல் அண்ணாதுரை ஆட்சியைப் பிடிக்கிறார். அவர் 1969 இல் இறந்தவுடன் அவரோடு தி.க வில் இருந்து வெளியே வந்த 4 பேர் சேர்த்து தி.மு.க தொடங்கிய 27 பேரை ஓரங்கட்டி வெறும் பத்து ஆண்டு உழைப்பில் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளார் கருணாநிதி.
ஈ.வே.ரா போல பண வசதியோ, காமராசர், தேவர் போல தியாக வாழ்க்கையோ, அண்ணாதுரை போன்ற கல்வியறிவோ பேச்சாற்றலோ, எம்ஜிஆர் போன்று வசீகரத் தோற்றமோ அல்லது பெரும்பான்மை ஜாதி அடையாளமோ இல்லாமல் இதைச் சாதித்தது மிகப் பெரும் வியப்பு!

இன்று தி.மு.க கருணாநிதி யின் குடும்ப சொத்து ஆகிவிட்டது!


Saturday 9 December 2023

மைன்ட் வாய்ஸ்

மைன்ட் வாய்ஸ்

"டேய் பஞ்சப் பரதேசி நாய்களா?! 
உங்களால எங்கள என்னடா பண்ண முடியும்?
மிஞ்சி போனா ஓட்டு போட மாட்டீங்க! 
அவ்ளதானே?! 
மூணு தலமொறயா கொள்ளயடிச்சு நூறு தலமொறைக்கு சொத்துபத்து சேத்துட்டோம்! 
 எங்க கட்சி அடிமைகள் கூட இப்ப அம்பானி ஆயிட்டானுக!
 அடுத்த தேர்தல்ல ஜெயிக்கலன்னா பத்து வருசம் ரெஸ்ட் எடுத்துட்டு வருவோம்!
 அப்ப பணத்த விட்டெறிஞ்சா நாய் மாதிரி வந்து ஓட்டு போடப் போறீங்க! 
இதுதானே வழக்கமா நடக்கும்! 
 எங்களுக்காக ஒழைச்சு சாவுறதுதான் பொதுமக்களுக்கும் அடிமட்ட தொண்டனுக்கும் தலையெழுத்து!
 அதுக்கு தானடா உங்க ஆத்தா ஒங்கள பெத்து போட்ருக்கா!
என்னடா ரோசம் வருதா?!
 வரட்டும்! இப்படித்தான் எல்லாத்தயும் உருவுன பிறகு எங்க தாத்தன பாத்து உங்க தாத்தன் கோப பட்டான்! எங்க அப்பன பாத்து உங்க அப்பன் கோவப் பட்டான்! என்னத்த கிழிச்சிட்டீங்க?!
 இனிமே நீங்க ஓட்டுப் போடலன்னாலும் போங்கடா!
 எங்கள ஒண்ணும் புடுங்க முடியாது. 
 இந்த ஆட்சில பத்து மடங்கு டார்கெட் வச்சு பாதிய முடிச்சிட்டோம்! 
 தேர்தலுக்குள்ள உங்க கோமணத்த கூட உறுவீருவோம்! 
அப்பறம் தலைமை, மாவட்டம், வட்டம் வர அமெரிக்காவுல செட்டில் ஆகிடுவோம்!
 என் மகன் மட்டுமில்ல அவனோட கொள்ளுப் பேரன் அவனோட எள்ளுப் பேரன் வரைக்கும் பைவ் ஸ்டார் ஓட்டல்ல பாரின் பிகரோட போட்டோ போடுவான்!
 வயித்துல அடிச்சிகிட்டு கமென்ட்ல கலாய்ச்சுட்டு கம்முனு படுங்கடா!
ஓவர் கோவம் ஒடம்புக்கு ஆகாது எளிய மக்களே! 
விடிஞ்சா பொழப்ப பாக்க போகணும்ல?! 
பசிக்கும்ல?! புள்ள குட்டியோட கஞ்சிக்கில்லாம சாவ போறீங்களா?! 
நாங்கள்லாம் ராட்சசங்கடா! 
எங்களோட மோதி உங்களால ஜெயிக்க முடியுமா?!
ரொம்ப கத்துனீங்கனா நெத்தில  பொட்டு வச்சிருவோம்!
 தோட்டா பொட்டு"

Friday 8 December 2023

வடக்கில் ஒரு தமிழன்

வடக்கில் ஒரு தமிழன் 

 அது ஒரு பெரிய ஆலை! அங்கே ஒரே நேரத்தில் ஒரு குஜராத்தியனும் ஒரு தமிழனும் வேலையில் சேர்ந்தனர். அந்த தமிழன் இரண்டு ஆண்டுகள் கழித்து வேறொரு நிறுவனத்தில் நிரந்தரமான  வேலை கிடைத்து போய்விட்டான். போகும்போது அந்த குஜராத்தி தோழனுக்கு தனக்கு தெரிந்த சில தொழில்நுட்பங்களை சொல்லிக் கொடுத்துவிட்டு போனான். காலம் உருண்டோடி பத்து ஆண்டுகள் கழித்து அதே இடத்திற்கு தமிழன் வந்தான். குஜராத்தியன் அங்கேயே நிரந்தரமாகி பொறுப்பில் இருந்தான். இருவரும் நண்பர்களாகவே தொடர்ந்தனர். அங்கே ஒரு பிரச்சனை ஒரு பீகாரி வடிவில் வந்திருந்தது. அந்த திறமையான தந்திரமான பீகாரி அனைவரையும் பின்னுக்குத் தள்ளி இப்போது குஜராத்தியை விழுங்கும் இடத்திற்கு வந்துவிட்டான். 
அந்த ஆலை ஒரு நிமிடம் நின்றாலும் பல லட்சம் நஷ்டம் ஆகும் அளவுக்கு பரபரப்பாக இயங்கும் இடம்.  தினம் தினம் கத்தி மேல் நடப்பது போல இருக்கும். பத்து ஆண்டு அனுபவம் இருந்தாலும் ஆறுமாத பயிற்சிக்குப் பின்தான் ஆலையை 8 மணிநேரம் நிர்வகிக்கும் அந்த பணியைக் கையாள முடியும்.
இம்மூவரின் வேலை என்பது நிர்வாகத்தின் திட்டப்படி ஒப்பந்த தொழிலாளர்களை வேலைவாங்குவது.
 குஜராத்தி நல்ல திறமையானவன் ஆனால் பணிந்து நடக்கத் தெரியாதவன். நிர்வாகம் தொழிலாளர் இண்டையும் சமமாக பார்ப்பவன். பீகாரி நிர்வாகத்தை கடவுளாகவும் தொழிலாளரை புழுக்களாகவும் எண்ணுபவன். தமிழன் இதற்கு நேர்மாறு. தொழிலாளரை மேலாகவும் நிர்வாகத்தை கீழாகவும் எண்ணுபவன். இதனால் தமிழன் தலைமையில் அத்தியாவசிய வேலைகள் மட்டும் நடக்கும். குஜராத்தி அத்தியாவசிய வேலைகளை முடித்து மேற்கொண்டு சில பணிகளை முடித்துவிடுவான். பீகாரி பேய் போல வேலை வாங்குவான். நாய் போல தானும் வேலை செய்வான். இப்படி ஒரு கொடூர கொத்தடிமையைத் தான் நிர்வாகம் தேடிக்கொண்டு இருந்தது. அதனால் அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டது. 
 குஜராத்தியன் தமிழனை எச்சரித்தான். சுருக்கமாகச் சொன்னால் 'இங்கே தொழிலாளியை எவ்வளவு வேலை வாங்குகிறோம்' என்பதை விட 'எவ்வளவு கசக்கி பிழிகிறோம்' என்பதுதான் முக்கியம். அந்த தமிழனுக்கு வந்த முதல்நாளே இது புரிந்துவிட்டது. இருந்தும் அவன் தொழிலாளர்களைக் கனிவுடன் நடத்தினான். தான் வழங்கும் பணிச்சுமையே மிக அதிகம் என்பது அவன் கருத்து. தினமும் செத்துப் பிழைக்கும் தொழிலாளிகள் அவன் பணிநேரத்தில் சற்று மூச்சுவாங்க முடிந்தது. நிர்வாகம் அவன் மேல் தீமழை பொழிய பாட்டாளிகள் பாச மழை பொழிந்தனர். சரிக்கு சரி அமர்ந்து உண்ணும் தமிழனுக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டுவந்து அளித்தனர். தமிழன் ஒரு வேலையைச் சொல்லக் கூட வேண்டாம் மனதில் நினைத்தால் போதும் அந்த வேலை நடந்துவிடும். சில மாதங்கள் கழித்து பீகாரிக்கு நெருக்கமான ஒரு சொந்தக்கார பையன் அங்கே தொழிலாளியாக வந்தான். பீகாரியைப் போல இவனும் வசதி படைத்தவன்தான். சும்மா கொஞ்ச நாள் சுற்றுலா மாதிரி வேலைக்கு வந்தான். இவன் பீகாரியின் கையாள் என்று அனைவரும் சொன்னார்கள். அவன் தமிழன் தலைமையின் கீழும் வேலை செய்தான். தமிழன் எந்த பாகுபாடும் காட்டாமல் அவனுக்கு தொழில் கற்றுக் கொடுத்தான். ஒருநாள் அந்த பீகாரியின் கையாள் தான் வேலையை விட்டுவிட்டு ஊருக்கே போகவுள்ளதாக தமிழனிடம் கூறினான். இப்படியாக ஒரு ஆண்டு கழிந்தது. தன் மூன்று ஆண்டு உழைப்பினாலும் தந்திரத்தாலும் குஜராத்திக்கும் தமிழனுக்கும் பல ஆப்புகள் வைத்து நிர்வாகத்தின் பார்வையில் பீகாரி உயர்ந்து நின்றான். நிர்வாகம் தமிழனைக் கண்டாலே எரிச்சல் அடைந்தது. குஜராத்தி தமிழனிடம் பீகாரிக்கு பதவி உயர்வு கிடைக்கப் போவதாகவும் அவன் மேலே வந்துவிட்டால் நம்மையும் தொழிலாளர்களையும் காப்பாற்ற யாருமில்லை என்றும் கூறினான். தமிழன் சிரித்தான். "இது ஒன்றும் சினிமா இல்லை! நீ ஒன்றும் ஹீரோ இல்லை! கடைசி நேரத்தில் ஜெயித்துவிட்டு சிரிப்பதற்கு" என்று குஜராத்தி கோபப்பட்டான். குஜராத்தி சொன்னபடி நடந்தது. பீகாரி பதவி உயர்ந்தான். தமிழன் சம்பளம் அதிகரிக்கப் படாத காரணத்தால் ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு கிளம்பினான். இனம், மதம், ஜாதி, பிறப்பிடம் என பல்வேறு பின்னணியில் இருந்து வந்த அந்த தொழிலாளர்கள் அன்று கலங்கி நின்றனர். அந்த தமிழனை விரும்பாத தொழிலாளிகள் கூட அப்போது அவனுக்காக வருந்தினர். வழியனுப்ப வந்த குஜராத்தியன் தன் சொற்படி நடக்காமைக்கு தமிழனைக் கடிந்து கொண்டாலும் கனத்த இதயத்துடன் விடை கொடுத்தான். அப்போது தமிழன் "கூடிய விரைவில் நீ எனக்கு அழைப்பாய். நான் திரும்ப வருவேன்" என்றான்.
 வேறு வேலை தேடிப் பார்த்து கிடைக்கா விட்டால் இதே சம்பளத்திற்கு நிர்வாகத்திடம் கெஞ்சி மீண்டும் வருவானாக இருக்கும் என்று குசராத்தி நினைத்துக் கொண்டான்.
 ஒரு வாரம் கழிந்தது. தரமான பளபளப்பான மேலாளர் உடையில் பீகாரி ரத்த காட்டேரி போல வலம் வந்தான். வெந்நீர் போன்று இருக்கும் தேநீர் கூட இனி கிடையாது என்று உத்தரவிட்டான். திறமை, பணம், அதிகாரம் என எல்லாம் வாய்த்த அவனை யாரும் எதிர்க்கத் துணியவில்லை. தன் உறவினன் என்றும் பாராமல் தனது கையாளிடமும் கடுமையாக நடந்துகொண்டான். அந்த பையனுக்கு தமிழன் நினைவு வந்தது. தொழிலாளர்கள் பீகாரி மேல் உச்சகட்ட கோபத்தில் இருந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அன்று ஆலையை நிறுத்தி பராமரிப்பு வேலை நடக்கும் நாள். ஆலையின் கழிவுகளை பெரிய குழியில் இருந்து இயந்திரத்தின் மூலம் அள்ளி வண்டியில் ஏற்றி அனுப்பும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பீகாரியும் அவனது உறவினனும் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். தினமும் பலரிடம் வாக்குவாதம் நடத்துவது பீகாரிக்கு வழக்கம். தொழிலாளர்களால் சாக்குபோக்கு சொல்லி சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்து மேலதிகாரியைக் கடுப்பாக்க முடியுமே தவிர வேறெதுவும் செய்ய முடியாது. அனைவரும் இது வழக்கம்தானே என்று எண்ணி அசட்டையாக இருந்தபோது அந்த பையன் பீகாரியை கன்னத்தில் அறைந்து வயிற்றில் மிதித்து அந்த கழிவுக் குழிக்குள் தள்ளிவிட்டான். இடுப்பளவு கழிவுநீரில் எண்ணெய், கிரீஸ், தூசி, மண் என முழுவதுமாக நனைந்து எழுந்து நின்ற பீகாரியைப் பார்த்து சுற்றி நின்ற அனைவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரித்தனர். அவனைத் தூக்கவோ மாற்று உடை கொடுக்கவோ யாரும் முன்வரவில்லை. கடைசியில் மேலே வந்து துணிக்கு போடும் சோப்பு கடன் வாங்கி கழிவறையில் அரையும் குறையுமாகக் குளித்து பணிப் பேருந்தில் 'வேலை செய்யும் நேரத்தில் உடுத்தும்' அழுக்கான தொழிலாளர் சீருடையில் கிரீஸ் துர்நாற்றத்துடன் வீடு திரும்பிய பீகாரி வாழ்நாள் முழுவதும் அந்த நாளை மறந்திருக்க மாட்டான். அவனது உறவினன் நிர்வாகத்திடம் "போங்கடா நீங்களும் உங்க வேலையும்" என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டான். மறுநாள் பீகாரி சோர்ந்த நிலையில் வந்தான். தொழிலாளர்கள் கைகொட்டி சிரித்தனர். அவன் மனைவி, அவன் சொந்த பந்தம், சொந்த ஊர் என எல்லாருக்கும் இந்த விடயம் தெரிந்துவிட்டது. நிர்வாகம் எவ்வளவோ தேற்றியும் அவன் ராஜினாமா செய்துவிட்டு தொங்கிய தலையுடன் வெளியேறினான். நிர்வாகத்தால் தகுதியான ஆளில்லாமல் சமாளிக்க முடியாது. தமிழனை திரும்ப அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும் இறங்கிப் போய் பேச மனமில்லாமல் குஜராத்தியனை வைத்து அழைத்தனர். குஜராத்தி தமிழனை அழைத்தான். அவன் பேசிவிட்டு நிர்வாகத்தை இணைத்து பேச்சுவார்த்தை நடந்தது. மூன்று நிமிட அலைபேசிப் பேச்சு முடிந்தது.  மறுநாள் பதவி உயர்வுடன் சம்பள அதிகரிப்புடன் பளபளக்கும் மேலாளர் உடையில் வந்து இருக்கையில் அமர்ந்தான் தமிழன். பீகாரி மூன்று ஆண்டுகள் முக்கி முக்கி செத்து செத்து அடைந்த அனைத்தையும் மூன்று நிமிடங்களில் அடைந்தான் அந்த தமிழன். தொழிலாளர்கள் மகிழ்ந்தனர். மேலாளர்களுக்கு மட்டுமே செல்லும் தேநீர் வண்டி அன்று முதல் தொழிலாளர் களுக்காக நின்றது. 

Monday 4 December 2023

கோயிலுக்கு இஸ்லாமியர் தானம்

கோயிலுக்கு இஸ்லாமியர் தானம் 

 நெல்லையப்பர் கோயில் உள்ள கிபி 1751 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சொத்து பட்டயம் ஒன்றில் லாலுகான்சவான் சாயுபு என்பவர் நெல்லை பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நித்ய பூஜைக்கு தானம் வழங்கிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
 அதுபோல் குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு கிபி 1848 ஆம் ஆண்டு நித்திய பூஜை மற்றும் நெல்லை காந்தியம்மன் சிறுகால பூஜைக்கான கட்டளைக்கு அசாதுவால சாயுவும் இசுமாலிராவுத்தரும் வேறு சிலரும் சேர்ந்து தான பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

செய்தி: தினகரன் (04.12.2023)
தலைப்பு: குற்றாலம் கோயிலில் செப்பு பட்டயங்கள் கண்டுபிடிப்பு

 ஏற்கனவே தென்காசியை சேர்ந்த அகமதுபேட்டை (ஆமது பேட்டை) முஸ்லீம்கள் குற்றால நாதர் நித்திய பூசைக்கு மகமைப் பணம் கொடுக்க (கி.பி. 1788ல்) இணங்கி எழுதிய பட்டயம் ஒன்று பற்றி ஏற்கனவே பதிவிட்டுந்தேன்.