Wednesday 15 July 2015

சிங்களவருக்கு நன்றி

சிங்களவருக்கு நன்றி

ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

மனமுடையத் தேவையில்லை, சோர்ந்துபோகத் தேவையில்லை.

நடந்த எல்லாவும் நமக்கு நல்லதாகவே அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சராசரி மனநிலை தமிழிய சிந்தனை என்று கொண்டால்,
தமிழியம் தொடக்கத்திலிருந்தே சிறப்பாகக் காய்நகர்த்திவருகிறது.
தமிழினப் படுகொலை அதில் ஒரு பகுதி ஆகும்.

இன்று தமிழியம் தனது முழுமையான தன்மையை அடைந்துள்ளது.

ஒரு இனத்தின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு குர்த் மக்களுக்குப் பிறகு இன்று தமிழினமே ஆகும்.
மற்ற இனங்கள் மதம் கடந்துகூட ஒன்றிணைவது இல்லை.
தமிழரிடம் ஒற்றுமை இல்லை என்ற போலிப் பேச்சை இனியும் நம்பவேண்டாம்.

சேர,சோழ,பாண்டியராக தமக்குள் அடித்துக்கொண்ட காலத்தை விட இன்று தமிழியம் தனது இனத்தை உலகளாவிய அளவில் சாதி,மத,நாடு வேறுபாடுகள் கலந்து திரட்டிவிட்டது.

தமிழியம் தனக்குள்ளே அடித்துக்கொள்வதைத் தடுக்க வேற்றினத்திடம்(நாய்க்கெர் ஆட்சியிடம்) தானே அடிமைப்பட்டு பிறகு (ஆங்கிலேய)தொலையாதிக்கத்திற்கு அடிமையாகிக்கொண்டது.

பிறகு பஞ்சம் ஏற்படும் அளவு சுரண்டப்பட்டு தனது அண்டையினங்களைத் திரட்டி தொலையாதிக்கத்தை விரட்டியது.
காந்தியை உருவாக்கியது தென்னாப்பிரிக்கத் தமிழரே.
நேதாசியை உருவாக்கியதும் தமிழரே.
ஆக அது நேரடியாக இல்லாமல் வேற்றினத்தாரை(வடயிந்தியர்) முன்வைத்து தொலையாதிக்கத்தை விரட்டி அவர்களை ஆட்சியில் அமர்த்தியது.

பாகிஸ்தான் பிரிந்தபோது கோடிக்கணக்கான உயிர்கள் பறிபோனது.
பஞ்சாபி, வங்காளி ஆகிய பேரினங்கள் மதவழி இரண்டாக உடைக்கப்பட்டன.
இது குசராத்தி, மராத்தி இனங்கள் மதவழி அடித்துக்கொள்ள வழிவகுத்தது.

ஆனால், இலங்கை தனிநாடானபோது தமிழியம் அமைதிகாத்தது. அதன் காரணம் இப்போது புரிகிறது.

வடயிந்தியரிடமிருந்து பிரிய தமிழியம், தென்னிந்தியர் யாருமே கண்டுகொள்ளாத திராவிட கொள்கைக்கு ஆதரவு கொடுத்து வடயிந்திய ஆதிக்கத்தை மட்டுப்படுத்தியது.
இதற்கு விலையாக தனது 35% பகுதிகளை அண்டைமாநிலத்தில் இழந்தது.
தனது ஆட்சியை அண்டையினங்களிடம் கொடுத்தது.

பிறகு தமிழியம் தனது எதிர்ப்புணர்வை வெளிக்கொணர்ந்தது.
முழு அளவில் கொண்டுவரவில்லை.
தனித்தமிழகம் போராளிகள் வென்றிருந்தால் ஈழமும் பறிபோன தமிழ்ப்பகுதிகளும் கிடைக்காமல் போயிருக்கும்.
புலிகள் வென்றிருந்தால் சின்னஞ்சிறிய ஈழம்தான் கிடைத்திருக்கும்.
2000களில் தமிழகக் குழுக்கள் முடிவுக்கு வந்தன.
2009ல் ஈழத்தில் படுகொலை நடந்தது.

தான் தமிழன்தான் என்ற ஐயமில்லாமல் கூறும் அசல் தமிழர்கள் ஆறரைக்கோடி.
ஆறரைக் கோடி மக்களின் எழுச்சிக்கு இரண்டு இலக்கம் ஈழமக்களின் படுகொலை மிகவும் குறைந்த விலை.

இதற்கான நன்றியை நாம் (வட்டியும் முதலுமாக திருப்பிவாங்கப்போகும்)சிங்களவருக்குத்தான் கூறவேண்டும்.

மற்ற இனங்களைப் போல இனவெறி பிடித்த முரடர்களாக நாம் இருந்தால் என்ன கிடைத்திருக்கும்.
இந்தியாவின் காலடியில் ஒரு மாநிலம்.
ஆனால், நாம் முழுவிடுதலைப் பற்றி நினைத்திருக்கமாட்டோம்.

இன்று நாம் தெளிந்துவிட்டோம்.
நாம் நமது அண்டை இனங்களை விடவும் ஒரு பலமடங்கு வலிமை மிக்க பெரிய வல்லரசாக உருவெடுக்கவுள்ளோம்.
நமது கொள்கைகள் மூலம் உலக இனங்களுக்கு விடுதலை பெற்றுத்தந்து நாம் மறைமுகமாக உலகையே ஆளப்போகிறோம்.
விடுதலைப் போரில் வெற்றிபெற்ற வியட்நாம், கியூபா, தென்சூடான், எரித்ரியா போன்ற நாடுகள் அதன்பிறகு எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை.
ஆனால், நாம் சாதிப்போம்.

தமிழியம் எதை நம்பி இவ்வளவு அழிவின் விளிம்பிற்குச் சென்றது?
தமது இளைய தலைமுறை தம்மை மீட்கும் என்ற நம்பிக்கையில்தான்.

தமிழினம் இன்று அழிவின் விளிம்பிற்கு வந்து நிற்கிறது. மீட்கும் பொறுப்பு இன்று நம் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ் இளைஞர்கள் கணிசமான அளவு விழிப்புணர்வுடன் உள்ளனர்.

பதுங்கிக் கிடந்த புலி பாய்வதற்கு தன் முன்னங்காலை எடுத்துவைக்கிறது.
-----------------------------------

(( தமிழரொற்றுமை
https://m.facebook.com/photo.php?fbid=519294914840833&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13
தமிழியத்தின் பிரித்தாளுதல்
http://vaettoli.blogspot.in/2014/11/blog-post.html?m=1
தமிழ்க் குடியரசின் முப்படை அதிபர்
https://m.facebook.com/photo.php?fbid=349035085200151&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 ))

1 comment: