Friday, 2 May 2025
மரபணு சோதனையின் அவசியம்
Saturday, 24 August 2024
மறவர் விளைநிலத்தில் பள்ளர் ஊரணி
Saturday, 16 March 2024
The TamBrahs
Saturday, 31 December 2022
சேனைத்தலைவர் தமிழ்த் தலைவர் ஆவது எப்போது?
Tuesday, 2 August 2022
சாதிவெறியில் முதலிடம் திமுக
Monday, 8 March 2021
தமிழர் படைபல வீழ்ச்சிக்கு காரணம் யார்?
தமிழர் படைபல வீழ்ச்சிக்கு காரணம் யார்?
தமிழர் ஆட்சி என்றாலே மூவேந்தர் ஆட்சிதான்.
அதிலும் முக்கியமானவர்கள் சோழர் மற்றும் பாண்டியர்.
சோழர் வீழ்ந்து போனதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் மன்னர் குடும்பத்தில் இனக்கலப்பு.
இதுவே வாரிசில்லாதபோது சாளுக்கியர் ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்தது.
இரண்டாவது பாண்டியர் அரசு.
இது வீழ பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் பங்காளி சண்டை அதன்மூலம் வேற்றினத்தவர் ஊடுருவல்.
ஆக மன்னர் குடும்பங்களில் பிரச்சனை வந்து மன்னர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆனாலும் அதற்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகள், படைவீரர்கள் அதிகம் கொண்ட போர்க்குடிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு தத்தமது பகுதிகளை அந்நியரிடம் இருந்து காக்க முற்பட்டனர்.
இவர்களை வென்றுதான் அந்நியர் ஆட்சி தமிழகத்தில் பரவியது.
அப்படியான போர்க்குடிகளில் படைத் தொழிலையே விட்டுவிட்டு கோழைத்தனமாக வணிகத்திற்கு மாறிய போர்க்குடிகள் தமிழ் இனத்தின் இந்த பெரும் சறுக்கலுக்கு பொறுப்பு.
அப்படியானவர்கள் கைக்கோளர், செங்குந்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகியோரே!
(இம்மூவரும் சங்க காலத் தமிழ்க் குடியான கோசர் வழிவந்த வம்சாவளிகள் என்பது பாவாணர் கருத்து)
இவர்களே அந்நிய ஆட்சிக்கு போர்த்தொழில் செய்ய மறுத்து வணிகத்திற்கு மாறினர்
(திரு. சேசாத்திரி சிறிதரன் அவர்கள் எழுதிய "கைக்கோளர் படை" பதிவில் இந்தப் படையினர் விலகலுக்கு சைவ மதம் காரணம் என்று கூறியுள்ளார். அதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களைக் கோழையாக்க சைவம் ஒன்றும் அகிம்சை மதம் இல்லை).
இவர்கள் செய்த தவறு பிற போர்க்குடிகள் செய்ததுபோல அந்நிய தலைமைக்கு அடங்கி போர்த்தொழில் செய்துகொண்டு வாய்ப்பு வரும்போது தமக்குள் கூட்டணி அமைத்து அந்நியரை தூக்கியெறியும் போக்கைக் கையாளாமல் மரபுத் தொழிலையே மாற்றியதுதான்.
இதில் கைக்கோளர் நெசவுத் தொழிலுக்கும் செங்குந்தர் ஆடை தொடர்பான (பருத்தி) விவசாயம் மற்றும் வணிகத்திற்கும் சேனைத்தலைவர் காய்கறி விவசாயம் மற்றும் வணிகத்திற்கு மாறினர்.
இதனாலேயே அதன் பிறகு எழுந்த தமிழ் சிற்றரசுகள் படைவலிமையைப் பெருக்க முடியாமல் தொடர்ந்து வீழ்ந்தன.
அன்று எல்லா சாதிகளிலும் படைவீரர்கள், தளபதிகள், அமைச்சர்கள் இருந்தனர்.
ஆனால் முழுக்க போர்செய்வதையே தொழிலாகக் கொண்ட சாதியினர் சிலரே!
அப்படியானவர்கள் முற்றாக விலகியது தமிழ் நில பாதுகாப்பிற்கு பேரிழப்பு!
இந்த விடயத்தில் பாராட்டபட வேண்டியவர்கள் மறவர்களே!
கள்ளர்களையும் பாராட்டலாம்!
(வெள்ளாளர்கள் கூட அந்நிய எதிர்ப்பு வணிகக் கூட்டணி ஒன்றை வைத்திருந்தனர்)
இவ்விரு சாதியினரும் ஆங்கிலேயர் காலம் வரைக்கும்கூட தாக்குப்பிடித்துள்ளனர்.
தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் சோழ, பாண்டிய குடும்ப வாரிசுகள் செய்த தவறு முதல் காரணம் என்றால் தம் கடமையிலிருந்து விலகிய கைக்கோளர், செங்குத்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகியோர் செய்த துரோகம் இரண்டாவது காரணம்.
இன்றைய நிலையில் மூவேந்தர் மறைந்துவிட்டனர்!
அதனால் மேற்கண்ட மூவரும் தமிழர் வீழ்ச்சிக்கு முதற்காரணம்!
(இந்த குற்றவுணர்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் மூவரும் நாங்கள் போர்க்குடி, ஆண்ட சாதி என்று பெருமை பேசுவதேயில்லை போலும்!)
ஆக இவர்களே இனி தமிழர்தேசியத்தை முன்னெடுக்க வேண்டிய முதல் பொறுப்பாளிகள்!
செங்குந்த முதலியாரான பாரதிதாசன் தமிழர் விடுதலைக் கருத்தியலுக்கு குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்துள்ளார்.
இந்த தலைமுறை பேச்சோடு நிற்காமல் செயலில் இறங்கவேண்டும்.
தமிழர் சேனை ஒன்றைக் கட்டவேண்டியது இம்மூவரின் பொறுப்பு!
தொண்டை மற்றும் கொங்குநாடுகள் அந்நிய நிலத்திற்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு அதிகம் கிடையாது என்று கொண்டு அப்பகுதி போர்க்குடிகளை மன்னித்து விடலாம்.
ஆனால் சோழ மற்றும் பாண்டிய நாடுகள் நில அமைப்பின்படி இரும்புக் கோட்டை போன்றவை.
அதிலும் பாண்டிய நாட்டு போர்க்குடிகள் கடமை தவறியதை மன்னிக்கவே முடியாது.
சோழ நாட்டு அகமுடையார்களையும் கடமை தவறிய இம்மூவருடன் நான்காவதாக சேர்க்கலாம்தான். ஆனால் அவர்கள் முழுமையான போர்க்குடிகள் கிடையாது.
அவர்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டுமே (அதாவது போலீஸ் போன்ற தொழில்) அதனால் மன்னிக்கலாம்.
நாடார்களில் சாணார் மட்டுமே போர்க்குடி இவர்களையும் ஐந்தாவதாக சேர்க்கலாம்தான்.
ஆனால் மண்மீட்பின் போது குமரி மற்றும் சென்னையை மீட்டுக் கொடுத்து தம் தவறுக்கு சிறிய பிராயச்சித்தம் செய்துள்ளனர்.
இதிலும் சேனைத்தலைவர் மிகச் சிறுபான்மை (தமிழக மக்கட்தொகையில் 0.5%) அவர்களைக் கூட மன்னித்துவிடலாம்.
[சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் வணிகத்திற்கு மாறிய பிறகும் தமது போர்த்தாகத்தைத் தணிக்க வழி தெரியாமல் வந்தேறிகளின் கீழ் படையில் இணையவும் மனமில்லாமல் தம்மை ஆறுதல் படுத்திக்கொள்ள மூத்த தமிழனான முருகனுக்கு போர்த் தொழில் செய்வதாக தம் மீது கற்பனைக் கதைகளை எழுதிக்கொண்டனர்.
பிற்கால புராணங்களில் வரும் முருகனின் தளபதியான வீரபாகு என்கிற கற்பனையான கதாபாத்திரத்தைத் தத்தெடுத்துக் கொண்டனர்.
வீர+பாகு இரண்டுமே தமிழ்ச்சொல் இல்லை]
இனி வரும் காலங்களில் தமிழினத்தை அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவித்து மேற்கண்ட மூன்று போர்க்குடிகளும் அதிலும் குறிப்பாக பாண்டிநாட்டு (தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள்) கைக்கோள மற்றும் செங்குந்தர் சாதிகள் தமது வரலாற்றுத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்!
- ஆதிமூலப்பெருமாள் மூப்பனார் சேனைத்தலைவன்
(தொடர்புடைய பதிவு :- தமிழர் சேனை ஆளெடுப்பு - வேட்டொலி)
16.01.2021
Thursday, 10 October 2019
திராவிடக் கட்சிகளில் சாதியம் -2
சென்னை பல தரப்பட்ட மக்கள் வாழும் பகுதி ஆகும்.
இதில் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட வேட்பாளர்கள் அவர்கள் சாதி அடிப்படையில் ஒப்பிடப் பட்டுள்ளனர்.
இதில் பல்வேறு தமிழ்ச்சாதி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ள தி.மு.க
ஒரு நாயுடு, இரண்டு இசை வேளாளர் இருக்குமாறே வாய்ப்பளித்துள்ளனர்.
இதில் கருணாநிதி குடும்பம் அதிக பயன் அடைந்து வந்துள்ளது.
இவர்களுக்கு அடுத்து நாயுடு (நாயக்கர்) பயனடைந்துள்ளனர்.
தமிழரில் முதலியார்களுக்கு அடுத்தபடியாக
நாடார், வன்னியர்கள் பயனடைந்துள்ளனர்.
திராவிடக் கட்சிகளில் சாதியம் -1
திராவிடக் கட்சிகளில் சாதியம் -1
2011 இல் தி.மு.க போட்டியிட்ட இடங்களில் நிறுத்திய வேட்பாளர்களின் சாதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடம்
இதில் பட்டியல் சாதியாருக்கான 46 தனித் தொகுதிகள் போக இடம்பெற்றுள்ளோர்
படுகர் 1
செட்டியார் 3
இசை வேளாளர் 3
கொங்கு வெள்ளாளர் 11
குறும்ப கவுண்டர் 1
மீனவர் 1
முதலியார் 3
முக்குலம் 20
முஸ்லீம் 7
முத்தரையர் 4
நாடார் 7
நாயுடு 8
பார்கவ குலம் 4
பிள்ளைமார் 4
ரெட்டி 3
வன்னியர் 12
யாதவர் 2
இதில் படுகர், இசை வேளாளர் (சின்ன மேளம்), நாயுடு, ரெட்டி ஆகியோர் தமிழரல்லாதார் என்பதை உறுதியாகக் கூறலாம்.
சதவீத அடிப்படையில் பார்க்கும் போது
மக்கட்தொகையில் 0.12% உள்ள இசை வேளாளர்,
3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது ஏறத்தாழ 30 மடங்கு ஆகும்.
மக்கட் தொகையில் 4.4% உள்ள நாயுடு (நாயக்கர்),
8.5% என்ற அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது இரண்டு மடங்கு ஆகும்.
மக்கட்தொகையில் 1.43% உள்ள ரெட்டியார்,
3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது இரண்டரை மடங்கு ஆகும்.
மக்கட்தொகையில் 12% இருக்கும் வன்னியர் சரியாக 12% பெற்றுள்ளனர்.
மக்கட்தொகையில் 6.8% இருக்கும் கொங்கு வெள்ளாளர் 11% பெற்றுள்ளனர்.
மக்கட்தொகையில் 6.6% இருக்கும் நாடார் 7.4% பெற்றுள்ளனர்.
மக்கட்தொகையில் 8.8% இருக்கும் முக்குலத்தோர் 21.25% பெற்றுள்ளனர்.
இது இரண்டேகால் மடங்கு ஆகும்.
ஆனால் 5.7% சதவீதம் உள்ள பிள்ளைமார் வெறும் 4.25% தான் பெற்றுள்ளனர்.
தி.மு.க ஆட்சியில் அதிகாரப் பகிர்வு என்பது வந்தேறி சாதிகளுக்கு நல்ல லாபமாகவும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பெரும்பான்மை சாதிகளுக்கு ஓரளவு லாபமாகவும்
முன்னேறிய சாதியார் மற்றும் பிற்படுத்தப்பட்டோரில் சிறுபான்மையினர் ஆகியோர்க்கு நஷ்டமாகவும் உள்ளது.
இது வேட்பாளர் தேர்வு அடிப்படையில் மட்டுமே!
தொடரும்....
[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]
அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!
அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!
சில வன்னியர்கள்,
அதாவது வன்னியரில் உள்ள பள்ளிகளில் உள்ள பா.ம.க வினரில் உள்ள மிகச்சிலர்,
வன்னியர்களை பிற தமிழர்கள் அதுவும் குறிப்பாக நாடார், முக்குலம், கொங்கு வேளாளர் ஆகியோர் அடிமைப் படுத்த நினைப்பதாகவும்
அதனால் வடதமிழ்நாடு தனியாகத் தேவை என்றும் வாதிடுகின்றனர்.
இதில் சிறிதும் உண்மையில்லை!
--------
மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் எம்.எல்.ஏ பதவிகளில் 19.7% இருந்தனர் (1967 இல்).
1971 இல் 16.7% ஆகவும்
1977 இல் 16.2% ஆகவும்
1980 இல் 16.7% ஆகவும்
குறைந்தனர்.
அப்போது
1980 இல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட பின் இந்த சதவீதம் 17.5% என உயர்ந்த்து.
1989 இல் பா.ம.க தொடங்கப்பட்டு தேர்தலில் குதித்தது.
இதனால் அனைத்து கட்சிகளிலும் வன்னியர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து ச.ம.உ பதவிகளில் வன்னியர்கள் 18.8% ஐப் பிடித்தனர்.
பா.ம.க பெற்ற வாக்கு எண்ணிக்கையைப் பார்த்த பிற கட்சிகள் மேலும் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.
1991 மற்றும் 1996 இல் வன்னியர் சட்டப் பேரவையில் 22.6% ஐப் பிடித்தனர்.
[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]
-----------
இது M.L.A பதவி தற்போது M.P பதவிகளைப் பார்ப்போம்.
-------
1977 இல் வன்னியர்கள் அமைச்சர் பதவிகளில் 12.8% இருந்தனர்.
அதாவது 39 இருக்கைகளில் 5 பேர்.
வன்னியர் சங்கம் தொடங்கிய பின் 1980 இல் இது 15.4% ஆக உயர்ந்து
1984 இல் மீண்டும் 12.8% ஆனது.
பா.ம.க தொடங்கப்பட்ட பின்
1989 இல் 18.3% ஆக உயர்ந்தது.
1991 இல் 15.4% உயர்ந்து
1996 இல் 12.8% மீண்டும் ஆனது.
1998 இல் 25.6% ஆக உயர்ந்தது.
அதாவது 39 இல் 10 வன்னியர்கள்.
1999 இல் 20.51% ஆகவும்
2004 இல் 15.4% ஆகவும்
2009 இல் 12.8% ஆகவும்
இருந்து வந்துள்ளது.
[புள்ளி விபரங்களுக்கு நன்றி: 'அச்சமில்லை' இதழ்]
மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் பல்வேறு கட்சிகளிலும் இருந்துகொண்டு தனது பங்கிற்கு அதிகமாகவே பதவிகளைப் பெற்று வந்துள்ளனர்.
-----
Monday, 9 July 2018
கலைஞரின் மூதாதையர் தெலுங்கர் - எம்.ஜி.ஆர்
கலைஞரின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து வந்தனர் - எம்.ஜி.ஆர்
//ஆந்திராவிலிருந்து வந்த அவரது மூதாதையர்கள் குச்சிப்புடி நடனம் பயின்றவர்கள்.
தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது.
அதனைக் கற்றார்கள்.
ஒரு வகுப்பு தோன்றியது.
இவ்வாறு வரலாறு கூறுகிறது.
இதற்குப் புத்தகம் இருக்கிறது.
கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா?//
படம்: 04.02.1978 மாலைமுரசு
தலைப்பு: நீங்கள் தமிழரா? நிரூபிக்க தயாரா? கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர் கேள்வி
மேலும் அறிய,
(தேடுக: எம்.ஜி.ஆர் ஒரு மலையாளியே வேட்டொலி)
Thursday, 19 April 2018
காதலும் திராவிடமும்
காதலும் திராவிடமும்
இன்று காதலுக்கு துணை நிற்கிறோம் என்ற பெயரில் ஈ.வே.ரா பக்தர்கள் செய்யும் அரசியல் சதிகளை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.
முதலில் இவர்களது வழிகாட்டி ஈ.வே.ரா காதல் பற்றி என்ன கூறியுள்ளார் என்று அறிவோம்.
அவர் எழுதியது வருமாறு,
** உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி,
அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து,
மக்களுக்குள் புகுத்தி,
அநாவசியமாய் ஆண் - பெண் கூட்டுவாழ்க்கையின் பயனை மயங்கச்செய்து,
காதலுக்காக என்று இன்பமில்லாமல் திருப்தி இல்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டும்.
ஆனால் காதல் என்றால் என்ன?
அதற்குள்ள சக்தி என்ன?
அது எப்படி உண்டாகின்றது?
அது எதுவரையில் இருக்கின்றது?
அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது?
அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது?
அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன?
என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால்,
காதல் என்பதின் சத்தற்ற தன்மையும்
பொருளற்ற தன்மையும்
உண்மையற்ற தன்மையும்
நித்தியமற்ற தன்மையும்
அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத்தனமும்
ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால், அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது?
உலக வழக்கில் அது எப்படி பயன்படுத்தப்பட்டு வருகின்றது?
இவற்றிற்கு என்ன ஆதாரம் என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள்,
"காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல.
அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு,
காதல் வேறு"
என்றும்,
"ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக்காரியத்திற்காக ஏற்படுவதாகும்"
என்றும்,
"அதுவும் இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்"
என்றும்,
"அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை" என்றும்,
‘‘அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்"
என்றும்,
"அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால்,
பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது''
என்றும்,
‘‘அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது.
அதை விபச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய, அது ஒருக்காலும் காதலாகாது'' என்றும்
‘‘ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ என்றெல்லாம் ஏற்படாது''
என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும், இந்தக் காதல் காரணத்தினாலேயே
ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,
ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது. **
குடி அரசு (18.1.1931) இதழில் மேற்படி ஈ.வெ.ரா எழுதியுள்ளார்.
அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தொல்லையென்றும்
அதற்கு அடிப்படையான காதல் என்பது உருவகப்படுத்தபட்ட போலி என்றும் ஈ.வே.ரா கூறுகிறார்.
சமீபத்தில் நடந்த உடுமலை சங்கர் கொலை உட்பட பல கொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்கள் ஏழையாக வேலைவெட்டி இல்லாதவர்களாகவும் வசதியான பெண்களைக் காதலித்திருப்பதும் தெரிகிறது.
திருமாவளவன் போன்றவர்கள் திராவிடக் கட்சிகளின் தூண்டுதலின்பேரில் சதி திட்டம் தீட்டி வேலைவெட்டியில்லாத இளைஞர்களைத் தூண்டிவிட்டு வசதியான வேற்றுசாதி மாணவிகளைத் துரத்தச்சொல்லி அனுப்புகின்றனர்.
ஒருவேளை அந்த பெண் ஒத்துக்கொண்டால் (தமது சாதி காவல்துறையினர் வழக்கறிஞர்கள் உள்ளடக்கிய) கட்டப் பஞ்சாயத்து குழுவின் உதவியுடன் திருமணம் செய்துவைப்பதும்
அந்த பெண் ஒத்துக்கொள்ளாவிட்டால் ஆசிட் வீசுவது, கொலைமிரட்டல் விடுவது, வன்கொடுமை செய்ததாக போலிப்புகார் அளிப்பது அல்லது பணம் பெற்றுக்கொண்டு விடயத்தை அமுக்குவது என பல அட்டூழியங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கும் வசதிமிக்க பெற்றோருக்கும் இடையேயான மோதல் இருசாதிகளுக்கு இடையான பிரச்சனையாக வெளியே காட்டப்படுகின்றன.
மேற்படியான மோதல்கள் பெரும்பாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படுபவை.
இதே தன் பெண்ணை விரும்புபவன் நல்ல படித்த பையனாக வசதியான பையனாக இருந்திருந்தால் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம்.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு சம்பவங்கள் இளவரசன் மற்றும் உடுமலை சங்கர் கொலைகள்.
இதில் இளவரசன் தமக்கு அதிகம் உதவியது வன்னியர் சாதி நண்பர்கள்தான் என்று கூறியுள்ளார்.
சங்கரின் கிராமமான (உடுமலை வட்டம்) கொமரலிங்கம் சாதி தாண்டி திருமணம் செய்த பல தம்பதிகளைக் கொண்டது.
ஆக இன்று கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சாதிதாண்டி காதல் செய்வதை ஊக்குவிக்கும் கூட்டத்தின் நோக்கம் காதலை வாழவைப்பதோ சாதியை ஒழிப்பதோ கிடையாது.
இவர்களின் நோக்கம் எதாவது ஒரு பிரச்சனையில் இருவேறு சாதியினர் சம்பந்தப்பட்டிருந்தால் அந்த தனிப்பட்ட பிரச்சனையை சாதி பிரச்சனை ஆக்கி இரு தமிழ்ச்சாதிகள் அடித்துக்கொண்டு சாகவேண்டும் என்பதுதான்.
எந்த கொலை நடந்தாலும் அதை சாதிய வன்முறை என்று உருவாக்க முயல்வதும்
அது ஒரே சாதிக்குள் நடந்தது என்று தெரியவந்தால் அப்படியே போட்டுவிட்டு நகர்வதும் திராவிடவாதிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது .
நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு, வேலாம்புதூர் கொலைச் சம்பவம் போன்றவற்றை சாதிக்கொடுமை என்று வதந்தி பரப்பியதும் அதற்காகத்தான்.
ஸ்வாதி படுகொலையை கண்டுகொள்ளாமல் நகர்வதும் அதற்காகத்தான்.
'உயர்சாதிகளை எதிர்க்கிறோம்' என்ற பெயரில் அனைவரும் இந்த 'மானத்தில் கைவைக்கும் கூட்டத்துடன்' சேர்ந்துகொள்கின்றனர்.
விபரமே தெரியாத 15, 16 வயது மாணவிகள் பின்னால் 25,30 வயதுள்ள படிக்காத, வேலைவெட்டி இல்லாத, தறுதலை ஒருவனை பயிற்சி கொடுத்து விரட்ட அனுப்புவது உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத 'சாதி ஒழிப்பு திட்டம்' ஆகும்.
நாடக்ககாதல் பிரச்சனைகளை பொதுப்புத்தியுடன் அணுகாமல் பின்னால் இருக்கும் வந்தேறிகளின் சூழ்ச்சியை அறிந்து நடப்போம்.
Thursday, 9 November 2017
இருளர் குலச் செங்கொடி
இருளர் குலச் செங்கொடி
ஆதித் தெலுங்கரான சக்கிலியர் (அருந்ததியர்) திடீரென்று ஐந்தாண்டுகளுக்கு முன் பறையர் குலத் தமிழச்சியும் உலகின் முதல் தற்கொலைப் போராளியுமான குயிலி தங்கள் சாதி என்றனர்.
பிறகு பறையர் குலத் தமிழரும் தமிழ்தேசியவாதியும் ஆன பெருஞ்சித்திரனார் ஒரு சக்கிலியர் என்று கதையளந்தனர்.
தற்போது தங்கை செங்கொடியை சொந்தம் கொண்டாடுகின்றனர்.
இது எல்லாமே 2009 க்குப் பிறகு திடீரென்று அவர்கள் கண்டுபிடித்தது ஆகும்.
சான்று கேட்டால் தருவதில்லை.
ஆனால் தங்கையின் வாழ்க்கையை 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்துத் தந்த இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் செங்கொடி (தமிழினப் பழங்குடியினரான) இருளர் என்று கூறுகிறார்.
நன்றி: 22.08.2012 ஆனந்த விகடன் இதழ்
Sunday, 8 October 2017
சங்ககாலத்தில் புலையர் செய்த தொழில்கள்
சங்ககாலத்தில் புலையர் செய்த தொழில்கள்
'துடியெறியும் புலைய'
(புறநானூறு 287) என்று புலையர் துடி எனும் பறைவகையை முழக்குவோராகக் கூறுகிறது.
'போகிப் புலையன்
பெருந்துடி கறங்க'
(நற்றிணை 77)
புலையர் யானைமீது துடி முழக்கியதைக் கூறுகிறது.
[அதாவது படையை வழிநடத்த அல்லது மன்னன் வருவதை அறிவிக்க யானை மீது பெரும் சத்தத்தையும் அதிர்வையும் எழுப்பும் பறையை முழக்குவர்]
'புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு'
(புறநானூறு 360)
அதாவது புலையர் வேலையாட்களோடு ஈமச்சடங்கு செய்து சுடுகாட்டில் படையல் இட்டதைக் கூறுகிறது.
[அதாவது ஈமச்சடங்கு செய்துதரும் பார்ப்பனர் தொழில் செய்ததாகக் கூறியுள்ளது]
' புலையன் பேழ்வாய்த் தண்ணுமை'
(நற்றிணை: 347)
என்று புலையர் வைத்திருந்த அகன்ற வாயினையுடைய மத்தளம் போன்ற இசைக்கருவி (தண்ணுமை) குறிக்கப்பட்டுள்ளது.
பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து
(கலித்தொகை 95)
புலையர் யாழ் மீட்டியது பற்றி கூறுகிறது.
புலையர் குலப் பெண் பற்றி கூறும்போது,
'உடை ஓர் பான்மையின் பெருங்கை தூவா வறன் இல் புலைத்தி'
(நற்றிணை 90)
அதாவது உடைகளை தரம்பிரித்து வெளுக்கும் வறுமை இல்லாத புலைத்தி என்று.
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் (குறுந்தொகை 330)
இதன் பொருள் நல்ல குணங்களை உடைய புலைத்தி ஆடைகளுக்கு பசை தடவி திரியாக முறுக்கி குளத்தில் துவைத்தது பற்றி கூறுகிறது.
ஆடை கொண்டு ஒலிக்கும்
நின் புலைத்தி காட்டு என்றாளோ
(கலித்தொகை 72)
புலையர் பெண் துணி துவைக்கும் தொழில் செய்ததை கூறுகிறது.
[துணியை அடித்து துவைப்பதால் ஏற்படும் ஒலியதிர்வுதான் அழுக்கு துணியிலிருந்து பிரிய காரணம் ஆகும்.
இந்த அறிவியல் உண்மையை அறிந்திருந்த பழந்தமிழர் துவைப்பதை ஒலிப்பது என்றே கூறியுள்ளனர் !!!!]
பசை கொல் மெல் விரல்
பெருந் தோள் புலைத்தி
(அகநானூறு 34) என்று அகநானூறும் கிட்டத்தட்ட இதையே கூறுகிறது.
மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர்
போழின் புனைந்த வரிப் புட்டில் (கலித்தொகை 117)
என்று புலைத்தி பிண்ணிய கூடை பற்றி வருகிறது.
ஆக சங்ககாலத்தில் புலையர் ஆண்கள்
ஈமச்சடங்கு செய்பவராக, பறை முழக்குபவராக, இசைக் கலைஞராக என பல்வேறு தொழில்களைச் செய்தவராக இருந்துள்ளனர்.
ஆனால் புலையர் பெண்கள் சலவை செய்பவராகவே அதிகம் குறிக்கப்படுகின்றனர்.
அத்துடன் கூடை பிண்ணும் தொழிலும் செய்துள்ளனர்.
[இன்று புலையர் என்று அறியப்படுவோர் பெரும்பாலும் மலையாளமே பேசுகின்றனர்]
--------------------
இலக்கிய தரவுகளுக்கு நன்றி : mytamil-rasikai.blogspot


