Monday 31 July 2017

பறையருக்கு எதிரி யார்?

பறையருக்கு எதிரி யார்?

என்னை பறையருக்கு எதிரி என்பவர்களுக்கு...

நான் பறையர் பார்ப்பனர் இல்லை என்றுதான் கூறினேன்.
பறையர்தான் பார்ப்பனர் என்றால் இன்றைய பார்ப்பனர் வந்தேறி என்றாகிறது.
இது திராவிடத்தின் ஆணிவேருக்கு பலம் சேர்க்கிறது.

அதனால்தான் பார்ப்பனர் யார் என்பதை விளக்கவேண்டியது அவசியமாகிறது.

பிராமணர் வேறு பார்ப்பனர் வேறு பறையர் வேறு என்று தெளிவாக சான்றுகளுடன் பதிவிட்டு வருகிறேன்.

என்னை சாதிவெறியன் என்று கூறும் பறையரிய சூரர்களே!
நான் பிறந்த சாதியை விமர்சிப்பதன் மூலம் நீங்கள் பதிலடி கொடுத்ததாக ஆகிவிடாது.
அதற்கு பதிலடி கொடுக்க என் சாதி பற்றி எனக்கு ஒரு எழவும் தெரியாது.

2012, 2013 களில் பெரும்பான்மை பறையர்கள் தங்கள் பெருமை தெரியாது தலித்திய விரலை சூப்பிக்கொண்டிருந்த போது,
நான் பறையடிப்பவர்தான் பறையர் என்று நினைக்கும் கத்துக்குட்டியாக இருந்தபோதும்
இலக்கியங்களை ஆராய்ந்து பறை பல இடங்களில் பேசப்படுவதையும்
அது சாவுக்கு மட்டும் அடிப்பதல்ல என்றும்
பல சான்றுகளைப் போட்டு
பறை ஒரு உயர்ந்த இசைக்கருவி என்றும் அதை வாசிப்போர் எப்படி கீழ்சாதி என்றும் வாதாடிக்கொண்டிருந்தேன்.

ஆண்டாள் எனும் பார்ப்பாத்தி பல இடங்களில் பறை பற்றிப் பேசுவதை பதிவாகப் போட்டதுண்டு.

பறையடிக்கும் கோவில் சிற்பங்களை எல்லாம் பகிர்ந்ததுண்டு.

இறைமறுப்பாளனான நான் அன்வர் அண்ணன் நடத்தவிருந்த குறிஞ்சாக்குளம் காந்தாரியம்மன் சிலைநிறுவல் போராட்டத்திற்கு முகநூலில் ஆதரவு திரட்டினேன்.

அந்த போராட்டத்திற்கு எந்த பறையர் அமைப்பும் வரவில்லை.
இன்று பறையர் பறையர் வாய்கிழிய கத்திய எவரும் வரவில்லை.
(ஆனால் தகவலறிந்த இமானுவேல் சேகரனார் மகள் வருவதாகத் தெரிவித்திருந்தார்).

எந்த போராட்டத்துக்கும் கட்சிக்கும் போகாத நான் குறிஞ்சாக்குளம் பறையர்களுக்காக டெல்லியில் இருந்து விடுமுறை எடுத்து நேரில் போனேன்

என் தம்பியும் நானும் பாதிவழிவரை இருசக்கரவாகனத்தில் போய்க்கொண்டிருந்தபோது அலைபேசி வந்தது.
அன்வர் இரவிலேயே கைது செய்யப்பட்டு அடுத்து தலைமை தாங்க இருந்தவர் சரியாக திட்டமிடாததால் போராட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.

பிறகு போராட்ட குழுவில் எஞ்சியோரை இலஞ்சியில் போய் சந்தித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

உண்மையில் எனக்கு இன்றுவரை வயிற்றெரிச்சல் தீரவில்லை.
அந்த போராட்டம் மட்டும் நடந்திருந்தால் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கும்.

இந்த பதிவை படிக்கும் பறையர்களே!

பறையர் தலைமை தாங்கி நடத்தும் கட்சி இயக்கம் என எதையும் நம்பாதீர்கள்.

தமிழ்நிலம் முழுவதும் பரவி வாழும் தமிழரில்பெரும்பான்மைச் சமூகமான நீங்கள் தமிழ்தேசியத்தை கையில் எடுத்தால் நல்லதொரு பெரிய மாற்றம் நடைபெறும்.

உங்களை பார்ப்பனர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
பௌத்தன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல் உங்களின் உண்மையான அடையாளமான தமிழன் என்றே அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்தேசியம்தான் உங்களை உயர்த்தும்!
தமிழர் அனைவரையும் உயர்த்தும்!

நான் உட்பட முகநூல் போராளிகளை யாரையும் நம்பாதீர்கள்.

நீங்களே சிந்தித்து செயல்படுங்கள்!

முகநூல் பறையரிய போராளிகள் இனத்துரோகி திருமாவை அவர் செய்யும் அடிமைத்தனமான அரசியலுக்காக விமர்சித்தனர்.
அவர் நேரில் சந்தித்து ஒருமுறை முதுகைத் தட்டிக்கொடுத்ததும் அப்படியே அவருக்கு ஆதரவாக மாறியவர்கள்.

கபாலி படம் வந்தபோது 'ரஞ்சித் ரஞ்சித் பறையன் பறையன்' என்று ஒருநாளைக்கு 100 பதிவு போட்டவர்கள்.

தமிழனை மூத்திரக்குடி என்று திட்டும் வெறி பிடித்த சாக்கிய பறையர்கள் இவர்களை விட ஆபத்தானவர்கள்.

நீங்கள் இல்லாமல் தமிழ்தேசிய எழுச்சி கடினமானதுதான்,
ஆனால் எழமுடியாது என்று மட்டும் நினைக்கவேண்டாம்.

அதேநேரத்தில் உங்கள் பலத்தோடு தமிழ்தேசியம் மிகவேகமாக இலகுவாக எழமுடியும்.

பறையர்கள் நீங்கள் நினைத்தால் தமிழ்தேசியத்திற்கு தலைமையேற்க கூட முடியும்.

நீங்களே முடிவெடுங்கள்!

இந்த பதிவைப் படிக்கும் நீங்கள் பறையர் என்றால்
உங்கள் சமூகத்தின் மீது உண்மையில் அக்கறை இருந்தால்
நீங்கள் தனிமனிதனாக தமிழ்தேசியத்திற்கு திரும்புங்கள்.

தமிழ்தேசியத்தை இப்போதே கையிலெடுங்கள்!
தமிழ்தேசியத்தைக் கையிலெடுக்கதோருக்கு இனி வருங்காலமில்லை.

வேறுவழியின்றி கடைசிநேரத்தில் வந்து தமிழ்தேசியத்துடன் ஒட்டிக்கொண்டால் உங்களுக்கு முன்னேற்றமும் கடைசியாகத்தான் கிடைக்கும்.

முடிவு உங்கள் கையில்!

Sunday 30 July 2017

மூன்றாண்டுகளுக்கு முன்பே போட்ட பதிவு (திடீர் சாதி எழுச்சி)

மூன்றாண்டுகளுக்கு முன்பே போட்ட பதிவு (திடீர் சாதி எழுச்சி)

⇊  ⇓  ↡  ↧  ↯ ⇩ ↴

//தற்போதைய சாதிஎழுச்சி இன்னும் ஐந்து வருடங்களில் சாதிக்கலவரங்களைத் தோற்றுவிக்கும்//

// இனம் என்பது என்ன?

1)பொதுவான மொழி மற்றும் தகவல்தொடர்புமுறைகள்

2)பொதுவான தோற்றம் மற்றும் மரபணு

3)பொதுவான உணர்வு மற்றும் பழக்கவழக்கங்கள்

4)இயற்கை எல்லைகளால் வரையறுக்கப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவரும் தாய்நிலம்//

// இனத்தின் இரண்டு பண்புகள் மேலும் இறுக்கமடைவதன் மூலம் சாதி என்பது இனம் என்பதைவிட நன்கு வேரூன்றிவிடுகிறது

1)மொழி என்று தனியாக எதுவும் இல்லை

2)ஒரு இனத்திற்குள் மற்றவர்களை விட நெருக்கமான தோற்றம் மற்றும் மரபணு

3)ஒரு இனத்திற்குள் மற்றவர்களை விட நெருக்கமான உணர்வு மற்றும் பழக்கவழக்கங்கள்

4) வரையறுக்கப்பட்ட நிலம் என்று தனியாக இல்லை//

// இந்த குழப்பநிலையை 1920களில் ஆங்கில ஆட்சியுடன் நான் ஒப்பிடுகிறேன்;
பொதுவான எதிரி இருக்கும்வரைதான் வேற்றுமைகள் தலைதூக்காது//

// ஆங்கிலேயர் உலகப்போர்களில் பொருளாதார சரிவு கண்டபின் 1920களில் அவர்கள் ஆட்சி முடிவுக்கு வருவது தெரிந்துவிட்டது;
அப்போதுதான் 'நம்மில் யார் பெரியவர்' என்ற கேள்வி ஏற்பட்டு இனவழிஎழுச்சி ஏற்படுகிறது//

// அப்போது மூத்த இனம் என்று தமிழை ஆங்கிலேயர்கள் (பிரிவினைக்காக) நிறுவிவிட்டதால் தெலுங்கரும், கன்னடரும், மலையாளிகளும், சிங்களவரும், சமசுக்கிருதத்தைப் போற்றும் வடவர்களும் தமிழருக்கு எதிராக எழுச்சி கொள்கின்றனர்//

//இன்று 'திராவிடம்' என்ற பொதுஎதிரி ஒழியும்காலம் வந்துவிட்டதை அறிந்த தமிழர்கள் தற்போது சாதிவழி கிளரத் தொடங்கியுள்ளனர்;
ஆங்கிலஅரசு வீழ உலகப்போர் காரணமாக இருந்ததுபோல்,
திராவிடம் வீழ ஈழப்போர் காரணமாக அமைந்தது//

//தற்போதைய சாதிஎழுச்சி இன்னும் ஐந்து வருடங்களில் சாதிக்கலவரங்களைத் தோற்றுவிக்கும்;
ஆனாலும், திராவிடம் அளவு கேடாக அமையாது;
காரணம் தமிழருக்கு சாதிவெறி குறைவு என்பதோடு,
சாதிவழி ஆதிக்கம் தலைதூக்காமல் ஈழமக்களும் ஈழ ஆதரவாளர்களும் வழிநடத்துவார்கள்;
தவிர இங்கே குறிப்பிட்ட சாதியார் தனிப்பெரும்பான்மை கிடையாது;
எனவே தமிழர்களை அரசியல்வழியில் ஆள 'தமிழ் நாட்டாண்மை பற்றி பேசிக்கொண்டே' சாதியை தூக்கிப்பிடிப்பார்கள்;
எங்கேயெல்லாம் 'ஒரு இனமக்கள் தம் இனத்தவராலேயே ஆளப்படுகின்றனரோ'
அங்கேயெல்லாம் 'அவ்வினத்தின் பெரும்பான்மைச் சாதியாரே' ஆட்சியில் இருப்பார்கள்//

// நமக்குத் தேவை இனவிடுதலை அது அரசியல்மூலம் கிடைக்காது;
அரசியலில் நெழிந்து சுழிந்து போகவேண்டும்;
சாதி, மதம் என பிரிவினைகளும் தலைதூக்கும்;
வாய்ச்சொல் வீரர்களுக்கும் முதுகில் குத்தத்தெரிந்தவர்களும் அரசியல் மூலம் வேண்டியதை சாதித்துக்கொள்கிறார்கள்வாய்ச்சொல் வீரர்களுக்கும் முதுகில் குத்தத்தெரிந்தவர்களும் அரசியல் மூலம் வேண்டியதை சாதித்துக்கொள்கிறார்கள்;
தமிழருக்கும் அரசியலுக்கும் ஒத்தேவராது//

// இரண்டில் எந்தவழியைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை தமிழ் இளைஞர்கள் முடிவுசெய்யுங்கள்;
கையில் ஆயுதத்தைத் தூக்கினால் புரட்சிகரத் தமிழ்க்குடியரசு,
வெறுங்கையைத் தூக்கினால் சுருங்கிப்போன தமிழீழம்//

Saturday 29 July 2017

ஏகாதிபத்திய இனம்

ஏகாதிபத்திய இனம்

ஆமாம்டா!
முதல் ஏகாதிபத்தியம் தமிழன் ஏற்படுத்தியதுதான்!

குமரிக்கண்டத்தில் உருவாகி அது தொட்டுக்கொண்டிருந்த ஆப்பிரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா என எல்லா இடத்திற்கும் பரவினோம்

குமரிக்கண்டம் மூழ்கும்போது கப்பலில் நெடியோன் தலைமையில் இங்கே வந்தோம்
ஏற்கனவே இங்கிருந்த தமிழர்களை போரிட்டு வென்று அடக்கி குடியேறினோம்.

ஏற்கனவே இருந்த சிற்றரசர்களை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு சுடுகாட்டுக்கு வேலை செய்ய அனுப்பிறோம்.

இந்தோனேசியாவுக்கு படையோடு போய் அங்கிருந்த மக்களை விரட்டிவிட்டு நெல்வளம் மிக்க சாலியூரை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து குவியல் குவியலாக விதைநெல் கொண்டுவந்தோம்.

காடுகளை வெட்டி அழித்து எரித்து அதை விளைநிலமாக்கி உணவுக்கு பயன்படுத்தினோம்

மண்ணை தோண்டி உலோகம் எடுத்து உருக்கி ஆயுதங்கள் செய்தோம்.
காட்டு விலங்குகளை கொலை செய்தோம்.
எதிர்த்து நின்ற எல்லாரையும் கொன்றோம்.

மதுவைக் கண்டுபிடித்தோம்.
ஆண்பெண் எல்லாரும் பருகினோம்.

விழா கொண்டாடுவதை ஏற்படுத்தினோம்.
அன்று கண்ணில்படும் விலங்குகளையெல்லாம் பலியிட்டு சோறுடன் சமைத்து கள்ளுடன் வயிறு புடைக்க உண்டோம்.

விலங்குகளை வேட்டையாடி தின்றதோடு நில்லாமல் அவற்றை அடக்கி வேலை செய்ய பழக்கினோம்.

அவற்றின் குட்டிகளுக்கானப் பாலை கறந்து நாங்கள் எடுத்துக்கொண்டோம்.

யானைகளை பழக்கி போர்செய்வதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்சென்றோம்.

போரில் தோற்ற மன்னனின் தலையை வெட்டி அதை கவிழ்த்து சட்டி போல அடுப்பில் வைத்து மூளையை சமைத்து அவன் வெட்டுண்ட கையையே அகப்பையாக்கி கிண்டி எடுத்து பேய்களுக்கு விருந்து வைத்தோம்

ஆற்றில் விழுந்துவந்த காவல்மரத்தின் பழத்தை தின்ற குற்றத்துக்காக வடுகர் பெண்ணை கொன்றோம்

பலமுறை சுற்றுலா மாதிரி இமயம் வரை போய் எதிரே கண்ணில்பட்டவனையெல்லாம் தூக்கிப்போட்டு மிதித்து கொள்ளையடித்து பெரும்பொருள் கொண்டுவந்தோம்.

பல நாட்டிலிருந்தும் பெண்ணெடுத்து பெண்டாட்டியும் வைப்பாட்டியும் கணக்கில்லாமல் வைத்துக்கொண்டோம்.

ஆமைகளை பின்பற்றி கடலில் பயணம் செய்து பல நாடுகளிலும் குடியேறி அவர்களை அடக்கி ஆண்டோம்.
பேசுதல், எழுதுதல், வேளாண்மை, கட்டுமானம், கருவி செய்தல், திருமணம் செய்தல், கூட்டமாக வாழ்தல், விலங்குகளைப் பழக்குதல், போர் செய்தல் என எல்லாவற்றையும் உலகம் முழுவதும் கற்றுக்கொடுத்தோம்.

இந்த உலகத்தில் ஒரு விலங்காகத் திரிந்துகொண்டிருந்த மனிதனை நாகரீகமயமாக்கி மனிதனின் ஆக்கிரமிப்பை இந்த உலகில் உறுதிசெய்தோம்.

வெறும் துணியையும் மிளகையும் கொடுத்து ஐரோப்பாவிலிருந்து தங்கம் பாளம் பாளமாக அள்ளிவந்தோம்

சிங்களவன் மீது போர் தொடுத்து பௌத்த கோவில்களை கொள்ளையடித்து பலரை அடிமையாக பிடித்துக்கொண்டுவந்து அணையும் கோவில்களும் கட்டினோம்.

கன்னடன் மீது படையெடுத்து அவன் நாட்டு பிராமணரையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றோம்

தெலுங்கனை வகைதொகையில்லாமல் கொலை செய்து தெலிங்க குல காலன் என்று பட்டம் போட்டுக்கொண்டோம்

முதன்முதலாக கடல்கடந்து ஆக்கிரமித்து ஏகாதிபத்தியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோனோம்

நாங்கள் காட்டுமிராண்டிகளாகவும் அதே நேரத்தில் அடிப்படை மாந்தநேயத்துடனும் இருந்தோம்

  இன்றுவரை யாரையும் ஏமாற்றியதில்லை.
முதுகில் குத்தியதில்லை.
யாரையும் கொடுமைப்படுத்தியதும் கிடையாது.
நாடி வந்தவருக்கு இல்லை என்று கூறியது கிடையாது.
கீழ்த்தரமான செயல்களில் இறங்கியதும் கிடையாது.

என்றைக்கு நாங்கள் நியாயம் தர்மம் என்று சிந்தித்தோமோ அன்றுதான் வீழ்ந்தோம்

திரும்பியபோதெல்லாம் முதுகில் குத்தப்பட்டோம்.

நாங்கள் மீண்டும் காட்டுமிராண்டிகளாக மாறி மீண்டும் உலகையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து எங்கள் காலடியில் கொண்டுவர ரொம்பநேரம் ஆகாது.

இலுமினாட்டிகளுக்கெல்லாம் அப்பனுக்கப்பன் நாங்கள்!

ஒற்றுமை இல்லாதது மாதிரியும் துரோகிகள் நிறைந்திருப்பது போலவும் தெரியலாம்.

நாங்கள் திடீரென்று ஒன்றுசேர்ந்து அசுரபலத்துடன் திருப்பியடிப்போம்

எதிரிகள் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் அவர்கள் கதை முடிந்திருக்கும்.

தமிழன் முன்பை விட அதிக ஆதிக்கவெறியுடன் மீண்டும் திடுமென எழுவான்!
தயாராக இருங்கள் வேற்றினத்தாரே!

Friday 28 July 2017

தப்ப தட்டிகேட்க போலீசிருக்கு? கோர்ட்டிருக்கு?

தப்ப தட்டிகேட்க போலீசிருக்கு? கோர்ட்டிருக்கு?

1988 ல் கொடைக்கானல் குண்டுவெடிப்பு மத்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் மீது ஆயுதக்குழு ஒன்றால் நடத்தப்பட்டது.
இது அமைதிப்படை ஈழத்தில் செய்த அட்டூழியத்தை மறைத்து புலிகள் பற்றி பொய்யான தகவல்கள் பரப்பியதற்காக  தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) நடத்திய தாக்குதலாகும்.

இதைச் செய்தவர் பெருஞ்சித்தரனார் மகனான பொழிலன் என்பதைக் கண்டுபிடித்து 2003 ல் சிறையில் அடைத்தனர்.
பத்தாண்டு தண்டனை முடிந்து 2013ல் அவர் வெளியேயும் வந்துவிட்டார்.

ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்ட அப்பாவிகள் 1991 முதல் இன்றுவரை சிறையில் உள்ளனர்.
26 ஆண்டுகளாகியும் தாமதமாக வழங்கப்படும் (அ)நீதி கூட வழங்கப்படவில்லை.

இதே போல ஆயுதம் தாங்கி போராடிய சுப.இளவரசனும் வீரப்பனாருடன் சேர்ந்து ராஜ்குமாரைக் கடத்திய மாறனும் ஆயுதவழியைக் கைவிட்டு பொதுவாழ்வுக்குத் திரும்பிவிட்டனர்.
புலிகளோடும் வீரப்பனாரோடும் சேர்ந்து களமாடிய தமிழ்நாடு மீட்புப் படை சுப.முத்துக்குமாரும் ஆயுதவழியை விட்டு பொதுவாழ்க்கைக்கு திரும்பினார்.
நாம்தமிழர் கட்சியை தொடங்கினார்.
(பிறகு சில சமூகவிரோதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார்)

அதாவது ஆயுதப் போராளிகள் சட்டத்தால் கூட மதிப்பு மரியாதையுடன் நடத்தப்பட்டு வழங்கப்படவேண்டிய நீதியும் சலுகைகளும் கிடைக்கப்பெற்றுள்ளனர்.

நடுத்தெருவில் வெயிலில் பட்டினி கிடந்து
அடிவாங்கி மிதிவாங்கி
சிறையில் அடைக்கப்பட்டு மானபங்கப்பட்டு
வழக்குகளால் அலைக்கலைந்து
சொத்திழந்து வேலையிழந்து
மக்களால் மறக்கப்பட்டு நாசமாய் போய்
நடுத்தெருவில் நிற்போர் அறவழிப் போராளி(?)களும் ஏதுமறியா அப்பாவிகளும்தான்.

ஹிந்தியாவில் 25% கைதிகள்தான் தண்டனை பெற்ற கைதிகள்.

மற்ற 75% கைதிகள் விசாரணைக் கைதிகள்.
இதில் பாதிபேர் அவர்கள் தண்டனை பெற்றால் எத்தனை காலம் சிறையில் இருக்கவேண்டுமோ அதைவிட அதிக காலம் சிறையில் இருப்பவர்கள்.

உண்மையான குற்றவாளிகள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதே கிடையாது.

இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சணம்.

ஆக அறவழியில் போராடிக் கிழிக்கிறேன் என்று பிழைப்பைக் கெடுத்து கிளம்பி
போராட்டம் என்ற பெயரில் உங்கள் உடலைக் கெடுத்து பொதுமக்களுக்கும் இடைஞ்சலைக் கொடுத்து
கடைசியில் வழக்கில் சிக்கி குடும்பத்தோடு நாசமாய்ப் போகவேண்டாம்.

கார்ப்பரேட்களால் பாதிக்கப்படும் கிராமங்களே!
உங்களைக் காக்க ஒரு 'நாயகன்' கமல் பிறந்துவரப் போவதில்லை.
நீங்களே உங்கள் ஊரில் நல்ல உறுதியான இளைஞர்கள் நான்குபேரை தேர்ந்தெடுத்து ஆயுதவழியில் போராட அனுப்புங்கள்.
அவர்கள் குடும்பத்தை உங்கள் கிராமம் பொறுப்பில் எடுத்துக்கொள்ளட்டும்.
நீங்களும் கையாலாகமால் இருக்காது அடித்தால் திருப்பியடியுங்கள்.

திருப்பியடிக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

1992 ல் 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் எந்த பாவமும் அறியாத வாச்சாத்தி கிராமத்தில் புகுந்து சந்தனக்கடத்தல் சோதனை போட்டபோது அவர்கள் ரொம்ப அப்பாவி பழங்குடிகள் என்று தெரிந்ததும் அவர்களை அடித்து 18 பெண்களைக் கெடுத்து 34 பேரைக் கொன்று  பலரை ஊனமாக்கிய கதிதான் உங்களுக்கும் நடக்கும்.

அதன்பிறகும் அறவழியில் போராடினால் 20 ஆண்டுகள் கழித்து அதிகபட்சமாக பத்தாண்டு சிறைத்தண்டனை 12 பேருக்கு விதித்து வந்ததே ஒரு அதிசய தீர்ப்பு! அதுபோல ஒரு தீர்ப்பு வரும்.

இதுவரை கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போட்ட எந்த வழக்கிலும் பெருமுதலாளிகளுக்கு எதிராகத் தீர்ப்பு வந்ததே இல்லை.

போலீசும் கோர்ட்டும் மக்களை ஒடுக்கி பெரிய மனிதர்களைத்தான் காப்பாற்றும்.

அடிக்கு அடி!
உதைக்கு உதை!
கொலைக்கு கொலை!
இதுதான் தீர்வைத் தரும்.

முழுமாடு மாதிரி வளர்ந்து நிற்கும்
வேட்டிகட்டிய முறுக்குமீசை ஆண்களும்
சேலைகட்டிய பெண்களும்
வெறும் லத்தி வைத்திருக்கும் 10, 15 தொப்பை போலீசிடம் அடிவாங்கி ஓடுவது
பிறருக்கு எரிச்சலை கிளப்புமே ஒழிய ஆதரவு தேடித் தராது.

நீங்கள் திருப்பி கை நீட்டாதவரை அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான்.
வேடிக்கை பார்ப்பவன் பார்க்கத்தான் செய்வான்.

மானத்துடன் வாழுங்கள் தமிழ்மக்களே!
நம் தலைவர் பிரபாகரன் சொன்னது படி நடவுங்கள்
"அடிமையாக வாழ்வதை விட எதிரியாக சாவது எவ்வளவோ மேல்" .

உள்நாட்டுப் போர் முடிந்தது

உள்நாட்டுப் போர் முடிந்தது

ஆண்டு: 2117
மாதம்: 05
நாள்: 21

 பேச்சுவார்த்தை நடந்தது.
படை திரட்டி தாய்நிலத்தை மீட்டாயிற்று.
 தற்போது தாய்நிலத்தை இரண்டு நாடுகளாக பிரிக்கவேண்டும் என்று தென்திசை தளபதி கேட்டார்.
 இதற்கு காரணம் தெற்கே தாய்நிலம் மக்கட்தொகை குறைவாக உள்ளது.
 வடக்கே மக்கட்தொகை மிக அதிகம்.
 ஆக ஒரு கோடி மக்களை தெற்கில் பரவலாக குடியமர்த்தும் திட்டத்தை தலைவர் முன்வைத்ததுதான்.

 தெற்கு தளபதி இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
வரலாற்றில் தனிநாடாக நெடுங்காலம் இருந்தோம்
 நில அமைவும் வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரிந்திருந்தது.
 தெற்கேதான் முதலில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது.
 ஆக தெற்கு தனிநாடு என்பது தென்திசை தளபதியின் வாதம்.

 நிலம் இரண்டாக பிரியும் முன்பே இருபுறமும் இனம் வாழ்ந்துவருகிறது.
 இரு புறமும் ஒரே ஆட்சியில் இருந்ததும் உண்டு.
 இருபுறத்திலும் மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஒரே போலத்தான் உள்ளன.
 ஆக இரண்டாக பிரிந்த தாய்நிலத்தை பாலம் கட்டி இணைத்து ஒரே நாடாக ஆக்கவேண்டும் என்பது தலைவரின் வாதம்.

 விவாதம் முற்றி தென்திசை மக்கள் போரால் வடக்கே வந்தபோது சரியாக நடத்தவில்லை என்று தளபதி குற்றம் சாட்டினார்.

 தெற்கே விடுதலைப்போர் ஆரம்பித்தது முதல் அது தோல்வியில் முடிந்தவரை வடக்கு மக்கள் உதவிய அனைத்தையும் தலைவர் பட்டியலிட்டார்.
 வடக்கை விடுத்த தனியாக போராடியதால்தான் தெற்கு தோல்வியடைந்ததாக அவர் விவாதித்தார்.

 தெற்கே வாக்கெடுப்பு நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.
 ஆனால் தெற்கு தளபதி மறுத்துவிட்டார்.
 மக்கள் வெற்றிக்களிப்பிலும் இனவுணர்விலும் இருக்கும் காலகட்டம் அது.
 வாக்கெடுப்பின் முடிவு எப்படியும் ஒரே நாடாக இருப்பதாகத்தான் இருக்கும் என்பதை அவர் கணித்தார்.
 தலைவருக்கும் ஒரு வேளை தெற்கு மக்கள் தனிநாடாக வாக்களிப்பார்களோ என்ற ஐயம் சிறிதளவு இருந்தது.

 20 ஆண்டு கழித்து வாக்கெடுப்பு நடத்தலாம் என்று ஒரு தளபதி கூறினார்.
 அதுவரை மக்களிடம் இருதரப்பினரும் பிரச்சாரம் செய்யலாம் என்றும் கூறினார். 

 தலைவரும் தளபதியும் உடனடியாக மறுத்துவிட்டனர்.
 மேற்கண்ட முடிவு தளபதிக்கு சாதகமாக முடியலாம்.
 ஆனால் தளபதி இராணுவ நடவடிக்கை பற்றி அறிந்தவர்.
தலைவருக்கு அடுத்த போரியல் வல்லுநர் அவர்தான்.
 சனநாயக அரசியல் அவருக்கு புரிவதில்லை.
 
 
 தலைவரின் நிலையும் அவ்வாறே.
அவருக்கு அலங்காரமாக பேசவோ உணர்ச்சியோடு உரையாற்றவோ தெரியாது.
 எழுதமட்டும் வரும். 
அதுவும் அத்தனை சிறப்பாக அவரால் முடியாது.
 
 அதாவது அவர்களது இனத்தின் பண்பை அவர்கள் அப்படியே கொண்டிருந்தனர்.
 அந்த இனம் ஒரு ராணுவ இனம்.
சிந்தனையும் திறமையும் கொண்ட இனம்.
 நேரடியாக மோதுவதுதான் அவர்களுக்கு வரும்.
 ஏமாற்றத் தெரியாது. அதனால் அவர்களுக்கு அரசியல் பாதையில் எதற்குமே தீர்வு தேட தெரியவில்லை. 

 இருவரும் இராணுவ வழியில் தீர்க்கவேண்டும் என்றே விரும்பினர்.
 ஆனால் பெரியதொரு உள்நாட்டுப் போரை விரும்பவில்லை. 

 தலைவர் ஒரு தீர்வை முன்வைத்தார்.
 இரண்டாக பிரிந்துள்ள தாய்நிலத்தில் நடுவே ஒரு தீவு உண்டு.
 அதை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்கள் வென்றதாக ஆகும்.
 வென்றவரே அதன்பிறகு தாய்நிலம் முழுவதற்கும் இனத்திற்கும் தலைவர்.
அவர் என்ன விரும்புகிறாரோ அது நடக்கும்.
 
 விதிமுறைகள் வகுக்கப்பட்டன

* ஏழு நாட்களுக்கு மேல் போர் தொடரக்கூடாது.
 ஏழாவது நாளில் யார் தீவின் நிலத்தை அதிகம் பிடித்துள்ளனரோ அவர்கள் வென்றனர்.

* போர் தொடங்கும் முன் தீவில் எந்த முன்னேற்பாடும் செய்திருக்ககூடாது

* தீவின் நிலத்தை 100% யார் முதலில் கைப்பற்றுகின்றனரோ அவர்கள் வென்றனர்.

* இரு கரையிலிருந்து எத்தனை தடவாளங்களை வேண்டுமானாலும் அனுப்பிக்கொள்ளலாம்.
அக்கரையை மட்டும் தாக்கக்கூடாது.

 பேச்சுவார்த்தை முடியும்போது தலைவர் சொன்னார் ஆறுநாட்களில் போர் முடியும் என்று.

 இருதரப்பும் படை திரட்டியது.
விடுதலை போர்களிலேயே மிகவும் விறுவிறுப்பானது இந்த குட்டிப் போர்தான்.

தலைவரின் படை பெரும்பாலும் மனவலிமையையும் தனிமனித செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவது.
 
 தளபதியின் படை பயிற்சியையும் கீழ்படிதலையும் அடிப்படையாகக் கொண்டது.

தலைவரின் படையில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. 
 அவர்கள் போர்க்களத்தில் மனம்போன போக்கில் இயங்குவார்கள்.

 தளபதி படை அப்படியில்லை.
கட்டுக்கோப்பானவர்கள். 
தலைமை வழிநடத்த அதற்கு அப்படியே கீழ்படிவார்கள்.
தற்கொலைத் தாக்குதல் நடத்துவார்கள்.
 கடுமையான பயிற்சியும் வலுவான உடற்கட்டும் கொண்டவர்கள்.

 தலைவரின் படை 95% ஆண்களை மட்டுமே கொண்டது.
 தளபதி படையை விட 8 மடங்கு பெரியது.
 ஆனால் தளவாடங்கள் குறைவு.
 
 தளபதி படை 35% பெண்களைக் கொண்டது.
நவீனமானது. 
விமானப் படையும் நீர்மூழ்கிகளும் கொண்டது.

இரண்டு நாள் கழித்து காலை 10 மணிக்கு போர் தொடங்கியது.
 இருபுறத்தில் இருந்தும் படைகள் புறப்பட்டன.
 தீவுக்கு அருகே இருப்பதால் தென்படை முதலில் தீவை அடைந்தது.
 அவர்கள் முழுமையாக தரையிறங்கவும் மறுமுனையில் தலைவர் படை இறங்கியது.
 இருவரும் முன்னேறினார்கள்.
தலைவர்படை கால்வாசி தீவை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் அவர்களை மூன்றுபுறம் சூழ்ந்தவாறு முக்கால்வாசி தீவை தளபதி படை அதைவிரைவாக கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது.
 தீவைச் சுற்றிய நீர்ப்பகுதியும் இதே நிலையில் இருந்தது.

 நான்கு நாட்கள் இருவரும் கடுமையான சமர் புரிந்தனர்.
 ஆனால் கட்டுப்பாட்டு பகுதியில் பெரிய முன்னேற்றம் இல்லை.
 ஐந்தாவது நாள் தலைவரின் கடற்படையை முறியடித்து தளபதி முழுதீவையும் சூழ்ந்தார்.
 இந்நிலையில் தலைவர்படை நிலத்தில் சிறிது முன்னேறியது.

 ஆறாவது நாளில் தலைவர் படை முழுபலத்துடன் முன்னேறியது.
தளபதி அனுப்பிய விமானங்கள் வான்வழித் தாக்குதல் செய்தன.

 அன்று மாலை மிக கண்மூடித்தனமாக போரிட்டு மிக மூர்க்கமாகத் தாக்கியபடி அதிவிரைவாக கூர்மையாக முன்னேறிய தலைவர் படை மறுகரையை அடைந்து தளபதி படையை குறுக்காக இரண்டாகப் பிளந்தது.
 இது தலைவர் கடைசிக்கட்டத்தில்  கையில் எடுக்கும் போர்த்தந்திரமாகும்.

 தளபதியின் படை தற்கொலைத் தாக்குதலில் இறங்கி தலைவர் படைக்கு பலத்த சேதத்தை வழங்கியது.

 ஆறாவது நாள் இரவுக்குள் தலைவர்படை பிளந்தவாறு இருபுறமும் சமமாக முன்னேறி ஒரு புறத்தில் முழுவெற்றி கண்டது.
 மறுபக்கத்தை இரண்டாக பிளந்து ஒருபக்கத்தை வென்றது.
 
 தீவின் ஒரு முனையில் தளபதி படை தாக்குப்பிடித்து நின்றது.
 தளபதி மேலும் படைகளை அனுப்பி அப்படைக்கு வலு சேர்த்தார்.
 வான்வழித் தாக்குதலுக்கு வந்த தளபதியின் விமானங்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர் தலைவர் படையினர்.
 பின்புறமாக கரையேற முயன்ற தளபதி கடற்படையும் கரையேறவிடாமல் தடுக்கப்பட்டது.
 
 தலைவர் படை சரணடையுமாறு எச்சரித்தது.
 தளபதி படையினர் மறுத்துவிட்டனர்.

 ஏழாம் நாள் விடியுமுன் தளபதி படை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
 தீவு முழுக்க தலைவர் கட்டுப்பாட்டில் வந்தது.

 தன்காலத்தில் தனது இனத்தின் தலைவன் தான்தான் என்பதை மீண்டுமொருமுறை அழுத்தந்திருத்தமாகத் தலைவர் நிரூபித்தார்.

 அதன்பிறகு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தளபதி நேர்மையாக தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

 வடக்கில் இருந்து பரதரப்பட்ட சாதி, மதத்தைச் சேர்ந்த ஒரு கோடி மக்கள் தெற்கு முழுவதும் பலதரப்பட்ட குடிமக்கள் மத்தியில் பரவலாக குடியமர்த்தப்பட்டனர்.

 தெற்கில் மக்கட்தொகை செறிவான ஒரு குறிப்பிட்ட நகரப் பகுதியிலிருந்து வடக்கின் காலிசெய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஐந்து லட்சம்பேர் செறிவாக ஒரே இடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

 தலைவருக்கு எதிரான வேற்றினத்தார் இதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திரித்து எழுதினர்.
 தெற்கின் மீது வடக்கின் ஆதிக்கம் என்றவாறும் தேர்தலை நடத்தாமல் போர்மூலம் அடக்கினார் என்றும் தமக்கு போட்டியாக உருவானவரை ஒழித்தார் என்றும் எழுதினர்.

 உண்மை என்னவென்றால் பெரும்பான்மை படைபலம் உள்ள தலைவர் எதையெல்லாம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டதோ அதையெல்லாம் தளபதிதான் செய்தார்.

 தலைவர் தனது உளவுத்துறை மூலம் தளபதியின் நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிந்து முறியடித்ததாக பலர் எண்ணினர்.
 தெற்கு படையில் வடக்கைச் சேர்ந்த யாருமே இருந்ததில்லை.
 ஆனால் தெற்கே முதல் விடுதலைப்போர் நடந்தபோது அகதிகளாக வடக்கே குடியேறிய 5 லட்சம் பேர் மற்றும் அவர்களின் குழந்தைகள் பலர் தலைவரின் படையில் இருந்தனர். 
 ஆக உளவு பார்க்கவும் தளபதிக்குதான் சாதகமான சூழல் இருந்தது. 

 தலைவர் தனது படையையும் தளவாடங்களையும் தீவுக்கு அனுப்பியதோடு சரி அதன்பிறகு அவர்களுக்கு எந்த உதவியும் அனுப்பவில்லை.
 தலைவர் படை கொண்டுசென்ற உணவையும் தளவாடங்களையும் மற்றும் எதிர்த்தரப்பிடமிருந்து கைப்பற்றியவற்றையும் வைத்துக்கொண்டு போரிட்டது.
 ஆனால் தளபதி ஆட்களையும் தளவாடங்களையும் அனுப்பிக்கொண்டேயிருந்தார்.

 தலைவர் கள நிலவரங்களை கேட்டுக்கொண்டாரே தவிர அவர்களை வழிநடத்தவில்லை.
 தளபதி அவரது படை 24 மணிநேரமும் தானே இயக்கிக்கொண்டிருந்தார்.

 அதாவது தலைவர் மேற்கண்டபோரில் வெற்றியைபெரிதாக நினைக்கவில்லை.
 தான் வென்றாலும் தளபதி வென்றாலும் தாய்நிலம் ஒற்றையாட்சியில் இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தார்.
 அதனால்தான் சிறுபகுதியைக் கேட்ட தளபதிக்கு முழு தாய்நிலத்துக்கும் தலைவனாகும் வாய்ப்பை அளித்தார்.
 தலைவர் நினைத்திருந்தால் ஒரே நாளில் போரை வென்றிருக்கமுடியும்.
 ஆனால் தன் இனத்தின் ஒரு பிரிவினர்க்கு மோசமான தோல்வியை வழங்க அவர் விரும்பவில்லை.

 ஆக தெற்கு மக்களுக்கு தோல்வி உணர்வு வரவில்லை.
 
 குடியேற்றம் நடந்தபிறகும் எங்கும் கலவரமோ பூசலோ நடக்கவேயில்லை.
 இருதரப்பினரும் ஒருவரையொருவர் அந்நியராக நினைத்ததேயில்லை. 

 ஆக ஒருதாய்ப் பிள்ளைகளை கூறுபோட நினைத்த தென்தளபதிதான் வாக்கெடுப்பு நடந்திருந்தாலும் தோற்றிருப்பார். 
தளபதியை தலைவர் தண்டிக்கவுமில்லை.
 தளபதி மீண்டும் ஒரு தளபதியாகவே வடக்கில் ஒரு பகுதிக்கு நியமிக்கப்பட்டார்.

 வடக்கில் பிறந்து வளர்ந்த ஒரு தெற்கு குடும்ப வாரிசை அவர் தளபதியாக தென்பகுதிக்கு நியமித்தார்.
 தெற்குக்கு ஒரு தலைநகரை அமைத்து அதை துணைத்தலைநகர் என்று அழைக்குமாறு கட்டளையிட்டார்.
 தாய்நிலத்தின் இரு துண்டுகளை நிலத்தொடர்பு ஏற்படுத்தி இணைக்கும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கினார்.

 தலைவர் எடுத்த முடிவுகள் எதிர்மறையான தாக்கங்களை சிறிய அளவில் வருங்காலத்தில் ஏற்படுத்தலாம்.
 ஆனால் நேர்மறையான ஆழமான நல்லதொரு தாக்கத்தை இனத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது.

 ஒரு இனத்தின் தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தலைவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.