Showing posts with label தஞ்சாவூர். Show all posts
Showing posts with label தஞ்சாவூர். Show all posts

Wednesday, 26 April 2017

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.

Thursday, 17 December 2015

மீட்கப்பட்ட சோழர் ஓவியங்கள்

மீட்கப்பட்ட சோழர் ஓவியங்கள்
÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
விஜயராகவ நாயக்கர் (1645-1673)
என்ற நாயக்க மன்னனைத் தெரியுமா?

இவன்தான் கி.பி.1050களில் சோழர் வரைந்த ஓவியங்களை முழுவதுமாக மறைத்து அவற்றின் மேலேயே வேறு ஓவியங்களை வரைந்தவன்.

1930ல் எஸ்.கே.கோவிந்தசாமி என்ற பேராசிரியர் (அண்ணாமலைப் பல்கலை.) இதை கண்டறிந்து கூறினார்.
பல்கலைக்கழக ஆவணத்திலும் இதை பதிப்பித்தார்.

1960ல் சுப்பராமன் என்பவர் மேலேயுள்ள வரைபடத்தை சேதமில்லாமல் உரித்தெடுக்கும் ஒரு முறையைக் கண்டறிந்து அரசுக்கு பரிந்துரைத்தார்.
1980களின் பிற்பகுதியில் பணி தொடங்கப்பட்டது.

2002ல்தான் அந்த ஓவியங்கள் மீட்கப்பட்டன.
இந்துத்துவத்துடன் தொடர்பில்லாது இருந்தால் இது இன்னமும் தாமதமாக நடந்திருக்கும்.

இங்கே குறிப்படவேண்டிய ஒன்று,
தனது நண்பனான 'சேர' மன்னனுக்கு சுந்தரமூர்த்தி நாயனார் சொர்க்கத்தில் இடம்பெற்றுத் தந்ததை சோழர்கள் வரைந்துள்ளமை.

நன்றி creative. sulekha. com /the-legacy-of- chitrasutra-seven-brihadishvara_383647_blog