Showing posts with label சான்று. Show all posts
Showing posts with label சான்று. Show all posts

Tuesday, 8 October 2024

விஜய் தெலுங்குபதி

விஜய் தெலுங்குபதி

 "தமிழகத்தை நசுக்கும் மத்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன்" என்று கூறிய விஜய் சேதுபதி உண்மையில் ஒரு தெலுங்கர்!

 சேதுபதி எனும் தமிழர் குடிப் பட்டம் சேர்த்துக்கொண்டு ஏமாற்றுகிறார்.

பிப்ரவரி 29, 2016 தினகரன் செய்தி

தமிழக தெலுங்கர் யுகாதி விழா

2016-02-29@ 00:26:52

சென்னை: அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பாக ‘தமிழக தெலுங்கர் யுகாதி விழா’ மீனம்பாக்கத்திலுள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.
யுகாதி விழாவிற்கு சம்மேளனத் தலைவர் சிஎம்கே. ரெட்டி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பு செயலாளர் நந்தகோபால், பொருளாளர் அ.சங்கரன், மாநில துணை தலைவர் ஜெஎஸ்கே. சதீஷ்குமார், இளைஞரணி தலைவர் டி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் 'தமிழகத்தில் முக்கிய பங்களிக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி மங்கம்மா, ஜி.டி. நாயுடு, ஓமந்தூரார் ஆகியோர் தெலுங்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தமிழகத்தில் சிறந்து விளங்கினார்கள்.
அதேபோல் இங்கு அமர்ந்திருக்கும் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரும் சிறந்து விளங்குகிறார்கள்.
யார் எந்த மொழி பேசினாலும், தாய்மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார்.

இவ்விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு, பின்னணி பாடகி பி.சுசிலா, வேல்டெக் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். சகுந்தலா ரங்கராஜன், ஜெயா கல்வி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

  திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உலக தெலுங்கு சம்மேளனத் தலைவர் வி.எல். இந்திரா டெக், அகில பாரத விஷ்வகர்மா மகாசபை நிறுவனர் ராஜமகாலிங்கம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

(தகவலுக்கு நன்றி: Asa Sundar)

26.09.2017 அன்றைய பதிவு

Monday, 4 December 2023

கோயிலுக்கு இஸ்லாமியர் தானம்

கோயிலுக்கு இஸ்லாமியர் தானம் 

 நெல்லையப்பர் கோயில் உள்ள கிபி 1751 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சொத்து பட்டயம் ஒன்றில் லாலுகான்சவான் சாயுபு என்பவர் நெல்லை பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நித்ய பூஜைக்கு தானம் வழங்கிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
 அதுபோல் குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு கிபி 1848 ஆம் ஆண்டு நித்திய பூஜை மற்றும் நெல்லை காந்தியம்மன் சிறுகால பூஜைக்கான கட்டளைக்கு அசாதுவால சாயுவும் இசுமாலிராவுத்தரும் வேறு சிலரும் சேர்ந்து தான பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

செய்தி: தினகரன் (04.12.2023)
தலைப்பு: குற்றாலம் கோயிலில் செப்பு பட்டயங்கள் கண்டுபிடிப்பு

 ஏற்கனவே தென்காசியை சேர்ந்த அகமதுபேட்டை (ஆமது பேட்டை) முஸ்லீம்கள் குற்றால நாதர் நித்திய பூசைக்கு மகமைப் பணம் கொடுக்க (கி.பி. 1788ல்) இணங்கி எழுதிய பட்டயம் ஒன்று பற்றி ஏற்கனவே பதிவிட்டுந்தேன்.

Thursday, 16 May 2019

கிருஷ்ணசாமி போட்ட வேடம் கலைந்தது

கிருஷ்ணசாமி போட்ட வேடம் கலைந்தது

பதிவு: Kasi Krishna Raja

நரியின் வேடம் கலைந்தது....

கிருஷ்ணசாமி யின் தந்தை ஒரு தெலுகு அருந்ததியர் (சக்கிலியர்).
வளர்த்தவர் தான் குடும்பன் என்று கோர்ட்டுக்கு தாக்கல் செய்த பிராமண பத்திரம் ஒன்றின் copy...

பழந்தமிழ் குலங்களை உள்ளிருந்து கைப்பற்றி ஆளும் வடுக வித்து...
----------
ஏற்கனவே நான் வெளியிட்ட சான்றுகளைக் காண,
தேடுக : கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் வேட்டொலி

படம்:
Dr.Krishnasamy cannot claim karjppakudumban as his father. Actually one Mr.Rangarajan who belonged to Madari cummunity is the  biological father of .Krishnasamy....

... father Rangarajan and mother Thamarai both are belong to Madari cummunity (Arunthayhiyar)

கையொப்பம்
நகர நிலவரித் திட்டம்
கோயம்புத்தூர் (தெற்கு)

கையொப்பம்
வட்டாட்சியர்
கோவை (தெற்கு)

Thursday, 28 March 2019

அண்ணாதுரையும் கருணாநிதியும் தெலுங்கரே - பாரதிதாசன் எழுதிய உண்மை

அண்ணாதுரையும் கருணாநிதியும் தெலுங்கரே!
- பாரதிதாசன் எழுதிய உண்மை

குயில் இதழில் (28.10.1958) பாரதிதாசன் எழுதுகிறார்....

"தங்களது இயக்க கூட்டங்களில் எனது பாடலை வாசித்து விட்டு, மக்களின் உணர்ச்சியை தூண்டி,
பின்னர் எனை முன்னாள் (மாசி) கவிஞன் என்கிறார்கள்.
குடும்பத்தில் தந்தை பணம் கொடுக்க இயலாத வறியவன் ஆகி போனால்,
வேறொருவன் புதிதாக பணம் தந்தால் அவன் இந்நாள் தந்தையும், முன்னவன் முன்னாள் தந்தையும் ஆக மாட்டன்!
ஒருவேளை அண்ணாத்துரையும், கருணாநிதியும் அப்படி குடும்பத்தில் இருந்து வந்தவர்களோ?
அண்ணாத்துரையும், கருணாநிதியும், டி.என்.ராமனும் தங்களின் 'தெலுங்கு குல மேளத்தை' நன்றாகத்தான் வாசித்து அரசியல் செய்கிறார்கள்".

நன்றி: Ranga Rasu Ra

முழுப்பதிவு கீழே....

அண்ணாத் தொரையின், திராவிடத்தின் லட்சணம் இதுதான்.
இப்போதெல்லாம் பல தமிழ்த் தேசிய தோழர்களே அண்ணாத்துரைக்கு அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு உள்ளிட்ட உரிமங்களை அச்சடித்து கொடுத்து அண்ணாத்துரையை தமிழன் என்கிறார்கள்.
ஆனால் இந்த அண்ணாத்துரை யார் என்பதை பாரதிதாசன் விளக்கி இருக்கிறார்.
முதலில், அண்ணாதுரை ஈவெராவின் மாணவன், கருணாவின் ஆசான் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்!

இந்த அண்ணாத்துரை பற்றி திராவிட கவிஞன், பாவலன், பாவேந்தன், புரட்சி கவிஞன் என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகத்தால் போற்றப்பட்ட பாரதிதாசன் தன்னுடைய 'குயில்' எனும் பத்திரிக்கையில் எழுதி இருக்கும் குறிப்பு இங்கே...

''அண்ணாத்துரை, தன் சகோதரி மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும், இன்ப விளையாட்டு முடியும் வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும், அண்ணாத்துரையின் காஞ்சி வாழ்வு தொண்டுகளில் ஒன்று'.'

''துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் வளர்ப்பு சிற்றண்ணை ராஜாமணி என்று அண்ணாத்துரை அப்போது புலம்புவார்!
அன்னையோ சென்னையில் ஐயரோடு;
காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.
பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் செல்வந்தர் பொன்னப்பா தரும் சிறுதானம்''.

"இந்த நிலையில் அண்ணாத்துரை பெரியாரின் செல்வ நிலை கண்டு மலைத்தார்.
அவரின் தொண்டராகி நிலைத்தார்.
குடும்பம் குலைத்தார்.
பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.
இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும்.
திரு. குத்தூசி குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்!"
-குயில் இதழ் (30-9-1958)

"விழாக்களில் எனக்கு வழங்கப்படும் பொற்கிழிகளையும், பொன்னாடைகளையும் தனது என்பார்.
தன் ஏற்பாடு என்பார்.
என்னோடு பங்கு பெரும் நிகழ்வுகளை மறக்காது நிழற்படம் எடுத்து விளம்பரம் செய்துகொள்வார் அண்ணாத்துரை.
என்னிடம் மன்றாடி என்னோடு ராஜபாளையம் வந்தார்.
ராஜபாளையத்தில் நடந்த விழாவில் பொருள் காப்பாளராக தானாக ஆகி கொண்டார்.
ஆனால் அண்ணாத்துரை தன்னுடைய பொன்னாடை என்று சொன்னதை ஒரு விருந்தினர் தனது தறியில் எனக்காக பிரத்யேகமாக நெய்தது என்றார்.

ஒரு சிங்கப்பூர்க்காரர் பலமுறை பல பத்தாயிரங்கள் எனக்கு அனுப்பியதை அண்ணாத்துரை பெற்றுக் கொண்டார் என்றார்.

குயில் இதழ் துவங்குவதற்கு பல ஆயிரம் ரூபாய்களை வாங்கி கொண்டு சென்னை சென்றார் அண்ணாத்துரை.
இந்த வேலையை நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் கவலையை விடுங்கள் என்று சொல்லி போனவர் போனவர்தான்.
ஐகோர்ட்டில் குயில் இதழ் முதலீட்டாளர்களால் வழக்கானது.
பணத்தை திருடுவது மட்டுமன்றி என்னுடைய குயில் இதழை முடக்க வேண்டும் என்பதும் அண்ணாதுரையின் நோக்கமாக இருந்திருப்பது வழக்கின் போது விளங்கியது".
- குயில் இதழ் (14-10-58).

"தங்களது இயக்க கூட்டங்களில் எனது பாடலை வாசித்து விட்டு, மக்களின் உணர்ச்சியை தூண்டி, பின்னர் எனை முன்னாள் (மாசி) கவிஞன் என்கிறார்கள்.
குடும்பத்தில் தந்தை பணம் கொடுக்க இயலாத வறியவன் ஆகி போனால், வேறொருவன் புதிதாக பணம் தந்தால் அவன் இந்நாள் தந்தையும், முன்னவன் முன்னாள் தந்தையும் ஆக மாட்டன்!
ஒருவேளை அண்ணாத்துரையும், கருணாநிதியும் அப்படி குடும்பத்தில் இருந்து வந்தவர்களோ?
அண்ணாத்துரையும், கருணாநிதியும், டி.என்.ராமனும் தங்களின் 'தெலுங்கு குல மேளத்தை' நன்றாகத்தான் வாசித்து அரசியல் செய்கிறார்கள்
-குயில் இதழ் (28-10-58).
மேலே பதிவாகி இருக்கும் கருத்துக்கள் யாவும், இன்னும் மேலும், திராவிடர்களால் திராவிட கவிஞன் என்று கொண்டாடப்படும் பாரதிதாசனால் தனது 'குயில்' இதழில் வெளியிடப்பட்டவை.
ஈவேராவின் மாணவனும், கருணாவின் ஆசானும் வேறு என்ன சும்மாவா இருந்திருப்பார்?

அண்ணாதுரை பற்றிய உண்மைகளை அறிய,
தேடுக: நொண்ணாதுரை வேட்டொலி

Wednesday, 31 October 2018

RSS பரப்பும் தேவர் பற்றிய பொய்

RSS பரப்பும் தேவர் பற்றிய பொய்

ஆர்.எஸ்.எஸ் தலைவரான கோல்வால்கர் மதுரை வந்தபோது தேவர் அவரைச் சந்தித்து பொன்முடிப்பு வழங்கியதாக இந்துத்துவ வெறியர்கள் பொய் பரப்புரை செய்துவருகின்றனர்.

தேவர் வெறுப்பு அரசியல் செய்வோரும் இதை முக்கிய குற்றச்சாட்டாக வைக்கின்றனர்.
"காந்தியைக் கொன்றவருக்கு பணமுடிப்பு கொடுத்தார்" என்றெல்லாம் கலங்கம் கற்பிக்கின்றனர்.

இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டும் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இதில் இருப்பவர் தேவரே இல்லை என்பது தெளிவு.

1951 முதலே தேவர் மீசையில்லாமல் நீளமான முடியுடன் தோற்றமளித்தார்.
இதற்கு பல சான்றுகள் உண்டு.

1955 இல் தேவர் பர்மா சென்றபோது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட காணொளிகள் புகைப்படங்கள் இன்றும் உண்டு.
அதில் அவர் மீசையில்லாமல் நன்கு நீண்ட தலைமுடியுடன் உள்ளார்.
கடைசிவரை அப்படியே தொடர்ந்தார்.

கோல்வால்கர் மதுரை வந்தது 1956 இல்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தேவர் என்று காட்டப்படும் நபர் மீசையுடனும் நன்கு வெட்டப்பட்ட தலைமுடியுடனும் காணப்படுகிறார்.

தேவருடைய வாழ்க்கை வரலாறு என்று முதலில் வந்த நூல் "முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர்" என்கிற நூலே ஆகும்.
அந்த நூலை எழுதிய திரு.ஏ.ஆர். பெருமாள் தனது சிறு வயது முதல் தேவருடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார்.
அதில் தேவருடைய இந்து மதப்பற்று பற்றியும் வருகிறது.
ஆனால் கோல்வால்கர் பற்றியோ ஆர்.எஸ்.எஸ் பற்றியோ எதுவுமில்லை.

திரு.காவ்யா சண்முகசுந்தரம் என்கிற எழுத்தாளர் தேவர் பற்றி வெளிவந்த 24 சிறிய பெரிய நூல்களை ஆராய்ந்து தொகுத்து "பசும்பொன் சரித்திரம்" எனும் தேவரின் முழுமையான சுயசரிதை எழுதியுள்ளார்.
அதிலும் கோல்வாக்கர் சந்திப்பு சேர்க்கப்படவில்லை.

தேவர் வாழ்க்கை வரலாறு பற்றி ஆராய்ந்து தகவல்களைத் திரட்டிவைத்திருக்கும் ஆய்வாளர் திரு.நவமணி கோல்வால்கர் - தேவர் சந்திப்பு பொய் என்று கூறிவிட்டார்.

தேவருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

எனவே ஆதாரமற்ற இந்த பொய்பிரச்சாரத்தை யாரும் நம்பவேண்டாம்.

Monday, 22 October 2018

நான்மறை படைத்தது தமிழரே!

நான்மறை படைத்தது தமிழரே!

நான்மறை என்றாலே ரிக்,யஜூர், சாமம், அதர்வணம் என்று தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

வடக்கே வேதங்கள் என்றாலே ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்றுதான்.
ரிக் வேதத்திலும், மனுஸ்மிருதியிலும் வேதம் மூன்று (வேதம் த்ரியே) என்றே வருகிறது.
நாம் "நான்மறை" என்றழைப்பதுபோல வடவர் "த்ரிவேதா" என்றே அழைக்கின்றனர்.
(திரிவேதி எனும் வடயிந்திய பிராமணப் பட்டம் இதைக் குறிப்பதே)
‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116)

உண்மையில் நான்மறை என்பது தமிழ் மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ஆகும்.
--------------

கி.பி.1050 இல் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை அந்தணர்கள் நான்மறையை எழுதிவைக்காமல் வாய்வழிக் கல்வியாகவே கற்பித்துவந்தனர்.
(குறுந்தொகை 156 பார்ப்பனர் ஓதுவதை 'எழுதாக் கற்பு' என்றே கூறுகிறது)
அந்த மறைகளை வள்ளுவர் முப்பாலாக எளிமையாக எழுத்தில் எழுதினார் என்று உள்ளது.

"ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”

இதிலிருந்து வள்ளுவர் இயற்றிய திருக்குறள் அந்தணர் கற்பித்துவந்த நான்மறைதான் என்பது தெளிவாகிறது
----------------------

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பார்ப்பனரான திருஞானசம்பந்தர் இதையே கூறியுள்ளார்.

"...சைவவேடம் தான் நினைந்து ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு
அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே"

அதாவது அந்தணர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு சொல்லிக்கொடுத்த சிவனை போற்றுகிறார் அவர்
----------

கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் மறை ஓதும் பார்ப்பனரை 'வண்டமிழ் மறையோர்' என்று குறிப்பிடுகிறது.

இது பற்றிய கட்டுரைக் காதை பாடல் வருமாறு,

"வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு"

இதன் பொருள்,
பார்ப்பனரான பராசரன் என்பவர் வளமான தமிழ்மறைகளில் வல்லவரான மறையோருக்கு வானளவு பொருள் கொடுத்து உதவிய, உறுதியான வளமிகுந்த நீண்ட வேலுடைய, சேரனைக் காண காடு, நாடு, ஊர் என அனைத்தையும் கடந்து உயர்ந்த பொதியமலையும் பின்னால் இருக்கும்படி (கடந்து) வெகு தூரம் சென்று அவனைச் சந்தித்தார்.

இதிலிருந்து மறைகள் தமிழில் இருந்தது என அறியலாம்.
அவற்றை ஓதிய பார்ப்பனருக்கு சேரன் கொடையளித்ததைக் கேட்டு பராசரன் எனும் பார்ப்பனரும் அவனை நாடிச் சென்றதையும் அறியலாம்.
-------------
  தொல்காப்பியம் (பிறப்பியல் 20) கூறுகிறது,

"..வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே"

அதாவது ஒரு எழுத்தின் உச்சரிப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை அந்தணர் ஓதும் மறைகளை வைத்து முடிவு செய்யுமாறு கூறுகிறது.

பழமையான தமிழின் முதன்மையான இலக்கண நூலே அந்தணரின் ஓதும் உச்சரிப்பை வரையறையாகக் கூறுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
------------

என்றால் சமஸ்கிருதம் எப்படி ஓதப்படும் மொழியாக ஆனது?!

வேதங்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன.
அதற்கு பொருளே தெரியாமல் இருந்ததால் யாரும் அவற்றை விரும்பவில்லை.

(நம்மாழ்வார் இயற்றிய நான்கு பாசுர நூல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியன நால்வேதத்தின் சாரமாக இருப்பதாகக் கூறி அவரை 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று மதுரகவியாழ்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மேற்கண்ட பாசுர நூல்களுக்கும் சமஸ்கிருத வேதங்களுக்கும் பொருத்தம் இல்லை)

இன்று நான்கு வேதங்களுக்கு கிடைக்கும் ஒரே விளக்க உரை சாயனர் எனும் கன்னடர் எழுதிய விளக்க உரை மட்டுமே!

இவர் யாரென்றால் வேதாரண்யரின் உடன்பிறந்தவர் ஆவார்.

வேதாரண்யர் யார்?!

கிபி 14 ஆம் நூற்றாண்டில் சிருங்கேரி மடத்தின் 12வது சங்கராச்சாரியார் வேதாரண்யர்.
கன்னடரான இவரும் வடமொழியில் சிறந்த புலவர்.
சம்ஸ்கிருதத்தில் பல படைப்புகளைத் தந்தவர்.

இவரே தமிழகத்தில் வடுகர் ஆட்சி அமையக் காரணமானவர்.
பாண்டியப் பேரரசு வாரிசுரிமைப் போரில் சிக்கியிருந்தபோது டெல்லி சுல்தான்கள் பாண்டியரை வீழ்த்தி மதுரை வரை முன்னேறினர்.
அப்போது மதுரை சுல்தானிய படைத்தளபதிகளான ஹரிஹர, புக்கரை மனம் மாற்றி மதுரை மீது ஏவியர் வேதாரண்யரே!
அவர்கள் துருக்கியரை விரட்டி மதுரையைக் கைப்பற்ற காரணமானவர்.
விஜயநகர பேரரசு க்கு அடித்தளமிட்டவர்.

கோயில்கள் பிராமண மயமானதர்க்கும் சமஸ்கிருத மயமானதற்கும் மூல காரணம் விஜயநகர பேரரசு மற்றும் அதன் வழிவந்த நாயக்கர் அரசுகளே!

தமிழகத்து நாயக்கர் ஆட்சியை சமஸ்கிருதத்தின் பொற்காலம் என்றே கூறலாம்.

சோழர் காலத்தில் தாய்லாந்து சென்ற தமிழ்ப் பார்ப்பனர் இன்றும் தமிழில் ஓதிதான் அந்நாட்டு மன்னருக்கு முடிசூட்டுகின்றனர்.

ஆக தமிழ் மறைகளை புறக்கணித்து சமஸ்கிருதத்தைப் புகுத்தியது தமிழரல்லாத ஆட்சியே!
----------
பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி
-----------

Friday, 21 September 2018

உனக்கேன் கொடுப்பது கிஸ்தி என கேட்டது கள்ளர் கூட்டமைப்பு

உனக்கேன் கொடுப்பது கிஸ்தி என கேட்டது கள்ளர் கூட்டமைப்பு

"வானம் பொழிகிறது! பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி"
இந்த வசனத்தை உண்மையில் பேசியது மதுரை கள்ளர்கள்.
இது ஆங்கிலேயர் ஆவணத்தில் பதிவாகி உள்ளது.

இந்த வசனத்தை காப்பி அடித்து சம்மந்தம் இல்லாமல் கட்டபொம்மு பேசியதாக கதை அமைத்து அதையும் ஒரு கள்ளர் (சிவாஜி கணேசன்) வாயாலேயே பேச வைத்துவிட்டார் இயக்குனர் தெலுங்கு பந்துலு.

Source :The Madura Country: A Manual.

நன்றி: Karthik Thevar

------------------------

 1750களில் பிரிட்டிஸார் மதுரை மண்டலத்தில் வரி வசூல் செய்யும்உ ரிமையை பெற்று தன்னரசு கள்ளர்நா ட்டிற்கு வந்த பொழுது பிரிட்டீஸார்க ள்ளர் நாட்டாரிடம் வரி கேட்ட போது அவர்கள் அளித்த பதில் என்னவென்று பிரிட்டிஸாரே புத்தகம் எழுதியுள்ளனர்.

 ராபர்ட் ஓர்ம், s.c ஹீல், எட்கர் தர்ட்சன்எ ழுதிய நூல்களில் பிரிட்டீஸ் அரசு தன்னரசு கள்ளர்களிடம் வரியை கேட்டது அதற்கு அவர்கள் அவமானம்  அளிக்கும் வார்த்தைகளால் பதிலை அளித்தார்கள் என்று கூறுகிறார்கள்.

கள்ளர்களின் பதில்:

“வானம் பூமிக்கு மழையைத் தருகிறது,

எங்கள் வயலை நாங்கள் உழுது பயிரிட்டு உழைக்கிறோம். 

அதனால் கிடைக்கும் பிரதிபலனை எங்கள் மக்கள் அனுபவிக்கிறார்கள். 

இதில் என்ன காரணம் உள்ளது நாங்கள் உங்களுக்கு கீழ்பணிந்து வரி செலுத்துவதற்கு?”

மேலும் அந்த புத்தகத்தில் அவர்கள் அந்த பதிலுக்கு ஏற்றார்போல் எங்களிடம் சண்டையிட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.

சான்றுகள்:-

The rebel commandant by S.C Hill

East india magazine by R.Alexander

Castes and Tribes of south India by Edger thurston

நன்றி:-

சோழ பாண்டியன்

ஏழுகோட்டை நாடு




Friday, 14 September 2018

நீலகிரி மலையில் படுகர் குடியேற்றம்

நீலகிரி மலையில் படுகர் குடியேற்றம்

கன்னட இனத்தவரான படுகர் நீலகிரியில் குடியேறி ஆக்கிரமித்தது போக தம்மை பழங்குடி என்று அறிவிக்குமாறும் தொடர்ந்து கோரிவருகின்றனர்.

பழங்குடி என்பதற்கான எந்த அம்சமும் இல்லாத இவர்கள் முதலில் திரிந்த கன்னடம் பேசி வந்தனர். தற்போது தனிமொழி பேசுகின்றனர்.
முதலில் கன்னடத்தில் எழுதிவந்த இவர்கள் இப்போது தமிழில் எழுதத் தொடங்கிவிட்டனர்.

இவர்களைச் சுட்டிக்காட்டி நீலகிரி எங்களுக்குச் சொந்தம் என சில கன்னடவர் கூறிவருகின்றனர்.

ஆனால் படகா அல்லது படுகா என்றழைக்கப்படும் படுகர் விஜயநகர ஆட்சி வீழ்ந்த பிறகு 1565 வாக்கில் தெற்கே பரவிய மொகலாய ஆட்சிக்கு பயந்து நீலகிரிக்கு ஓடிவந்த வந்தேறிகள் ஆவர்.

குடியேறி குடியேறி நீலகிரியில் ஒரு பகுதியை தமது வசமாக்கிக் கொண்டனர்.

1812 இல் வெறும் 22,000 பேராக இருந்த படுகர் மக்கட்தொகை 1981 இல் ஒன்றரை லட்சமாகப் பெருகிவிட்டது.

அதாவது 1871இல் 28 படுகருக்கு ஒரு தொதவர் (தமிழ்ப் பழங்குடி) என்ற நிலை இருந்தது.
129 படுகருக்கு ஒரு தொதவர் எனும் அளவுக்கு இவர்கள் மள மளவெனப் பெருகியுள்ளனர்.

பழங்குடிகள் போல தொழிலோ வாழ்வியலோ கிடையாது.
பாதிக்கும் மேலானோர் கிறித்தவ மதத்தைத் தழுவி நகர்ப்புற நாகரீகத்துடனே வாழ்கின்றனர்.

நீலகிரி எனும் நீலமலை தமிழர்களுடன் தொடர்புடைய பழங்குடி மக்களின் பூர்வீக மலை ஆகும்.

சான்று: தமிழகப் பழங்குடிகள் (நூல்)
ஆசிரியர்: பக்தவச்சல பாரதி

Tuesday, 11 September 2018

கயவாளி கட்டபொம்மன் - 3

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு

பதிவர்: அன்பெழில் (anpezhil)

பகுதி-3
கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்
---------------------
காட்ர கட்டப் பிரமையாவின் மகன் (வெறும்) கட்டப் பிரமையா.
இவனே முதலில் கட்டபொம்மன் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டவன்.

தந்தையை விட சூழ்ச்சிக்காரன். நேரடியாகப் போரிடாமல் மறைந்திருந்து தாக்குவதில் பெத்த கெட்டிக்காரன்.
(வழிப்பறி  கொள்ளையடிக்கிறப்போ நேரடியா மோதினா மொகரைய பேத்துருவாய்ங்கெல்ல..)

இந்த கெட்டிக்காரன் என்பதைத்தான் அவன்சார்ந்த கம்பளத்தார் தெலுங்கு வழக்கில் கெட்டிப்பொம்மு என அழைத்தனர்.
அது மருவி கட்டப்பொம்மன் ஆனது.
இவன் படத்தில் நாம் பார்த்த கட்டப் பொம்மனின் கொள்ளுப்பாட்டன்.

கட்டப்பொம்மன் சரி. அதென்ன வீரபாண்டிய கட்டப்பொம்மன்?

இளம் பஞ்சபாண்டியர்கள் தந்தை காலத்திலிருந்து பகைவர்களாக இல்லாவிடினும் அவர்கள் தமிழினம் என்பது ஒருபக்கம் உறுத்திக் கொண்டிருந்தது.
இன்றைக்கில்லை என்றாலும் என்றாவது ‘எம்மண்ணில் உனக்கென்ன வேலை? போடா கொல்டி’ என உதைத்து விரட்டினால் என்ன செய்வது?

தயங்கவே இல்லை. நாயக்கப் பேரரசிடம் போட்டுக் கொடுத்தான்.
வஞ்சனையால் காட்டிக்கொடுக்கப்பட்டு அம்மாவீரர்கள் அம்மண்ணில் வீழ்த்தப்பட்டார்கள்.
வீழ்த்தப்பட்ட இடம் கட்டப்பொம்மனுக்கே கிடைத்தது.
அந்த இடத்தைச் சுற்றிலும் தன் கம்பளத்து இனத்தவரை குடியேற்றினான்.
பாளையம் உருவாயிற்று.
தன் முன்னோரில் ஒருவனான பாஞ்சாலன் என்பவனின் நினைவாக அந்தப் பாளையத்திற்கு பாஞ்சாலங்குறிச்சி எனப் பெயரிட்டான்.

பாளையத்திற்கு தலைநகர் ஒன்று வேண்டுமல்லவா?
இளம்பஞ்ச பாண்டியர்கள் வீழ்த்தப்பட்ட அந்த இடம் ஜெகவீரபாண்டியபுரம் என அழைக்கப்பட்டது.
அதையே தன் தலைநகராக்கினான்.
தன் பெயரையும் ஜெகவீரபாண்டிய கட்டப் பொம்மன் என வைத்துக் கொண்டான் கட்டபிரமையா.

அக்காலத்தில் போரில் வெற்றி கொண்ட வீரனொருவன் வெல்லப்பட்ட வீரனின் பெயரை சூட்டிக் கொள்வது மரபு.
இங்கே காட்டிக்கொடுத்த முதலாம் கட்டப்பொம்மனுக்கு தமிழின வரலாற்றின் மேன்மை மிகுந்த பாண்டியர்களின் பட்டம் போய்ச்சேர்ந்தது.
இது தமிழின வரலாற்றின் மிகப்பெரும் சாபக்கேடு!

ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் என பெயரை மாற்றி வைத்துக்கொண்ட கட்ட பிரமையா 1709முதல் 1736வரை பாஞ்சாலங்குறிச்சிக்கு பாளையக்காரனாக இருந்தான்.
(அதாவது படத்தில் நாம் பார்த்த கட்டபொம்மனின் கொள்ளுப் பாட்டன்!)

இவன்காலத்தில் நாயக்கப் பேரரசு வலுவிழக்கத் துவங்கியது.
தட்டிக்கேட்க யாருமில்லா தைரியத்தில் தன் கம்பளத்தார்களைக் கொண்டு பெரும்படை நிறுவிக் கொண்டான்.
பெரும்படையுடன் பக்கத்துப் பாளையங்களில் புகுந்து கொள்ளையடிக்கத் துவங்கினான்.
மற்ற பாளையங்கள் திருப்பித் தாக்குவதில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே கோட்டை கொத்தளங்களை நிறுவிக் கொண்டான்.

அந்த நாளில் தென்பாண்டி நாட்டில் இருந்த தெலுங்குப் பாளையங்களுக்கு எல்லாம் எட்டையபுர பாளையமே தலைமை தாங்கி நின்றது.
பரம்பரை எதிரியான கட்டப் பொம்மனுக்கு அது பெருத்த அவமானமாகவே இருந்து வந்தது.
அதற்கும் ஒரு வேலை செய்தான்.

அனைத்து தெலுங்குப் பாளையத்தில் இருக்கும் கம்பளத்தாரின் குலதெய்வம் ஜக்கம்மா.
ஜக்கம்மாவுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு மிகப் பெரிய கோவில் எடுத்தான்.
அந்தக் கோவிலுக்கு தலைமைப் பூசாரியாகவும் தானே ஆகினான்.
ஜக்கம்மாவை வணங்க வருபவர்கள் பூசாரியின் காலிலும் விழுந்து வணங்கலாகினர்.
தெலுங்குப் பாளையங்களின் தலைமையும் தானாக கட்டப்பொம்மனுக்கு வந்து சேர்ந்தது.

அடித்த கொள்ளை, செய்த ஃப்ராடுத்தனம் அத்தனையையும் அந்த ஜக்கம்மா கோவிலால் மறைந்து நின்றது.

திருமலை நாயக்கன் பரம்பரை நாங்கள்..
வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை நாங்கள்..
தெலுங்கு வெண்ணைவெட்டிகள் பக்கங்களில் பார்த்தீர்களானால் இதே ரீதியில்தான் ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரை வசனங்களால் நிரப்பப் பட்டிருக்கும்.
சரி. அப்பேர்ப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் பரம்பரை பெருமை எத்தகையது?

நாயக்க மன்னர்கள் வலுவற்று இருந்ததை அறிந்த பல பாளையங்கள் வரி செலுத்தாமல் தவணை சொல்லி தட்டிக்கழித்து வந்தன.
தென்பாண்டி நாட்டு மறவர் பாளையங்கள் ஒரு படி மேலே  போய் "போடா வெண்ணை" என நாயக்க மேலாண்மையை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமாக ஆட்சி நடத்தினர்.

இந்த நிலையில் ஆற்காடு நவாபின் ஆதிக்கம் துவங்கியது. ஆற்காடு நவாபின் பிரதிநிதியாக வரி வசூலிக்க வந்த சாதிக் கானுக்கு கப்பம் தர தென்பகுதி பாளையக்காரர்கள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் ஆற்காடு நவாபின் பிரதிநிதி சாதிக்கானுக்கு அபயகரம் நீட்டிய ‘தன்மானச்சிங்கம்’ யார் தெரியுமா?
பேண்ட பரம்பரையின் முன்னோடி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்தான்!

பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான முதலாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் தன் படைகளைக் கொண்டே மற்ற பாளையக்காரர்களிடம் வரி வசூலித்து சாதிக்கானுக்கு அளித்தான்.

இந்த மாமா வேலைக்கு பரிசாக கட்டபொம்மனுக்கு சாதிக்கான் அளித்த வெகுமதி என்ன தெரியுமா?

“இனிமேல் வசூலாகும் கப்பத்தொகையில் ஆறில் ஒரு பங்கை நீயே வைத்துக்கொண்டு மீதி ஐந்து பங்கை இரண்டு தவணைகளில் அனுப்பி வா!”
என்று கூறி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் கழுத்தில் சாதிக் கான் ஒரு விலை உயர்ந்த மணிமாலையை அணிவித்தானாம்.
அத்துடன் அவனுக்கு 'தென்னாட்டின் சின்ன நவாபு' என்ற பட்டத்தையும் அளித்தானாம்!

இவைகள் எல்லாம் தெலுங்கர்களின் எதிர்ப்பாளர்கள் எழுதிய கட்டுக்கதைகள் அல்ல.
கட்டபொம்மனைப் புகழ்ந்து காவியமாக படைக்கப்பட்ட ‘வீரபாண்டியம்‘ எனும் நூலில் உள்ளவை!
---------------
அடுத்த பகுதி
'பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன்'