Saturday, 16 May 2026

2026 இல் குழப்பத்தில் இருக்கும் மக்களுக்கு

2026 இல் குழப்பத்தில்  இருக்கும் மக்களுக்கு....

 
 இந்த நாட்டில் தேர்தல் உட்பட எல்லாமே நேர்மையாக நடக்கிறது என்று கூறுவோர் இதைப் படிக்க வேண்டாம்!
 வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தும் அமெரிக்கரும் ஜப்பானியரும் மின்னணு வாக்குப்பதிவு (EVM)  நடத்தும் நம்மை விட முட்டாள்கள் என்று கூறுவோரும் இந்த பதிவை தவிர்த்து விடுங்கள்!
 ஒரு சினிமா பிரபலம்! கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் எந்தவித மக்கள் பணியும் செய்யாமல் பெரும்பான்மை அளவுக்கு தேர்தலில் ஜெயிக்க முடியும் என்று நம்புவோரும் இதைப் படிப்பது வீண்!

 மற்றபடி 'தேர்தல் முடிவுகள் எதுவும் நம்பும்படி இல்லை! ஏதோ திரைமறைவில் நடக்கிறது' என்று சந்தேகப் படுபவர்கள் இந்த பதிவைப் படிக்கவும்!

 'உங்கள் (நாம் தமிழர்) கட்சி ஜெயிக்கவில்லை என்றதும் EVM மேல் பழிபோடுகிறாயா?' என்று கேட்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 பரிச்சையில் நன்றாக எழுதி தேறாமல் போனவன்தான் மறுகூட்டல் செய்ய கோரிக்கை வைப்பான்!
 சரியான நேரத்துக்கு வராத தொடர்வண்டியில் தான் பழுது இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
 
 EVM பற்றியும் SIR பற்றியும் எப்போதும் விமர்சித்தே வந்துள்ளோம்! அது உங்கள் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம்! ஒரு மணிநேரம் மக்கள் பிரச்சனைகளைப் பேசிவிட்டு ஒரு நிமிடம் ஒரு நடிகனைப் பற்றி பேசினால் அந்த ஒரு நிமிடம் மட்டும் எல்லாருக்கும் போய் சேருகிறதே அதுபோல..

 விசயம் என்னவென்றால் உங்களைச் சுற்றி நடந்தவற்றை கவனியுங்கள்.
 எதாவது நம்பும்படி இருக்கிறதா?!
 தவெக இத்தனை பெரிய வெற்றி பெற்றதை அந்த கட்சியனரே கூட கொண்டாடவில்லையே! 
 முகம் தெரியாத வேட்பாளர்கள் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் கட்சியின் வேட்பாளர்களை இவ்வளவு எளிதில் வீழ்த்த முடியுமா?!
 எதிரியே ஆனாலும் ஸ்டாலின் தோல்வி சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?!

 இவை மட்டுமில்லை எங்கள் வாக்குவங்கி குறையாது என்று உறுதியாக கூறிவந்த நாதக வினரும் சீமானும் கூட மறு எண்ணிக்கை (அதாவது வாக்கு பட்டனை அழுத்தியதும் வரும் vvpad எனும் துண்டு சீட்டை) கோரிக்கை வைக்கவில்லை என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
tvk வெற்றி என்பது எந்தவிதத்திலும் நம்ப முடியவில்லை.
 ஊரில் வெட்டியாத் திரியும் பத்து தற்குறிப் பயல்கள் அவர்கள் கட்சியை வெல்லவைத்து விட்டார்கள் என்பதும்.... 
 இன்ஸ்டாகிராமில் வைரல் வீடியோ செட் செய்து ரூட் மாபியா எனும் இணையதளக் கூலிப்படை மக்களை நம்பவைத்து வீட்டனர் என்பதும்....
 நாலு ஜூனியர் ஆர்டிஸ்ட்களை நைட்டி போட்ட குடும்ப பெண்கள் போல பேச வைத்து பெண்கள் வாக்குகளை எல்லாம் பெற்றுவிட்டனர் என்பதும்....
 வீட்டில் குழந்தைகள் அடம்பிடித்ததால் முதியவர்கள் விஜய்க்கு வாக்களித்து விட்டனர்  என்பதும்....
 விஜய் பெரிய ஆணழகன் அவர் கவர்ச்சியில் மயங்கி இளம்பெண்கள் வாக்களித்தனர் என்பதும்...
 இந்த கால இளைஞர்கள் எல்லாரும் சினிமா பைத்தியங்கள் அந்த ரசிக மனப்பான்மையில் விஜய்க்கு வாக்களித்தனர் என்பதும்...
 பரம்பரை திமுக குடும்பங்கள் கூட விஜய் நல்லது செய்வார் என்று நம்பி வாக்களித்தனர் என்பதும்...
 ஸ்டாலின் தோல்வி ஆனால் உதயநிதி வெற்றி என்பதும்...
 சுத்தமாக நம்பும்படி இல்லை!
 
 இந்த வெற்றிக்கு கொஞ்சம் நம்பும்படி இருப்பது விஜய் நிறுத்திய வேட்பாளர்கள் அனைவருமே அந்தப் பகுதி பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த அரசியல் பின்னணி உள்ள பணக்கார வேட்பாளர்கள் என்பது மட்டுமே! 

 இருந்தாலும் இத்தனை பெரிய வெற்றி?!!!!

சரி! இத்தனை பெரிய வெற்றி என்றால் அது மக்களின் மிகப் பெரிய எழுச்சி என்று ஆகிறது.
என்றால் தமிழகத்தின் பாதி மக்கள் அதைக் கொண்டாடியிருக்க வேண்டுமே?!
 எங்குமே அத்தனை பெரிய கொண்டாட்டங்கள் இல்லையே?!
 
 இந்தியாவை ஆளும் கார்ப்பரேட் முதலாளிகளின் தலைமை பீடம் இதை செய்வதாக நான் நம்புகிறேன்!

 ஏற்கனவே இவர்கள் பற்றி நான் கூறிவருவது என்னவென்றால் தேர்தல் நடத்தி அதன் முடிவுகளை கொஞ்சம் கூட்டி குறைத்து அறிவிப்பார்கள்!
 இதை செட் செய்ய தேர்தல் முடிந்ததும் சில நாட்கள் எடுத்துக்கொண்டு உளவுத்துறை மூலம் மக்கள் மனநிலையை கண்கானித்து பிறகு வெளிவிடப்போகும் முடிவுக்கேற்ப மக்களை ட்யூன் செய்து முடிவுகளை அறிவிப்பர்.
 அதாவது நாம் தமிழர் 15% வாங்கியிருந்தால் அதை 7,8  என்றாக்குவர், திமுக, அதிமுகவில் எங்கே யார் தேவையோ அதற்கு ஏற்றாற்போல ஏற்றி இறக்கி வெளியிடுவர்.

 மக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பர்!
 ஏனென்றால் எத்தனை பெரிய அரசு என்றாலும் மக்கள் சக்திக்கு மீறி நிலைக்க முடியாது!

 ஆனால் இந்தமுறை...?!
 
 இந்த முறை முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக முடிவுகளை வெளியிட்டுள்ளனர். 
 மக்கள் இதை கண்டறிகின்றனரா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

 சிலருக்கு இப்போது சந்தேகம் வரத் தொடங்கியுள்ளது. 
 அதை சரிகட்டவே விஜய் அப்படி ட்ரிக் செய்தார் இப்படி செட்டப் செய்தார் அதனால் வாக்கு பெற்று வென்றுவிட்டார். 
 மக்கள் அவரிடம் ஏமாந்துவிட்டனர் என்று குழப்ப நினைக்கின்றனர்.

 எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது!
 என் தமிழ் மக்கள், என் தமிழினம் இத்தனை முட்டாள்த் தனமான முடிவெடுக்க வாய்ப்பே இல்லை! 
 
 என் மக்கள் திராவிடத்திடம் ஏமாந்தனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியும்!

 ஆனால் போயும் போயும் ஒரு நடிகரிடம் ஏமாந்துவிட்டனர் என்பதை என்னால் ஒருக்காலும் ஏற்கமுடியாது!
 தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் எத்தனையோ நடிகர்கள் கட்சி தொடங்கி படாத பாடு பட்டும் பெறமுடியாத வெற்றியை விஜய் பெற்றுவிட்டார் என்பதை எப்படி உங்களால் நம்ப முடிகிறது?!

 புதுச்சேரியில் புஸி ஆனந்த் செல்வாக்கு இருந்தும் அஞ்சலையம்மாள் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தாலும் தவெக 17% வாக்கு மட்டுமே பெற்றுள்ளது.

 எம்.ஜி.ஆர் இங்கே ஒப்பிடக்கூடிய ஒருவர் என்றாலும் அவரது அரசியல் பயணம் நீண்ட நெடியது! படிப்படியாகவே அவர் அந்த இடத்தை அடைந்தார்!
 விஜயகாந்த் கூட அவ்வாறே! 
படிப்படியாக வளர்ந்துதான் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்!
 சினிமாவில் ஒரு பாட்டில் பணக்காரன் ஆனதுபோல விஜய் ரெண்டே வருடத்தில் டைரக்ட்டா சிஎம் ஆய்விட்டார் என்பதெல்லாம் கற்பனையில் கூட நடவாத காரியம்!

 ஆம் ஆத்மி கேஜரிவாலுடன் இவரை ஒப்பிடலாம் என்றால் அவரது கல்வி தகுதியும் அவரது அரசியல் நடவடிக்கைகளும் அவர் பதவிக்கு வந்த பிறகு செய்த அதிரடியாக செயல்களும் இன்றுவரை அவர் மீது நடக்கும் அடக்குமுறைகளும் அவர் எத்தனை ஆளுமை படைத்த மனிதர் என்பதைக் காட்டும்!
 
 நாம் தமிழர் தம்பிகளே!
கவனமாகக் கேளுங்கள்!
எது நடந்தால் நீங்கள் அரசியலை விட்டே வெறுத்து ஒதுங்குவீர்களோ மிகச் சரியாக அது நடத்தப் பட்டுள்ளது!
 எது நடந்தால் நாம் அதிர்ச்சியில் உறைந்து துவண்டு போவோமோ அது நடத்தப் பட்டுள்ளது!
 எது நடந்தால் நமக்கு மக்கள் மீதும்
 நம் குடும்பத்தினருக்கு நம் மீதும் 
கடுங்கோபம் வருமோ அது நடத்தப்பட்டுள்ளது!

 இது சதி! 
மக்கள் நமக்கு முன்பை விட பல மடங்கு வாக்களித்துள்ளனர்!
 விஜய் பெற்ற வாக்குகள் அத்தனை கட்சிகளும் பெற்ற வாக்குகளில் கொஞ்சம் கிள்ளிப்போட்டு நாதக வாக்குகளை மட்டும் அள்ளிப்போட்டு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

 மக்களுக்கு இந்த சதியைப் புரியவையுங்கள்!

 மக்கள் புதியவருக்கு வாய்ப்பளித்தே வந்துள்ளனர்.
 எடப்பாடி தேர்வான போது அவர் ஆட்சிக்கு புதியவர்!
ஸ்டாலின் தேர்வானபோதும் அவர் ஆட்சிக்கு புதியவர்!
 அப்படி இந்த முறை சீமானை தேர்ந்தெடுக்கவே மக்கள் வாக்களித்திருக்க வேண்டும்!
 அதை விஜய்க்கு மாற்றிவிட்டனர்.

 தமிழினத்தின் கடைசி நம்பிக்கையான சீமான் அவர்களே!
 நீங்கள் இந்த கோணத்தில் சிந்திக்காதது கட்சிக்குள்ளேயே உங்கள் மீதான சந்தேகத்தை வளர்க்கும்!
 இதோடு உங்கள் அரசியல் வாழ்க்கையே முடியப் போகிறது எனும நிலைக்கு வந்துவீட்டீர்கள்!
 இனியாவது உண்மையை உணருங்கள்! 
கள நிலவரம் உங்களுக்கு தெரியாமல் இருக்காது!
 
 உங்கள் வாக்கு சதவீதம் இவ்வளவு கீழறங்க வாய்ப்பில்லை!
அதிலும் உங்கள் தொகுதியில் உங்கள் நிலை இவ்வளவு பரிதாபமாக மாற வாய்ப்பே இல்லை!

 விஜய்க்கு விழுந்த வாக்குகள் எப்படிப் பார்த்தாலும் கூட்டணி இல்லாமல் திராவிடத்தை எதிர்த்து பணம் கொடுக்காமல் சாதி மத கணக்குகளைத் தாண்டி பெறப்பட்ட வாக்குகள்!
 எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்!

 மீண்டும் எழுந்து வாருங்கள்!
இடைத்தேர்தலில் வாக்கு மோசடி நடந்துள்ளது என்ற கோணத்தில் பிரச்சாரம் செய்து களம் காணுங்கள்!
 இது மோசடியான தேர்தல் என்று ஆதாரங்களைத் திரட்டி சட்டரீதியாகவும் எதிர்வினை ஆற்றுங்கள்!

 நீங்கள் பெற்று விஜயிடம் பறிகொடுத்த வாக்கு உங்கள் உழைப்பு மட்டுமில்லை 15 ஆண்டுகளாக தன் சந்தோசத்தையும் பணத்தையும் வாழ்க்கையையும் உங்களுக்காகத் தொலைத்த தம்பிகளின் வாக்கு! 
  
 உங்களையே நம்பியிருக்கும் வருங்கால சந்ததிகளின் வயிற்றுக்கு போகவேண்டிய சோறு!

 குடியால் அல்லல் படும் பல தாய்மார்களின் தாலி!

 இதை பறிகொடுத்துவிட்டு உங்களால் எப்படி பேசாமல் இருக்க முடிகிறது?! 

 அதிமுக வினரே! குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களே!
 இடைத்தேர்தலை நீங்கள் புறக்கணித்த போதும் உங்கள் ஆதரவை நாதகவுக்கு வழங்க உங்களுக்கு மனமில்லை!
 அன்று அதைச் செய்திருந்தால் நாம் தமிழருடன் கூட்டணி கூட அமைந்திருக்கலாம்.
 இன்று உங்கள் நிலை என்ன?!
கட்சி பிளந்து உங்களையே வெளியே தள்ளும் நிலை!
அந்த இடைத் தேர்தலில் விஜய் மைக் சின்னத்தை கையிலெடுத்து மறைமுக ஆதரவு கொடுத்த போதும் உங்களுக்கு மனம் வரவில்லை.
 கடைசியில் கடிபட்ட அதே பாஜக எனும் பாம்புக்கே பால் வார்த்து இன்று மீண்டும் கடிபட்டு நிற்கிறீர்கள்!

 விஜய் கூட்டணி வருவார் என்று கணக்கு போட்டு அவர் கரூர் நிகழ்வில் பேடித்தனமாக ஓடி பொதுவெளியில் வசமாக சிக்கியபோது விமர்சிக்காமல் தப்பவிட்டீர்கள்!
 இன்று அவரது ஏளனப் பார்வைக்கு ஆளாகி நிற்கிறீர்கள்.

 வரும் இடைத் தேர்தலிலாவது மீண்டும் அதே தவறைச் செய்யாமல் சீமான் அவர்களை ஆதரித்து செயல்படுங்கள்! 

 விஜய் ரசிகர்களே!
 இதை உங்கள் வெற்றியாக பார்ப்பது தவறு!
 விஜய் தரப்பு வாக்கு கொடுத்தபடி எந்த ரசிகருக்கும் கட்சி பதவியோ வேட்பாளர் வாய்ப்போ எம்.எல்.ஏ பதவியோ வழங்கவில்லை!
 அவருடைய டிரைவர், திரையுலக நண்பர், ஜோசியர் என அடிபொடிகளுக்கு கூட பதவி வழங்கியுள்ளார். 
 வாக்குறுதிகளை நிறைவேற்றவும் போவதில்லை அதற்கும் நீங்கள்தான் வசவு வாங்கவேண்டும். 
 சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு!
தீவிர விஜய் ரசிகராக இருந்தும் அரசியலுக்கு அவர் சரிப்பட மாட்டார் என்று நேர்மையாக வாக்களித்த பலரை எனக்கு தெரியும்!
 இன்று பலருக்கு விஜய் மீது இருக்கும் வெறுப்பும் கூட அவர் சம்பாதித்து இல்லை உங்கள் நடத்தையால் ஏற்பட்டதுதான்.
 இனியாவது திருந்துங்கள்!
மாயையில் இருந்து வெளியே வாருங்கள்!

 விஜய்க்கு ஓட்டுபோட்ட மக்களே!
  விஜய் காலில் இருக்கும் செருப்பைக் கழட்டி அடித்தால் கூட சந்தோசமாக வாங்கிக் கொள்ளும் ஈனப் பிறவிகள் நீங்கள்! 
 சீமானை விடுங்கள்! 
 இந்த திராவிட காட்டுமிராண்டி அரசை எதிர்த்து களத்தில் இத்தனை ஆண்டுகள் உயிரைக் கொடுத்து போராடிய நாம் தமிழர் தம்பிகளை விட்டுவிட்டு கண்ட கழிசடைக்கும் வாக்கு போட்ட நீங்களெல்லாம் பெற்ற தாயை.....
வேண்டாம் விடுங்கள்
 உங்களைத் திட்டி வார்த்தைகளை வீணாக்க விரும்பவில்லை!


 தமிழர்களே! நம்மை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்தோம்!
 ஆனால் தமிழன் என்பதைத் தவிர வேறு ஒரு தகுதியும் இல்லாத ஒருவரை நம் தலையிலே கட்டிவிட்டனர். 
 ஏன் விஜய்?!
 விஜய்க்கு சமூக பின்புலம் கிடையாது! 
 தாய், தந்தை, மனைவி, பிள்ளை என எந்த ஆதரவும் கிடையாது!
 அவர் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை! 
 விஜயின் அப்பா விஜய் பெயரில் கட்சி தொடங்கிய போது அதை கடுமையாக எதிர்த்து அவர் மீதே வழக்கு போட்டவர் விஜய்! 
 அடுத்த ஓராண்டுக்குள் கட்சி தொடங்கினார் என்றால் யோசித்துப் பாருங்கள்!
 யாருடைய அழுத்தமோ இதற்கு காரணம் என்று யூகிக்கலாம்.
அரசியலும் தெரியாது மக்கள் மீது அக்கறையும் கிடையாது!
 தனக்காக மட்டுமே வாழ்பவர்!  
 சேர்த்திருப்பதும் கருப்பு பணம்!
அவரை அதிகாரத்தில் அமரவைக்க எந்த நிபந்தனை கூறினாலும் ஏற்கும் நிலையில் உள்ளவர்.

 இது தமிழ்தேசிய வெற்றி அல்ல! ஏமாற்று! 
 ஆரம்பத்தில் விஜயை சீமான் ஆதரிக்க காரணம் அவருக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் இருந்த மோதல் அதனால் அவர் சந்தித்த இடைஞ்சல்கள்.
 அவர் தமிழ்தேசிய கட்சி தொடங்கி அரசியலுக்கு வராத இளைஞர்களை தமிழ்தேசியத்தின் பக்கம் கொண்டுவருவார் என்றுதான்!

 சீமான் செய்த மிகப்பெரிய தவறு அது! 

 எது எப்படியோ குறைகள் பல இருந்தாலும் இன்று சீமானைத் தவிர வேறு நல்ல அரசியல் தலைவர் இல்லை! 

 எனவே இனியும் தொடர்ச்சியாக சீமானை ஆதரிப்பதைத் தவிர வேறுவழி இல்லை! 
 
 இந்த பதிவை நம்பாதவர்கள் கொஞ்சம் பொறுங்கள்!
 விஜயை ஏன் முதலமைச்சர் ஆக்கினர் என்பதை அவர் வந்தபிறகு எதைக் கொண்டுவரப் போகிறார் என்பதை வைத்து அறிந்து கொள்ளலாம்.

 மக்களுக்கு மிகவும் கேடான கார்ப்பரேட்டுகளுக்கு மிக நன்மையான திராவிட கட்சிகளே கொண்டுவரத் தயங்கும் எதோ ஒன்றை விஜயை வைத்து கொண்டுவரப் போகின்றனர்.

 அன்று நான் சொல்வது உங்களுக்குப் புரியும்!