Friday 26 June 2020

பெங்களூர் தமிழ்க் கல்வெட்டு (1868)



பெங்களூர் தமிழ்க் கல்வெட்டு (1868)
பெங்களூர், சிவாஜிநகர், செப்பிங்ஸ் ரோடு, முத்தாலம்மன் கோயில், ஓம்சக்தி கோயில் அமைந்துள்ள பகுதியில் மாநகராட்சி சாலை, கால்வாய் சீரமைப்பு பணியின் போது கல்வெட்டு ஒன்றை உடைத்து எடுத்துள்ளார்கள்.
1868 ஆம் ஆண்டு கல்வெட்டு தமிழ், ஆங்கிலம், உருது மொழியில் இருக்கிறது.
இந்த கல்வெட்டு என்ன ஆனதென்றெ தெரியவில்லை.
தமிழர் வரலாறு சொல்லும் ஆவணங்களை காக்க தமிழக அரசு எங்களுக்கு உதவிசெய்யுமா?
பதிவர்: கோபி ஏகாம்பரம்
கருநாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Wednesday 17 June 2020

தென்னக ரயில்வே பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள்

தென்னக ரயில்வே பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள்

தென்னக ரயில்வே துறை வேலை வாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிப்பு...
வலுக்கும் எதிர்ப்பு!
த.கதிரவன்

தென்னக ரயில்வே பணியிடங்களில் வட இந்தியருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், "தெற்கு ரயில்வே பணியில் தமிழருக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்கிறார் வானதி சீனிவாசன்.

தென்னக ரயில்வே துறை வேலைவாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
தற்போது, தென்னக ரயில்வேயின் சரக்கு வண்டிகளின் பாதுகாவலர் பணியிடங்களுக்கு துறைசார்ந்த தேர்வு நடைபெற்றது.
96 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், தென்னக ரயில்வேயில் பணிபுரிந்துவரும் சுமார் 5,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில் 3,000 பேர் தமிழர்கள்.
96 பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்தத் தேர்வில், வெற்றி ய பெற்றவர்களில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்.
மீதம் உள்ள 91 நபர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சி செய்தி.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், தங்களது எதிர்ப்பை அறிக்கைகளாகப் பதிவு செய்துவருகின்றன.
பா.ம.க தரப்பில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"விடைத்தாள் முறையில் தேர்வை நடத்தாமல், ஆன் - லைனில் தேர்வு நடத்தியதால் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெற்கு ரயில்வே துறை தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டாலும் வட இந்திய அதிகாரிகளின் முயற்சியால் வட இந்திய மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்படுகிறது.
எனவே, இந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டு, விடை எழுதும் வகையில் மீண்டும் வெளிப்படையாக தேர்வு நடத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினரான ஹரிஹரன் பாபு,
"வட இந்தியர்களின் ஆதிக்கம், காலம் காலமாகவே தொடர்ந்து வருகிறதுதான்.
இதுகுறித்து நம்மூர் அரசியல் கட்சிகளும்கூட அறிக்கைகள் கொடுப்பதும் அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதுமாக முடித்துக்கொள்கிறார்கள்.
மற்றபடி மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சராக இருந்தபோது, `தமிழிலேயே ரயில்வே தேர்வை எழுதலாம்' என அறிவித்திருந்தார்.
ஆனாலும் அது நடைமுறையில் இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நடைபெறவேண்டிய தேர்வை எர்ணாகுளத்துக்கு மாற்றினார்கள்.

இப்படி நிறைய குளறுபடிகள் நடக்கின்றன.
இப்போதும், சரக்கு வண்டி பாதுகாவலர் பணித் தேர்விலும் வழக்கம்போல், வட இந்தியர் ஆதிக்கம்தான் அரங்கேறியிருக்கிறது.
ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற வகையில், இதுகுறித்து ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கடிதம் எழுதவிருக்கிறேன்.'' என்றார்.

மத்திய ரயில்வே துறையின் முன்னாள் இணை அமைச்சரும் பா.ம.க துணைப் பொதுச்செயலாளருமான ஏ.கே.மூர்த்தி, இது குறித்துப் பேசும்போது,
"இந்திய அளவில், தமிழ்நாடும் கேரளாவும்தான் கல்வியில் முதன்மையான மாநிலங்களாக இருந்துவருகின்றன.
ஆனால், ரயில்வே தேர்வு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் மட்டும் தமிழர்களின் தேர்ச்சி விகிதம் என்பது மிகமிகக் குறைவாகவே இருந்துவருகிறது.
இப்போது நடைபெற்றுள்ள இந்த ரயில்வே தேர்விலும்கூட 3,000 தமிழர்கள் கலந்துகொண்டு வெறும் 5 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர் என்றால், நிச்சயம் இதில் முறைகேடு நடந்துள்ளது.
தெற்கு ரயில்வேயிலேயே தமிழர்கள் தேர்வு பெற முடியவில்லை என்றால், மேற்கு, வடக்கு என மற்ற ரயில்வேக்களில் நமக்கு எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்?
ரயில்வேயைப் பொறுத்தவரையில், அமைச்சரின் கவனத்துக்கு வராமல் அதிகாரிகளின் மட்டத்திலேயே இதுபோன்ற பாரபட்சங்கள் நடந்துவிடுகின்றன.
ஏற்கெனவே, வாரிசு அடிப்படையில் தந்தை, மகன், பேரன் என்று வழிவழியாக ரயில்வே வேலைவாய்ப்புகளில் வட இந்தியர்கள் இருந்துவந்த வரலாறெல்லாம் இந்திய ரயில்வேக்கு உண்டு.
அதாவது,
`இந்தியன் பாங்க்; இது உங்கள் பாங்க்'
என்ற விளம்பரத்தைப் போல்,
`இந்தியன் ரயில்வே; இது உங்கள் ரயில்வே'
என்று வட இந்தியர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை இருந்துவருகிறது.
இந்த வகையில், அதிகாரிகளே இதுபோன்று இனப்பாகுபாட்டோடு நடந்துகொள்வதால்தான், தமிழர்களுக்கான வாய்ப்புகள் பறிபோகின்றன.

இந்த முறைகேடுகளைத் தடுக்க வேண்டுமானால், முதற்கட்டமாக, ஆன்லைன் வழியிலான தேர்வுகளை ரத்து செய்து, எப்போதும்போல் விடைத்தாளில் நேரடியாக தேர்வு எழுதுகிற நடைமுறையைக் கொண்டுவரவேண்டும்.

அடுத்ததாக, தமிழகத்திலிருக்கிற 39 எம்.பி-க்களும், நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சரிடம் இந்த முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.
வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எங்கள் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், நிச்சயம் இதுகுறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்புவார்'' என்றார் உறுதியாக.

இந்தப் பிரச்னையில், செய்தியாளர்களின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுவந்த மதுரை எம்.பி-யும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான சு.வெங்கடேசனிடம் பேசியபோது,
"ஆன்லைன் வழித் தேர்வு என்ற பெயரில், இப்போது நடைபெற்றிருக்கும் இந்த முறைகேடு பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் மற்றும் வாரியத் தலைவருக்கு கடிதம் எழுதவிருக்கிறேன்.
அடுத்ததாக, ஆன்லைன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும், தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்களையும் வெளியிடக் கோரி கேட்கவுள்ளேன்'' என்றார் சுருக்கமாக.

இதையடுத்து, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம், இப்பிரச்னை குறித்து மத்திய ரயில்வே அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்வியை முன்வைத்தோம்...
"பொதுவாக யு.பி.எஸ்.சி போன்ற அகில இந்தியத் தேர்வுகளில் மாநில வாரியான பாகுபாடுகள் பார்க்கப்படுவது இல்லை.
ஆனால், ரயில்வே துறைக்கான தேர்வு என்கிறபோது, எந்தப் பணிகளுக்காக தேர்வு நடைபெற்றது, தமிழ்நாட்டிலிருந்து எவ்வளவு பேர் தேர்வில் கலந்துகொண்டனர் என்பதுபோன்ற விவரங்களையெல்லாம் பார்க்க வேண்டியதிருக்கிறது.
ஏனெனில், திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தில் மல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயின்றுவருகிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டிலிருந்து செல்லுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது.
காரணம், நம் மாணவர்கள், அதிகளவில் இந்தப் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே எனக்குக் கிடைத்த தகவலாக இருக்கிறது.
ரயில்வே, போஸ்டல் மற்றும் கஸ்டம்ஸ் போன்ற துறைகளில் அந்தந்த மொழிசார்ந்த நபர்களை பணியில் அமர்த்துகிறபோதுதான், நிர்வாகம் நல்லமுறையில் செயல்பட முடியும்.
உதாரணமாக, இன்கம்டாக்ஸ் ரெய்டு போகிற ஒரு சூழலில், உடனடியாக ஒரு ஸ்டேட்மென்ட்டை ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்றால்கூட சம்பந்தப்பட்ட மொழியைத் தெரிந்த அதிகாரியாக இருக்கவேண்டியது மிக முக்கியம்.
அதுவும் அல்லாமல், இது ரொம்பவும் சென்சிபிளான விஷயம் என்பதால், மத்திய அரசுத் துறையில் எங்கெங்கு இதற்கான மாற்றங்கள் தேவைப்படுகிறது என்பது குறித்து உறுதியாக நாங்கள் கேட்கவிருக்கிறோம்.
ரயில்வே மட்டுமன்றி, பொதுமக்களோடு அன்றாடம் நேரடியாகக் கலந்து பழகுகிற எந்தத் துறையாக இருந்தாலும் அவற்றில் உள்ளூர் மக்களை பணியில் அமர்த்துவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.
ஏற்கெனவே கஸ்டம்ஸ் மற்றும் கர்நாடக மாநில வங்கித் தேர்வுகளில் இதுபோன்ற பிரச்னைகள் வந்தபோது, நிதி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம்.
உடனடியாக மாநில மொழிகளிலேயே சம்பந்தப்பட்டவர்கள் தேர்வெழுதலாம் என்ற அரசாணையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல், இந்த விஷயத்திலும் ரயில்வே அமைச்சரைச் சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பா.ஜ.க சார்பில், கேட்டுக்கொள்ளவிருக்கிறோம்.
அதேசமயம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு நாம் கொடுக்கும் அதே கவனத்தை, அகில இந்திய அளவிலான மற்ற போட்டித் தேர்வுகளுக்கும் கொடுக்க வேண்டும்.
அதற்கான பயிற்சியை மாநில அரசும் நம் மாணவர்களுக்கு கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்'' என்றார் கோரிக்கையாக.

Published:16 Jun 2020 4 PMUpdated:16 Jun 2020 4 PM
நன்றி: விகடன்

முகநூல் தமிழ்தேசியர்க்கு

முகநூல் தமிழ்தேசியர்க்கு...

2012 முதல் 2020 வரை என்னிடம் இருந்த முகநூல் கணக்கு இப்போது என்னிடம் இல்லை.

அது முடக்கப்பட்ட 2 மாதங்கள் யாருமே என்னைத் தேடவில்லை.

(ஒரே ஒருவர்தான் உங்கள் கணக்கு என்னவாயிற்று என்று கேட்டார்)

இங்கே என்னை என்று நான் குறிப்பிடுவது எனது பதிவுகளை!

நான் என்றுமே என்னையோ எனது தனிப்பட்ட வாழ்க்கையையோ முகநூலுக்கு கொண்டுவந்தது இல்லை
.
"நான்" என்கிற வார்த்தையை இதுவரை பெரும்பாலும் நான் பயன்படுத்தியதில்லை.

இதுவே முகநூலில் எனக்கென்று தனிப்பட்ட ஒரு நட்புவட்டம் உருவாகாமல் போக காரணமாக இருந்திருக்கலாம்.

  நான் முகநூலே கதியாகக் கிடந்த காலம் போய் கடந்த ஓராண்டாக ஏதோ பெயருக்கு எட்டிப்பார்த்துவிட்டு போய்விடுவதால் கூட இது நிகழ்ந்திருக்கலாம்.

அனைவரும் ஒருகட்டத்தில் விரக்தியாகி கூறுவது போல நான் முகநூலை விட்டு போகப்போவதெல்லாம் இல்லை.
தொடர்ந்து முகநூலில் பதிவிடுவேன்.

இருக்கும்போது அருமை தெரியாது என்பார்கள்.
எனது பதிவுகளின் முக்கியத்துவத்தை அவை இல்லாதபோதும் கூட யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

எனது வேட்டொலி இணையம் கூட போதுமான பார்வையாளர்களை பெறமுடியவில்லை.

சரி பரவாயில்லை.
நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் கூற விரும்புவதை இங்கே சுருக்கமாக எழுதுகிறேன்.

இன்று முகநூலில் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் உங்கள் மனநிலை என்ன?!

தமிழகத்தை தன் பிடியில் வைத்திருக்கும் வந்தேறிகள் முகத்திரையைக் கிழிப்பது, முதலமைச்சர் நாற்காலியில் ஒரு தமிழின உணர்வுள்ள தமிழரை அமரவைப்பது,
அவர்மூலம் மாநில உரிமைகளை மீட்பது,
அதன்பிறகு எம்.ஜி.ஆர் காலத்தில் செய்தது போல ஈழம் அமைய உதவுவது.

இந்த வழியில்தான் நீங்கள் போய்க்கொண்டு இருக்கிறீர்கள்.

இந்த சுற்றுவழி எங்கே போய் முடியும் தெரியுமா?!

வந்தேறிகளின் முகமூடியைக் கிழிப்பதற்குள் ஈழம் அழிந்துவிடும்!
(கிட்டத்தட்ட அழிந்துவிட்டது)

மாநில ஆட்சியைப் பிடிப்பதற்குள் எல்லா மாநில உரிமைகளையும் ஹிந்தியம் விழுங்கிவிடும்!
(காவிரி மேலாண்மை வாரியம் கடைசியாக விழுங்கப்பட்டது)

நாம் மாற்றுவழி யோசிக்கும்முன் தமிழகம் ஹிந்தியர்களால் நிறைந்துவிடும்.
(ஒன்றரை கோடி பேர் ஏற்கனவே குடிவந்தாயிற்று)

பிறகு நமது கதையும் அப்படியே ஈழம் போலாகும்!

இதற்குச் சான்று 2009 லிருந்து 2020 வரை இத்தனை தமிழ்தேசியர்கள் உருவாகியும் ஒரு இயக்கத்தையோ கட்சியையோ கட்டியமைக்க முடியவில்லை.

கட்டியமைக்க முடியாவிட்டாலும் இருக்கும் ஒரே நம்பிக்கையான நாம் தமிழர் கட்சியையும் வளரவிட்டீர்களா என்றால் அதுவும் இல்லை.

வந்தேறிகளையும் ஹிந்தியத்தையும் திட்டிக்கொண்டு மட்டுமே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

நான் இங்கே தமிழ்தேசியவாதிகளை மட்டுமே குறிப்பிட்டு பேசுகிறேன்.

  "நம் நாடு இந்தியா" என்று பள்ளிப்பருவத்திலேயே மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிகளை இழுக்கவில்லை.

"நமது மதத்திற்கு மரியாதை இல்லை" என்று மூளைச்சலவை செய்யப்பட்ட மூடர்களை இழுக்கவில்லை.

"நாம் ஆண்ட பரம்பரை" அல்லது "நாம் ஆயிரமாண்டு அடிமை" என்று மூளைச் சலவை செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளை இழுக்கவில்லை.

"உழைப்பவரெல்லாம் ஒரே குடும்பம்" என்று மூளைச்சலவை செய்யப்பட்ட முட்டாள்களை இங்கே இழுக்கவில்லை.

சினிமாக் கூத்தாடி பின்னால் ஓடும் பொறுக்கிகளை இங்கே இழுக்கவில்லை.

இனப்படுகொலையை பிரச்சாரம் செய்து தனிநாடு அடையலாம் என்று பத்து ஆண்டுகளாக பகற்கனவு கண்டுவரும் ஈழத்தமிழரையும் இங்கே இழுக்கவில்லை

எத்தனையோ சமூக வலைப்பொறிகளில் சிக்காமல் இனத்திற்கென்று சிந்திக்கத் தொடங்கி
தமிழினம் பழமையானது, அது தனிநாடு அடையும் தகுதி உடையது என உணர்ந்துகொண்ட அறிவார்ந்த தமிழ்தேசியர்களைத்தான் கூறுகிறேன்.

நீங்கள் இப்போதும் முட்டாள்களாகவே இருக்கிறீர்கள்.

நீங்கள் அரசியல் ரீதியாக எந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கின்றீர்கள் என்றால் "ஈழமும் தமிழகமும் ஒரே நாடு" என்கிற அடிப்படை அறிவுகூட உங்களுக்கு வரவில்லை.

நீங்கள்  வரலாற்று ரீதியாக எந்த அளவு முட்டாள்களாக இருக்கிறீர்கள் என்றால் "ஆயுதம் ஏந்தாமல் ஒரு இனம் விடுதலை அடைய ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது" என்கிற வரலாற்று உண்மையைக் கூட அறியாதவர்களாக இருக்கிறீர்கள்.

நான் 2012 லிருந்து இதைத்தான் முகநூலிலும் வலைப்பூவிலும் கதறிக்கொண்டு இருக்கிறேன்.

இத்துடன் சேர்த்து தமிழர் இழந்த எல்லை மாவட்டங்கள் பற்றியும் கத்திக்கொண்டு இருக்கிறேன்.

ஆனால் யாருமே
ஈழம் - தமிழகம் இணைப்பு பற்றியோ
ஆயுதப் போராட்டம் பற்றியோ
மண்மீட்பு பற்றியோ
பேசுவது கூட இல்லை.

பேசவே தொடங்கவில்லை எனும்போது விவாதிப்பது எப்போது?!
ஒன்றிணைவது எப்போது?!
கொள்கைகளை உருவாக்குவது எப்போது?!
இயக்கம் கட்டுவது எப்போது?!
ஆயுதம் திரட்டுவது எப்போது?!
செயலில் இறங்குவது எப்போது?!
நிலத்தை கைப்பற்றுவது எப்போது?!
நாடமைப்பது எப்போது?!

ஒரு....
பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன்.

இன்னொன்றை இங்கே உறுதியாகக் கூறுகிறேன்.
நீங்கள் புளகாங்கிதம் அடைவதுபோல நீங்கள் வந்து திராவிடத்தை வீழ்த்தவில்லை.

1500 களில் தோன்றிய வடுகத்தின் குழந்தையான வந்தேறியத்தின்  கடந்த நூற்றாண்டு வடிவமாக திராவிடம் 1890 களில் உருவாகி
1920 களில் அதிகாரத்தைக் கைப்பற்றி வேரூன்றி
வளர்ந்து
செழித்து
கொழுத்து
ஆண்டு
அனுபவித்து
தானாகத்தான் வீழ்ந்ததேயொழிய தமிழ்தேசியவாதிகளால் சிறு சிராய்ப்பைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.

(இந்த நூற்றாண்டில் அதன் புதுவடிவம் "நாம் தமிழ்நாட்டவர்" அரசியலாக இருக்கலாம்)

இதற்கெல்லாம் காரணம் நீங்கள் ஜனநாயகத்தை நம்பிக்கொண்டு இருப்பதுதான்.

சனநாயத்தை நம்புகிறீர்களா அல்லது அப்படி நடித்து உங்களுக்கு ஆயுதம் தூக்க ஆண்மையில்லை என்கிற உண்மையை மறைக்கிறீர்களா?!

தமிழர் வீரம் என்று கதைகதையாக பேசுவதெல்லாம் பேச்சோடு மட்டும்தானா?!

ஆயுதம் தூக்கிய தமிழ்த் தலைவர்களெல்லாம் ஆதரவு கிடைக்காமல் வீழ்ந்தது தமிழர்களின் பெட்டைத்தனம் அன்றி வேறு எதனால்?!

இதைக் கேட்டால் "நீ என்ன சாதித்தாய்?" என்றுதான் கேட்பீர்கள்.

ஒருவர்கூட என் கருத்தை உள்வாங்காத போது நான் மட்டும் செயலில் எப்படி இறங்கமுடியும்?!

என்னால் யாருமே மாறவில்லையா என்றால் மாறியிருக்கிறார்கள்.
ஆனால் அந்த மாற்றம் மிகச் சிறிய அளவானதே!

எனக்கு யார் மீதும் கோபமில்லை!

என் வாழ்க்கையில் எட்டு ஆண்டுகளை வீணடித்ததாக எனக்குத் தோன்றினாலும் 10 கோடித் தமிழர்களில் நான்குபேரையாவது விழிக்கவைக்க முடியும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

முதலுதவிக்கு முரண்டு பிடிப்பவன் கடைசி நேரத்தில் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

வந்தேறிய விளைவுகள் நெருக்கும்போது என் சிந்தனைகளின் அருமை உங்களுக்குப் புரியும்!

என் வாழ்நாளில் நான்குபேர் நான்கே நான்கு பேர் விழித்தால் போதும் என் இனத்திற்காக என் உயிரைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக போய்விடுவேன்.

ஆயுதப் போராட்டமெல்லாம் இந்தக் காலத்தில் சாத்தியமில்லை என்று நீங்கள் வாயசைத்துவிட்டு கடந்துசெல்லும் இதே வேளையில்
உலகில் குட்டி குட்டி நாடோடி இனங்கள் ஆயுதம் தாங்கி வல்லரசுகளைச் சாய்த்து மண்ணை மீட்டு அரசாங்கம் கட்டி மானத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

நம்மாலும் முடியும்!
நமக்கு அந்த வலு இப்போது இருக்கிறது.
ஆனால் வருங்காலத்தில் இருக்காது.

ஆயுத பலத்தால் வீரப்பனார் காவிரி தந்த வரலாறும்
பிரபாகரனார் ஈழம் ஆண்ட வரலாறும் கண்முன்னே நடந்துள்ளன.

இவ்விருவரை பாராமுகமாய் இருந்து பலிகொடுத்தது போல இனி  உருவாகப்போகும் தலைவனையும் கையாலாகாத் தனத்தால் பலிகொடுத்துவிட்டு அவன் செத்தபிறகு சாமியாக்கி பூசாரித்தனம் செய்யாதீர்கள்!

இனத்திற்காக ஆயுதம் தாங்கி ஒருவன் முன்னே நடந்தால் அவன் பின்னே செல்லுங்கள்!

விடுதலைக்காக எந்த மக்கள் அதிகம் உயிரைப் பணயம் வைக்கிறார்களோ அவர்கள்தான் வருங்காலத்தில் உயர்ந்த சாதி!
விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் வருங்காலத்தில் ஆண்ட பரம்பரை!

இன்று மேல்சாதியாக இருப்பவர் வரலாற்றைப் புரட்டுங்கள்.
அவர்கள் இனத்திற்காகப் போராடியவர்களாக இருப்பார்கள்.

உங்கள் சந்ததி மேல்சாதியாக இருக்கவேண்டுமா?!
கீழ்சாதியாக இருக்க வேண்டுமா?!

இன்றிலிருந்து சனநாயகம் தவிர்த்த செயல்பாடுகள் குறித்து பேசவாவது தொடங்குங்கள்!

பத்தாயிரம் ஆண்டுகள் கழித்தாவது தமிழர்நாடு அமையட்டும்!

நீங்கள் பேடியாக இருந்தவரை போதும்!

வெள்ளை கொடியுடன் சரணடைந்த 110 விடுதலை புலிகள் பட்டியல்

வெள்ளை கொடியுடன் சரணடைந்த 110 விடுதலை புலிகள் இவர்கள் தான்!!!

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:

ஆதவா ( செயற்பாடு தெரியாது)

அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு)

அம்பி ( செயற்பாடு தெரியாது)

அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி)

ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)

பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்)

பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் )

V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )

Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)

பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )

பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித்துறை )

பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)

பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது)

பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )

பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)

பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)

பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )

Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)

எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )

எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )

வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )

கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)

கரிகரன் ( செயற்பாடு தெரியாது)

இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )

இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)

இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி),( இளம்பரிதியின் மனைவி)
இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)

இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )

இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)

இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)

இசைபிரியா ( ஊடக பிரிவு)

ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)

ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )

காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)

கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)

கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)

கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)

கருவண்ணன் ( மாவீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )

கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)

கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

குயிலன் ( இராணுவ புலனாய்வு)

குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)

குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)

குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)

லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )

மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )

மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )

மலரவன் (நிர்வாக சேவை )

மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)

மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)

மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )

மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )

மோகன் அங்கிள் (கடற்புலிகள் )

முகிலன் (இராணுவ புலனாய்வு)

முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )

balakumaran-custody இறுதி நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)

நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )

நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )

நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )

நேயன் (புலனாய்வு)

நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )

நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய்)

நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)

நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )

பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )

பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)

Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)

Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)

பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)

பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)

புலித்தேவன் (சமாதான செயலகம்)

புலிமைந்தன் (யோகியின் சாரதி)

புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )

புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)

ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)

ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )

ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)

புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)

Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)

Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)

ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)

ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )

ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)

S.தங்கன் (சுதா )
சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)

சக்தி (வனப் பிரிவு ஒருங்கினைப்பாளர்)

சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)

செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )

சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)

சின்னவன் (புலனாய்வு)

சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)

Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)

Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)

திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)

திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )

துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)

வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)

வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)

Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)

Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)

வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)

வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)

வினிதா (நடேசனின் மனைவி )

வீமன் (கட்டளை தளபதி)

விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)

யோகன் / சேமணன் (அரசியல் துறை)

யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்) (ஈழமலர்)

இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது
https://www.tnn. lk/archives/8571 .
12 ஜூன், முற்பகல்

பதிவர்: Sivavathani Prabaharan