Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts

Monday, 24 February 2025

சீனர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது

சீனர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது!
  சீனாவை படையெடுத்து வென்று பிறகு குடியேறி 270 ஆண்டுகளாக அடக்கி ஆண்டு வந்த சிறுபான்மை வந்தேறி இனமான மஞ்சூ மக்களை 1911 இல் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்து தன் தாய்நிலத்தை விடுவித்தனர் சீனர்!
 இந்த மஞ்சூ வந்தேறிகளை 1850 லேயே தாய்ப்பிங் கிளர்ச்சியின் போது முக்கால்வாசி கொன்றுவிட்டனர். 
 ஆனால் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி கிளர்ச்சியை அடக்கிய மஞ்சூக்கள் அடுத்த இரண்டு கிளர்ச்சிகளையும் ஆரம்பத்திலேயே அடக்கினர்.
 ஆனால் சன் யாட் சன் தலைமையிலான கிளர்ச்சியின் போது மீண்டும் மிகப்பெரிய இனப்படுகொலையை செய்து மஞ்சூ ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர் சீனர்.
  இன்று மன்ச்சூ இனத்தின் தாய்நிலமான மஞ்சூரியாவை முழுமையாகவும் தனது பிடியில் வைத்துள்ளனர் சீனர்! 
 
 

Wednesday, 16 October 2019

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

1947 க்கு பிறகு இந்தியா சந்தித்த போர்கள், இழப்புகள் மற்றும் முடிவுகள்
------------

1947 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 1104 பேர்
முடிவு = போர்நிறுத்தம்
-------------

1962 சீனா உடனான போர்
உயிரிழப்பு = 1383 பேர்
முடிவு = தோல்வி
-----------

1965 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3000 பேர்
முடிவு = வெற்றி
------------

1971 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3843 பேர்
முடிவு = வெற்றி
-------------

1984 சீக்கியர் உடனான போர்
உயிரிழப்பு = 634 பேர்
முடிவு = வெற்றி
------------

1987 புலிகள் உடனான போர்
உயிரிழப்பு = 1138 பேர்
முடிவு= பின்வாங்கல் (விலகுதல்)
-------------

1999 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 700 பேர்
முடிவு = வெற்றி
-------------
இதில் சேர்க்கப்படாதவை

ஜுனாகத், ஹைதராபாத் (32 பேர் உயிரிழப்பு) ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படவில்லை.

கோவா(22 உயிரிழப்பு) , தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி (44 உயிரிழப்பு) ஆகியவற்றை கைப்பற்ற போர்ச்சுகல் உடன் நடந்த போர்கள் சேர்க்கப்படவில்லை.

காங்கோ மற்றும் சிசெல்ஷ் நாடுகளுக்கு படையுதவி செய்த முடிவுகளையும் சேர்க்கவில்லை.

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடந்த எல்லை மோதல்கள் சேர்க்கபடவில்லை.

(இதில் வட கிழக்கு, காஷ்மீர் ஆயுதக் குழுக்கள் மற்றும் நக்சலைட்  உடனான போர் நடவடிக்கைகள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து கொண்டு இருப்பதால் அவற்றைச் சேர்க்கவில்லை)

மேற்கண்ட அனைத்திலும் பாகிஸ்தான் (1947), சீனா (1962) மற்றும் புலிகள் (1987 - 1990) தவிர்த்த அனைத்து போரிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதில் பாகிஸ்தானை மீண்டும் போரிட்டு 3 முறை தோற்கடித்துள்ளது.

1967 இல் சியாச்சின் எல்லை மோதலில் சீனாவைக்கூட தோற்கடித்துள்ளது.

என்றால் இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றுதானே பொருள்?!

(தகவல்களுக்கு நன்றி: Wikipedia)

Tuesday, 26 June 2018

இந்தியா - தமிழர்நாடு போர்

இந்தியா - தமிழர்நாடு போர்

ஹிந்தியா நடத்திய போர்களில் அதிகமான உயிரிழப்பைச் சந்தித்த போர்கள்

(1) 1971 பாகிஸ்தானுடன்,
உயிரிழப்பு 3200.

(2) 1965 பாகிஸ்தானுடன்
உயிரிழப்பு 3000.

(3) 1962 சீனாவுடன்,
உயிரிழப்பு 2300.

(4) 1987-1990 தமிழீழத்துடன்,
உயிரிழப்பு 1138.

(தமிழீழம் தமிழர்நாட்டின் ஒரு பகுதி மட்டுமே ஆகும்)

Sunday, 23 April 2017

சீனப்பயணியின் தமிழ்க் கல்வெட்டு தென்னிலங்கையில் !

சீனப்பயணியின் தமிழ்க் கல்வெட்டு தென்னிலங்கையில் !

கி.பி. 1409 ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு தென்னிலங்கையில் காலி (Galle)யில் எஸ்.எச்.தொம்லின் என்பவரால் 1911ல் கண்டெடுக்கப்பட்டது.

இது செங் ஹெ (Zheng He) எனும் சீன கடலோடி சீனம், தமிழ், பாரசீகம் என மூன்று மொழிகளில் காணப்படுகிறது.

சிங்களத்தில் இல்லை.

சிவனொளிபாதமலை மீது இருக்கும் அல்லா,
தமிழர் கடவுளான தேனாவரை நாயனார்,
மற்றும் புத்தர் கோவில்களுக்கு கொடுத்த கொடை பற்றி கூறுகிறது.

  அதாவது புத்தமதம் பற்றி இருக்கிறதே தவிர சிங்களவர் பற்றி எதுவுமே இல்லை.

செங் ஹே எனும் சீனக் கடற்படைத் தளபதி மற்றும் நாடுகாண் பயணி ஒரு இசுலாமியர் ஆவார்.
இவர் சிவனொளிபாத மலையின் (Adam's peak) அல்லா என்று குறிப்பிடுவது இறைவன் எனும் பொருளில் இருக்கலாம்.
ஏனென்றால் 1766ல் தான் முதன்முதலாக சிவனொளிபாதமலை பௌத்தர்களுக்கும் திறந்துவிடப்பட்டது.
அதுவரை அது சைவர்களின் புனிதத்தலமே.

தேனாவரை நாயனார் கோயில் தென்னிலங்கையின் தொண்டீஸ்வரம் (donra) ஆகும்.
இது போர்த்துகேயர்களால் இடிக்கப்பட்டுவிட்டது.

இது இருந்த தேவேந்திரமுனை (தேவிநுவர)யில் பெருமாள் கோவில் ஒன்று சிங்களவர்களால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் வைணவ பற்றாளரான நாயக்கர் வம்சாவழி சிங்களவராக இருக்கலாம்.

தென்னிலங்கையில் தற்போதைய தலைநகரம் கொழும்பு அருகே  கோட்டை கட்டி ஆண்ட அழகேஸ்வரன் என்ற மன்னன் அழகேஸ்வரன்.
இக்கோட்டை ஸ்ரீ ஜயவர்த்தன கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
அழகேஸ்வரன் என்ன காரணத்தாலோ செங் ஹே வருகையை எதிர்த்துள்ளான்.
செங் ஹே படையுடன் அவன் நாட்டில் இறங்கி போர் செய்து தோற்கடித்து கைது செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு விடுவித்துவிட்டனர் என்றாலும் அழகேஸ்வரனின் கோட்டை அரசு (kotte kingdom) சிங்களவர் கைக்குப் போனது.
பிறகு இந்த கோட்டை அரசின் காலமே சிங்கள மொழியின் பொற்காலம் எனுமளவு சிங்களம் வளர்ச்சியடைந்தது.

அதாவது 1400களில் சிங்களவர்கள் மொழியாலும் நாகரீகத்தாலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளனர் எனலாம்.

600 ஆண்டுகள் முன்பு வரை கூட தென்முனை வரை தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். ஆண்டுள்ளனர்.

இதற்கு அசைக்கமுடியாத சான்று செங் ஹே அவர்களின் "காலி மும்மொழி கல்வெட்டு"ஆகும்.

Monday, 15 August 2016

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி -பெருஞ்சித்திரனார்

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி
-பெருஞ்சித்திரனார்

உலகில் இன்று பரந்துபட்டு வாழும் இரண்டு பழம் பேரினங்களில் தமிழினமும் ஒன்று .
மற்றொன்று சீன இனம்.

உலகில் இன்று வாழும் தமிழ்மக்களின் மொத்த மதிப்பீடு ஏறத்தாழ பதினேழு கோடியாகும் .

சீனநாட்டில் “சீ-மோ-லா”(TCHI-MO-LO) என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ நாலரைக் கோடியாகும் என்றும்

பிரன்னீசு மலை நாடு, செருமனி, பிரான்சு, போர்த்துகல், இத்தாலி ஆகிய நாடுகளில் “தாமோர்” மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ மூன்றரைக் கோடி பேராகும் என்றும்,

எகிப்தில் தொமூர் என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ இரண்டரைக் கோடிப்பேர் என்றும் அறிஞர்கள் கூறுவர்.

சீ-மோ-லா, தாமோர், தொமூர் என்னும் பீயர்கள் தமிழ் என்னும் திரிபு மொழிகளாகும் .

தமிழ் என்னும் சொல் எங்ஙனம் வேத ஆரியர்களிடையே த்ரமுள் என்று திரிக்கப் பெற்றுத் தரமிளம், திரவிடம் என உருமாறி வழங்கியதோ, அங்ஙனமே அச்சொல் பல்வேறு நாடுகளில் பலவேறு வடிவங்களாகத் திரிபுற்றும், கலப்புற்றும், சிதைவுற்றும் மாறியும் வழங்குகின்றது.

கிரேத்தா தீவில் தெர்மிலர் என்னும் தீபெத்தில் திரமிலர் என்றும் தமிழர் அழைக்கப்பெறுகின்றனர்.

மற்றும் தமிழ் மொழியும் தாமிட , தமுர், தாமாலி, தமார், தமிர், துமா, தொமிட, தெமலிக், தாமுரி, தாமல் முதலிய பெயர்களாகப் பல்வேறு நாடுகளில் வழங்கப்பெறுகின்றன.

மலேசியா, ஈழம், சிங்கப்பூர், அந்தமான், பர்மா, பிசி, பிரான்சு, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் நகர்ப்புறங்களில் கலப்பில்லாமல் இங்கிருந்து பலவகைப் பணிகள் தொடர்பாகப் போய் வாழும் தமிழின மக்கள்தாம் தம்மைத் தமிழர்கள் என்றும், தாம் பேசும் தாய்மொழியைத் தமிழ் என்றும் சிதைவில்லாமல் கூறி வருகின்றனர்.

தமிழீழமாகிய யாழ்பாணத்தில் வாழும் தமிழினமும் தமிழும் பெயரிலும் வழக்கிலும் திரிபில்லாமல் இருப்பதற்குக் கரணியம், அங்குத் தமிழர் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருவதுதான் .

மற்றபடி ஆத்திரேலியா, இந்தோனேசியா, மொரிசீயசு முதலிய நாடுகளில் கூட தமிழினப் பெயரும் தமிழ் மொழிப் பெயரும் ஓரளவு சிதைந்தும் பெருவாரியாக வழக்கிழந்தும் போய்விட்டன.

உலகில் தமிழினம் வாழும் வேறு நாடுகள் திபெத்து, பெலுச்சித்தானாம், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கானா, கம்போடியா, சயாம், மார்த்தினிக்கு, மோரித்டீவு, பிரிட்டிசு, குவைத்து, தென் அமெரிக்கா , சப்பான், உகாண்டா முதலியன.

உலகின் ஏறத்தாழ நாற்பத்து நான்கு நாடுகளில் தமிழினம் வாழ்கிறது.
அங்கெல்லாம் தமிழ்மொழி கலப்புற்றும், சிதைந்தும், திரிந்தும் வழங்கப்பெறுகின்றது.

சில நாடுகளில் தமிழினம் பழங்குடி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
சிலவிடங்களில் திருந்திய மக்களாக நாகரீகமுற்ற மக்களாக, ஆனால் பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகள் பேசும் மக்களாக வாழ்கின்றனர் .

உருசிய நாட்டில் ஏறத்தாழ முப்பது இலக்கம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பெற்றுள்ளது.
அவர்கள் சி-மோ-லா என்னும் திரிந்த மொழியைப் பேசி வருகின்றனர் என்னும் கூறப்பெறுகிறது.

தென்மொழி, பெருஞ்சித்திரனார்.

Friday, 4 March 2016

அக்குபஞ்சர் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

அக்குபஞ்சர் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

தென்கிழக்கு சீனாவில் இன்றும் முப்பது லட்சம்பேர்  பின்பற்றும் தாவோயிசம் மற்றும் அதன் கொடையான அக்குபஞ்சர் மருத்துவமுறையையும் தோற்றுவித்தது யார்?

கி.பி.200 வாக்கில் போகர் தமிழகத்தில் இருந்து சீனாவிற்கு சென்று ஒரு சீன இளைஞனின் உடலில் புகுந்து 'ஐ' என்ற மனிதனாகி 'தவ்' கொள்கையைத் தோற்றுவித்தாராம்.
இந்த அறக்கொள்கையை 'யூ' பரம்பரையிடம் கையளித்துவிட்டு தமிழகத்தின் சொர்க்கமான பழனிமலைக்கு திரும்பினாராம்.

Friday, 16 October 2015

கிழக்காசியாவில் தமிழ்க் கல்வெட்டுகள்

கிழக்காசியாவில் தமிழ்க் கல்வெட்டுகள்

சுமத்ரா பகுதியில், பாருஸ் அருகே லோபோ துவா என்ற இடத்தில் காணப்படும் ஒரு கல்வெட்டு 1088ம் ஆண்டு நிறுவப்பட்டது அதும் கூறும் செய்தி,

தற்போதைய நடைமுறைத் தமிழ் மொழிபெயர்ப்பு:

நிகழும் சக வருடம் ௧0௧0 மாசி மாதம்..,

நாங்கள் ஆயிரம் திசை ஐந்நூற்றுவர் மாதங்கிரி வல்லவ தேசி உய்யக் கொண்ட பட்டினம் எனப்படும் வாரோச்சிலுள்ள வேளாபுரத்தில் சந்தித்து, எங்கள் பிள்ளைகளான நகர சேனாபதி நாட்டுச் செட்டியார் பதிநெண்பூமி தேசி அப்பர் மட்டும் மாவெட்டுகள்

(ஒவ்வொரு) கப்பலுடைய தலைவனும், கேவிகளும், அஞ்சு துண்டையம் தங்கம் அந்த கஸ்தூரி முதலானவைக்கு செலுத்திவிட்ட பிறகுதான், கீழே இறங்கவேண்டும்.

கல்வெட்டில் உள்ள தமிழ்:

1 ஸ்வஸ்தி ஸ்ரீ சகரை
2 ஆண்டு ஆயிரத்து[ப்ப]
3 த்துச் செல்லாநி[ன்]
4 ற மாசித் திங்கள்
5 வாரோசாந மாதங்
6 கரி வல்லவத் தேசிஉ
7 ய்யக் கொண்ட பட்
8 டி நத்து வேளாபுரத்து
9 கூடி நிரந்த தே[சித் திசை]
10 விளங்கு திசை ஆயி
11 த்தைஞ்ஞூற்றுவரோ
12 ம் நம்மகநார் நகர ஸேநாப
13 தி நாட்டுசெட்டி
14 யார்க்கும் பதிநெண்பூமி
15 தேசி அப்பர்க்கு மா[வெ]த்
16 துகளுக்கும் நா வைத்துக்
17 குடுத்த பரிசாவது மரக்க
18 ல... ... ...
19 ல மரக்கல நாயநுங் கேவி
20 களும் கஸ்தூ[ரி] விலை மு[தல]கப்ப[ட]
21 அஞ்சு துண்[டா]யம் பொன்னும் கு[டு]
22 த்துப் பாவாடை ஏறக்கடவதாகவும்
23 இப்படிக்கு [இ]க்கல் எழுதி நாட்டி
24 க் குடுத்தோம் பதிநெண்பூமி தேசித் திசை விள
25 ங்கு திசை ஆயிரத்தைந்த்நூற்றுவரோம் அ
26 றமற வெற்க அறமேய் துணை.

ஆங்கிலத்தில்:

'Lobo Tuwa' Tamil inscription
Period: 11th Century CE
Script: Tamil-Grantha
Language: Tamil
Found in: Lubo Tuwa, Sumatra, Indonesia.
Material: Stone
Present Location / Lender Museum Nasional Indonesia, Jakarta, Indonesia

This Tamil inscription was found at the early port site of Lobo Tuwa near Barus (Baros) of northwestern Sumatra.

The date of the text falls within the reign of Kulottunga Chola of Tamilnadu. It is dated 1088 CE.

Translation of the available Text portion:
In the Saka year 1010 current, month Masi,
we, the Five Hundred of the Thousand Directions,
having met at the Velapuram in Varosu (Barus), also called ‘the pattinam (commercial town) for the welfare of the merchant body blessed by Matankari (Durga)’,
decided to grant as follows to ‘our sons’, the nagara-senapati Nattu-cettiyar, to Patinen-bumi-desi-appar(?), and to the mavettugal (elephant trainers?):
[On each of the] ships’ [cargoes?], the ship’s captain and crew will pay the fee anjutundayam in gold, pegged to the price of kasturi (musk), and [then only] may ‘step on the cloth spread’ (ie. enter the settlement to trade).
Thus we, the Five Hundred of the Thousand Directions, known in every direction in all Eighteen Lands, had the stone inscribed and planted.
Do not forget charity; charity alone will help you.

இதிலிருந்து அறியமுடிவது,
உய்யங்கொண்ட பட்டிணம் என்ற தமிழ் வணிகக் குடியிருப்பு இருந்துள்ளது.
அதில் தமிழ் வம்சாவழிகளுக்கு (பிள்ளைகள்) வரி செலுத்தி கப்பல் வணிகம் செய்துள்ளனர்.

இதே போல இந்தோனேசியாவின் Neusu aceh, Porlak dolok போன்ற இடங்களிலும் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

மலேசியாவின் Batu bapahatல் பாறையில் தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன.

இதேபோல தாய்லாந்தில் Takua pa
பகுதியில் ஒரு தமிழ் கல்வெட்டும்

சீனாவின் Quanzhou  ஒரு பகுதியில் ஒரு தமிழ் கல்வெட்டும் உள்ளன.

பர்மாவில் Pagan பகுதியிலும் ஒரு கல்வெட்டு உள்ளது.

ஆங்கிலத்தில் விரிவாக
ismail.net/Source/0104c.html

நன்றி
aatputhan.blogspot.in/2008/05/blog-post_26.html?m=1
https://en.m.wikipedia.org/wiki/Tamil_inscriptions_in_the_Malay_world

Sunday, 9 August 2015