Saturday 23 September 2023

கன்னட பொதுமக்களே

கன்னட பொதுமக்களே!
 ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது அதைத் தாயிடமிருந்து பிடுங்குவது போன்ற செயல் கர்நாடகாவில் நடக்கிறது!
 காவிரி தாய் என்றால் நாம் இருவருமே பிள்ளைகள், நம் இருவருக்கும் பசி தீர்ந்துகொள்ள சம உரிமை உள்ளது!
 இந்த உரிமையில்  நம்மில் யார் மூத்தவன் இளையவன் என்கிற பேச்சுக்கே இடமில்லை. 
 ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவிடாமல் தடுப்பது இனப்படுகொலை ஆகும்! 
 இந்த படுபாதகத்தைச் செய்யாதீர்கள்! 
அரசியல்வாதிகள் மீது பழியை போட்டுவிட்டு நீங்கள் காரணமில்லை என்பது போல நடந்துகொள்ளாதீர்கள்!
 கர்நாடகாவில்  உபரியாகத் தண்ணீரைத் தேக்கி அதை பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சிக் கொள்கின்றன.
 தண்ணீர் வராத தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை நடக்கிறது.
 இந்த அரசியல் சதியைப் புரிந்துகொள்ளுங்கள்!
"ஆறு தோன்றும் இடம் எங்களுடையது அதனால் ஆறு எங்களுக்கு சொந்தம்" என்பது உலகில் யாருமே சொல்லாத கூற்று!
இதை அறிவுள்ள எவருமே ஏற்க மாட்டார்கள்!
 நியாயமான அளவு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மனசாட்சியுள்ள கன்னடர்கள் குறைந்த பட்சம் இணையத்திலாவது குரல் எழுப்புங்கள்!
 காவிரி விடயத்தில் கன்னட அமைப்புகள் நடத்தும் முழு அடைப்புக்கும் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்காதீர்கள்!
 கர்நாடகத்தின் இந்த மனிதத்தன்மை அற்ற அரசியல் தொடர்ந்தால் ஒவ்வொரு கன்னடரும் கொலைவெறி பிடித்தவர் என்கிற பொது பிம்பத்தை உருவாக்கும்! 
 கடைசி கட்டத்திற்கு வந்துவிட்ட காவிரிப் பிரச்சனை விரைவில் இனமோதலில் முடியவுள்ளது!
அதனால் நமக்கு லாபம் இல்லை! நஷ்டம் மட்டுமே!
 நம்மை மோதவிட்டு லாபம் பார்ப்பவர்கள் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும்!
 கன்னடர் தமிழர் கலவரம் வெடித்து இரு தரப்பிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பல நூறு உயிர்கள் போனபிறகு தவறு உணர்ந்து கண்ணீர் விடுவதை விட இப்போதே சமாதானம் செய்துகொள்வது சிறந்தது!
 "மற்ற விடயத்தில் கன்னடர்களாகிய நாங்கள் நல்லவர்கள்தான் ஆனால் காவிரியை மட்டும் கொடுக்கமாட்டோம்" என்பது ஒரு ஒருவனுக்கு விருந்து வைத்துவிட்டு கழுத்தை நெறித்துக்கொண்டு நிற்பது போன்றது!
  நாங்கள் பிச்சை கேட்கவில்லை! 
எங்கள் உரிமையைத் தான் கேட்கிறோம்! 
 மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள்! 
 
 

Tuesday 19 September 2023

இனப்படுகொலை மற்றும் செம்மொழி மாநாடு

இனப்படுகொலை மற்றும் செம்மொழி மாநாடு 

 2010 இல் கருணாநிதி இனப்படுகொலை பழியிலிருந்து தப்பிக்க செம்மொழி மாநாடு நடத்தினார். 
 ஆனால் தொல்காப்பியம் தமிழை செம்மொழி (அதாவது செந்தமிழ்) என்று குறித்துள்ளது.
 தமிழகம் வந்த ஐரோப்பிய அறிஞர்களும் அவ்வாறு குறித்துள்ளனர்.

   'செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு' என்றும் 'இயற்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு' என்றும் தொல்காப்பிய காலத்திலேயே குறிக்கப்பட்டுள்ளது.

 அதாவது தமிழ் என்பது (பேச்சு, எழுத்து என அனைத்துக்கும்) பொதுவான சொல். செந்தமிழ் என்பது இலக்கணத்தோடு முறையாக எழுதப்படுவது (அதாவது standard ஆனது). பேச்சு தமிழ் இதிலிருந்து மாறுபடும் (இன்றும் கூட பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் வேறுபாடு இருப்பது போல).

 இதேபோல பதினெட்டாம் நூற்றாண்டிலேயே கால்டுவெல் போன்ற மேலைநாட்டினர் தமிழின் செம்மையையும் பழமையையும் பற்றி  குறித்துள்ளனர்.
  முக்கிய சான்று கி.பி.1880 களில் வெளிவந்த Johnson's new universal cyclopedia கலைக் களஞ்சியத்தில் "classical tamil differs from collquial tamil" என்று கூறப்பட்டுள்ளது.

 ஆக கருணாநிதி தான் தமிழை செம்மொழி ஆக்கினார் என்பது பொய்ப் பிரச்சாரம்.

 ஜப்பானிய தமிழ் ஆய்வாளரான நெபுரு கரோஷிமா அவர்கள் செம்மொழி மாநாடு தகுதி வாய்ந்த அறிஞர்கள் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக அவசர அவசரமாக நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.

 வந்தேறிகள் தமிழ் இனத்தை வீழ்த்த தமிழ் மொழியை பயன்படுத்துகின்றனர்.
 தமிழர்கள் இன உணர்வு கொள்ளாமல் மொழி உணர்வு கொண்டு மொழியை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துமாறு வந்தேறிகள் தொடர்ந்து நம்மை மடையமாற்றிக் கொண்டு வருகின்றனர்.

(மேற்கண்ட தகவல்களுக்கு நன்றி: தென்காசி சுப்பிரமணியன்)

    2004 இல் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருக்கும்போதுதான் தமிழை  செம்மொழி என்று இந்திய அரசு அங்கீகரித்தது.
 2008 இல் தெலுங்கு மற்றும் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அதற்கு கருணாநிதி முக்கிய காரணம்.
 2009 இல் ஈழம் அழிந்து இனப் படுகொலை நடந்தபோது இந்திய அரசை கவிழ்க்கும் வலு இருந்தும் கருணாநிதி அதைச் செய்யவில்லை.
 கருணாநிதி தெலுங்கர் என்கிற உண்மையும் அப்போது வெளிவந்தது. இந்த விமர்சனத்தில் இருந்து தப்பவே அவர் 2010 இல் செம்மொழி மாநாடு நடத்தினார்.
 ஆனால் தமிழர்கள் ஏமாறவில்லை.

 

Monday 11 September 2023

சிதம்பரம் பிள்ளையும் பள்ளரும்

சிதம்பரம் பிள்ளையும் பள்ளரும்

கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார் அவர்கள் தமது சுயசரிதையில் இரண்டு பள்ளர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

 வ.உ.சி அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த வேதநாயகம் என்கிற பள்ளரை ஆங்கிலேயர் வழக்கு போட்டு அலைக்கழித்தபோது அவருக்காக வாதாடி வழக்குகள் அனைத்தில் இருந்தும் விடுவித்தார்.
 
[முடிமனில் என்னுடை முன்னோர் நாள் முதல்
அடிமை புரியும் அறிவினைக் கொண்ட
வேத நாயகம் எனும் மேம்படு பள்ளனை
ஏத மில்லாமலே எண்ணிலா வழக்கில்
அமிழ்த்தினர் போலிஸார்;
அனைத்தினும் திருப்பினேன்]

(இதில் 'அடிமையாக இருக்கும் அறிவினைக் கொண்டவர்' என்று பொருள் கொண்டால் அடுத்த வரியில் 'மேம்படு பள்ளர்' என்பதுடன் பொருந்தாது.
'அடிமை வேலை செய்தாலும் அறிவார்ந்தவர்' என்று பொருள் கொள்க)

 அதேபோல வ.உ.சி அவர்கள் சிவ பக்தியில் சிறந்த 'தேசிகன்' என்ற பள்ளர் குடிச் சிறுவனை தனது வீட்டில் வளர்த்து வந்தார். 
 பார்வையற்ற அச்சிறுவனுக்கு வ.உ.சி ஐயாவின் மனைவி கைகளால் உணவூட்டி பராமரித்துள்ளார்.
 ஆனால் அவரது சுற்றத்தார் அச்சிறுவனை சாதிய ரீதியில் தாழ்த்திப் பேசியுள்ளனர். இதனால் அச்சிறுவன் தன்னை கைவிடுமாறு வேண்டியுள்ளார்.
பிள்ளை அவர்கள் தம் மனைவியிடம் இது பற்றி ஆலோசித்துள்ளார்.

[சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென்
தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.
ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால்
தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்
குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்
தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்
கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை
ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால்
அவளிடத் துரைத்திட அடுக்களை சென்றேன்]

(இதில் அச்சிறுவனைக் 'கிழவோன்' என்று உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்)

 அவர் மனைவியோ சாதி ஏற்றத்தாழ்வு கற்பனை தானே அன்றி உண்மை அல்ல என்றும் அதிலும் துறவி போன்ற இச்சிறுவன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்றும் சுற்றத்தார் பற்றி கவலைப்படாமல் அவனுக்கு தொடர்ந்து பணிவிடை செய்வோம் என்றும் கூறியுள்ளார். 

[எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!
எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும்
உருவம் முதலிய ஒன்றினும் பேதம்
மருவுதலிலாமை மலை போல் கண்டும்,
கற்பனை யாகக் காணும் குலத்தின்
சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய!
துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண்
இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம்
ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின்
பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர்]

 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்திலும் இக்காட்சிகள் வரும்.

 ஐயா அவர்களை முழுமையாக அறிந்துகொள்வது நம் கடமை!