Wednesday 15 July 2015

20 நிமிடங்கள் cricket பார்த்தேன்

20 நிமிடங்கள் cricket பார்த்தேன்

அதில் 10 நிமிடம் முழு விளம்பரங்கள்,
அது போக
LG
PEPSI
MRF
RELIANCE
GATORADE
CASTROL
HYNDAI
lays
இவை groundஐ ஆக்கிரமித்திருந்தன.

i ball
இது replay போடும்போது வந்தது.
paytm
AMARON
sayska
KARBONN
இவை இடையிடையே திரையில் கீழே தோன்றிய
விளம்பரங்கள்.

star
fly emirates
icc
இவை ஆட்டக்காரர்கள் உடைகளில் இருந்தவை.

QUICKR
NEROLAC
VIMAL
5STAR
cricbuzz
asian paint
MAX life ins
SNICKERS
TATA zenon
airtel
Maruti
இவைதான் அந்த பத்துநிமிட இடைவெளி விளம்பரங்கள்.

முன்பு ஹாக்கி ஹிந்தியர்களின் பிடித்தமான
விளையாட்டாக இருந்தது.
ஆனால் அது ஒருநாள் முழுவதும் நடக்காதே அப்புறம்
எப்படி நிறைய விளம்பரம் போட்டு காசுபார்ப்பது?
ஹாக்கி ஒரு ஆரோக்கியமான விளையாட்டு.
உலக championஆக வலம்வந்த காலம் அது.
தன்ராஜ்பிள்ளை போன்ற தமிழர்களும் அதில் விளையாடினார்கள்.

பணக்கார முதலாளிகள் நினைத்தால் எதையும் மக்கள்
மனதிலிருந்து துடைத்துவிட்டு எதையும் அவர்கள்
தலையில் கட்டமுடியும் என்பதற்கு இந்த கிரிக்கெட்
ஒரு எடுத்துக்காட்டு.

ஹாக்கியை அம்னீசியா வந்ததுபோல மக்கள் மறந்தார்கள்.
மனநோய் வந்தது போல கிரிக்கெட் மேல் பைத்தியம்
பிடித்து அலைய ஆரம்பித்தனர்.

கிரிக்கெட்டில் மட்டும்தான் நிகழ்ச்சி ஓடும்போதே
ஓரத்தில் விளம்பரம் போடமுடியும்.
அதை நீங்கள் உற்றுக்கவனிக்காவிட்டாலும் உங்கள்
மூளையில் பதிந்துவிடும்.

இருபது நிமிடம் நீங்கள் match பார்த்தால் அதில்
17நிமிடங்கள் உங்கள் மூளையில் விளம்பரங்கள்
ஏற்றப்படும்.
3,4 நிமிடங்கள்தான் விளையாட்டு நிகழ்வுகள்.

ஒரு நாள் பகல் முழுக்க விடுமுறை போட்டு நீங்கள் வீணடித்து பார்ப்பது விளம்பரங்களைத்தான்.

முதலில் இது ஒரு ஆரோக்கியமான விளையாட்டு(sports) கிடையாது.
இது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு (game).

இதை விளையாடுவதால் எந்த உடல் ஆரோக்கியமும்
கிடையாது.
இடதுகை பந்துவீச்சாளர், அல்லது பேட்ஸ்மேன் அந்த ஒரு
கையையே பயன்படுத்தவேண்டும்.
வெயிலில் நிற்கவேண்டும்.
உடல்வலுவை எங்கும் பயன்படுத்தத்தேவையில்லை.
அதிகம் ஓடவும் வேண்டாம்.

இதை நடத்துவது இந்திய அரசு கிடையாது தனியார்
நிறுவனம்.
ஒரு ரூபாய் போட்டால் நூறுரூபாய் கிடைக்கும் தொழில்.

உலகக் கோப்பை என்பது உலகநாடுகள் அனைத்தும்
பங்குபெறும் விளையாட்டு கிடையாது.
10,15 நாடுகள்தான் விளையாடுகின்றன.

அமெரிக்க, ரஷ்யா, ஜெர்மனி, சீனா போன்ற வல்லரசுகளே
கூட கிரிக்கெட் என்ற இந்த மட்டமான விளையாட்டில் ஆர்வம் காட்டுவதில்லை.
வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள பிச்சைக்காரநாடுகள் மக்களை ஏமாற்ற ஒன்றிரண்டு வல்லரசு நாடுகளின் பணக்காரர்களுடன் சேர்ந்து
நடத்துவதுதான் இந்த கிரிக்கெட்.

ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகள் கிரிக்கெட்டிலும் அதே நேரத்தில் ஒலிம்பிக்கில் மற்ற விளையாட்டுகளிலும் திறமையைக்
காட்டுகின்றன.

அவர்கள் வெறுமனே ஒப்புக்கு சப்பானியான
கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் திருப்தி அடைவதில்லை.

மொத்த உலகநாட்களும் கலந்துகொள்ளும் ஒலிம்பிக்கில்
சீனா, அமெரிக்கா நூற்றுக்கணக்கான பதக்கங்களை குவிக்கும்போது
ஹிந்தியா ஒன்றோ இரண்டோ பதக்கங்களை கையில் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கும்.

ஆனால், ஏதோ இந்தியா உலகத்தையே வென்றதுபோல
ஹிந்திய அடிமுட்டாள் கிரிக்கெட்டைப் பார்த்து கைதட்டி ஆனந்த கண்ணீர் விடுகிறான்.
இந்த உலகக்கோப்பை ஆட்டங்களிலாவது அதிக விளம்பரங்கள் ஒழுங்கீனங்கள் இல்லை.

ஐபிஎல் என்ற ஒரு தொழிலைத் தொடங்கினார்களே அதில்
காசுள்ளவர்கள் ஹிந்தியாவின் ஒரு மாநிலத்தின் பெயரில் ஒரு team அமைத்து அதில் வெளிநாட்டு
வீரர்களை ஏலத்தில் வாங்கி போட்டி நடத்துவார்கள்.

சாராய விளம்பரம், சியர் கேள்ஸ் குலுக்கல் நடனம்,
மேடையில் அமர்ந்திருக்கும் அழகான பெண்களைக் காட்டுவது, சிகரெட் மற்றும் புகையிலை
விளம்பரங்கள் என எல்லாம் வரும்.

அதில் விளையாட்டு வீரர்கள் தலைமுதல் கால் வரை விளம்பரம், திரை மூலைகளில் விளம்பரம், ஒவ்வொரு
நிகழ்விலும் இடைநிறுத்தம் செய்யும்போது விளம்பரம்
அது போக மொத்த நேரத்தில் 60% முழுநேர விளம்பரம்
என்று கல்லா கட்டுகிறார்கள்.

சென்னை டீம் ஜெயித்துவிட்டது என்று அன்றைக்கு அதிகமாகக் குடிக்கிறான் சாராயத்துக்கு பிறந்த
குடிகாரத் தமிழன்.

இதில் அரசியல்வாதிகளும் பங்குவகிக்கிறார்கள்.
நன்றாக விளையாடியவருக்கு லட்சங்களை அள்ளித்தருவது,
முக்கியமான விளையாட்டுகளை தாமே நேரில் வந்து அமர்ந்து பார்ப்பது, பழைய வீரர்களை அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வது என்று.

இதே வருங்காலத்தில் வேறொரு விளையாட்டில் இதைவிட அதிகம் சம்பாதிக்கலாம் என்றால் இதை
மறக்கடித்துவிட்டு அதன் பின்னால் பைத்தியம் பிடித்து அலையச்செய்யவும் இவர்களால் முடியும்.

இது எவ்வளவு கேடான கலாச்சாரம் என்பதை உணர ஒன்றைச் சொல்கிறேன்.

எப்போதெல்லாம் மாணவர்கள் தேர்வுக்கு
தயாராகிறார்களோ
அதாவது சரியாக பரிச்சை நேரத்தில்தான்
கிரிக்கெட் நடக்கும்.
இதை கூர்ந்து கவனித்தால் இதன்பின்னால் உள்ள
சூழ்ச்சி புரியும்.
ஹிந்தியா என்பது ஒரு போலி நாடு.
அந்த நாட்டு உணர்வால் இப்படிப்பட்ட போலியான வெற்றிகளைத்தான் உருவாக்கமுடியும்.

1 comment: