Wednesday 15 July 2015

சங்ககாலத்தில் காதல்திருமணம்

சங்ககாலத்தில் காதல்திருமணம்.

<B<B<B<B<B<B<B<B<B

உடன்போக்கு என்பது காதலனும் காதலியும் தத்தமது பெற்றோர் தம்மை சேர்த்துவைக்க விரும்பாத நிலையில் வீட்டைவிட்டு வெளியேறுவது,

பழந்தமிழ் இலக்கியமான கலித்தொகையில்,
ஒருவரை ஒருவர் காதலிக்கும் தலைவனும் தலைவியும் உடன்சென்ற பின்னர்,
தேடிவரும் செவிலித்தாய்(வளர்ப்புத்தாய், சித்தி) முக்கோற்பகவர் எனப்படும் துறவியர்களைக் காண்கிறாள்.
அவர்களிடம் இவ்வழியே சென்ற தன் மகளையும் அவளது காதலனையும் கண்டீர்களா என வினவுகிறாள்.
அதற்கு அவர்கள்,

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்
ஆங்கு அனையளே.

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்
செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்
செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

என்று பதிலுரைக்கிறார்கள்.
இதன் பொருள்,

சந்தனம் பூசிக்கொண்டவர்க்கு மணம் சேர்க்குமேயன்றி அது விளைந்த மலைக்கு அதனால் சிறப்புசெய்ய முடியுமா?
முத்து அணிந்து கொண்டவர்க்கு சிறப்பு செய்யுமேயன்றி அது தோன்றிய கடலுக்கு சிறப்பு செய்யமுடியுமா?
யாழிசை கேட்பவர்களுக்கு சிறப்பு செய்யுமேயன்றி யாழுக்கு சிறப்பு செய்யமுடியுமா?
அதுபோலத்தான் உன் மகள் தன் தலைவனுக்கு சிறப்பு செய்வாளேயன்றி உனக்கு சிறப்பு செய்யமாட்டாள்.

காதலர்களின் வாழ்க்கையை முடிவுசெய்வதில் பெற்றோர் தலையிடக்கூடாது என்று துறவிகளே கூறுகின்றனர்.

http://m.youtube.com/watch?v=_fiR_CPBYZY

No comments:

Post a Comment