Showing posts with label கோவில். Show all posts
Showing posts with label கோவில். Show all posts

Monday, 12 May 2025

முகம் சிதைந்த கண்ணகி சிலை


முகம் சிதைந்த கண்ணகி சிலை
20.12.2015

எச்சரிக்கை:
இப்பதிவைப் படிப்போருக்கு இனவெறி வர வாய்ப்புள்ளது.

சமண மதத்தைச் சேர்ந்த கண்ணகி ,
சோழநாட்டில் பிறந்து
பாண்டிநாட்டில் வழக்காடி
சேரநாட்டில் தெய்வமானாள்.

தமிழ் மூவேந்தர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்கள் என்றும் தமிழர் இனவுணர்வு இல்லாமல் பாண்டிநாட்டான்,சோழநாட்டான், சேரநாட்டான் என்ற நாட்டு உணர்வுடன் இருந்தனர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

தமிழர்கள் என்றும் தமிழர்களாகத்தான் இருந்தனர் என்பதற்கான சான்றுதான் மூவேந்தரும் சமமாகப் போற்றப்பட்டு எழுதப்பட்ட சிலப்பதிகாரமும் இன்றும் தொடரும் கண்ணகி வழிபாடும்.

என்றால் ஈழம் விடுபடுகிறதே?
இல்லை, ஈழத்தான் மட்டும் சளைத்தவனா?
இன்று தமிழகத்தை விட அதிகமான கண்ணகிகோவில்கள் ஈழத்திலே உள்ளன.

கண்டியில் உள்ள புத்தர்கோயிலில் பத்தினி வழிபாடு பத்தினித்தெய்யோ என்ற பெயரில் திருவிழாவாகச் சிங்களவரால்  கொண்டாடப்பட்டு வருகிறது.
இது பத்தினித் தெய்வம் வழிபாட்டின் திரிபேயாகும்.
(இது கண்ணகி வழிபாடு கிடையாது).

சேரன் செங்குட்டுவன் இமயம் சென்று கல் எடுத்துவந்து கண்ணகிக்குக் கோயில் எழுப்பியதும் தமிழ் மன்னர்கள் அனைவரும் அப்பத்தினிக்குக் கோவில்கள் எழுப்பினர்.
ஈழத்திலும் அதேகாலகட்டத்தில் கண்ணகிக்கோவில்கள் கட்டப்பட்டன.
ஆக கண்ணகி வழிபாடு
மதம், நாடு தாண்டிய தமிழ் இன உணர்ச்சியின் அடையாளம் ஆகும்.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானதும் சேரன் கட்டியதுமான அந்தக் கோவில் இன்று மங்கலதேவி கண்ணகிக் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
மங்கல தேவி என்பது யார் என்ற கேள்விக்கு தமிழ்ப்பார்ப்பனர் உ.வே.சா வின் விளக்கமானது,
கண்ணகிக்கு வஞ்சிக்காண்டம் வரந்தரு காதையில்:
"மங்கலமடந்தை கோட்டத் தாங்கண்
வெங்கோட்டுயர் வரைச் சேனுயர் சிலம்பில்"
என்று குறிப்பு உள்ளது. மங்கல மடந்தை என்பதற்குப் பொருள் மங்கல தேவி என்றும் அது கண்ணகியைக்குறிக்கும் சொல்லாகும்
என்கிறார் தமிழ்த்தாத்தா.

தமிழ் நிலத்தை கிட்டத்தட்ட 1500ச.கி.மீ ஆக்கிரமித்து இன்று 38,863சகீமி பரப்பளவுகொண்ட கேரள மாநிலம் இன்னமும் மண்வெறி பிடித்து அலைகிறது.

தமிழக எல்லைக்குள் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் 4380 அடி உயர சிகரத்தில் உள்ளது கண்ணகிகோயில்.
1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை.
அதன்பிறகு சிறிய சிறிய பிரச்சனைகளைச் செய்யத்தொடங்கியது.

பிரச்சனையைத் தீர்க்க 1976ல் தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும் கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப்பகுதியில் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதற்கிடையில், கூடலூரில் சில தமிழார்வலர்கள் 'மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு'  என்று ஒன்றைத் தொடங்கி கோவிலைப் புதுப்பிக்க திட்டமிட்டனர்.

1976ல் இந்த சீரமைப்புக்குழு,
அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது.
கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதியில் கூடலூர் பனியங்குழி வழியாக 6 கி.மீ சாலையை போடுவதற்காக ரூ.20 லட்சம்நிதி ஒதுக்கப்பட்டது.
இதிலும் மலையாள அரசு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டது.
இந்தநிலையில் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது.
இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.

இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 1976ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக மலையாள அரசு 16 கி.மீ பாதை ஒன்றை அமைத்தது.
இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாக தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்லத்தொடங்கினர்.
தற்போது இந்த
சாலையை வைத்துக் கேரள
அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச்
சொந்தமானது என்று உரிமை
கொண்டாடுகிறது.

சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் ஒருவாரம் சிறப்பு வழிபாடுகள் செய்து வந்தனர்.
மலையாளிகள் இதை மூன்று நாட்களாக்குதான் அனுமதிக்கமுடியும் என்று மூன்றுநாளாக்கினர்.
அதன்பிறகு ஒரே ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கினர்.
அதுவும் இப்போது காலை, 9மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே
என்று ஆக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மலையாள அதிகாரிகளைச் சந்தித்து கெஞ்சிக்கூத்தாடி அனுமதி வாங்குவதும், மலையாளிகள் அவர்கள் மனம்போன போக்கில் விதிமுறைகளை விதிப்பதும் தொடர்கதை ஆகிவிட்டது.

மற்ற நாட்களில்
தமிழர்கள் இங்கு செல்ல
அனுமதி அளிக்கப்படுவதில்லை.
மலையாள காவல்துறை நடமாட்டம் எப்போதும் உள்ளது.
இதனால் கோயில் பராமரிப்பின்றி பாழடைந்த மண்டபம் போல ஆகிவிட்டது.
கோவிலின் பல பகுதிகள்
சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன.
கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
(இரு கல்வெட்டுகள் மிகமுக்கியமானவை.
முதலாம் இராசராச சோழனின் கல்வெட்டு ஒன்றும், பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் மேலும் பல கல்வெட்டுகளும் இக்கோவிலில் உள்ளன).
இவையும் விரைவில் அழியவுள்ளன.

5-5-82இல் சித்திரை பெளர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ளச்சென்ற தமிழர்களை
கேரள அரசு கைது செய்தது. அதுபற்றி பேசச்சென்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.டி. கோபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கம்பம் நடராசன் ஆகியோரை
மலையாளிகள் மரியாதையின்றி நடத்தினர்.
இதை தமிழக முதலமைச்சரிடம் அவர்கள் முறையிட,  இதைச் சுட்டிக்காட்டி கேரள ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் தந்தி அனுப்பினார்.
அதற்குக் கேரள அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

பிறகு அக்கோவில் மலையாளிகளின் துர்கா கோவில் என்று கூறிக்கொண்டு 15.3.1983ம் அன்று கண்ணகி கோவிலுக்குள் துர்க்கா தேவி சிலையை இ.சி. சுகுமாரன் என்பவர் மலையாள தாசில்தார் உதவியுடன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் கேரள போலீஸ் அதிகாரிகளுடன் வந்து கோவிலுக்குள்  நிறுவினார்.

இதுவாவது பரவாயில்லை.
அதன்பிறகு கண்ணகிசிலையை முகத்தை உடைத்து சிதைத்தனர்.
வேறுவழியின்றி  தற்போது சித்திரை முழுநிலவு நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

9மணிக்கு அனுமதிக்கப்படும் தமிழர்கள் வெறும் 8மணிநேரத்திற்குள் விழாவை நடத்திமுடித்து இடத்தைக் காலிசெய்தாகவேண்டும்.
வழிபாட்டு நேரத்தில் அங்கே இருக்கும் மலையாள காவல்துறை தமிழர்களை அடிப்பதும் திட்டுவதும் இஷ்டப்படி விதிமுறைகளை விதிப்பதும் வழிபாட்டில் முடிந்த அளவு இடைஞ்சல் செய்வதும் கண்கூடாகக் காணலாம்.
நான்கரை மணிக்குமேல் அடித்துவிரட்டத் தொடங்கிவிடுவார்கள்.

நம் எல்லைக்குள் நமக்கு தடை விதித்து மண்ணைக் கைப்பற்றிக்கொண்டு ஆண்டுக்கொருமுறை வரும் நம்மை தமது ராணுவமான காவல்துறையை அனுப்பி அப்பாவி மக்கள்மீது இனவெறியைத் தீர்த்துக்கொள்கிறான் மலையாளி.

தமிழ் ஆர்வலர்கள் சிலர் "மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை"என்ற
ஒரு அமைப்பு நிறுவியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகிகோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் உட்பட பல உதவிகள் செய்து வருகிறது.
இந்த அமைப்பு தமிழ்நாட்டின்.கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகிகோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் போராடிவருகிறது.

மலையாளிகளின் அராஜகத்தைப் பொறுக்கமுடியாமல் தமிழர் ஒருவர் கோயிலுக்குப் போகும்வழியில் தனக்கு சொந்தமான இடத்தில் ஒரு கண்ணகிகோவில் கட்டி அங்கே வழிபாடு நடத்த வழிசெய்துள்ளார்.
கண்ணகி கோயிலில் அவமானப்பட்ட தமிழர்கள் மறுமுறை அங்கே போகமனமில்லாதவர்கள் இங்கே அதேபோல வழிபாடு நடத்துகின்றனர்.

நாதியற்ற தமிழினம் செய்யமுடிந்தவை இவைதான்.

இத்தனை கெடுபிடிகளிலும் தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் இப்போதும் சென்றுவருகின்றனர்.
ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும்,.தங்குவதற்கும் என்று, எந்த வசதிகளும் செய்யப்படாத நிலையில் பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு குறையாத தமிழக மக்கள் மனக்குமுறலுடன் மலையாள இனவெறியையும் தமிழக வந்தேறி அரசுகளின் பாரமுகத்தையும் சகித்துக்கொண்டு வழிபாட்டைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
பழமையான, பாரம்பரியமான,  பல்வேறு தமிழ்கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நாம் விரைந்து எதாவது செய்யவேண்டும். கோவிலை எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீட்டு எடுக்க வேண்டும்.

என்னதான் கேவலப்பட்டாலும் உணவுக்கு தமிழகத்தை நம்பியிருக்கும் வெறும் ஒன்றரை கோடி மலையாளிகள் ஏறிமிதிக்கும் கேவலமான இனமாக நாம் இருப்பது கொஞ்சம்கூட நியாயமே இல்லை

Friday, 22 December 2023

ஆற்காடு நவாபு விநாயகர் கோவிலுக்கு அளித்த தானம்

சென்னைக்கு அருகில் உள்ள ஆற்காட்டை தலைநகராகக் கொண்ட இஸ்லாமியர்களான நவாப்புகள், கர்நாடக பகுதிகளை, 1690 முதல் 1801 வரை ஆண்டனர். நவாப்புகளில் பலர் மத அடையாளங்களைக் கடந்த மனிதநேயர்களாக இருந்துள்ளனர்.
அவர்கள், அனைத்து மதத்தினரின் வழிபாட்டு உரிமைகளையும் மதித்ததுடன், அரசின் சார்பில் வழிபாட்டு சடங்குகளுக்கு உதவிகளையும் செய்தனர்.
அந்த வகையில், திருநெல்வேலி குறவர் தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நித்திய அபிேஷகம், நைவேத்தியம் செய்ய லாலுகான் சாய்பு, தான அறக்கட்டளை நிறுவியதும், அசாது வால சாய்பு, இஸ்மாலி ராவுத்தர் ஆகியோர், குற்றாலநாதர் கோவிலுக்கு நித்திய பூஜைக்காக தானமளித்த செய்திகள், ஏற்கனவே கிடைத்த செப்பேடுகள் வாயிலாக தெரியவந்தன.
இந்நிலையில், ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் கிடைத்துள்ள செப்பு பட்டயங்கள், 1774ல் வெட்டப்பட்டுள்ளன.
அதில், ராச மானியார் அசாது நவாப்பு என்பவருக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கோவிலின் அருகில் உள்ள கிராம மக்கள், கோவில்களுக்கு தானம் அளித்துள்ளனர்.
அதாவது, ஆயிரத்தெண் விநாயகர் கோவிலின் பூஜைக்கும், மாறமங்கலத்தில் உள்ள சந்திரசேகர சுவாமி கோவிலின் திருப்பணிக்கும் தானியங்களையும், நிலத்தையும் தானமளித்து, அதற்கான தர்மக்கட்டளையை நிறுவியுள்ளனர்.
அதாவது, அரசுக்கு சேர வேண்டிய வரியின் ஒரு பகுதியை, ஆட்சியாளரின் பெயரில், கோவிலுக்கு வழங்க, முஸ்லிம் ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

22.12.2023 தினமலர் செய்தி 

Sunday, 30 October 2022

ஆலயம் நுழைந்த பார்ப்பனர் மூவர்

ஆலயம் நுழைந்த பார்ப்பனர் மூவர்

 வைத்தியநாத ஐயர் செய்த ஆலய நுழைவு பற்றியும் ஆலய நுழைவை சட்டமாக்கிய இராஜாஜி பற்றியும் மீண்டும் பேசுகிறோம்.
 அத்தோடு எம்.சி. ராஜா அவர்கள் ஆலய நுழைவு வேண்டி தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பே தமிழகத்தில் முதன்முதலாக 1933 இல் ஆலய நுழைவு தீர்மானம் (The Hindu Temple Entry Disabilities Removal Bill) கொண்டுவந்த சி.எஸ்.ரங்க ஐயர் பற்றியும் பேசுவோம். 
 நீதிக் கட்சி ஜே.எஸ்.கண்ணப்பர் ஆலய நுழைவு முயற்சி (1927) எனும் கட்டுக்கதையை புறந்தள்ளுவோம்.
 

Tuesday, 7 January 2020

கதிர்காமம் நமதே














கதிர்காமம் நமதே!

 இலங்கையில் தென்கோடியில் முழுக்க சிங்களவர் நிறைந்திருக்கும் பகுதியில் தமிழீழ எல்லைக்கு சற்று அப்பால் இருக்கிறது கதிர்காமம்.

 இங்கே இருக்கும் முருகன் கோவில் உலகப்புகழ் பெற்றது.

 திருப்பதி, காளத்தி, சபரிமலை போல வேற்றினத்தார் குடியேறி தமிழரிடமிருந்து ஆக்கிரமித்துக் கொண்ட மற்றொரு புனித மண்.

 இலங்கையில் பௌத்த மதவெறி தலைதூக்கும் முன் சிங்களவரும் தமிழரும் தமது மதம் தாண்டி பிறமத தெய்வங்களையும் வணங்கியே வந்துள்ளனர்.
 இசுலாமியர் கூட கதிர்காமம் வந்து வணங்கியுள்ளனர்.
 50 ஆண்டுகள் முன்புவரை கூட தீமிதிக்கும் சடங்கில் பங்கெடுத்துள்ளனர்.
 கைவிடப்பட்ட சிறிய தர்கா ஒன்று கோவில் வளாகத்தினுள் இருக்கிறது.

 கதிர் என்றால் சூரிய ஒளி.
காமம் என்றால் ஊர்.

 கதிர்காமம் மிகப்பழமையான பின்னணியைக் கொண்டது.
 என்றாலும் சான்றுகளின் படி தமிழருக்கு சாதகமான ஆதாரங்களே சிங்களவர் முன்வைக்கும் சான்றுகளை விட பழமையானவை.

 கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் தாட்டியன் என்பவனின் கல்வெட்டு (Epigraphia Zeylonica, Vol 3, PP 216 - 219) கதிர்காமத்தில் உள்ளது.
 இதில் இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்றும் கிரிவிகாரை என்னும் புத்தமடத்திற்கு தானம் அளித்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

   இலங்கையில் முருகன் பற்றிய முதல் குறிப்பு, கி.பி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூளவம்சத்தில் வருகின்றது.
 அதாவது இரண்டாம் காசிபனின் (கி.பி 652 – 661) மகனான மானவர்மன், குமாரனை வழிபட்ட செய்தி அதில் உண்டு.

 கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் ஒரு முக்கிய சான்று.

 அதில்,
 கருங்குரங்குகள் பலா மரத்தின் சுளைகளைக் கீறி சண்டையிட்டு உண்டபடி,
 மாமரங்களிலும் வாழை மரங்களிலும் பாயும்
அத்தகைய அழகிய ஈழநாட்டில் திர்காமம் அமைந்திருக்கிறது.
 அந்தக் கதிர்காமம் மிகப்பழைமையான ஊர்.
 அதனருகே வடக்கிலிருந்து வந்து பாயும் அழகான ஆறு உள்ளது.
 அதன் அலைகள் கதிர்காமத்தில் வீசுகின்றன.
 அந்த ஆறு, மாணிக்கங்களை உருட்டியபடி சரிவாக ஓடிவருகின்றது.
 யானைகள் நிறைந்த மலையில் வள்ளியை மணந்த பெருமான், பொன்மாணிக்க வடிவில் கதிர்காமத்தில் அமர்ந்திருக்கிறான்.
 அவன் வேல் தரித்தவன். அவ்விறைவனை அனுமான் வணங்கியுள்ளான்.
 ஆயிரம் கோவில்கள் இருக்க, கோடி மலைகள் இருக்க அவற்றையெல்லாம் விடுத்து கதிர்காமத்தில்தான் அடியவர்க்கு இரங்கிய முருகன் வருகிறான்.
 என்றெல்லாம் பாடுகிறார் அருணகிரியார்.

 திருப்புகழில் கதிரகாமம், கதிர்காமம், கதிரகாம மாநகர், கதிரகாம மூதூர், கதிர்க்காமம், கதிரகாமக் கிரி, கதிரகாம வெற்பு என்றெல்லாம் இத்தலம் போற்றப்படுகிறது.

 மேலும் அருணகிரிநாதர்,
கதிர்காமக் கந்தன் “வனமுறை வேடர் அருளிய பூசையில்” மகிழ்ந்தவன் என்று சொல்கிறார்.
 வாய்கட்டிப்பூசை, திரைமறைத்த கருவறை, அருவ வழிபாடு முதலான இன்றைய வழிபாட்டு முறைகளை அவர் பாடவில்லை.
 பழங்குடிகளான வேடர்களின் வழிபாடு பற்றி கூறியுள்ளார்.

 ஆனால் கோவிலும் சிலையும் இருந்துள்ளதை அவர் பாடியுள்ளார்.
 “கனகமாணிக்க வடிவம் கொண்டவன்” என்றும்,
 “கதிர்காமத்தின் மத்தியிலுள்ள சோதி மண்டபத்தில், இந்திரநீல மாணிக்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் வள்ளி, தெய்வானை, வேல் என்பன அருகிருக்க கதிர்காம நாதர் வீற்றிருக்கிறார்” என்றும் பாடியுள்ளார்.

 ஆங்கிலேய ஆட்சியின்போது இக்கோவிலை அரசிடம் ஒப்படைக்க ஆங்கிலேயர் வலியுறுத்தியபோது சர். பொன்னம்பலம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தடுக்கப்பட்டது.

 கதிர்காமத்துக்கு 1819இல் வருகை தந்த “சர் ஜோன் டேர்வி” எனும் ஆங்கிலேயர்,
 “கிளர்ச்சிக் காலத்தில் இங்கிருந்த விக்கிரகம் அகற்றப்பட்டு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
 எனினும் இன்றும் முன்பு போலவே கருவறையை மிகக் கடுமையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.”
 என்கிறார்.
 அவர் சொல்கின்ற கிளர்ச்சி 1818இல் இலங்கையையே உலுக்கிய ஊவா - வெல்லசை கலவரம் ஆகும்.

 இந்த கலவரத்தின்போது சிங்களவர்கள் கதிர்காம ஆலயத்தைக் கைப்பற்றினர்.
 தமிழ் அந்தணர்கள் கவர்னர் ராபர்ட் பிரவுன்ரிக் இடம் முறையிட்டதன் பேரில் சிங்களர்களை விரட்டிய ஆங்கிலேயர் மீண்டும் அந்தணர்களிடம் ஒப்படைத்து இராணுவ பாதுகாப்பு கொடுத்தனர்.

 சில காலம் கழித்து இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டதும் மீண்டும் சிங்களர் இதைக் கைப்பற்றினர்.

 இப்படித்தான் கதிர்காமம் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

 ஆங்கிலேயர் வெளியேறிய பிறகு சிங்களவர்கள் கோவிலுக்கு வரும் மலைப்பாதையை அடைத்து பிரச்சனை செய்தனர்.

 இதனால் தத்தாராமகிரி சுவாமிகள் என்பவரது தலைமையில் ஆலயத்தை மீட்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 1946 இல் அவர் தலைமையில் மலையேறிய தமிழர்கள் தாக்கி விரட்டப்பட்டனர்.

 1960 களில் அரசாங்கம் இப்பகுதியை அபிவிருத்தி பிரதேசம் என்று அறிவித்தது.

 அதன்பிறகு தத்தாராமகிரி இருப்பிடமான கொழும்பில் உள்ள இராமகிருஷ்ண மடத்தை பல முறை தாக்கிய சிங்களர்கள் 1970 இல் இராணுவத்தினர் ஆதரவுடன் முற்றிலுமாக கொள்ளையடித்தனர்.

 1972 இல் தத்தாராமகிரி கோவிலைச் சுற்றி கட்டியிருந்த கட்டிடங்கள் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டது.
 கோவிலைச் சுற்றி தத்தாராமகிரி வசம் இருந்த நிலங்களையும் பிக்குகள் அரச ஆதரவுடன் ஆக்கிரமித்தனர்.

 சிங்கள பௌத்த பேரினவாதம் தலைதூக்கிய பிறகு ஜே.ஆர். ஜெயவர்த்தனா தேர்தல் வாக்குறுதியில் தனது முதல் கையெழுத்தே கதிர்காமத்தை சிங்களருக்கு எழுதி கொடுத்து போடுவதாக இருக்கும் என்று வாக்களித்தார்.

 1978 இல் இது பற்றி வெளியான செய்தியில் கதிர்காமத்தைக் கைப்பற்றி பௌத்த விகாரையாக மாற்றிக் கொண்டிருந்த சிங்கள மடாதிபதிகளுக்கு அக்கோவில் மற்றும் அதைச்சார்ந்த 200 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுப்பதாகவும்
 அதுவும் தலைமை மடாதிபதி 'ரத்மலானே ஸ்ரீ சித்தார்த்த தேரோ' என்ற பிக்குவின் பெயருக்கு தனிச்சொத்தாக கொடுப்பதாகவும் இருந்தது.

 ஆனால் பெரும் முயற்சிசெய்து இதை நடைபெற விடாமல் தமிழ் அரசியல்வாதிகள் அடங்காத் தமிழர் சுந்தரலிங்கம் தலைமையில் செயல்பட்டு தடுத்துவிட்டனர்.

 முதலில் நுழைவாயிலில் இருந்த தமிழ் ஓம் அகற்றப்பட்டது.

 இன்று கதிர்காமம் கோவில் நுழைவாயிலில் கொட்டையான சிங்கள எழுத்துகளில் ருகுணு மகா கடரகம என்று எழுதப்பட்டிருக்கிறது.

 உள்ளே நுழைந்ததும் காணப்படும் பிள்ளையார் இப்போது கண தெய்யோ ஆகிவிட்டார்.

 விஷ்ணு சிலை அகற்றப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

 கோவிலின் பத்துநாள் திருவிழா ஒவ்வொரு முறையும் பல மாற்றங்களை சந்தித்துவருகிறது.

 சிங்களவர் இவ்வளவு தீவிரமாக உரிமை கொண்டாட என்ன காரணம்?

 கதிர்காமம் சிங்களவருக்கு சொந்தம் என்பதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்கள் இரண்டு.

 ஒன்று,
 எல்லாளனை வெல்வதற்காக உரோகண மன்னன் துட்டகைமுனு கதிர்காமக் கடவுளிடம் நேர்த்திக்கடன் வைத்து, வென்றபின் இக்கோவிலைக் கட்டியதாக 'கந்த உபாத' எனும் அண்மைய கால சிங்கள நூலில் சொல்லப்பட்ட கட்டுக் கதை.

 இன்னொன்று மகாசேன மன்னன் இறந்தபின்னர், இங்கு அவனுக்காக அமைக்கப்பட்ட நினைவாலயமே கதிர்காமம் என்கிற கட்டுக்கதை.

 இந்தக் கதைகள் எதுவும் பழைமையான நூல்கள் எதிலும் காணப்படவில்லை.

 கதிர்காமம் 'காஜரகாமம்' என்ற பெயரில் இரு தடவை மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 முதல் தடவை, சங்கமித்தை கொணர்ந்த வெள்ளரசுக் கிளையை நாட்டும் சடங்கில் காஜரகாம – சந்தனகாம சத்திரியர்கள் கலந்துகொண்டதைச் சொல்கின்றது.

 அடுத்தது தப்புல மன்னன், காஜரகாமத்தில் பௌத்த மடம் அமைத்தது பற்றிய செய்தி.

 [பௌத்தம் தமிழராலும் பின்பற்றப்பட்ட மதம்.
 மகாவம்சத்தில் சிங்களவர் பற்றி எதுவுமே இல்லை.
 அதில் வருவதெல்லாம் பௌத்தர் மற்றும் பிற சமயத்தினருக்குமான மோதல் மற்றும் பௌத்த சமயத்தின் இரு பிரிவுகளுக்கு இடையேயான மோதல் போன்றவையே.
 இதில் வரும் பௌத்தத்தை சிங்களமாக திரிக்கின்றனர்]

 கதிர்காமம் முழுக்க சிங்கள மயமாகிவிட்டாலும் இன்றும் அது முருகன் கோவில்தான்.

 அதில் வழிபாட்டு முறைகள் சிறிது திரிந்துவிட்டாலும் சிங்கள - பௌத்த பேரினவாத சக்தியால் அது முழுமையாக விழுங்கப்படவில்லை.

 மணிமேகலை காலம் முதல் ராஜராஜன் காலம் வரை பௌத்தத்தை பின்பற்றி வந்த தமிழர்கள் சைவ வைணவ எழுச்சிக்குப் பிறகு அம்மதத்தை முழுமையாக கைவிட்டபோது சிங்களவர்கள் அதைப் பற்றிக்கொண்டு பௌத்த வரலாற்றையே தமதாக்கிக் கொண்டனர்.

 கதிர்காம முருகனை தமதாக்கிக் கொண்டு முருகனாக ஏற்கவும் முடியாமல் பௌத்தமாக திரிக்கவும் முடியாமல் அல்லாடுகிறார்கள்.

 இதேபோல நம் கையைவிட்டுப்போன அனுராதபுரம் நம்முடையதுதான் என்பதற்கு அபயகிரி பௌத்த விகாரையில் காணப்படும் கிபி 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு ஒன்று சான்றாக உள்ளது.

 கதிர்காமத்தைப் பொறுத்தவரை அது தோன்றிய காலத்தைய பழமையான சான்று  இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை.

 கதிர்காமத்தை மீட்டு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தினால் கட்டாயம் ஒரு வலுவான சான்று நமக்குக் கிடைக்கும்.



Wednesday, 18 December 2019

ஆந்திரா கோவில்களில் தமிழ்






















ஆந்திரா கோவில்களில் தமிழ்

 "திருச்சிற்றம்பல மேடை மீது ஏறி பாடக் கூடாது" என்று தீட்சிதர்கள் கூறியதை நியாயப்படி சாதிப் பிரச்சனை ஆக்காமல்
 அப்படியே திசைதிருப்பி "தமிழை நீசபாசை என்றுவிட்டான் பார்ப்பான்" என்று மொழிப் பிரச்சனை ஆக்கி பொய்ப் பிரச்சாரம் செய்தே அரசியல் செய்தனர் வந்தேறிகள்.

 இதன்மூலம் தினமும் தமிழில் ஓதும் தில்லை அந்தணர்களான தீட்சிதர்களை தமிழுக்கு எதிரானவர்களாக காட்டிவிட்டனர்.

 ஆனால்
 தமிழர் பகுதியாக இருந்து ஆந்திராவுக்கு போய்விட்ட எல்லை மாவட்டங்களில்
 தமிழர்களால் கட்டப்பட்டு தெலுங்கர் கைக்கு போய் முழுக்க சமஸ்கிருத மயமாகிவிட்ட வைணவக் கோவில்களில்
 இன்றும் விடாமல் தமிழில் ஓதிவரும் பார்ப்பனர் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?


 திருப்பதி உட்பட
அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வர கோவில்,
 நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவில்,
 தாலப்பாக்கம் சென்னகேசவ சுவாமி கோவில்,
 தேவுணிகடப்பா சித்தீஸ்வர கோவில் மற்றும் லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஜம்மலமகுடு வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 பித்தாபுரம் பத்மாவதி சமேத வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஆகிய 10 கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாதம் ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் எழுதிய தமிழ்ப் பாசுரங்கள் ஓதப்படும்.

 தெலுங்கர் வருகைக்கு முன் தாய்லாந்து சென்ற பார்ப்பனர்கள் இன்றுவரை தமிழில்தான் ஓதுகின்றனர்.

 தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினப் பார்ப்பனர் தமிழுக்கு எதிரி இல்லை!

 படம் உதவி: Karthikeyan Rathinavelu

Sunday, 2 December 2018

ஆலயநுழைவு ஆதரவாளர் சாந்து பட்டர்

ஆலயநுழைவு ஆதரவாளர் சாந்து பட்டர்

இந்த புகைப்படத்தில் இருப்பவர்தான் சாந்துபட்டர்.

1939 இல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடந்த ஆலயப் போராட்டத்தின் பின்விளைவுகளை தன் வாழ்நாள் முழுவதும் சந்தித்தவர்.

ஆலயதுழைவுக்கு எதிராக அப்போது மீனாட்சியம்மன் கோவில் பூசாரிகள் 13 பேரில் 12 பேர் வேலைநிறுத்தம் தொடங்க தனியாளாக கோவிலை நடத்தியவர்.

திருநெல்வேலியில் இருந்து 12 பூசாரிகள் வரவழைக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் அனுமதி வழங்கி கோவில் தொடர்ந்து நடக்க முக்கிய காரணம் இவரே!

1945 இல் மற்ற பூசாரிகளும் வேலைக்கு வந்துவிட்டனர்!

போராட்டம் நடத்தியோர் பெயர் வாங்கிக்கொண்டு போய்விட்டனர்!

பட்டியல் மக்களும் ஆலயத்திற்கு வந்துபோக ஆரம்பித்துவிட்டனர்!

ஆனால் இவரது குடும்பம் மட்டும் அவரது சமூகத்திலிருந்தே ஒரு தலைமுறைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இவரது மரணத்திற்கு பிறகே இவரது குடும்பம் ஒதுக்கலில் இருந்து மீண்டது.

இது பற்றி விரிவாக "லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில்" மானுடவியல் பேராசிரியராக இருக்கும் சி.ஜே. ஃபுல்லர், தனது Servants of the Goddess புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

நன்றி: பிபிசி தமிழ்
தகவலுக்கு நன்றி: யோகேஸ்வரன்

Monday, 17 September 2018

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சோழர்

காண்பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சோழர் அரசாணை.

இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இட ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு வழங்குகிறது.
ஆனால் 800 ஆண்டுகளுக்கு முன்பே சோழ அரசாங்கத்தால் இது நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூரில் உள்ள "அபிராமேசுவரர் கோவில்" கல்வெட்டில் இருந்து இந்த தகவலை தெரிந்து கொள்ள முடிகிறது.

இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோவிலில் திருப்பதிகங்கள் பாடுவதற்கு 16 பார்வையற்றவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு உதவியாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் "கண் காட்டுவார்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இந்த பதினெட்டு பேருக்கும் (அக்கால வழக்கப்படி) ஊதியமாக நெல் வழங்கப்பட்டு உள்ளது.

நன்றி: Andavar Kani

Tuesday, 24 July 2018

இராசராச சோழன் சிலை போலி

இராசராச சோழன் சிலை போலி


 ஆம்.

இராசராசன் சிலை தமிழகம் மீண்டது எனும் செய்தி தரும் சிறு மகிழ்ச்சியாவது என் இனத்திற்குக் கிடைக்கட்டுமே என்று இதுவரை அமைதியாக இருந்தேன்.


 ஆனால், நம் அறிவு எங்கே செல்கிறது?!


 அனைவரும் ஜோசியத்தில் இறங்கிவிட்டோம்.


 சோழன் வந்துவிட்டான்.

காவிரி வத்துவிட்டது.

2000 ஆண்டுகள் முன் கரிகாலன்.

1000 ஆண்டுகள் முன் ராசராசன்.

 இப்போது சோழன் மறுபடி வருவான் என்றெல்லாம் ஆருடம் நீள்கிறது.


 நாம் பழமை பேசிக் கெட்ட இனம் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த உண்மையை இப்போது போட்டுடைக்கிறேன்.


 ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சை பெரியகோவிலின் ஶ்ரீகார்யமாக 'பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்' என்பவர் இருந்தார்.


 இவர் 1010-ல் ராஜராஜ சோழனுக்கு 74 செ.மீ [2.43 அடி] உயரத்திலும்

 மற்றும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கு 53 செ.மீ. [1.74 அடி] உயரத்திலும் செப்புச் சிலைகளை செய்துள்ளார்.


 ராஜராஜனும் தேவியும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம்.


 ஆனால், இப்போது மீட்கப்பட்டுள்ள சிலைகளின் உயரமோ மாறுபடுகிறது. 


 ராசராசனின் சிலையினுடைய உயரமோ 1 செ.மீ குறைகிறது.

 உலகமாதேவி சிலை உயரமோ 2 செ.மீ வரை குறைகிறது அத்துடன் வணங்கிய நிலையிலும் இல்லை.


 சிலைகள் மட்டுமின்றி ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்துள்ளார் ஶ்ரீகார்யம்.


 இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன்றைக்கும் பேசுகிறது. 


 தற்போது மீட்கப்பட்ட சிலை ராசராசன் சிலை என்பதற்கு நாகசாமியின் புத்தகத்தை ஆதாரமாகக் காட்டுவோர்,

 ஏற்கனவே குஜராத் சென்ற தமிழகத்தின் குழு அப்போதைய முதலமைச்சர் மோடியிடம் கேட்டு சிலையைப் பெறும் கடைசி நேரத்தில் அக்குழுவில் ஒருவராக இருந்த நாகசாமி உயரத்தை அளந்து பார்த்துவிட்டு இந்த சிலை இல்லை என பல்டி அடித்தார் என்பதை மறக்கவேண்டாம்.

 

(தகவல்களுக்கு நன்றி: சிலை சிலையாம் காரணமாம் - 22 

- தி ஹிந்து 05.08.2016)


 நாம் பழமையில் மூழ்கி இன்றைய இழிநிலையை மறக்கமுயல்கிறோம்.

 

 நாம் பழைய வரலாற்றில் பெரிய சாதனைகள் செய்தோம்தான்.

 ஆனால் நாம் மட்டுமே பெரிய பிடுங்கி இல்லை.


 பாரோ மன்னர்கள் கட்டிய பிரமீடு முன்பு இராசராசன் கட்டிய பெரியகோவில் ஒன்றுமேயில்லை.


 சைருஸ் எழுப்பிய பாரசீகப் பேரரசுக்கு முன் சோழப் பேரரசு ஒன்றுமேயில்லை.


 நம்மை காக்க சோழனும் வரப்போவதில்லை எவனும் வரப்போவதில்லை.


வரலாறு அறிக!

அத்துடன் நடைமுறையும் உணர்க!

தமிழ் இனமாக எழுக!

Friday, 6 July 2018

சிவனுக்கு தமிழ் தெரியுமா?

சிவனுக்கு தமிழ் தெரியுமா?

ஒண்ணுமில்ல.
நீங்க என்ன பண்றீங்க...

1000 வருசத்துக்கும் மேல பழமையான சிவன் கோவில்கள ஒரு வரைபடத்துல குறிங்க.
அதுல அதிகமான கோவில்கள் எங்கே இருக்குனு பாருங்க.
அங்க என்ன மொழி பேசப்படுது/பேசப்பட்டது னு பாருங்க!
அந்த ஆளு என்ன மொழி பேசினாருனு தெரிஞ்சிடும்.

வரைபடம்: பாடல்பெற்ற 276 சைவ  திருத்தலங்கள்

Wednesday, 4 July 2018

காளத்திக்கும் தெலுங்கருக்கும் என்ன தொடர்பு?

காளத்திக்கும் தெலுங்கருக்கும் என்ன தொடர்பு?

தற்போது ஸ்ரீ காளஹஸ்தி (sri kalahasti) என்று அழைக்கப்படும் காளத்தி புகழ்பெற்ற சைவ திருத்தலம் ஆகும்.

  கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் "சந்தமார் அகிலொடு" என்று தொடங்கும் பதிகமும் "வானவர்கள் தானவர்கள்" என்று தொடங்கும் பதிகமும் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

அதே நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் "விற்றூணொன் றில்லாத" என்று தொடங்கும் பதிகம் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

கிபி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் "செண்டா டும்விடையாய்" என்று தொடங்கும் பதிகம் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

இக்கோவில் உள்ள மலை (கைலாசகிரி என்று ஆவணங்கள் குறித்தாலும்) சிவனுக்கு கண்கொடுத்த கண்ணப்ப நாயனார் பெயரால் "கண்ணப்பர் மலை" என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

இது பண்டைய தமிழ்நாடான தொண்டைநாட்டின் பகுதியென்பதால் காளத்திக்கு அருகே தொண்டமநாடு அல்லது தொண்டைமான் நாடு எனும் ஊர் உள்ளது.

கிபி 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரதேவ நாயனார் "கயிலை பாதி காளத்தி பாதி" எனும் அந்தாதி பாடியுள்ளார்.
இது பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
இதே ஆசிரியர் எழுதிய "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" எனும் நூலும் பதினோராம் திருமறையில் உண்டு.

இதே நூற்றாண்டில் வாழ்ந்த "கல்லாட தேவ நாயனார்" இயற்றிய "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" எனும் அதே பெயரைக் கொண்ட இன்னொரு நூலும் பதினோராம் திருமறையில் உண்டு.

கிபி 11 ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழன் இத்தலத்தை கோவிலாகக் கட்டினான்.

இங்கே உள்ள கண்ணப்பர் கோவிலுக்கு மண்டபமும் தாழ்வாரமும் ராஜேந்திர சோழன் காலத்து வேளிர் மன்னன் "கங்கைகொண்டான் இருங்கோளன்" என்பவரின் தாயார் "புத்தங்கையார்" கட்டிக்கொடுத்துள்ளார்.

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் "காளத்தி உடையான் மரக்கால்" என்ற அளவுக் கருவி பயன்பாட்டில் இருந்ததாகக் கல்வெட்டு உள்ளது.

இக்கோவிலின் கல்வெட்டுகள் இறைவனை "தென்கயிலாயமுடையார் திருக்காளத்தி உடைய நாயனார்" என்று குறிக்கின்றன.

இப்பகுதியில் ஓடும் ஆறு தற்போது "சொர்ணமுகி" என்று அழைக்கப்படுகிறது.
இது கிபி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் நாயன்மார்களின் வரலாற்றினைத் தொகுத்து படைத்த திருத்தொண்டர் புராணத்தில் (பெரிய புராணம்) கண்ணப்ப நாயனார் பற்றிய பகுதியில் "பொன்முகலி" என்று குறிக்கப்பட்டுள்ளது.
(தேவாரம் "முகலி" என்று மட்டும் குறிக்கிறது).

கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் காளத்திநாதரைப் புகழும் பாடல் "சிரத்தானத்தில்..." என்று தொடங்கி "திருக்காளத்திப் பெருமாளே" என்று முடிகிறது.

கிபி 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த "சேறைக் கவிராயர்" (கவிராச பிள்ளை அல்லது ஆசுகவிராயர் என்றும் அறியப்படுபவர்) பாடிய உலா ஒன்று உள்ளது.
"திருக்காளத்திநாதர் உலா" அல்லது "காளத்தியாள்வார் உலா" என்று இது அழைக்கப்படும். சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்ட படைப்பு ஆகும்.
அதே புலவர் "திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை" எனும் நூலையும் எழுதியுள்ளார்.
இதைக் கண்டெடுத்து பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா ஆவார்.

கிபி 16 ஆம் நூற்றாண்டில் "வேளாக்குறிச்சி ஆதின" சீடரான "வீரை ஆனந்தக் கூத்தர்" இத்தலத்தின் மீது இயற்றிய "திருக்காளத்திப் புராணம்" புகழ்பெற்றது.

கிபி 17ஆம் நூற்றாண்டில் சிவப்பிரகாசர் என்பவரும் அவர் தம்பியும் சேர்ந்து இயற்றிய "சீகாளத்தி புராணம்" எனும் படைப்பும் உண்டு.

இதன் தலபுராணம் 18 ஆம் நூற்றாண்டில் கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரால் சேர்ந்து பாடப்பட்டுள்ளது.

பொன்முகரி ஆற்றுக்கு செல்லும் படித்துறை முகப்பில் ஒரு சிலை உள்ளது.
1912 ஆம் ஆண்டிலேயே 9 லட்சம் செலவில் திருப்பணி செய்த "தேவக்கோட்டை இராமநாதன் செட்டியார்" என்பவரின் சிலைதான் அது.

"பொங்கல்" அன்றும் திருவிழா அன்றும் ஆக ஆண்டின் இரண்டு நாட்களில் மட்டும் உற்சவர் மலையை வலம் வரும் சடங்கு நடக்கிறது.

தமிழக எல்லையில் இருந்து வெறும் 64கி.மீ தொலைவில் இருக்கும் காளத்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதி ஆகும்.

திருப்பதி போல காளத்தியும் தமிழகத்தின் பகுதியே ஆகும்.

  இது ஆந்திராவுக்கு போனது ஏன்?

கிபி 1516 ல் கிருஷ்ணதேவ ராயர் நூற்றுக்கால் மண்டபம் ஒன்று கட்டியுள்ளார்.
63 நாயன்மார் சிலைகளுக்குப் போட்டியாகத் தொடர்பேயில்லாமல் பாண்டவர் சிலைகளை கொண்டுவந்து வைத்தார்.
கிருஷ்ண தேவராயரின் அவைப்புலவர் தூர்ஜாட்டி "ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர மகாத்யம்" எனும் நூலும் "ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர சதகம்" எனும் நூலும் இயற்றியுள்ளார்.

அதன்பிறகு அச்சுதராயர் ஒரு பதினாறுகால் மண்டபம் கட்டியுள்ளார்.

இது தவிர தெலுங்கருக்கும் காளத்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Tuesday, 26 June 2018

இசுலாமியர் கட்டிய முருகன் கோவில்

இசுலாமியர் கட்டிய முருகன் கோவில்

இசுலாமியர் முருகனை ஏற்பதில்லை என்பாருக்கு...

இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவிலை பற்றிய செய்தி!

புதுச்சேரியில் உள்ள ஒரு முருகன் கோயிலை கட்டியது இஸ்லாமியர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழும் அந்த கோயிலைப் பற்றி தற்போது பார்ப்போம்.

புதுச்சேரி ரயில் நிலைய வாயிலின் அருகே உள்ள சாலைக்கு எதிரே அழகாய் அமைந்துள்ளது "கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில்".

அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள இக்கோயிலை கட்டியவர் மதுரையை பூர்வீகமாக கொண்ட முகமது கௌஸ்.

1940ம் ஆண்டுகளில் அவரது முன்னோர்கள் புதுச்சேரியில் குடியேறிய பின்,கடவுள் முருகன் மீது மிகுந்த பற்று கொண்டதால் முருகன் கோவிலை கட்ட எண்ணியுள்ளார்.

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், இந்துக்களுக்கான கோயிலைக் கட்டுவதில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டிவந்தது.
எனினும், கடந்த 1970ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பி.டி.ஜாட்டியுடன் சேர்ந்து கோயிலுக்கான அடிக்கல் நாட்டி அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து கோயிலைக் கட்டி முடித்தார் முகமது கெளஸ்.

1977-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்தார்.

பின்னர் கோயில் கட்டியவரின் பெயருடன் இணைந்து கௌசிக பாலசுப்பிரமணிய சாமி திருக்கோயில் என பெயர் பெற்று இன்று வரை அழைக்கப்படுகின்றது.
சித்ரா பவுர்ணமி, வைகாசிப் பெருவிழா,கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபப் பெருவிழா என வருடம் முழுவதும் இத்திருக்கோயில் மின்னுகிறது.

2003-ம் மரணமடைந்த முகமது கௌஸூக்கு பின் அவரது மகன் முகமது காதர் தற்போது கோயிலை நிர்வகித்து வருகிறார்.

இக்கோயிலுக்கு கடந்த 2002ம் ஆண்டில் இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போது 3வது முறையாக கும்பாபிஷேகம் (23.06.2018) நடைபெறவுள்ளது.

மதங்களின் பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக இன்று உயர்ந்து நிற்கிறது இந்த கௌசிக பாலசுப்ரமணிய கோவில்.

நன்றி: news7

எமது முப்பாட்டன் முருகன் இசுலாமியத் தமிழர் உட்பட தமிழினம் அனைவருக்கும் மூதாதை

Tuesday, 12 June 2018

சண்டாள ஜிண்டால்

சண்டாள ஜிண்டால்

2005 ல் ஜிண்டால் மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே நடந்த உரையாடல்

"வாழவைக்கும் ஜிண்டால் அவர்களே! வருக!"

"நமஸ்தே! என்ன விசயம்?"

"சேலத்திற்கும்  சென்னைக்கும் நடுவே இருக்கும் திருவண்ணாமலைக்கு மிக அருகில் இருக்கிறது கவுத்திமலை.
இது சாதாரண மலை இல்லை,
41% இரும்புத்தாது நிறைந்தது.
அதாவது 35 மில்லியன் டன் இரும்புத்தாது இருப்பதாக கணித்துவிட்டனர்.
இதை விற்க நல்ல ஆள் தேடிக்கொண்டு இருந்தோம்.
அதற்கு உங்கள் கார்ப்பரேட்டை தேர்ந்தெடுத்துள்ளோம்"

"அந்த இடமா?
சுத்தமாக பின்தங்கிய பகுதி.
நீதிமன்றத்தையும் அரசாங்கத்தையும் கூட விலைக்கு வாங்கிவிடலாம்.
ஆனால் படிப்பறிவில்லாத பாமர மக்களைத்தான் சமாளிக்கமுடியாது.
எவனாவது சமூகப் போராளி எடுத்துக் கூறினால் போராட்டங்களை தொடங்கிவிடுவார்கள்"

"அவர்களை நான் சமாளித்துவிடுவேன்.
ஊடகங்களை மட்டும் நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள்.
ரொம்ப போராடினால் போலீசை ஏவிவிடலாம்.
வெறிநாய்களை விட மோசமாக குதறிவிடுவார்கள்"

"மக்கள் ஆயுதம் தூக்காதவரை எப்படியும் சமாளித்துவிடலாம்.
என்னவொன்று காலம் இழுத்துக்கொண்டே போகுமே என்று யோசிக்கிறேன்.
தவிர அங்கே போதிய வசதிகளும் கிடையாது"

  "மலையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்!
வேண்டிய வசதிகளை வரிப்பணம் செலவளித்து செய்து தருகிறேன்"

"ம், எவ்வளவு நிலம் தருவாய்"

"325 ஹெக்டர் வனப்பகுதியை எழுதித் தருகிறேன்"

"வனப்பகுதியா? மரங்கள் நிறைய இருக்குமே?!"

" ஆம் 3லட்சம் மரங்கள் வரை இருக்கும்"

"மரங்களை வெட்டினால் பொதுமக்கள் எதிர்ப்பார்களே?!
சமாளித்து விடுவாயா?"

"அதற்கென்ன?! இதே அளவு மரங்களை திருநெல்வேலி மாவட்டத்தில் நட்டு ஈடுசெய்வதாக வாக்குறுதி கொடுத்தால் போயிற்று"

"ஹ.. ஹ... ஹா... ஹா... அப்படி சொன்னால் நம்பும் அளவு முட்டாள்களா இந்த மக்கள்?!"

"ஆம், மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிக்கொள்வீர்களா? நான் வெட்டித்தரவா?"

"நானே வெட்டிக்கொள்வேன்.
ஏற்கனவே எனக்கு சேலத்தில் என் மச்சான் மலைமுழுங்கி SISCOL உடன் கூட்டான ஒரு மின்சார உற்பத்தி ஆலை உள்ளது.
ஏற்கனவே எனக்கு சேலத்தில் என் மச்சான் மலைமுழுங்கி SISCOL உடன் கூட்டான ஒரு மின்சார உற்பத்தி ஆலை உள்ளது.
சாலைதான் சரியாக இல்லை."

"என்ன சொல்கிறீர்கள்?!
சேலத்திலிருந்து சென்னைக்கு ஏற்கனவே இரண்டு பெரிய சாலைகளும் ஒரு சின்ன சாலையும் ஒரு ரயில்பாதையும் இருக்கிறதே!"

"சேலத்திலிருந்து சென்னை செல்லும் இரு சாலைகளும் திருவண்ணாமலை மற்றும்  அதை ஒட்டிய மலைகளைத் தொடாமல் விலகி சுற்றியவாறு செல்கின்றன.
என்னால் எனது ஆலையை அதிலொன்றில் இணைக்கவெல்லாம் முடியாது.
தனி சாலை வேண்டும்.
கோயம்புத்தூரிலிருந்து சேலம் வரை நேரான சாலை வருகிறதே அதை அப்படியே சென்னை வரை நேராக கொண்டுசெல்லவேண்டும்"

"போட்டுத்தருகிறேன். பொதுமக்கள் வசதிக்காக பசுமையான காடு வழியே நான்கு வழிச்சாலை போடுகிறோம் என்று பிரச்சாரம் செய்தால் போயிற்று"

"எனக்கு இங்கே மக்கள் ஆயுதம் தூக்குவார்களோ என்று பயமாக இருக்கிறது."

"அதை நான் போக்குகிறேன்.
எட்டுவழிச் சாலை போட்டு தருகிறேன்.
தீவிரவாதிகள் முளைத்தால் நீங்கள் பீரங்கிகளை கொண்டுவரலாம்.
அதுவும் காடுகளை அழித்தபடி செல்லும்.
இதிலேயே ஒன்றரை லட்சம் மரங்களை வெட்டிவிடுவோம்.
மீதி ஒன்றரை லட்ச மரங்களை நீங்கள் வெட்டிக்கொள்ளுங்கள்"

"சாலை போட எதுவும் பணம் வேண்டுமா?
என் அறக்கட்டளை மூலம் நானே போட்டுவிடவா?"

"வாழவைக்கும் ஜிண்டாலே!
ஏன் உங்களுக்கு வீண் சிரமம்.
இதோ பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கிவிடுகிறேன்.
சென்னைக்குதானே நேர்சாலை கேட்டீர்கள்?!
நான் நேரே சென்னை துறைமுகம் வரை சாலையை போடுகிறேன்.
நீங்கள் இந்நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு கப்பலில் அனுப்பலாம்"

"சரி மலைகளை மட்டும் தந்தால் எப்படி?
உட்கார்ந்து வெட்டியெடுக்க மலைகளைச் சுற்றியிருக்கும் நிலமும் வேண்டும்"

"சுற்றியிருக்கும் 51 கிராமங்களின் 2700 ஏக்கர் விளைநிலங்களை உங்களுக்கு தந்துவிடுகிறேன்"

"நிறைய தண்ணீர் தேவைப்படும்.
அப்படியே அதற்கும் ஏற்பாடு செய்"

"சாத்தனூர் அணை இருக்கிறதே!
விளைநிலமே இல்லை தண்ணீரை வைத்து என்ன செய்ய?!
நேரடியாக அணையிலேயே குழாய் போட்டு உங்கள் ஆலைக்கு தந்துவிடவா?
நீங்கள் உறிஞ்சியது போக மீதிதான் குடிநீர் விநியோகம் செல்லும்"

"ஏற்கனவே 14 கோடியில் 'நந்தன் கால்வாய் திட்டம்' என்ற பெயரில் இரண்டு மாவட்டங்களுக்கு குடிநீர் தரும் திட்டத்தை போட்டுள்ளாயே?!
மலையையும் அணையையும் எனக்கு தந்துவிட்டு அந்த 36 ஏரிகளுக்கு தண்ணீர் எப்படி கொண்டு செல்வாய்?!
மக்கள் கேட்கமாட்டார்களா?!"

"அந்த திட்டத்தை ஆரம்பித்து பாதியில் நிறுத்தி மீதி நிதியை தின்றுவிட்டால் போயிற்று"

"இரும்பு தொழிற்சாலை என்றாலே காற்றில் மாசு அதிகம் இருக்கும்.
6 கி.மீ அந்த பக்கம் இருக்கும் திருவண்ணாமலை கோயில் பாதிக்கப்படுமே?!
ஆன்மீகவாதிகள் எதிர்க்குரல் எழுப்புவார்களே!"

"ஆமாம், நாம் அழிக்கவுள்ள மலைகள் அனைத்துமே மூலிகைகள் நிறைந்தவை.
அதனாலேயே அங்கே கோயில்கட்டி அவ்வப்போது மக்கள் போய்வருமாறு அந்த காலத்து ஆட்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதை சமாளிக்க 'கடவுளே இல்லை', 'கோயில்களே தேவையில்லை', 'திருவண்ணாமலை தீபம் மூடநம்பிக்கை' என்று பிரச்சனை செய்ய கருப்புசட்டை இயக்கங்களை இறக்கிவிட்டால் போதும்.
மூலிகைகள் அழிந்தால் என்ன மெடிக்கலில் மாத்திரைதான் கிடைக்கிறதே!"

"கோயிலைப் பற்றி கவலைப்படும் இந்து அமைப்புகளை சமாளிக்கவேண்டுமே?!"

"என்ன ஜிண்டால் அவர்களே!
போட்டு வாங்குகிறீர்களா?!
நீங்கள் காங்கிரஸ் குடும்பமாக இருந்தாலும் இந்து மத கட்சிகள் மற்றும் அமைப்புகள் உங்கள் சட்டைப்பையில் இருப்பதாகக் கூறுகிறார்களே?!
இந்துமத கட்சிகள் தமிழகம் என்றாலே ஒதுங்கிக் கொள்வார்களே?!"

"சரி நான் அவர்களை கவனித்துக் கொள்கிறேன்.
மேட்டூர் அருகே உள்ள என் பங்காளி மலைமுழுங்கி LMW நிறுவனத்தின் ஆலையை நான் வாங்கிவிட்டேன்.
உன் அரசுக்கு சொந்தமான சேலம் உருக்காலையையும் எப்படியாவது வாங்கிவிடுவேன்.
காங்கிரஸ் போய் பிஜேபி வந்தாலும் சரி இது நடக்கும். சேலம் உருக்காலையின் 4000 ஏக்கர் நிலமும் அதனருகே உள்ள கஞ்சமலையும் என் வசமாகும் பொறுத்திருந்து பார்"

"என்ன ஆச்சரியம்?! காங்கிரஸ் கட்சிக்காரரான உங்களுக்கு பிஜேபியில் அவ்வளவு செல்வாக்கா?!"

"ஆம், இரண்டு கட்சிகளுமே பிச்சைக்காசை விட்டெறிந்தால் போதும் எனக்கு நாயாக வேலை செய்வார்கள்.
இன்னும் சில நாட்களில் சேலம் உருக்காலை நட்டத்தில் இயங்குவதாக பிரதமர் அலுவலகமே பொய்யாக அறிவிக்கும்.
பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் அந்த ஆலை தனியார் கைக்கு வரும்.
அதாவது அது அரசாங்க உருக்காலை எனக்கு சொந்தமாகும்.
அதேவேளையில் அதற்கு தீனி போட அருகிலுள்ள கஞ்சமலையும் எனக்கு சொந்தமாகவேண்டும்.
அதற்கு நீ உதவ வேண்டும்."

"அதற்கென்ன! இதற்காகத்தானே டிம்கோ என்பதை (Tamil Nadu Iron Ore Mining Corporation TIMCO) உருவாக்கியுள்ளேன்.
நிலத்தை கையகப்படுத்துவது கடன் பெற்று தருவது போன்ற தரகர் வேலைகளை செய்துதரத்தானே அது!"

" இதில் ஒரேயொரு பயம்!
என் மலைமுழுங்கி அண்ணன் வேதாந்தா போல பாஜக வுக்கு கமிசன் கொடுத்தது அது கோர்ட் வரை போய் நாறியதுபோல் ஆகிவிடக்கூடாது"

" அட நீங்கள் வேறு!
அவர் வெளிநாட்டில் கம்பெனி நிறுவி இந்நாட்டு கட்சிக்கு நிதி கொடுத்ததால் மாட்டிக்கொண்டார்.
நீங்கள் பிறப்பாலும் தொழிலாலும் ஹிந்தியர் ஆயிற்றே!"

"சரி கவுத்தி மலையை நான் வைத்துக் கொள்கிறேன்.
முதலில் 23 ஹெக்டேர் எழுதித் தாருங்கள்.
சிறிய அளவில் ஆரம்பிப்போம் பிறகு படிப்படியாக விரிவாக்கி விடலாம்.
அந்த பகுதியில் மேலும் சில மலைகள் உள்ளன.
எல்லாம் எனக்குத்தான்!"

"உங்களுக்கில்லாமல் வேறு யாருக்கு?!
நீங்கள் கூறியதுபோலவே செய்து 23 எக்டேரில் பிள்ளையார்சுழி போட்டுவிடலாம்"

"இதற்கெல்லாம் உன் கமிசன் எவ்வளவு என்று கூறு"

"10% தரமுடியுமா ஜிண்டால்ஜி!"

"இது அதிகம்!
இவ்வளவு அதிகம் கேட்டால் நான் தி.மு.க விடம் போய்விடுவேன்.
அவர்கள் என் மலைமுழுங்கி அண்ணன் வேதாந்தாவுக்கு இருப்பது போல எனக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
நான் முறைப்படி தமிழக அரசாங்கத்திற்கும் பங்கு வேறு ஒதுக்கவேண்டும்.
அரசின் கூட்டுடன் நடப்பதாக வெளியே காட்டிக்கொள்ளவேண்டும் அல்லவா?"

"அட என்ன நீங்கள் அரசாங்க பங்கு பற்றியெல்லாம் கவலை பட்டுக்கொண்டு.
எனக்கும் என் கட்சிக்கும் தரும் கமிசனை மட்டும் ஒதுக்குங்கள்.
நீங்கள் முறைப்படி  1% பங்கு மட்டும் டிம்கோவுக்கு ஒதுக்கினால் போதும்"

"என்ன அரசாங்கத்திற்கு வெறும் 1% போதுமா?! மீதி 99% பங்கு எனக்கே எனக்கா?!"

ஜிண்டால் சந்தோசத்தில் அங்கேயே மயங்கிவிழுந்தார்.

ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் சேலம் உருக்காலை ஊழியர்களும் கஞ்சமலை கௌத்தமலை அடிவாரத்து பாமர மக்களும் இன்றுவரை போராடி போராடி ஜிண்டாலை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.