Showing posts with label அறிக்கை. Show all posts
Showing posts with label அறிக்கை. Show all posts

Wednesday, 17 June 2020

முகநூல் தமிழ்தேசியர்க்கு

முகநூல் தமிழ்தேசியர்க்கு...

2012 முதல் 2020 வரை என்னிடம் இருந்த முகநூல் கணக்கு இப்போது என்னிடம் இல்லை.

அது முடக்கப்பட்ட 2 மாதங்கள் யாருமே என்னைத் தேடவில்லை.

(ஒரே ஒருவர்தான் உங்கள் கணக்கு என்னவாயிற்று என்று கேட்டார்)

இங்கே என்னை என்று நான் குறிப்பிடுவது எனது பதிவுகளை!

நான் என்றுமே என்னையோ எனது தனிப்பட்ட வாழ்க்கையையோ முகநூலுக்கு கொண்டுவந்தது இல்லை
.
"நான்" என்கிற வார்த்தையை இதுவரை பெரும்பாலும் நான் பயன்படுத்தியதில்லை.

இதுவே முகநூலில் எனக்கென்று தனிப்பட்ட ஒரு நட்புவட்டம் உருவாகாமல் போக காரணமாக இருந்திருக்கலாம்.

  நான் முகநூலே கதியாகக் கிடந்த காலம் போய் கடந்த ஓராண்டாக ஏதோ பெயருக்கு எட்டிப்பார்த்துவிட்டு போய்விடுவதால் கூட இது நிகழ்ந்திருக்கலாம்.

அனைவரும் ஒருகட்டத்தில் விரக்தியாகி கூறுவது போல நான் முகநூலை விட்டு போகப்போவதெல்லாம் இல்லை.
தொடர்ந்து முகநூலில் பதிவிடுவேன்.

இருக்கும்போது அருமை தெரியாது என்பார்கள்.
எனது பதிவுகளின் முக்கியத்துவத்தை அவை இல்லாதபோதும் கூட யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

எனது வேட்டொலி இணையம் கூட போதுமான பார்வையாளர்களை பெறமுடியவில்லை.

சரி பரவாயில்லை.
நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் கூற விரும்புவதை இங்கே சுருக்கமாக எழுதுகிறேன்.

இன்று முகநூலில் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் உங்கள் மனநிலை என்ன?!

தமிழகத்தை தன் பிடியில் வைத்திருக்கும் வந்தேறிகள் முகத்திரையைக் கிழிப்பது, முதலமைச்சர் நாற்காலியில் ஒரு தமிழின உணர்வுள்ள தமிழரை அமரவைப்பது,
அவர்மூலம் மாநில உரிமைகளை மீட்பது,
அதன்பிறகு எம்.ஜி.ஆர் காலத்தில் செய்தது போல ஈழம் அமைய உதவுவது.

இந்த வழியில்தான் நீங்கள் போய்க்கொண்டு இருக்கிறீர்கள்.

இந்த சுற்றுவழி எங்கே போய் முடியும் தெரியுமா?!

வந்தேறிகளின் முகமூடியைக் கிழிப்பதற்குள் ஈழம் அழிந்துவிடும்!
(கிட்டத்தட்ட அழிந்துவிட்டது)

மாநில ஆட்சியைப் பிடிப்பதற்குள் எல்லா மாநில உரிமைகளையும் ஹிந்தியம் விழுங்கிவிடும்!
(காவிரி மேலாண்மை வாரியம் கடைசியாக விழுங்கப்பட்டது)

நாம் மாற்றுவழி யோசிக்கும்முன் தமிழகம் ஹிந்தியர்களால் நிறைந்துவிடும்.
(ஒன்றரை கோடி பேர் ஏற்கனவே குடிவந்தாயிற்று)

பிறகு நமது கதையும் அப்படியே ஈழம் போலாகும்!

இதற்குச் சான்று 2009 லிருந்து 2020 வரை இத்தனை தமிழ்தேசியர்கள் உருவாகியும் ஒரு இயக்கத்தையோ கட்சியையோ கட்டியமைக்க முடியவில்லை.

கட்டியமைக்க முடியாவிட்டாலும் இருக்கும் ஒரே நம்பிக்கையான நாம் தமிழர் கட்சியையும் வளரவிட்டீர்களா என்றால் அதுவும் இல்லை.

வந்தேறிகளையும் ஹிந்தியத்தையும் திட்டிக்கொண்டு மட்டுமே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

நான் இங்கே தமிழ்தேசியவாதிகளை மட்டுமே குறிப்பிட்டு பேசுகிறேன்.

  "நம் நாடு இந்தியா" என்று பள்ளிப்பருவத்திலேயே மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிகளை இழுக்கவில்லை.

"நமது மதத்திற்கு மரியாதை இல்லை" என்று மூளைச்சலவை செய்யப்பட்ட மூடர்களை இழுக்கவில்லை.

"நாம் ஆண்ட பரம்பரை" அல்லது "நாம் ஆயிரமாண்டு அடிமை" என்று மூளைச் சலவை செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளை இழுக்கவில்லை.

"உழைப்பவரெல்லாம் ஒரே குடும்பம்" என்று மூளைச்சலவை செய்யப்பட்ட முட்டாள்களை இங்கே இழுக்கவில்லை.

சினிமாக் கூத்தாடி பின்னால் ஓடும் பொறுக்கிகளை இங்கே இழுக்கவில்லை.

இனப்படுகொலையை பிரச்சாரம் செய்து தனிநாடு அடையலாம் என்று பத்து ஆண்டுகளாக பகற்கனவு கண்டுவரும் ஈழத்தமிழரையும் இங்கே இழுக்கவில்லை

எத்தனையோ சமூக வலைப்பொறிகளில் சிக்காமல் இனத்திற்கென்று சிந்திக்கத் தொடங்கி
தமிழினம் பழமையானது, அது தனிநாடு அடையும் தகுதி உடையது என உணர்ந்துகொண்ட அறிவார்ந்த தமிழ்தேசியர்களைத்தான் கூறுகிறேன்.

நீங்கள் இப்போதும் முட்டாள்களாகவே இருக்கிறீர்கள்.

நீங்கள் அரசியல் ரீதியாக எந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கின்றீர்கள் என்றால் "ஈழமும் தமிழகமும் ஒரே நாடு" என்கிற அடிப்படை அறிவுகூட உங்களுக்கு வரவில்லை.

நீங்கள்  வரலாற்று ரீதியாக எந்த அளவு முட்டாள்களாக இருக்கிறீர்கள் என்றால் "ஆயுதம் ஏந்தாமல் ஒரு இனம் விடுதலை அடைய ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது" என்கிற வரலாற்று உண்மையைக் கூட அறியாதவர்களாக இருக்கிறீர்கள்.

நான் 2012 லிருந்து இதைத்தான் முகநூலிலும் வலைப்பூவிலும் கதறிக்கொண்டு இருக்கிறேன்.

இத்துடன் சேர்த்து தமிழர் இழந்த எல்லை மாவட்டங்கள் பற்றியும் கத்திக்கொண்டு இருக்கிறேன்.

ஆனால் யாருமே
ஈழம் - தமிழகம் இணைப்பு பற்றியோ
ஆயுதப் போராட்டம் பற்றியோ
மண்மீட்பு பற்றியோ
பேசுவது கூட இல்லை.

பேசவே தொடங்கவில்லை எனும்போது விவாதிப்பது எப்போது?!
ஒன்றிணைவது எப்போது?!
கொள்கைகளை உருவாக்குவது எப்போது?!
இயக்கம் கட்டுவது எப்போது?!
ஆயுதம் திரட்டுவது எப்போது?!
செயலில் இறங்குவது எப்போது?!
நிலத்தை கைப்பற்றுவது எப்போது?!
நாடமைப்பது எப்போது?!

ஒரு....
பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன்.

இன்னொன்றை இங்கே உறுதியாகக் கூறுகிறேன்.
நீங்கள் புளகாங்கிதம் அடைவதுபோல நீங்கள் வந்து திராவிடத்தை வீழ்த்தவில்லை.

1500 களில் தோன்றிய வடுகத்தின் குழந்தையான வந்தேறியத்தின்  கடந்த நூற்றாண்டு வடிவமாக திராவிடம் 1890 களில் உருவாகி
1920 களில் அதிகாரத்தைக் கைப்பற்றி வேரூன்றி
வளர்ந்து
செழித்து
கொழுத்து
ஆண்டு
அனுபவித்து
தானாகத்தான் வீழ்ந்ததேயொழிய தமிழ்தேசியவாதிகளால் சிறு சிராய்ப்பைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.

(இந்த நூற்றாண்டில் அதன் புதுவடிவம் "நாம் தமிழ்நாட்டவர்" அரசியலாக இருக்கலாம்)

இதற்கெல்லாம் காரணம் நீங்கள் ஜனநாயகத்தை நம்பிக்கொண்டு இருப்பதுதான்.

சனநாயத்தை நம்புகிறீர்களா அல்லது அப்படி நடித்து உங்களுக்கு ஆயுதம் தூக்க ஆண்மையில்லை என்கிற உண்மையை மறைக்கிறீர்களா?!

தமிழர் வீரம் என்று கதைகதையாக பேசுவதெல்லாம் பேச்சோடு மட்டும்தானா?!

ஆயுதம் தூக்கிய தமிழ்த் தலைவர்களெல்லாம் ஆதரவு கிடைக்காமல் வீழ்ந்தது தமிழர்களின் பெட்டைத்தனம் அன்றி வேறு எதனால்?!

இதைக் கேட்டால் "நீ என்ன சாதித்தாய்?" என்றுதான் கேட்பீர்கள்.

ஒருவர்கூட என் கருத்தை உள்வாங்காத போது நான் மட்டும் செயலில் எப்படி இறங்கமுடியும்?!

என்னால் யாருமே மாறவில்லையா என்றால் மாறியிருக்கிறார்கள்.
ஆனால் அந்த மாற்றம் மிகச் சிறிய அளவானதே!

எனக்கு யார் மீதும் கோபமில்லை!

என் வாழ்க்கையில் எட்டு ஆண்டுகளை வீணடித்ததாக எனக்குத் தோன்றினாலும் 10 கோடித் தமிழர்களில் நான்குபேரையாவது விழிக்கவைக்க முடியும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

முதலுதவிக்கு முரண்டு பிடிப்பவன் கடைசி நேரத்தில் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

வந்தேறிய விளைவுகள் நெருக்கும்போது என் சிந்தனைகளின் அருமை உங்களுக்குப் புரியும்!

என் வாழ்நாளில் நான்குபேர் நான்கே நான்கு பேர் விழித்தால் போதும் என் இனத்திற்காக என் உயிரைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக போய்விடுவேன்.

ஆயுதப் போராட்டமெல்லாம் இந்தக் காலத்தில் சாத்தியமில்லை என்று நீங்கள் வாயசைத்துவிட்டு கடந்துசெல்லும் இதே வேளையில்
உலகில் குட்டி குட்டி நாடோடி இனங்கள் ஆயுதம் தாங்கி வல்லரசுகளைச் சாய்த்து மண்ணை மீட்டு அரசாங்கம் கட்டி மானத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

நம்மாலும் முடியும்!
நமக்கு அந்த வலு இப்போது இருக்கிறது.
ஆனால் வருங்காலத்தில் இருக்காது.

ஆயுத பலத்தால் வீரப்பனார் காவிரி தந்த வரலாறும்
பிரபாகரனார் ஈழம் ஆண்ட வரலாறும் கண்முன்னே நடந்துள்ளன.

இவ்விருவரை பாராமுகமாய் இருந்து பலிகொடுத்தது போல இனி  உருவாகப்போகும் தலைவனையும் கையாலாகாத் தனத்தால் பலிகொடுத்துவிட்டு அவன் செத்தபிறகு சாமியாக்கி பூசாரித்தனம் செய்யாதீர்கள்!

இனத்திற்காக ஆயுதம் தாங்கி ஒருவன் முன்னே நடந்தால் அவன் பின்னே செல்லுங்கள்!

விடுதலைக்காக எந்த மக்கள் அதிகம் உயிரைப் பணயம் வைக்கிறார்களோ அவர்கள்தான் வருங்காலத்தில் உயர்ந்த சாதி!
விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் வருங்காலத்தில் ஆண்ட பரம்பரை!

இன்று மேல்சாதியாக இருப்பவர் வரலாற்றைப் புரட்டுங்கள்.
அவர்கள் இனத்திற்காகப் போராடியவர்களாக இருப்பார்கள்.

உங்கள் சந்ததி மேல்சாதியாக இருக்கவேண்டுமா?!
கீழ்சாதியாக இருக்க வேண்டுமா?!

இன்றிலிருந்து சனநாயகம் தவிர்த்த செயல்பாடுகள் குறித்து பேசவாவது தொடங்குங்கள்!

பத்தாயிரம் ஆண்டுகள் கழித்தாவது தமிழர்நாடு அமையட்டும்!

நீங்கள் பேடியாக இருந்தவரை போதும்!

Saturday, 3 August 2019

மூன்று லட்சங்கோடி கொள்ளை

மூன்று லட்சங்கோடி கொள்ளை

ஓராண்டுக்கு ஏறத்தாழ "3 லட்சம் கோடி" ரூபாயை தமிழகத்திடம் கொள்ளை அடிக்கிறது மத்திய அரசு
- தமிழ்தேசிய பேரியக்கம் அறிக்கை

இந்த "3 லட்சங்கோடி" என்பது எவ்வளவு?!

இந்தியாவின் முதல் பணக்காரனான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பே "3.8 லட்சங்கோடி" தான்.

இந்த பணத்தை ஒவ்வொரு ரூபாயாக மாற்றி தரையில் ஒன்றன்பின் ஒன்றாக நிற்கவைத்துக் கொண்டே போனால் இந்த உலகத்தை கிட்டத்தட்ட 74 முறை சுற்றி வரலாம்.

ஒவ்வொரு தமிழக குடிமகன் தலையிலும் 40,000 ரூபாய் கடன் உள்ளது.
அப்படியாக தமிழக அரசின் மொத்த கடனே "3.2 லட்சங்கோடி" தான்.

என்றால் தமிழகத்தில் குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரிடம் இருந்தும் மத்திய அரசு ஆண்டுக்கு 37,000 ரூபாய் கொள்ளை அடித்து செல்கிறது.

இதற்கு பதிலாக நமக்கு என்ன லாபம் கிடைக்கிறது?!

லாபத்தை விடுங்கள்.

உணவுக்கு தேவையான தண்ணீர் கூட நமக்கு கிடைப்பதில்லை.

கடலில் நம் உயிருக்கு பாதுகாப்பு கூட இல்லை.

இதையெல்லாம் விட நம் மண்ணை அழிக்கும் திட்டங்களும் வரவுள்ளன?!

ஆங்கிலேயர் இந்தியாவிடம் இருந்து 1765 முதல் 1938 வரை அடித்த மொத்த கொள்ளையே "3.2 லட்சங்கோடி" தான்!

1947 இல் பிரிட்டிஷ் அரசிடம் இந்திய அரசு கேட்ட நட்ட ஈடு "3.37 லட்சங்கோடி" தான்!

(ஒப்பீட்டுக்காக அப்போது இந்தியாவின் தனிமனித வருமானம் ரூ.200
இப்போது அது ரூ.10,500)

இத்தனை பெரிய தொகையை தமிழக மாநிலத்தில் இருந்து ஹிந்தியா ஆண்டுக்கு ஒருமுறை கொள்ளையிட்டு செல்கிறது.

அன்று ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து இந்தியா விடுதலை கேட்டது சரி என்றால்
இப்போது நாம் இந்திய ஆட்சியிலிருந்து விடுதலை கேட்பதும் சரியே!

தனிநாடு ஒன்றே தீர்வு!


 

Thursday, 1 November 2018

தேவரை கண்டித்த ஈ.வே.ரா கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கண்டிக்காமல் விட்டதேனோ?!

தேவரை கண்டித்த ஈ.வே.ரா கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கண்டிக்காமல் விட்டதேனோ?!

'உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன.
கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியுமில்லை; கொள்கையுமில்லை.
‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா?
தேவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவராயிருந்துகொண்டு,
அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவர் ஆதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார்.

தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.

ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை.
ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜனநாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச்சண்டை நின்றிருக்காதென்பது உறுதி.

அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண்டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர்.(இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம்.
இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா?
இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா?
இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது.
இன்னும் பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும்.
போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்கள்,
மாதா கோயிலுக்குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும் மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோ என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது.
இவர்கள் பேச்சும் நடத்தையும் அத்தகையதாயிருக்கிறது.
ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக் கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம்.
குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இக்குழுவினர்.
இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர் தூபம் போடுகிறார்.”

- ஈ.வே.ரா (விடுதலை 08.10.1957)

search in google கூலி உயர்வு கேட்டதால் கீழ்வெண்மணிப் படுகொலை நடந்தது - ஈ.வெ.ரா

search in google முதுகுளத்தூர் கலவரம் மறைக்கப்பட்ட உண்மைகள் வேட்டொலி

தேவரை கண்டித்த ஈ.வே.ரா கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கண்டிக்காமல் விட்டதேனோ?!

தேவரை கண்டித்த ஈ.வே.ரா கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கண்டிக்காமல் விட்டதேனோ?!

'உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன.
கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியுமில்லை; கொள்கையுமில்லை.
‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா?
தேவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவராயிருந்துகொண்டு,
அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவர் ஆதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார்.

தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.

ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை.
ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜனநாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச்சண்டை நின்றிருக்காதென்பது உறுதி.

அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண்டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர்.(இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம்.
இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா?
இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா?
இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது.
இன்னும் பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும்.
போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்கள்,
மாதா கோயிலுக்குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும் மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோ என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது.
இவர்கள் பேச்சும் நடத்தையும் அத்தகையதாயிருக்கிறது.
ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக் கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம்.
குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இக்குழுவினர்.
இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர் தூபம் போடுகிறார்.”

- ஈ.வே.ரா (விடுதலை 08.10.1957)

search in google கூலி உயர்வு கேட்டதால் கீழ்வெண்மணிப் படுகொலை நடந்தது - ஈ.வெ.ரா

Thursday, 22 February 2018

ஆந்திர சிறைகளில் 3000 தமிழர்கள்?!

ஆந்திர சிறைகளில் 3000 தமிழர்கள்?!

90% பேர் ஆந்திர போலீசாரால் தமிழகத்திற்குள் கைது செய்யப்பட்ட அப்பாவிகள்.

ஒவ்வொருவர் மீதும் சராசரியாக 25 வழக்குகள்.

(நன்றி: மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அறிக்கை)

Tuesday, 30 January 2018

சட்டநாதன் அறிக்கை பற்றிய தவறான தகவலை பரப்ப வேண்டாம்

சட்டநாதன் கமிஷன் பற்றி தவறான செய்திகள் வளையவருகின்றன.
தமிழரல்லாத சாதிகள் இடவொதுக்கீடு பெறுவதை தடுக்க தமிழ்ச்சாதி பட்டியல் தயாரிக்க இது அமைக்கப்பட்டதாக பலரும் கூறுகின்றனர்.
உண்மையில் சட்டநாதன் கமிசன் என்பது பிற்படுத்தப்பட்ட சாதிகளின் முன்னேற்றத்தை ஆராயவே அமைக்கப்பட்டது.
 அறிக்கையின் இரண்டு பக்கங்களில் திராவிட இயக்கங்களுக்கு பாராட்டு வேறு உள்ளது.
(சட்டநாதன் அறிக்கை IMAGE FORMAT.
0,4,5,10 ஆகிய பக்கங்கள் கடைசியில்)