Thursday 26 December 2019

பாலக்காடு தமிழர்களுக்கு மலையாளி செய்யும் அநீதி

பாலக்காடு தமிழர்களுக்கு மலையாளி செய்யும் அநீதி

 பாலக்காட்டில் டிசம்பா் 27, 28இல் தமிழ் மொழிச் சிறுபான்மை ஆணையம் விசாரணை

 பாலக்காட்டில் தமிழ் மொழிச் சிறுபான்மை ஆணைய விசாரணை வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
 இது குறித்து
கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்
மாநிலச் செயலாளா் மா.பேச்சிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதத்தைச் சாா்ந்த தமிழ் பேசும் மக்கள் மற்றும் தமிழ் மரபினா்கள் என 10 லட்சம் போ் வாழ்கின்றனா்.
 இதில், ஹிந்துக்களில் பல ஜாதியினா் உள்ளனா்.
 தமிழக எல்லையோர கேரள மாநிலத்தில் பாலக்காடு, மூணாறு, குமுளி ,தேவிகுளம், திருவனந்தபுரத்தில் வாழும் தமிழா்கள் யாருமே கேரள
பிற்படுத்தப்பட்டோா் மற்றும் தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்கப்படவில்லை.
 இங்குள்ள தமிழா்களுக்கு ஜாதி சான்றிதழ் இன்றும் மறுக்கப்படுகிறது.
 முற்போக்கு ஜாதியனரான பிராமணா், நாயா், நம்பூதிரி இன மக்களுக்கு இணையாக இங்குள்ள தமிழா்கள் கருதப்படுகிறாா்கள்.
 அட்டப்பாடித் தமிழா்களுக்கு உரிமையுடைய நிலங்களுக்கு அரசு பட்டா வழங்குவதில்லை.
 கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, கேரளத் தமிழா்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்குத் தீா்வுகாண வேண்டும் என்று கேரள முதல்வா் பிணராயி விஜயனிடம் முறையிட்டது.
 இதையடுத்து, அம்மாநில முதல்வா் இது தொடா்பாக கேரளத்தில் தமிழா்கள் வாழும் திருவனந்தபுரம், வட்டியூா்காவு, நேமம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம், பீா்மேடு, உடும்பன் சோலை, பாலக்காடு, சித்தூா், நெம்மாறை பகுதிகளை உள்ளட்டக்கிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களை அழைத்துப் பேசினாா்.
 இதைத் தொடா்ந்து கேரளத் தமிழா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண டாக்டா் நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
 இந்த ஆணையத்தின் விசாரணை பாலக்காடு குடிமக்கள் நிலையத்தில் (சிவில் ஸ்டே ஷன்) ஆட்சியா் கருத்தரங்கு அரங்கில் டிசம்பா் 27, 28 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற உள்ளது.
  எனவே, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தமிழா்கள் தங்கள் கோரிக்கைகளை ஆணையத்திடம் அளிக்குமாறு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
 மேலும் தகவல்களுக்கு 9388197671 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி
25.12.2019

பதிவர்: வெ.பார்கவன் தமிழன்





Wednesday 18 December 2019

ஆந்திரா கோவில்களில் தமிழ்






















ஆந்திரா கோவில்களில் தமிழ்

 "திருச்சிற்றம்பல மேடை மீது ஏறி பாடக் கூடாது" என்று தீட்சிதர்கள் கூறியதை நியாயப்படி சாதிப் பிரச்சனை ஆக்காமல்
 அப்படியே திசைதிருப்பி "தமிழை நீசபாசை என்றுவிட்டான் பார்ப்பான்" என்று மொழிப் பிரச்சனை ஆக்கி பொய்ப் பிரச்சாரம் செய்தே அரசியல் செய்தனர் வந்தேறிகள்.

 இதன்மூலம் தினமும் தமிழில் ஓதும் தில்லை அந்தணர்களான தீட்சிதர்களை தமிழுக்கு எதிரானவர்களாக காட்டிவிட்டனர்.

 ஆனால்
 தமிழர் பகுதியாக இருந்து ஆந்திராவுக்கு போய்விட்ட எல்லை மாவட்டங்களில்
 தமிழர்களால் கட்டப்பட்டு தெலுங்கர் கைக்கு போய் முழுக்க சமஸ்கிருத மயமாகிவிட்ட வைணவக் கோவில்களில்
 இன்றும் விடாமல் தமிழில் ஓதிவரும் பார்ப்பனர் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?


 திருப்பதி உட்பட
அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வர கோவில்,
 நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவில்,
 தாலப்பாக்கம் சென்னகேசவ சுவாமி கோவில்,
 தேவுணிகடப்பா சித்தீஸ்வர கோவில் மற்றும் லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஜம்மலமகுடு வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 பித்தாபுரம் பத்மாவதி சமேத வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஆகிய 10 கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாதம் ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் எழுதிய தமிழ்ப் பாசுரங்கள் ஓதப்படும்.

 தெலுங்கர் வருகைக்கு முன் தாய்லாந்து சென்ற பார்ப்பனர்கள் இன்றுவரை தமிழில்தான் ஓதுகின்றனர்.

 தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினப் பார்ப்பனர் தமிழுக்கு எதிரி இல்லை!

 படம் உதவி: Karthikeyan Rathinavelu

Tuesday 10 December 2019

தமிழரில் என்ன தனியே போர்க்குடி?!

தமிழரில் என்ன தனியே போர்க்குடி?!

இந்திய ராணுவம்,
பெருமளவு ராணுவ தளவாடங்களுடன்,
ஒரு லட்சம் போர்வீரர்களுடன் ஈழத்தில் இறங்கி,
  3 ஆண்டுகள் போராடியும்
புலிகளை வெல்லமுடியாத காரணம் என்ன என்று கேட்டால் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறுவர்.

ஸ்டீபன் கோஹென் (Dr. Stephen P. Cohen) என்கிற புகழ்பெற்ற இராணுவ ஆய்வாளர் இந்திய ராணுவத்தை ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதன் தலைப்பு,
Indian Army : Its Contribution to the Development of a Nation
என்பதாகும்.

அதில்,
"தமிழீழ விடுதலைப் புலிகள் போரியல் கல்வி கற்றவர்களை பெருமளவு கொண்டிருந்தது.
இதுவே இந்திய ராணுவம் இலங்கையில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம்"
என்று கூறியுள்ளார்.

என்றால் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் புலிகள் போன்ற போரியல் கற்ற யாருமே இல்லையா?!

ஏனில்லை?
இருக்கிறார்கள்.
அதையும் ஸ்டீபன் கூறியுள்ளார்.

அது மதராஸ் ரெஜிமென்ட்.

(இராணுவ ஆய்வாளர் தராகி சிவராம் அவர்கள் தலைவரின் பிறந்தநாள் அன்று அளித்த பேட்டியிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்)

தமிழர் வீரம் என்றவுடன் புறநானூறு தொடங்கி பூலித்தேவன்  வரை மட்டுமே பேசுகிறோம்.

ஏதோ அதன்பிறகு நாம் கோழைகளாகி விட்டதுபோல!

Sunday 1 December 2019

15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்

15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்

2004 லேயே சீமான் அண்ணன் புலிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

புலிகளுக்காக அவர் அளித்த பேட்டியை இங்கே இணைத்துள்ளேன்.

ஆம்.

தமிழினத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு
புலிகள் நடத்திவந்த "நிதர்சனம்" தொலைக்காட்சி 2 மணிநேரம் நீளமுள்ள ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டது.
(அதன் தலைப்பு "தலைநிமிர்வு" என்பது.
இணையத்தில் அது Prabhakaran undying symbol of tamil resistance என்ற பெயரில் இருந்தது.
தற்போது நீக்கப்பட்டுவிட்டது.
ஆனால் என்னிடம் உள்ளது.)

இந்த ஆவணப் படம் பல அரிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம்
ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றையும்
தலைவரது வாழ்க்கை வரலாற்றையும்
எடுத்துரைக்கிறது.

அப்போது புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து போர் ஓய்ந்திருந்த காலம்.

புலிகள் இலங்கை அரசுக்கு சமமான பலத்துடன் உலக நாடுகள் ஏறத்தாழ அங்கீகரித்துவிட்ட ஒரு அரசாங்கத்தை நடத்தி வந்தனர்.

அப்போது வெளியிடப்பட்ட இந்த ஆவணப் படத்தில் தலைவரை வாழ்த்தி 2 சிங்களவர் உட்பட 36 பேர் பேசியிருக்கின்றனர்.
அதில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அண்ணன் சீமானும் அதில் பேசியிருக்கிறார்.

இந்த 13 பேரில் தலைவரை ஈழத்திற்கு சென்று நேரடியாகச் சந்தித்தோர் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகிய நால்வர் மட்டுமே!

அதில் பேட்டி அளித்தோர் முழுப் பட்டியல் வருமாறு

1. மறவன்புலவு திரு.சச்சிதானந்தம் (தமிழகம்)

2. திருமதி. தாமரைச் செல்வி
எழுத்தாளர்

3. திரு. மருசலீன்
மாவீரர் லெப்.கேணல் விக்டரின் தந்தை

4. ஜனாப். சலீம்
பத்திரிக்கையாளர்

5. திரு. தர்மலிங்கம்
மூத்த பத்திரிக்கையாளர்

6. திரு. காசி ஆனந்தன்
உணர்ச்சிக் கவிஞர்

7. திரு. புகழேந்தி
கவிஞர் (தமிழகம்)

8. திரு.வேணுகோபால்
ஆசிரியர்

9. திரு.வை.கோபாலசாமி
பொதுச் செயலாளர் - ம.தி.மு.க (தமிழகம்)

10. திரு.முல்லைமணி
எழுத்தாளர்

11. திரு.சதாசிவம்
மாவீரர் லெப். அருச்சுனாவின் தந்தை

12. இன்குலாப்
கவிஞர் (தமிழகம்)

13. திரு.சீமான்
திரைப்பட இயக்குனர் (தமிழகம்)

14. வைத்தியர். ஜெயகுலராசா
வைத்திய அதிகாரி

15.திரு.கனகரவி
ஊடகவியலாளர்

16. திருமதி. மனோன்மணி சண்முகதாஸ்
விரிவுரையாளர் - யாழ் பல்கலை

17. திரு. சூரியதீபன்
(தமிழகம்)

18. மோகனதாஸ்
துணைவேந்தர் - யாழ் பல்கலை

19. திருமதி. யோகம்மா

20. திரு. சித்தி.அமரசிங்கம்
எழுத்தாளர்

21. திரு. அறிவுமதி
கவிஞர் (தமிழகம்)

22. ஜனாப். அப்துல் சயான்

23. திரு. டி.சிவராம்
இராணுவ ஆய்வாளர்

24. திரு. சுப. வீரபாண்டியன்
தமிழ் தமிழர் தேசிய இயக்கம் (தமிழகம்)

25. திரு. கலாநிதி விக்கிரபாகு குணரட்ண

26. திரு. தணிகாசலம்
கவிஞர்

27. ஆண்டகை. இராயப்புஜோசப்
ஆயர். மன்னார்

28. பாஷண அபேய குணவர்த்தன
பத்திரிக்கை ஆசிரியர்

29. திரு.தியாகு
தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)

30. திரு. திலகவதி
எழுத்தாளர்

31. திரு. சந்திரசேகரன்

32.திரு. மனோ கணேசன்

33. திரு. பழ.நெடுமாறன்
தலைவர் - தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)

34. திரு. ராமதாஸ்
தலைவர். பா.ம.க (தமிழகம்)

35. திரு. திருமாவளவன்
தலைவர் வி.சி. (தமிழகம்)

36. திரு. மணியரசன்
தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி (தமிழகம்)

இதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து 2008 இல் புலிகள் திரைப்படம் எடுத்த போது சீமான் அங்கு சென்றார்.
அப்போது தலைவரையும் சந்தித்தார்.

புலிகளின் முப்படையில் ஒன்றான கடற்படையின் தலைவர் திரு. சூசை அவர்கள் கடைசி குரல்பதிவில் "சீமானை முன்னெடுக்க சொல்லு" என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு இப்போது ஏனென்றால்
சீமான் பற்றி புலிகளுக்கு எதுவுமே தெரியாது என்றும்
  அவர் ஏதோ கேமரா பிடிக்க போனபோது தற்செயலாக தலைவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது போலவும் பதிவுகள் வருகின்றன.

சீமான் அண்ணனை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாமல்
வெறும் நக்கல் நையாண்டி செய்தே வீழ்த்திவிடலாம் என்கிற எண்ணத்தில் சிலர் அலைகின்றனர்.

சீமான் மீது வைக்கப்படும் உருப்படியான விமர்சனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் மற்றபடி எல்லாமே நக்கல் நையாண்டி பதிவுகள்தான்.

அவர்களுக்கு உரைக்கவே இந்த பதிவு.

சீமான் புலிகளின் ஆள்தான்!

https://m.facebook.com/story.php?story_fbid=2024288354341474&id=100002809860739