Monday, 17 February 2025
தமிழை ஒழிக்கும் மும்மொழி கொள்கை
Sunday, 16 February 2025
10ரூ வரி வாங்கி 2ரூ ஒதுக்கும் ஹிந்தியா
வரிகள் மூலம் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு கொடுத்தது ரூ.8.04 லட்சம் கோடி ஒன்றிய அரசு திருப்பி தந்தது ரூ.1.58 லட்சம் கோடி: புள்ளி விவரத்தில் அதிர்ச்சித் தகவல்
புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து கடந்த 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.4,03,982 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர, தனிநபர், நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூலாக தமிழ்நாட்டில் இருந்து ரூ.4,00,672 கோடி கிடைத்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு ரூ.8.04 லட்சம் கோடி கிடைத்துள்ளது. ஆனால், இதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வரிப்பகிர்வாக ரூ.1,58,145.62 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து மாநிலங்களின் வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால், அனைத்துத் திட்டங்களுக்கும் நிதித் தேவைக்கு ஒன்றிய அரசிடம் கையேந்த வேண்டிய நிலை மாநில அரசுகளுக்கு ஏற்பட்டு விட்டது. ஜிஎஸ்டியால் வரி வருவாய் மொத்தமாக முடங்கி விட்டபோதிலும், ஒன்றிய அரசு தர வேண்டிய வரிப்பகிர்வு போதுமானதாக இல்லை என மாநிலங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதிலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி தருவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு கடந்த 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை மாநிலங்கள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வசூல், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூல் மற்றும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளித்த வரிப்பகிர்வு விவரங்கள் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி மேற்கண்ட 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.4,03,982.61 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர, தனிநபர், நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூலாக தமிழ்நாட்டில் இருந்து ரூ.4,00,672 கோடி என ெமாத்தம் ஒன்றிய அரசுக்கு ரூ.8.04 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இதில், ஒன்றிய அரசு இதே காலக்கட்டத்தில் ரூ.1,58,145.62 கோடியை தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், மேற்கண்ட காலக்கட்டத்தில் பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உத்தர பிரதேச மாநிலத்துக்கு மொத்த வரிப்பகிர்வாக ரூ.1,69,745.3 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இந்த மாநிலம் மூலம் ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் ரூ.3,48,159.87 கோடி கோடி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், மேற்கண்ட 5 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் இருந்து நேரடி வரி வசூல் ரூ.37,983.05 கோடி மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
Wednesday, 14 August 2024
இந்தியா உடைவது ஏன் தேவை
Saturday, 29 June 2024
ஸ்டாம்ப் சைஸ் கோவணம் இந்த கப்
ஸ்டாம்ப் சைஸ் கோவணம்
இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஹிந்தியா சாதித்ததை இங்கே பாருங்கள்.
கீ....ழே 58 வது இடம்!
தென்னாப்பிரிக்கா எவ்வளவோ மேல்!
விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாத ஹிந்தியா இந்த கிரிக்கெட் என்கிற கேலிக்கூத்தில் வென்றது ஒரு ஸ்டாம்ப் ஐ வைத்து நிர்வாணத்தை மறைக்கும் முயற்சி!
இந்த எழவிலும் 18 ஆண்டு தோல்விக்கு பிறகு வெற்றி!
இனியாவது சோம்பேறிகளின் பொழுதுபோக்கான கிரிக்கெட் பார்ட்டியில் கொட்டும் பணத்தை உண்மையான ஆரோக்கியமான விளையாட்டுக்கு கொடுத்தால் உலக அரங்கில் மானம் மிஞ்சும்!
ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் அரங்கில் பாரத மாதா பல நாடுகளால் மானபங்கம் அடைவதை ஹிந்தியர்கள் இனியாவது தடுப்பார்களா?!
இல்லை நடிகர் கோலியை நினைத்துக் கொண்டு கண்மூடி கவுந்து படுத்து விடுவார்களா?!
Saturday, 2 March 2024
சாந்தன் இன்னொரு திலீபன்
Wednesday, 24 January 2024
தமிழ்தேசிய பார்வையில் அயோத்தி பிரச்சனை
Tuesday, 15 August 2023
சக் தே இந்தியா
Tuesday, 23 May 2023
டெல்லி எவ்வளவு தூரம்?
டெல்லி எவ்வளவு தூரம்?
Saturday, 15 April 2023
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் மரியாதை இல்லை
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் மரியாதை இல்லை
பஞ்சாப் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்த இரண்டு தமிழக வீரர்களின் உடல்கள் எந்தவித அரச மரியாதையும் இல்லாமல் உறவினர்களுக்கு அனாதைப் பிணம் போல அனுப்பி வைக்கப்பட்டன.
இதை எதிர்த்து இரண்டு ஊர்களிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழர்களுக்கு ஹிந்தியாவில் எந்த மட்டத்திலும் மரியாதை என்பதே கிடையாது!
பாஜக சார்பான வீடியோ போடும் அந்த ராணுவ வீரர் எங்கே?!
எதற்கெடுத்தாலும் 'எல்லையில் ராணுவ வீரர்கள்...' என்று பாடமெடுக்கும் இணைய சங்கிகள் எங்கே?!
தமிழர்கள் இந்த நாட்டுக்காக செத்தாலும் கூட கேவலப்பட்டே ஆக வேண்டுமா?!
விபரம் கீழே,
தினத்தந்தி செய்தி (15.04.2023)
தமிழக ராணுவ வீரர்கள் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாததால் பொதுமக்கள் மறியல்
தேனி,
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் கடந்த 12-ந் தேதி அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் இறந்தனர்.
இதில் உயிரிழந்த தேனி மாவட்டம் மூணான்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் யோகேஷ்குமார் (வயது 24), சேலம் மாவட்டம் மசக்காளியூர் பனங்காட்டை சேர்ந்த ராணுவ வீரர் கமலேஷ் (24) ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடல் நேற்று காலை மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேவாரத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேவர் சிலையில் இருந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் யோகேஷ்குமாரின் உடலை ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்து சென்று அஞ்சலிக்காக வைத்தனர்.
சாலை மறியல்:
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்த ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதை மற்றும் அரசு சார்பிலும் மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடல் தகனம்:
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராணுவ வீரர் யோகேஷ் குமார் சாவு குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன் காரணமாக சம்பவம் குறித்து முழுமையாக கூற இயலாது என்றனர். இதையடுத்து ராணுவ வீரர் உடலை வீட்டில் இருந்து ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடலுக்கு அவரது தந்தை ஜெயராஜ் தீ மூட்டினார்.
கமலேஷ் உடல்:
இதேபோல ராணுவ வீரர் கமலேஷின் உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 12.50 மணிக்கு அந்த வாகனம் வனவாசி அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தது. அங்கு திரண்டிருந்த கமலேசின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனத்தை சிறை பிடித்தனர். அரசு மரியாதையுடன் ராணுவ வாகனத்தில் உடல் கொண்டு வராததை கண்டித்தும், கமலேசின் இறப்புக்கான காரணத்தை தெரிவிக்க கூறியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேட்டூர் தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கீதா, விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கமலேசின் உறவினர்கள், ராணுவ வாகனத்தில் தான் உடலை கொண்டு செல்லவேண்டும். அதுவரை மறியலை கைவிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.
மரியாதை:
மாலை 4.15 மணி அளவில் சேலத்தில் இருந்து ராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டு கமலேசின் உடல் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு, சொந்த ஊரான மசக்காளியூர் பனங்காடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவை ராணுவ தலைமை அலுவலக உத்தரவின்பேரில் தமிழ்நாடு 12-வது பட்டாலியன் சேலம் என்.சி.சி. சார்பில் அவருடைய உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பின்னர் சுபேதார்கள் பாபு, ரமணா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் அனைத்து கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கமலேசின் உடல் அங்குள்ள மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
Friday, 14 April 2023
சுருட்டிய பணம் ஒரு ஒப்பீடு
Sunday, 5 April 2020
கொரோனா பாதிப்பில் பிரதமரின் செயல்பாடு
தோராயமாக (தலைக்கு 3000 ரூபாய் என) ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் 12,000 ரூபாய் மத்திய அரசுக்கு வரி கொடுக்கிறோம்.
அவ்வளவுதான்! அவ்வளவேதான்!
அதைப்போல இரண்டு மடங்கு நமது வளங்களைச் சுரண்டுகிறது ஹிந்தியா!
இப்போது சீனாவை நம்பி இருக்கின்றன.
சென்ற ஆண்டு சீனாவிலிருந்து இறக்குமதியான மருந்துப் பொருள் மட்டுமே நாட்டின் மொத்த மூலப் பொருள் இறக்குமதியில் 68% என்கிறது எக்கனாமிக் டைம்ஸ்.
மருந்து எப்படி இருக்கும்?!
(இந்தியாவிலேயே தமிழகம்தான் இதில் முதலிடம் 260 பேருக்கு ஒரு டாக்டர்!
இதிலும் நீட் என்ற மண்ணைப் போட்டுவிட்டனர்).
41 பேருக்கு ஒரு மருத்துவர் இருந்த இத்தாலியே கொரோனாவிடம் மண்டியிட்டுவிட்டது என்றால் இந்தியா எவ்வளவு தீவிரமாக செயல்படவேண்டும் என்பதை யூகிக்கவும்.
மற்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்க தனியாக நிதி ஒதுக்கி தீவிரமாக இயங்கிவருகின்றன.
பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் பலர் தமிழர்களாக இருக்கின்றனர்
அதாவது அறிவாளிகள் அத்தனைபேரும் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியாயிற்று.
உயிரியியல் தொடர்பான பரிசோதனைக் கூடங்கள் நாட்டில் மொத்தமே 40 தான் இருக்கின்றன.
அவைகளும் பல பல்கலைக் கழகங்களில் கல்விக்குத்தான் பயன்படுகின்றன.
(இருக்கின்றவையும் மாநில அரசுகள் கொடுத்தவை)
தயாரிப்பை அதிகரிப்பது பற்றியும் 75 லட்சம் மூச்சு கவசங்கள் உருவாக்கத் தேவை இருப்பது பற்றியும் HLL இரண்டு மாதங்களாக வலியுறுத்தி வந்ததை அந்த சந்திப்பிற்கு பிறகும்கூட நிறைவேற்றவில்லை.
இப்போது வரை HLL க்குத் தேவையான துணி சப்ளை செய்யப்படவில்லை.
(பட்டேல் சிலை செலவு 3,000 கோடி என்பதை நினைவில் கொள்க)
மாநிலங்களுக்கான நிவாரண வைப்பு 20,000 கோடி,
தேசிய பேரிடர் நிவாரண வைப்பு 25,000 கோடி என எல்லாப் பணத்தையும் மத்திய அரசு வைத்திருக்கிறது.
உள்நாட்டிலும் ல நடிகர்களும் தொழிலதிபர்களும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.
(இந்த திட்டத்திற்கு பெயர் என்ன தெரியுமா?! "PM cares")
இப்படியாக தனியே 6500 கோடி வரை கிடைத்துள்ளது.
என்றால் கொரோனா ஒரு தேசியப் பேரிடர்தானே?!
இதிலேயே தெரியும் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவும் லட்சணம்]
இதனால் மக்களைக் கட்டுப்படுத்த காவல்துறை திணறி வருகிறது.
ஆனால் அதன் பிறகு எங்குமே மத்திய அரசு சார்பில் வழிநடத்த திறமையான மருத்துவ மேதை ஒருவர் கூட எந்த மாநிலத்திற்கும் அனுப்பப்படவில்லை.
மக்களிடம் மேல்வலியாமல் எதையாவது செய்யச் சொல்கிறார்.
அவ்வளவுதான்.
இதுவரை நிலை என்ன?
இதை சமாளிக்க என்ன திட்டம் வைத்துள்ளோம்?
பிற நாடுகள் இதற்கு என்ன செய்கின்றன? என அறிவுப் பூர்வமாக எதையும் பேசுவதில்லை.
உணர்வுப் பூர்வமாக பேசுகிறார் அவ்வளவே!
முதலில் லொக்கு லொக்கு என்று இருமிவிட்டு கச்சாமுச்சா என்று பிணாத்தும் ஒரு ரிங்டோனை அனைவருக்கும் வைத்தனர்.
அதனால் யாருக்கு என்ன புரிந்தது என்பது கொரோனாவுக்கே வெளிச்சம்.
மக்களுக்கு புரியும்படி பேசமுடியாவிட்டால் கீழே சப் டைட்டிலாவது போடலாமே?!
கொரோனா பாதிப்பு சோதனை செய்வதில் இந்தியா மிகவும் பின்னே இருக்கிறது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு சோதனைக்கு 2000 ரூபாய் செலவாகும் அதுவும் அந்த ஒரே நிறுவனத்தை நம்பியிருக்கும் நிலை.
மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசின் கட்டிடங்களை பயன்படுத்த அளிக்கலாம்.
மத்திய அரசு நடத்தும் நடத்தும் மருத்துவமனைகளில் ஒன்றை இதற்கு தனியாக அர்ப்பணிக்கலாம்.
இப்படி எதையும் செய்யவில்லை.
தொழில்துறை மீண்டுவர எத்தனை நாள் ஆகும் அதற்கு முன்னெச்சரிக்கையாக என்ன செய்யவேண்டும் என்று தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நாடுகளைப் பார்த்து நமக்கு ஏற்றதுபோல ஒரு திட்டத்தை தயாரிப்பதும் அவசியம்
.
Tuesday, 10 December 2019
தமிழரில் என்ன தனியே போர்க்குடி?!
தமிழரில் என்ன தனியே போர்க்குடி?!
இந்திய ராணுவம்,
பெருமளவு ராணுவ தளவாடங்களுடன்,
ஒரு லட்சம் போர்வீரர்களுடன் ஈழத்தில் இறங்கி,
3 ஆண்டுகள் போராடியும்
புலிகளை வெல்லமுடியாத காரணம் என்ன என்று கேட்டால் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறுவர்.
ஸ்டீபன் கோஹென் (Dr. Stephen P. Cohen) என்கிற புகழ்பெற்ற இராணுவ ஆய்வாளர் இந்திய ராணுவத்தை ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதன் தலைப்பு,
Indian Army : Its Contribution to the Development of a Nation
என்பதாகும்.
அதில்,
"தமிழீழ விடுதலைப் புலிகள் போரியல் கல்வி கற்றவர்களை பெருமளவு கொண்டிருந்தது.
இதுவே இந்திய ராணுவம் இலங்கையில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம்"
என்று கூறியுள்ளார்.
என்றால் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் புலிகள் போன்ற போரியல் கற்ற யாருமே இல்லையா?!
ஏனில்லை?
இருக்கிறார்கள்.
அதையும் ஸ்டீபன் கூறியுள்ளார்.
அது மதராஸ் ரெஜிமென்ட்.
(இராணுவ ஆய்வாளர் தராகி சிவராம் அவர்கள் தலைவரின் பிறந்தநாள் அன்று அளித்த பேட்டியிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்)
தமிழர் வீரம் என்றவுடன் புறநானூறு தொடங்கி பூலித்தேவன் வரை மட்டுமே பேசுகிறோம்.
ஏதோ அதன்பிறகு நாம் கோழைகளாகி விட்டதுபோல!
Wednesday, 16 October 2019
ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்
ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்
1947 க்கு பிறகு இந்தியா சந்தித்த போர்கள், இழப்புகள் மற்றும் முடிவுகள்
------------
1947 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 1104 பேர்
முடிவு = போர்நிறுத்தம்
-------------
1962 சீனா உடனான போர்
உயிரிழப்பு = 1383 பேர்
முடிவு = தோல்வி
-----------
1965 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3000 பேர்
முடிவு = வெற்றி
------------
1971 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3843 பேர்
முடிவு = வெற்றி
-------------
1984 சீக்கியர் உடனான போர்
உயிரிழப்பு = 634 பேர்
முடிவு = வெற்றி
------------
1987 புலிகள் உடனான போர்
உயிரிழப்பு = 1138 பேர்
முடிவு= பின்வாங்கல் (விலகுதல்)
-------------
1999 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 700 பேர்
முடிவு = வெற்றி
-------------
இதில் சேர்க்கப்படாதவை
ஜுனாகத், ஹைதராபாத் (32 பேர் உயிரிழப்பு) ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படவில்லை.
கோவா(22 உயிரிழப்பு) , தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி (44 உயிரிழப்பு) ஆகியவற்றை கைப்பற்ற போர்ச்சுகல் உடன் நடந்த போர்கள் சேர்க்கப்படவில்லை.
காங்கோ மற்றும் சிசெல்ஷ் நாடுகளுக்கு படையுதவி செய்த முடிவுகளையும் சேர்க்கவில்லை.
சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடந்த எல்லை மோதல்கள் சேர்க்கபடவில்லை.
(இதில் வட கிழக்கு, காஷ்மீர் ஆயுதக் குழுக்கள் மற்றும் நக்சலைட் உடனான போர் நடவடிக்கைகள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து கொண்டு இருப்பதால் அவற்றைச் சேர்க்கவில்லை)
மேற்கண்ட அனைத்திலும் பாகிஸ்தான் (1947), சீனா (1962) மற்றும் புலிகள் (1987 - 1990) தவிர்த்த அனைத்து போரிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இதில் பாகிஸ்தானை மீண்டும் போரிட்டு 3 முறை தோற்கடித்துள்ளது.
1967 இல் சியாச்சின் எல்லை மோதலில் சீனாவைக்கூட தோற்கடித்துள்ளது.
என்றால் இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றுதானே பொருள்?!
(தகவல்களுக்கு நன்றி: Wikipedia)
Friday, 15 February 2019
தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே
தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே!
காஷ்மீரிகளின் நிறம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!
தோற்றம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!
மொழி உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!
மதம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!
உடைகள் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!
காலநிலை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!
மண்வகை உங்களுடன் ஒத்துப்போவதில்லை!
உணவுமுறை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!
கலாச்சாரம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!
அவர்கள் வரலாற்றில் புராணங்களில் இலக்கியங்களில் உங்கள் பெயர் கூட இல்லை!
இன்றுவரை காஷ்மீருக்கு நேரடி நிலவழித் தொடர்பே இல்லை!
அவர்களை நீங்கள் போர் செய்து வென்று உங்கள் நாட்டுடன் இணைக்கவும் இல்லை!
அதாவது தமிழகத்தை விடவும் அந்நியமான ஒரு அண்டை நாட்டை ஆக்கிரமித்து உள்ளீர்கள்!
அதன் வளங்களை கொள்ளையடித்து வருகிறீர்கள்!
அங்குள்ள பெண்களைச் சீரழித்து வருகிறீர்கள்!
காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடிய அனைவரையும் கொன்று ஒழித்து பதினைந்து ஆண்டுகள் ஆகியும்
நேரு காலத்தில் கொடுத்த உறுதிமொழிப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தாமல் சண்டித்தனம் செய்கிறீர்கள்!
அத்தோடு நில்லாமல் தேர்தல் நேரத்தில் நீங்களே குண்டு வைத்து பல மாநில வீரர்களைக் கொன்று
நாடு முழுக்க அனுதாப அலையையும் எழுப்பி
அரசியல் ஆதாயமும் அடைகிறீர்கள்!
இத்தகைய இழிவுக்கு
உங்களது ஆக்கிரமிப்பில் இருக்கும் மற்றொரு நாட்டு மக்களான நாங்கள்
பெருமை வேறு படவேண்டுமா?!
Friday, 30 November 2018
புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் - தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு
புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் - தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு
மத்திய அரசு இதுவரை கட்டியுள்ள மொத்த
"புயல் பாதுகாப்பு கட்டிடங்கள்" = 567
இதில் தமிழகத்தில் கட்டப்பட்டவை = 0
ஆம். இது உண்மை.
ஒரிசா = 312
ஆந்திரா = 218
குஜராத் = 22
மேற்கு வங்கம் = 15
என பிற மாநிலங்களில் கட்டப்பட்டவையுடன் ஒப்பிடும்போது தமிழகத்தைத் திட்டமிட்டு புறக்கணித்திருப்பது புரிகிறது.
இதுமட்டுமல்ல.
இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் 353.
மாநில வாரியாக கீழ் வருமாறு,
மேற்கு வங்கம் = 150
குஜராத் = 112
கோவா = 40
கேரளா = 27
கர்நாடகா = 11
மகாராஷ்டிரா = 13
தமிழகம் = 0
தகவல்களுக்கு நன்றி:
விகடன் செய்தி
02.12.2018
---------
மேற்கண்ட இரு பட்டியல்களில் புயலையே பார்க்காத மாநிலங்கள் கூட உண்டு.
பிற மாநிலங்களை விட வரி என்கிற பெயரில் அதிகம் கொள்ளை போவது தமிழக பொருளாதாரம்.
(தேடுக: தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா)
ஆனால் தமிழகத்தை மட்டும் தவிர்த்துவிட்டு நடுவணரசு உலக வங்கியின் நிதியுதவியுடன் பாதுகாப்பு கட்டிடங்கள் கட்டி அதற்கு சாலைகளும் போட்டு தருகிறது.
நீலம், வர்தா, ஒகி, கஜா என வரிசையாக புயல் தாக்குவதோ தமிழகத்தை.
ஆனால் பாதுகாப்பாக இருப்பது மற்ற மாநிலங்கள்.
தமிழர்களின் உயிருக்கே இங்கு மதிப்பில்லை.
இது இனப்படுகொலை அன்றி வேறென்ன?!
Tuesday, 27 November 2018
தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா
தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா
தமிழகத்தைப் புயல் தாக்குகிறது.
தமிழகக் குழு ஆய்வு செய்கிறது. இவ்வளவு சேதம் என்று கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கிறது.
இப்போது நியாயமாக நடுவணரசு என்ன செய்யவேண்டும்?
தமிழக அரசு கூறுவதை நம்பி நிவாரணம் அளிக்கவேண்டும்.
ஆனால் மத்திய அரசு வழக்கமாக என்ன செய்கிறது தெரியுமா?
தனியே ஒரு மத்திய குழுவை அனுப்பி அந்த குழு திமிராகவும் எகத்தாளமாகவும் மேம்போக்காக ஆய்வு செய்து சாவகாசமாக "சேதமெல்லாம் ஒன்றுமில்லை" என்பது போல அறிக்கை அனுப்பி தமிழக அரசு கோரியதில் கால்வாசியோ அல்லது அதற்கும் குறைவாகவோ பிச்சை போடும்.
இத்தனைக்கும் தமிழக அரசு வரி என்கிற பெயரில் மத்திக்கு கட்டும் மலை மலையான பணத்திற்கு முன் இந்த "பிச்சை" உண்மையிலேயே "பிச்சை" என்று கூடக் கூறமுடியாது அதற்கும் கீழ்.
உதாரணத்திற்கு 2012 ஆண்டு தமிழக அரசு மத்திக்கு கட்டிய 'வருமான வரி' மட்டும் 28000 கோடி (பிற வரிகளைச் சேர்க்கவில்லை).
ஆனால் 2011 இல் தானே புயல் தாக்கியபோது தமிழகம் கேட்டது வெறும் 5200 கோடி.
ஆனால் மத்திய அரசு போட்ட பிச்சை 500 கோடி.
அதாவது ஒரு நபர் இன்னொரு நபரிடம் 280 ரூபாயை கொடுத்துவைத்து அதில் அவசரத் தேவைக்காக 50 ரூபாயை கேட்கும்போது வெறும் 5 ரூபாயை அவர் முகத்தில் விட்டெறிந்தது போல.
இது மட்டுமில்லை மத்திக்கு நாம் கட்டும் கப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
2012 இல் 28000 வருமான வரி கட்டியதாக கூறினேன் அல்லவா?!
2016 இல் அது 67000 கோடியாக உயர்ந்துவிட்டது.
இதேபோல 2016 "வர்தா" புயல் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு கோரியது 22000 கோடி.
மத்திய அரசு போட்ட பிச்சை வெறும் 266 கோடி.
அடுத்த ஆண்டு 2017 ஒக்கி புயலின்போது,
தமிழ்நாடு கேட்டது 13000.
இந்திய அரசு பிச்சையிட்டதோ வெறும் 280 கோடி.
இப்போது புதிதாக GST போட்டு ஆறே மாதங்களில் 51000 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டனர்.
(01.07.2018 அன்று GST ஆணையர் அறிவிப்பு)
ஆக இந்த நிதி ஆண்டு 1 லட்சம் கோடிக்கு மேல் GST வரி கட்ட உள்ளோம்.
பிற வரிகளையும் சேர்த்தால் ஏறத்தாழ தற்போதைய நிலைப்படி ஓராண்டுக்கு 3 லட்சம் கோடிக்கு மேல் மத்திக்கு கப்பம் செல்கிறது.
தமிழகத்தின் மொத்த கடனே அவ்வளவுதான்!
இது பகல்கொள்ளை அன்றி வேறில்லை!
விளைவு, தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் 40,000 ரூபாய் கடனாளி.
ஆனால் நாம் பெற்றது என்ன?!
ஆற அமர வந்து பிணங்களை பொறுக்கி தரும் "மத்திய பேரிடர் மீட்பு" நடவடிக்கை மட்டும்தான்.
நிவாரண நிதியை விடுங்கள், தற்போதைய மோடி அரசு நமக்கு ஒதுக்கிய வழக்கமான நிதியைக்கூட இன்னும் தரவில்லை.
கடந்த 08.10.2018 அன்று, புதுதில்லி சென்று இந்தியத் தலைமையமைச்சரை நேரில் சந்தித்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர்,
"தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும்,
தமிழ்நாட்டின் இதர திட்டங்களுக்கும்
ஒதுக்கப்பட்டு இதுவரை வராத 19000 கோடி ரூபாய் நிதி பாக்கியைத் தாருங்கள்"
என கோரிக்கை வைத்துவிட்டு வந்தார்.
(இந்த பாக்கி தற்போது 21000 கோடியைத் தாண்டிவிட்டது)
தமிழகத்திற்கு உள்ளே ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு அதாவது மாநில அரசின் மொத்த செலவே 15000 கோடிதான்.
ஒரு தொழிலாளிக்கு ஒரு மாத ஊழியம் தராமல் ஏமாற்றுவது போலத்தான் இதுவும்!
சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
இவர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் எழுதிய கட்டுரையில் "ஓர் ஆண்டில் இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 31% என்றும்
அதேவேளை இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொகை வெறும் 3% என்று குறிப்பிட்டிருந்தார்"
(சான்று Times of India, 05.09.2018).
"நல்ல வாயன் சம்பாதிப்பதை நாறவாயன் தின்கிறான்" என்கிற பழமொழியை இனி "தமிழகம் சம்பாதிப்பதை ஹிந்தியா தின்கிறது" என்று மாற்றிக் கொள்ளலாம்.
மக்கள் என்னதான் நிவாரணம் அனுப்பினாலும் ஒரு அரசு அளவுக்கு வராது.
கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக நாம் கேட்பது 15000 கோடி.
ஆனால் வழக்கம் போல மத்திய அரசு "விளைவித்தவன் வாழைப்பழத்தை பிடுங்கித் தின்றுவிட்டு தோலை தூக்கி முகத்தில் அடிக்கும்" ரவுடி போல எதையாவது வீசியெறிய உள்ளது.
சுரண்டலை நோக்கமாகக் கொண்ட ஆங்கிலேய பேரரசுக்கும் ஹிந்திய நடுவணரசுக்கும் எதாவது வேறுபாடு உள்ளதா?!
தமிழர்கள் சிந்திப்பீர்!
-----------------
தகவல்களுக்கு நன்றி:
தோழர் க. அருணபாரதி
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
கட்டுரை தலைப்பு:
“கசா” பேரழிவுச் சூழலிலும்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசு!




