ஐரோப்பாவை நாம் ஆள முடியாதா?
ஐரோப்பியன் இங்கே வந்து ஆளமுடிந்தது.
அதுவும் மின்சாரம், தொலைபேசி, இயந்திர வண்டிகள் எதுவும் இல்லாதபோதே!
என்றால் நம்மால் ஐரோப்பா வரை ஆளமுடியாதா?
ஐரோப்பா முதல் ஆஸ்திரேலியா வரை தமிழர் ஆளநினைத்தால் அது முடியும்.
Saturday, 12 March 2016
ஐரோப்பாவை நாம் ஆள முடியாதா?
Sunday, 14 February 2016
Thursday, 31 December 2015
நில அமைவுக்கு ஏற்ப தரைவழிப் படைநகர்வு நிலைகள்
1.மையங்கொள்தல்
2.நிலை பெறுதல்
3.முன்னேறுதல்
4.ஆக்கிரமித்தல்
(நில அமைவுக்கு ஏற்ப தரைவழிப் படைநகர்வு நிலைகள்)
Friday, 27 November 2015
சென்னிமலை - சிவன்மலை - சின்னமலை
சென்னிமலை - சிவன்மலை - சின்னமலை
=============================================
மூட்டை மூட்டையாகப் பணம், நகை, பொற்காசுகள் இன்னும் பல செல்வங்கள் ஒரு குதிரைப்படை காவலுடன் மைசூர் மன்னன் ஐதர் அலிக்கு கொண்டு செல்லப்பட,
'சங்ககிரி'யை நோக்கி சென்ற பாதையில் 'காங்கயம்' அருகே சென்றுகொண்டிருந்தது.
'சாலி சாகிப்' என்பவரது தலைமையில் கொங்குபகுதியில் வரிவசூலாகப் பெறப்பட்ட செல்வங்களை 'மீரா சாகிப்' என்ற மைசூர் அரசின் திவான் மூலம் தலைநகரான சீரங்கப்பட்டணத்துக்குப் போய்ச்சேரவேண்டிய பொன்னும் பொருளும் கொள்ளையர்கள் நடமாட்டமுள்ள அந்த வழியில் சென்று கொண்டிருந்தது.
திடீரென நாலாபுறமும் குதிரைக் காலடிச் சத்தம் 'தடதட'வென வெகு அருகில் கேட்க குதிரைப்படைவீரர்கள் உடைவாளை உருவிக்கொண்டனர்.
புழுதியைக் கிளப்பியபடி புயலென வந்து வழிமறித்தான் ஒரு இளைஞன்.
அவனோடு வந்தக் குதிரைவீரர்களும் அந்தக் கூட்டத்தைச் சூழ்ந்துகொண்டனர்.
சாலி சாகிப் வெளியேவந்தார்.
அந்தக் கட்டுடல் இளைஞனை பார்க்கும்போதே பெரிய வீரனென்பதை யூகித்துவிட்டார்.
"யார் நீங்கள் புதியவர்கள்?
இந்தச் செல்வங்களெல்லாம் எங்கே செல்கின்றன?
யாருக்கு உரியவை?"
என்று கேட்டான்.
சாலி சாகிப் பொறுமையாக விபரத்தைச் சொன்னார்.
பிறகு தாங்கள் யாரென்று அந்த இளைஞனை வினவினார்.
"நான் இந்தப்பகுதி கொள்ளையர்களை அடக்க நியமிக்கப்பட்டிருக்கிறேன்"
என்று மட்டும் கூறிவிட்டு சிறிது நேரம் யோசித்தவன்
"ஆமாம், மைசூர் மன்னனுக்கு எங்கள் மக்கள் ஏன் வரிகொடுக்கவேண்டும்?
அந்நியன் ஆள நாங்கள் என்ன அடிமைகளா?
ஆயிரம் வருடங்களாக மூவேந்தர்களால் ஆளப்பட்ட இந்த மண்ணில் எங்களை நீங்கள் போரில் தோற்கடித்தும் ஆட்சியை நிறுவவில்லை,
பிறகேன் வரிவசூல் செய்கிறீர்கள்?
கன்னடவர் அடக்கியாளும் அளவுக்கு தமிழர்கள் என்னக் கோழைகளா?
மரியாதையாக இந்தப் பொருட்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்.
உங்கள் மன்னன் ஐதர் அலியை முடிந்தால் போரில் எங்களை வென்றுவிட்டு வரிவசூல் செய்யச் சொல்லுங்கள்"
என்று கூறினான்.
சுற்றி நின்ற வீரர்களைப் பார்த்த சாலிசாகிப் போரிடுவதில் பலனில்லை என்பதை உணர்ந்துகொண்டு செல்வங்களை அந்த இளைஞனிடம் ஒப்படைத்தார்.
பிறகு"என் மன்னனிடம் நான் என்ன சொல்வேன்.
நீங்கள் யாரென்றாவது சொல்லுங்கள்" என்று கேட்டார்.
அவன் தன் இருகைகளையும் இரு எதிர்திசையிலிருந்த மலைகளைச் சுட்டிக்காட்டி
"சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே ஒரு சின்னமலை பிடுங்கிக்கொண்டது என்று சொல் போ"
என்று கூறினான்.
இந்தச் செய்தி மைசூர் மன்னன் 'ஐதர் அலி'க்கும் அவர் மகன் 'திப்பு சுல்தானுக்கும்' அப்படியே அறிவிக்கப்பட்டது.
அவர்களும் அந்த இளைஞனைப் பிடித்துவர ஒரு படையை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
இதை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த இளைஞனும் படைதிரட்டிக்கொண்டிருந்தான்.
'சின்னமலை' என்ற இளைஞன் மன்னனை எதிர்த்து போருக்கு அழைக்கிறான் என்ற செய்தி மைசூர் அரசு மக்களிடம் காட்டுத்தீ போலப் பரவிவிட்டது.
ஐதர் அலிக்கோ தன்னை 'சின்னமலை' என்று கூறிய17 வயது இளைஞன் கொங்கு அரசபரம்பரையைச் சேர்ந்த 'தீர்த்தகிரி' என்ற பெயருடைய புகழ்பெற்ற மாவீரன் என்பதும் தம்மிடமிருந்து பறித்த செல்வத்தை மீண்டும் மக்களிடம் அளித்துவிட்டான் என்பதும் தன்னுடன் வீரர்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு பயிற்சி அளித்து சிறிய படைபோல் வைத்திருப்பதிருப்பவன் என்பதும் பிறகுதான் தெரியவந்தது.
இது நடந்தது 1772ஆம் ஆண்டு.
மைசூர் படையும் சின்னமலையின் தனிப்படையும் நொய்யலாற்றின் கரையில் சந்தித்தன.
அந்தப் பெரிய மைசூர்படையை தமது நண்பர்கள், உடன்பிறந்தோர் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களைக் கொண்டு அமைத்த சிறிய படையின் மூலம் தோற்கடித்துவிட்டான் அந்த இளைஞன்.
அதன்பிறகு கொங்குபகுதி முழுவதும் அவன் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது.
காலம் காலமாக தெலுங்கு நாயக்கர், கன்னட முகமதியர், ஆங்கிலேயர் என பலரின் பிடிக்குள் பல துண்டுகளாக உடைந்து கிடந்த தமிழ்மக்கள் தம்மை மீட்க மண்ணின் மைந்தன் வந்ததை எண்ணி அந்த வெற்றியைக் கொண்டாடினார்கள்.
அவனுக்கு சின்னமலை என்ற பெயருடன் தீரன் என்கிற பட்டமும் கிடைத்துவிட 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப்படலானான்.
Tuesday, 24 November 2015
ஹிந்தியாவும் தமிழினமும் மோதினால்...
விடுதலைப் போர் மூண்டால்...
உலகின் இரண்டாவது பெரிய தரைப்படையான "ஹிந்திய தரைப்படை"யின் முழுநேர வீரர்கள்
வெறும் 14லட்சம் பேர்தான்.
தமிழினத்தின் இளைஞர்களின் எண்ணிக்கை இதைவிட 10 மடங்கு அதிகம்.
Friday, 11 September 2015
தமிழகத்துடன் இணையவிரும்பும் பிறமாநிலத் தமிழர் (காணொளிகள்)
தமிழகத்துடன் இணைய ஆந்திரத் தமிழர் தீர்மானம்
https://m.facebook.com/story.php?story_fbid=609661612470829&id=100002809860739&_rdr
தமிழகத்துடன் இணைய கேரளத் தமிழர்கள் போராட்டம்
https://m.facebook.com/story.php?story_fbid=608701625900161&id=100002809860739&_rdr
Wednesday, 15 July 2015
சிங்களவருக்கு நன்றி
சிங்களவருக்கு நன்றி
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
மனமுடையத் தேவையில்லை, சோர்ந்துபோகத் தேவையில்லை.
நடந்த எல்லாவும் நமக்கு நல்லதாகவே அமைந்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சராசரி மனநிலை தமிழிய சிந்தனை என்று கொண்டால்,
தமிழியம் தொடக்கத்திலிருந்தே சிறப்பாகக் காய்நகர்த்திவருகிறது.
தமிழினப் படுகொலை அதில் ஒரு பகுதி ஆகும்.
இன்று தமிழியம் தனது முழுமையான தன்மையை அடைந்துள்ளது.
ஒரு இனத்தின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு குர்த் மக்களுக்குப் பிறகு இன்று தமிழினமே ஆகும்.
மற்ற இனங்கள் மதம் கடந்துகூட ஒன்றிணைவது இல்லை.
தமிழரிடம் ஒற்றுமை இல்லை என்ற போலிப் பேச்சை இனியும் நம்பவேண்டாம்.
சேர,சோழ,பாண்டியராக தமக்குள் அடித்துக்கொண்ட காலத்தை விட இன்று தமிழியம் தனது இனத்தை உலகளாவிய அளவில் சாதி,மத,நாடு வேறுபாடுகள் கலந்து திரட்டிவிட்டது.
தமிழியம் தனக்குள்ளே அடித்துக்கொள்வதைத் தடுக்க வேற்றினத்திடம்(நாய்க்கெர் ஆட்சியிடம்) தானே அடிமைப்பட்டு பிறகு (ஆங்கிலேய)தொலையாதிக்கத்திற்கு அடிமையாகிக்கொண்டது.
பிறகு பஞ்சம் ஏற்படும் அளவு சுரண்டப்பட்டு தனது அண்டையினங்களைத் திரட்டி தொலையாதிக்கத்தை விரட்டியது.
காந்தியை உருவாக்கியது தென்னாப்பிரிக்கத் தமிழரே.
நேதாசியை உருவாக்கியதும் தமிழரே.
ஆக அது நேரடியாக இல்லாமல் வேற்றினத்தாரை(வடயிந்தியர்) முன்வைத்து தொலையாதிக்கத்தை விரட்டி அவர்களை ஆட்சியில் அமர்த்தியது.
பாகிஸ்தான் பிரிந்தபோது கோடிக்கணக்கான உயிர்கள் பறிபோனது.
பஞ்சாபி, வங்காளி ஆகிய பேரினங்கள் மதவழி இரண்டாக உடைக்கப்பட்டன.
இது குசராத்தி, மராத்தி இனங்கள் மதவழி அடித்துக்கொள்ள வழிவகுத்தது.
ஆனால், இலங்கை தனிநாடானபோது தமிழியம் அமைதிகாத்தது. அதன் காரணம் இப்போது புரிகிறது.
வடயிந்தியரிடமிருந்து பிரிய தமிழியம், தென்னிந்தியர் யாருமே கண்டுகொள்ளாத திராவிட கொள்கைக்கு ஆதரவு கொடுத்து வடயிந்திய ஆதிக்கத்தை மட்டுப்படுத்தியது.
இதற்கு விலையாக தனது 35% பகுதிகளை அண்டைமாநிலத்தில் இழந்தது.
தனது ஆட்சியை அண்டையினங்களிடம் கொடுத்தது.
பிறகு தமிழியம் தனது எதிர்ப்புணர்வை வெளிக்கொணர்ந்தது.
முழு அளவில் கொண்டுவரவில்லை.
தனித்தமிழகம் போராளிகள் வென்றிருந்தால் ஈழமும் பறிபோன தமிழ்ப்பகுதிகளும் கிடைக்காமல் போயிருக்கும்.
புலிகள் வென்றிருந்தால் சின்னஞ்சிறிய ஈழம்தான் கிடைத்திருக்கும்.
2000களில் தமிழகக் குழுக்கள் முடிவுக்கு வந்தன.
2009ல் ஈழத்தில் படுகொலை நடந்தது.
தான் தமிழன்தான் என்ற ஐயமில்லாமல் கூறும் அசல் தமிழர்கள் ஆறரைக்கோடி.
ஆறரைக் கோடி மக்களின் எழுச்சிக்கு இரண்டு இலக்கம் ஈழமக்களின் படுகொலை மிகவும் குறைந்த விலை.
இதற்கான நன்றியை நாம் (வட்டியும் முதலுமாக திருப்பிவாங்கப்போகும்)சிங்களவருக்குத்தான் கூறவேண்டும்.
மற்ற இனங்களைப் போல இனவெறி பிடித்த முரடர்களாக நாம் இருந்தால் என்ன கிடைத்திருக்கும்.
இந்தியாவின் காலடியில் ஒரு மாநிலம்.
ஆனால், நாம் முழுவிடுதலைப் பற்றி நினைத்திருக்கமாட்டோம்.
இன்று நாம் தெளிந்துவிட்டோம்.
நாம் நமது அண்டை இனங்களை விடவும் ஒரு பலமடங்கு வலிமை மிக்க பெரிய வல்லரசாக உருவெடுக்கவுள்ளோம்.
நமது கொள்கைகள் மூலம் உலக இனங்களுக்கு விடுதலை பெற்றுத்தந்து நாம் மறைமுகமாக உலகையே ஆளப்போகிறோம்.
விடுதலைப் போரில் வெற்றிபெற்ற வியட்நாம், கியூபா, தென்சூடான், எரித்ரியா போன்ற நாடுகள் அதன்பிறகு எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை.
ஆனால், நாம் சாதிப்போம்.
தமிழியம் எதை நம்பி இவ்வளவு அழிவின் விளிம்பிற்குச் சென்றது?
தமது இளைய தலைமுறை தம்மை மீட்கும் என்ற நம்பிக்கையில்தான்.
தமிழினம் இன்று அழிவின் விளிம்பிற்கு வந்து நிற்கிறது. மீட்கும் பொறுப்பு இன்று நம் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ் இளைஞர்கள் கணிசமான அளவு விழிப்புணர்வுடன் உள்ளனர்.
பதுங்கிக் கிடந்த புலி பாய்வதற்கு தன் முன்னங்காலை எடுத்துவைக்கிறது.
-----------------------------------
(( தமிழரொற்றுமை
https://m.facebook.com/photo.php?fbid=519294914840833&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13
தமிழியத்தின் பிரித்தாளுதல்
http://vaettoli.blogspot.in/2014/11/blog-post.html?m=1
தமிழ்க் குடியரசின் முப்படை அதிபர்
https://m.facebook.com/photo.php?fbid=349035085200151&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 ))
மூன்றாம் தலைவர் ஆட்சி
மூன்றாம் தலைவர் ஆட்சி
ழழழழழழழழழழழழழழழழழழழழ
ஒரு தேர்ந்த நாடக ஆசிரியன் தானே ஒரு நாடகம் எழுதி அதில் தானே கதாநாயகனாக நடித்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் எமது மூன்றாம் தலைவரின் வாழ்க்கை இருந்தது.
தனது வாழ்க்கையின் தொடக்கத்தையும் அவர் தாமே எழுதினார்.
தனது வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தையும் தானே தீட்டினார்.
தனது எதிரிகளை தானே உருவாக்கினார்.
தன்னிடம் தானே தோற்றார்.
தன் முடிவையும் தானே எழுதினார்.
அந்த நாடக ஆசிரியன் தன் நாடகக் கதாபாத்திரங்களை கட்டுப்படுத்தலாம். அந்த நாடகத்தைப் பார்ப்பவர்களையும் என்றென்றைக்கும் கட்டுப்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்?,
அப்படித்தான் எமது தலைவர் தனது வாழ்க்கைக்குப் பிறகான நிகழ்வுகளை கட்டுப்படுத்துகிறார்.
மற்ற உலகத்தலைவர்கள் போலன்றி எம் தலைவர் சீமானாவே வாழ்ந்தார்.
அவர் பட்டினி கிடந்ததில்லை, எந்த சுகத்தையும் குறைத்துக்கொள்ளவில்லை, மேடை போட்டுக் கெஞ்சவில்லை, புத்தகங்கள் எழுதவில்லை, சிறையில் வாடவில்லை, யாரிடமும் ஆதரவு கேட்டதில்லை, யாருக்கும் ஒரு நன்மையும் செய்ததில்லை.
அவர் அழிவுக்கென்றே பிறந்தார், எதையும் ஆக்கவில்லை.
ஆனாலும் அவர் ஒப்பாரும் மிக்காரும் எவருமிலாத் தலைவனாக உருவெடுத்தார்.
எம் தலைவர் கூறுவார் "நன்றியுள்ள நாய்கள் பட்டினி கிடக்கலாம். ஆனால், திருட்டுப் பூனைகள் பட்டினி கிடப்பதில்லை".
அழிப்பவனான எமது மூன்றாம் தலைவர் அழியவேண்டியவர்களை அழித்தார்.
கொள்ளைக்காரர்களைக் கொள்ளையடித்தார்.
கொலைகாரர்களைக் கொலை செய்தார்.
சட்டத்திற்குப் புறம்பானவற்றைக் கடத்தினார். ஆனால், மனதிற்குப் புறம்பானவைகளை அல்ல.
பெரும்பொருள் ஈட்டினார்.
ஆயுதங்ளைக் குவித்தார்.
படையொன்றை நிறுவினார்.
தன் காலடியில் ஒரு பேரரசைக் கட்டியாண்டார்.
அவர் நினைத்திருந்தால் தமது படையை விரிவுபடுத்தி உலகையே ஒரு குடையில் ஆண்டிருக்கக்கூட முடியும்.
ஆனால், எம் தலைவர்.தனக்கான ஒரு எல்லையை வகுத்து அதற்குள்ளேயே நின்றுகொண்டார்.
"நாளை சாகத் தயார் என்றால் இன்று நீ உலகை ஆளலாம்" என்பது அவரது அறைகூவல்.
எவருக்கும் அடங்காமல் வாழநினைப்பவர் எல்லாம் அவர்பின்னே திரண்டார்கள்.
அவரது படை தன்னைத்தானே கட்டியெழுப்பியது.
அங்கே எல்லோரும் தளபதிகள் யாருக்குக்கீழேயும் யாரும் இல்லை.
மூன்றாம் தலைவர் படையானது எத்தனை பெரிய படையையும் விரல்சொடுக்கில் வீழ்த்தியது.
அவரது படைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
புகைக்கலாம், குடிக்கலாம், ஒழுக்கம் தவறி நடக்கலாம், கொலை செய்யலாம்.
ஆனால்,
தன் மனதின் கட்டுப்பாட்டை மீறக்கூடாது.
தனியறையில் தனியாக புகைக்கலாம் குடிக்கலாம்.
ஒழுக்கம் தவறலாம் ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது, வேறு ஒரு பலனை எதிர்பார்ப்பவருடன் ஒழுக்கம் தவறக்கூடாது.
சொல்லப்போனால் அவரது படை அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இருந்ததேயில்லை.
ஆனால், அவர் நினைத்ததை செய்துகொண்டிருந்தது.
அவர் தமது படையின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஆனால், அவர்களின் மூளையையும் இதயத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அவர் எப்போதுமே எது நடைமுறையில் ஆகுமோ அதைத்தான் செய்தார்.
முதலில் அவரைச் சுற்றியிருந்த சிலர் அவரை ஆதரித்தார்கள் தலைவர் கொஞ்சம் வளர்ந்தார்.
பிறகு அவரது சாதிக்காரர்களை அவரை ஆதரித்தார்கள் இன்னும் வளர்ந்தார்.
பிறகு அவரது வட்டாரம் ஆதரித்தது, பிறகு அவரது மதத்தினர் அவரை ஆதரித்தனர், அதன்பிறகு அவரது இனம் அவரை ஆதரித்தது. அவர் பேருரு எடுத்தார்.
ஆனால் இந்த எல்லையில் அவர் நின்றுகொண்டார்.
தனக்கான கொள்கை ஒன்றை உருவாக்கினார்.
"உன் முதல் அடையாளம் நீ ஒரு மாந்தன் என்பது, அதன்பிறகு உனது அடையாளம் உன் இனம், அதன்பிறகு ஒன்றுமில்லை".
இதன்பிறகுதான் அவருக்கான எதிர்ப்புகள் வரத்தொடங்கின.
மதத்திற்காக உயிரையே அர்ப்பணித்தவர்கள் திரண்டார்கள்.
சாதிக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள் திரண்டார்கள்.
வர்க்கத்தை உயர்த்துவோம் என்று இருந்தவர்கள் திரண்டார்கள்.
பிற இனத்தவர்கள் இனவேறுபாடின்றித் திரண்டார்கள்.
தலைவர் தனியாக நின்றார்.
தன் இனவுணர்வாளர்களையும் அவர் ஒதுங்கச்சொல்லிவிட்டு தானே ஒற்றை ஆளாக நாற்புறமும் சூழ்ந்திருந்த எதிரிகளுடன் நேரடியாக மோதினார்.
எவரைவிடவும் இரக்கத்திற்குரியவராக எம் தலைவரின் எதிரிகளைக் கூறலாம்.
ஏனென்றால் எம் தலைவரின் ஒரு பலவீனத்தைக்கூட அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை.
அவர்கள் தலையெடுக்கும் முன்பே தலையிழந்தார்கள்.
அவர் வைரம் போல எல்லாப் பக்கமும் வலிமைபொருந்தியவராக இருந்தார்.
யார் எத்தனை வேகமாக மோதினார்களோ அத்தனைத் துண்டுகளாக சிதறினார்கள்.
சட்டம் அவருக்கு வளைந்துகொடுத்தது, சராசரி மக்களை அடக்கியே பழகியவர்கள் அவரை எழுந்து வணங்கினார்கள்.
கொள்ளைக்காரர்கள் அவரைத் தன் போலெண்ணி நேசக்கரம் நீட்டினார்கள்.
அதிகார ஆற்றல் பெரிய பேரம் ஒன்றோடு காத்துக்கொண்டிருந்தது.
ஆனால், அவர் விலைபோகவில்லை.
அவர் சொல்லுவார் "இருட்டுக்கு அஞ்சாமல் இருக்க நீ பேயாக மாறவேண்டும்".
ஆனால், அவர் மற்ற பேய்களுடன் கைகோர்க்கவில்லை.
பெருவலிமை பெற்றவராதலால் அவரது கட்டுப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே வந்துவிட்டது.
பொறுமையிழந்த அதிகாரக் கடவுளர்கள் படை அனுப்பினார்கள், தோற்பதற்கென்றே வந்ததுபோல அது தோற்றது.
பல்வேறு திட்டங்கள் தீட்டப்பெற்றன.
பிரித்தாளும் தந்திரம் அவருக்கு எதிராக செயல்படுத்தப்பட்டது.
மதவெறியர்களையும் அவர்பின்னால் இருந்த மக்களையும் அந்த மதத்தின் இளைஞர்களை வைத்தே ஒழித்துகட்டினார்.சாதிவெறியர்களையும் அவர்களுக்கு ஆதரவான மக்களையும் அச்சாதி இளைஞர்களை வைத்தே ஒழித்துகட்டினார்.
மற்ற இனவெறியர்களையும் அவர்பின் நிற்பவர்களையும் ஒட்டுக்குழு உருவாக்கி அழித்தார்.
அழித்தார் என்பது முக்கியமல்ல.
அதை ஆவணப்படுத்தியதும் அம்மக்களுக்கு இணவுணர்வு தாண்டாத தலைமைகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.
அவர் வல்லாதிக்கங்களை உட்கார்ந்த இடத்திலிருந்து அடித்தார்.
எதை அவர் செய்துவிடக்கூடாது என்று அவரிடம் வல்லாதிக்கங்கள் அடக்கி வாசித்தனவோ அதையும் அவர் செய்தார்.
ஆளவே பிறந்தவரான எம் மூன்றாம் தலைவர் ஆட்சிபீடத்தை தமக்கே உரிய ஒன்றைப்போல எடுத்துக்கொண்டார்.
அதிர்ச்சியடைந்த வல்லாதிக்கங்கள் உலகையே திரட்டிவந்து போரிட்டு தோற்றுப்போனதால் மேலும் அதிர்ச்சியடைந்தன.
எதிர்க்க எதிர்க்க அவரது வலிமை கூடிக்கொண்டே போனது.
போரிடப் போரிட அவரது எல்லை விரிந்துகொண்டே போனது.
இனிமுடியாது என்று அவர்கள் குறுகிய காலத்திலேயே ஒப்புக்கொண்டு விலகினர்.
அவரது ஆட்சிப்பகுதியை இரும்புத்திரை ஒன்று மூடியது.
இருண்டகாலம் தொடங்கியது.
தலைவர் தனது அழிவுவேலையைத் தடையின்றி செய்யத்தொடங்கினார்.
ஐந்து ஆண்டுகள் அங்கே நடந்தது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.
அதன்பிறகு ஆங்காங்கே எதிர்ப்புப் படைகள் முளைத்தன.
உலகளாவிய படையையே தோற்கடித்த எம் தலைவர் நேற்று முளைத்த காளான்களிடம் தோற்றுபின்வாங்குவதாகச் செய்திகள் வெளியாயின.
எதிர்படைக்கு வெளியிலிருந்து அத்தனை சலுகைகளும் அள்ளிவீசப்பட்டன.
இரண்டே ஆண்டுகளில் எதிர்படை வென்றது.
அந்த படையை நேர்மையான படை என்றும் விடுதலைப் படையென்றும் உலகநாடுகள் தேடிவந்து அங்கீகரித்தன.
ஆம். எம் தலைவரேதான் அந்தப்படையை உருவாக்கினார்.
எம் தலைவரேதான் அதை நேர்மையானதாக படைத்தார்.
எம் தலைவரேதான் அதனிடம் தோற்றார்.
எம் தலைவரேதான் தம் அழிவுப் பட்டியலை அவர்களிடம் கொடுத்து தன்னை கொடுங்கோலனாக அறிவிக்கச்சொன்னார்.
எம் தலைவரேதான் தமது உண்மையான கொள்கைகளை அவர்களிடம் அளித்து நிறைவேற்றச் சொன்னார்.
விடுதலைப் படை ஆட்சியைப் பிடித்த பிறகும் அவர் பத்து ஆண்டுகள் உயிருடன் இருந்தார்.
பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.
ஆனால், தலைமறைவாகவெல்லாம் இருக்கவில்லை.
மூன்றாம் தலைவரை தண்டிக்க எத்தனையோ அழுத்தங்கள் வந்தபோதும் தனிநாடு தருவதாகச் சொன்னபோதும் விடுதலைப் படை மூன்றாம் தலைவரை எதுவும் செய்யவில்லை.
இதுதான் மேற்சொன்னவற்றிற்கெல்லாம் சான்று.
விடுதலைப் படையின் தலைவரான நான்காம் தலைவர் ஆட்சியிருக்கையில் அமர்ந்திருந்தாரேயொழிய ஆளவில்லை.
அமைதியாக சாகும்வரை ஆண்டது எமது மூன்றாம் தலைவர்.
ஒரு புரட்சியை செய்துமுடிக்க அழிப்பதும் நடக்கவேண்டும்.
ஆக்கலும் நடக்கவேண்டும்.
எம் மூன்றாம் தலைவர் அழிக்கும் பங்கை நிறைவேற்றினார்.
தாம் உருவாக்கிய படை மூலம் அதைத் தொடரவும் செய்யகொண்டிருப்பார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்காம் தலைவர் மூன்றாம் தலைவரைக் கமுக்கமாகச் சந்திப்பார்.
யார் யார் தமக்கு இடைஞ்சல் என்ற பட்டியலை அளிப்பார்.
அதை அளிக்குமுன்னரே மூன்றாம் தலைவர் கணக்குப்போட்டு அவர்களுக்காக ஆள்வைத்திருப்பார்.
பட்டியலைப் பார்த்ததும் ஒரே வாரத்தில் அவர்கள் கதை முடிந்திருக்கும்.
உலகளாவிய தலைவர்கள் படுகொலை நடக்கிறதென்றால் அச்சமயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக அறியலாம்.
அவர் தன்னை நியாயப்படுவதும் இல்லை.தாம் செய்தவற்றிற்கான பழியைத் தாமே அவர் ஏற்றுக்கொண்டார்.
எந்த வடிவத்தில் தன் மக்களுக்கு கொடுமை நடந்தாலும் அதை அப்படியே செய்தவர்களுக்கு அவர் திருப்பியளிச் சொன்னார்.
தன் செயல்பாடுகளில் மக்களை அதில் இணைக்கவில்லை.
எம் தலைவர் நினைத்திருந்தால் இராணுவ ஆட்சி நடத்தி சர்வாதிகாரியாக வீற்றிருந்திருக்கலாம்.
எவரும் தடுத்திருக்கமுடியாது.
ஆனால், அவர் மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டி அதன்மூலம் மக்களைக் களங்கப்படுத்தவில்லை.
மக்கள் மீதிருந்த அன்பை அவர் வெளிக்காட்டவும் இல்லை.
மக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு புலி.
அது இரக்கமில்லாததுதான், கொடூரமானதுதான், அழிக்கவே பிறந்ததுதான்.
ஆனால், அது இல்லாவிட்டால் காட்டிற்குப் பாதுகாப்பு இல்லை.
அழிக்கும் ஆற்றலுக்கானத் தேவை இருக்கும்வரை வரலாற்றில் எம் தலைவருக்கான இடம் இருக்கும்.
"உன்னை நீயே ஆளவைத்தவன் நானே"
-மூன்றாம் தலைவர்.