Showing posts with label இராமதாசு. Show all posts
Showing posts with label இராமதாசு. Show all posts

Wednesday, 3 April 2024

பாமக இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது

பா.ம.க இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது 

2013 இல் எழுதப்பட்ட பதிவு 

பாட்டாளி மக்கள் கட்சியின் 'இப்தார்' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள்!
பழனி பாபா அவர்களால் வளர்க்கப்பட்ட பா.ம.க, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட போது, 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம்களை வேட்பாளராக்கி முஸ்லிம்களின் பணம் பொருளை வீணாக்கியது.

 திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அகரம் கான் என்ற முஸ்லிமை தான் களத்தில் இறக்கியது.
ஆனால், 2001ல் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளைப் பெற்றபோது (20 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்) ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை.

 2006ல் திமுக கூட்டணியில் 31 இடங்கள் பெற்றபோது (17 எம் எல் ஏக்கள் வெற்றி பெற்றனர்) கூட ஒரு முஸ்லிமும் நிறுத்தப் படவில்லை.

2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் ஒரு முஸ்லிமுக்கும் வாய்ப்புத்தரவில்லை.

குறிப்பாக, ஏற்கனவே முஸ்லிம்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,க்களாக இருந்த தொகுதிகள் உள்ளிட்ட 'நிச்சய வெற்றி' தொகுதிகளில் கூட முஸ்லிம்கள் நிறுத்தப் படவில்லை.
1. புவனகிரி
2.திண்டுக்கல்
3.பூம்புகார்
4.ஆற்காடு
5.ஆலங்குடி
6. திண்டிவனம்
7.நெய்வேலி
8.திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) போன்ற தொகுதிகளை தன் வசம் வைத்திருந்த பாமக, ஒரு இடத்தில் கூட முஸ்லிம்களை நிறுத்தாமல் 'ஓரவஞ்சனை' செய்தது.

திமுக கூட்டணியில் கணிசமான உள்ளாட்சி இடங்கள் கிடைத்த போதும் முஸ்லிம்களை
புறக்கணித்த கட்சி தான், பாமக.
நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே நிலை தான்.
Maruppu - மறுப்பு
05.08.2013

Thursday, 22 February 2018

ஆந்திர சிறைகளில் 3000 தமிழர்கள்?!

ஆந்திர சிறைகளில் 3000 தமிழர்கள்?!

90% பேர் ஆந்திர போலீசாரால் தமிழகத்திற்குள் கைது செய்யப்பட்ட அப்பாவிகள்.

ஒவ்வொருவர் மீதும் சராசரியாக 25 வழக்குகள்.

(நன்றி: மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அறிக்கை)

Monday, 28 August 2017

புலிகள் ஆதரவு! தனித் தமிழ்நாடு! ராஜீவ் கொலைக்குப் பாராட்டு! - 1992ல் இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்

உயர்திரு. இராமதாசு அவர்கள்,

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்
புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்
தனித் தமிழ்நாடு பற்றியும்

இனப்பற்றுடன் வெளிப்படையாகப் பேசியபோது அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை

ஏடு: செங்கோல்
நாள்: 20.09.1992
தலைப்பு:-
ராஜீவைக் கொன்றவன் என் தோழன்
தமிழகப் பிரிவினையும் கோருவோம்
பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்

நன்றி: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (முகநூல்)

Saturday, 8 April 2017

மருத்துவர் இராமதாசுக்கு நாடார் சங்கங்கள் பாராட்டு விழா

மருத்துவர் இராமதாசுக்கு நாடார் சங்கங்கள் பாராட்டு விழா

சி.பி.எஸ்.இ 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்திய கருத்துகளை நீக்குவதற்கு முதல் குரல் எழுப்பிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு
நாடார் சங்கங்கள் சார்பில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவுக்கு நாடார் பேரவை மாநில இளைஞரணி தலைவர் ஜாக்குவார் தங்கம் தலைமை தாங்கினார்.

"நாடார் சமுதாயம் தமிழகத்தில், இந்தியாவில் பெருமைக்குரிய சமுதாயம்.
அவர்கள் இல்லாத துறையே இல்லை.
அவர்களுடைய மூலதனம் தமிழகத்தில் உழைப்பை பற்றி சொல்லி கொடுத்தவர்கள் நாடார் சமுதாயத்தினர்.

காலை தொடங்கி இரவு 12 மணி வரை உழைக்கிறார்கள்.
இந்த சமுதாயத்தை பார்த்து மற்ற சமுதாய மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாடார் சமுதாயத்தை பற்றி எழுதாமல் வரலாறு இருக்க முடியாது.
அரசியல், சமூகம், ஆன்மிகம், கல்வி, வணிகம் என எல்லாவற்றிலும் முன்னேறி இருக்கிறார்கள்.

தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு நாடார் சமுதாயத்தினர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு 13 லட்சம் அரசு ஊழியர்கள் இருந்தார்கள்.
தற்போது 10 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
ஆனால் நாடார் சமுதாயத்தினர் 50 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள்.

இதழியல் துறையில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்
‘தினத்தந்தி’, ‘மாலை முரசு’, ‘ராணி’ போன்ற பத்திரிகைகளை தொடங்கினார்.
இதழியல் துறையை இவர்களால் தான் நடத்த முடியும் என்று இல்லாமல் நாங்கள் நாடார்கள் எங்களாலும் முடியும் என்று வெற்றிகரமாக இன்றளவும் நடத்தி வருகிறார்கள்.

எந்த சமுதாயமாக இருந்தாலும் எந்த பாகுபாடும் இல்லாமல் நான் போராடுவேன்.
தமிழகத்தை மாற்ற வேண்டும்.
முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தோடு பாடுபடுவோம்."
என்று டாக்டர் இராமதாஸ் பேசினார்.

ஜனவரி 06, 2017 16:05 (மாலை மலர்)