Thursday 28 February 2019

ஈழத்தமிழர் போண்டா மணி

ஈழத்தமிழர் போண்டா மணி

என் இயற்பெயர் கேதீஸ்வரன்.
அம்மா கடல்பயணத்தில் குண்டுபோட்டபோது தவறிவிட்டார்கள்.
இப்போது அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் சேலம் அகதி முகாமில் தஞ்சமடைந்தேன்.
எடப்பாடியில் இப்போதும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

இலங்கையில் வசதியாக வாழ்ந்தவன்.
இப்போது அப்படியிருக்க முடியவில்லையே என்கிற கவலையை தமிழக மக்கள் போக்கிவிட்டார்கள்.
என்னை வளர்த்துவிட்ட மண்ணுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

1985இல் அப்பாவை தமிழகம் அழைத்துவந்து கோவில்களை சுற்றிக் காட்டியபோது சிதம்பரம் பஸ் நிலையத்தில் டீ வாங்கித் தரமுடியாத நிலையில் என் மடியில் அப்பாவின் உயிர் பிரிந்தது.

பசியைப் போக்க போன்டா சாப்பிட்டு வந்ததால் அதுவே பெயராகிவிட்டது.
'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' (1992) என் முதல் படம்.

முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் வடிவேலு அண்ணனுடன் நடிக்க ஆரம்பித்த பிறகே பிரபலம் ஆனேன்.
வடிவேலு அண்ணன் சொல்லித்தான் எனக்கு பெண்கொடுத்தனர்.

சிங்கமுத்து அண்ணன் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.
என் திருமணத்தை தன் செலவில் நடத்திவைத்தவர் அவர்தான்.

நான் வாய்ப்பு தேடிய காலங்களில் மன்சூர் அலிகான் அண்ணன்தான் தங்க இடம் கொடுத்து மளிகை சாமான்கள் வாங்கித் தந்தவர்.
நல்ல தமிழ் பற்றாளர்.

ஒரு முறை ரஜினி சாரிடம் வாய்ப்பு கேட்டேன்.
'இயக்குனர் கையில்தான் எல்லாமே இருக்கிறது' என்று சொல்லிவிட்டார்.

சினிமாவில் நிறைய ஆண்டுகள் இருந்தாலும் சொந்தமாக வீடு, வாசல் அமைத்துக் கொள்ளவில்லை.
ரசிகர்கள்தான் என் சொத்து.
தற்போதும் 15 படங்கள் கைவசம் உள்ளன.

நன்றி: தினமலர் 24.02.2019
------------------
எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு உயிர் தப்பிச்சு, குண்டு பட்ட காயங்களோட 90-ம் வருஷம் நான் வந்து சேர்ந்த இடம் எடப்பாடி முகாம்.
படுகாயத்தோட வந்த என்னை வீரப்பன் என்கிற அண்ணன்தான் ஆஸ்பத்திரியில சேர்த்து உசிரைக் காப்பாத்தினார்.
அப்புறம் டீக் கடையில வேலை பார்த்தேன்.
எடப்பாடி மக்கள் என்கிட்ட சொந்தக்காரங்க மாதிரி பழகுவாங்க. 
எப்பவுமே பிரிச்சுப் பார்த்ததே இல்லை.

உதாரணத்துக்கு என் குழந்தைகள் படிக்க வசதி இல்லாம இருந்தாங்க.
சம்பத் அண்ணன், மகாலிங்கம் அண்ணன் உட்பட ஊர்ப் பெரிய மனுஷங்க சேர்ந்து உள்ளூர் அரசுப் பள்ளியில எங்க முகாம் குழந்தைகளைச் சேர்த்து படிப்புக்கு ஏற்பாடு செஞ்சாங்க.

இன்னொரு விஷயம் தெரியுமா?
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து எடப்பாடிக்குப் போக நிறைய டவுன் பஸ்கள் வரும்.
நாங்கசேலத்துக்குப் போகும்போது பஸ் நடத்துனர்கள் யாருமே எங்ககிட்ட காசு வாங்க மாட்டாங்க.

இந்தப் பகுதியில மில்கள் அதிகம்.
அப்பப்ப முகாம் பக்கம் எட்டிப் பார்க்கிற மில் முதலாளிங்க அரிசி மூட்டை, பருப்பு மூட்டைனு கொடுத்துட்டுப் போவாங்க.

மனசு விட்டு சொல்றேங்க.
இலங்கையில வயித்துக்குச் சாப்பாடு இல்லாம பலநேரம் கொலைப்பட்டினி கிடந்து இருக்கேன். 
ஆனா, இங்க வந்தபின்னாடி நானும் சரி,  என்னை சேர்ந்த மக்களும் சரி, ஒருவேளைகூடப் பட்டினி கிடந்தது கிடையாதுங்க.

டீக்கடை பாலு அண்ணன், முகாமில் இருந்து வெளியே கூலி வேலைக்குப் போறவங்களுக்குத் தினமும் காலையில 25 போண்டா இலவசமா கொடுப்பார்.

ஒருமுறை என் அண்ணன் இலங்கையில குண்டடிபட்டு ராமேஸ்வரம் கடற்கரைப் பக்கமா ஒதுங்கி இருக்கிறதாத் தகவல் கிடைச்சுது.
கையில காசு இல்லாம தவிச்சப்ப, நடுராத்திரி எடப்பாடியில் உள்ள அன்புமதி அண்ணன் செலவுக்குப் பணம் கொடுத்து, கூடவே ராமேஸ்வரம் வரைக்கும் வந்தார்.
நாங்க போறதுக்குள்ள அண்ணன் உசிரு போயிடுச்சு.
எடப் பாடிக்குத் தகவல் கொடுத்து, ஊர்க்காரங்களை வரவழைச்சு, இறுதிச் சடங்கைச்  செஞ்சாங்க.
நன்றி: விகடன் 01.05.2012@
---------------

போண்டாமணி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.
நூற்றி எழுபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும்.
இவருடன் உடன் பிறந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில் இறந்துவிட்டார்கள்.

எம்.மாரிமுத்து செட்டியார் - மகேஷ்வரி தம்பதியரின் மகனாக போண்டாமணி 15 செப்டம்பர் 1963ல் பிறந்தார். 
இவருடைய தாயகம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியாகும்.
நன்றி: Wikipedia
-------------------

Friday 15 February 2019

பெருமாள் சிலையா? இல்லை கன்னடர் திமிரா?

தமிழக மலையைப் பெயர்த்து
சாலை வளையங்களை தகர்த்து நீக்கி
வீடுகளை இடித்து சேதப்படுத்தி
போக்குவரத்தின் கழுத்தை நெறித்து
புதிய பாலமெல்லாம் கட்டிக்கொண்டு
சுங்கச்சாவடி இடையூறு இல்லாமல்
தமிழக காவல்துறை பாதுகாப்புடன்
தடையின்றி கர்நாடகம் நோக்கி
ஊர்ந்து செல்லும் இது

பெருமாள் சிலையா?
இல்லை கன்னடர் திமிரா?

ஆதித்தனார் வெளியிட்ட தமிழர்நாடு வரைபடம்

ஆதித்தனார் வெளியிட்ட தமிழர்நாடு வரைபடம்

 ஆதித்தனாரின் தமிழ்தேசிய சிந்தனைகளைத் தொகுத்து "சி.பா.ஆதித்தனாரின் தமிழப் பேரரசு" எனும் நூலை வள்ளலார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 இதில் மேற்கண்ட வரைபடம் உள்ளது.

 இவ்வரைபடம் 1960 வாக்கில் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.

 இதில் "முழுதும் தமிழர் வாழும் பகுதிகள்",
 "முழுதும் தமிழர் வாழும் பகுதிகள் (துண்டுபட்டவை)" மற்றும்
 "பாதிபேர் தமிழர் வாழும் பகுதிகள்" என மூன்று அடர்த்தியில் பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.

 இதில் துண்டுபட்டவை (அதாவது தமிழ்நாடு மாநிலத்துடன் சேராமல் போனவை) என்று திருப்பதி(1), பெங்களூர்(2), தேவிகுளம்(3), பீர்மேடு(4), திருவனந்தபுரம்(5) புதுச்சேரி(6), காரைக்கால்(7) ஆகியன குறிக்கப் பட்டுள்ளன.

  தமிழ்நாடு மாநிலமும் ஈழமும் மற்றும் மேற்கண்ட 7 பகுதிகளும் சேர்ந்த "தமிழர் பெரும்பான்மைப் பகுதிகள்" தனிநாடாக "தமிழப் பேரரசு" என்கிற பெயரில் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று ஆதித்தனார் 1942 முதலே கூறிவந்துள்ளார்.

 (பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பிரதேசம் என்கிற பெயரில் டெல்லியில் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தமிழர் நிலம் ஆறு துண்டுகளாக சிதறிக் கிடப்பதாகவும் ஆதித்தனார் கவலையுடன் கூறுகிறார்)

 இதுபோக பாதியளவு தமிழர் வாழும் பகுதிகளாக (அதாவது பாதி உரிமை கொண்ட) பகுதிகளென சித்தூர் மாவட்ட மேற்கும்
 ஈழத்தின் அனுராதபுரம் நகரமும்
கொழும்பு வரை உள்ள கடற்கரை  பகுதியும்
கண்டியுடன் கூடிய மத்திய பகுதியான மலையகமும்
 தென்கோடி காலி பகுதியும் குறிக்கப்பட்டுள்ளன.
 (இவற்றை ஆதித்தனார் தமிழர்நாட்டுடன் இணைக்கக் கோரவில்லை)

 இவ்வரைபடமானது புலிகள் வெளியிட்ட ஈழ வரைபடம் மற்றும் ம.பொ.சி வெளியிட்ட தமிழ்நாடு வரைபடம் ஆகியவற்றுடன் ஒத்துப் போகிறது என்றாலும்
 ஈழத்தின் தென் மேற்கு எல்லை நீண்டும் கொள்ளேகால் இல்லாமலும் உள்ளது.

 மற்றபடி ஈழமும் தமிழகமும் ஒரே நாடு என்பது அதுவரை எவருக்குமே உரைக்காத உண்மையாகும்.

 ஆதித்தனாருக்கு இந்த விடயத்தில் தமிழர்களாகிய நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

தகவல்களுக்கு நன்றி :- Rajokkiyam Thangaraj
(பிப்ரவரி 1 அன்று முகநூல் பதிவாக இட்டது)

தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே

தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே!

காஷ்மீரிகளின் நிறம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

தோற்றம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மொழி உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மதம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

உடைகள் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

காலநிலை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மண்வகை உங்களுடன் ஒத்துப்போவதில்லை!

உணவுமுறை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

கலாச்சாரம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

அவர்கள் வரலாற்றில் புராணங்களில் இலக்கியங்களில் உங்கள் பெயர் கூட இல்லை!

இன்றுவரை காஷ்மீருக்கு நேரடி நிலவழித் தொடர்பே இல்லை!

அவர்களை நீங்கள் போர் செய்து வென்று உங்கள் நாட்டுடன் இணைக்கவும் இல்லை!

அதாவது தமிழகத்தை விடவும் அந்நியமான ஒரு அண்டை நாட்டை ஆக்கிரமித்து உள்ளீர்கள்!

அதன் வளங்களை கொள்ளையடித்து வருகிறீர்கள்!

அங்குள்ள பெண்களைச் சீரழித்து வருகிறீர்கள்!

காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடிய அனைவரையும் கொன்று ஒழித்து பதினைந்து ஆண்டுகள் ஆகியும்
நேரு காலத்தில் கொடுத்த உறுதிமொழிப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தாமல் சண்டித்தனம் செய்கிறீர்கள்!

அத்தோடு நில்லாமல் தேர்தல் நேரத்தில் நீங்களே குண்டு வைத்து பல மாநில வீரர்களைக் கொன்று
நாடு முழுக்க அனுதாப அலையையும் எழுப்பி
அரசியல் ஆதாயமும் அடைகிறீர்கள்!

இத்தகைய இழிவுக்கு
உங்களது ஆக்கிரமிப்பில் இருக்கும் மற்றொரு நாட்டு மக்களான நாங்கள்
பெருமை வேறு படவேண்டுமா?!