Thursday 30 July 2015

அம்பேத்கர்

மகாபாரதத்தை எழுதித்தர சூத்ரன் வியாசரிடம் போனார்கள்.
ராமாயணத்தை எழுதித்தர சூத்ரனான வால்மீகியிடம் போனார்கள்.
இன்று சட்டம் எழுதித்தர என்னிடம் வந்துள்ளார்கள்.
#அம்பேத்கர்.

Saturday 25 July 2015

புலிகளே அச்சமா?

எனது இந்த பதிவு முழுக்க முழுக்க புலிகளுக்கானது;

உலகம் முழுவதும் பதுங்கியிருக்கும் விடுதலைப்புலிகளுக்கு இதைக் கொண்டுசெல்லுங்கள்;


இதுதான் சரியான நேரம் புலிகளே!
எங்களைக் காப்பாற்றுங்கள்;
நான் விசாரித்துவிட்டேன்;
தமிழகத்தில் இயங்கிவந்த விடுதலை இயக்கங்கள் மறைமுகமாக அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டன;
புலிகளைத் தவிர இனி தமிழர்களுக்கு வேறு பாதுகாப்பு இல்லை;

உங்களுக்கு ஏழுகோடித் தமிழகத் தமிழர் சார்பாக ஒரு முக்கியமான கோரிக்கை;

முதலில் ஈழவிடுதலையை கைவிடுங்கள்;
இனிநாம் தமிழ்க்குடியரசு அமைக்கப் போராடுவோம்;
ஈழத்தமிழருக்கு உள்ள அத்தனை சிக்கல்களும் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் அத்தனைத் தமிழருக்கும் உள்ளன;

இன்று தமிழகத்தில் விடுதலை உணர்வு பரவிவருகிறது;
பலநூறாயிரம் தமிழ் இளைஞர்களின் கைகள் ஆயுதத் தாகத்தால் துடிதுடித்துக்கொண்டிருக்கின்றன;
ஈழத்தில் இறுக்கமான கண்கானிப்பு தமிழகத்தில் இல்லை;
ஈழத்தைப் போல 'பதினொரு' மடங்கு பெரிய பரப்பளவு கொண்ட தமிழ்க்குடியரசு தம்மை மீட்க அழைக்கிறது;
இனியும் காத்திருக்கவேண்டாம்;

தமிழக அரசியலைத் தவிர்த்ததன் மூலமும் தமிழக விடுதலைக் குழுக்களுடன் கைகோர்க்காததன் மூலமும் விடுதலைப் புலிகள் மாபெரும் தவறு செய்துவிட்டீர்கள்;

போனது போகட்டும், இனி அதைப் பேசி பலனில்லை;
நம் தேசியத்தலைவர் வரும்போது வரட்டும், நீங்கள் தமிழகத்திற்கு வாருங்கள்; பாசறைகளை நிறுவுங்கள்; தமிழகத்தில் உங்களுக்குத் தெரியாத தமிழ்தேசியவாதிகள் கிடையாது; தமிழக மக்கள் தமது முழு ஆதரவையும் வழங்குவார்கள்; தமிழகத்தில் தமிழ்த்தேசியம் கைஓங்கி வருகிறது;

தமிழகத்தில் அரசியல் தமிழர் கைக்கு வருமுன் நீங்கள் அங்கே வேரூன்றவேண்டும்; ஏனென்றால், தமது பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் தலைவர் கிடைத்துவிட்டால் மக்கள் ஆயுதவழிக்கு உதவமாட்டார்கள்;
அரசியல் ரீதியாக நமக்கு ஒருக்காலும் தீர்வு கிடைக்காது;
எனவே, ஈழத்தில் சிந்திய குருதியானது காயும் முன்பு தமிழகத்தில் வேரூன்றும் விடுதலைக்கு அது பாய்ச்சப்படவேண்டும்;

ஏற்கனவே ஆயுத, தொழில்நுட்ப ரீதியில் நாம் நான்கு வருடம் பின்தங்கிவிட்டோம்; இனியும் தாமதித்தால் நமது எதிரிகள் படைவலிமையில் பல மடங்கு நவீனமாகிவிடுவார்கள்;

எமதருமை ஈழமக்களே!
எம் கண்ணின் மணிகளான  புலிகளே!
தினந்தோறும் செத்துப்பிழைக்கும், எந்நேரமும் இனவழிப்பை எதிர்நோக்கியிருக்கும் நமது மக்களைக் காப்பாற்றுங்கள்.

நீங்கள்தான் எமது கடைசி நம்பிக்கை.

தமிழரின் தாகம் தமிழ்த்தாயகம்.

முதல் நெருப்பு 'அப்துல் ரவூப்'

தமிழீழவிடுதலைப் புலிகள் தலைவர் ஈழத்திலிருந்து ரகசியமாக இருவரை அனுப்பி ஆறுதல் கூறினார்.
அப்துல் ரவூஃப்-ற்காகமாவீரர் கல் நடப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கூறியதுடன்,
தைரியமுடன் இருங்கள் என்று கூறிய தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன் அவர்களையும் நன்றியுடன்நினைவு கூறுகிறேன் .

- அப்துல் ரவூபின் தந்தையார்

(தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாக முதன்முதலாகத் தீக்குளித்த அப்துல் ரவூப் பற்றிய நூலான 'முதல் நெருப்பு' நூலிலிருந்து)

இலங்கை மொத்தமும் எமது மண்

இலங்கை மொத்தமும் எமது மண்.

இலங்கை, திஸ்ஸமகரம என்ற இடத்தில் கிடைத்துள்ள 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துருக்கள்.

http://tamilnet.com/art.html?catid=7
9&artid=32303

ஓமன் நாட்டில் தமிழ்

ஓமன் நாட்டில் கிடைத்துள்ள கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துருகள்
http://tamilnet.com/art.html?catid=7
9&artid=35707

திருவள்ளுவர் காலத்துத் தமிழ் எழுத்து

திருவள்ளுவர் காலத்துத் தமிழ் எழுத்து.
எழுத்துக்கள் மேல் வரும் தொடர்ச்சியான கோடு தவறு என்கின்றனர் பலர்.

தமிழ் எழுத்துகள் பிராமி ஆனது எப்படி?

தமிழ் எழுத்துகள் பிராமி ஆனது எப்படி?

1850-களில் ஜேம்ஸ் ப்ரின்ஸெட் என்பவர்தான் இந்தியாவில் காணப்படும் கல்வெட்டு எழுத்துகளை பிராஹ்மி என்றே குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு முன்பே இப்பெயரானது ப்யூலர் என்ற ஆய்வாளரால் வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் காணப்பட்ட ஆரம்பகாலக் கல்வெட்டுகள் ப்ராஹ்மி வகையினதாக இருந்தாலும், ப்ராகிருத மொழிக்கான ப்ராஹ்மி எழுத்துகளிலிருந்து மாறுபட்டிருந்தது.

1924-ல் கே.வி.சுப்பிரமணிய ஐயர், இதற்குத் தீர்வுகாண தமிழ்-பிராஹ்மி என்று தனியாக பெயரிட்டு வகைப்படுத்தினார்.

கி.மு.300 வாக்கில் எழுதப்பட்டதான 'சமவயங்க சுத்த' என்ற சமண நூலில் 18 வகையான எழுத்துகள் குறிக்கப்பட்டுள்ளன.
பம்பி, தாமிலி போன்றவை அதில் இடம்பெற்றுள்ளன.

அதில் 'பம்பி' என்பது பிராகிருத எழுத்தையும்,
'தாமிலி' என்பது தமிழ் எழுத்தையும் குறிக்கிறது என்று கொள்ளலாம்.

இது தமிழர்கள் அக்காலத்தில் பயன்படுத்திய எழுத்துமுறை 'தமிழி' என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ண இடமளிக்கிறது.

ஆக அவ்வெழுத்துக்களை தமிழ்பிராமி என்றழைக்காது தமிழி என்றே அழைக்கலாம்.

சிந்துசமவெளி ஏறுதழுவுதல்

சிந்துசமவெளியில் கிடைத்துள்ள நாணயத்தில் ஏறுதழுவுதல்

சீன-தமிழர் தொடர்பு

தஞ்சாவூரில் கிடைத்துள்ள 1900 ஆண்டுகள் பழமையான நாணயம்

கரூர் கிரேக்க நாணயம்

கரூரில் கிடைத்த கி.மு.300 வரை பழமையான காசு

சிந்து சமவெளியில் முருகன்

சிந்து சமவெளியில் கண்டெடுக்கப் பட்ட முருகன் உருவம் பதித்த நாணயம்

பானை ஒரி

எகிப்தில் செங்கடல் கரையின் ரோமானியக் கோட்டையில் கிடைத்த 'பானை ஒரி' என்று தமிழ்(பிராமி)ல் எழுதப்பட்டுள்ள கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடு

பெரும்பட்டன் கல்

தாய்லாந்தில்
க்வான் லுட் பட் (khwan lut pat)
என்ற இடத்தில் அருங்காட்சியகத்தில்
கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த
'பெரும்பட்டன் கல்' என்ற படிமம் வைக்கப்பட்டுள்ளது.

2200 ஆண்டுகள் பழமையான தமிழர்-தாய்லாந்து தொடர்பு ஆதாரம்

2200 ஆண்டுகள் பழமையான தமிழர்-தாய்லாந்து தொடர்பு ஆதாரம்

தாய்லாந்தில் முனைவர்.பெல்லினா என்ற பிரெஞ்சு அகழ்வாய்வாளரால் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடு தமிழ்-பிராமி எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
மொழி=தமிழ், எழுத்துமுறை= பிராமி (ப்யூலர் என்ற வெள்ளைக்காரன் வைத்த பெயர்),

இது கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இதில் காணப்படும் எழுத்துக்கள் து-ர-ஓ.

ஏட்டுச் சுரைக்காய் பொதுவுடைமை

ஏட்டுச் சுரைக்காய் 'பொதுவுடைமை'
=================

அன்னா லூயிஸ் ஸ்ராங்க் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் மாவோ ஆண்ட சீனா பற்றி கூறியது:

'கடந்தகாலப் புரட்சிகள் அனைத்தும் காலப்போக்கில் பின்னடைந்து அவை சாதித்ததில் பெரும்பகுதி கொள்ளையடிக்கப்பட்டதை சீனமக்கள் கவனத்தில்கொண்டுள்ளனர்; பிரிட்டனில் கிராம்வெல் முதலாவது சார்லசு மன்னனின் தலையைக்கொய்தான், மன்னர்குலம் மடிந்ததுபோல் காணப்பட்டது, ஆனால் 20ஆண்டுகளில் இரண்டாம் சார்லசு எதிர்ப்புரட்சிப்படையின் அவசியமின்றி அரியணை ஏறினான்; பல பிரபுத்துவ மனோபாவங்கள் இன்றும் பிரிட்டனில் நிலைத்திருக்கின்றன; பிரான்சில் நிகழ்ந்த புரட்சி பல ஏற்றத்தாழ்வுகளின் பின் நெப்போலியன் அரசுக்கு வழிவிட்டது; அமெரிக்க மக்களின் கைகளில் ஆட்சியை வைப்பதாகக்கூறிய தேன்மொழிகளை, 'மக்கட்கூட்டத்தின் ஆட்சிக்கெதிரான தடைகளும் சமநிலைகளும்' நிறுவிய அரசியல் சட்டவழமையானது விரைவில் வெற்றிகொண்டது; அமெரிக்க உள்நாட்டுப்போர் நீக்ரோ மக்களை விடுதலை செய்து அரசில் ஒருபங்கும் கொடுத்தது; ஆனால் 10ஆண்டுகளில் அவர்கள் புதியவடிவில் அடிமைப்படுத்தப்பட்டனர்".

இவர் கூறியது போலவே உலகில் நடந்த அத்தனை புரட்சிகளையும் போல 4கோடி மக்கள் உயிரை ஈந்து மாவோவின் சீனப் புரட்சி சாதித்ததையும் அவருக்குப் பிறகு வந்த டெங் கொள்ளையடித்து முதலாளித்துவ நாடாக்கிவிட்டான்;

இன்று தமிழினப்படுகொலையின் பங்காளியான சீனா, எலும்பை மக்கச்செய்யும் அமிலங்களை இலங்கைக்கு அனுப்பி இனப்படுகொலையை மறைக்க உதவியிருக்கிறது;
லெனினும் ஸ்டாலினும் 2கோடி மக்களின் உயிரையீந்து இரசியப்புரட்சியில் சாதித்ததை அவருக்குப் பிறகுவந்த குருஷ்சேவால் கொள்ளையடிக்கப்பட்டு மெல்ல ஏகாதிபத்திய நாடாகி இன்று தமிழ்மண்ணில் கூடங்குளம் அணுவுலையாக நிற்கிறது;

பொதுவுடைமைவாதிகள் என்னவோ தொழிலாளர் திரண்டு புரட்சி நடத்திவிட்டால் அதன்பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்பதுபோல் பாடம் நடத்துவார்கள்;
கியூபா வெற்றிநடை போடுகிறதே என்பவர்கள் அங்கே இருக்கும் தலைவனைக் கவனியுங்கள்; அவர் இருக்கும்வரைதான் அது வீறுநடை போடும்;

இன்று தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, விடுமுறை, மருத்துவம் எல்லாம் கிடைக்க பொதுவுடைமையே காரணம் என்பவர்கள் சிந்தியுங்கள்;
முதலில் உழைக்கும் அத்தனைபேருக்கும் அவை கிடைக்கவில்லை என்பதோடு உலகில் தொழிலாளர்கள் நடத்திய நீண்டநெடிய போராட்டங்களை பொதுவுடைமையாளர்கள் சொந்தம் கொண்டாடவும் முடியாது;

என்று பிரமீடு கட்டும் தொழிலாளர்கள் தரமான உணவுக்காக வேலைநிறுத்தம் செய்தனரோ அன்றே வர்க்கப்போராட்டம் தொடங்கிவிட்டது;

காரல்மார்க்சு எழுதித்தான் தொழிலாளர்கள் போராட தொடங்கியதாக கொள்ளவியலாது;

பொதுவுடைமை ஒரு அருமையான கொள்கை; ஏட்டைப் புரட்டினால் எல்லாமே அருமையான கொள்கைகள்தான்; ஆனால், நடைமுறை என்பது வேறல்லவா?!

தமிழகத்தில் இருக்கும் பொதுவுடைமையாளர்களைப் பற்றி கூறவும் வேண்டுமா?!
சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பையோ, வியட்நாமிடம் சீனா மண்ணைக்கவ்வியதையோ,இரசியாவின் செசன்யா ஆக்கிரமிப்பையோ, சோவியத் ஆப்கானிஸ்தானில் மண்ணைக் கவ்வியதையோ, ஹங்கேரியின் தொழிலாளர் கிளர்ச்சியை சோவியத் படைவலிமையால் நசுக்கியதையோ, அதிகாரப் பகிர்வு இல்லாததால் சோவியத் உடைந்துபோனதையோ எங்கும் கூறமாட்டார்கள்;

அமெரிக்கா செய்தால் முதலாளித்துவம், இரசியா செய்தால் அது பொதுவுடைமை;
பொதுவுடைமைக் கொள்கைகளின் கனவில் மிதக்கும் கம்யூனிஸ்டு தமிழர்களே கண்களைத் திறந்து நடைமுறையைக் கவனியுங்கள்;

பொதுவுடைமை என்பது முதலாளி வர்க்கத்தாலோ ஏகாதிபத்திய நாடுகளாலோ மிகவும் பாதிக்கப்பட்ட நாட்டுமக்களுக்காக உருவானது;
நமக்கும் அதேபோன்ற பாதிப்பு இருந்தாலும் அதைவிட தலையாயப் பிரச்சனையாக இனப்பிரச்சனை முதன்மையாக உள்ளது;

மக்கள் எந்த விதத்தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனரோ அதை எதிர்த்துப் போராட அவர்களைத் திரளச்செய்வதே புரட்சி;

நம்மை சுற்றியுள்ள அடக்குமுறைகளைக் கூர்ந்துநோக்குங்கள் அவை பெரும்பாலும் இனரீதியானவை;
பொதுவுடைமை ஒருநாளும் நமக்கு சரிவராது;

சீனாவின் கரும்பு விவசாயிகளுக்கு கூலியுயர்வு கேட்டு ஆசியாவின் முதல் பொதுவுடைமையாளர் சிங்காரவேலர் தலைமையில் தமிழகத்தில் போராடினோமே அதனால் என்னத்தைக் கண்டோம்;

தோழர் ஜீவானந்தம் தவிர்த்து நமது தாய்நிலம் 1956ல் மொழிவாரி மாநிலங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டபோது எந்த பொதுவுடைமைக் கட்சி குரல்கொடுத்தது;

ஈழத்தில் புலிகளின் ஆயுதப்போராட்டத்திற்கோ ஈழப்படுகொலைக்குப் பிறகான தமிழரின்விடிவுக்கோ எந்த கம்யூனிஸ்டு நாடு குரல்கொடுக்கிறது?
பொதுவுடைமை நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஆதரவாக அரணாக காத்துநிற்பது ஏன்?

ஆகவே தமிழர்களே இனவெழுச்சி ஒன்றுதான் நமக்கான விடிவை நல்கும்;

ஸ்டாலின் கூறுகிறார் 'ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ஒடுக்கும் மக்களின் தொழிலாளர் வர்க்கம் குரல்கொடுக்காத போது பிரிவினையைப் பொதுவுடைமை ஆதரிக்கும்'.

இது அவரது தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம்; 
ஸ்டாலின் சாயம்வெளுத்து சோவியத் யூனியன் சிதறிவிட்ட நிலையில் இன்று அவர்களை மறந்துவிட்டு நமது  தனித்தன்மையான பிரச்சனைகளை  அதற்கான தனித்தன்மையோடு அணுகுவதே சரி; 

10,000ஆண்டுகள் பண்பாட்டுப் பழைமை கொண்ட நம் தமிழினத்திற்கு உண்மையான பொதுவுடைமை என்பது இனரீதியான அடக்குமுறைக்கு இனரீதியாகக் கிளர்ந்தெழுந்து வல்லாதிக்கத்தை தோற்கடித்து ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதே ஆகும்.

ஒரு பறைத்தமிழன் விடாமல்

ஒரு பறைத்தமிழன் விடாமல் பறைசாற்றுங்கள்

*************************
*************************
பார்ப்பாரும் பறையரும் ஒருகுலத்தவரே.

வருங்காலத்தைப் பார்த்துக் கூறுபவர்,
தூதுசெல்வோர்,
பூசைமுடிந்ததும் பொருட்களைப் பெறுவோர் பார்ப்பனர் ஆவர்.

சோழர்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கிய சதுர்வேதி மங்கலங்களில் சாகுபடி செய்யும் உரிமையும் அப்பார்ப்பனருக்கு இல்லை.

பூசை உரிமைகள்  பார்ப்பனர் எனும் சாதிக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டவில்லை.
முறையறிந்த /
திறனுடைய எவரும் பூசை செய்யலாம்,
இவ்வுரிமை ஏலமும் விடப்பட்டுள்ளது.

பார்ப்பனருக்கான சிறப்புச் சலுகைகள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை.

சேர்ந்து வாழும்பகுதி 'சேரி' எனப்பட்டது.
கிரேக்கர் பகுதி ‘யவனச் சேரி’ எனப்பட்டது.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும்
ஊரில், பார்ப்பனரும், பாணரும் இருந்தனர்.
ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்கள் வாழ்ந்த இடத்தின் பெயர் பார்ப்பனச் சேரி ஆகும்.
தேவாரம் பாடும் தமிழ்மரபினர் பிடாரர் எனப்பட்டனர்.
பவன'பிடாரர்' தஞ்சை பெரியகோயிலின் தலைமைக்குரு.
பார்ப்பனர்கள் இவருக்கு கீழ்.

பறையர், என்போர் தமிழரின் அறிவு மரபினர்.
பள்ளர்
என்போர், தமிழரின் வேளாண் மரபினர்.
இராஜராஜன் தன்னாட்டுப் பார்ப்பனர்களைக் கொன்றான் என்கிறது சாளுக்கியக் கல்வெட்டு.

பார்ப்பாரில் பெரும்பகுதியினர் வள்ளுவர்,
பறையர் உள்ளிட்ட அறிவார்ந்த
பிரிவினரே.

காஞ்சி சங்கராச்சாரி கருவறைக்குள் நுழையக்கூட  அனுமதி கிடையாது.

1335ல் மதுரை முகமதிய ஆட்சியை எதிர்த்து தென்னிந்தியாவில் இருந்த பிராமண ஆதரவாளர் இணைந்து அமைத்த அரசே விஜயநகரப்பேரரசு.

அதன் ’நாயக்கர்களில்’ கணிசமானோர் தமிழரல்லாத பார்ப்பனர்.

கிருஷ்ண தேவராயர் தன்மகன் திருமலாவைக் கொன்ற சாளுவ திம்மா என்ற பிராமண அமைச்சரைக் கொல்லவில்லை.

’திராவிடர் என்போர் தென்னாட்டுப் பார்ப்பனரே’.
  ராசராசனின் தமக்கையார் ஒரு தேவரடியார் என்றால் (நாயக்கர்களின்)தேவதாசி போன்ற இழிவானவர் அல்ல என்பது புரியும்.

அந்தணர் என்பார் பிராமணர் அல்லர்.
பிராமண ஆதிக்கம்சாதி ஏற்றத்தாழ்வு நாயக்கராட்சியில் திணிக்கப்பட்டது.

மேலும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்.
அதிர்ச்சியான தகவல்கள்.
ம.செந்தமிழனின் 'திராவிட அவதூறும் தமிழர் மரபும்'

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=5875&Itemid=139

பறையருக்கு இறையிலி நிலங்கள் வழங்கிய இராசராசன்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11707&Itemid=139

இஸ்ரேலை உலுக்கிய யூதன்

இஸ்ரேலை உலுக்கிய யூதன்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தமிழர்களில் துரோகிகள் அதிகம் என்பவர்க்கு இந்த பதிவு;

யூதர்கள்; 1900வருடங்கள் உலகம் முழுவதும் துரத்தியடிக்கப்பட்டவர்கள்;

வரிசையாக இனப்படுகொலைகளுக்கு ஆளானவர்கள்; பத்தில் ஒன்பதுபேர் பலியானவர்கள்; இனப்பற்றிலும் ஒற்றுமையிலும் ஈடற்றவர்கள்; வரைபடத்தில் உற்றுப்பார்த்தாலும் தெரியாத இசுரேல் நாட்டை அமைத்து சுற்றி இருக்கும் பெரிய பெரிய வல்லரசு நாடுகளையே பந்தாடுபவர்கள்;

கிறித்துவ வெறியர்கள், அமெரிக்கக் கட்டப் பஞ்சாயத்து அடியாட்கள், இனவெறியர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்கள்;

அப்பேர்ப்பட்ட யூதர்களில் துரோகிகளே இருந்ததில்லையா என்று கேட்டால் இருந்தார்கள்;

1968ல் பெல்ஜியத்தின் SGM என்ற நிறுவனத்திடம் இருந்து ஜெர்மனியின் அஸ்மாரா என்ற நிறுவனத்தின் பெயரில் யுரேனியம் வாங்கி அதை லைபீரியா நாட்டுக் கப்பல் மூலம் நடுக்கடலுக்குக் கொண்டுவந்து ரகசியமாக இசுரேலுக்குக் கொண்டுசென்றது இசுரேலிய உளவுத்துறை மொஸாட்;

டிமோனோ என்ற இடத்தில் அணுஉலையில் மெர்டெசாய் வனுனு என்ற யூதர் வேலைக்கு சேர்ந்தபிறகு தெரிந்தது அங்கே அணுவுலை என்ற பெயரில் ரகசியமாக அணுஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று; சுற்றியுள்ள நாடுகளெல்லாம் அணுஆயுதம் தயாரிக்கும்போது தன்னாடும் அணுஆயுதம் தயாரிப்பதை அவர் ஏனோ விரும்பவில்லை;

இதை அறிந்த மேலிடம் வேலையைவிட்டு நீக்கிவிட ஆசுத்திரேலியா போய் ஓட்டுநராக பணிபுரிய ஆரம்பித்தார்; ஆனால்,அவர் ரகசியமாக டிமோனா ஆலையில் எடுத்த படங்களை இங்கிலாந்தின் 'சண்டே டைம்ஸ்' ஊடகத்திற்கு கொண்டுசேர்ப்பதன் மூலம் அணுஆயுத உற்பத்தியை தடுக்கலாம் என்று நினைத்தார்;
அவரை செரில் என்ற அழகியை அனுப்பி ரோம் அழைத்துவந்து அங்கேயிருந்து மொசாட் கடத்திவிட்டது; ஆனாலும் டிமோனோவில் நடப்பது அணுஆயுத தயாரிப்புதான் என்பது படங்களுடன் உலகிற்கு 'சண்டே டைம்ஸ்' மூலம் தெரியவந்துவிட்டது;

நாட்டுக்கு இரண்டகம் செய்த வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோது 'என்னை ரோமிலிருந்து கடத்தினார்கள்'(மேலே படம்) என்று உள்ளங்கையில் எழுதி ஊடகவியலாருக்குக் காட்டிவிட்டார் மெர்டெசாய்; யூதர் என்கிற ஒரே காரணத்தால் மரணதண்டனையிலிருந்து தப்பினார்;

இவர்போல ஐன்ஸ்டீன்(யூதர்) இசுரேல் அதிபராகப் பொறுப்பேற்க மறுத்தார்;
டான் எர்ட், மரியானெ என்ற இரு மொசாட் உளவாளிகள் நார்வேயில் பிடிபட்டபோது இசுரேலைக் காட்டிக்கொடுத்தனர்;
யெஹூதா என்ற உளவாளி தவறான தகவல்கள் கொடுத்து ஊழல் செய்தார்;
லெபனானில் ஜோசஃப் என்ற யூதன் இசுரேல் மீது தாக்குதல் நடத்த அராபியர்களுடன் கூட்டுசேர்ந்தான்(இவனது மனைவி சூலா அதை முறியடித்தார்);

இன்னும் நிறையபேர் உண்டு; ஆக, துரோகிகள் இல்லாத இனமே கிடையாது;
அவர்களைக் கைகாட்டி மற்றவர்கள் கடமையிலிருந்து விலகவும் கூடாது; விலகினால் தானும் துரோகி என்று ஒத்துக்கொள்ளவேண்டும்.

திருமா ரசிகர்களே

திருமா ரசிகர்கள் இதைப் படித்துவிட்டு தூக்குபோட்டு செத்துவிடாதீர்கள்

http://savukku.blogspot.in/2009/08/blog-post_17.html?m=1

தமிழருக்கு "எமனான" தமிழ்

தமிழருக்கு "எமனான" தமிழ்:
************************

என்ன தலைப்பு அதிர்ச்சியாக இருக்கிறதா?
ஆனால், இதுதான் கசப்பான உண்மை; தமிழருக்கு எதிராகத் தமிழை எப்படி பயன்படுத்துவது என்பதை நம் இன எதிரிகளும் துரோகிகளும் நன்றாகவே அறிந்துள்ளனர்;

தொல்காப்பியத்துக்கு உரை எழுதி, இராவண காவியம் தடையை நீக்கி, கண்ணகிக்கு சிலை வைத்து, தமிழுக்கு செம்மொழிப் பட்டம் வாங்கிக் கொடுத்து, திருவள்ளுவருக்கு சிலை எடுத்து தமிழ்பற்றாளனாகக் காட்டிக்கொண்டே தமிழர் தாலியை அறுத்த கொலைஞன்தான் இந்த உத்தியை அறிமுகப்படுத்தியது; இது ராசபக்ச போர்முடிந்த மறுநாள் தமிழில் உரையாற்றியது போன்றது;

2009ல் பல இலக்கம் தமிழர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடைசிக்கட்டத்தில் நின்றிருந்த நேரம் ஒரு தமிழன்  ஆசுக்கார் வாங்கச் செல்கிறான், அவன் அன்று அந்த விருதைத் தூக்கி தரையிலடித்துவிட்டு 'என் மக்கள் கொல்லப்படும் இந்நேரத்தில் எனக்கு இது தேவையில்லை' என்று மட்டும் கூறியிருந்தால் உலகமே அதிர்ந்திருக்கும் பல இலக்கம் உயிர்கள் காக்கப்பட்டிருக்கும்;ஏன் இதற்கு முன் நடிகர்களும் பாடகர்களும் கவிஞர்களும் மக்களுக்காகக் குரல் எழுப்பியதே இல்லையா;
சார்லி சாப்ளின்,மார்ல் பிராண்டோ, அருந்ததி ராய் போன்றவர்கள் குரல் எழுப்புவதில்லையா;
அவனோ நிலைமையை எவ்வளவு தந்திரமாகச் சமாளித்தான்; ஆசுக்கார் மேடையில் தமிழில் பேசினான்;

அவன் பேசியது இந்திய ஊடகங்களில் வரவும் இல்லை; இன்று இணையத்தில் தேடினால் கிடைக்கவும் செய்யாது; நாமும் அவன் அன்று காற்றில் கரைத்த வார்த்தைகளை எண்ணி மெய்சிலிர்க்கிறோம்;

நான்கூடத் தமிழ் பற்றிக் கவலைப்பட யாருமில்லை என்றுதான் நினைத்தேன்; உண்மையில் தமிழ்மேல் பைத்தியம் பிடித்த ஒரு கூட்டமே இருக்கிறது; தமிழர் வரலாற்றைக் காக்க, தமிழ் இலக்கியத்தைக் காக்க, தமிழின் புகழை உலகெல்லாம் பறைசாற்ற, எழுத்துலகில் தமிழை முன்னேற்ற, இணையத்தில் தமிழை பயன்படுத்த என்று முழுமூச்சாக செயல்படும் ஆயிரக்கணக்காணோர் உள்ளனர்;

ஆனால், கேவலம் தமிழனைக் காப்பாற்ற, இனவிடுதலைக்காகப் போராட ஒருவர்கூட இல்லை என் சொந்தங்களே ஒரு தனிமனிதர் கூட இல்லை;

எம் தேசியத் தலைவர் தமிழில் புலமை பெற்று தமிழனுக்காகப் போராடவில்லை; தமிழரசனாரோ,வீரப்பனாரோ இன்னும் பல விடுதலை வீரர்களோ தமிழ்ப்பற்றின் காரணமாகப் போராடவில்லை; அவர்களிடம் இருந்தது இனப்பற்று மட்டும்தான்;

சுற்றி பாருங்கள் தமிழர்களே; கண்களைத் திறந்து பாருங்கள்; நம்மிலிருந்து வந்தவர்கள், நம்மிடம் பாடம் கற்றவர்கள், நம்மால் ஆளப்பட்டவர்கள், நம்மால் நேர்மையாக நடத்தப்பட்டவர்கள் இன்று நம்மையே அடக்கியாளும் வல்லமை பெற்றிருக்கும் காரணம் என்ன?

அவர்கள் மொழிப்பற்றா இல்லைவேயில்லை இனப்பற்று; சக இனத்தை அழித்தேனும் தன்னினமும் சந்ததிகளும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்கிற வெறி;

தமிழைத் தேசியமொழியாக்க வக்கில்லையென்றதும் காகத்தை தேசியப்பறவையாக அறிவியுங்கள் என்றாராம் அண்ணா, அப்போதுதானே அதையே சொல்லி ஏமாற்றமுடியும்;

2,30,130 சகீமி பரப்புள்ளது தமிழர் தாய்நிலம்; இதில் கேவலம் 1,30,058 (56%) மட்டும் பிச்சை போடுவதுபோல போட்டுவிட்டு அதற்கு 'தமிழ்நாடு' என்று தமிழ்ப்பற்றோடு  பெயர் வைத்து ஏமாற்றிவிட்டனர்; (அதையும் 1920லிருந்து வந்தேறிகளே ஆண்டுவருகினறனர்;
தலைநகருக்கு சென்னப்ப நாயக்கன் என்ற ஆங்கிலேயருக்கு முதலில் நிலம்விற்ற தெலுங்கனின் பெயரைவைத்து சரிகட்டியாயிற்று);

நம்மை 800வருடமாகக் கண்டவனும் ஆள்கிறான்;
70,000சகீமி(30%) மூன்று மாநிலங்கின் ஆக்கிரமிப்பில்,
21,952சகீமி(9.5%) சிங்களவர் கையில்,
8,073சகீமி (3.5%) அந்தமான்-நிகோபர் தீவுகள் வங்காளியர் ஆதிக்கத்தில்,
இவை அனைத்து இந்தியா என்ற வல்லாதிக்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில்;

இதை நினைத்து கவலைப்பட ஒருவர் கிடையாது; இனியும் எத்தனை நாட்கள்தான் முன்தோன்றிய முன்தோன்றிய என்று பழமையையே பேசிக்கொண்டிருப்பீர்கள்;

மொழிப்பற்றை விடுங்கள்; அதிகாரம் இல்லாமல் என்னதான் நீங்கள் கரடியாய்க் கத்தினாலும் கூட்டமாகக் கூச்சல் போட்டாலும் தமிழை அழிப்பவர்கள் ஓயமாட்டார்கள், தமிழ் மொழியின் அழிவு சிறிது தள்ளிப்போடப்படும் அவ்வளவுதான்;  மொழிப்பற்று இனத்தைக் காக்க உதவி செய்யுமேயன்றி விடுதலையைப் பெற்றுத் தராது; இனியும் குருடர்களாக இருக்காதீர்கள்; தமிழ்பேசும் அனைவரும் தமிழர் கிடையாது அதை உணருங்கள்; 'என்னையும் தமிழனாக ஏற்றுக்கொள் இல்லையென்றால் துரோகம் செய்வேன்' என்று சொல்லும் வந்தேறிகளை அறவே ஒதுக்குங்கள்; மொழி என்பது இனத்தின் ஒரு கூறு மட்டுமே; எவன் பிறப்பால் தமிழனோ, எவன் இனத்தால் தமிழனோ, எவன் தமிழ்மக்கள் மீது அக்கறை கொண்டவனோ அவனை மட்டுமே நம்புங்கள்; நமது பிரச்சனைகளை தமிழரிடம் மட்டுமே சொல்லுங்கள்;
மற்ற எவரிடமும் மூச்சுவிடாதீர்கள்;

என்று நாம் வல்லரசாகிறோமோ அப்போது மற்றவர்கள் நம் வரலாற்றைத் தேடித் தேடி படிப்பார்கள்; நம் மொழியை விழுந்து விழுந்து கற்பார்கள்; நமக்கு ஒரு நாடு வேண்டும்;

நமது வீரவரலாற்றை எண்ணிப்பாருங்கள்;
ஆனால்,அத்தகைய வரலாறு இல்லாத இனமாக இருந்தாலும் நாம் போராடித்தான் ஆகவேண்டும்;

தெளிவான வரலாறுகூட இல்லாத நாடோடி இனமெல்லாம் தம் சின்னஞ்சிறு தாய்நிலத்தை காக்க இனப்பற்றோடு போராடுகிறார்களே,அவர்களைப் பார்க்கும்போது உங்களுக்குக் கூசவில்லையா?

*தமிழன் என்ற பெருமைகொள்ள இன்று நம்மிடம் எதுவும் இல்லை*

ஆகவே, மற்றவர்கள் மதிக்கும் நிலையில் இல்லாவிட்டாலும் ஏறி மிதிக்கும் நிலையிலிருந்து வெளியேற முயலுங்கள்;

இனப்பற்று மட்டுமே என்றோ மாந்தநேயம் செத்துப்போன இவ்வுலகில் நம்மை வாழவைக்கும்; இனியும் பார்ப்போர் முகம் சுளிக்கும் ஈனப்பிறவிகளாக இருக்காதீர்கள்..