Friday 21 August 2020

அஜித்தா வீரப்பனா

அஜித்தா? வீரப்பனா?

 எனக்கு ஏன் தலைவரை விட வீரப்பனாரை அதிகம் பிடிக்கும்  என்றால்...

 பிரபாகரனார் பிறப்பிலேயே நல்லவர், இறுதிவரை நல்லவராகவே இருந்தார்.

 ஆனால் வீரப்பனார் அப்படியில்லை.

 அவர் முரடனாக பிறந்து கொலைசெய்யும் வேட்டைக்காரனாக வளர்ந்து கடத்தல் செய்யும் கொள்ளைக்காரனாக ஆனவர்.

 20 ஆண்டுகளாக வெற்றி மேல் வெற்றி, புகழ் மேல் புகழ் என அவருக்கு அலுத்துவிட்டது.

 யானை வேட்டை, சந்தனக் கடத்தல் என்று பெரும் பொருளீட்டிய வீரப்பனார் ஒரு கட்டத்தில் இதில் அர்த்தமேயில்லை என்று உணர்கிறார்.

 சில ஆண்டுகள் இந்த சிந்தனையிலேயே அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்திருந்தார்.

 "வீரப்பன் இறந்துவிட்டானோ?" என்று நினைக்கும் அளவு அமைதியாக இருந்த வீரப்பனார் புதிய மனிதனாக மாறி மீண்டும் நடவடிக்கையில் இறங்கினார்.

 வீரப்பனார்  தன் இயல்பான முரட்டு குணத்தை அடக்கி தன்னைத்தானே வென்றது எவ்வளவு கஷ்டம் என்பது
 தன் இயல்பான மிருக குணத்தை அடக்கி அதன் மேல் அமைதியாக உட்கார்ந்திருக்கும் சிலருக்கு மட்டுமே புரியும்.

 அதன் பிறகு அந்த காட்டில் ஒரு விலங்குகூட கொல்லப்படவில்லை.
 ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை.
தன்னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்பை விட அதிகமாக உதவிகள் செய்தார்.

 வல்லவனாக மட்டுமில்லாமல் நல்லவனாகவும் மாறி மக்களுக்கு நன்மை செய்கிறார்.

 தன் தவறுகள் அனைத்தையும் சரிசெய்து அதுவும் போதாதென்று மேற்கொண்டும் நன்மைகளைச் செய்கிறார்.

 அரசாங்க ஊழியர் என்று யார் காட்டில் கால்வைத்தாலும் கடத்திக் கொண்டு போய் வைத்துக்கொண்டு அரசை மிரட்டி பணம் பறித்து அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.

 ஆம். அவர் ஒரு தமிழ் ராபின் ஹுட் ஆகிவிட்டார்.

 தமிழர்களுக்குத் தலைவன் ஆக "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடத் தெரிந்திருக்க வேண்டும் என்றில்லை இனப்பற்று இருந்தால் போதும் என்று நிரூபித்தார் அந்த படிக்காத மாவீரன்.

 ஆனாலும் அவர் மனம் ஆறுதல் அடையவில்லை.
தன் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்துவிடவேண்டும் என்று எண்ணிய அவரை சரியான நேரத்தில் சந்தித்த தமிழர் தனிநாடு கேட்கும் ஆயுதப் போராளிகள் திட்டமிட்டு கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி வரச் செய்தனர்.

 வீரப்பனார் நூறு நாட்களுக்கு மேல் அன்று கிளப்பிய பரபரப்புக்கு அளவேயில்லை.
 ஊடகங்கள் செய்தி பரப்பியே மாய்ந்துபோயின.

 அவர் காவிரி நதியை விடுவித்துக் காட்டினார்.

 அதிகாரமும் பணமும் பதவியும் படைத்தவர்கள், பெரிய பெரிய போஸ்டர்களில் ஈ என்று பல்லைக் காட்டுபவர்கள் என எத்தனையோ பெரிய மனிதர்களால் முடியாததை அவர் சாதித்தார்.

 காவிரி உரிமைக்காக புத்தகம் எழுதியவர்கள், வழக்கு போட்டவர்கள், தீர்மானம் நிறைவேற்றியவர்கள், சட்டம் போட்டவர்கள், போராட்டம் செய்தவர்கள், தீர்ப்பு சொன்னவர்கள் என எவராலும் சாதிக்க முடியாததை வீரப்பன் சாதித்து காட்டினார்.

 ஏட்டில் இனிக்கும் ஜனநாயகமும் சட்டமும் அந்த மாமனிதனின் வீரத்திற்கு முன் மண்டியிட்டு தோல்வியை ஒத்துக்கொண்டன.

 இது எவ்வளவு பெரிய விஷயம் என்றால்...
 2012 இல் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம்.

 மன்மோகன் சிங் எதிரே ஜெயலலிதாவும் ஜெகதீஷ் ஷட்டரும் இருக்கிறார்கள்.
 கன்னட முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் "தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமுடியாது" என்று ஆணவமாகக் கூறுகிறார்.
 மன்மோகன் சிங் "வினாடிக்கு 9000 கன அடியாவது கொடுங்கள்" என்று கெஞ்சுகிறார்.
 "ஒரு சொட்டு கூட தரமுடியாது" என்று ஆணவமாகக் கூறிவிட்டு வெளியே போய்விடுகிறார்.
 இதுதான் அன்று நடந்த கடைசிகட்ட பேச்சுவார்த்தை.

 (இந்த மீட்டிங் 6 தடவை பிரதமரால் கேன்சல் செய்யப்பட்டு ஏழாவது முயற்சியில் நடந்தது என்பது வேறு கதை.
 இந்த அவமானத்துக்குப் பிறகுதான் ஜெயலலிதா காவிரி தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
 ஆனால் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை)

 ஆக ஒரு பிரதமரால் வாங்கித்தர முடியாததை வீரப்பன் வாங்கித் தந்துள்ளார் என்றுதானே அர்த்தம்?!

 வீரப்பனாரின் சாதனை ஒவ்வொரு கன்னடனுக்கும் விழுந்த செருப்படி!

 ஒவ்வொரு தமிழனுக்கும் கற்றுத் தந்த பாடம்!

 அவர் ஹீரோ இல்லை என்றால் இங்கே வேறு எவன்டா ஹீரோ?!

 மேக்கப் போடுறதோ சீன் போடுறதோ மேட்டரே இல்லை.
 கடுகளவாவது சாதிக்க வேண்டும்.

 திரையில் எந்த சொங்கியும் சிங்கமாகலாம்.
 தனுஷ் கூட அர்னால்டைத் தூக்கிப் போட்டு மிதிக்கலாம்.
 நீங்களோ நானோ கூட க்ராபிக்சில் நூறு யானைகளை பந்தாடலாம்.

 அத்தகைய போலியான வீரர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற கூத்தாடி நடிகர்களின் படத்தை நெற்றியில் ஒட்டிக்கொண்டு திரிகிறார்கள் மத்தியான தூக்கத்தில் கண்ட கனவுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம்  தெரியாத முட்டாள் இளைஞர்கள்.

 ஒருவன் நிஜ வாழ்க்கையில் என்ன சாதித்தான் என்பதுதான் மேட்டர்.
 நிஜ வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவன் கூத்தாடி பின்னால் ஓடமாட்டான்.

 நான் ஞாயிற்றுக் கிழமை ஷேவ் செய்ய போகும்போது மீசையை கொஞ்சம் முறுக்கிப் பார்க்கலாமா என்று யோசிக்கும் போதெல்லாம் கண்ணாடியில் வீரப்பனார் முகம்தான் வந்து போகும்.

 அவர் அத்தனை பெரிய மீசைக்கு ஒர்த்தான ஆம்பளையாக இருந்தார்.

 ஒரு கிழட்டு கான்ஸ்டபிள் லத்தியை நீட்டினாலே பல்லைக்காட்டும் நாமெல்லாம் மீசை வைக்கவே அருகதை அற்றவர்கள்.

 "அவர் அனுப்பிய பத்து ரூபாய் கேசட் காவிரியைக் கொண்டுவந்தது.
இன்று யாருக்காவது அந்த துப்பு இருக்கிறதா?" என்று
 மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லணையில் கூடிய பெரிய கூட்டத்தில்
வீரப்பனாரின் மனைவி கேட்ட கேள்வி என் காதில் ஒலித்து என்னை மேலும் கூனிக்குறுக வைக்கிறது.

 ஐயா!
எங்க சீயானே!
உங்க போட்டோவ ஒட்டுற தகுதியாவது எனக்கு இருக்கணும்.

[சீமான் ஹேட்டர்ஸ் சேதாரம் ஆகாம ஓரமா போகவும்
 இன்று சீமான் அண்ணன் இல்லை என்றால் வீரப்பன், பிரபாகரன் படங்களை வெளிப்படையாக வைத்துக் கொண்டு சுற்ற முடியாது.
வீட்டுக்குள் மாட்டிவைத்து சாமி வேணா கும்பிடலாம்.]