Monday, 23 February 2026

திராவிட மாடல் ஆட்சி அதிர்ச்சிகளும் ஆறுதல்களும் 21022025

திராவிட மாடல் ஆட்சி 
அதிர்ச்சிகளும் ஆறுதல்களும்

நாள்: 21.02.2025

  முரசொலி மூலப் பத்திரம் சர்ச்சையில் 'அரசியலில் இருந்தே விலகுவேன' என்று சவால் விட்டதில் இருந்து ஸ்டாலின் தீவிரமாக அரசியல் களத்திற்கு வருகிறார்.
  தேர்தல் பிரச்சாரத்தின் போது குனியமுத்தூர் பிரச்சாரத்தில் கேள்விகேட்ட பெண்ணை வேலுமணி ஆள் என்று கூறி வெளியேற்றிய அன்றிலிருந்து மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி ஏற்படுத்துவது தொடங்கிவிட்டது.

 இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் நடந்த அதிர்ச்சிகள்...
* 380 கோடி கொடுத்து பிரசாந்த் கிஷோர் வரவழைப்பு
* நால்வர் விடுதலை ஆனதும் சிறப்பு முகாமில் அடைப்பு
* விவசாயிகள் மீது குண்டாஸ்
* nlc க்காக விளைந்து நின்ற நிலம் அழிப்பு
* இசுலாமியர் விடுதலைக்கு எதிராக அறிக்கை 
* வேங்கைவயல் குடிநீரில் மலம்
* தூத்துக்குடி காதல் திருமணம் ஆணவக்கொலை
* சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து கதறல்
* நெல் கொள்முதல் நிலைய கொட்டகைக்கு நிதி ஒதுக்காமை
* கஞ்சா விற்பனை துப்பு கொடுத்த வசீம் அக்ரம் வெட்டி கொலை 
* மேயர் பிரியா ரங்கநாத நாயுடுவால் பொதுவெளியில் பாலியல்  சீண்டல்
* பேனா சிலை
* பாடபுத்தகத்தில் திராவிட புரட்டு
* நீட் கையெழுத்து நாடகம் 
* உச்ச நிலையில் கனிமவள கொள்ளை
* கர்நாடக சென்று காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் 
* ஆனாலும் காவிரி நீர் மறுப்பு காய்ந்து போன அணை
* மின்கட்டண உயர்வு
* பால் விலையேற்றம் மில்லி குறைப்பு
* தாலி தங்கம், லேப்டாப் , ஸ்கூட்டி போன்ற அதிமுக மகளிர் திட்டங்கள் நிறுத்தம்
* டாஸ்மாக் 10ரூ அதிகம் வாங்கிய செந்தில் பாலாஜி 
* வேலைவாங்கித் தருவதாக பணம் வாங்கிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது
* திமுக வாக்களித்த நிலம் கிடைக்காத அஸ்வினி எனும் நரிக்காரர் பேட்டி அளித்த பிறகு அடிதடி வழக்கில் கைது
* சாலிகிராமம் கூட்டத்தில் பெண் போலீஸ் மீது திமுக தொண்டர்கள் பாலியல் அத்துமீறல்
* ஈரோடு இடைத்தேர்தல் காளியம்மாள் மீது பீர் பாட்டில் வீச்சு
* ஈரோடு இடைத் தேர்தல் மக்களை அடைத்துவைத்து  விருந்து மற்றும் இன்ப சுற்றுலா 
* மாலைத்தீவு ராணுவம் தமிழக மீனவர் கைது
* ரயில் வடவர் பெண்ணிடம் அத்துமீறல் 
* குட்கா தடை நீக்கம்
* கள்ளசாராய மரணம் அதற்கு 10 லட்சம் நிவாரணம்
* குடிகாரர் திருந்தினால் அரசுவேலை
* சென்னை ஆர்.ஏ.புரம் 40 ஆண்டுகால குடியிருப்பு இடிப்பு பா.ம.க தொண்டர் தீக்குளிப்பு
* உதயநிதி சினிமாவை அரசு ஊழியர் பார்க்க கட்டாயப்படுத்தல்
* அனைத்து திரைப்பட வியாபார உரிமையையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பிடுங்குதல்
* கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மர்ம மரணம்
* நாங்குநேரி பள்ளி மாணவர் கஞ்சா போதையில் சக மாணவர் மாணவி மீது அரிவாள் வெட்டு 
* ரேசன் கடைகளில் செறிவூட்ட அரிசி 
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை இல்லை
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஐ.ஜி யாதவ் பதவி உயர்வு 
* மொடக்குறிச்சி வடவர் போலீஸ் ரகுபதி மீது தாக்குதல்
* தவறான சிகிச்சையால் அரசு மருத்துவமனையில் கை அழுகி குழந்தை இறப்பு
* குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு அமைச்சர் மனோ தங்கராஜ் குழந்தை தொழிலாளர் பற்றிய news 24x7 புகாரை ஏற்க மறுப்பு 
* அரசு அலுவலகம் புகுந்து மணல் மாபியா வி.ஏ.ஓ வெட்டிக் கொலை
* துடியலூர் அரசுப் பள்ளியில் இசுலாமிய மாணவியை செருப்பை சுத்தம் செய்யவைத்த ஆசிரியர்கள்
* விமான நிலையம் அமைக்க பரந்தூர் விளைநிலஙகள் பிடுங்குதல் அதனால் பெரிய போராட்டம் அதற்கு வேலி போட்டு போலீஸ் அடக்குமுறை
* அம்பாசமுத்திரம் பலர் பல் பிடுங்கிய போலீஸ் பல்வீர் சிங் அவரது இடைநீக்கம் ரத்து
* தொடர்ந்து 9 லாக்கப் மரணங்கள்
* நெல்லை ஆற்றில் கஞ்சா போதையில் பட்டியல் சிறுவர் மீது சிறுநீர் கழித்த ஆதிக்க சமூகத்தினர்
* உதயநிதி சினிமாவில் பிசி அதனால் 2023 தேசிய விளையாட்டுக்கு 503 தமிழக மாணவர் அனுப்பப் படவில்லலை
* குறவர் பெண் ஆந்திரா போலீசால் வன்புணர்வு பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி சித்திரவதை 
* பள்ளி மாணவருக்கு அழுகிய முட்டை அதற்கு ஓடு மீதுள்ள கறுப்பு அச்சு உள்ளே சென்றுவிட்டதாக மழுப்பல்
* காஞ்சிபுரம் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் அது காக்கா முட்டை என்று மழுப்பல்
* மதுரை பெருங்குடி 6 வயது சிறுவன் உட்பட 5பேர் ஆதிக்க சாதிவெறியரால் வெட்டிக் கொலை
* சென்னை வெள்ளம் வரலாறு காணாத பாதிப்பு மிக அசட்டையாக நடந்துகொண்ட அரசு
* மெரீனாவில் அமைத்த மாற்றுத் திறனாளி பாதை தரமில்லை 
* வெள்ள நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர்
* உதயநிதி திரைப்படம் நடிப்பு
* தென்காசிக்கு சலூன் கோச் சொகுசு பெட்டியில் ஸ்டாலின் பயணம்
* ஜெயலலிதா மரணம் குறித்த குழப்பமான அறிக்கை 
* குறவருக்கு சாதிச் சான்றிதல் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டி மகனுக்கு வேலை கிடைக்காமல் தந்தை தற்கொலை
* இதனால் குறவர் உரிமைக்காக 6 நாள் உண்ணாவிரதம் இருந்த இரணியன் மற்றும் தென்காசி எம்.பி தனுஷ் குமார் KKSSRR வீட்டில் நிற்கவைத்து சாதிய ரீதியில் அவமரியாதை
* பத்திர பதிவு கட்டண உயர்வு
* ஓட்டல் தமிழ்நாடு எமரால்டு என பெயர்மாற்றம்
* செய்யாறு சிப்காட் ஆதரவுப் போராட்டம் பணம் கொடுத்து வெளியூர் நபர்களை விவசாயிகள் போல நடிக்க வைத்தது
* சத்துணவு தனியார் மயமாக்க முயற்சி
* வேலை நேரம் 12 மணிநேரமாக்க முயற்சி
* மவுன்ட் ரோடில் பொதுமக்களுக்கு இடையூறாக தெலுங்கு நடிகர் அல்லி அர்ஜூன் கார் ரேஸ் நடத்த மைதானம் அமைத்தல்
* செஸ் போட்டி பிரக்யானந்தா புறக்கணிப்பு
* இசுலாமிய அமைச்சர் 3 ல் 2 பதவி பறிப்பு 
* பி.டி.ஆர் விரட்டி அடிப்பு உதயநிதிக்கு பதவி
* விளையாட்டு மைதானஙகளில் மது அனுமதி 
* அரசு பஸ் மீது திமுக குடும்பம் நடத்தும் பீர் விளம்பரம்
* நகரங்களில் நோய்தாக்கிய தெருநாய் கடிகள்
* முதலீடு ஈர்ப்பு என்கிற பெயரில் அரபுநாடு, ஸ்பெயின், சிங்கபூர் என மக்கள் வரிப்பணத்தில் ஸ்டாலின் குடும்ப சுற்றுலா
* அதானி உடன் ஒப்பந்தம் சென்னை துறைமுகம் தாரைவார்ப்பு
* மீண்டும் எட்டுவழி சாலை திட்டம் நடைமுறையில்
* திருப்பதி டோல் மாணவர் தாக்குதல் 
* திருமாவளவன் பிளாஸ்டிக் சேரில் அமர வைப்பு
* அரசு நீண்டநேர பஸ் விலையேற்றம்
* ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு
* கடன்சுமை பல மடங்கு உநர்ந்து இந்தியாவில முதலிடம்
* மாற்றுத்திறனாளி உலக்கோப்பை வாங்கியதாக முதல்வரையே ஏமாற்றியது
* துர்கா ஸ்டாலின் மினரல் வாட்டர் ஆலை
* குவாரி டென்டர் கேட்ட பட்டியல் சாதி நபர் ஆடை அவிழ்ப்பு
* ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு என்று அறிவித்துவிட்டு மறுநாளே கலந்துகொள்ளல்
* சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கம் _ பொன் மாணிக்கவேல் 
* கலாசேத்ரா பாலியல் புகார்
* CAA எதிர்ப்பு போராட்டம் ஆனால் வாக்கெடுப்பில் ஆதரவு கையெழுத்து 
* புளியந்தோப்பு இறந்த குழந்தை உடல் அட்டைபெட்டியில் 
* புழல் பெண் கைதி தப்பி ஓட்டம்
* கருணாநிதி சிலை வைக்க மாடர்ன் தியேட்டர் நிலம் பிடுங்கல்
* பசுவந்தனை பள்ளி கழிவறை மாணவி தூக்கில்
* ஒரே நேரத்தில் 140 பள்ளிகளில் லேப்டாப் திருட்டு
* எண்ணூர் எண்ணெய் கழிவு கடலில் கலப்பு
* பாட்டாக்குறிச்சி மலை அழித்து மைதானம்
* நெல்லை, தூத்துக்குடி  வெள்ளம் மாரி செல்வராஜ் மீட்புப் பணி
* தூத்துக்குடி தத்தளித்த நேரம் டெல்லி சென்று கூட்டணி பேச்சுவார்த்தை
* பொன்முடி மனைவியுடன் கைது
* எண்ணூர் ஆலை அமோனியா கசிவு நள்ளிரவில் மக்கள் வெளியேற்றம்
* ஆதி திராவிடர் நலத்துறை நிதி பயன்படுத்தாமல் வைத்திருந்தது
* எம்பிளாய்மென்ட் இல் பதிந்து வேலை கிடைக்காத இளைஞர் உதவித்தொகை நிறுத்தம்
* நிறித்தப்பட்ட கெயில் குழாய் மீண்டும் மோடி அடிக்கல் நாட்டினார்
* அடிப்படை வசதிகள் இல்லாமல் கிளாம்பாக்கம் திறப்பு
* கிளாம்பாக்கம் ரயில்நிலையம் வெற்று அறிவிப்பு
* பள்ளிகளில் தமிழ்மன்றம் அமைத்து கருணாநிதி பெயர்
* கவுன்சிலர் புருசன்கள் அடாவடி
* எதிர்கட்சியாக 5000 ரூ பொங்கல் தொகுப்பு கேட்டு தற்போது 1000 ரூ கூட தரமுடியாமல் திணறல்
* கேலோஇந்தியா உதயநிதி டெல்லி சென்று மோடி அழைப்பு 
* முரசொலி மூலப் பத்திரம் வழக்கு ஆவணங்களைக் காட்டமுடியாமல் திணறல் 
* புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த ஈவேரா வீட்டுக்கு பட்டா வழங்கல் இளங்கோவனிடம் கையளிப்பு
* கிண்டி ரேஸ் கோர்ஸ் 700 கோடி வரி பாக்கி
* பல கோடி செலவில் கூட்டமே இல்லமால் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞரணி மாநாடு 
* பழைய பென்சன் முறை நடைமுறைக்கு கொண்டுவராமை 
* ஓட்டுநர் இல்லாமல் தினம் 6000 பஸ் நிற்கிறது
* ஓட்டுநர் காலி பணியிடம் 8 ஆண்டுகள் நிரப்பவில்லை என போக்குவரத்து ஊழியர் போராட்டம்
*பூவாலூர் காதல் திருமணம் செய்த மகளை உயிரோடு எரித்து கொன்ற பெற்றோர்
* முதியோர் பென்சன் நிறுத்தம்
* மோசமான நிலையில் இருந்த அரசு பஸ் RTo விடம்  ஒப்படைத்தவர் மீது நடவடிக்கை
* ஜல்லிக்கட்டு போராளிகள் மீதான வழக்கு ரத்து இல்லை 
* சல்லிக்கட்டு போராட்டத்தில் இறந்த மாணவருக்கு நிவாரணம் இல்லை
* ஆனால் ஜல்லிக்கட்டு மைதானம் கலைஞர் பெயர்
* பள்ளிகளுக்கு தனியார் நிதி வேண்டல்
* மார்வாடி தெலுங்கர் உடன் சமத்துவ பொங்கல் கூத்து
* சிவகங்கை தீரன் பட பாணியில் கொள்ளை கும்பல்
* பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி குடும்பம் பெண் மீது கொடுமை
* நாகர்கோவில் நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் கொலை
* சென்னை ஆசிரியர் போராட்டம் இரவு தடியடி
* செவிலியர் போராட்டம் 
* திமுக பெண்களை இழிவு படுத்தி பலமுறை பேச்சு 
* 5 ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி நாடக பேட்டி அதை அண்ணாமலை அநாகரீக விமர்சனம்
* மும்பையில் நயன்தாரா வழக்கில் அரசு வக்கீல்
* சட்டசபை நேரலை ஒளிபரப்ப முடியாது என்று மறுப்பு
* வேடந்தாங்கல் அருகே தொழிற்சாலை 
* அதானி முதலீடு வரவேற்பு
* பல்லடம் செய்தியாளர் கூலிப்படை வெட்டு
* தமிழ் பேசிய மாணவன் காது கிழிப்பு 
* ஆசிரியர் பணி தேர்வில் மொழிப்பாடமாக 'தமிழ் அல்லது தென்னிந்திய மொழிகள்' என திருத்தம்
* தண்டாரம்பட்டு  ஆதிக்க சமூகம் தனி கோவில் 
* தொடரும் ரேசன் அரிசி பதுக்கல் 100 கிலோ வுக்கு மேல் ரேசன் அரிசி கடத்தல் 5 முறை பிடிபட்டது
* வள்ளலார் பக்தர்கள் எதிர்ப்பை மீறி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைத்தல்
* சமூக வலைகளை கண்கானிக்க குழு fact check 
* மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா அறிவிப்பு ஆழ்ந்த உறக்கத்தில் தமிழக முதல்வர்
*கன்னியாகுமரி கனிமவள லாரிகள் ஏற்படுத்தும்வதொடர் விபத்து,  ஒரே மாதத்தில் 4 வது விபத்து நடந்தது
* நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம சாவு
*ஆணவக்கொலை தனிச் சட்டம் கொண்டுவர மறுப்பு
* போதைப் பொருள் கடத்தல்
*யூட்யூப் விளம்பரம்
* பார்வையற்றோர் போராட்டம் தடியடி
* சட்டவிரோத முகாம் சாந்தன் இறப்பு
* அபகரிப்பு தடுப்பு சட்டம் ரத்து
*காதல் ஜோடி அடைக்கலம் திருநெல்வேலி மார்க்சிஸ்ட் அலுவலகம் சூறை
* சிவில் நீதிபதி நியமனம் முறைகேடால் ரத்து
* நேர்மையான ஆசிரியை உமா மகேஸ்வரி முகநூல் பதிவால் இடைநீக்கம்
* ஸ்ரீ பள்ளி ஒப்புதல் 
* சென்னை கார் டிரைவர் போலீசால் கொலை
* ஈழத்தமிழர் வலுக்கட்டாயமாக இலங்கை வசம் ஒப்படைக்க முயற்சி
* லாட்டரி மார்ட்டின் மூலம் சூதாட்டத்தில் முதலீடு
* தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு இணையாக தேர்தல் நிதி
* மதுரை 11 வயது அனாதை சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை
* செய்யாறு புதிதாக கட்டிய பள்ளிக் கூரை விழுந்து 5 குழந்தைகள் காயம்
* தென்காசி 6000 கிலோ குட்கா மாவட்ட கவுன்சிலர் புருசன் கைது
* போக்குவரத்து ஊழியர் லாக்கம் டெத்
* நைனா முகமது கொலை நவாஸ் கனி ஜமாத்
* கல்வராயன்மலை கள்ளச்சாராயம் பறிமுதல்
* ஒகேனக்கல் மணல்திட்டு போலீஸ் பழங்குடி வீடுகள் அழித்து வெளியேற்றம் 
* சவுக்கு கைது குண்டாஸ்
* தேர்தல் முடிந்து ஸ்டாலின் உதயநிதி ஓய்வு பயணம் 
* இன்ஸ்பெக்டர் ஷர்மிளா வீட்டில் 450 சவரன் கொள்ளை
* தேவர்குளம் மறவர் மீது போலீஸ் சாதிவெறி அடக்குமுறை
* சாதிய மோதல் பாளையங்கொட்டை ரவுடி தீபக் பட்டப்பகலில் வெட்டிக் கொலை 
* தேனி பெரியகுளம் தந்தையின் கடனுக்காக மகளைக் கடத்தி கந்துவட்டி ரவுடிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை
* கந்துவட்டி வசூலிக்க கொச்சி அழைத்துச் சென்று கிட்னி வியாபாரம் 
* தென்காசி கேரள கனிமவள லாரி பஸ் மீது மோதி 4 மரணம்
* மாஞ்சோலை தொழிலாளர்கள் 99 ஆண்டு ஒப்பந்தம் முடிந்து காலி செய்தனர்
* கோவை திமுக முப்பெரும் மாநாடு நடந்த அன்று நள்ளிரவில் பயங்கர கும்பல் வழிப்பறி 
* காக்கி உடையில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு காஞ்சிபுரம்
* கிருஷ்ணகிரி எம்.பி தெலுங்கில் பதவி ஏற்பு
* எம்.பி 40 ல் 8 தமிழ்குடி இல்லை
* கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் 59 பலி
* 2023 மரக்காணம் கள்ள சாராயம் 18 பலி
* கள்ளசாராயம் குடித்து செத்தால் 10 லட்சம்
* கள்ளசாராய தண்டனை குற்றவாளிகள் திருந்த 50,000 என அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு 
* புதுச்சேரி லிருந்து மெத்தனால் வந்ததாக காட்ட போலீசே கேன் கொண்டு சென்றது அம்பலம் 
* போலீஸ் ரைட்டர் பெரிய துரை கொலை 
* சேலம் அதிமுக சண்முகம் திமுக சதீஷால் கொலை 
* கூடங்குளம் நேபாளிகளுக்கு வேலை
* பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை
* உடலை கட்சி அலுவலக இடத்தில் புதைக்க அனுமதி மறுப்பு 
* விக்ரவாண்டி அபிநயா மீது கல் வீச்சு
* பென்சன் வழங்க உயர் நீதிம உத்தரவிட்டும் உச்ச நீதிம சென்றதால் தமிழக அரசுக்கு 5 லட்சம் அபராதம்
* சாட்டை குற்றாலம் கைது அன்றே நீதிபதி விடுவிப்பு
*  மீனாட்சி மிஷன் உள்ளே பெண் ஊழியர் கொலை
* சென்னை பாடி சாலை பள்ளம் உயிரிழப்பு ஹேம மாலினி
* நாதக மதுரை பொறுப்பாளர் பாலசு வெட்டிக் கொலை
* மதுரை கச்சிராயன்பட்டி தம்பதி கொலை
* டோர் டெலிவரி மது விற்பனை அனுமதி
* 6ம் வகுப்பு சமூக அறிவியலில் ராமாயணம் மகாபாரதம்
* மின் கட்டணம் மீண்டும் உயர்வு
* நாதக ஆடியோ ஏஐ 
* சென்னை mgr நகர் மூதாட்டி வெட்டி நகை கொள்ளை உடல் துண்டுதுண்டாக சாக்குமூட்டை
* தர்மபுரி காதல் இசுலாமியர் படுகொலை
* அருங்காட்சிய காப்பாளர் பணியிடம் தகுதி சமஸ்கிருதம் 
*நாமக்கல் போக்சோ முயற்சி குழந்தை உட்பட 4 பேருக்கு கத்திக்குத்து
* ஒரு மாத இடைவெளியில் பள்ளிக்கரணை பிரவீன், சிவகாசி கார்த்திக் பாண்டி, இலக்கியம்பட்டி ஆஷிக், ஆணவக்கொலை 
* தொழில் வரி உயர்வு
* ஸ்ரீரங்கம் அரசுப்பள்ளி சாதிய மோதல்
* பட்டியல்சாதி scsp நிதி மகளிர் தொகைக்கு செலவு
* கொள்ளிடம் தடுப்பணை இரண்டு மாதத்தில் உடைந்தது
* ரியல் எஸ்டேட் நோக்கில் ராசிபுரம் புதிய பேருந்துநிலையம் ஊரிலிருந்து 8 கி.மீ ஆளரவமற்ற இடத்தில் கட்ட திட்டம்
* அண்ணா பல்கலை கீழ் 2500 'இல்லாத பேராசிரியர்களுக்கு' சம்பளம்
* எடப்பாடி காவல்நிலையம் பெட்ரோல் குண்டு வீச்சு
* நெல்லை பேருந்துநிலையம் வ.உ.சி பெயர் இல்லை பெரியார் பெயர்
* சவுக்கு மீது குண்டர் நீதிமன்றம் கண்டித்து ரத்து 
* சிறையில் சவுக்கு கை உடைப்பு
* திருச்சி விமான நிலையம் சமஸ்கிருத கல்வெட்டு
* ஆம்ஸ்ட்ராங் வழக்கு சிபிஐ கோரி போராடிய மனைவி குழந்தை மீது வழக்கு 
* தமிழ் புதல்வன் 1000 ரூ வழங்கி அடுத்த நாளே பாட புத்தக விலை உயர்வு
* ட்வீட் போட்ட இருவர் மீது வருண்குமார் ips புகார் கைது அடி உதை
* சவுக்கு மீது மீண்டும் குண்டர்
* திருவள்ளூர் காய்கறி மார்க்கெட் பட்டப்பகலில் பெண் எரித்து கொலை
* கள்ளக்குறிச்சி சஸ்பென்ட் sp உடனடியாக மீண்டும் பணியில் நீதிம கேள்வி
* குமரி வில்லுக்குறி கனிமவள லாரி இளம்பெண் பலி
* திண்டிவனம் திமுக பிரமுகர் 12 வகுப்பு மாணவனை கத்திகுத்து
* ஒரத்தநாடு உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் கஞ்சாவில் பெண் கூட்டு பாலியல் தாக்குதல்
* கருணாநிதி நாணயம் பாஜக அழைத்து விழா
* கிருஷ்ணகிரி கிங்ஸ்லி 13 பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவு
* மதுரை அகதி முகாம் சுவர் விழுந்து சிறுமி பலியான வழக்கு இழப்பீடு தரமுடியாது என்று மேல்முறையீடுக்கு நீதிமன்றம் அபராதம்
* பள்ளி தேர்வு கட்டணம் உயர்வு
* 3வது முறையாக முதலீடு ஈர்க்க முதல்வர் அமெரிக்கா பயணம் 
* சுசீந்திரம் எஸ்ஐ அரிவாள் வெட்டு ரவுடி செல்வம்
* சென்னை முக்கிய சாலை கார் ரேஸ் 
* சென்னை ஓடும் ரயிலில் இருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் கொடுமை
* தமிழக அரசு பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு
* திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் 908 கோடி அபராதம் 89 கோடி சொத்து பறிமுதல்
* அருப்புகோட்டை டிரைவர் கொலை பெண் டிஎஸ்பி மீது குற்றவாளிகள் தாக்குதல் 
* திருச்சி மாணவி காதலன் மற்றும் 4 பேர் பாலியல் கொடுமை மகேஸ் பொய்யாமொழி டிரைவர்
* விஜயமங்கலம் டோல்கேட் அரசு பஸ் பிடித்துவைப்பு
* ஒரே நாளில் 6 கொலைகள் 
* தூத்துக்குடி எஸ்ஐ வாள் வெட்டு
* அண்ணா நகர் போக்சா வழக்கு கொடுக்க வந்த பெற்றோர் மீது பெண் இன்ஸ்பெக்டர் தாக்குதல்
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் கண்ணன் பதவி உயர்வு
* கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம் திட்டம்
* மீனவர்களுக்கு இலங்கை கடற்படை மொட்டை
* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சீசிங் ராஹா கைதான மறுநாளே என்கவுன்டர்
* லிப்ஸ்டிக் போட்டதால் மேயர் பிரியா பெண் டவாலியை இடமாற்றம் 
* டிஜிபி டேவிட்சன் பாஸ்போர்ட் ஊழல் வழக்கு போட்ட பத்திரிக்கையாளர்  வாராகி கைது
* சவுக்கு இரண்டாவது முறை குண்டாஸ் காரணம் சொல்லமுடியாமல் வாபஸ்
* சென்னை மாநகராட்சி பள்ளத்தில் விழுந்த நபர் மரணம்
* தஞ்சை பெரியபோவில் 20 மீட்டரில் தேசிய நெடுஞ்சாலை அனுமதி
* மெரினா விமான சாகசம் நிகழ்ச்சி 5பேர் பலி
* 56 இடங்களில் rss அணிவகுப்பு
* சாம்சங் ஊழியர் போராட்டம் நள்ளிரவு கைது
* மாணவர் ரூட் தல மோதல் பச்சையப்பன் மாணவர் உயிரிழப்பு
* ஆசிரியர் சம்பளம் நிறுத்தம் மத்திய நிதி வரவில்லை என தகவல்
* மோசமான சாலை வழுக்கி இளம்பெண் தலை நசுங்கி சாவு பூசணி வைத்து இறுதி சடங்கு
* தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் மரணம் rti
* முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு கேரளா இடைஞ்சல் எதிர்வினை இல்லை
* கொலை வழக்கில் 1.5லட்சம் லஞ்சம் மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் சஸ்பென்ட்
* ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து தவறு அறிக்கை மோதல்
* கண்மாய் பராமரிப்பு இல்லாமல் உடைந்து மதுரை வெள்ளம்
* திமுக கள்ளக்காதல் ஜோடி போதையில் அடாவடி
* சென்னை அடுக்குமாடி தம்பதி வேலைக்கார தலித் சிறுமி அடித்து கொலை
* தமிழ்நாடு மகளிர் உதவி எண் வேலை இந்தி கட்டாயம்
* கடலூர் வாகன தணிக்கை 2 போலீசுக்கு கத்திக்குத்து
* அரசு மருத்துவமனையில் 5000 காலியிடங்கள் நிரப்பப்படாமல் 
* அருந்ததி உள் இடவொதுக்கீடு எதிர்த்து புதிய தமிழகம் போராட்டம் 700 பேர் கைது
* நர்ஸ் பணியிடங்கள் முறைகேடாக விற்பனை அனைத்து செவிலியர் சங்கம் புகார்
* திருச்செந்தூர் சல்மா பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து ஆசிரியர், ஆசிரியை கைது
* மாமூல் தர மறுத்த பெண் கொலை பர்மா சேகர்
* சென்னை மீனாட்சி மகளிர் கல்லூரி மத நிகழ்வு வர கட்டாயம்
* கட்டிய 3 மாதத்தில் முன்னனூர் மங்கலம் அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
* கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு அரிவாள் வெட்டு 
* நில அளவைக்கு மத்திய நிதி இருந்தும் மீணவ மாணவிகளை பயன்படுத்தல்
* ஆன்லைன் மது விற்பனை
* கையகப்படுத்த வசதியாக நில ஒருங்கிணைப்பு சட்டம்
* விமானநிலைய விரிவாக்கம் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு 1000 போலீஸ் குவிப்பு
* பரந்தூர் திட்டத்துக்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்றிய ஏகனாபுரம் ஊராட்சி துணைத்தலைவர் தற்கொலை
* அரிட்டாபட்டி அருகே டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவுக்கு அனுமதி 
* டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு அறிவித்து கபட நாடகம்
* ஒரே ஆண்டில் 1900 கோடி மதிப்புள்ள அரிசி போக்குவரத்தின் போது சிந்தி வீணானதாக கணக்கு காட்டல்
* தஞ்சை ஆசிரியை ரமணி கொலை
* ஸ்டாலின் அதானி ரகசிய சந்திப்பு
* ஓசூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் வெட்டி கொலை
* திருவாரூர் சுகாதார நிலையம் மா.சு திறப்பு வாடகைக்கு கட்டில் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு பிறகு அகற்றம்
* பல்லடம் மூவர் கொலை 
* அதானி மத்திய மின்துறை ஒப்பந்தம் அதானி லஞ்சம் என அமெரிக்கா குற்றச்சாட்டு
* தொழிலதிபரை கடத்தி நில அபகரிப்பு திமுக கவுன்சிலர் விலமா 
* செங்கம் அருகே கட்டி 5 மாதங்களே ஆன மேம்பாலம் வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்டது
* டிரான்ஸ்போர்மர் வாங்குவதில் 400 கோடி ஊழல்
* ரேசன் பொருட்களில் கிறிஸ்டி நிறுவனம் 2028 கோடி ஊழல் 
* உதயநிதி உதயநாள் என்று 182 கூட்டங்கள் ஏற்பாடு 
* தென்காசி ரயில் நிலையம் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
* 11லட்சம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட ஜஹாங்கிர் பாட்ஷா நடவடிக்கை எடுக்கப்படாமல் இரண்டே வாரத்தில் நெல்லை நகராட்சி பதவி நியமனம்
* தஞ்சாவூர் மேயர் மனைவி பெயரில் மாநகராட்சி நிலம் மாற்றம்
* "முதலமைச்சர் கோப்பை" போட்டி "பயணப்படி" கொடுக்கப்படாமல் விளையாட்டு வீரர்களை ஏமாற்றல்
* காஞ்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் வசதிகள் இல்லாமல் சாக்கடை அருகே தூங்கிய விளையாட்டு வீரர்கள் 
* மதுரை சிறை தயாரிப்பு பொருட்களில் ஊழல் 3 சிறையதிகாரிகள் மீது வழக்கு
* கடலூர் நிவாரணம் கேட்டு போராடிய பெண்கள் கைது 
* சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உரையின்போது நேரலை துண்டிப்பு
* முல்லைப்பெரியாறு பராமரிப்பு லாரிகள் நிறுத்தம் போராடிய 21 பேர் மீது குமுளி போலீசார் வழக்கு
* முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்ற எல்.முருகன் மீது முரசொலி ட்ரஸ்ட் கிரிமினல் வழக்கு 
* காலை உணவு திட்டம் பலனளிப்பதாக திட்டக்குழு தலைவராக தனக்குத் தானே ஸ்டாலின் புகழ்ச்சி 
* கோவில்பட்டி சிறுவன் பாலியல் துன்புறுத்தி கொலை 
* சென்னை எஸ்.ஐ உதவியுடன் 20 லட்சம் கொண்டுசென்றவரை மடக்கி பறித்த வருமானவரித் துறை அதிகாரிகள் மீது வழிப்பறி வழக்கு
* போதைப்பொருள் விற்ற வடபழனி போலீசார் கைது
* காஞ்சிபுரம் தமிழில் பெயர்ப்பலகை வைக்க போராடிய மூவர் கைது 
* நெல்லை நீதிமன்றம் போலீஸ் பாதுகாப்புடன் வந்தவர் வெட்டிக் கொலை
* ஆந்திரா, கர்நாடகா போக்குவரத்து துறையை விட தமிழக போக்குவரத்து துறை 3 மடங்கு அதிக நட்டம் என கணக்கு காட்டல் 
* அரசுப் பள்ளிகள் இணைய கட்டணம் பல கோடி bsnl க்கு பாக்கி
* தவறாக நடக்க முயன்ற மதுரை ஜெயிலரை செருப்பால் அடித்த பெண் மீது வழக்கு
* அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு
* ஒரே நாளில் ஜாபர் சாதிக், செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.பாரதி வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலகல்
 *மலையடிப்பட்டி பெண்போலீசிடம் தவறாக நடந்த சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆயுதப்படைக்கு மாற்றம்
* குறிஞ்சிப்பாடி கடற்கரையில் மாணவிகளை சூழ்ந்து தொல்லை கொடுத்த கஞ்சா இளைஞர்கள்
* சிவகிரி போலீஸ் பிரபாகரன் கனிமவள கொள்ளைக்கு ஒத்துழைக்க மறுத்து ராஜினாமா
* அண்ணாநகர் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கு சிபிஐ க்கு மாற்ற தமிழக அரசு எதிர்ப்பு அதனால் சிறப்பு அமர்வுக்கு உத்தரவு 
* ஸ்டாலின் போஸ்டர் மீது மூதாட்டி செருப்பு வீடியோ எடுத்த வாலிபர் கைது
* தமிழகம் மின் கட்டண உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம்
* மேட்டூர் வந்த உ.பி பஸ் சோதனை செய்த 2 போலீசாரை வடவர் தாக்குதல் திருப்பித் தாக்கிய போலீசார் சஸ்பென்ட்
* மீண்டும் கேரளா கழிவுகள் படப்பச்சையில் தட்டிக் கேட்ட இளைஞர் தாக்குதல்
* அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை
* அண்ணா பல்கலை சம்பவம் அரசை விமர்சித்த வேலூர் தலைமைக் காவலர் அன்பரசன் சஸ்பென்ட்
* அண்ணா பல்கலை மாணவி க்கு எதிராகவே FIR நீதிபதி சாடல்
* அண்ணா பல்கலை மாணவி தனிப்பட்ட விபரங்கள் கசிவு 
* மதுரை இல் லாட்டரி விற்ற போலீஸ் பாலாஜி கைது
* சிறுமி பாலியல் கொடுமை செய்த திமுக முன்னாள் பெரம்பலூர் எம்எல்ஏ ராஜ்குமார் சிறை தண்டனை
* முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பு காவல்துறைக்கு நீதிபதி கண்டனம்
* டங்ஸ்டன் எதிர்த்து மதுரை தமுக்கம் ஒரு லட்சம் பேர் தடை மீறி பேரணி இதற்கு 5000 பேர் மீது வழக்கு 
* உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாமல் சிறப்பு நியமனம் அடிப்படையில் நிர்வாகம்
* சேலம் மாநகராட்சி பெரியார் தெரு மக்களிடமே வசூல் செய்து சாலை அமைத்த மேயர் 
* ரேசன் பொங்கல் 103 ரூ தொகுப்பு
* தேர்தலின் போது பொங்கல் பணம் வழங்குவோம் என துரைமுருகன் சர்ச்சை
* விழுப்புரம் பள்ளி மாணவி மர்ம மரணம் 
* தேனி காவல்நிலையத்தில் புகுந்து பறிமுதல் கஞ்சா திருட்டு 
* மயிலாப்பூர் தம்பதி 6 பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் 
* டிரான்ஸ்பார்மர் 397 கோடி ஊழல் அறப்போர் இயக்கம் வழக்கு
* ஜல்லிக்கட்டு மேடையில் இன்பநிதி அமர மதுரை ஆட்சியர், ஜல்லிக்கட்டு வழக்கு நடத்திய பி.ராஜசேகர் ஆகியோர் நிற்கவைத்தல்
* கனிமவள கொள்ளை தடுப்பு போராளி திருமயம் ஜகுபர் அலி லாரி ஏற்றி கொலை
* கள்ளக்குறிச்சி கலெக்டர் பங்களாவை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர்
* ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிப்பு
* எம்.பி கதிர் ஆனந்த் கல்லூரி 13.7 கோடி பறிமுதல்
* பொய்யா வயல் பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி பலி
* பஞ்சாபில் தமிழக வீரர்கள் மீது பீகாரிகள் தாக்குதல் எதிர்வினை இல்லை 
* பெரம்பூர் காதலித்து ஏமாற்றி மூன்று பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை 
* ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் கனிமவளம் கர்நாடகா செல்கிறது - மணல் லாரி உரிமையாளர் சங்கம் தலைவர் யுவராஜ் பத்திரிகை சந்திப்பு
* கடற்கரை சாலையில் இரவில் பெண்களை துரத்திய திமுக கார்
* அண்ணா பல்கலை மாணவி வழக்கு விசாரணை அதிகாரி விலகல்
* குண்டேரிபள்ளம் அணை அருகே நிலம் வாங்கி குடிநீர் உறிஞ்சல் KNநேரு எதிராக 300 மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கும் போராட்டம் 
* வேலூர் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் பாலியல் தொல்லை செய்து கீழ தள்ளிவிட்ட 2பேர் 
* திருவாரூர் பழங்குடி சான்றிதழ் கோரி 500+ பள்ளி மாணவர்கள் போராட்டம்
* ஸ்ரீமதி தாய் உறவினர் பள்ளியை தாக்கியதாக வழக்கு
* நடிகர் கஞ்சா கருப்பு குற்றச்சாட்டுக்கு மிரட்டும் வகையில் அமைச்சர் மா.சு எச்சரிக்கை
* மானாமதுரை புல்லட் ஓட்டுவாயா என தலித் இளைஞர் கைகள் வெட்டு
* நெல்லை தலித் பொறியியல் மாணவர் விக்னேஷ் மர்மசாவு எறும்பு கடித்ததாக போலீஸ் நக்கல்
* பழவந்தாங்கல் ரயில்நிலையம் பெண் காவலர் பாலியல் சீண்டல்
* 2 ஆண்டுகளாக மலைவாழ் மாணவர் ஸ்காலர்சிப் கிடைக்கவில்லை
* கோவை 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 7 கல்லூரி மாணவர்கள்
* திருப்பூர் ஒரிசா பெண் 3 பீகாரிகளால் பாலியல் வன்கொடுமை
* தென்மாவட்ட தாதுமணல் கொள்றை அபராதமே 5200 கோடி 
* பல்லடம் கொலையில் குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி குறவர் சமூகத்தினர் கலெக்டர் புகார் 
* முகநூல் பதிவு போட்டவர் தனிப்படை பெங்களூர் சென்று கைது
* கரூர் 12வகுப்பு மாணவன்  10வகுப்பு மாணவி கழுத்தை அறுப்பு
* சீமான் வீட்டு காவலர் மீது தாக்குதல் 
* சீர்காழி 4வயது குழந்தை பாலியல் கொலை குற்றவாளி மீது எச்சில் துப்பியது தவறு என்று ஆட்சியர் பேச்சு
* சென்னையில் ஒரு கழிவறை கழுவ 363ரூ கணக்கு எழுதி 430 கோடி கொள்ளை
* திண்டிவனம் நீட் பயத்தால் மாணவி இந்துமதி தற்கொலை
* மதுரை காமராசர் பல்கலை பேராசிரியர் 3 மாத சம்பள பாக்கி 
* கரூர் கல்லூரி வாசலில் பட்டபகலில் மாணவி கடத்தல்
* திருவாரூர் ராமாபுரம் தந்தையால் விற்கப்பட்ட 2 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல்துறை
* ஸ்ரீவைகுண்டம் 11வகுப்பு மாணவனுக்கு வெட்டு
* திருவள்ளூர் ஆட்டோ மீது சரிந்துவிழுந்த உதயநிதி கட்அவுட்
* பொன்முடி மீது சேறு வீசிய பெண் விஜயராணி ஓராண்டு கழித்து கைது
* தான் ஊழல் குற்றம்சாட்டிய கிறிஸ்டி நிறுவனத்துக்கே மீண்டும் அரசு ஒப்பந்தம்
* 1000கோடி டாஸ்மாக் ஊழல்
* உயர் ரக க்ரீன் கஞ்சா பயன்படுத்தி ராஜீவ்காந்தி மருத்துவமனை டாக்டர் உட்பட 4 பேர்
* பேரூர் லஞ்சம் வாங்கிய vao குளத்தில் குதித்து ஓட்டம் 
* போதைப்பொருள் கடத்திய ராமநாதபுரம் திமுக நிர்வாகி செய்யது இப்ராகிம் உட்பட 3பேர் கைது 1.47 கோடி சொத்து முடக்கம்
* சட்டப்பேரவை நடக்கவேண்டிய நாட்கள் 70% குறைவாக நடந்துள்ளது
* மேலப்பாளையம் வக்பு வாரிய நில ஆக்கிரமிப்புக்கு எதிராக வழக்கு போட்ட முன்னாள் எஸ்.ஐ ஜாகிர் உசேன் வெட்டிக்கொலை உயிருக்கு ஆபத்து என ஏற்கனவே புகாரளித்திருந்தார்
* கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் தொடர்ந்து விடப்படும் தெருநாய்கள்
* தமிழகம் முழுக்க குழந்தைகளை தெருநாய் கடிப்பது அதிகரிப்பு சென்னையில் 1.8 லட்சம் தெருநாய்கள் ஊசி போட 3கோடி ஒதுக்கீடு
* மதுரை சீருடையுடன் போலீஸ் மலையரசன் எரிந்த உடல்
* ஈரோடு நசியனூர் தம்பதிக்கு அரிவாள் வெட்டு
* கடலூர் கடப்பாரையுடன் வீட்டு வரி வசூலிப்பு
* சவுக்கு சங்கர் வீடு காங்கிரசால் சூறை கழிவுகளை கொட்டி 3 மணிநேரம் ரகளை காவல்துறை அமைதி
* தரமணி தர்மாம்பாள் பாலிடெக்னிக் மாணவி 7 பேரால் பாலியல் வன்கொடுமை
* உசிலம்பட்டி கஞ்சா வியாபாரியை கண்டித்த போலீஸ் முத்துக்குமார் கொலை
* நேர்மையான பெண் அதிகாரி திருநெல்வேலி யில் இருந்து சிவகாசி மாற்றப்பட்டு பின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
* சமோசா வியாபாரி மகள் தேவதர்ஷினி நீட் பயத்தால் தற்கொலை
* சங்கரன்கோவில் தலித் மாணவிகள் பாலியல் தொல்லை தலித் மாணவன் மீது ஆசிரியர் கருத்த பாண்டியன் தாக்குதல் இந்த பள்ளியில் ஏற்கனவே டேவிட் மைக்கேல் என்பவரும் இவ்வாறு கைதாயுள்ளார்
* சென்னை சைதாப்பேட்டை மயிலாப்பூர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் விடுதி உணவு மிக மோசமாக உள்ளதால் வீணாகி பன்றி பண்ணைக்கு விற்பனை
* செய்யாறு போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை
* பல்லடம் மாணவி வித்யா அண்ணனால் ஆணவக்கொலை, படிக்கச் சொல்லி தாக்கியதில் இறந்ததாக போலீஸ் விளக்கம் 
* 10 நாட்களில் 3 என்கவுண்டர்
* திருச்சி மாநகராட்சி பேனா பென்சில் வாங்க 15லட்சம் செலவு என கணக்கு
* பட்டினம்பாக்கம் 7 வீடுகளில் தொடர்திருட்டு
* போலீஸ் அழைத்துச் சென்ற அண்ணனை காப்பாற்ற காவல் நிலையம் முன்பு இளம் பெண் தற்கொலை
* செந்தில் பாலாஜி தம்பி ஒன்றரை ஆண்டுகள் தலைமறைவு 
* தாம்பரம் தெருநாய் கடித்த சிறுவன் பலி
* பாளையங்கோட்டை பள்ளி சிறுவன் சக மாணவனை அரிவாளால் வெட்டு
* தமிழகம் வரவிருந்த 1800 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் குஜராத் அருகே பிடிப்பு
* மெரீனா செல்ல 30ரூ கட்டணம்
* பொன்முடி சைவம் வைணவத்தை விபச்சாரத்துடன் ஒப்பிட்டு பேச்சு
* நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் அவரையே குற்றவாளி என்று பரப்புதல்
* தூத்துக்குடி வாலிபரை 6 சிறுவர்கள் வெட்டி கொலை 
* கோவை கழிவறைக்கு கக்கன் பெயர்
* தகவல் தொழில்நுட்ப துறை நிதி இல்லாமல் செயல்படுவது இல்லை என்று ptr பேச்சு
* கடவாக்குறிச்சி மலை அழிப்பு 200 கோடி இழப்பு விகடன்
* sc/st நிதி ஒதுக்கீடு சதவீதம் மிக குறைவு 
* நான் முதல்வன் திட்டம் மூலம் சாதனை புரிந்த சிவசந்திரன் பணக்கார பின்னணி அம்பலம்
* சபரீசன் 'வானம்' நிறுவனம் தொடங்கிய பிறகு தமிழக அரசு விண்வெளி கொள்கை வகுப்பு 
* கள்ளச்சாராயம் சிறை சென்றவர்களுக்கு 50,000 மறுவாழ்வு நிதி செந்தில் பாலாஜி அறிவிப்பு 
 * திசையன்விளை கள்ளக் காதலுக்கு இடையூறு செய்த குழந்தை மது கொடுத்து கொலை
* ex MLA ஓய்வூதியம் மாதம் 30k லிருந்து 35k 
* ஈரோடு சிவகிரி முதிய தம்பதி கொலை கொள்ளை 
* சகாயம் ias தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிக்கை 
* கோத்தகிரி குடிநீர் தொட்டியில் யானை கழிவு
* பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் phd முடித்து வேலைக்கு தகுதிபெற்ற 132 பேரிடம் 70லட்சம் லஞ்சம் கேட்டதாக வழக்கு நீதிமன்றம் கண்டித்த பிறகும் பணியில் சேர்க்காமல் ஆறு மாதம் இழுத்தடித்து மீண்டும் வழக்கு
* அண்ணா நகர் 10 வயது குழந்தை பா.வன்புணர்வு புகார் எடுக்க மறுத்து தாய் தந்தையை நிர்வாணமாக்கி அடித்த பெண் போலீஸ்.
தன்னிச்சையாக சிபிஐ க்கு மாற்றிய நீதிமன்றம். எதிர்த்து முறையீடு செய்த தமிழக அரசு.
* குழித்துறை அரசு மருத்துவமனையில் சடலத்தை பிணவறைக்கு கொண்டு செல்ல ரூ.1500 லஞ்சம்
* பணகுடி மூதாட்டி கூட்டு வன்புணர்வு 
* முதிய தம்பதி வடயிந்தியரால் அடித்து கொலை 
* பொள்ளாச்சி போதையில் அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் போலீசில் ஒப்படைப்பு
* தூத்துக்குடி குடிபோதையில் வேலைக்கு வந்த அரசு மருத்துவர் 
* கொங்கு மண்டலத்தில்  தொடர்ச்சியாக 6 தோப்பு வீடு இரட்டை கொலைகள் 
* மதுரை துப்பக்குண்டு தமிழாசிரியர் இல்லாததால் 9 மாணவர்கள் தமிழில் தோல்வி மற்றபடி 100% தேர்ச்சி
* தன்னை திருமணம் செய்து கட்சி பிரமுகர்களுக்கு விருந்தாக்குவதாக அரக்கோணம் திமுக இளைஞரணி தெய்வசெயல் மீது பெண் புகார்
* தனியாரில் படிக்கும் அரசு பொறுப்பேற்ற மாணவர்களுக்கு கட்டணம் கட்டவில்லை
* கவுண்ட நாயக்கம் பாளையம் குடிநீர் தொட்டியில் மலம் 
* கடலூர் சிப்காட் கழிவுநீர் வீடுகளுக்கு மத்தியில் 
* சென்னை டைடல் பார்க் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு கார் உள்ளே விழுந்தது
* நெல்லை ஜங்சன் ஸ்மார்ட் பேருந்து நிலையம் அமைத்த போது தோண்ட பட்ட மண் கேரளாவுக்கு கடத்தல் மேல்முறையீட்டை மீறி சிபிசிஐடி விசாரணைக்கு போனது 
* அனகாபுத்தூர் குடியிருப்பு ஆக்கிரமிப்பு என அகற்றம் 
* அரசு பேருந்துகளில் தமிழ்நாடு சொல் நீக்கம்
* பசுமைக்காடுகள் திட்டத்தில் 40லட்சம் பனைமரம் நட்டதாக அறிவித்தது பொய் rti மூலம் அம்பலம் 
* அவிநாசி அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கைது 
* தீவிபத்தில் பாதிப்பட்டவருக்கு உதவச் சென்ற தவெக பெண் மீது காவல்துறை தாக்குதல் 
*இடியும் நிலையில் புதிய பள்ளிப்பாளையம் மேம்பாலம் முதல்வர் திறக்காமல் ரத்து 
* ராணிப்பேட்டை காதலை ஏற்காத 15 வயது மாணவி வீடுபுகுந்து கொலை 
* மகுடஞ்சாவடி குடித்ததை தட்டிக்கேட்ட முதலாளி கொலை 5 பீகாரிகள் 
* சென்னை பல்கலை ஊழியர்கள் சம்பளம் வராததால் போராட்டம்
* ராணிப்பேட்டை 80 வயது மூதாட்டி பாலியல் கொலை 19 வயது இளைஞர் போதையில்
* rte ரத்து இனி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு கட்டணம் இல்லை
* தமிழரல்லாத மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் எழுத விலக்கு
* காஞ்சிபுரம் 11 வகுப்பு மாணவிக்கு 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை
* கீழடி பழமை சான்றுகளை சரியாக முன்வைக்க முடியாமல் தமிழக தொல்லியல் துறை திணறல்
* கமல்ஹாசன் க்கு எம்.பி பதவி
* சோளிங்கர் பாமக நிர்வாகி இருவரால் சுட்டுக்கொலை 
* ஆமத்தூர் பெண்காவலரை வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த எஸ்ஐ பணியிடமாற்றம்
* rss முருகன் மாநாடு அனுமதி 
* காதல் திருமணத்தைப் பிரிக்க கட்டபஞ்சாயத்து செய்த ஏடிஜிபி, எம்.எல்.ஏ ஜெகன் மூர்த்தி 
* 1500 மின் பேருந்து திறப்புவிழா நடந்தும் ஓடவில்லை சார்ஜ் வசதி இல்லை
* முசிறி மணல்கடத்தலை தடிக்க முயன்ற rdo தேவசேனா விபத்தில் மரணம்
 இதேபோல  விராலிமலை தாசில்தார் மரசம் நடந்தது
* தென்காசி ரேசன் கடை வேலைக்கு பத்து லட்சம் பேரம்
* போதைப்பொருள் புழக்கம் ஸ்ரீகாந்த் கைது
* கருணாநிதி பிறந்த நாளில் விருது வழங்கப்பட்ட எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு பிறகு ரத்து நீதிபதி கண்டனம்
* திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் கொலை புகாரே பதியாமல் அடித்தே கொலை விசாரணையில் கொலை 
* டாஸ்மாக்கில் பிரெஞ்ச் க்ரேப் பிராந்தி அறிமுகப்படுத்தி எப்படி குடிப்பது என்று பயிற்சி 
* வேடசந்தூர் குடிநீர் தொட்டியில் மலம்
* கோவை ரிதன்யா வரதட்சணை தற்கொலை
* நுங்கம்பாக்கம் 8 வயது சிறுமிக்கு ஊசி செலுத்தி பாலியல் கொடுமை செய்ய முயன்ற போலீஸ் எஸ்ஐ ராஜூ கைது
* ஓசூர் 13 வயது சிறுவன் கல்லூரி காதல்ஜோடி யால் மது ஊற்றி பள்ளத்தில் தள்ளி கொலை 
* 139 தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய 20 கோடி செலவு 
* பொன்முடிக்கு எதிரான 121 புகார்கள் ரத்து செய்ய என்ன அதிகாரம் என போலீசுக்கு உயர் நீதிம கேள்வி
* ப வடிவ வகுப்பறை அமர்வு மக்கள் எதிர்ப்பால் கைவிடல்
* முதலமைச்சரே நேரடியாக கட்சி உறுப்பினர் சேர்க்கை 70 லட்சம் பேர் என அறிவிப்பு
* காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மர்ம நபர்கள்
* குரூப்4 தமிழ் குளறுபடி 
* கும்மிடிப்பூண்டி 8 வயது சிறுமியை தூக்கிச் செல்லும் cctv காட்சி 
* பள்ளிப்பாளையம் கிட்னி வியாபாரம் திமுக பிரமுகர்
* நீதிமன்ற உத்தரவின்படி கருணை அடிப்படையில் வேலை வழங்காமைக்கு நிபந்தனையற்ற  மன்னிப்பு கோரிய தலைமைச் செயலாளர் 
* sc,st நிதி 7833 கோடியை செலவளிக்காமல் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பல்
* எழும்பூர் எஸ்ஐ ராஜாராமன் ரவுடிகளால் தாக்கப்பட்டு மரணம்
* கவின் ஆணவக்கொலை பட்டியல் சாதியினர் வெறிச்செயல் 
* பாப்பாக்குடி 17 வயது பையனைச் சுட்ட காவல்துறை
* புழல் குழந்தை விற்பனை
* உடுமலைப்பேட்டை வனத்துறையால் பழங்குடியான மாரிமுத்து சிறைக்கொலை 
* தூத்துக்குடி கஞ்சா போதையில் பார்வையற்றவர் அருள்ராஜ் கொலை 
* தூத்துக்குடி கஞ்சா வியாபாரத்தை தட்டிக்கேட்ட அண்ணன் தம்பி கொலை
* சேரன்மகாதேவி 12 வகுப்பு மாணவனை 10th மாணவன் அரிவாளால் வெட்டி படுகாயம்
* கோவை கடைவீதி காவல்நிலையம் ராஜன் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை
* திருப்பூர் ரோந்து பணி எஸ்ஐ சண்முகவேல்  வெட்டி கொலை 
* வடபழனி குடிகார சைக்கோ மகன் முகிலை கொன்ற தாய் 
* தூய்மை பணி தனியார் மயம் ஆந்திர நிறுவனம் ராம்கி 
* தூய்மைப் பணியாளர் போராட்டம் நள்ளிரவில் மிரட்டுவது போல பேசிய சேகர்பாபு
* வேலூர் கதிர் ஆனந்த் கட்டிய 11 லட்சம் நிழற்குடை மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
* தும்பலம்பட்டி இளைஞரை கொன்றுவிட்டு தப்பிய வடவர்
* தூய்மை பணியாளர் போராட்டம் பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்று தேன்மொழி திமுக மகளிரணி வழக்கு
* தூய்மை பணியாளர் நள்ளிரவு வலுக்கட்டாயமாக அகற்றல்
* தேனாம்பேட்டை சைதாப்பேட்டை மேம்பாலம் ஒரு கிமீ க்கு 195 கோடி செலவு கணக்கு இது அறிவாலயம் ட்ராபிக் மட்டும் குறைக்கும் 
* மதுரை பொதுஇடம் இல்லாமல் மாநகராட்சி வளாகத்தில் போராடிய தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
* தஞ்சாவூர் 1538 டன் அரிசி கெட்டுப்போன நிலையில் சட்டசபை குழுவினர் ஆய்வில் தெரியவந்தது
* கம்மல் மூக்குத்தி போட்டவர்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடையாது kkssrr நக்கல்
* நீட் கட்டாயம் உத்தரவை எதிர்த்து மருத்துவ கவுன்சில் ரிட் மனுவை திரும்ப பெற்றது திமுக
* அறுந்து கிடந்த மின்சார ஒயர் தூய்மை பணியாள பெண்மணி மரணம்
* ராமநாதபுரம் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் எதிர்ப்புக்கு பிறகு திமுக உரிமத்தை ரத்து ஓஎன்ஜிசி 
* சினிக்கூத்து எழுத்தாளருக்கு பத்து லட்சம் முதலமைச்சர் நிதியுதவி 
* ரேசன் புடவைகள் பெருமளவு ஆந்திராவில் பண்டாரலங்கா ஊருக்கு கடத்தி விற்பனை 
* ஆக்ஸ்போர்டு கருத்தரங்கு வாடகைக்கு எடுத்து ஈவேரா படம் திறந்து பல்கலை மரியாதை என்று ஏமாற்று
* ஆவடி வடவர் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
* காரியாபட்டி எடப்பாடியார் கூட்டத்திற்குள் காரை விட்ட சிறுவன் திமுக நிர்வாகி மகன்
* தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட தலைவராக தவெக வின் ஆதவ் அர்ஜுன்  உதயநிதியால் தேர்வு 
* கருணாநிதிக்கு பாரத ரத்னா கோரி வழக்கு நீதிமன்றம் தள்ளுபடி 
* சென்னை மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த பெண் தீபா மரணம்
* போலீஸ் & பிரஸ் முன்பே ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்
* பஸ்சில் நகை திருடிய நரியம்பேட்டை திமுக ஊராட்சி தலைவி
* காஞ்சிபுரம் நீதிபதி கண்முன் தப்பி ஓடிய டிஎஸ்பி சங்கர் கணேஷ் சீருடையுடன் கைது 
* கிரஷர் அமைக்க 75ஆயிரம் லஞ்சம் மதுரை தாசில்தார் ராஜபாண்டி
* மதுரை கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை சிலை முன்னறிவிப்பின்றி அகற்றம் 
* மதுரை உ.வே.சா, சங்கரதாஸ் சுவாமிகள், தமிழன்னை சிலைகள் அகற்றப்போவதாக அரசு அறிவிப்பு
* எடப்பாடி கூட்டங்களில் நெரிசலுக்கு மத்தியில் பலமுறை போலி ஆம்புலன்ஸ் அனுப்பி இடைஞ்சல்
* கருகம்பாளையம் தன்னை சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொன்ற திமுக பேரூராட்சி தலைவர்
* ஆந்திரா பொதட்டூர் செம்மரம் வெட்டச் சென்றதாக 18 தமிழர்கள் கைது
* அரசு கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் என குற்றச்சாட்டு 
* இந்த 40ரூ விவசாயிகள் லோடு ஏற்ற விருப்ப பட்டு தருவதாக அமைச்சர் பூண்டி கலைவாணன் விளக்கம்
* தூத்துக்குடி 30 ஆயிரம் கோடி முதலீட்டில் வரவுள்ள இரண்டு நிறுவனங்களுமே மத்திய அரசின் நிறுவனங்கள் 
* பெரியகுடி, திருவாரூர், அன்னவாச நல்லூர் தமிழக அரசின் தடையை மீறி ஹைட்ரோகார்பன் பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு
* ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய மூவர் வேடிக்கை பார்த்த காவல்துறை
* தற்காப்புக்காக திருப்பி பேனா கத்தியால் தாக்கியதால் அவர் மீதே வழக்கு போட்டு கைது 
* சிங்களாந்தபுரம் கட்டி ஆறுமாதமே ஆன பள்ளி மேற்கூரை  பெயர்ந்து விழுந்தது 
* கள்ளழகர் கோவில் நிலம் 2.51 ஏக்கர் குத்தகை 26 ரூபாய்க்கு ஏலம் 
* வள்ளியூரில் கருணாநிதி சிலை வைக்க மனு நீதிம அபராதம் விதித்து தள்ளுபடி 
* திருவெறும்பூர் பாதாள சாக்கடை சுத்தம் செய்த 2 பணியாளர் உயிரிழப்பு 
* மலையாளி சாதிக்கு வரையரையை மீறி எப்படி st சான்றிதழ் வழங்கப்பட்டது நீதிம த.நா அரசுக்கு கேள்வி
* திருச்சி பாலியல் தொந்தரவு அண்ணா பல்கலை மாணவர் தற்கொலை மாணவர்கள் கைது
* கரூர் திமுக முப்பெரும் விழா பணம் கொடுத்து 20 இன்ஸ்டா பிரபலங்களை வீடியோ போடவைத்தல்
* முப்பெரும் விழா முடித்து வந்த திமுக வாகனம் மோதி கணவர் கர்ப்பிணி மனைவி பலி 
* மன்னார்குடி பேருந்துநிலையம் காமராசர் பெயர் நீக்கம், போராட்டத்திற்கு பிறகு மீண்டும் அமைத்தல்.
* டோணாவூர் உவாக்கர் அரசு பள்ளி மாணவர்கள் சாதி மோதல் அரிவாள் வெட்டு 
* வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு செல்வப்பெருந்தகை சாதிய புறக்கணிப்பு நடந்து வேதனை பேட்டி 
* கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று சினிமா பிரபலங்களை அழைத்துவந்து விழா 
* அவ்விழாவில் ஆந்திர முதல்வர் காலில் விழச்சொல்லி மாணவியை தள்ளிய ஸ்டாலின் 
* பாதுகாப்பு சரியாக திட்டமிடாமல் விஜய் கூட்டத்தில் நெரிசலில் 7 குழந்தைகள் உட்பட 40 பேர் பலி 
* நெல்லையப்பர் கோவில் ரதவீதி 15 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் கைவிடல்
* கரூர் விஜய் கூட்டம் குறுகலான இடம் ஒதுக்கி மக்கள் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் அனுப்பி நெரிசல் உண்டாக்கி 41 பேர் சாவு 
* கரூர் அவலத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று எழுதிவிட்டு தவெக நிர்வாகி தற்கொலை 
* திருவண்ணாமலை ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் 
* அவிநாசி பாலத்திற்கு ஜிடி நாயுடு என சாதிப்பெயர்
* தமிழக ஸ்ரீசன் நிறுவன இருமல் மருந்து குடித்து ம.பி யில் 17 குழந்தைகள் உயிரிழப்பு   தரகட்டுப்பாடு 14 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்படவில்லை 
தமிழக தரக்கட்டுப்பாடு 14 ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளவில்லை 
* உளந்தை திமுக முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ் 15 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை 
* தன் கார் முன் பைக் ஓட்டியவரை வழிவிடவில்லை என்று மோதி தள்ளி தொண்டர்களை அனுப்பி அடித்து விரட்டிய திருமா
* அவரை கைது செய்ய போராட்டமும் நடத்திய விசிக காணொளி சான்று இருந்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ்
* புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு பிடிக்க திணறும் போலீஸ்
* இன்பநிதியின் இட்லி கடை படத்திற்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற அமைச்சர் மா.சு
* ராமநாதபுரம் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு இரவோடு இரவாக கருணாநிதி பெயர்
*  உள்ளாட்சி தேர்தல் பற்றி பாராளுமன்றத்தில் பேசி அது மாநில அரசின் கீழ் உள்ளது என பதிலடி வாங்கிய கனிமொழி
* அரசு தரப்பு அலட்சியத்தால் குற்றம் நிரூபிக்க படாமல் தூக்குதண்டனை குற்றவாளி தஸ்வந்த் விடுதலை 
* தஸ்வந்த் கொன்ற 7வயது சிறுமி தந்தை வேறு மாநிலம் குடியேறப்போவதாக அறிவிப்பு
* விடூர் பொதுஇடத்தில் 4 பேரை வெட்டி கொன்று கொள்ளையடித்த கஞ்சா கும்பல் 
* பாக்ஸ்கான் 15,000 கோடி முதலீடு 14,000 வேலைவாய்ப்பு என்று அறிவிப்பு பொய் என்று இந்நிறுவனம் மறுப்பு -அன்புமணி
* தமிழகத்திற்கு வரவேண்டிய கூகுள் கிளை ஆந்திரா சென்றது. தமிழர்களுக்கு பின்புறம் எரிகிறது ஆந்திர மிளகாய் என்று ஆந்திர அமைச்சர் நக்கல்
* தஞ்சாவூர் நெல் கொள்முதல் நிலையங்களில் 20 நாட்களாக மழையில் கிடந்த நெல் எடப்பாடி ஆய்வு
* இதனால் 2026 நவ, அக்டோபரில் 20 லட்சம் டன் நெல் வீணானது 
* மயிலாடுதுறை மழைக்கு எரிமேடையில் அடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் 
* கோவை மேம்பால தூண்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல் முன்பு அதிக இடைவெளி விடப்பட்டதை திருத்தியமைக்க நீதிமன்றம் உத்தரவு
* கண்ணகி நகர் கார்த்திகா 5 லட்சம் (குகேஷ் 5 கோடி)
* ஆம்ஸ்ட்ராங் கொலை சிபிஐ விசாரணை நிறுத்த இரண்டாவது முறை தமிழக அரசு மனு
* நடிகை நிவா கவர்ச்சி படங்களை உதயநிதி ட்வீட்
* இன்பநிதி பல கோடி செலவில் இட்லிகடை திரைப்படம்
* நெல் கொஞ்சம் முளைத்தால் என்ன என்று விவசாயத்துறை அமைச்சர் mrk பன். பொறுப்பற்ற பதில்
* ecr சாலை கலைஞர் பெயர் வைக்க அறிவிப்பு 
* பிசானத்தூர் மருத்துவ கழிவு ஆலை அமைய மக்கள் எதிர்ப்பு
* வேலை வாங்கி தருவதாக கேஎன் நேரு 888 கோடி முறைகேடு அமலாக்கத்துறை குற்றச்சாட்ட
* சிவகங்கை சாலைகிராமம் அரசு பள்ளிக்கு பொதுமக்களே சம்பளம் கொடுத்து 3 ஆசிரியர்கள் நியமிப்பு
* டீன்ஏஜ் பெண்கள் கருத்தரிப்பு அதிகரிப்பு வேலூர் மாவட்டத்தில் மட்டும் 9 மாதங்களில் 415 பேர்.
* மக்களுடன் முதல்வர் முகாம் இல் பெறப்பட்ட வட்டாட்சியர் கையெழுத்துள்ள மனு சுண்டல் கடையில் 
* நலம் காக்கும் ஸ்டாலுன் தாம்பரம் ஒரு நாள் செலவு 4.51 லட்சம்
* கோவை விமானநிலையம் அருகே சட்டவிரோத பார் அங்கே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
*இந்தியாவிலேயே அசுத்தமான நகரம் முதலிடம் மதுரை மூன்றாமிடம் சென்னை
* கோயம்பேடு சாலையில் போவோர் வருவோரை வெட்டிய போதை கும்பல்
* மேம்பாலத்தில் பைக் ரேஸ் விட்டவர் வேறொருவர் மீது மோதி இருவரும் சாவு 
* 30 தமிழக ஆம்னி பஸ்கள் கேரள அரசால் சிறைபிடிப்பு பல லட்சம் அபராதம் பயணிகள் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டனர் ஆம்னி பஸ் சங்கம் வேலைநிறுத்தம்
* திண்டிவனம் 10 வகுப்பு மாணவியை பா.வன்கொடுமை செய்த காவலர் இளங்கோவன் 
* கேளிக்கை (சினிமா) வரி 8% லிருந்து 4% ஆக குறைப்பு 
* சென்னை பல்கலை தொல்லியல் துறை யில் 5 பேராசியர் இருக்கவேண்டிய இடத்தில் ஒரே ஒருவர் அவரும் அடுத்த ஆண்டு ஓய்வு
தொல்லியல் பட்டதாரிகளுக்கு அந்த அரசு ஆசிரியர் ஆகும் தகுதி நிராகரிப்பு
* மெரினா கடலில் இறங்கி போராடிய 83 தூய்மை பணியாளர்கள் கைது 
* திருச்சி காவலர் குடியிருப்புக்குள் கூலிப்படை கொலை 
* செங்கல்பட்டு காட்டுக்குள் ஊனமாஞ்சேரி வனப்பகுதியில் மர்ம பிரமாண்ட மேம்பாலம்
* கண்ணகி நகர் பெண் கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
* அரசு உதவி பல்கலை தனியார் மயமாக்கும் university bill 2025  
* உதயநிதி முன்னிலையில் மதுவை வளர்க்கும் அரசாங்கத்தை விமர்சித்த மாணவி  
* கொரிய நிறுவனம் hweseung தமிழகத்தில் தொழில் தொடங்கும் எண்ணத்தை மாற்றி ஆந்திரா சென்றது
* டேட்டில் ஆப் மூலம் இளம்பெண்ணை ஏமாற்றி நகை பறித்த கோவை டிஎஸ்பி மகன் 
* தர்மபுரி பாலக்கோடு கட்டிடம் இல்லாமல் கோவிலுக்குள் இயங்கும் அரசு பள்ளி 
* ராமேஸ்வரம் காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவியை குத்தி கொன்ற இளைஞர்
* ஊத்தங்கரை 2023 இல் சாதிமறுப்பு திருமணம் செய்த மகன் மற்றும் அவர்களை ஆதரித்த தன் தாய் இருவரையும் கொன்றவருக்கு ஆயுள் 
* civil liability nuclear damage act 2025 அணுவுலை வெடித்தால் பாதிப்படைவோருக்கு நிவாரணம் வழங்க இருக்கும் சட்டத்தில் திருத்தம்
* பெருநிறுவனங்களுக்கு சிறு தொகுப்பு அணுவுலைகள் கட்ட வேலைகள் ஆரம்பம்
* தஞ்சை போலி உரங்களை கண்டுபிடித்த வேளாண் அதிகாரி திடீர் ட்ராஸ்பர்
* திருக்கோவிலூர் பெண் blo ஊழியர் திமுக பிரமுகர் அழுத்தத்தால் மனமுடைந்து தற்கொலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
* வாழப்பாடி மனைவி கண்முன் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை
* தாமிரபரணி நீரை ஒரு பைசாவுக்கு வாங்கி 20ரூ க்கு விற்கும் நிறுவனங்கள் பற்றி நீதிமன்றம் கேள்வி
* பொன்முடி மகன் சொத்துகள் 300 கோடி முடக்கம்
* தோட்டக்கலை துறையில் டீ காபி பஸ் செலவு என 4 ஆண்டுகளுக்கு 75 கோடி முறைகேடு
* ஆரணி திமுக நிர்வாகி மகன் அரிவாளுடன் திருமணமான பெண்ணை மிரட்டி வண்டியில் ஏற்றும் சிசிடிவி 
* மனோ தங்கராஜ் தங்கை 100 கோடி சொத்து போலி ஆவணங்கள் மீது உயர்நீதிமன்றம் கேள்வி 
* விருகம்பாக்கம் புகார் கொடுக்க வந்த பெண் இன்ஜினியரை உல்லாசத்துக்கு அழைத்த உதவி கமிஷனர் 
* 2023 ஆண்டின் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகளில் தமிழகம் முதலிடம் என ncrb
* தென்காசி அரசு வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
* தென்காசி நெட்டூர் புறக்காவல் நிலையத்தில் புகுந்து ஏட்டுக்கு வெட்டு
* கும்பகோணம் பள்ளி மாணவர்கள் தாக்கி சக பள்ளி மாணவர் உயிரிழப்பு 
* ஆணவக்கொலை வழக்கில் அரசு மெத்தனம் ஆவண மொழிபெயர்ப்புக்கு ஆறுமாதம் அவகாசம் கோரல் கௌசல்யா சங்கர் விமர்சனம்
* நெல்லை பள்ளியில் மாணவிகள் மது குடித்து 6பேர் சஸ்பெண்ட்
* அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளி மீது குண்டாஸ் ரத்து 
* மயிலாப்பூர் பெண் தணிக்கையில் நின்ற போலீசை கடத்திய ஆட்டோ டிரைவர் பொதுமக்கள் மீட்டனர்
* கொண்டாபுரம் அரசுப் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் மோகித் உயிரிழப்பு
* திட்டக்குடி அரசு பஸ் டயர் வெடித்து விபத்து 9பேர் பலி
* பல மாநிலங்கள் நிராகரித்த 500 எலக்ட்ரிக் பஸ்கள் தமிழக அரசு ஏற்பு நிர்வாகம் முழுக்க தனியார் மயம்
* வட மாநில இளைஞர் சுராஜை கத்தியாரல் குத்தி ரீல்ஸ் போட்ட கஞ்சா சிறுவர்கள் 
* சேப்பாக்கம் எழிலகம் இடைநிலை ஆசிரியர் போராட்டம்
* கீரனூர் பஞ்சமி நில மீட்பு போராளி முத்துராஜ் இரு கைகளை வெட்டிய அமைச்சர் மூர்த்தி உறவினர்
* கொருக்குப்பேட்டை 2 வாலிபர்கள் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை 
* பணகுடி பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த மாணவரை வெட்டிய இளைஞர்
* கழுகுமலை காதலை ஏற்க மறுத்த இளம்பெண் உலகம்மாள் உமா வெட்டி கொலை 
* காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் பக்தர்கள் கொடையளித்த 312 சவரன் தங்கம் சிலைகளாக செய்யப்பட்டத்தில் தங்கமே இல்லை என்று ஆய்வு முடிவு 
* சட்டமன்றத்தில் வேலுமணி பற்றி அன்பழகன் பேசியதற்கு முதல்வர் மன்னிப்பு கோரல்
* இந்திய முதலீட்டில் ஆந்திரா முதலிடம் தமிழ்நாட்டின் பங்கு கடைசி இடத்தில் 
*சாலை போட  148 பெருங்கற்கால தொல்லியல் தளங்களை மத்திய அரசு கைவிட திமுக அமைச்சர் பாராளுமன்றத்தில் கோரிக்கை 
* மேலப்பாளையம் துப்பாக்கி விற்ற திமுக பிரமுகர் 
*சாத்தூர் அருகே போய்க்கொண்டிருந்த தீப்பிடித்து எரிந்துபோன அரசு பஸ் 
* வாலாஜாபேட்டை செங்காடு பகுதியில் அரிய வகை மண்ணான முரம்பு கொள்ளை 
* ஈவேரா பித்தலாட்டம் நூல் உள்ளரங்க கூட்டம் விதிமீறி காவல்துறையால் மிரட்டி ரத்து 
* பெரம்பலூர் போலீஸ் பாதுகாப்புடன் வந்த கைது மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு 2 போலீஸ் படுகாயம்
* குடியாத்தம் 75 வயது மூதாட்டியை சீரழித்த கஞ்சா இளைஞன்
* தரமணி பீகார் கணவன், மனைவி, குழந்தை கொலை பாலியல் வன்கொடுமை 
* நந்தனம் கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை
*திமுக mla பழனியாண்டி கல்குவாரி முறைகேடு நேரலை காட்டிய news 24x7 நிருபர் கடத்தல் படுகாயங்களுடன் மீட்பு அவர்கள் மீதே வழக்கு
* திண்டிவனம் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டு எதிர்ப்பினால் இந்திரா காந்தி என்றே மாற்றம்
* குரூப்2 ஹால் டிக்கெட் குளறுபடியால் கடைசி நேரத்தில் தேர்வுகள் ரத்து 
* நிதிச்சுமையில் உள்ள சென்னை பல்கலைக்கு சொந்தமான 4500 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு
* 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறையூர் திமுக வட்ட செயலாளர் காளை இரண்டு ஆண்டுகள் கழித்தே கைது 
* தான் கடன் வாங்கியது தன் மகனின் நிறுவனம் என்று தெரியாது என டிஆர்பாலு கோர்ட்டில் பதில்
* நேர்மையான dsp சுந்தரேசன் 6 மாத சஸ்பென்ட் செல்லாது என நீதிமன்றம் உத்தரவு 
* மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் தடியடி கம்யூனிஸ்ட் தலைவர் மனைவி ஜான்சி ராணி காயம்


ஆறுதல்கள்....
* மகளிர்  பேருந்து இலவசம்
* 40% மகளிர் உரிமைத் தொகை
* ரம்மி தடை
* கீழடி அருங்காட்சியம்
* பள்ளி காலை உணவு
* வெள்ள நிவாரண தொகை
* கூட்டுறவு நகைக்கடன் 3ல் 1 பங்கினர் ரத்து
* அரசு பள்ளி மாணவர் கல்லூரி உதவித்தொகை
* CAA அமல் செய்யமுடியாது என்று அறிக்கை
* தமிழ் புதல்வன் 1000 ரூ
* கேரளா குப்பை திருப்பியனுப்பல்
* குமரி கண்ணாடி பாலம்
* தமிழர் இரும்பு நாகரீகம் பற்றி அதிமுக ஆய்வு முடிவு வெளியிடல்
* சங்கிலி அறுப்பு ஈரானிய கொள்ளையர்கள் அதிரடி கைது
* ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியதை வழக்கு தொடர்ந்து வெற்றி 
* கடன் வசூல் அடாவடி 5 ஆண்டு சிறை 
* அரசுத்துறைகளில் தற்காலிகப் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுதினால் சிறப்பு மதிப்பெண்கள் 
* நெல்லை தொல்லியல் அருங்காட்சியகம்

_ Athimoolaperumal

Sunday, 15 February 2026

பிறர்க்குடையார் குடும்பரும் பூலித்தேவரும்

பிறர்க்குடையார் குடும்பரும் பூலித்தேவரும் 

  நெற்கட்டுஞ் செவ்வல் அருகே உள்ள குளம்  ராமகோவிந்தப்பேரி.
சிதிலமடைந்த இதை மீண்டும் கட்டிப் பாசனம் செய்து பயிரிட புலித்தேவன் கேட்டுக் கொண்டதனால், நெற்கட்டுஞ் செவ்வலைச் சேர்ந்த பிறக்குடையாக் குடும்பன் என்பவர், தன் செலவில் ராமகோவிந்தப்பேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார்.

இதனால் புலித்தேவன், பிறக்குடையாக் குடும்பனுக்கு நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்துள்ளார்.
இதற்கு 2008 ஜூலை இல் கிடைத்த கி.பி.1748 ஆம் ஆண்டைச் சேர்ந்த (திருச்செங்கோடு) செப்புப் பட்டயம் சான்று.

இதே குளத்தில் உள்ள மதகில் ஒரு கல்வெட்டும் (எண் 79/2005, கி.பி.1802) உள்ளது. இதில் பூலிராணி கோமதி முத்து தலைவச்சி என்பவர் (இவர் பூலித் தேவர் மகளாக இருக்கலாம்) தெற்கு மடைக்கு தோரணக்கல் செய்து தந்த செய்தி வெட்டபட்டுள்ளது. இதிலும் பிறர்க் குடையார் மகன் சிவணு குடும்பன் என்பவருக்கு இந்த குளம் சொந்தம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் நிலத்தை கி.பி.1738 இல் கைலாச குடும்பர் உள்ளிட்ட 12 தேவேந்திரருக்கு விலைக்கு விற்ற செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் நிலம் வாங்கிய 12 குடும்பர்கள் பெயருடன் கிரயம் செய்து கொடுத்த கோவில் நிர்வாகிகள் 11 பேர் மற்றும் சாட்சிகள் 3 பேர் என பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் உள்ளன.

அதாவது பள்ளு இலக்கியங்கள் நாயக்கர் ஆட்சி பகுதியில் தேவேந்திரர்கள் (அப்போது பள்ளர்) மிகக் கொடுமையான சுரண்டலுக்கு ஆளானதைப் பதிவு செய்துள்ளன.
அதே காலத்தில் நாயக்கர் ஆட்சி வேரூன்ற முடியாத மறவர் பாளையங்களில் தேவேந்திரர் நிலவுடைமை சமூகமாக செல்வாக்குடன் இருந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் மூலம் அறியலாம்.

  

எகிப்துடன் நடுகல் தொடர்பு

எகிப்துடன் நடுகல் தொடர்பு 

 கரூர் அருகே கிபி 9 ஆம் நூற்றாண்டின் ஒரு நடுகல் அமராவதி ஆற்றுப் படுகையில் உள்ளது.
 இதில் 'வஞ்சி வேளான் மகன் நாகன்' என்பவர் ஆநிரை கவர்தலை தடுத்து உயிர்நீத்தார் எனும் செய்தி காணப்படுகிறது.
 இந்த நடுகல்லில் ஒரு ஓவியம் வெட்டப்பட்டுள்ளது இந்த ஓவியம் அப்படியே கிமு.1213 இல் எகிப்து மன்னர் இரண்டாம் ராம்சேஸ் தனது எதிரியை வீழ்த்துவது போன்று வெட்டிவைத்த ஓவியத்துடன் ஒத்துப்போகிறது.
 இதே ஆற்றுப் படுகையில் இதிலிருந்து 600 மீட்டர் தொலைவில் மாவடியான் கோவில் அருகே மற்றொரு கல்வெட்டும் ஓவியத்துடன் உள்ளது.
 இதுவும் இரண்டாம் ராம்சேஸ் லிபிய மன்னரை வீழ்த்தும் ஓவியத்துடன் அப்படியே ஒத்துப் போகிறது.
 இதுவும் 8-9 ஆம் நூற்றாண்டு நடுகல்.
 இதில் இருப்பவர் 'கோக் கலியன் மகன்' என்று குறிக்கப்பட்டுள்ளது. 
 இவைபோக மதுரை அழகர்மலை யில் ஒரு பழமையான ஓவியம் எகிப்து கடவுளான தோத் உடன் ஒத்துப்போகிறது.

 நன்றி: Tamil Navigation (youtube channel)
காணொளி: Tamil - Egypt Similarites | unbelievable Coincidences | 

தற்போது எகிப்தில் 'சிகை கொற்றன் வர கண்ட' எனும் தமிழி எழுத்து ஒரு வெளிநாட்டவரால் கண்டறியப் பட்டுள்ளது

Wednesday, 11 February 2026

சாதிப்பட்டம் சாதிவெறியைத் தூண்டுமா


சாதிப்பட்டம் சாதிவெறியைத் தூண்டுமா?

 தமிழகத்தில் சாதிவெறி அதிகம் என்று கூறுபவர்கள் கூட மதவெறி இல்லை என்று ஒத்துக்கொள்வர். இவற்றை ஒப்பிடுவோம். 

 நான் வட இந்தியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது யாராவது கையில் பை ஏதாவது கொண்டு போனால் அதில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறதா என்று பார்ப்பேன்.
 (இது தமிழர்களை அடையாளம் காணத் துடிக்கும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் செய்கின்ற ஒரு வழக்கமாகும்). இந்த பழக்கதோஷம் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் தொடரும். அவ்வாறு ஜவுளிக்கடை போன்று கையில் ஏதாவது வைத்திருந்தால் அதில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறதா என்று பார்ப்பேன். தமிழ் இஸ்லாமியர் கையில் ஏதாவது கொண்டு போனால் அதில் இருக்கும் பெயர்கள் பெரும்பாலும் இசுலாமிய பெயராக இருக்காது (இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் கடைகள் வெளிப்படையான இஸ்லாமிய பெயர்களை பெரும்பாலும் வைத்துக் கொள்வதில்லை. ஆங்கில எழுத்துக்களையோ அல்லது ஆங்கில பெயரையோ வைத்திருப்பார்கள். இதை என்னால் அடையாளம் காண இயலும்). தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இஸ்லாமியரிடம்தான் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வார்கள் என்கிற தவறான எண்ணம் சிலருக்கு உண்டு. ஆனால் பெரும்பாலும் அது உண்மை இல்லை. நான் பார்த்தவரை தமிழக இஸ்லாமியர்கள் பெரும்பான்மை தமிழர்கள் போலவே பிரபலமான மதம் சாராத கடைகளில்தான் பொருட்களை வாங்குவர்.

 உலகம் முழுவதுமே கூட மதவெறியானது தலைவிரித்து ஆடுகிறது. அதிலும் இஸ்லாமியருக்கு எதிரான போக்கு இந்தியா முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் காணப்படுகிறது. தமிழகம் கேரளா ஆகியவற்றை தவிர்த்து ஏனைய இடங்களில் மதவெறி தலைவிரித்தாடுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அப்படி ஒரு நிலை இன்றுவரை இல்லை. இத்தனைக்கும் தமிழின இஸ்லாமியர்கள் தான் ஒரு இஸ்லாமியர் என்ற வெளிப்படையான அடையாளத்துடன் தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள்.  இஸ்லாமிய உடைகளை அணிந்து கொள்கின்றனர். இஸ்லாமிய பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். பாஜக எதிர்ப்பையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் மக்கள் தொகையில் ஓரளவு கணிசமான அளவு இருந்தும் இனப்பற்று என்று வரும்போது அவர்கள் அளித்த பங்கு என்று பார்த்தால் குறைவு என்றுதான் கூற வேண்டும். அப்படி இருந்தும் பிற தமிழர்கள் தமது ரத்த சகோதரர்களான தமிழ் இசுலாமியரை தனியே ஒதுக்குவதில்லை. ஒருவர் தனது உண்மையான அடையாளத்தை வெளிக்காட்டுவது அந்த அடையாளத்திற்கு எதிராக பிறரைத் தூண்டுவதாக ஆகாது என்று இதன் மூலம் உணரலாம்.

 இப்போது கூறவந்த விடயத்திற்கு வருகிறேன். உலகம் முழுவதும் சாதிப் பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர் (சமீபத்தில் வெளிவந்த tomorrow war என்கிற ஹாலிவுட் படத்தில் கூட தொலைந்த தன் மகளை froster என்கிற குடிப்பட்டத்தின் மூலம் கதாநாயகன் அடையாளம் கண்டுகொள்கிறான்).
 சாதிப் பட்டம் போட்டுக் கொள்வதன் மூலம் வந்தேறிகளை முழுமையாக அடையாளம் காண முடியாவிட்டாலும் பெரும்பான்மையான வந்தேறிகளை அடையாளம் கண்டுவிட முடியும். இதனாலேயே சாதிப் பட்டத்தை வந்தேறி அரசுகள் ஒழித்தனர். இதனை மீண்டும் கொண்டுவர தமிழ் தேசியவாதிகள் முயற்சிக்கும் பொழுது சாதிப் பட்டம் போட்டால் சாதிவெறி தலைதூக்கும் என்கிற அடிப்படையே இல்லாத ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். அப்படியென்றால் தமிழகத்தில் இசுலாமியருக்கு எதிரான மதவெறி தலைதூக்கி யிருக்கவேண்டும்  இல்லையா?! 
மத அடையாளம் மத நல்லிணக்கம் அமையத் தடையில்லை என்றால் அடையாளத்துடன் கூடிய சாதிய நல்லிணக்கம் சாத்தியம்தான்.

 தமிழர்களுக்கு சாதிவெறியும் மதவெறியும் கிடையாது. தமிழர்கள் எப்போதுமே ஒரு பண்பட்ட சமூகம். 

 தமிழக கிராங்களில் பல்வேறு சாதியினர் உறவுமுறை சொல்லி அழைத்துக்கொள்வதும், ஒரே தெருவில் பல சாதியினர் வாழ்வதும், ஒரே குலதெய்வக் கோவிலில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் ஒற்றுமையாக வழிபடுவதும். சாதி தாண்டிய உயிர் நண்பர்கள் இருப்பதும், ஊருக்கு பொதுவான கோவிலுக்கு அந்த ஊரில் இருக்கும் சமுதாயங்கள் முறைவைத்துக் கொண்டு விழா எடுப்பதும் சர்வ சாதாரணம்.  ஒரே பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் இருவேறு சாதியினர் கலப்புத் திருமணம் செய்துகொள்வதும் பன்னெடுங்காலமாக இயல்பாகவே நடந்து வருகிறது (உங்கள் பெற்றோரை விசாரித்துப் பாருங்கள் உங்கள் தாத்தா பாட்டி காலத்திற்கு முன்பே சாதிதாண்டிய திருமணம் நடந்திருக்கும்). 

இதற்குச் சான்றாக இருவேறு சாதிகள் தங்களுக்குள் பெண்கொடுத்து பெண்ணெடுத்து அந்த இரு சாதிகளுக்கு நடுவிலேயே ஒரு சிறுபான்மை சாதி உருவாகியிருக்கும். உதாரணமாக நான் சேனைத்தலைவர் சாதியைச் சேர்ந்தவன் (மூப்பனார் பட்டம்) நாங்கள் செங்குந்தர் மற்றும் மறவர் ஆகியோர் கலந்து உருவான சிறுபான்மை சாதி (தமிழக மக்கட்தொகையில்  0.4 சதவீதம்). 

பிரச்சனை எப்போது வருகிறது என்றால் பொருளாதார அந்தஸ்து வேறுபாடான இரு குடும்பங்களில் திருமண சம்பந்தம் நடைபெறுவதில்லை. அதாவது (அது ஒரே சாதியாக இருந்தாலும்) வெவ்வேறு அந்தஸ்தில் இருக்கும் குடும்பங்கள் சம்பந்தம் செய்துகொள்வது இல்லை. இந்நிலையில் ஒரு ஆண் ஏழையாக இருந்தால் அவரது முறைப்  பெண் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால்  பிரச்சனைகள் வருவது இயல்பு (அதிலும் காதலர்கள் காத்திருந்து காரியத்தைச் சாதிக்காமல் ஊரைவிட்டு ஓடிவிடுவது பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவரும்). ஆக நாம் இங்கே செய்யவேண்டியது பொருளாதார சமநிலை தான்.  அதாவது அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு வழங்கி சமமான பொருளாதாரத்திற்கு உயர்த்தி விட்டால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பெண்கொடுத்து பெண்ணெடுத்து கலந்து விடுவது இயல்பாகவே நடந்துவிடும். ஆனால் வந்தேறி அரசுகளும் இயக்கங்களும் ஊடகங்களும் தமிழகத்தில் எங்கோ நடக்கும் சாதிய கொடுமைகளை ஏதோ தமிழகத்தின் பொதுக் கலாசாரம் போல பிரச்சாரம் செய்கின்றனர். புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில் தான் சாதிய மோதல்கள், ஆணவக்கொலைகள், தீண்டாமை, சாதிய கலவரங்கள் ஆகியன பிற மாநிலங்களை விட மிகவும் குறைவு. இங்கே நடந்த அத்தகைய சில அசம்பாவிதங்களும் திராவிட அரசியல் செய்யும் சாதிய அரசியலே காரணம்.

 ஆகவே தமிழர்களே! நாம் அனைவரும் உலகில் எல்லா முன்னேறிய சமூகங்களும் செய்வது போல நமது தாத்தா பாட்டிகள் போல நமது குடிப் பட்டத்தை நமது பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளவேண்டும். குடிப்பட்டத்தை பெயருடன் இணைத்துக்கொள்வது சட்டப்படி தவறு இல்லை.  இதை நாம் செய்தால் வந்தேறிகளை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகிவிடும். தமிழ்ச்சாதிகளின் பட்டங்கள் போன்றே பட்டம் கொண்ட பிற இனத்து சாதிகள் மிகவும் குறைவு.  பெரும்பான்மையான தமிழ் குடி பட்டங்கள் தனித்துவமானவை. ஒருவர் தமிழர் என்று அடையாளம் காண இன்று நமக்கு வேறு வழியில்லை. வெளிப்படையாக நான் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் பட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

 தன் குடிப்பெயரை பெயருடன் இணைத்து பயன்படுத்துவது சாதிவெறியாக பார்க்கப்படுவதை தவிர்க்க தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கு 'தமிழர் நிலத்தில் சாதியவேறுபாடுகள் வேற்றின ஆட்சிக்கு முன்பு இல்லை' என்று ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வந்த எந்த சாதிக்கும் மேலேயோ கீழேயோ கிடையாது என்பதையும் தமிழ் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். 

உலகில் தனது இனத்தை ஓரணியில் திரட்டிய தலைவர்கள் சாதி மத வர்க்க அடையாளங்களை அழித்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்ததில்லை. 

சாதியை ஒழித்து விட்டு மதத்தை ஒழித்து விட்டு தூய தமிழில் பேசி வர்க்க முரண்பாடுகளை ஒழிக்கும் திட்டத்துடன்தான் ஒரு தமிழ் தேசியவாதி இருக்க வேண்டும் என்று நம்மை மூளைச்சலவை செய்துவைத்துள்ளனர். சாதிய, மத வேறுபாடுகளை ஒழித்தால்தான் தமிழினம் ஒன்றிணைய முடியும் என்பது பித்தலாட்டம். நடக்கவே நடக்காது என்று தெரிந்துதான் வந்தேறிகள் 'இனத்தின் முதல் எதிரி சாதி' என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகின்றனர். நாமும் அந்த வழியை முயன்றுபார்த்து தோற்றுவிட்டோம். வந்தேறிகள் தமது அடையாளத்தை மறைத்துகொண்டு எளிமையாக அதிகாரத்தைக் கைப்பற்றி கொழுத்துவிட்டனர்.

 ஆகவே இனி வழியை மாற்றுவோம் சாதி அடையாளத்துடனும் மத அடையாளத்துடனும் இனவுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைவோம். தனிப்பட்ட கொள்கைகள், விருப்பு வெறுப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைப் பொருட்படுத்த வேண்டாம். 

 முதலில் இன உணர்வு அதற்குப் பிறகு பிற உணர்ச்சிகள் என்று இருந்தால் போதும். குடிப்பட்டத்தை பயன்படுத்தும் ஒரு தமிழருடன் நம்பிக்கையுடன் ஒன்றிணைய முடியும். இந்த வழியில் நம்மால் எளிமையாக ஒன்றிணைய முடியும். எந்த குடியும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை என்கிற மனநிலையை வளர்த்துக் கொள்வோம்.

 ஆகவே முதல்வேலையாக நமது குடிப்பட்டத்தை பெயருடன் இணைப்போம்.  வந்தேறிகள் கதறத்தான் செய்வார்கள். எதையும் பொருட்படுத்தாமல் நாமும் உலகில் வெற்றி பெற்ற இனங்களின் பாதையில் பயணிப்போம். வந்தேறிகளை அடையாளம் காண்போம். அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். முன்னேறுவோம்.

26.07.2021

Thursday, 15 January 2026

சல்லியர்கள் விமர்சனம்

 சல்லியர்கள் விமர்சனம்

 தமிழ் தேசிய திரைப்படம் எடுப்பவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்தேசியர்கள் நீங்கள் மேதகு 2 போன்று ஒரு படம் எடுத்தாலும் அதை பார்க்கத்தான் போகிறோம்.
 ஆதரிக்க தான் போகிறோம்.
 ஆனால் பெருவாரியான பொதுமக்கள் திரைப்படத்தை ஆதரிப்பதற்கு சில விடயங்கள் முக்கியம்!
அப்போதுதான் திரைப்படம் லாபம் ஈட்டும்!
 சல்லியர்கள் திரைப்படபானது குறைந்த பட்ஜெட், அரசியல் ரீதியான அழுத்தங்கள், டார்கெட்டட் ஆடியன்ஸ் குறைவு என அனைத்தையும் தாண்டி எடுக்கப்பட்டது என்பதை நன்கு அறிவேன்.
  இந்த படத்தை எடுத்தவர்களை அவர்களது துணிச்சலுக்காக நான் மிகவும் பாராட்டுகிறேன்!
  கீழே வரும் எனது விமர்சனம் படத்தை பார்க்காதவர்களை பெரிதாக பாதிக்காது!
ஸ்பாய்லர் சிறிது கூட வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதோடு படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்!
 நான் தி.கிட்டு அவர்களின் அடுத்த படைப்பை இன்னமும் மெருகேற்றும் வகையில் தான் இந்த விமர்சனத்தை முன்வைக்கிறேன்!
 அவர் விரும்பாவிட்டால் உடனே நீக்கவும் தயாராக இருக்கிறேன்! 

 ஒரு திரைப்படத்தின் நோக்கம் என்பது ஒரு விடயத்தை ஆவணப்படுத்தி வைப்பது என்று புரிந்து கொண்டால் அது தவறு என்று நான் கூறுவேன்.
  ஒரு திரைப்படம் வெற்றி பெற அந்தத் திரைப்படத்தின் மூலம் மக்கள் புதிதாக எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.
 அப்போதுதான் அந்த படம் வெற்றி பெறும்.
 உதாரணத்திற்கு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
 அது ஏன் என்பது பலருக்கு புரியாது.
 அப்படம் வெற்றி பெற்றதற்கு காரணம் அதில் அவர்கள் மக்கள் தெரிந்து கொள்ள புதிய பல செய்திகளை சேர்த்திருந்தது தான்.
 அதாவது கம்ப்ளைன்ட் இல்லாமலும் போலீஸ் ஒரு மொட்டை கடிதாசியை தாங்களே எழுதி ஒரு விடயத்தை கேஸ் ஆக்க முடியும் என்கிற தகவல்,
 மணல் கடத்தும் ஒருவனை ஒரு போன் கால் மூலம் ஒரு லட்சம் அபராதம் கட்ட வைக்க முடியும் என்கிற தகவல்,
 கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்பு துறை மூலம் மீட்கலாம் என்கிற தகவல்,
 துப்பாக்கி வைத்துக் கொள்ளும் ஒருவர் அதற்கு காவல் நிலையத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்கிற தகவல்,
 விளையாட்டாக நடத்தப்படும் ஒரு சங்கம் காவல்துறை மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்கிற தகவல்,
 18 வயது நிரம்பாத ஒரு பெண்ணின் திருமணத்தை தான் யார் என்று வெளியே தெரியாமலேயே ஒருவர் நிறுத்த முடியும் என்கிற தகவல்,
இப்படி ஒரு சாதாரண காமெடி படத்திலேயே இத்தனை தகவல்களை கொடுத்திருக்கிறார்கள் என்றால் ராணுவம், போலீஸ், மருத்துவம் போன்ற துறைகளை திரைப்படத்தில் காட்டும்போது அவர்கள் பயன்படுத்தும் யுத்திகள் வழிமுறைகள் போன்ற தகவல்களை அதில் சேர்க்க வேண்டியது அவசியம்.

  சல்லியர்கள் இந்த விடயத்தில் கொஞ்சம் தவறி விட்டதாக உணர்கிறேன்.
 ராணுவமும் மருத்துவமும் காட்டப்படும் இப்படத்தில் ராணுவ யுத்திகள் மருத்துவ யுத்திகள் புதிதாக எதுவும் காட்டப்படவில்லை.
 
 ஒரு ஆயுத இயக்கம் நடத்தும் ஒரு மருத்துவத்துறை....
 அதிலும் ராணுவ பகுதிக்குள் இருக்கும் ஒரு மருத்துவ முகாம்....
 அதிலும் அது பதுங்கு குழிக்குள் செயல்படுகிறது... என்றால் அதில் நிறைந்திருக்கும் சிக்கல்களையும் சவால்களையும் கூறி இருக்க வேண்டும் இல்லையா?!

 உதாரணமாக அந்த பங்கர் மின்சாரம் எப்படி பெறுகிறது அல்லது மழைக்காலத்தில் எப்படி சமாளிப்பார்கள் என்று காட்டி இருக்கலாம்.

  பிற போராளிகளுக்கும் மருத்துவம் படித்த போராளிகளுக்கும் என்ன வித்தியாசம் எத்தகைய சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன என்று காட்டி இருக்கலாம்.
 அல்லது சில மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் எப்படி சமாளிக்கிறார்கள் என்று கூறியிருக்கலாம்.

 திரைப்படத்தின் காலகட்டம் பற்றி தெளிவாக இல்லை 1990 களின் இறுதி என்று ஊகிக்க முடிகிறது.

 படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது, அன்றாட செயல்களை காட்டுவதுடன் வசனங்களைச் சேர்த்து கூட்டியிருக்கலாம். 

காதல் காட்சிகளிலும் இன உணர்ச்சி, மண் பற்று போன்றவை மட்டுமே பேசப்படுவது ஒட்டவில்லை.

 மருத்துவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு அரசு விவாதம் நடத்தும்போது அது ஒரு அரசுக்கு எத்தகைய பிரச்சனைகளைக் கொண்டுவரும் என்று விவாதிக்கப்பட வில்லை.

 மருத்துவ பிரிவு மீது எதிரிகளுக்கு ஏன் தனிப்பட்ட கோபம் என்று குறிப்பான காரணம் இல்லை 'காப்பாற்றப்பட உள்ள ஒரு ராணுவ வீரன் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு விடுவான் அதனால் பிழைப்பதற்குள் அவனை முகாமோடு சேர்த்து நாமே அழித்துவிடலாம்' என்று ஏதாவது லாஜிக் இருந்திருக்கலாம்.

எதிரி வீரனை அகற்றிவிட்டு அந்த இடத்தில் உயர்தர மருத்துவ போராளியை விட்டுவிட்டு போவது என்ன லாஜிக் என்று புரியவில்லை.

 ஒரு எதிரி வீரனை காப்பாற்றுவதால் இயக்கத்திற்கு என்ன நன்மை என்று காட்டியிருக்கலாம். அவனை திருத்துவார்களா அல்லது எதிர்தரப்பு பற்றிய தகவல்களை கூறவைப்பார்களா என்று எதுவும் காட்டப்படவில்லை.

வழக்கம் போல இந்த படத்திலும் இசை சத்தமாகவும் குரல் சன்னமாகவும் இருக்கிறது.
 இப்போது எல்லா படங்களிலும் ஒருவர் பேசுவது கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரிகிறது ஆனால் குண்டூசி விழுவது கூட தெளிவாக கேட்கிறது இது ஏன் என்று புரியவில்லை.

மக்கள் 100% இயக்கத்திற்கு ஆதரவு தருகிறார்கள் என்பதும் இடிக்கிறது. சொற்ப மக்களாவது ஆயுத இயக்கத்திற்கு ஒத்துழைக்க மறுப்பார்கள் அதை இயக்கம் எப்படி சமாளிக்கிறது என்றும் காட்டியிருக்கலாம்.  

 உளவு அறிவது பற்றியும் வரவில்லை! 
இரு தரப்பும் எப்படி எதிர்தரப்பு நகர்வுகளை கணிக்கிறார்கள் என்று காட்டப்படவில்லை.

 தமிழ்தேசியவாதியாக எனக்கு ஒரு குறை.
படத்தில் தமிழகம் வரவேயில்லை.
 'தீவுக்கு அப்பாலும் நம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் தமது அரசாங்கத்தை மீறி உதவுகிறார்கள்' என்று ஆரம்ப காட்சியில் படகுகள் பொருட்களைக் கைமாற்றும் இடத்தில் கூறியிருக்கலாம்.

போராளி குடும்பம் பிடிபட்ட பிறகும் அந்த குடும்பத்து பெண் மருத்துவ படிப்பில் சேர முடிகிறது என்பதும் இடிக்கிறது.
 அவரை இயக்கம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி மருத்துவ படிப்பு பெற வைத்ததாக காட்டியிருக்கலாம்.

 ராணுவ அதிகாரிகள் அவர்களது அலுவலகங்கள காட்டப்பட்ட அளவுக்கு இயக்கம் பற்றி பெரிதாக திரையில் வரவில்லை. 
ஒரு இயக்கம் எப்படி இயங்குகிறது அதிலும் மருத்துவ பொருட்களை எப்படி பல தடைகளைத் தாண்டி கொண்டுவருகிறது என்று காட்டியிருக்கலாம்.

 படத்தில் மருத்துவ போராளிகளிடம் எல்லாமே இருக்கிறது. பற்றாக்குறையாக எதுவுமே இல்லை.

 படத்தில் ஈழ பேச்சு வழக்கு அல்லது அதை ஒட்டிய சில சொற்களாவது பேசப்பட்டு இருந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். 

 பங்கர் வெளிப்பக்கத்தில் இருந்து உள்பக்கம் வரை கேமரா வரவில்லை. என்றால் பங்கர் என்று தனி செட் போட்டுள்ளது தெரிகிறது. 
ஆனாலும் ஒரு நிஜமான பதுங்கு குழிக்குள் நுழைந்தது போலவே இருக்கிறது. 
 கதைக்களம் அப்படியே ஈழத்திற்கு போய்விட்டது போல இருக்கிறது. 
 ஏனென்றால் வீடுகள், தெருக்கள், உடை போன்றவை மிக நேர்த்தியாக இருக்கின்றன. 
ஆரம்பத்தில் வரும் கதைச் சுருக்கம் அருமையாக இருக்கிறது! 
 நடிகர்கள் தேர்வு அபாரம்!
ஆஸ்பத்திரியில் உட்கார்ந்திருக்கும் ஒரு நடிகர் தவிர அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
இரண்டு நாயகிகள். இருவருமே கொள்ளை அழகு!
பின்னணி இசை அற்புதம்!
வசனம் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது! 
துப்பாக்கிசூடு மற்றும் குண்டு காயம் படுவது தத்ரூபமாக இருக்கிறது. உண்மையில் சுட்டுவிட்டார்களோ என்பது போல இருக்கிறது!
 அறுவை சிகிச்சை காட்சிகளும் அப்படியே உண்மையிலேயே அறுத்து தைக்கிறார்களோ என்பது போல இருந்தது!
 கேமரா ஒர்க் அசாத்தியமாக இருக்கிறது! 
 கதையும் கூட அருமை! 
 மருத்துவர் ஆகி வெளிநாடு வசதி என்று போகாமல் இயக்கத்தில் இணைந்து இயங்கும் ஒரு பெண், 
 அங்கே சிகிச்சைக்கு வரும் இளம் போராளி அவன் நினைவில் வரும் காதலி,
 இந்த பதுங்கு குழியை தாக்க வரும் ராணுவம், 
 அதைக் காக்க வரும் இயக்கம்,
 அதிலிருந்து தப்பிக்கும் மருத்துவர்கள்,
 தான் கொல்லவந்த போராளிகளாலேயே காப்பாற்றப்படும் எதிரிவீரன் தன் செயல்களுக்காக வருந்துவது என்று சுவாரஸ்யமாக நகர்கிறது.

 தமிழர்கள் சார்பாக இந்த படத்தை உருவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! 

 மொத்தத்தில் மூன்று விதமான மக்கள் இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும்!

 ஒன்று குறைந்த பட்ஜெட்டில் இவ்வளவு தரமாக படம் எடுக்க முடியுமா என்று தெரிந்துகொள்ள நினைக்கும் சினிமாக் காரர்கள்!

 இன்னொன்று ஈழத்தின் மீது பாசம் கொண்ட தமிழர்கள்! 

 மூன்றாவதாக சினிமாவின் கழுத்தை நெரித்து பிடித்திருக்கும் சில அரசியல்வாதிகள் இந்த படத்தை பல நெருக்கடிகள் கொடுத்து ஒழிக்க நினைப்பதை முறியடிக்க நினைக்கும் சினிமா ரசிகர்கள்! 

 இப்படியான படங்கள் தொடர்ந்து வெளிவரவும் வெற்றிபெறவும் வேண்டும்! 
 அது காலத்தின் கட்டாயம்! 

சல்லியர்கள்! வெல்லுவார்கள்! 

 
 




தமிழ்தேசியம் பயணிக்கவேண்டிய பாதை 15.01.2026

தமிழ்தேசியம் பயணிக்கவேண்டிய பாதை 
15.01.2026

நாம் விடுதலை பெற நமது தமிழர்நாட்டை ராணுவ வேலியிட்டால் போதும்தான் ஆனால் முழுமையான விடுதலை பெற வடயிந்தியா மற்றும் தென்னிந்தியா உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும்.

அத்தகைய தொடர்புகளாவன,
1) சமஸ்கிருத வழிபாடு
2) உருது இசுலாமியர் குடியேற்றம்
3) தமிழகத்தின் வந்தேறிகள்
4) தமிழர்நாட்டு எல்லைக்கு அப்பால் குடியேறி இருக்கும் தமிழர்கள்
5) இந்திய அரசாங்க கட்டமைப்பு
7) இந்து மதம்
8 ) இந்திய ராணுவ கட்டமைப்பு

இதுவரை பலமுறை எழுதியிருந்தாலும் சுருக்கி தொகுத்து இங்கே தருகிறேன்.
  தமிழர்கள் சரியான திசையில் நடந்தால் (100 - 200 ஆண்டுகளில்) கீழ்க்கண்ட  வரிசைப்படி நிகழ்வுகள் நடக்கும்.

* மாநில அரசைத் தமிழர்கள் கைப்பற்றுதல். முன்னாள் ஆட்சியாளர்களைப் பிடித்து தண்டித்தல் அவர்களின் கறுப்புப் பணத்தை மீட்டல்.

* ஈழமும் தமிழகமும் ஒரே நாட்டின் இரு பகுதிகள் என்பதை உணர்தல். ஈழத்தமிழரும் தமிழகத் தமிழரும் இணைந்து இதற்காக கூட்டங்களும் விழாக்களும் நடத்துதல். பொங்கல் அன்று இவ்வாறான நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்.

* தமிழர்நாடு வரைபடத்தை (பார்க்க: படம்) பரவலாக பயன்படுத்துதல். ஒவ்வொரு வீட்டிலும் தமிழர்நாட்டு வரைபடத்தை மாட்டிவைத்தல். தம் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே தமிழர்நாடு தான் தாய்நாடு என்று சொல்லிக் கொடுத்தல்.

* பிற மாநிலங்களில் (தமிழக எல்லையை ஒட்டி இருப்போர் தவிர்த்து) குடியேறியிருக்கும் தமிழர்கள் தாய்நிலம் திரும்புதல். (வெளிநாட்டுவாழ் தமிழர்கள் அல்ல)

* ஈழத்தமிழரும் ஈழத்திற்கு வெளியே இருக்கும் தமிழரை (குறிப்பாக மலையகத் தமிழரை) ஈழத்திற்குள் குடியமர்த்துதல்.

* மாநில அரசு முடிந்தவரை அழுத்தி இங்கிருக்கும் பிற மொழியாளரை (அதிலும் புதிய வந்தேறிகளான வடவரை முதலில்) வெளியேறும்படி செய்தல், மேற்கொண்டு குடியேற்றம் நடக்காமல் தடுத்தல்.

* தமிழகத்திற்குள் மத்திய, மாநில மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை தமிழகத்தாரே பெற வழிசெய்தல். தமிழகத்தார் தொழில் நடத்த அதிக சலுகை தருதல்.

* மாநில அரசு தமிழகத்திற்குள் இந்தியை ஒழித்தல் மற்றும் கல்வியிலும் தேர்வுகளிலும் தமிழ்மொழியைக் கட்டாயமாக்குதல்.

* சமஸ்கிருத வழிபாட்டை ஒழித்தல். 300 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோவில்கள், தேவாலயங்கள், மசூதி போன்றவற்றை அரசே நடத்துதல். 
 மதம் சார்ந்த தனியார் அமைப்புகள் நடத்தும் வழிபாட்டுத் தலங்களை அகற்றுதல். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்.

* தமிழ்ச் சான்றோர் தமிழருக்கு என்று 'தனி இந்து மதத்தை' நிறுவுதல். 
[தற்போதைய நிலையில் தமிழகத்தில் அலுவலக ரீதியாக 'இந்து மதம்' என்று குறிப்பிடப்படுவது நமது வாழ்வியலுடன் கலந்துள்ளது. எனவே 'தமிழக இந்து மதம்' அதாவது அதன் கடவுளர், வழிபாட்டு முறை, சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியன ஆராயப்பட்டு அதில் வடக்கு சார்ந்த கலப்பு உள்ளவற்றை நீக்கிவிட்டு தனிப் பெயருடன் (மெய்யியல் மதம் என்று வைக்கலாம்) மதம் ஒன்று உருவாக்கப்பட்டு தமிழக இந்துக்கள் அந்த மதத்தவராக அறிவிக்கப்பட வேண்டும். தற்போதைய தமிழின இந்துக்கள் தாம் பின்பற்றி வரும் வடக்கு சார்ந்த விடயங்களை கைவிட வலியுறுத்த வேண்டும். தமிழின கிறித்துவ இசுலாமியர் இந்த மெய்யியல் மதத்திற்கு மாறுவதை ஊக்குவிக்க வேண்டும்]

* நதிநீர் பங்கீட்டில் வஞ்சிக்கப்பட்டால் அம்மாநிலத்தாரை வெளியேற்றுதல். அம்மாநில எல்லைகளை மூடுதல். கொடுக்கல் வாங்கலை முறித்துக் கொள்ளுதல். தமிழகத்தில் அம்மாநிலத்தார் நிறுவனங்களை  சொத்துக்களை முடக்குதல். தமிழ்தேசிய இயக்கஙள் அணைகளை தகர்க்க மிரட்ட விடுத்தல்.

* தமிழக மாநில அரசு மத்திய அரசிடம் இழந்த உரிமைகளை (குறிப்பாக கல்வி) மீட்க முயற்சித்தல். மத்திய அரசின் மிரட்டலுக்குப் பணிய மறுத்தல்.  நிதி கிடைக்காத பட்சத்தில் வரி கட்டாமல் முரண்டுபிடித்தல். வரி ஏய்ப்பு செய்து அதை கறுப்பு பணமாக மாநிலத்துக்குள்ளேயே தக்க வைத்தல்.
 தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கட்டமைப்பு மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு குடிநீர் உட்பட எந்த அடிப்படை உதவியும் செய்ய மறுத்தல்.

* தமிழ்தேசிய கட்சி புதுச்சேரி ஆட்சியைப் பிடித்து அதனை தமிழகத்துடன் இணைத்து ஒரே மாநிலம் ஆக்குதல். புதுச்சேரி சிறப்பு அந்தஸ்தை வெகுநாட்களாக கோரி வரும் குடகு மக்களுக்கு அதை விட்டுக்கொடுப்பதாக அறிவித்து அவர்களை கன்னடருக்கு எதிராக தூண்டிவிடுதல்.

* தமிழினம் சார்ந்த பழமையான கல்வெட்டுகள், பட்டயங்கள்,  சிலைகள் ஆகியவற்றை தமிழகம் கொணர முயற்சித்தல். தனியாரிடமோ வெளிநாட்டு அருங்காட்சியகத்திலோ இருந்தால் அதை விலை கொடுத்தோ அல்லது திருடியோ தமிழகம் கொணர்தல்.

* இழந்த எல்லைப் பகுதி பற்றி விரிவாக அரசிதழில் வெளியிடுதல் மற்றும் அவற்றை மீட்க வழக்கு தொடுத்தல் (வெற்றி தோல்வி முக்கியமில்லை).
 அத்தகைய எல்லலைப் பகுதிகளில் தமிழக எல்லையோர தமிழர் குடியேற ஊக்குவித்தல்.

----------  இதுவரை மாநில அரசின் காலம் (இவ்வாறு இயங்காத மாநில அரசை மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடித்தல் வேண்டும்)  --------

* தமிழக இளைஞர்கள் (குறிப்பாக தமிழ்ச்சாதிகளில் போர்க்குடியினர்)  தமிழினத்தின் 'ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்' உதவியுடன் புலிகள் போல கொரில்லா குழுக்களைத் தொடங்கவேண்டும்.
(மக்களோடு மக்களாக மறைந்திருந்து தாக்குதல்).
 ஈழத்தமிழர் இதற்கு உதவுதல். இளைஞர்களை ஈழத்தமிழர் வெளிநாடு வரவழைத்து முன்னாள் புலி போராளிகள் மூலம் பயிற்சி கொடுத்தல்.

* ஈழத்தமிழரும் தமிழகத்துடன் ஒன்றிணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குதல்
(காடுகள் மற்றும் மறைவிடங்களில் மறைந்திருந்து கொரில்லா தாக்குதல்கள் நடத்துதல்).

* கொரில்லா குழுக்கள் (தங்களுக்குள் அடித்துக்கொள்ளாமல் ஒற்றுமையாக இயங்கி) தமிழகத்தின் வேற்றினத்தாரை (குறிப்பாக சேட்டுகளை) தாக்கி விரட்டி அவர்களது செல்வங்களை எடுத்து மக்களுக்கு பங்கிடுதல்.
 மேலும் வேற்றினத்தாரை மிரட்டி அவர்களது சொத்துகளை குறைந்து விலைக்கு தமிழர்களுக்கு விற்கவைத்தல் 

* தமிழக ஈழ கொரில்லாக்கள் படிப்படியாக காவல் நிலையங்கள் மற்றும் இந்திய அரசின் ஆயுத சேமிப்புகள் மீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களைக் கைப்பற்றுதல். மீனவர்களை சேர்த்துக்கொண்டு சிங்கள கடற்படை மீது தாக்குதல் நடத்துதல். இந்திய எதிரி நாடுகளிடம் ஆயுதம் , பணம் மற்றும் பயிற்சி போன்ற உதவிகளைப் பெறுதல்.

 * ஹிந்தியாவில் பிற இனங்களையும் இதேபோல பிரிவினைக்குத் தூண்டுதல். இந்தியாவிற்குள் இயங்கும் ஆயுதக் குழுக்களுடன் கொள்கை தாண்டிய புரிதலுடன் தொடர்பில் இருத்தல். 

* தமிழக மாநில அரசு கொரில்லா குழுக்களைத் தடைசெய்ய மறுத்தல் அழுத்தம் அதிகரித்தால் தனிநாடு தீர்மானத்தை அறிவித்தல். அதனை ஏற்காவிடில் பதவி விலகுதல் (இதில் துரோகம் செய்தால் ஆயுதக் குழுக்களால் ஆட்சியாளர்கள் களையெடுக்கப் படுதல்).

* தற்போது மாநில அரசு இல்லாத பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் (புதிய மற்றும் பழைய) வந்தேறிகளை முற்றாக விரட்டிவிடுதல். தமிழகத்திற்குள் இருக்கும் அவர்களின் செல்வங்களை எடுத்துக்கொண்டு சொத்துக்களை தமிழக மக்களுக்கு அளித்தல். தமிழ்தேசியத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் எந்த மக்களையும் அழித்து ஒழித்தல். 

* தமிழ் பொதுமக்கள் நிதி திரட்டி (குறிப்பாக தங்க நகைகள்) தமிழ் ஆயுதக் குழுக்களின் தேவைகளுக்கு வழங்குதல், ஆயுதப் போரில் பங்களித்தல் மற்றும் முடிந்த அளவு உதவிகள் செய்தல்.

* புலம்பெயர் தமிழகத்தாரும் ஈழத்தாரும் நிதி திரட்டி நவீன ஆயுதங்கள் வாங்கி அனுப்புதல். 

* தமிழின உளவுத்துறை ஏற்படுத்துதல். உள்நாட்டில் உளவுத்துறை துரோகிகளைக் களையெடுத்தல்.

------------ இதுவரை ஆயுதக் குழுக்கள் காலம் (இவ்வாறு இயங்காத ஆயுதக்குழுக்களை மக்கள் ஆதரிக்கக்கூடாது)  --------------

* மாநில அரசு பதவி விலகி ஆயுதக் குழுக்கள் பலம் பெற்ற நிலையில் இந்திய ராணுவம் நேரடியாக மோதலுக்கு வரும்போது இந்திய ராணுவத்தில் உள்ள தமிழர்கள் விலகி தமிழக கொரில்லாக்களுடன் இணைந்து முழுமையான தமிழர் படையை உருவாக்குதல் (கொரில்லாக் குழுக்களின் கூட்டணிப் படை). அதற்கு இணங்காத தமிழ் ராணுவ வீரர்களின் குடும்பங்களை அச்சுறுத்தல் மற்றும் தண்டித்தல்.

* தமிழகத்தில் காடுகள் குறைவு எனவே (ஆரம்பகால யாழ்ப்பாணத்துப் புலிகள் போல urban guerrilla பாணியில்) மக்களோடு மக்களாக மறைந்திருந்து இந்திய ராணுவத்தை முதலில் கொரில்லா முறையிலும் படிப்படியாக மரபுவழி ராணுவ முறையிலும் தொடர்ந்து சண்டையிட்டுத் தோற்கடித்து தமிழர் பெரும்பான்மைப் பகுதிகளை ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்.

* புலிகள் போல முப்படைகளைக் கட்டியெழுப்புதல்
இதற்கு கோவில்களில் உள்ள நகைகள், சிலைகள் மற்றும் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பழமையான பொருட்களை உலக சந்தையில் விற்று பொருள் திரட்டிக் கொள்ளுதல். உலகில் ஒரு நாட்டுக்காக மற்றொரு நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் செய்து அதற்காக பணம் பெறவும் செய்யலாம். 

* தமிழகம் மட்டுமல்லாது 1956 ல் பறிபோன எல்லைப் பகுதிகளை மீட்க போரிடுதல்.
ஈழத்திற்கு ஆயுதம் மற்றும் படையுதவி செய்து சிங்கள ராணுவத்துடன் போரிட்டு ஈழத்தை மீட்டல்.
 இதற்கு உலகளாவிய தமிழர் உதவுதல்.

* தமிழர்நாட்டில் (தமிழகம் மற்றும் ஈழம் என) பாதியளவு நிலமாவது தமிழர் படையின் கைவசம் வந்தபிறகு 'தமிழர்நாடு' வரைபடத்தையும் சான்றுகளையும் வெளியிட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தல். முழுமையான எல்லைகளை மீட்கும்வரை தொடர்ந்து போரிடுதல்

* தமிழினம் ஒரு தனி தேசிய இனம், தமிழர்நாடு இயல்பிலேயே தனிநாடு என்று ஒத்துக்கொண்டு பேச வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உடன்படுதல். தனிநாடு தவிர்த்த எந்த சலுகைக்கும் இணங்க மறுத்தல்.

* ஈழத்து இசுலாமியர் விடுதலைக்கு உதவவில்லை என்றால் அவர்களை அழித்துவிட்டு அங்கே தமிழக இசுலாமியரை குடியமர்த்துதல்.

* தமிழர் நாட்டில் மதப் பிரச்சாரம் தவிர மதரீதியான உரிமைகள் எப்போதும் அளிக்கப்படுதல். மத ரீதியான ஆயுதக் குழுக்கள் ஆரம்பத்திலேயே களையெடுக்கப்படுதல்.

* வடக்கிலிருந்து (குறிப்பாக பீகாரிகள்) கூலிப்படைகளைக் கொணர்தல் முன்களத்தில் இந்திய ராணுவத்துக்கு எதிராக பயன்படுத்துதல் (ஈழத்திலும் கரையோர சிங்களவரை இவ்வாறு பயன்படுத்தலாம்)

* தமிழருக்கு எதிராக இயங்கி லாபம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் உலகளாவிய அளவில் உளவுத்துறை மூலம் களையெடுக்கப்படுதல் (அவர்களின் கறுப்பு பணத்தை பெற்றுக் கொண்டு விட்டுவிடவும் செய்யலாம்).

* அண்டை மாநிலங்கள் (குறிப்பாக கர்நாடகா) தமிழருக்கு வரும் ஆறுகளை மறித்து கட்டியுள்ள அணைகளை குண்டுவைத்துத் தகர்த்தல். அம்மாநில மொழிவழி சிறுபான்மை இனத்தாரைத் தூண்டி தனிநாடு அல்லது மாநில சுயாட்சி கோரவைத்தல்.

* 2009 இனப்படுகொலைக்கு இலங்கை அரசு மன்னிப்பு கோராயிராத பட்சத்தில் சிங்கள நாட்டின் மீது படையெடுத்து ஒரு இனப்படுகொலையைச் செய்து நியாயத்தை நிலைநாட்டுதல்.

* உலக அளவில் பல்வேறு துறைகளில் மேதாவிகளாக உயரிய பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் தமிழர்நாடு (வலுக் கட்டாயமாகவேணும் ) அழைத்துவரப்பட்டு தமிழர்நாடு மீள்கட்டமைப்பு செய்தல்.

* ஆயுதத் தொழிற்சாலை தொடங்குதல் தன்னிறைவு போக மீதியை விற்றல். புதிய வகை ஆயுதங்களைக் கண்டுபிடித்தல் மற்றும் உருவாக்குதல்.

* விடுதலைப் போராட்டத்தில் தமிழருக்கு ஆதரவாக இருந்த பிற இனத்தவரையும் "தமிழ்நாட்டு குடிமக்களாக அங்கீகரித்தல்"

* திருநங்கையர் படையணி உருவாக்குதல். திருநங்கையர் முதல் தேர்வு ராணுவம் என்றவாறு அவர்களை மூளைச்சலவை உலகளாவிய திருநங்கைகளை அப்படையில் தமிழின திருநங்கைத் தலைமையில் இணைத்தல் 

* சிறந்த எதிர்தரப்பு போர்வீரர்களுக்கும் பட்டங்கள் வழங்குதல். அழித்தொழிக்கப் படும் எவரைப் பற்றியும் முறையாக ஆவணப்படுத்தி நினைவு தினம் அனுஷ்டித்தல். இவ்வாறு நேர்மையான எதிரிகளை மதித்தல்

* ராணுவ ஆட்சியிலும் ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் அரசாங்கம் அமைத்தல்

* ஆயுதக் குழுக்கள் தமக்குள் ஜனநாயகத் தேர்தல் மூலம் 'தமிழர்நாட்டு ராணுவப் பதவிகளைப்' பெற்று அதிகாரப்பூர்வ 'தமிழர்நாட்டு ராணுவத்தை' உருவாக்குதல் அல்லது குறித்த இடத்தில் குறித்த நேரம் மட்டும் சண்டை செய்து (pitched battle) யார் அதிகாரப்பூர்வ ராணுவத்தில் இடம்பெறுவது என்று முடிவு செய்தல்.

* விடுதலைக்கு பெருமளவு பங்களித்த ஒருவர் மன்னராக முடிசூட்டப்படுதல். அவரது பரம்பரை சுகபோகமாக வாழ வழிசெய்தல்.

-------- இதுவரை தமிழர் படையின் காலம் ---------

* தமிழர் உளவுத்துறையின் வெளிநாட்டுப் பிரிவு மொழிவழி இனங்களைத் தூண்டி தனிநாடு கோர வைத்து விடுதலைக்கு வழிகாட்டுதல். இவ்வாறு பெரிய  நாடுகளை உடைத்தல் (முதலில் தென்னிந்தியா பிறகு வட இந்தியா பிறகு பாகிஸ்தான், பர்மா என படிப்படியாக)

* இந்திய மற்றும் உலகளாவிய ஆயுதக் குழுக்களுடன் கொள்கை பேதமின்றி கூட்டணி அமைத்தல் மற்றும் ஆயுதச் சந்தையில் ஈடுபடுதல் ஆயுத வணிகத்தைக் கைப்பற்றுதல்.

* (கிட்டத்தட்ட அனைத்து) உலக நாடுகளில் இருக்கும் 'மொழிவழி இனத்தார்' தனிநாடு கோரத் தூண்டுதல் அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆயுதம் விற்றல்.

* உலகம் முழுவதும் நாடுகளை இனவழி உடைக்கும் அரசியல் செய்தல். ஒரே மொழிபேசும் நாடுகளை ஒரே நாடாக இணையச் செய்தல். மொழிக்குடும்பம் அடிப்படையில் நாடுகளின் கூட்டணிகளை உருவாக்குதல். அதற்கு முன்னுதாரணமாக இருக்க தென்னிந்திய மொழிக்குடும்ப கூட்டணியை (கிட்டத்தட்ட திராவிடம்) ஏற்படுத்த முயற்சித்தல் ( அதாவது அண்டை இனத்து தேசியவாத ராணுவக் குழுக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர உதவி அதற்குமுன் எல்லைப் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்தல்)

-------- இதுவரை உளவுத்துறையின் காலம்  ----------

* இயற்கை வளங்களை மேம்படுத்தல் மற்றும் 'நவீன காட்டு வாழ்க்கைக்குத்' திரும்புதல்

* கடவுள் நம்பிக்கையற்ற இயற்கையையும் மொழியையும் முன்னோரையும் போற்றும் புதியதொரு மதத்தைத் தோற்றுவித்தல். அதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு அரச மதமாக அறிவித்தல். அதனை உலக அளவில் (அவரவர் இனத்திற்கு ஏற்ப) பரவச் செய்தல்.

* சேது கடலில் மண்ணைக் கொட்டி ஈழத்திற்கு நிலத்தொடர்பு ஏற்படுத்துதல். அதில் குடியிருப்புகளையும் சுற்றுலாத் தளங்களையும் ராணுவ முகாம்களையும் அமைத்தல்.

* தமிழர்நாடு ஓரளவு நிலைபெற்றதும் புலம்பெயர் தமிழர் மற்றும் அவரது சந்ததியினர் அனைவரும் தாய்நிலம் திரும்புதல். திரும்ப முடியாதவர் தம்மைப் பதிவு செய்து குடியுரிமை பெறுதல் அவ்வப்போது வந்து குடியுரிமையைப் புதுப்பித்தல்.

* தமிழர்நாடு முழுக்க தமிழர் கட்டுப்பாட்டுக்கு வந்து அரசாங்க கட்டமைப்பு ஏற்படுத்தி 20 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு (தற்போதைய அரேபிய நாடுகளைப் போல) நிரந்தர குடியுரிமை அன்றி பிற இனத்தார் வந்துபோகவும் வேலைசெய்யவும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தல்.

* இயற்கை உணவு மற்றும் மருந்துகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் பொருளாதாரத்தைப் பெருக்குதல். வளங்களை அழித்து பொருளாதாரம் அடையவேண்டும் என்று நினைக்காமல் எப்போதும் இருத்தல்.

* வடக்கெல்லைக் கோடு அதிக வளைவு  நெளிவு இல்லாமல் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும் அதை சீனப் பெருஞ்சுவர் போல பெருஞ்சுவர் கட்டி காவலரண் அமைத்து நிரந்தர எல்லை ஆக்குதல்

* பொருளாதாரம் பெருகிய பின் கடலில் ஆய்வு செய்து குமரிக்கண்டம் பற்றிய சான்றுகளை வெளிக்கொணர்தல். தமிழினமே மூத்தது என்று அறிவித்தல்.

* (ஐரோப்பிய ஒன்றியம் போல) ஒரே மொழிக் குடும்பமான தென்னிந்திய நாடுகள் ஒன்றியம் அமைத்தல். அதில் பொதுவான பணத்தாள், தற்காலிகக் கடவுச்சீட்டுக் குடியேற்றம், வரையறை செய்யபட்ட போக்குவரத்து, கூட்டு ராணுவப் பயிற்சி என ஒருவருக்கொருவர் உதவுதல்.

* உலகம் முழுவதும் மொழிவழி இனங்களை (நாடுகளை) திரட்டி அந்த அணிக்கு தமிழர்நாடு தலைமை ஏற்றல் மூலம் உலக வல்லரசாக உருவெடுத்தல்.

* உலகில் எங்கேயும் இனவழிப்பு நடக்காமல் தடுத்தல் மற்றும் இனப்படுகொலை செய்தோரைத் தண்டித்தல்.

-------- இதுவரை தமிழர் நாட்டரசின் காலம்  -------------

மேற்கண்டது ஒரு கணிப்பு மட்டுமே!
இதுவும் உடனடியாக செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்!
(அதாவது தாய்நிலத்தில்  நாம் பெரும்பான்மையாகவும் பொருளாதாரத்தில் சற்று நல்லநிலையிலும் அதிகமான இளைஞர்கள் கொண்ட தலைமுறையாகவும் தற்போது இருக்கிறோம். 15 ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிடும்)
இக்கணிப்பின்படியும் தமிழர்நாடு அமைய அத்தனை எளிதாக வல்லாதிக்க சக்திகள் விடாது. இருந்தாலும் நாம் முயற்சி செய்யவேண்டும்.

'தனித் தமிழர்நாடு' அமைக்க நாம் வைக்கும் விலை ஒரு லட்சம் உயிர்கள். அதற்கு மேல் உயிர்ப்பலி நடந்தாலோ (அல்லது மாநில அரசின் காலத்தில் மீத்தேன், அணுவுலை போன்ற மண்ணழிப்பு திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டாலோ) அல்லது போர் நடக்கும்போது அணுகுண்டு, நோய் பரப்புதல் போன்ற மிக அழிவு தரக்கூடிய தாக்குதலை தமிழர் மீது செய்தாலோ தமிழினம் நியாய தர்மம் பார்க்காமல் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் 'அகன்ற தமிழர்நாடு' அமைக்க முயற்சிக்க வேண்டும்.
 உலக அளவில் தமிழர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று பெயரெடுக்கும் அளவுக்கு இனம் மொத்தமும் இதில் தீவிரமாக இயங்க வேண்டும்.
அதாவது வடக்கே மட்டும் நில (அல்லது ஆறு) எல்லை. மற்ற மூன்று திசையில் கடல் மட்டுமே எல்லை. அதற்குள் இருக்கும் பிற இனத்தாருக்கு மாநில உரிமைகள் வழங்கி நல்லாட்சி நடத்துதல். இதுவே நாம் பாதுகாப்பாக வாழ வழி.

அதாவது நமது இலக்கு விடுதலைப் படை கட்டி 'தமிழர்நாடு' அமைப்பதுதான் அதை தீவிரவாதம் செய்து 'அகன்ற தமிழர்நாடு' அமைப்பது என்று காலம் மாற்றலாம்.

(மேற்கண்ட அனைத்தையும் பற்றி விரிவான தனித்தனி பதிவுகள் வேட்டொலி இணையத்தில் உள்ளன. ஒருவேளை நாம் அனைத்திலும் தோற்று பெரிய இனவழிப்புக்கு உள்ளானால் எஞ்சிய தமிழர்கள் யூதர்கள் போல தமக்குள் இணைந்து இலுமினாட்டி போல இயங்க வேண்டும். அதன் நோக்கம் தமிழர் தவிர அனைத்து இனத்தாரையும் அழிப்பது. அதன் மூலம் பூமியின் மீதான மனித ஆதிக்கத்தை அகற்றுவது. )

தமிழினம் நிலைக்க தமிழர்நாடு அமைப்போம்!
தமிழர்நாடு தனிநாடு!
ஒரே நாடு! ஒரே எல்லைக்கோடு! 

14.04.2021 அன்றைய பதிவு 
15.01.2025 இல் திருத்தங்கள் செய்யப்பட்டது 
15.01.2026 இல் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டது 

நாம் விடுதலை பெற நமது தமிழர்நாட்டை ராணுவ வேலியிட்டால் போதும்தான் ஆனால் முழுமையான விடுதலை பெற வடயிந்தியா மற்றும் தென்னிந்தியா உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும்.

அத்தகைய தொடர்புகளாவன,
1) சமஸ்கிருத வழிபாடு
2) உருது இசுலாமியர் குடியேற்றம்
3) தமிழகத்தின் வந்தேறிகள்
4) தமிழர்நாட்டு எல்லைக்கு அப்பால் குடியேறி இருக்கும் தமிழர்கள்
5) இந்திய அரசாங்க கட்டமைப்பு
7) இந்து மதம்
8 ) இந்திய ராணுவ கட்டமைப்பு

இதுவரை பலமுறை எழுதியிருந்தாலும் சுருக்கி தொகுத்து இங்கே தருகிறேன்.
  தமிழர்கள் சரியான திசையில் நடந்தால் (100 - 200 ஆண்டுகளில்) கீழ்க்கண்ட  வரிசைப்படி நிகழ்வுகள் நடக்கும்.

* மாநில அரசைத் தமிழர்கள் கைப்பற்றுதல். முன்னாள் ஆட்சியாளர்களைப் பிடித்து தண்டித்தல் அவர்களின் கறுப்புப் பணத்தை மீட்டல்.

* ஈழமும் தமிழகமும் ஒரே நாட்டின் இரு பகுதிகள் என்பதை உணர்தல். ஈழத்தமிழரும் தமிழகத் தமிழரும் இணைந்து இதற்காக கூட்டங்களும் விழாக்களும் நடத்துதல். பொங்கல் அன்று இவ்வாறான நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்.

* தமிழர்நாடு வரைபடத்தை (பார்க்க: படம்) பரவலாக பயன்படுத்துதல். ஒவ்வொரு வீட்டிலும் தமிழர்நாட்டு வரைபடத்தை மாட்டிவைத்தல். தம் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே தமிழர்நாடு தான் தாய்நாடு என்று சொல்லிக் கொடுத்தல்.

* பிற மாநிலங்களில் (தமிழக எல்லையை ஒட்டி இருப்போர் தவிர்த்து) குடியேறியிருக்கும் தமிழர்கள் தாய்நிலம் திரும்புதல். (வெளிநாட்டுவாழ் தமிழர்கள் அல்ல)

* ஈழத்தமிழரும் ஈழத்திற்கு வெளியே இருக்கும் தமிழரை (குறிப்பாக மலையகத் தமிழரை) ஈழத்திற்குள் குடியமர்த்துதல்.

* மாநில அரசு முடிந்தவரை அழுத்தி இங்கிருக்கும் பிற மொழியாளரை (அதிலும் புதிய வந்தேறிகளான வடவரை முதலில்) வெளியேறும்படி செய்தல், மேற்கொண்டு குடியேற்றம் நடக்காமல் தடுத்தல்.

* தமிழகத்திற்குள் மத்திய, மாநில மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை தமிழகத்தாரே பெற வழிசெய்தல். தமிழகத்தார் தொழில் நடத்த அதிக சலுகை தருதல்.

* மாநில அரசு தமிழகத்திற்குள் இந்தியை ஒழித்தல் மற்றும் கல்வியிலும் தேர்வுகளிலும் தமிழ்மொழியைக் கட்டாயமாக்குதல்.

* சமஸ்கிருத வழிபாட்டை ஒழித்தல். 300 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோவில்கள், தேவாலயங்கள், மசூதி போன்றவற்றை அரசே நடத்துதல். 
 மதம் சார்ந்த தனியார் அமைப்புகள் நடத்தும் வழிபாட்டுத் தலங்களை அகற்றுதல். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்.

* தமிழ்ச் சான்றோர் தமிழருக்கு என்று 'தனி இந்து மதத்தை' நிறுவுதல். 
[தற்போதைய நிலையில் தமிழகத்தில் அலுவலக ரீதியாக 'இந்து மதம்' என்று குறிப்பிடப்படுவது நமது வாழ்வியலுடன் கலந்துள்ளது. எனவே 'தமிழக இந்து மதம்' அதாவது அதன் கடவுளர், வழிபாட்டு முறை, சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியன ஆராயப்பட்டு அதில் வடக்கு சார்ந்த கலப்பு உள்ளவற்றை நீக்கிவிட்டு தனிப் பெயருடன் (மெய்யியல் மதம் என்று வைக்கலாம்) மதம் ஒன்று உருவாக்கப்பட்டு தமிழக இந்துக்கள் அந்த மதத்தவராக அறிவிக்கப்பட வேண்டும். தற்போதைய தமிழின இந்துக்கள் தாம் பின்பற்றி வரும் வடக்கு சார்ந்த விடயங்களை கைவிட வலியுறுத்த வேண்டும். தமிழின கிறித்துவ இசுலாமியர் இந்த மெய்யியல் மதத்திற்கு மாறுவதை ஊக்குவிக்க வேண்டும்]

* நதிநீர் பங்கீட்டில் வஞ்சிக்கப்பட்டால் அம்மாநிலத்தாரை வெளியேற்றுதல். அம்மாநில எல்லைகளை மூடுதல். கொடுக்கல் வாங்கலை முறித்துக் கொள்ளுதல். தமிழகத்தில் அம்மாநிலத்தார் நிறுவனங்களை  சொத்துக்களை முடக்குதல். தமிழ்தேசிய இயக்கஙள் அணைகளை தகர்க்க மிரட்ட விடுத்தல்.

* தமிழக மாநில அரசு மத்திய அரசிடம் இழந்த உரிமைகளை (குறிப்பாக கல்வி) மீட்க முயற்சித்தல். மத்திய அரசின் மிரட்டலுக்குப் பணிய மறுத்தல்.  நிதி கிடைக்காத பட்சத்தில் வரி கட்டாமல் முரண்டுபிடித்தல். வரி ஏய்ப்பு செய்து அதை கறுப்பு பணமாக மாநிலத்துக்குள்ளேயே தக்க வைத்தல்.
 தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கட்டமைப்பு மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு குடிநீர் உட்பட எந்த அடிப்படை உதவியும் செய்ய மறுத்தல்.

* தமிழ்தேசிய கட்சி புதுச்சேரி ஆட்சியைப் பிடித்து அதனை தமிழகத்துடன் இணைத்து ஒரே மாநிலம் ஆக்குதல். புதுச்சேரி சிறப்பு அந்தஸ்தை வெகுநாட்களாக கோரி வரும் குடகு மக்களுக்கு அதை விட்டுக்கொடுப்பதாக அறிவித்து அவர்களை கன்னடருக்கு எதிராக தூண்டிவிடுதல்.

* தமிழினம் சார்ந்த பழமையான கல்வெட்டுகள், பட்டயங்கள்,  சிலைகள் ஆகியவற்றை தமிழகம் கொணர முயற்சித்தல். தனியாரிடமோ வெளிநாட்டு அருங்காட்சியகத்திலோ இருந்தால் அதை விலை கொடுத்தோ அல்லது திருடியோ தமிழகம் கொணர்தல்.

* இழந்த எல்லைப் பகுதி பற்றி விரிவாக அரசிதழில் வெளியிடுதல் மற்றும் அவற்றை மீட்க வழக்கு தொடுத்தல் (வெற்றி தோல்வி முக்கியமில்லை).
 அத்தகைய எல்லலைப் பகுதிகளில் தமிழக எல்லையோர தமிழர் குடியேற ஊக்குவித்தல்.

----------  இதுவரை மாநில அரசின் காலம் (இவ்வாறு இயங்காத மாநில அரசை மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடித்தல் வேண்டும்)  --------

* தமிழக இளைஞர்கள் (குறிப்பாக தமிழ்ச்சாதிகளில் போர்க்குடியினர்)  தமிழினத்தின் 'ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்' உதவியுடன் புலிகள் போல கொரில்லா குழுக்களைத் தொடங்கவேண்டும்.
(மக்களோடு மக்களாக மறைந்திருந்து தாக்குதல்).
 ஈழத்தமிழர் இதற்கு உதவுதல். இளைஞர்களை ஈழத்தமிழர் வெளிநாடு வரவழைத்து முன்னாள் புலி போராளிகள் மூலம் பயிற்சி கொடுத்தல்.

* ஈழத்தமிழரும் தமிழகத்துடன் ஒன்றிணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குதல்
(காடுகள் மற்றும் மறைவிடங்களில் மறைந்திருந்து கொரில்லா தாக்குதல்கள் நடத்துதல்).

* கொரில்லா குழுக்கள் (தங்களுக்குள் அடித்துக்கொள்ளாமல் ஒற்றுமையாக இயங்கி) தமிழகத்தின் வேற்றினத்தாரை (குறிப்பாக சேட்டுகளை) தாக்கி விரட்டி அவர்களது செல்வங்களை எடுத்து மக்களுக்கு பங்கிடுதல்.
 மேலும் வேற்றினத்தாரை மிரட்டி அவர்களது சொத்துகளை குறைந்து விலைக்கு தமிழர்களுக்கு விற்கவைத்தல் 

* தமிழக ஈழ கொரில்லாக்கள் படிப்படியாக காவல் நிலையங்கள் மற்றும் இந்திய அரசின் ஆயுத சேமிப்புகள் மீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களைக் கைப்பற்றுதல். மீனவர்களை சேர்த்துக்கொண்டு சிங்கள கடற்படை மீது தாக்குதல் நடத்துதல். இந்திய எதிரி நாடுகளிடம் ஆயுதம் , பணம் மற்றும் பயிற்சி போன்ற உதவிகளைப் பெறுதல்.

 * ஹிந்தியாவில் பிற இனங்களையும் இதேபோல பிரிவினைக்குத் தூண்டுதல். இந்தியாவிற்குள் இயங்கும் ஆயுதக் குழுக்களுடன் கொள்கை தாண்டிய புரிதலுடன் தொடர்பில் இருத்தல். 

* தமிழக மாநில அரசு கொரில்லா குழுக்களைத் தடைசெய்ய மறுத்தல் அழுத்தம் அதிகரித்தால் தனிநாடு தீர்மானத்தை அறிவித்தல். அதனை ஏற்காவிடில் பதவி விலகுதல் (இதில் துரோகம் செய்தால் ஆயுதக் குழுக்களால் ஆட்சியாளர்கள் களையெடுக்கப் படுதல்).

* தற்போது மாநில அரசு இல்லாத பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் (புதிய மற்றும் பழைய) வந்தேறிகளை முற்றாக விரட்டிவிடுதல். தமிழகத்திற்குள் இருக்கும் அவர்களின் செல்வங்களை எடுத்துக்கொண்டு சொத்துக்களை தமிழக மக்களுக்கு அளித்தல். தமிழ்தேசியத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் எந்த மக்களையும் அழித்து ஒழித்தல். 

* தமிழ் பொதுமக்கள் நிதி திரட்டி (குறிப்பாக தங்க நகைகள்) தமிழ் ஆயுதக் குழுக்களின் தேவைகளுக்கு வழங்குதல், ஆயுதப் போரில் பங்களித்தல் மற்றும் முடிந்த அளவு உதவிகள் செய்தல்.

* புலம்பெயர் தமிழகத்தாரும் ஈழத்தாரும் நிதி திரட்டி நவீன ஆயுதங்கள் வாங்கி அனுப்புதல். 

* தமிழின உளவுத்துறை ஏற்படுத்துதல். உள்நாட்டில் உளவுத்துறை துரோகிகளைக் களையெடுத்தல்.

------------ இதுவரை ஆயுதக் குழுக்கள் காலம் (இவ்வாறு இயங்காத ஆயுதக்குழுக்களை மக்கள் ஆதரிக்கக்கூடாது)  --------------

* மாநில அரசு பதவி விலகி ஆயுதக் குழுக்கள் பலம் பெற்ற நிலையில் இந்திய ராணுவம் நேரடியாக மோதலுக்கு வரும்போது இந்திய ராணுவத்தில் உள்ள தமிழர்கள் விலகி தமிழக கொரில்லாக்களுடன் இணைந்து முழுமையான தமிழர் படையை உருவாக்குதல் (கொரில்லாக் குழுக்களின் கூட்டணிப் படை). அதற்கு இணங்காத தமிழ் ராணுவ வீரர்களின் குடும்பங்களை அச்சுறுத்தல் மற்றும் தண்டித்தல்.

* தமிழகத்தில் காடுகள் குறைவு எனவே (ஆரம்பகால யாழ்ப்பாணத்துப் புலிகள் போல urban guerrilla பாணியில்) மக்களோடு மக்களாக மறைந்திருந்து இந்திய ராணுவத்தை முதலில் கொரில்லா முறையிலும் படிப்படியாக மரபுவழி ராணுவ முறையிலும் தொடர்ந்து சண்டையிட்டுத் தோற்கடித்து தமிழர் பெரும்பான்மைப் பகுதிகளை ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்.

* புலிகள் போல முப்படைகளைக் கட்டியெழுப்புதல்
இதற்கு கோவில்களில் உள்ள நகைகள், சிலைகள் மற்றும் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பழமையான பொருட்களை உலக சந்தையில் விற்று பொருள் திரட்டிக் கொள்ளுதல். உலகில் ஒரு நாட்டுக்காக மற்றொரு நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் செய்து அதற்காக பணம் பெறவும் செய்யலாம். 

* தமிழகம் மட்டுமல்லாது 1956 ல் பறிபோன எல்லைப் பகுதிகளை மீட்க போரிடுதல்.
ஈழத்திற்கு ஆயுதம் மற்றும் படையுதவி செய்து சிங்கள ராணுவத்துடன் போரிட்டு ஈழத்தை மீட்டல்.
 இதற்கு உலகளாவிய தமிழர் உதவுதல்.

* தமிழர்நாட்டில் (தமிழகம் மற்றும் ஈழம் என) பாதியளவு நிலமாவது தமிழர் படையின் கைவசம் வந்தபிறகு 'தமிழர்நாடு' வரைபடத்தையும் சான்றுகளையும் வெளியிட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தல். முழுமையான எல்லைகளை மீட்கும்வரை தொடர்ந்து போரிடுதல்

* தமிழினம் ஒரு தனி தேசிய இனம், தமிழர்நாடு இயல்பிலேயே தனிநாடு என்று ஒத்துக்கொண்டு பேச வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உடன்படுதல். தனிநாடு தவிர்த்த எந்த சலுகைக்கும் இணங்க மறுத்தல்.

* ஈழத்து இசுலாமியர் விடுதலைக்கு உதவவில்லை என்றால் அவர்களை அழித்துவிட்டு அங்கே தமிழக இசுலாமியரை குடியமர்த்துதல்.

* தமிழர் நாட்டில் மதப் பிரச்சாரம் தவிர மதரீதியான உரிமைகள் எப்போதும் அளிக்கப்படுதல். மத ரீதியான ஆயுதக் குழுக்கள் ஆரம்பத்திலேயே களையெடுக்கப்படுதல்.

* வடக்கிலிருந்து (குறிப்பாக பீகாரிகள்) கூலிப்படைகளைக் கொணர்தல் முன்களத்தில் இந்திய ராணுவத்துக்கு எதிராக பயன்படுத்துதல் (ஈழத்திலும் கரையோர சிங்களவரை இவ்வாறு பயன்படுத்தலாம்)

* தமிழருக்கு எதிராக இயங்கி லாபம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் உலகளாவிய அளவில் உளவுத்துறை மூலம் களையெடுக்கப்படுதல் (அவர்களின் கறுப்பு பணத்தை பெற்றுக் கொண்டு விட்டுவிடவும் செய்யலாம்).

* அண்டை மாநிலங்கள் (குறிப்பாக கர்நாடகா) தமிழருக்கு வரும் ஆறுகளை மறித்து கட்டியுள்ள அணைகளை குண்டுவைத்துத் தகர்த்தல். அம்மாநில மொழிவழி சிறுபான்மை இனத்தாரைத் தூண்டி தனிநாடு அல்லது மாநில சுயாட்சி கோரவைத்தல்.

* 2009 இனப்படுகொலைக்கு இலங்கை அரசு மன்னிப்பு கோராயிராத பட்சத்தில் சிங்கள நாட்டின் மீது படையெடுத்து ஒரு இனப்படுகொலையைச் செய்து நியாயத்தை நிலைநாட்டுதல்.

* உலக அளவில் பல்வேறு துறைகளில் மேதாவிகளாக உயரிய பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் தமிழர்நாடு (வலுக் கட்டாயமாகவேணும் ) அழைத்துவரப்பட்டு தமிழர்நாடு மீள்கட்டமைப்பு செய்தல்.

* ஆயுதத் தொழிற்சாலை தொடங்குதல் தன்னிறைவு போக மீதியை விற்றல். புதிய வகை ஆயுதங்களைக் கண்டுபிடித்தல் மற்றும் உருவாக்குதல்.

* விடுதலைப் போராட்டத்தில் தமிழருக்கு ஆதரவாக இருந்த பிற இனத்தவரையும் "தமிழ்நாட்டு குடிமக்களாக அங்கீகரித்தல்"

* திருநங்கையர் படையணி உருவாக்குதல். திருநங்கையர் முதல் தேர்வு ராணுவம் என்றவாறு அவர்களை மூளைச்சலவை உலகளாவிய திருநங்கைகளை அப்படையில் தமிழின திருநங்கைத் தலைமையில் இணைத்தல் 

* சிறந்த எதிர்தரப்பு போர்வீரர்களுக்கும் பட்டங்கள் வழங்குதல். அழித்தொழிக்கப் படும் எவரைப் பற்றியும் முறையாக ஆவணப்படுத்தி நினைவு தினம் அனுஷ்டித்தல். இவ்வாறு நேர்மையான எதிரிகளை மதித்தல்

* ராணுவ ஆட்சியிலும் ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் அரசாங்கம் அமைத்தல்

* ஆயுதக் குழுக்கள் தமக்குள் ஜனநாயகத் தேர்தல் மூலம் 'தமிழர்நாட்டு ராணுவப் பதவிகளைப்' பெற்று அதிகாரப்பூர்வ 'தமிழர்நாட்டு ராணுவத்தை' உருவாக்குதல் அல்லது குறித்த இடத்தில் குறித்த நேரம் மட்டும் சண்டை செய்து (pitched battle) யார் அதிகாரப்பூர்வ ராணுவத்தில் இடம்பெறுவது என்று முடிவு செய்தல்.

* விடுதலைக்கு பெருமளவு பங்களித்த ஒருவர் மன்னராக முடிசூட்டப்படுதல். அவரது பரம்பரை சுகபோகமாக வாழ வழிசெய்தல்.

-------- இதுவரை தமிழர் படையின் காலம் ---------

* தமிழர் உளவுத்துறையின் வெளிநாட்டுப் பிரிவு மொழிவழி இனங்களைத் தூண்டி தனிநாடு கோர வைத்து விடுதலைக்கு வழிகாட்டுதல். இவ்வாறு பெரிய  நாடுகளை உடைத்தல் (முதலில் தென்னிந்தியா பிறகு வட இந்தியா பிறகு பாகிஸ்தான், பர்மா என படிப்படியாக)

* இந்திய மற்றும் உலகளாவிய ஆயுதக் குழுக்களுடன் கொள்கை பேதமின்றி கூட்டணி அமைத்தல் மற்றும் ஆயுதச் சந்தையில் ஈடுபடுதல் ஆயுத வணிகத்தைக் கைப்பற்றுதல்.

* (கிட்டத்தட்ட அனைத்து) உலக நாடுகளில் இருக்கும் 'மொழிவழி இனத்தார்' தனிநாடு கோரத் தூண்டுதல் அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆயுதம் விற்றல்.

* உலகம் முழுவதும் நாடுகளை இனவழி உடைக்கும் அரசியல் செய்தல். ஒரே மொழிபேசும் நாடுகளை ஒரே நாடாக இணையச் செய்தல். மொழிக்குடும்பம் அடிப்படையில் நாடுகளின் கூட்டணிகளை உருவாக்குதல். அதற்கு முன்னுதாரணமாக இருக்க தென்னிந்திய மொழிக்குடும்ப கூட்டணியை (கிட்டத்தட்ட திராவிடம்) ஏற்படுத்த முயற்சித்தல் ( அதாவது அண்டை இனத்து தேசியவாத ராணுவக் குழுக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர உதவி அதற்குமுன் எல்லைப் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்தல்)

-------- இதுவரை உளவுத்துறையின் காலம்  ----------

* இயற்கை வளங்களை மேம்படுத்தல் மற்றும் 'நவீன காட்டு வாழ்க்கைக்குத்' திரும்புதல்

* கடவுள் நம்பிக்கையற்ற இயற்கையையும் மொழியையும் முன்னோரையும் போற்றும் புதியதொரு மதத்தைத் தோற்றுவித்தல். அதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு அரச மதமாக அறிவித்தல். அதனை உலக அளவில் (அவரவர் இனத்திற்கு ஏற்ப) பரவச் செய்தல்.

* சேது கடலில் மண்ணைக் கொட்டி ஈழத்திற்கு நிலத்தொடர்பு ஏற்படுத்துதல். அதில் குடியிருப்புகளையும் சுற்றுலாத் தளங்களையும் ராணுவ முகாம்களையும் அமைத்தல்.

* தமிழர்நாடு ஓரளவு நிலைபெற்றதும் புலம்பெயர் தமிழர் மற்றும் அவரது சந்ததியினர் அனைவரும் தாய்நிலம் திரும்புதல். திரும்ப முடியாதவர் தம்மைப் பதிவு செய்து குடியுரிமை பெறுதல் அவ்வப்போது வந்து குடியுரிமையைப் புதுப்பித்தல்.

* தமிழர்நாடு முழுக்க தமிழர் கட்டுப்பாட்டுக்கு வந்து அரசாங்க கட்டமைப்பு ஏற்படுத்தி 20 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு (தற்போதைய அரேபிய நாடுகளைப் போல) நிரந்தர குடியுரிமை அன்றி பிற இனத்தார் வந்துபோகவும் வேலைசெய்யவும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தல்.

* இயற்கை உணவு மற்றும் மருந்துகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் பொருளாதாரத்தைப் பெருக்குதல். வளங்களை அழித்து பொருளாதாரம் அடையவேண்டும் என்று நினைக்காமல் எப்போதும் இருத்தல்.

* வடக்கெல்லைக் கோடு அதிக வளைவு  நெளிவு இல்லாமல் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும் அதை சீனப் பெருஞ்சுவர் போல பெருஞ்சுவர் கட்டி காவலரண் அமைத்து நிரந்தர எல்லை ஆக்குதல்

* பொருளாதாரம் பெருகிய பின் கடலில் ஆய்வு செய்து குமரிக்கண்டம் பற்றிய சான்றுகளை வெளிக்கொணர்தல். தமிழினமே மூத்தது என்று அறிவித்தல்.

* (ஐரோப்பிய ஒன்றியம் போல) ஒரே மொழிக் குடும்பமான தென்னிந்திய நாடுகள் ஒன்றியம் அமைத்தல். அதில் பொதுவான பணத்தாள், தற்காலிகக் கடவுச்சீட்டுக் குடியேற்றம், வரையறை செய்யபட்ட போக்குவரத்து, கூட்டு ராணுவப் பயிற்சி என ஒருவருக்கொருவர் உதவுதல்.

* உலகம் முழுவதும் மொழிவழி இனங்களை (நாடுகளை) திரட்டி அந்த அணிக்கு தமிழர்நாடு தலைமை ஏற்றல் மூலம் உலக வல்லரசாக உருவெடுத்தல்.

* உலகில் எங்கேயும் இனவழிப்பு நடக்காமல் தடுத்தல் மற்றும் இனப்படுகொலை செய்தோரைத் தண்டித்தல்.

-------- இதுவரை தமிழர் நாட்டரசின் காலம்  -------------

மேற்கண்டது ஒரு கணிப்பு மட்டுமே!
இதுவும் உடனடியாக செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்!
(அதாவது தாய்நிலத்தில்  நாம் பெரும்பான்மையாகவும் பொருளாதாரத்தில் சற்று நல்லநிலையிலும் அதிகமான இளைஞர்கள் கொண்ட தலைமுறையாகவும் தற்போது இருக்கிறோம். 15 ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிடும்)
இக்கணிப்பின்படியும் தமிழர்நாடு அமைய அத்தனை எளிதாக வல்லாதிக்க சக்திகள் விடாது. இருந்தாலும் நாம் முயற்சி செய்யவேண்டும்.

'தனித் தமிழர்நாடு' அமைக்க நாம் வைக்கும் விலை ஒரு லட்சம் உயிர்கள். அதற்கு மேல் உயிர்ப்பலி நடந்தாலோ (அல்லது மாநில அரசின் காலத்தில் மீத்தேன், அணுவுலை போன்ற மண்ணழிப்பு திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டாலோ) அல்லது போர் நடக்கும்போது அணுகுண்டு, நோய் பரப்புதல் போன்ற மிக அழிவு தரக்கூடிய தாக்குதலை தமிழர் மீது செய்தாலோ தமிழினம் நியாய தர்மம் பார்க்காமல் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் 'அகன்ற தமிழர்நாடு' அமைக்க முயற்சிக்க வேண்டும்.
 உலக அளவில் தமிழர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று பெயரெடுக்கும் அளவுக்கு இனம் மொத்தமும் இதில் தீவிரமாக இயங்க வேண்டும்.
அதாவது வடக்கே மட்டும் நில (அல்லது ஆறு) எல்லை. மற்ற மூன்று திசையில் கடல் மட்டுமே எல்லை. அதற்குள் இருக்கும் பிற இனத்தாருக்கு மாநில உரிமைகள் வழங்கி நல்லாட்சி நடத்துதல். இதுவே நாம் பாதுகாப்பாக வாழ வழி.

அதாவது நமது இலக்கு விடுதலைப் படை கட்டி 'தமிழர்நாடு' அமைப்பதுதான் அதை தீவிரவாதம் செய்து 'அகன்ற தமிழர்நாடு' அமைப்பது என்று காலம் மாற்றலாம்.

(மேற்கண்ட அனைத்தையும் பற்றி விரிவான தனித்தனி பதிவுகள் வேட்டொலி இணையத்தில் உள்ளன. ஒருவேளை நாம் அனைத்திலும் தோற்று பெரிய இனவழிப்புக்கு உள்ளானால் எஞ்சிய தமிழர்கள் யூதர்கள் போல தமக்குள் இணைந்து இலுமினாட்டி போல இயங்க வேண்டும். அதன் நோக்கம் தமிழர் தவிர அனைத்து இனத்தாரையும் அழிப்பது. அதன் மூலம் பூமியின் மீதான மனித ஆதிக்கத்தை அகற்றுவது. )

தமிழினம் நிலைக்க தமிழர்நாடு அமைப்போம்!
தமிழர்நாடு தனிநாடு!
ஒரே நாடு! ஒரே எல்லைக்கோடு! 

14.04.2021 அன்றைய பதிவு 
15.01.2025 இல் திருத்தங்கள் செய்யப்பட்டது 
15.01.2026 இல் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டது