Saturday 25 July 2015

இஸ்ரேலை உலுக்கிய யூதன்

இஸ்ரேலை உலுக்கிய யூதன்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தமிழர்களில் துரோகிகள் அதிகம் என்பவர்க்கு இந்த பதிவு;

யூதர்கள்; 1900வருடங்கள் உலகம் முழுவதும் துரத்தியடிக்கப்பட்டவர்கள்;

வரிசையாக இனப்படுகொலைகளுக்கு ஆளானவர்கள்; பத்தில் ஒன்பதுபேர் பலியானவர்கள்; இனப்பற்றிலும் ஒற்றுமையிலும் ஈடற்றவர்கள்; வரைபடத்தில் உற்றுப்பார்த்தாலும் தெரியாத இசுரேல் நாட்டை அமைத்து சுற்றி இருக்கும் பெரிய பெரிய வல்லரசு நாடுகளையே பந்தாடுபவர்கள்;

கிறித்துவ வெறியர்கள், அமெரிக்கக் கட்டப் பஞ்சாயத்து அடியாட்கள், இனவெறியர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்கள்;

அப்பேர்ப்பட்ட யூதர்களில் துரோகிகளே இருந்ததில்லையா என்று கேட்டால் இருந்தார்கள்;

1968ல் பெல்ஜியத்தின் SGM என்ற நிறுவனத்திடம் இருந்து ஜெர்மனியின் அஸ்மாரா என்ற நிறுவனத்தின் பெயரில் யுரேனியம் வாங்கி அதை லைபீரியா நாட்டுக் கப்பல் மூலம் நடுக்கடலுக்குக் கொண்டுவந்து ரகசியமாக இசுரேலுக்குக் கொண்டுசென்றது இசுரேலிய உளவுத்துறை மொஸாட்;

டிமோனோ என்ற இடத்தில் அணுஉலையில் மெர்டெசாய் வனுனு என்ற யூதர் வேலைக்கு சேர்ந்தபிறகு தெரிந்தது அங்கே அணுவுலை என்ற பெயரில் ரகசியமாக அணுஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று; சுற்றியுள்ள நாடுகளெல்லாம் அணுஆயுதம் தயாரிக்கும்போது தன்னாடும் அணுஆயுதம் தயாரிப்பதை அவர் ஏனோ விரும்பவில்லை;

இதை அறிந்த மேலிடம் வேலையைவிட்டு நீக்கிவிட ஆசுத்திரேலியா போய் ஓட்டுநராக பணிபுரிய ஆரம்பித்தார்; ஆனால்,அவர் ரகசியமாக டிமோனா ஆலையில் எடுத்த படங்களை இங்கிலாந்தின் 'சண்டே டைம்ஸ்' ஊடகத்திற்கு கொண்டுசேர்ப்பதன் மூலம் அணுஆயுத உற்பத்தியை தடுக்கலாம் என்று நினைத்தார்;
அவரை செரில் என்ற அழகியை அனுப்பி ரோம் அழைத்துவந்து அங்கேயிருந்து மொசாட் கடத்திவிட்டது; ஆனாலும் டிமோனோவில் நடப்பது அணுஆயுத தயாரிப்புதான் என்பது படங்களுடன் உலகிற்கு 'சண்டே டைம்ஸ்' மூலம் தெரியவந்துவிட்டது;

நாட்டுக்கு இரண்டகம் செய்த வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோது 'என்னை ரோமிலிருந்து கடத்தினார்கள்'(மேலே படம்) என்று உள்ளங்கையில் எழுதி ஊடகவியலாருக்குக் காட்டிவிட்டார் மெர்டெசாய்; யூதர் என்கிற ஒரே காரணத்தால் மரணதண்டனையிலிருந்து தப்பினார்;

இவர்போல ஐன்ஸ்டீன்(யூதர்) இசுரேல் அதிபராகப் பொறுப்பேற்க மறுத்தார்;
டான் எர்ட், மரியானெ என்ற இரு மொசாட் உளவாளிகள் நார்வேயில் பிடிபட்டபோது இசுரேலைக் காட்டிக்கொடுத்தனர்;
யெஹூதா என்ற உளவாளி தவறான தகவல்கள் கொடுத்து ஊழல் செய்தார்;
லெபனானில் ஜோசஃப் என்ற யூதன் இசுரேல் மீது தாக்குதல் நடத்த அராபியர்களுடன் கூட்டுசேர்ந்தான்(இவனது மனைவி சூலா அதை முறியடித்தார்);

இன்னும் நிறையபேர் உண்டு; ஆக, துரோகிகள் இல்லாத இனமே கிடையாது;
அவர்களைக் கைகாட்டி மற்றவர்கள் கடமையிலிருந்து விலகவும் கூடாது; விலகினால் தானும் துரோகி என்று ஒத்துக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment