Showing posts with label ipkf. Show all posts
Showing posts with label ipkf. Show all posts

Tuesday, 10 December 2019

தமிழரில் என்ன தனியே போர்க்குடி?!

தமிழரில் என்ன தனியே போர்க்குடி?!

இந்திய ராணுவம்,
பெருமளவு ராணுவ தளவாடங்களுடன்,
ஒரு லட்சம் போர்வீரர்களுடன் ஈழத்தில் இறங்கி,
  3 ஆண்டுகள் போராடியும்
புலிகளை வெல்லமுடியாத காரணம் என்ன என்று கேட்டால் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறுவர்.

ஸ்டீபன் கோஹென் (Dr. Stephen P. Cohen) என்கிற புகழ்பெற்ற இராணுவ ஆய்வாளர் இந்திய ராணுவத்தை ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதன் தலைப்பு,
Indian Army : Its Contribution to the Development of a Nation
என்பதாகும்.

அதில்,
"தமிழீழ விடுதலைப் புலிகள் போரியல் கல்வி கற்றவர்களை பெருமளவு கொண்டிருந்தது.
இதுவே இந்திய ராணுவம் இலங்கையில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம்"
என்று கூறியுள்ளார்.

என்றால் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் புலிகள் போன்ற போரியல் கற்ற யாருமே இல்லையா?!

ஏனில்லை?
இருக்கிறார்கள்.
அதையும் ஸ்டீபன் கூறியுள்ளார்.

அது மதராஸ் ரெஜிமென்ட்.

(இராணுவ ஆய்வாளர் தராகி சிவராம் அவர்கள் தலைவரின் பிறந்தநாள் அன்று அளித்த பேட்டியிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்)

தமிழர் வீரம் என்றவுடன் புறநானூறு தொடங்கி பூலித்தேவன்  வரை மட்டுமே பேசுகிறோம்.

ஏதோ அதன்பிறகு நாம் கோழைகளாகி விட்டதுபோல!

Wednesday, 16 October 2019

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

1947 க்கு பிறகு இந்தியா சந்தித்த போர்கள், இழப்புகள் மற்றும் முடிவுகள்
------------

1947 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 1104 பேர்
முடிவு = போர்நிறுத்தம்
-------------

1962 சீனா உடனான போர்
உயிரிழப்பு = 1383 பேர்
முடிவு = தோல்வி
-----------

1965 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3000 பேர்
முடிவு = வெற்றி
------------

1971 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3843 பேர்
முடிவு = வெற்றி
-------------

1984 சீக்கியர் உடனான போர்
உயிரிழப்பு = 634 பேர்
முடிவு = வெற்றி
------------

1987 புலிகள் உடனான போர்
உயிரிழப்பு = 1138 பேர்
முடிவு= பின்வாங்கல் (விலகுதல்)
-------------

1999 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 700 பேர்
முடிவு = வெற்றி
-------------
இதில் சேர்க்கப்படாதவை

ஜுனாகத், ஹைதராபாத் (32 பேர் உயிரிழப்பு) ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படவில்லை.

கோவா(22 உயிரிழப்பு) , தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி (44 உயிரிழப்பு) ஆகியவற்றை கைப்பற்ற போர்ச்சுகல் உடன் நடந்த போர்கள் சேர்க்கப்படவில்லை.

காங்கோ மற்றும் சிசெல்ஷ் நாடுகளுக்கு படையுதவி செய்த முடிவுகளையும் சேர்க்கவில்லை.

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடந்த எல்லை மோதல்கள் சேர்க்கபடவில்லை.

(இதில் வட கிழக்கு, காஷ்மீர் ஆயுதக் குழுக்கள் மற்றும் நக்சலைட்  உடனான போர் நடவடிக்கைகள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து கொண்டு இருப்பதால் அவற்றைச் சேர்க்கவில்லை)

மேற்கண்ட அனைத்திலும் பாகிஸ்தான் (1947), சீனா (1962) மற்றும் புலிகள் (1987 - 1990) தவிர்த்த அனைத்து போரிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதில் பாகிஸ்தானை மீண்டும் போரிட்டு 3 முறை தோற்கடித்துள்ளது.

1967 இல் சியாச்சின் எல்லை மோதலில் சீனாவைக்கூட தோற்கடித்துள்ளது.

என்றால் இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றுதானே பொருள்?!

(தகவல்களுக்கு நன்றி: Wikipedia)

Thursday, 28 June 2018

பீரங்கி பிலிம்

பீரங்கி பிலிம்

"சேலத்துக்கு ராணுவ டாங்கி வந்து இறங்கியாச்சு பாத்தீங்கள்ல?"

"எது.....?
போன வருசம் ரஷ்யாவுல நடந்த டாங்கி போட்டில ரெண்டு தடவ ரிப்பேர் ஆகி நின்னதால செருப்பால அடிச்சு வெளிய தள்ளுனானுகளே அந்த பீஷ்மர்-90 டாங்கியா?"

"இல்லைங்க"

"உள்நாட்டுல தயாராகி படைல சேக்குறப்போ இந்திய ராணுவமே காறி துப்பி ஏத்துக்க மறுத்த அர்ஜுன் மார்க் -3 டாங்கியா?"

"இல்லைங்க!
இது பாகிஸ்தானோட சண்ட போட்டு ஜெயிச்ச  T-55 பீரங்கி"

"அந்த பழய பண்ணாசா?!
ஏன்டா இதோட அட்வான்ஸ் வெர்சன் டி-72.
அறுபத்தஞ்சு T-72 கொண்டு போய் ஈழத்தமிழன்ட்ட அடிதானடா வாங்கிட்டு வந்தீங்க?!"

"...?!..."

Sunday, 10 April 2016

அமைதிப்படையில் தமிழத்து வீரர்கள்

அமைதிப்படையில் தமிழத்து வீரர்கள்

♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧

இந்தியராணுவம் சம்பந்தமான என் அனுபவத்தில் ஓர் சிறிய ஆறுதலான சம்பவமும் இருக்கத்தான் செய்தது.

இந்திய அமைதிப்படையில் (?) தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஒருவர் இருந்தார்.
என்ன இது தமிழ் பெண்களையும் வீதியில் கைதிகள் போல் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம் அல்லது
இந்தியராணுவத்தின் பெயர் கெடப்போகிறதே என்ற கவலை
எதுவோ ஒன்று அவரை எங்களுக்கு தன்னாலான உதவியை செய்யவேண்டும் என்று தூண்டியிருக்கலாம்.

ஒருநாள் வழக்கம் போல் வீதியில் மற்றவர்களுடன் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தேன்.
நாங்கள் மட்டுமே பெண்கள்.
இவர் தமிழர் என்று தெரிந்ததும் நான் இவரிடம் கெஞ்சுவது போல் கேட்டேன்.
எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று.

இந்த தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் தலை மீது சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போல் (சீக்கியரோ?) தலைப்பாகை கட்டிய, சீருடையில் ஏதோ பட்டைகள் உள்ள ஓர் அதிகாரியிடம் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழியில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார்.

இவர் பதுங்கிப் பதுங்கிப் பேசுவதும், அவர் கண்கள் சிவக்க, உரத்த குரலில் கடித்துக் குதறுவது போல் பதில் சொல்வதும் எனக்கு ஏனோ ஓர் தர்மசங்கடத்தை இவருக்கு உண்டாகி விட்டோமோ என்று தோன்றியது.
அந்த அதிகாரியின் பேச்சும், அவர் நின்ற தோரணையும் அவ்வளவு பயத்தைக் கொடுத்தது எனக்கு.

ஒருவாறாக திரும்பி வந்தவர் சொன்னார்  “சரிம்மா, என்னோட வாங்க உங்களை உங்க வீட்ல விடுறேன்” என்றார்.

நான் ஏதோ பெரிய மேதாவி போல் முந்திக்கொண்டு “உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்களே போய்க்கறோம்” என்றேன்.

அவர் திரும்பி என்னை பார்த்து சிரித்துவிட்டு சொன்னார்,
“நீங்கள் தனியே போவதை இவர்கள் பார்த்தால் மறுபடியும் பிடித்து உட்கார்த்தி வைப்பார்கள் அதனால் தான் சொல்கிறேன் என்னோடு வாருங்கள் என்று”.

அவர் சொல்வது சரியென்று தோன்றவே அவரோடு நடந்தோம்.
ஒரு இரண்டு நிமிட நடை என் வீட்டிற்கு.
அப்படி தான் ஓர் நாள் என் மனதில் தோன்றியதை இவரிடம் கேட்டேன்.
“நீங்கள் எப்படி இந்த ராணுவத்தில்….” என்று.
ஏனென்றால் என் கண்களுக்கு அவர் மிக நல்லவராகவே தோன்றினார்.
அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.
ஆனால், திரும்பி என்னை ஒருகணம் பார்த்துவிட்டு மறுபடியும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்.

ஐயோ அந்த முகத்தில் தெரிந்த வலியை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.
அந்த முகத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய ஒட்டுமொத்ததமிழ்நாட்டின் வலியைப் பார்த்தேன், உணர்ந்தேன்.

உண்மையில் ஈழத்தில் அமைதிதான் காக்கப்போகிறோம்,
ஈழத்தமிழர்களுக்கு உதவப்போகிறோம் என்று நம்பி வந்திருப்பார் போலும்.
ஆனால் நடந்தது தலைகீழாய் இருக்க,
அந்த வலி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

பேச்சை திசை திருப்ப “உங்க பேர் என்ன”? என்றேன்.
நான் இப்படித்தான் சிலசமயம் மனதில் படுவதை படக்கென்று யாரிடமாவது கேட்டுவிடும் பழக்கம் உள்ளவள்.
அவர் பெயர் சொல்லவில்லை.
சரி எந்த ஊர் என்றாவது சொல்லுங்கள் என்றேன்.
தான் மானாமதுரையை சேர்ந்தவர் என்றார்.
ஒரு சில சமயங்களில் என் தங்கையையும் கைதியாக்கிய சந்தர்ப்பங்களில் இவர் தான் அவள் சிறுமி என்பதால் என் வீட்டிற்கு முன்னாலுள்ள சிறிய தாயார் வீட்டிற்கு போகச்சொல்லுவார்.

நானும் போகலாமா என்றால், உங்களை போக விடமாட்டார்கள் என்றார்.
சரி, எவ்வளவு தான் அவர் எனக்கு உதவ முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த சகோதரர்தான் சில விடயங்களை கற்றுத்தந்தார்.
ராணுவம் வருவது தெரிந்தால் வீட்டிற்குள் இருக்காதீர்கள்.
தெருவில் வந்து நில்லுங்கள்.
வீட்டின் கதவுகளை மூடி வைத்தால் சந்தேகப்படுவார்கள் அதனால் திறந்தே வைத்திருங்கள்,
ராணுவம் ரோந்து வரும் போது முடியுமான வரைக்கும் அதிகாரியின் அருகிலேயே நில்லுங்கள் அப்படி என்றால் அவர்கள் உங்களுடன் தகாத முறையில் நடக்க பயப்படுவார்கள் என்று.

ஆனால், அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை.
அவரை சிறிது காலத்திற்கு பின் நான் ரோந்து வந்த ராணுவத்துடன் பார்க்கவில்லை.
இந்தியராணுவம் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இவரின் நினைவும் மறக்காமல் வரும் எனக்கு.
நன்றிகள் சகோதரரே.

நன்றி: www.vinavu. com/2009/12/04/eelam-rathi-8-ipkf/
_________________________
முதற்கட்டமாக ஈழத்திற்குச் சென்ற ஹிந்தியக் கொலைப்படையில் தமிழகத் தமிழர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருந்தனர்.
அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு முடிந்த அளவு உதவியதால் கோபமடைந்த ஹிந்திய தளபதிகள் தமிழர்களை திருப்பியனுப்பிவிட்டனர்.

Sunday, 20 July 2014

ஓ டயரைக் கொன்றால் போராளி, ராஜீவைக் கொன்றால் தீவிரவாதியா?

ஓ டயரை கொன்றால் போராளி
ராசீவைக் கொன்றால் குற்றவாளியா?

?????????????

1919 ஜாலியன் வாலா பாக் பஞ்சாபி சீக்கியர்
படுகொலைக்கு பழிவாங்க லண்டன்
சென்று 22ஆண்டுகள் கழித்து ஜெனரல் ஓ
டயரைச் சுட்டுக்கொன்ற உதம் சிங்
(பஞ்சாபி சீக்கியர்) இந்திய
அரசுக்கு போராளி என்றால்
அமைதிப்படை அனுப்பி ஆறாயிரம்
தமிழ்மக்களைக் கொன்று 800 தமிழ்ப்
பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய
ராசீவைக் கொன்ற தனு எங்களுக்கு போராளியே.
நன்றி: சனவரி 14 'நம்வேர்கள்'

Thursday, 10 July 2014

700 கோடி (1988)



இந்திய-ஈழப்போர் உச்சநிலையை அடைந்திருந்த காலகட்டம்; தலைவர் சொற்ப போராளிகளுடன் மணலாறுப் பகுதியில் இருந்தபடி இந்தியப்படைக்கு எதிரான கரந்தடி(கொரில்லா)ப் போரை தொடர்ந்து நடத்திவந்தார்.

"கர்னல்.வர்மா" என்ற ஒரு 'ரா' உளவுத்துறை அதிகாரி புலிகளின் மூத்த உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு பேசினார்.
"பல கோடி ரூபாய் பணமும் படையும் செலவளித்து நாங்கள் இந்தப் போரை நடத்திவருகிறோம்; இத்தனை அழிவும் உயிர்ச்சேதமும் தேவையில்லாதது; அந்த பணத்தை ஏன் நீங்களே பெற்றுக்கொள்ளக்கூடாது?!" என்று நேரடியாக பேரத்திற்கு அழைத்தார்.
மக்கள் புணர்வாழ்வுக்கு 500கோடி தருவதாகவும் விடுதலைப் புலிகளுக்கு 200 கோடி தருவதாகவும் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு பணத்தைப் பெற்றுகொள்ளுமாறும், புலிகளுக்கு பதவிகளும் பாதுகாப்புக்கென்று தனிப்படை வைத்துக்கொள்ள இசைவும் தருவதாகவும் மேலும் பல சலுகைகளையும் தருவதாகவும் கூறினார்;
ஒத்துவர மறுத்தால் முற்றாக அழியநேரிடும் என்று மிரட்டினார்.
தமிழக முதல்வர் கருணாநிதி 'ஆன்டன் பாலசிங்கத்தை' பெங்களூரிலிருந்து ஈரோட்டுக்கு வரவழைத்து போரைக் கைவிடுமாறும், தங்கள் கட்சி தடைசெய்யப்பட்டபோது 'திராவிட நாடு' கொள்கையை தாங்கள் கைவிட்டதையும் கூறி பேசிப்பார்த்தார் ((அதனால்தான் இன்று, 25வருட பதவி கிடைத்து, அலைக்கற்றை ஊழல் உட்பட பல்வேறு வழிகளில் கொள்ளையடித்து, 200 தலைமுறைக்கு தேவையான சொத்து சேர்த்துவைத்துள்ளார்;

*தமிழகத் தமிழர் எத்தனை கொடுப்பினையற்றவர்கள்?!
பிறந்ததோ ஒரு பிரபாகரன் அவரும் ஈழமே போதும் என்று நின்றுவிட்டார். *))

தமிழக மக்கள் இந்திய நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி கருணாநிதி அரசுக்கு நெருக்கடி முற்றிக்கொண்டு வந்தபோதும் அவர் தமிழகத்திலிருந்து புலிகளுக்கு செல்லவிருந்த சிறுசிறு உதவிகளையும் தடுத்தார்.

அந்தக் காலம் நூறாயிரம்(ஒரு லட்சம்) இந்தியப் படையினர் தாங்கிகளுடனும்(tank) வானவூர்திகளுடனும், போர்க் கப்பல்களுடனும் புலிகளைச் சுற்றிவளைத்திருந்த காலம்; அப்போது புலிகள் வெறும் 2000பேர்; தலைவர் ஆயுதங்களை வேறு ஒப்படைத்துவிட்டார் பாதுகாப்பிற்கென கமுக்கமாக கொஞ்சம் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்தார்;
திலீபன் உண்ணாநோன்பிருக்கும் முன் மக்களிடம் சென்று பரப்புரை செய்தபோது "அவசியம் ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்" என்றே பரப்புரை செய்தார்;
தலைவரின் முன்னெச்சரிக்கைதான் புலிகள் மீண்டும் ஆயுதம் தூக்கநேரிட்டபோது அவர்களுக்கு வலுசேர்த்தது;

இந்திய கொண்டுவந்த ஆயுத தளவாடங்களானது, கொரியப் போருக்கு பிறகு அததனை அதிகமான ஆயுதத் தளவாடங்கள் கடல்வழி கொண்டுவரப்பட்ட ஒன்றாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

கப்பற்படையிடம் அப்போது 17 'அலைஜ்' வானூர்திகள் இருந்தன; அத்தனையும் புலிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன; புலிகளுக்கு ஆயுதம் கொண்டுவந்த படகுகளை அவைகள் மூழ்கடித்துவிட்டன; மணலாற்றி களமாடும் புலிகளுக்கு உணவும் தண்ணீரும்கூட தட்டுப்பாடாக இருந்தகாலம்;
ஒருநாளைக்கு ஒரு குவளை(டம்ளர்)க் கஞ்சிதான் தலைவர் உட்பட அந்தக்காட்டில் இருந்த 27பேருக்கும் கிடைத்தது;

ஈழத்தின் மூத்த அரசியல்வாதிகளும் தமிழக மூத்த அரசியல்வாதிகளும்கூட போரைக் கைவிடுமாறு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தனர்;
காட்டுக்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்த 'குமரன் பத்மநாபன் (கே.பி)' சென்றது;
புலிகளின் மூத்த உறுப்பினர் பலரும் கூட தற்போதைக்கு பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் இந்தியப்படை வெளியேறியபின் அப்பணத்தின் மூலம் பெருமளவு ஆயுதம் வாங்கி மிகப்பெரிய அளவில் போராட்டத்தைத் தொடங்கலாம் என்றும் கூறினர்;
தலைவர் அதை ஏற்கவில்லை;
தலைவர் பண்பை நன்கறிந்திருந்த இந்தியப்படையினர் கணக்கில்லாமல் பொதுமக்களைக் கொன்றுகுவித்தனர்;
ஈழத் தலைவர் பலரும் கூட பொதுமக்கள் இழப்பைச் சுட்டிக்காட்டி புலிகளைச் சரணடையுமாறு கூறினர்;
தமிழகத்தில் ம.பொ.சி கூட வானொலியில் புலிகளை சரணடைய வலியுறுத்தினார்;
அதுவரை 5000 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்;
200 புலிகளும் 500 இந்தியப்படையினரும் பலியாகியிருந்தனர்;
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியோர் நூறாயிரம்(லட்சம்) பேர்;
சிறையிலடைக்கப்பட்டோர், காணாமல் போனோர் கணக்கேயில்லை;
400 தமிழ்ப்பெண்கள் வல்லுறவுக்கு ஆளாகிய செய்திகள் வந்திருந்தன;
ஊரடங்கு உத்தரவால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்;

தலைவர் தொடர்ந்தும் உறுதியாக இருந்தார்;
குழுவினர் கடைசியாக அந்த மணலாற்றுப் பகுதியை விடுத்து வேறு பாதுகாப்பான பகுதிக்கு தலைவர் மாறவேண்டும் என்று கூறினர்;
"இது பண்டார வன்னியன் களமாடிய மண்; இங்கேயே நான் தொடர்ந்து போராடுவேன், அல்லது வீரமரணம் அடைவேன்; நான் இறந்தபிறகு இயக்கத்தையும் இலக்கையும் மொத்தமாகவோ சில்லரையாகவோ எவருக்கும் நீங்கள் விற்கலாம்" என்று நெத்தியடியாகக் கூறி கேபி குழுவை அனுப்பிவைத்தார்.

பணத்தை வாங்காத தலைவர் பிரேமதாச என்ற சிங்களர் ஆயுதம் தந்தபோது மறுக்காமல் வாங்கிக்கொண்டார்;
அவர் விலைபோகவும் இல்லை, விமர்சனத்தைத் தூண்டும் வாய்ப்புகளை நழுவவிட்டதும் இல்லை;

எனக்கு ஒரு கேள்வி?
அப்போது புலிகள் வெறும் 2000பேர், அவர்கள் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் மட்டும் இருந்தது.
அதற்கே அத்தனை பெரிய விலை கிடைத்தபோது,
2009 ல் புலிகள் 30,000பேர்; இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது;

அப்போது எத்தனை பெரிய விலை கிடைத்திருக்கும்?!