Showing posts with label தஞ்சை பெரியகோவில். Show all posts
Showing posts with label தஞ்சை பெரியகோவில். Show all posts

Tuesday, 24 July 2018

இராசராச சோழன் சிலை போலி

இராசராச சோழன் சிலை போலி


 ஆம்.

இராசராசன் சிலை தமிழகம் மீண்டது எனும் செய்தி தரும் சிறு மகிழ்ச்சியாவது என் இனத்திற்குக் கிடைக்கட்டுமே என்று இதுவரை அமைதியாக இருந்தேன்.


 ஆனால், நம் அறிவு எங்கே செல்கிறது?!


 அனைவரும் ஜோசியத்தில் இறங்கிவிட்டோம்.


 சோழன் வந்துவிட்டான்.

காவிரி வத்துவிட்டது.

2000 ஆண்டுகள் முன் கரிகாலன்.

1000 ஆண்டுகள் முன் ராசராசன்.

 இப்போது சோழன் மறுபடி வருவான் என்றெல்லாம் ஆருடம் நீள்கிறது.


 நாம் பழமை பேசிக் கெட்ட இனம் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த உண்மையை இப்போது போட்டுடைக்கிறேன்.


 ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சை பெரியகோவிலின் ஶ்ரீகார்யமாக 'பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்' என்பவர் இருந்தார்.


 இவர் 1010-ல் ராஜராஜ சோழனுக்கு 74 செ.மீ [2.43 அடி] உயரத்திலும்

 மற்றும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கு 53 செ.மீ. [1.74 அடி] உயரத்திலும் செப்புச் சிலைகளை செய்துள்ளார்.


 ராஜராஜனும் தேவியும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம்.


 ஆனால், இப்போது மீட்கப்பட்டுள்ள சிலைகளின் உயரமோ மாறுபடுகிறது. 


 ராசராசனின் சிலையினுடைய உயரமோ 1 செ.மீ குறைகிறது.

 உலகமாதேவி சிலை உயரமோ 2 செ.மீ வரை குறைகிறது அத்துடன் வணங்கிய நிலையிலும் இல்லை.


 சிலைகள் மட்டுமின்றி ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்துள்ளார் ஶ்ரீகார்யம்.


 இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன்றைக்கும் பேசுகிறது. 


 தற்போது மீட்கப்பட்ட சிலை ராசராசன் சிலை என்பதற்கு நாகசாமியின் புத்தகத்தை ஆதாரமாகக் காட்டுவோர்,

 ஏற்கனவே குஜராத் சென்ற தமிழகத்தின் குழு அப்போதைய முதலமைச்சர் மோடியிடம் கேட்டு சிலையைப் பெறும் கடைசி நேரத்தில் அக்குழுவில் ஒருவராக இருந்த நாகசாமி உயரத்தை அளந்து பார்த்துவிட்டு இந்த சிலை இல்லை என பல்டி அடித்தார் என்பதை மறக்கவேண்டாம்.

 

(தகவல்களுக்கு நன்றி: சிலை சிலையாம் காரணமாம் - 22 

- தி ஹிந்து 05.08.2016)


 நாம் பழமையில் மூழ்கி இன்றைய இழிநிலையை மறக்கமுயல்கிறோம்.

 

 நாம் பழைய வரலாற்றில் பெரிய சாதனைகள் செய்தோம்தான்.

 ஆனால் நாம் மட்டுமே பெரிய பிடுங்கி இல்லை.


 பாரோ மன்னர்கள் கட்டிய பிரமீடு முன்பு இராசராசன் கட்டிய பெரியகோவில் ஒன்றுமேயில்லை.


 சைருஸ் எழுப்பிய பாரசீகப் பேரரசுக்கு முன் சோழப் பேரரசு ஒன்றுமேயில்லை.


 நம்மை காக்க சோழனும் வரப்போவதில்லை எவனும் வரப்போவதில்லை.


வரலாறு அறிக!

அத்துடன் நடைமுறையும் உணர்க!

தமிழ் இனமாக எழுக!

Wednesday, 26 April 2017

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.

Thursday, 17 December 2015

மீட்கப்பட்ட சோழர் ஓவியங்கள்

மீட்கப்பட்ட சோழர் ஓவியங்கள்
÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
விஜயராகவ நாயக்கர் (1645-1673)
என்ற நாயக்க மன்னனைத் தெரியுமா?

இவன்தான் கி.பி.1050களில் சோழர் வரைந்த ஓவியங்களை முழுவதுமாக மறைத்து அவற்றின் மேலேயே வேறு ஓவியங்களை வரைந்தவன்.

1930ல் எஸ்.கே.கோவிந்தசாமி என்ற பேராசிரியர் (அண்ணாமலைப் பல்கலை.) இதை கண்டறிந்து கூறினார்.
பல்கலைக்கழக ஆவணத்திலும் இதை பதிப்பித்தார்.

1960ல் சுப்பராமன் என்பவர் மேலேயுள்ள வரைபடத்தை சேதமில்லாமல் உரித்தெடுக்கும் ஒரு முறையைக் கண்டறிந்து அரசுக்கு பரிந்துரைத்தார்.
1980களின் பிற்பகுதியில் பணி தொடங்கப்பட்டது.

2002ல்தான் அந்த ஓவியங்கள் மீட்கப்பட்டன.
இந்துத்துவத்துடன் தொடர்பில்லாது இருந்தால் இது இன்னமும் தாமதமாக நடந்திருக்கும்.

இங்கே குறிப்படவேண்டிய ஒன்று,
தனது நண்பனான 'சேர' மன்னனுக்கு சுந்தரமூர்த்தி நாயனார் சொர்க்கத்தில் இடம்பெற்றுத் தந்ததை சோழர்கள் வரைந்துள்ளமை.

நன்றி creative. sulekha. com /the-legacy-of- chitrasutra-seven-brihadishvara_383647_blog