Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Monday, 20 October 2025

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார்

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார்

 1965 இல் ஆதித்தனார் தமிழ்நாடு தனிநாடு ஆவதன் அவசியம் பற்றி எழுதும் போது டெல்லி அதுவரை அதாவது 1947 லிருந்து 18 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுரண்டிய தொகை ரூ.2460 கோடி என்று கணக்கிட்டுக் கூறியுள்ளார்.
 மத்திய அரசு வாங்கும் வரி வடக்கே போய் அதன் பங்கு வடக்கிலேயே பெரும்பகுதி செலவாகிவிடுகிறது.
 எனவே இது அல்ல பேரரசர்களுக்கு பயந்து குறுநில மன்னர்கள் கட்டும் கப்பம் போன்றது என்றும் கூறியுள்ளார்.
 இதில் ஆச்சரியமான விடயம் ரூபாய்த் தாள்கள் பற்றி அவர் கூறிய கருத்து.
 அதாவது தமிழ்நாட்டில் எவ்வளவு காகித ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவோ அதே அளவு மதிப்புள்ள பொருட்களை டெல்லி சுரண்டி விட்டு அதற்குப் பதில் வெறும் காகிதத்தை ரூபாய் நோட்டாக தந்து ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார். 
 1965 இல் 2460 கோடி மிகப்பெரிய தொகை!
இதற்குப் பிறகு இதே நிலை நீடித்தால் ஆண்டுக்கு 120 கோடி நாம் நஷ்டக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். 
 அப்போதே ஆண்டுக்கு 2500 பேர் தற்கொலை செய்துகொள்வதைக் கவலையோடு குறிப்பிட்டு அதற்கு காரணம் வறுமை என்கிறார்.  
 மத்திய அரசு திட்டமிட்டு மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் புகுத்தி தமிழர் எண்ணிக்கையை இன்று பெருமளவு குறைத்துவிட்டது.
 ஆனால் வடவர்களோ பல மடங்கு பெருகிவிட்டனர். 
 இதை அன்றே எதிர்த்த ஆதித்தனார் மக்கட்தொகை குறைப்பு என்பது செருப்பு அளவுக்கு காலை வெட்டுவது என்றாகும் என கூறியுள்ளார்.
 அன்று தமிழ்நாட்டை விட சிறிய 106 நாடுகள் உலகத்தில் உள்ள போது தமிழ்நாடு ஏன் தனிநாடு ஆக முடியாது என்று கேட்கிறார். அந்த 105 நாடுகளின் பட்டியலையும் மக்கட்தொகையையும் கூட பட்டியலிட்டார்.
 தமிழருக்கு தனி அரசு இருந்திருந்தால் 5கோடி தமிழர்களை 35 லட்சம் சிங்களவர்கள் ஏளனமாக நினைப்பார்களா?! கள்ளத்தோணி என்று கூறி விரட்டி அடிப்பார்களா என்று கேட்கிறார்.
 தமிழகமும் ஈழமும் ஒன்றாக இணைய வேண்டும் என்று 1942 இலேயே 'தமிழ் ராஜ்யம்' எனும் நூல் எழுதி அதில் தமிழர் வாழும் பகுதிகளை குறித்து வரைபடம் வெளியிட்டார் ஆதித்தனார்.
 அவரது வார்த்தைகளில் கூறினால்...
"தமிழ் மக்கள் சிதறுண்டு கிடக்கும் நிலை நீங்கி ஒரே நாடாக ஒரே கொடையின் கீழ் தமிழ் இனம் வாழ வேண்டும்!
 பாண்டிச்சேரியிலும் ஈழத்திலும் சென்னை ராஜ்யத்திலும் சிதறுண்டு தனித்தனியாக வாழ்வதால் தமிழ் இனம் வலுவற்று கிடக்கிறது!
 இந்தப் பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சுதந்திர தமிழ்நாடு அமைத்துக் கொண்டு வல்லரசாக திகழ வேண்டும் என்பது தமிழ் இனத்தின் நியாயமான ஆசை!
 தமிழகத்தில் இருக்கிற 500 லட்சம் தமிழர்களும் இலங்கையில் இருக்கின்ற 35 இலட்சம் தமிழர்களும் ஒன்று சேர வேண்டும்!
 இந்திய தேசத்தை துண்டு போடுவது துரோகம் என்பதாக சொல்பவர்கள் தமிழ்நாடு துண்டுபட்டு கிடக்கிறதே அது தமிழர்களுக்கு செய்த துரோகம் இல்லையா?! 
  பீர்மேடு, தேவிகுளம், நெய்யாற்றின் கரை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்டு மலையாளிகள் கையில் சிக்கி கிடக்கின்றனவே!?
  வட எல்லையில் வேங்கடம் வரையில் உள்ள தமிழ் பகுதிகள் ஆந்திராவில் ஆட்சியில் கிடைக்கின்றனவே?!
 பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்கள் டெல்லியின் கண்காணிப்பில் இருக்கின்றனவே?!
 18 மைல் அகலம் உள்ள ஒரு சிறிய நீர்ப்பகுதிக்கு அப்பால் வட இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். 
அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான்!
 அது தாயகத்தில் இருந்து பிரித்து கிடக்கிறதே?!
 இந்தப் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுடன் சேர வேண்டாமா?!
 ஆகையால் தமிழ்நாடு ஒன்று சேர வேண்டும் என்று சொல்வது துரோகம் ஆகாது! " என்று தெளிவாகவே எழுதியிருக்கிறார்.

 "தமிழ்நாடு வறண்ட நாடு ஆகையால் அது சுதந்திர நாடாக இருக்க தகுதியற்றது" என்று சட்டமன்ற உறுப்பினர் குழந்தை அம்மாள் ஒரு முறை பேசினார்.
 "தமிழ்நாட்டில் நீர் வளம் நிலவலம் இல்லை" என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் எழுதியது.
 இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதித்தனார் "தமிழ்நாட்டில் பாலாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் ஓடாமல் இருப்பதற்கு காரணம் மைசூர் நாட்டில் அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வதே.
 இப்போது தமிழ்நாடு டெல்லியின் கீழ் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது.
 தமிழ்நாடு டெல்லியின் படியில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடு ஆனால் தண்ணீர் விடும்படி உரிமையுடன் கேட்க முடியும்.
ஏனென்றால் சுதந்திர நாடுகளுக்கு தண்ணீர் உரிமை உண்டு. 
மேலும் மலையாளத்தில் ஓடுகின்ற சோலை ஆறு பரம்பிக்குளம் ஆகிய ஆறுகளின் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு பயன்படுத்த செய்யும் பணியை சுதந்திர தமிழர்கள் செய்ய முடியும்.
மேலும் ஆறு மட்டுமே ஒரு நாட்டின் வளத்தை நிச்சயிப்பதாக சொல்ல முடியாது!" என்று எழுதியிருக்கிறார்.
 மேலும் காவிரி ஆறு பற்றி அவர் எழுதும்போது "காவிரி ஆற்றின் ஒரு கிளை கன்னடர் நாடு வழியாக அதாவது மைசூர் மாநிலத்தின் வழியாக ஓடி வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.
 காவிரி ஆற்றுத் தண்ணீர் முழுவதும் மைசூரில் இருந்து வருகிறது என்று சிலர் சொல்வது மிகைப்படுத்தி கூறுவது ஆகும்.
இதை காட்டி தமிழ்நாடு தனிநாடாக இயங்க முடியாது என்று சொல்வது நியாயமான காரணம் ஆகாது. பிரம்மபுத்திரா என்ற ஆறு இந்தியா, சீனா வழியாக 5000 மைல் ஓடி பின்னர் பாகிஸ்தானில் ஓடுகிறது. இதைப் போலவே ஐரோப்பாவில் டானியூப் என்ற நதி 6 நாடுகளை தொடுகிறது.
 பொதுவாக பார்த்தால் உலகில் ஆறுகளின் காரணமாக நாடுகளிடையே சண்டை சச்சரவு ஏற்படுவதில்லை.
 அதற்கு விதிகள் இருக்கின்றன.
 விதிகளை மீறினால் ஐக்கிய நாடுகள் அவையிலும் உலக நாடுகளின் நீதிமன்றத்திலும் தீர்த்துக் கொள்ளலாம்.
 ஆகவே தமிழ்நாடு தனி நாடாக இயங்கினால் காவிரி ஆற்று தண்ணீரை இழந்து விடுவோம் என்பது வீண் புரளி. தண்ணீரை இழக்க மாட்டோம் என்பதோடு இழந்திருக்கும் தண்ணீர் உரிமைகளை மீண்டும் பெறுவோம்".

அன்றும் சிறுபான்மை என்கிற சொல் அரசியலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது இதை ஆதித்த நாள் வேறு பார்வையில் பார்க்கிறார்.
 "இலங்கையில் 65 லட்சம் சிங்களவர்களும் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள்.
 சிங்களவர் பெரும்பான்மையாக சட்டசபை க்கு வருகிறார்கள் அதனால் சிங்களவர் ஆதிக்கத்தில் ஆட்சி அமைய நேரிடுகிறது.
 தாய்த் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் நான்கரை கோடி பேர் இருக்கின்றனர். ஆனால் 38 கோடி பேர் தமிழர் அல்லாத பிறமொழியினர் பெரும்பான்மையாக ஆட்சியில் இருக்கின்றனர்.
டெல்லி பாராளுமன்றத்தில் 40 பேர் தமிழர்கள் என்றால் 460 பேர் தமிழர் அல்லாதவர்கள் இருக்கின்றனர்.
 தமிழர் சிறுபான்மை என்றாவதால் எல்லாத் தொல்லைகளும் உண்டாகின்றன.
  தமிழர்கள் தனியாக பிரிந்தால் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மை என்ற நிலையை அடைய முடியும்!
 பலர் சொல்வது போல கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் உடன் தமிழர் சேர்ந்து திராவிடம் என்ற அமைப்பை ஏற்படுத்தினாலும் நான்கரை கோடி பேர் தமிழர்கள் இருப்பர் ஆனால் 10 கோடி பேர் தமிழர் அல்லாதவர்கள் இருப்பர்.
 அப்போதும் சிறுபான்மையாகத் தான் தமிழர்கள் இருப்பார்கள். தொல்லைகள் நீடிக்க தான் செய்யும்.
சிறுபான்மை நிலை ஒழிந்தால் இனம் வாழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக யூதர்களின் வரலாற்றை சொல்லலாம்.
 பல நாடுகளில் யூதர்கள் சிறுபான்மையாக இருந்தார்கள் எல்லா நாடுகளிலும் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவு கிடையாது எல்லா நாடுகளாலும் யூதர்கள் விரட்டப்பட்டு கடைசியில் சிதறிக்கிடந்த 8 லட்சம் யூதர்கள் 1948 ஆம் ஆண்டு அரேபிய பாலைவனத்தில் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் என்ற சுதந்திர தனி நாட்டை அமைத்தார்கள் அதன்பிறகு அவர்களுடைய தொல்லைகள் நீங்கின.
 தமிழ்நாடு அதை விட 30 மடங்கு பெரியது" 
 என்று எழுதும்போது ஈழத் தமிழர் துயரத்தையும் எழுதியுள்ளார்.
"1958 ஏப்ரல் மே மாதங்களில் தமிழர்களில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் கொலை கொள்ளை தீ வைத்தல் சூறையாடுதல் முதலிய கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்கள் வீடுகள் பொருட்கள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேதமாக்கப்பட்டன பஞ்சாப் படுகொலை விட இது 10 மடங்கு பயங்கரமானது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். 1961 பிப்ரவரி முதல் இலங்கையில் தமிழர்கள் ராணுவ ஆட்சியின் கீழ் சிக்கி சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் அண்மை காலம் வரை தமிழ் தலைவர்கள் சிறையில் இருந்தனர் இன்று தமிழுக்கு அங்கு எவ்வித உரிமையும் இல்லை தமிழர் வாழ் பகுதிகளில் சிங்களவர்களை கொடியேற்றி தமிழர்களின் தனித்தன்மையை அளிக்க சிங்கள அரசு முனைகிறது" 
 மேலும் அவர் தமிழின விடுதலை பற்றி கூறுகையில்
 "5கோடி தமிழ் மக்கள் ஓர் இனம் என்பதை உணர்ந்து தமது அடிமை தளையை அறுத்து எறிவது என்று வீறிட்டு எழுந்தால் அதை எதிர்த்து உலகமே திரண்டாலும் தடுக்க முடியாது! டெல்லி அரசாங்கத்தாலும் முடியாது! அந்த அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்கிற 38 கோடி வடவர்களாலும் முடியாது ! 30 லட்சம் அயர்லாந்து மக்களின் சுதந்திர போராட்டத்தை தடுப்பதற்கு அவர்களைப் போல் 15 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஆங்கிலேயர்களால் முடியாமல் போய்விட்டது!" என்று கூறுகிறார்.
 ஆதித்தனார் தனிநாடு கொள்கையுடன் 'தமிழ் ராஜ்ய கூட்டணி' அமைத்து அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை தேர்தலில் வென்றார்.
 ஆனால் மத்திய அரசு ஆளுநரை வைத்து விளையாடி அவரை நியாயப்படி முதலமைச்சர் ஆவதைத் தடுத்தது என்பது வரலாறு! 
நன்றி: ஆதித்தனார் எழுதிய 'தமிழப் பேரரசு' நூல் 

Friday, 25 April 2025

போலி சங்கராச்சாரி

 போலி சங்கராச்சாரி

காஞ்சி மடம் ஒரு சங்கர மடமே அல்ல!
அது ஆதிசங்கரர் நிறுவியது என்பது முழுப் பொய்! 

அதன் தலைமை மடாதிபதிகள் சங்கராச்சாரியார் என்ற பட்டத்தைப் பயன்படுத்துவதும் ஏமாற்று!

காஞ்சி காமகோடி மடம் சிருங்கேரி மடத்தின் கிளை என்று போலி சாமியார்களால் 1780களில் உருவாக்கப்பட்டது! 

 ஏழாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் நான்கு மடங்களை நிறுவினார்.
அவற்றுக்கும் காஞ்சி மடத்திற்கும் தொடர்பே கிடையாது.
 துவாரகா, சிருங்கேரி, ஜோஷி மடம், கோவர்த்தன பீடம் ஆகிய நான்கு மடங்களே ஆதிசங்கரர் நிறுவிய உண்மையான சங்கர மடங்கள்!
 அவை இன்றும் உண்மையான சங்கராச்சாரிகள் தலைமையில் இயங்கி வருகின்றன.

காஞ்சி சங்கராச்சாரிகள் அத்தனைபேரும் முழுப்பொய்யர்கள் என்பதையும் அவர்கள் கூறும் வரலாறு அனைத்துமே கட்டுக்கதை என்பதையும் இந்நான்கு மடங்களின் உண்மையான சங்கராச்சாரிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இதற்கெல்லாம் சான்று காஞ்சி சங்கராச்சாரிகள் பத்திரிக்கைகளில் எழுதிய தொடருக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்து 'வாரணாசி ராஜ்கோபால் சர்மா' (பிராமணர்) எழுதிய "Kanchi Kamakoti Math - A Myth" என்ற புத்தகம்.

அந்த கொலகாரனுக மொதல்ல சங்கராச்சாரியே கெடையாது ஓய்!


24.01.2018 அன்றைய பதிவு
தலைப்பு: பொய்களின் மடம்

Wednesday, 16 October 2024

மகாவம்சம் நூலே இப்படித்தான் கூறுகிறது

மகாவம்சம் நூலே இப்படித்தான் கூறுகிறது

  மகாவம்சம் இரு சம்பவங்களைக் கூறுகிறது!

 முதலாவது.....
வட கிழக்கு இந்தியாவில் (இன்றைய உத்தரபிரதேசம் அருகே) ஒரு தேசம்! அங்கே காட்டுக்கு அரசன் வேட்டைக்கு செல்கிறான்!
 அப்போது சிங்கம் நாட்டுக்குள் வருகிறது!
அந்நாட்டு இளவரசியை தூக்கிக்கொண்டு காட்டுக்கு போகிறது! இருவரும் கூடி சிம்மபாகு எனும் மகன் பிறக்கிறான்! இவன் அந்நாட்டு அரசன் ஆகிறான்! இவனது மகனே விஜயன்! இவன் முரடனாக இருந்தான்! இவன் தொல்லை பொறுக்காமல் அந்நாடே அவனையும் அவனது தோழர்ளையும் கப்பலில் ஏற்றி நாடுகடத்துகின்றனர்.
 இந்த கப்பல் இலங்கை (இன்றைய மன்னார் மாவட்டத்தில் உள்ள) மாதோட்டம் வருகிறது! அங்கே குவைனி எனும் யக்‌ஷ இளவரசி அடைக்கலம் தருகிறாள்! அவளை காதலிப்பது போல நடித்து பிறகு கொலை செய்துவிட்டு விஜயன் அரசனாகிறான்! மக்கள் ஏற்கவில்லை!
 மதுரை வந்து பாண்டிய வம்சத்து பெண்ணை மணந்து வருகிறான்! மக்கள் ஏற்கிறார்கள்! 

 இரண்டாவது....
 எல்லாளன் எனும் மன்னன் அநுராதபுரம் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆள்கிறான்!  ஒருமுறை ஆறு மாதம் அடைமழை பெறுகிறது! நெல்லை குத்தி அரிசியாக்கி பிழைக்கும் ஒரு மூதாட்டி ஆராய்ச்சி மணி அடிக்கிறாள்! குறையைக் கேட்ட மன்னன் நெல்லை காயப்போட சொல்கிறான்! நெல் இருக்கும் இடம் மட்டும் மழை பெய்யவில்லை! அந்த அளவு அவன் நீதி தவறாதவன்!
 இவன் காலத்தில் துட்டகைமுனு 27 முறை எல்லாளனை எதிர்த்து படையெடுத்து தோல்வியடைகிறான்!
 அவன் சோர்வடைந்து படுத்திருக்கும்போது அவன் தாய் விகார மாதேவி எனும் பேரழகி வந்து மீண்டும் போர் தொடுக்க சொல்கிறாள்!
 28வது முறை படை திரட்டி தோல்வியடையும் நிலையில் விகாரமாதேவி எல்லாளனை தனிப்பட்ட மோதலுக்கு அழைக்குமாறு தன் மகனிடம் சொல்கிறாள்! துட்டகைமுனு தான் இளைஞன் எல்லாளன் வயது முதிர்ந்தவன் என்று தயங்க விகாரமாதேவியோ அவனை கட்டாயப்படுத்துகிறாள்!  
 துட்டகைமு அறைகூவல் விடுக்க சவாலை ஏற்று தனியாளாக மோத எல்லாளன் வருகிறான்! அந்த மோதலிலும் எல்லாளன் வெற்றிபெறப் போகும் நேரத்தில் விகாரமாதேவி அங்கே வந்து தன் முக்காடை விலக்கி முகத்தைக் காட்ட அவன் அழகில் ஒரு நொடி சபலப்பட்ட எல்லாளனை ஈட்டியால் குத்தி கொன்று துட்டகைமுனு வெற்றிபெற்று இலங்கைக்கு அரசனாகிறான்!.

  இப்படி சிங்களவர்களின் முதன்மை நூலான மகாவம்சமே இரண்டு முறை சூழ்ச்சி மூலம்தான் சிங்களவர் இலங்கையைக் கைப்பற்றியதாக சொல்கிறது.

 (மேற்கண்ட தகவல்கள் ஐயா.அருகோ அவர்கள் வளரி இணையத்துக்கு அளித்த பேட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்.
மகாவம்சத்தில் சிங்களவர், தமிழர் என்று யாரும் இல்லை! அது ஒரு கற்பனையான புராண நூல்! அதில் வரும் ஒரு தரப்பு கதாபாத்திரங்களை தமது இனமாக சிங்களவர்கள் அடையாளப்படுத்தி வைத்துள்ளனர்)





 

Sunday, 1 September 2024

பெருந்தமிழர் தமிழரசன்

பெருந்தமிழர் தமிழரசன் 

 ஏசு கொல்லப்பட்ட போது அவர் யாருக்காக குரல் எழுப்பினாரோ அவர்களால் கொல்லப்படவில்லை!
 அரசாங்கத்தால் தான் கொல்லப்பட்டார்.
 இயேசு இறந்த பிறகு அவரது தாய் தனது 100 வயது வரை போராட வரவில்லை! 
 அந்த வகையில் அன்று கொல்லப்பட்ட ஏசுவை விட ஒருபடி உயர்ந்த தியாகம் நம் தமிழரசன் புரிந்த தியாகம்! 
 ஏசுவை உயிர்த்தெழுந்த அதிசயம் போல தமிழரசன் ஆவியும் தமிழர் ஒவ்வொருவரது உடலிலும் உயிர்த்தெழ வேண்டும்! 
 போலியான (ஹிந்திய) கம்யூனிச மாயவலையில் இருந்து வெளியேறி உண்மையான கம்யூனிச (மார்க்ஸ்) வழியில் தமிழருக்கென தனிநாடு அமைக்கப் போராடிய அவரது நினைவைப் போற்றுவோம்!
 கசப்பாக இருந்தாலும் 'பெரியவர் தமிழரசன்' என்ற பெயரில் அன்னாரது உண்மை வரலாற்றை வெளிக்கொணர்ந்த சிவசுப்பிரமணியம் ஐயாவுக்கு நன்றி! 

Tuesday, 9 July 2024

வேட்டொலி 10

வேட்டொலி 10

  தமிழ்தேசிய இணையம் வேட்டொலி தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
இதுவரை 1505 பதிவுகள் எழுதப் பட்டுள்ளன!
இதுவரை மொத்தமாக 3,90,827  பார்வைகள் கிடைத்துள்ளன.
சென்ற மாதம் 5584 பார்வைகள் பெற்றுள்ளது வேட்டொலி.
 பிரபலமாக ஆகாவிட்டாலும் இதில் எழுதப்பட்டுள்ள தீவிர கருத்துகளுக்கு இன்றுவரை முடக்கப்படாமல் இயங்கி வருவதே பெரிய சாதனை என்று கருதுகிறேன்.
 முன்பெல்லாம் பதிவுகளை தேடினால் கூகுள் காட்டும் தற்போது கூகுள் வேட்டொலியை காட்டுவதில்லை.
 விரைவில் முடக்கப்படலாம்!
முடக்கப்பட்டாலும் கவலை இல்லை!
உண்மையான புரட்சிக்கு தடைதான் அங்கீகாரம்!
எழுத்து எந்த வடிவத்தில் எழுதப்பட்டது என்பது முக்கியம் இல்லை!
 அதைப் படித்தவர் மனதில் அது எவ்வளவு ஆழமாகப் பதிந்தது என்பதுதான் முக்கியம்!
 வேட்டொலி அவ்வாறானது என்று நினைக்கிறேன்!
 வேட்டொலி ஏற்படுத்தும் தாக்கம் தேவையான நேரத்தில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு இனத்தைக் காக்கும் என்று நம்புகிறேன்!
  தமிழ்தேசியர் பலரும் கவனம் செலுத்தாத தமிழ்தேசிய விழுமியங்களில் வேட்டொலி பங்களித்துள்ளது.
அதாவது "ஈழம் தமிழகம் ஒரே நாடு", "இழந்த எல்லை மீட்பு",  "இனத்தில் பார்ப்பனர் மீளிணைப்பு", "புலிகள் வழியில் தனிநாடு" மற்றும் "அகன்ற தமிழர்நாடு" போன்றவை!
 இவற்றில் "மண்மீட்பு" மற்றும் "அகன்ற தமிழர்நாடு" போன்ற நிலம் சார்ந்த சிந்தனைகள் 290 பக்க "தனித் தமிழர்நாடு" புத்தகமாக வெளிவந்துள்ளது!
 vaettoli blogspot இல் பெரும்பான்மை எனது எழுத்துகள் என்பதில் பெருமை கொள்கிறேன்!
 "தனித் தமிழர்நாடு" வரைபடத்தை உருவாக்கியவன் என்று என்னை பிறர் அடையாளம் காண விரும்புகிறேன்.
 சில பதிவுகள் தன்னார்வ தமிழ்தேசியரால் குரலாக்கம் செய்யப்பட்டு பொருத்தமான படங்களுடன் காணொளிகளாக ஆக்கப்பட்டு வெளிவந்துள்ளன. 
 அவ்வாறு வேட்டொலிப் பதிவுகள் உலகத் தமிழ்தேசியரால் வெவ்வேறு வடிவங்களில் சேமிக்கப்படவும் படியெடுக்கப்படவும் வேண்டுகிறேன்!
2012 லிருந்து உடன் பயணிக்கும் முகநூல் உறவுகளுக்கு மிக்க நன்றி! 
இன விடுதலை நோக்கிய பயணம் மிக நெடியது! 
தொடர்ந்து இயங்குவோம்!

ஒரே நாடு!
ஒரே எல்லைக்கோடு!
அமைப்போம் தமிழர்நாடு!
 
 

Monday, 19 June 2023

மீண்டும் தனித் தமிழர்நாடு

மீண்டும் தனித் தமிழர்நாடு

"தனித் தமிழர்நாடு" புத்தகம் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது
தனித் தமிழர்நாடு இரண்டாம் பதிப்பில் புதியதாக சேர்க்கப்படவுள்ள 13 தலைப்புகள்,
1) தமிழர் பேரரசுகள் 
(தமிழர் ஆண்ட பேரரசுகள் பற்றியது)

2) அசோக சக்கரம் சொல்லும் உண்மை
(அசோகர் ஆட்சியில் தமிழகம் இல்லாதது பற்றியது)

3) பெங்களூர் மைய நகரம் முழுக்க தமிழர்கள்
(பெங்களூர் நகரம் பற்றியது)

4) ஜமீன்களின் அட்டூழியம்
(கீழ வெண்மணி, குறிஞ்சாக்குளம் போன்றவை)

5) மொழி வரைபடம் 1822
(முதல் மொழி வரைபடம்)

6) தமிழகம் இழந்த நிலம் தற்கால நிலை

7) இரண்டாவது பெரும்பான்மை மொழிகள்
(தென்னிந்திய மாநிலங்களில் இரண்டாவது பெரும்பான்மை கொண்டு விளங்கும் மொழிகளின் மாவட்ட வரைபடம்)

8) 1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம்

9) தமிழ்ப் பெருஞ்சுவர்
(சீனப் பெருஞ்சுவர் போல தடுப்பு சுவர் பற்றியது)

10) கண்டியில் தெலுங்கர் குடியேற்றம்
(கண்டி நாயக்கர் பற்றியது)

11) புலிகள் ஆண்ட ஈழம்
(புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய வரைபடம்)

12) தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்
(தமிழர்நாட்டில் பழங்குடி மக்களின் நில உரிமை பற்றியது)

13) இழந்தது தேவிகுளம் பீர்மேடு மட்டும்தானா?
(2011 இல் புதிய தலைமுறை இதழில் வந்த மண்மீட்பு கட்டுரை)

14) வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை
(வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப் படுவது பற்றியது)

* சான்றுகள் குறைவாக உள்ளதால் நீக்கப்பட்டது
1) தாலியறுத்தான் சந்தை

* மொத்தம் 300 பக்கங்கள்
* 120 க்கும் மேற்பட்ட படங்கள் (55 வண்ணப்படங்கள்)
* முன்பை விட பக்கங்கள் குறைக்கப்பட்டு நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு வெளிவருகிறது.

Saturday, 27 July 2019

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை - வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை
- வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

** ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாச்சேரி என்றும் பறைச்சேரி எனவும் தனித்தனியாக குறிக்கப்படுள்ளது **

** விஜயநகர காலத்திற்கு பின்புதான் (நாயக்கர் ஆட்சியில்) பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டனர் **

**  சோழர் வழங்கிய நிலதானங்களில் 20% தான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது **

---------------

வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார் அவர்கள்,
""பிறகாலச் சோழர் கால வாழ்வியல்",
"சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்",
"தமிழகத் தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும்"
உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.

ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் மே.து.ராசுகுமார்.

சமீபத்தில் "சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம் நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான்"
என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.

இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.

"ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ,
அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள்.
அதனை நாம் மறுத்துவிட முடியாது.
எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.

ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்கவேண்டும்.
அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம் புறந்தள்ள முடியாது.

வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது.
அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது.
இதன் மூலமாக உற்பத்தி பெருகியது.

உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது.
உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது.

ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின்,
இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது"
என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.

பறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார்,

"தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. 
ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானால் பறையர்கள் தீண்டப்படாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்?
எனவே பறையர்கள் அந்த காலத்தில் தீண்டப்படாதவர்களாக இல்லை எனலாம்.

அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டப்படாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம்.
அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டப்படாதவர்களாக இருந்திருக்கலாம்.

விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு" என்கிறார்.

மேலும்,
"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன.
பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.

40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார்.
அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது.

அதில்,
'சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில்
வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்'
என்று கூறியுள்ளார்.

பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை.
பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் "
என்று கூறும் ராசுக்குமார் மேலும் விளக்குறார்....

"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் முழு உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை.
பங்குதான் தரப்பட்டது.
அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது.

இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கெனவே இருந்த  குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல்.

சரி.
இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும்.
'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல.
வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது,
யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'.
அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள்.
இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

மற்றொருவகை 'குடிநீங்கா பிரமதேயம்'.
ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.

குடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள்.
ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை"
என்ற மே.து.ராசுக்குமார்,

ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை மேலும் விவரிக்கிறார்...

"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.
அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை.

அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்."
என்கிறார் ராசுக்குமார்.

நன்றி:
ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி
- மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்
11 ஜூன் 2019

Friday, 15 February 2019

ஆதித்தனார் வெளியிட்ட தமிழர்நாடு வரைபடம்

ஆதித்தனார் வெளியிட்ட தமிழர்நாடு வரைபடம்

 ஆதித்தனாரின் தமிழ்தேசிய சிந்தனைகளைத் தொகுத்து "சி.பா.ஆதித்தனாரின் தமிழப் பேரரசு" எனும் நூலை வள்ளலார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 இதில் மேற்கண்ட வரைபடம் உள்ளது.

 இவ்வரைபடம் 1960 வாக்கில் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.

 இதில் "முழுதும் தமிழர் வாழும் பகுதிகள்",
 "முழுதும் தமிழர் வாழும் பகுதிகள் (துண்டுபட்டவை)" மற்றும்
 "பாதிபேர் தமிழர் வாழும் பகுதிகள்" என மூன்று அடர்த்தியில் பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.

 இதில் துண்டுபட்டவை (அதாவது தமிழ்நாடு மாநிலத்துடன் சேராமல் போனவை) என்று திருப்பதி(1), பெங்களூர்(2), தேவிகுளம்(3), பீர்மேடு(4), திருவனந்தபுரம்(5) புதுச்சேரி(6), காரைக்கால்(7) ஆகியன குறிக்கப் பட்டுள்ளன.

  தமிழ்நாடு மாநிலமும் ஈழமும் மற்றும் மேற்கண்ட 7 பகுதிகளும் சேர்ந்த "தமிழர் பெரும்பான்மைப் பகுதிகள்" தனிநாடாக "தமிழப் பேரரசு" என்கிற பெயரில் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று ஆதித்தனார் 1942 முதலே கூறிவந்துள்ளார்.

 (பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பிரதேசம் என்கிற பெயரில் டெல்லியில் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தமிழர் நிலம் ஆறு துண்டுகளாக சிதறிக் கிடப்பதாகவும் ஆதித்தனார் கவலையுடன் கூறுகிறார்)

 இதுபோக பாதியளவு தமிழர் வாழும் பகுதிகளாக (அதாவது பாதி உரிமை கொண்ட) பகுதிகளென சித்தூர் மாவட்ட மேற்கும்
 ஈழத்தின் அனுராதபுரம் நகரமும்
கொழும்பு வரை உள்ள கடற்கரை  பகுதியும்
கண்டியுடன் கூடிய மத்திய பகுதியான மலையகமும்
 தென்கோடி காலி பகுதியும் குறிக்கப்பட்டுள்ளன.
 (இவற்றை ஆதித்தனார் தமிழர்நாட்டுடன் இணைக்கக் கோரவில்லை)

 இவ்வரைபடமானது புலிகள் வெளியிட்ட ஈழ வரைபடம் மற்றும் ம.பொ.சி வெளியிட்ட தமிழ்நாடு வரைபடம் ஆகியவற்றுடன் ஒத்துப் போகிறது என்றாலும்
 ஈழத்தின் தென் மேற்கு எல்லை நீண்டும் கொள்ளேகால் இல்லாமலும் உள்ளது.

 மற்றபடி ஈழமும் தமிழகமும் ஒரே நாடு என்பது அதுவரை எவருக்குமே உரைக்காத உண்மையாகும்.

 ஆதித்தனாருக்கு இந்த விடயத்தில் தமிழர்களாகிய நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

தகவல்களுக்கு நன்றி :- Rajokkiyam Thangaraj
(பிப்ரவரி 1 அன்று முகநூல் பதிவாக இட்டது)

Friday, 25 January 2019

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

வரலாற்று ஆய்வாளர் H.G.Wells என்பவர் உலகில் மாந்தர் பரவல் பற்றிய தமது கருத்தை கீழ்க்கண்டவாறு முன்வைக்கிறார்,

"For thousands of years, from 15,000 to 10,000 BC., such a heliolithic Neolithic culture and its brownish possessors may have been oozing round the globe through the warmer regions of the word, drifting by canoes often across wide stretches of sea"

"கி.மு 15,000 முதல் கி.மு. 10,000 வரையான புதிய கற்கால (அல்லது கதிரவக் கற்கால) காலகட்டத்தில் பழுப்பு மேனியுடையோர் சிறிய ரக படகுகள் மூலம் கடலில் துடுப்பாட்டியே வெப்பநாட்டிலிருந்து உலகெங்கும் பரவினார்கள்"

அத்தோடு நில்லாமல் இந்த பழுப்பு மனிதர்கள் இந்தியா முதல் எகிப்து மற்றும் ஸ்பெயின் வரை தொடர்ச்சியாக வாழ்ந்ததாக பிற ஆய்வாளரும் கருதுவதாகக் கூறியுள்ளார்,

"Wilfred scaven Blunt says that huxley had a long suspected a common origin of Egyptians and Dravidians of india, perhaps along belt of brown skinned men from india to spain in very early days"

Book: The outline of History
Page: 138 & 140

(கால்டுவெல் காலத்திற்கு முந்தைய ஆய்வாளர்கள் 'தமிழிய' என்று அழைத்தனர்.
அவர் காலத்திற்கு பிறகே 'திராவிட' எனும் பொருத்தமற்ற பெயர் நம்மீது திணிக்கப்பட்டு அதுவே மேலைநாட்டார் வழக்கத்திலும் உள்ளது)

நன்றி: பழந்தமிழர் பரவிய நாடுகள் - பழ.நெடுமாறன்

Thursday, 6 December 2018

1800 வாக்கில் தமிழர்களின் தெற்கெல்லை

1800 வாக்கில் தமிழர்களின் தெற்கெல்லை

1799 இல் பிரிட்டிஷ் ஆளுநர் நோக்ஸ் என்பவரது உதவியாளரான பேராசிரியர் கிளைக்கோர்ன் எனும் ஸ்காட்லாந்து இனத்தவர் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.
அது வருமாறு,

"இலங்கைத் தீவானது மிகப் பழங்காலந்தொட்டே இரு வெவ்வேறு தேசிய இனங்களால் உரிமை கொண்டாடப்பட்டது.
இத்தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் மற்றும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் ஆறு வரையுமுள்ள மேற்கு பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இத்தீவின் வடக்கு கிழக்கு நிலப்பகுதிகள் தமிழரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இரு நாட்டினங்களும் சமயத்தாலும், மொழியாலும் வாழ்க்கைப் பண்பாலும் முற்றிலும் வேறுபட்டவை.
தமிழர் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்தனர் போலும்.
ஏனெனில் அக்கரையில் உள்ள அதே மொழி அதே பழக்க வழக்கங்கள் அதே சமயம் என்பனவற்றைக் கொண்டுள்ளனர்"

இக்குறிப்பில் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மத்திப் பகுதியும் தென் பகுதியும் சிங்களர் வாழ்விடமாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தெற்கே உள்ள வளவி ஆறு மேற்கில் இருப்பதாக தவறாக உள்ளது.

இவர் உதவியாளராக இருந்த முதல் பிரிட்டிஷ் ஆளுநர்  நோக்ஸ் (knox) எழுதிய நூல் ஒன்று உள்ளது.
கண்டி சிறையிலிருந்து தப்பித்து மன்னார் நோக்கி செல்லும்போது மல்வத் (அருவி)ஆற்றைக் கடந்து அனுராதபுரம் வந்தடைந்தபோது அங்கே யாருக்குமே சிங்களம் தெரியவில்லை என்று அந்நூலில் எழுதியுள்ளார்.

ஆற்றின் பெயர் சிங்களத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து அருவியாறு அனுராதபுரம் அருகே வரும் இடம் வரை சிங்களவர் வாழ்ந்ததாக கொள்ளலாம்.

அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் (Alexander johnston) 1806 இல் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.
இவர் 1807 நம்பர் 4 இல் எழுதிய கையெழுத்து குறிப்பு ஒன்று கொழும்பு அருங்காட்சியம் பாதுகாத்து உள்ளது.
அது வருமாறு,

"வடமேற்கில் உள்ள புத்தளம் முதல் தென்கிழக்கே உள்ள குமணை ஆறு வரை உள்ள நிலப்பகுதி வரை தமிழரின் குடியிருப்பு ஆகும்.
மேற்கே சிலாபம் ஆற்றிலிருந்து தென்கிழக்கே உள்ள குமனை ஆறு வரை உள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பு ஆகும்"

இதிலும் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு எல்லையாக குமணை ஆறு குறிக்கப்பட்டுள்ளது.
இதுவே சரியான வரையறையாகும்.
குமனையாறு கடலில் கலக்கும் இதுவே தமிழரின் தென்கோடி எல்லை.

மேற்கண்ட விபரங்கள் ஜே.ஆர்.சின்னத்தம்பி எழுதி 1977 இல் சென்னையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட "தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்" எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டன.

நான் ஏற்கனவே வெளியிட்ட தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் இந்த எல்லைகளையே கொண்டிருந்தது.
(தேடுக: தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் வேட்டொலி)

புலிகள் பயன்படுத்திய ஈழ வரைபடம் தவறானது ஆகும்.
அவ்வரைபடத்தில் தெற்மேற்கு எல்லை சிலாவ ஆற்றையும் தாண்டி நீள்கிறது.

தவிர அவ்வரைபடத்தில் அனுராதபுரம் சேர்க்கப்படவும் இல்லை.

புலிகளின் வரைபடத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு மிக குறுகிய பகுதியாக உள்ளது.
புத்தளம் மாவனடம் வடக்குடன் இணையும் பகுதியும் குறுகலாக உள்ளது.
கிழக்கு பகுதியும் ஒடுங்கலாக வரையப்பட்டு இருந்தது.

ஆனால் புத்தளத்துக்கு வடக்கிலும்
கிழக்கு மாவட்டங்களிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி அவர்களது வரைபடத்தில் உள்ளதை விடவும் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தது.

பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" புத்தகத்தில் இருந்த புலிகள் ஆண்ட பகுதி வரைபடம் மூலமாக இது அறியக்கூடியதாக இருக்கிறது.
(தேடுக: புலிகள் கட்டுப்பாட்டு பகுதி வரைபடம் 2006 fbtamildata)

எனவே 1800 களில் எழுதப்பட்ட குறிப்புகளின் படி 1832 இல் வெளியிடப்பட்ட ஒரு வரைபடத்தில் எல்லைகளைக் குறித்து அன்றைய எல்லையை வரைந்துள்ளேன்.

Sunday, 26 August 2018

மாரியம்மனைப் புகழ்ந்த மதார்சா ராவுத்தர்

மாரியம்மனைப் புகழ்ந்த மதார்சா ராவுத்தர்

கழுகுமலை முருகன் மீது காவடிச்சிந்து பாடிய காதர் பாட்சா பற்றியும்
புதுச்சேரியில் முருகனுக்கு கோவில் கட்டி நிர்வகித்துவரும் முகமது கௌஸ் குடும்பம் பற்றியும் ஏற்கனவே பார்த்தோம்.

இப்போது மாரியம்மனைப் பாடிய மதார்சா இராவுத்தர் எனும் இசுலாமியர் பற்றி அறிவோம்.

-------------------------
கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் சூலக்கல் என்ற ஊரின் மாரியம்மன் கோவில் புகழ்பெற்றதாகும்.

இந்த மாரியம்மன் மீது பொள்ளாச்சி வட்டம் அம்பாரம்பாளையம் ஊரைச் சேர்ந்த மதார்சா ராவுத்தர் எனும் புலவர் அம்மானை, கும்மி, காரணச்சிந்து என மூன்றும் பாடி அவை அச்சில் வெளிவந்தன.

1909 இல் அச்சிட்டு முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து 1919 இல் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளன.
அச்சிட்டது பொள்ளாச்சி 'கோபாலவிலாச அச்சுக்கூடம்' என்று உள்ளது.

ஒரு இடத்தில் 'செந்தமிழ் பாடும்படி செப்பினாள் மாரியம்மன்' என்று கூறும் அப்புலவர்,
'ஜாதிபேதம் பாராமல் தாயாரே காக்கவேண்டும்' என்று மாரியாத்தாளை வேண்டுகிறார்.
(இசுலாமியர் ஒரு சாதியாம்!)

சூலக்கல் பற்றி கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்,

'பூமலரும் தீங்கனியும் பொலிந்து நிறைந்தோங்கும்
பைங்காவும் செந்நெல்களும் பருத்தகன்னல் கழனிகளும்
வாழை கமுகுபலா மஞ்சள் இஞ்சி ஏலங்களும்
பொன்மேலும் ஓங்கும் விதமான பண்ணைகளும்
பொன்னி நதியென்னப் புகழ்பெற்ற நதிவளமும்
சூழ்ந்துசெல் வம்திகழும் சூலக்கல்'

தன்னைப் பற்றி கூறுகையில்,

"ஆம்பராவதி நதிசூழ் அம்பராம் பாளையத்தில்
ஜமால்ரா வுத்தன்பெற்ற தவோபல புத்திரனாம்
அங்காள பரமேசுவரி அம்புயப் பதங்களையும்
மதுரைவீரன் உபய வனசமலர்த் தாளிணையும்
பக்தியுடன் நாளுடம் பரவித் துதிசெய்வோன்
மாடன் முதலான மற்றுமுள்ள பேய்களையும்
ஓட்டிக் கருவறுத்த உத்தமனாம் மதார்சா"
என்று பாடுகிறார்.

இதோ ஒரு கும்மிப்பாட்டு எடுத்துக்காட்டுக்காக,
"கணித சக்கரம் உள்ளவளாம் மாரி
கம்பீரமான பரஞ்சோதி
பணிதி அணிந்திடும் மாரியம்மன்
பாடிக்கும்மி அடியுங்கடி"

ஆனைமலை என்.ஏ.சிவசூரியம்பிள்ளை இயற்றிய கவியில்,
"மதார்சா ராவுத்தர் மாரியம்மன் பேரால்
எதார்த்த விதமாக எண்ணி பதார்த்தமது
இன்னதெனக் கேரா எளியர் சுபமடைய
சொன்னதமிழ்ப் பாவே சுகம்'
என்று பாராட்டிப் பாடியுள்ளார்.

புரவிபாளையம் ஜமீன் சமஸ்தானப் புலவர் முத்துசாமிப்பிள்ளை தனது கவிதையில் இவரை 'தெளிந்த தமிழ் அறிஞன்' என்று பாராட்டுகிறார்.

[நன்றி: கொங்கு ஆய்வுகள் (நூல்)
ஆசிரியர்: செ.இராசு]

(மேற்கண்ட நூலில் 'கொங்குநாட்டு இசுலாமியப் புலவர்கள்' எனும் தலைப்பில் ஐயாவு ராவுத்தர், மதார்சா ராவுத்தர், ஜம்பை காசிம், கா.அப்துல் சுகூர், முகம்மது யாக்கூபு, கா.நயினார் முகம்மது, இ.கமாலுதீன் ஆகிய புலவர்கள் பற்றி உள்ளது)
--------------------------

இன்று கோயம்புத்தூர் இந்து மதவெறிக் கும்பல்களின் தலைநகரம் போல ஆகிவிட்டது.

வணிகச் சமூகமான இசுலாமியரை ஒடுக்கி வணிகத்தைக் கைப்பற்ற வடயிந்திய வணிகர்களான மார்வாடிகள் தலைமையில் இந்த மதவெறி கருத்தியல் செயல்படுத்தப் படுகிறது.

தமிழகத்தின் வரலாற்றில் எல்லா மதத்தாரும் அனைத்து மத தெய்வங்களையுமே வணங்கி வந்துள்ளனர்.
சைவ அடியார்கள் இராமனையும் வைணவ அடியார்கள் சிவனையும் பாடியுள்ளனர்.
சோழர்கள் சைவர்களாக இருந்த போதும் வைணவருக்கு நிலமும் கோவிலுக்கு நிவந்தங்களும் அளித்துள்ளனர்.
நாகப்பட்டிணம் புத்த கோவில் கூட சோழர்களால் பராமரிக்கப்பட்டுள்ளது.
பாண்டியர்கள் சைவத்திற்கு மாறிய பிறகும் சமணருக்கு கல்படுக்கை அமைத்து கொடுத்துள்ளனர்.

அன்று பல்வேறு மதங்கள் இருந்துள்ளன.
தமிழ் மன்னர்கள் அனைத்து மதங்களையும் அரவணைத்து சமயப்பொறையுடன் ஆட்சி நடத்தியுள்ளனர்.

  நூறாண்டுகள் முன்புகூட ஒரு இசுலாமியர் மாரியம்மனைப் பாடியதும் அதைப் பிற புலவர்கள் பாராட்டியதும் அன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையைக் காட்டுகிறது.

இப்போதும் கூட தமிழக பொதுமக்கள் அனைவரும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கின்றனர்.

ஆனால் சமீபகாலமாக 'நேற்று வந்தவர்கள்' இதை மாற்றியமைக்க முயல்கின்றனர்.

இந்த சூழ்ச்சிக்கு கொங்கு தமிழர்கள் இரையாக வேண்டாம்.

தமிழர் ஒற்றுமை ஓங்குக!