Wednesday 15 July 2015

இறவாப் பேரினம்

மானத்தமிழ் மண்ணை
மாயைகள் சூழ்ந்தனவே!

சீருடைதரித்தப் புலியொன்று
சீறிப்பாயும் படைகொண்டு

போரொன்று தொடுத்துப்
போலிகளைத் தோற்கடித்து

முற்றாகக் கைப்பற்றி
வெற்றிவாகை சூடும்

எதிர்நின்றால் எவரும் -இனி
அதிர்வேட்டு முழங்கும்

போரன்றி வேறறியாப் பொல்லாத வேங்கைகளே!
இறவாப்பேரினம் திரண்டு நின்றால்
இறையே வரினும் மிரண்டு போகும்

உலகே அதிர்வுற ஒரு
உரிமைப் போரும் நிகழும்

எதுவொரு போரும் கொடியது அன்றோ -இல்லை
இதுவொரு விடுதலைப் போரன்றோ?!

No comments:

Post a Comment