Wednesday, 3 April 2024
பாமக இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது
Sunday, 6 August 2023
புலிகளும் பழனி பாபாவும்
Thursday, 10 October 2019
அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!
அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!
சில வன்னியர்கள்,
அதாவது வன்னியரில் உள்ள பள்ளிகளில் உள்ள பா.ம.க வினரில் உள்ள மிகச்சிலர்,
வன்னியர்களை பிற தமிழர்கள் அதுவும் குறிப்பாக நாடார், முக்குலம், கொங்கு வேளாளர் ஆகியோர் அடிமைப் படுத்த நினைப்பதாகவும்
அதனால் வடதமிழ்நாடு தனியாகத் தேவை என்றும் வாதிடுகின்றனர்.
இதில் சிறிதும் உண்மையில்லை!
--------
மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் எம்.எல்.ஏ பதவிகளில் 19.7% இருந்தனர் (1967 இல்).
1971 இல் 16.7% ஆகவும்
1977 இல் 16.2% ஆகவும்
1980 இல் 16.7% ஆகவும்
குறைந்தனர்.
அப்போது
1980 இல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட பின் இந்த சதவீதம் 17.5% என உயர்ந்த்து.
1989 இல் பா.ம.க தொடங்கப்பட்டு தேர்தலில் குதித்தது.
இதனால் அனைத்து கட்சிகளிலும் வன்னியர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து ச.ம.உ பதவிகளில் வன்னியர்கள் 18.8% ஐப் பிடித்தனர்.
பா.ம.க பெற்ற வாக்கு எண்ணிக்கையைப் பார்த்த பிற கட்சிகள் மேலும் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.
1991 மற்றும் 1996 இல் வன்னியர் சட்டப் பேரவையில் 22.6% ஐப் பிடித்தனர்.
[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]
-----------
இது M.L.A பதவி தற்போது M.P பதவிகளைப் பார்ப்போம்.
-------
1977 இல் வன்னியர்கள் அமைச்சர் பதவிகளில் 12.8% இருந்தனர்.
அதாவது 39 இருக்கைகளில் 5 பேர்.
வன்னியர் சங்கம் தொடங்கிய பின் 1980 இல் இது 15.4% ஆக உயர்ந்து
1984 இல் மீண்டும் 12.8% ஆனது.
பா.ம.க தொடங்கப்பட்ட பின்
1989 இல் 18.3% ஆக உயர்ந்தது.
1991 இல் 15.4% உயர்ந்து
1996 இல் 12.8% மீண்டும் ஆனது.
1998 இல் 25.6% ஆக உயர்ந்தது.
அதாவது 39 இல் 10 வன்னியர்கள்.
1999 இல் 20.51% ஆகவும்
2004 இல் 15.4% ஆகவும்
2009 இல் 12.8% ஆகவும்
இருந்து வந்துள்ளது.
[புள்ளி விபரங்களுக்கு நன்றி: 'அச்சமில்லை' இதழ்]
மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் பல்வேறு கட்சிகளிலும் இருந்துகொண்டு தனது பங்கிற்கு அதிகமாகவே பதவிகளைப் பெற்று வந்துள்ளனர்.
-----
Monday, 26 November 2018
1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி
1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி
அச்சத்தை உடைத்து நொறுக்கிய பிரபாகரன் பதாகை!
1991ஆம் ஆண்டு இராசீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
அதனையொட்டி தமிழீழ ஆதரவு இயக்கங்களும், ஈழ ஆதரவாளர்களும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.
அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தவர் செயலலிதா.
அவர் இராசீவ் படுகொலையைச் சொல்லி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியிருந்தார்.
அவர் தில்லி மீதான விசுவாசத்தை தமது ஒடுக்குமுறை மூலம் காட்டிக் கொண்டிருந்தார்.
அன்றைக்கு எந்தக் கட்சியும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேச மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
அப்போது, மருத்துவர் இராமதாசு "ஏழாண்டுகள் என்ன, எழுபதாண்டுகள் ஆனாலும் புலிகளை ஆதரிப்பேன்; என்னை கைது செய்யுங்கள்!" என்று பேசினார்.
இத்தகையப் பேச்சு தமிழீழ ஆதரவாளர்களுக்கு முழு உற்சாகத்தை தந்தது.
1992இல் சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு தமிழர் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தி "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" ஒன்றை சென்னையில் பா.ம.க. நடத்தியது.
அப்போது மதுரையில் பா.ம.க. வில் பொறுப்பு வகித்த அண்ணன் வேலுச்சாமி தலைமையில் நான் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்களோடு தனி வண்டியில் சென்னைக்கு கிளம்பினோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படங்கள் ஆயிரக்கணக்கில் அச்சடித்து வண்டியில் வைத்திருந்தோம்.
சென்னையை நெருங்கும் வேளையில், பல்வேறு திசைகளிலிருந்து பா.ம.க. மாநாட்டிற்கு வண்டிகள் அணி வகுத்து வந்து கொண்டிருந்தன.
பெரும்பாலான வண்டிகளை நிறுத்தி பிரபாகரன் படத்தை கண்ணாடிகளில் ஒட்டி விட்டோம். வந்திருந்த தோழர்கள் பிரபாகரன் படத்தை சட்டையில் குத்திக் கொண்டனர்.
படத்தை விரும்பிக் கேட்டவர்களுக்கு சட்டையில் குத்தியும் விட்டனர்.
ஒரு சில தோழர்கள் கைக்குட்டையை நெற்றியில் கட்டி அதன் மீது பிரபாகரன் படத்தை அணிந்திருந்தனர் (படத்தின் இடது புறத்தில் இரண்டாவதாக நான் உள்ளேன்).
தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு வி.பி.சிங், இராம் விலாசு பசுவான், உள்ளிட்ட பல்வேறு வட நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மாநாட்டுப் பேரணி தொடங்கும் போது , பிரபாகரன் கையில் துப்பாக்கி ஏந்திய முழு உருவ துணிப் பதாகை ஒரு தோழர் மூலம் கையில் கிடைத்தது.
ஒரு தேனீர் கடையில் நாங்கள் நின்று கொண்டிருந்த போது ஊன்றப்பட்ட நிலையில் இரண்டு கம்புகள் காட்சி அளித்தன.
உடனடியாக தோழர்கள் கம்புகளை உருவி, பிரபாகரன் பதாகையை கம்புகளுக்கு நடுவே கட்டி உயரமாகத் தூக்கினர்.
எல்லோரின் கண்களிலும் பிரபாகரன் ஒளிவிட்டார்.
ஊடகத்தினர் மோப்பம் பிடித்து , பிரபாகரனை சுற்றி வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
பேரணி முழுவதும் பிரபாகரன் படம் பற்றியே பேச்சு.
பிரபாகரன் வாழ்க! தமிழீழம் வெல்க! என்ற முழக்கம் விண்ணை எட்டியது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பிரபாகரன் பதாகைப் படமே அனைவரையும் ஈர்த்தது.
மறுநாள் செய்தி ஊடகங்களில், "பயங்கரவாத புலிகள் மாநாடு" என்று தலைப்பு எழுத்துகளில் வெளியிடப்பட்டன.
காங்கிரசு கட்சியினர் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள் பலர் இதனை சாக்காக வைத்து "பா.ம.க.வை தடை செய்ய வேண்டும்" என்று கூச்சல் எழுப்பினர்.
இந்தியா டுடே ஏடு "புலிகளின் முதுகில்" என்று தலைப்பிட்டு விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தை வெளிக் காட்டிக் கொண்டது.
புலி வேடம் போட்டு கலை நிகழ்ச்சி நடத்தியவர்களைக் கூட "புலி ஆதரவாளர்கள்" என்று கூச்சலிட்டது.
மாநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்ததற்காக மருத்துவர் இராம்தாசு, பண்ருட்டி இராமச்சந்திரன், தோழர் தியாகு, பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அன்றைக்கு பிரபாகரன் படத்தை கொண்டு சென்றதன் மூலம் இந்திய- தமிழக அரசுகளின் ஒடுக்குமுறையின் இறுக்கம் களையப்பட்டது உண்மை!
அச்சம் உடைக்கப்பட்டது உண்மை!
அன்று ஒரு படம் ஏந்தினோம்!
இன்று ஆயிரமாயிரம் படங்களை ஏந்தி நடந்திட எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும்!
அச்சமூட்டுபவரை அடி பணிய வைப்பதே தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிமுறையாகும்!
பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடும் இன்றைய இளைய தலைமுறையினரின் முதல் தாரக மந்திரமாக இது இருக்கட்டும்!
நன்றி: கதிர் நிலவன்
1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி
1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி
அச்சத்தை உடைத்து நொறுக்கிய பிரபாகரன் பதாகை!
1991ஆம் ஆண்டு இராசீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
அதனையொட்டி தமிழீழ ஆதரவு இயக்கங்களும், ஈழ ஆதரவாளர்களும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.
அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தவர் செயலலிதா.
அவர் இராசீவ் படுகொலையைச் சொல்லி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியிருந்தார்.
அவர் தில்லி மீதான விசுவாசத்தை தமது ஒடுக்குமுறை மூலம் காட்டிக் கொண்டிருந்தார்.
அன்றைக்கு எந்தக் கட்சியும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேச மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
அப்போது, மருத்துவர் இராமதாசு "ஏழாண்டுகள் என்ன, எழுபதாண்டுகள் ஆனாலும் புலிகளை ஆதரிப்பேன்; என்னை கைது செய்யுங்கள்!" என்று பேசினார்.
இத்தகையப் பேச்சு தமிழீழ ஆதரவாளர்களுக்கு முழு உற்சாகத்தை தந்தது.
1992இல் சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு தமிழர் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தி "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" ஒன்றை சென்னையில் பா.ம.க. நடத்தியது.
அப்போது மதுரையில் பா.ம.க. வில் பொறுப்பு வகித்த அண்ணன் வேலுச்சாமி தலைமையில் நான் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்களோடு தனி வண்டியில் சென்னைக்கு கிளம்பினோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படங்கள் ஆயிரக்கணக்கில் அச்சடித்து வண்டியில் வைத்திருந்தோம்.
சென்னையை நெருங்கும் வேளையில், பல்வேறு திசைகளிலிருந்து பா.ம.க. மாநாட்டிற்கு வண்டிகள் அணி வகுத்து வந்து கொண்டிருந்தன.
பெரும்பாலான வண்டிகளை நிறுத்தி பிரபாகரன் படத்தை கண்ணாடிகளில் ஒட்டி விட்டோம். வந்திருந்த தோழர்கள் பிரபாகரன் படத்தை சட்டையில் குத்திக் கொண்டனர்.
படத்தை விரும்பிக் கேட்டவர்களுக்கு சட்டையில் குத்தியும் விட்டனர்.
ஒரு சில தோழர்கள் கைக்குட்டையை நெற்றியில் கட்டி அதன் மீது பிரபாகரன் படத்தை அணிந்திருந்தனர் (படத்தின் இடது புறத்தில் இரண்டாவதாக நான் உள்ளேன்).
தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு வி.பி.சிங், இராம் விலாசு பசுவான், உள்ளிட்ட பல்வேறு வட நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மாநாட்டுப் பேரணி தொடங்கும் போது , பிரபாகரன் கையில் துப்பாக்கி ஏந்திய முழு உருவ துணிப் பதாகை ஒரு தோழர் மூலம் கையில் கிடைத்தது.
ஒரு தேனீர் கடையில் நாங்கள் நின்று கொண்டிருந்த போது ஊன்றப்பட்ட நிலையில் இரண்டு கம்புகள் காட்சி அளித்தன.
உடனடியாக தோழர்கள் கம்புகளை உருவி, பிரபாகரன் பதாகையை கம்புகளுக்கு நடுவே கட்டி உயரமாகத் தூக்கினர்.
எல்லோரின் கண்களிலும் பிரபாகரன் ஒளிவிட்டார்.
ஊடகத்தினர் மோப்பம் பிடித்து , பிரபாகரனை சுற்றி வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
பேரணி முழுவதும் பிரபாகரன் படம் பற்றியே பேச்சு.
பிரபாகரன் வாழ்க! தமிழீழம் வெல்க! என்ற முழக்கம் விண்ணை எட்டியது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பிரபாகரன் பதாகைப் படமே அனைவரையும் ஈர்த்தது.
மறுநாள் செய்தி ஊடகங்களில், "பயங்கரவாத புலிகள் மாநாடு" என்று தலைப்பு எழுத்துகளில் வெளியிடப்பட்டன.
காங்கிரசு கட்சியினர் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள் பலர் இதனை சாக்காக வைத்து "பா.ம.க.வை தடை செய்ய வேண்டும்" என்று கூச்சல் எழுப்பினர்.
இந்தியா டுடே ஏடு "புலிகளின் முதுகில்" என்று தலைப்பிட்டு விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தை வெளிக் காட்டிக் கொண்டது.
புலி வேடம் போட்டு கலை நிகழ்ச்சி நடத்தியவர்களைக் கூட "புலி ஆதரவாளர்கள்" என்று கூச்சலிட்டது.
மாநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்ததற்காக மருத்துவர் இராம்தாசு, பண்ருட்டி இராமச்சந்திரன், தோழர் தியாகு, பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அன்றைக்கு பிரபாகரன் படத்தை கொண்டு சென்றதன் மூலம் இந்திய- தமிழக அரசுகளின் ஒடுக்குமுறையின் இறுக்கம் களையப்பட்டது உண்மை!
அச்சம் உடைக்கப்பட்டது உண்மை!
அன்று ஒரு படம் ஏந்தினோம்!
இன்று ஆயிரமாயிரம் படங்களை ஏந்தி நடந்திட எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும்!
அச்சமூட்டுபவரை அடி பணிய வைப்பதே தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிமுறையாகும்!
பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடும் இன்றைய இளைய தலைமுறையினரின் முதல் தாரக மந்திரமாக இது இருக்கட்டும்!
நன்றி: கதிர் நிலவன்
Wednesday, 13 December 2017
என்றுமில்லாத கொள்ளை
என்றுமில்லாத கொள்ளை
2011ல் தமிழகத்தின் கடன் ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி.
(தலைக்கு ஏறத்தாழ ரூ.14000)
2017ல் தமிழகத்தின் கடன் மூன்று லட்சத்து பதினான்காயிரம் கோடி.
(தலைக்கு ஏறத்தாழ ரூ40,000)
அதாவது வெறும் 6 ஆண்டுகளில் மூன்று மடங்கு கடனாளி ஆபியுள்ளோம்.
தற்போது தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை 40,000 ரூபாய் கடனாளியாகப் பிறக்கிறது.
(அண்ணன் அன்புமணி அவர்களின் உரையிலிருந்து)
Wednesday, 1 November 2017
நான் நாடானே கெடயாதுடா!
நிறுத்துங்கடா அப்ரசன்டிகளா >.<
நான் நாடானே கெடயாதுடா!
அந்த நாடார் இந்த நாடாச்சினு அவுரு இவுரு ஒரே நட்பு கோரிக்கையா கொடுத்தே கொல்றானுக :/
நானே 'ஆர்வக்கோளாறு வன்னியனுகள' அடக்கி பா.ம.க வைக் காப்பாத்த படாதபாடு பட்டுட்டு இருக்கேன் :(
இராமதாசு ஐயா மொழிவாரி தமிழ்நாடு வேணும்னும்
தமிழ்நாட்ட தமிழன் ஆளணும்னும் ட்வீட் போட்டுட்டு இருக்காரு.
அன்புமணி பச்சையா முழு தமிழ்நாடு வரைபடத்த போட்டுகிட்டு மாற்றம் முன்னேற்றம்னும்
காஷ்மீர் மாதிரி வெளியாள் நிலம் வாங்கமுடியாத 371 சிறப்பு சட்டம் தமிழ்நாட்டுக்கு வேணும்னும் பேசிகிட்டு இருக்குறாரு.
பா.ம.க-வச் சோலி முடிக்கணும்னே அது எப்பவோ கைவிட்டுட்ட வடதமிழ்நாடு கோரிக்கைய இப்ப சம்பந்தமே இல்லாம சொல்லிகிட்டு சாதிப்பேரோட மத்த தெற்கத்தி சாதிகளை வம்புக்கிழுத்து சில மூதேவிகள் முகநூல்ல கம்புசுத்திகிட்டு இருக்குதுக.
அப்பிரசண்டி வன்னியனுக சிலபேரு 'மகன் செத்தாலும் மருமவா தாலியறுத்தா போதும்'னு நெனைக்கிற மாமியார் மாதிரி அவனுகளுக்கு முட்டுகுடுக்கறானுக.
இதுல பள்ளர் சாதி வெறியனுக வேற தென்தமிழ்நாடுனு அவனுக பக்கம் நிக்கிறானுக.
அடேய்! நீதானே வடக்க இருந்து குர்மி சாதிக்காரன கூட்டிவந்து அகில இந்திய குடும்பர் மாநாடு போட்டவன்?
கேட்டா அம்பேத்கர் சொல்லிட்டாராம்.
இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையாம்.
டேய் இந்தியாவும் அம்பேத்கரும் தேசிய இனங்களுக்கு எதிரானவனுகதானே?!
ஆ..ஊ..ன்னா அம்பேத்கர் பின்னாடி ஒண்டுறீங்கனுதானே தனி பதிவு போட்டு அந்த ஆள தோலுரிச்சேன்?!
ஒரு மாநிலத்துக்கு ரெண்டு மாநிலம் இருந்தா பலம் அதிகமாம்.
ஒரு ரூபாய கொடுத்துட்டு ரெண்டு 50பைசா வாங்கினா மதிப்பு கூடிருமா?!
இதெல்லாம் புரியாம 'நாடாருக்கு சப்போர்ட் பண்றான் இவன் நம்ம சாதிதான்'னு சொந்த சாதியையும் இனத்தையும் காவுகொடுத்தே பெரிய ஆளா ஆன காமராசர் படத்த வச்சிகிட்டு பிரண்டு ரிக்வெஸ்ட்டா கொடுத்து உயிர வாங்குறானுக நாடார் சாதிவெறியனுக
ச்சை
சில சமயம் இவனுகளுக்கா பாடா படுறோம்னு தோணும்
ஆனா நம்ம அப்பனும் தாத்தணும் பாடுபடாம ஹாயா இருந்ததாலதான் இப்டி ஆயிட்டானுகனு நெனைக்கும்போது மனசு மறுபடி திடமாயிடும்.
எங்கடா போயிருவீங்க!?
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில எல்லா சாதிக்காரனும் தமிழனா தமிழ்தேசியம் பக்கம் வந்துதான் ஆகணும்.
Monday, 28 August 2017
புலிகள் ஆதரவு! தனித் தமிழ்நாடு! ராஜீவ் கொலைக்குப் பாராட்டு! - 1992ல் இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்
உயர்திரு. இராமதாசு அவர்கள்,
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்
புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்
தனித் தமிழ்நாடு பற்றியும்
இனப்பற்றுடன் வெளிப்படையாகப் பேசியபோது அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை
ஏடு: செங்கோல்
நாள்: 20.09.1992
தலைப்பு:-
ராஜீவைக் கொன்றவன் என் தோழன்
தமிழகப் பிரிவினையும் கோருவோம்
பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்
நன்றி: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (முகநூல்)
Saturday, 8 April 2017
மருத்துவர் இராமதாசுக்கு நாடார் சங்கங்கள் பாராட்டு விழா
மருத்துவர் இராமதாசுக்கு நாடார் சங்கங்கள் பாராட்டு விழா
சி.பி.எஸ்.இ 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்திய கருத்துகளை நீக்குவதற்கு முதல் குரல் எழுப்பிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு
நாடார் சங்கங்கள் சார்பில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவுக்கு நாடார் பேரவை மாநில இளைஞரணி தலைவர் ஜாக்குவார் தங்கம் தலைமை தாங்கினார்.
"நாடார் சமுதாயம் தமிழகத்தில், இந்தியாவில் பெருமைக்குரிய சமுதாயம்.
அவர்கள் இல்லாத துறையே இல்லை.
அவர்களுடைய மூலதனம் தமிழகத்தில் உழைப்பை பற்றி சொல்லி கொடுத்தவர்கள் நாடார் சமுதாயத்தினர்.
காலை தொடங்கி இரவு 12 மணி வரை உழைக்கிறார்கள்.
இந்த சமுதாயத்தை பார்த்து மற்ற சமுதாய மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாடார் சமுதாயத்தை பற்றி எழுதாமல் வரலாறு இருக்க முடியாது.
அரசியல், சமூகம், ஆன்மிகம், கல்வி, வணிகம் என எல்லாவற்றிலும் முன்னேறி இருக்கிறார்கள்.
தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு நாடார் சமுதாயத்தினர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு 13 லட்சம் அரசு ஊழியர்கள் இருந்தார்கள்.
தற்போது 10 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
ஆனால் நாடார் சமுதாயத்தினர் 50 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள்.
இதழியல் துறையில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்
‘தினத்தந்தி’, ‘மாலை முரசு’, ‘ராணி’ போன்ற பத்திரிகைகளை தொடங்கினார்.
இதழியல் துறையை இவர்களால் தான் நடத்த முடியும் என்று இல்லாமல் நாங்கள் நாடார்கள் எங்களாலும் முடியும் என்று வெற்றிகரமாக இன்றளவும் நடத்தி வருகிறார்கள்.
எந்த சமுதாயமாக இருந்தாலும் எந்த பாகுபாடும் இல்லாமல் நான் போராடுவேன்.
தமிழகத்தை மாற்ற வேண்டும்.
முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தோடு பாடுபடுவோம்."
என்று டாக்டர் இராமதாஸ் பேசினார்.
ஜனவரி 06, 2017 16:05 (மாலை மலர்)
Monday, 3 April 2017
பாதி சாராயக்கடைகளை மூடிய சாதனையாளர் திரு. கே. பாலு
தமிழகத்தின் 6233 டாஸ்மாக் ல் (நெடுஞ்சாலைகளில் உள்ள) 3211 கடைகள் மூடப்படவுள்ளன.
2012 ல் வழக்கு தொடுத்து எத்தனையோ பெரிய தடங்கள் வந்தும் நேர்மையாக உறுதியாக நின்று இதை சாதித்துக்காட்டிய 'சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை' யின் தலைவர் திரு.கே. பாலு அவர்களையும் அவர் சார்ந்த 'பாட்டாளி மக்கள் கட்சி' யையும் தமிழக மக்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்.
தமிழகத்தில் தோராயமாக ஒருகோடி பேர் தினமும் குடிக்கின்றனர்.
தமிழினத்தின் முதன்மையான பிரச்சனையை ஓரளவு வெற்றிகண்ட நாள் இது.
இதற்காகப் போராடிய மாணவி நந்தினி, உயிரையே கொடுத்த ஐயா சசி பெருமாள் ஆகியோரை இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டும்.
Wednesday, 28 September 2016
பசுமைத் தாயகம் காவிரிக்கு குரல்கொடுக்குமா?
ஐயா இராமதாசு அவர்கள்,
தமது "பசுமைத் தாயகம்" மூலம் ஈழம் தொடர்பான முன்னெடுப்புகளை ஐ.நாவில் எடுப்பது போல
காவிரி பிரச்சனையை ஐ.நாவுக்கு கொண்டுசெல்ல முடியாதா?!
(ஜனநாயக வழியில் தமிழருக்கு நியாயம் கிடைக்க 99% வாய்ப்பில்லை என்பது வேறு விடயம்)
Sunday, 27 March 2016
பா.ம.க - சில மறைக்கப்பட்ட தகவல்கள்
பா.ம.க - சில மறைக்கப்பட்ட தகவல்கள்
*துணைராணுவம் வந்து 21 பேரைச் சுட்டுக்கொல்லும் அளவுக்கு தீவிரமாக நடந்த இடவொதுக்கீடு போராட்டம்
* பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே சிறை என்ற நிலையில் 1992 ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு.
*பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் ஜான் பாண்டியனை (பள்ளர்) வைத்து அழகு பார்த்தார் இராமதாஸ்.
* பசுபதி பாண்டியனுக்கு(பள்ளர்) பொருளாளர் பதவியை கொடுத்தார் இராமதாஸ் ஐயா.
*1998 ஆம் ஆண்டு பா.ம.க விற்கு கிடைத்த நடுவண் அமைச்சர் பதவியை எழில்மலை (பறையர்) அவர்களுக்கு கொடுத்து பட்டியல் சாதி மக்களை (SC/ST) பெருமை படுத்தினார் இராமதாஸ் ஐயா.
பொன்னுசாமி என்ற பறையரையும் அமைச்சராக்கியுள்ளார்.
*முருகவேல்ராஜன், சிவகாமி வின்சென்ட், கிருஷ்ணன், போன்ற பட்டியல் சாதியினரை
MLA ஆக்கியுள்ளார் இராமதாஸ் ஐயா.
*தென் மாவட்டங்களில் ஒரேநாளில் 9 அம்பேத்கர் சிலைகள் வைத்தவர் இராமதாஸ் ஐயா.
*கொடியன்குளம் (பள்ளர் பெரும்பான்மை) ஊரில் 1995 ல் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை வன்முறைச் சம்பவம் நடந்தபோது,
அரசு தடையை மீறி பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூறி ஆயிரக்கணக்கான பா.ம.க வினருடன் சென்று கவர்னரிடம் கொடியன்குளம் பிரச்னையை தீர்க்க மனு கொடுத்தார் ராமதாஸ் ஐயா.
இழப்பீடும் தரச்செய்தார்.
*வடிவேல் இராவணன் (பள்ளர்) அவர்களுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளார்கள்.
பொதுச்செயலாளர் பதவி பட்டியல் சாதியினருக்கே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
*கவனிப்பின்றி இருந்த இமானுவேல் சேகரன் (பள்ளர்) கல்லறையை தூய்மை படுத்தி 47 லட்சம் செலவு செய்து மணிமண்டபம் கட்டினார் ராமதாஸ் ஐயா
*தமிழகத்தில் மீனவர் மக்கள் திருவள்ளுர் முதல் கன்னியாகுமரி வரை இருந்தாலும்,
அவர்களில் ஒருவர் கூட M.P ஆனதில்லை.
முதல் முறையாக பா.ம.க தான் மீனவர் சமுகத்தை சேர்ந்த பேராசிரியர் ராமதாஸ் என்பவரை புதுச்சேரியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்தார் ராமதாசு ஐயா
*அருந்ததியர் (தெலுங்கு சக்கிலியர்) சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியிலும் மாவட்ட செயலாளர் கிடையாது,
நாமக்கல் மாவட்ட செயலாளராய் முதன்முதலாக ஒரு அருந்ததியரை நியமித்தார் இராமதாசு ஐயா
*M.P தேர்தலில் அருந்ததியினரை வேட்பாளாராக கூட எந்த கட்சியும் நிறுத்தியது இல்லை.
இராமதாஸ் ஐயா முதன்முதலாக அச்சமூகத்து பெண் ஒருவரை ராசிபுரம் தொகுதியில் வேட்பாளாராய் நிறத்தினார்.
*பல சாதிகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
#பாமக வின் விழுப்புரம் மாவட்டத் தலைமை வானூர் சங்கர் (பறையர்)
# பாமக வின் பொருளாளர் அக்பர் அலி சையத்
#திருப்பூர் மாவட்ட செயலாளர் ஒரு அருந்ததியர் (சக்கிலியர்)
#குடந்தை நால்ரோடு செயலாளர் பன்னீர் (பறையர்)
#மாநில இளைஞர் சங்க துணை பொது செயலாளர் விடியல் ஜகந்நாதன் உப்பிலிய நாயக்கர்.
#ஈரோடு மாநில துணை தலைவர் வடிவேல் ராமன் (அருந்ததியர்)
#தெலுங்கு கன்னட சாதிகள் உட்பட பலரும் மாவட்டசெயலாளராக உள்ளனர்
*AIMS மருத்துவமனையில் SC/ST இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி இராமதாசு அவர்கள்.
*சென்னையில் உள்ள சித்தமருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் பண்டிதர் அயோத்தி தாசர் (பறையர்) சிலையை திறந்தார் அன்புமணி.
இதற்காக பட்டியலின தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை அழைத்துவந்தார் அன்புமணி இராமதாசு.
*பசுமைதாயகம் அமைப்பு சார்பில் ஐ.நா மன்றத்தில் அன்புமனி அவர்கள் கலந்துகொண்டு இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என ஆணித்தரமாக வாதிட்டார்.
*தொலைக்காட்சி மூலம் செய்து வரும் தமிழ்த் தொண்டு
*பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வு இரத்து போராட்டம்
* இலாட்டரி சீட்டு ஒழிப்பு போராட்டம்
* மது ஒழிப்பு போராட்டம்
* சமச்சீர் கல்விக்கான போராட்டம்
* தமிழகம் முழுவதும் அகல இரயில்பாதை கொண்டுவரப் போராட்டம்
* மத்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு
*தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் இடவொதுக்கீடு கொண்டுவந்தது
*அரியலூரில் இரட்டைக்குவளை முறை ஒழிப்பு
*70 இருளர் இன மக்கள் குடும்பங்பளுக்கு போராடி வீட்டுமனை பட்டா வாங்கி கொடுத்தது
* 108 அவசர ஊர்தி சேவை திட்டம் அமலாக்கம்
* பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைச்சட்டம் ஏற்படுத்தியது
* புகை, மது போன்ற பொருட்களில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்தது
* தமிழக்த்தில் 2000 அரசு மதுபான கடைகளை மூட நீதிமன்றம் வரை போராடி வென்றது.
*இசுலாமியருக்காக கோவை கோட்டை மேடு செக் போஸ்ட் எதிர்ப்பு போராட்டம்.
*இஸ்லாமியர்களுக்கு எதிரான.தடா சட்டத்தை எதிர்த்து போராடி சிறை சென்றது.
இஸ்லாமியர்கள் கூட்டம் நடத்த பரவலாக தடை விதிக்கப்பட்ட சூழலில் தடையை மீறி கூட்டங்கள் நடத்தி இஸ்லாமியர்கள் மீதான தடாவை விலக்கிக்கொள்ள வைத்தது.
*குறிஞ்சாகுளம் காந்தாரி அம்மன் கோயில் (பறையர்) போராட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்தது,
அப்போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமியின் (பள்ளர்) மீது தாக்குதல் நடந்த பொழுது சம்பவ இடத்திற்கே சென்று போராட்டத்தை வீரியமாக்கினார் இராமதாஸ் ஐயா.
*குடிதாங்கி என்ற ஊரில் பறையர் பிணத்தை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்த வன்னியரை அடக்கி தாமே அதை எடுத்துச் சென்றார் இராமதாசு ஐயா.
(தமிழ்க் குடிதாங்கி என்ற பட்டம் திருமாவளவனால் (பறையர்) வழங்கப்பட்டது)
*வீரப்பனார் (படையாச்சி) பற்றிய தொடர்
*காவிரி கலவரத்தின்போது துணிச்சலான அறிக்கை
இதுபோக
ரஜினியை (மராத்தியர்) கதறவிட்டது, கருணாநிதியைக் (தெலுங்கர்) கதறவிட்டது, ஸ்டாலினை (தெலுங்கர்) தெறிக்கவிட்டது என மேலும் பல
