Thursday 28 March 2019

அண்ணாதுரையும் கருணாநிதியும் தெலுங்கரே - பாரதிதாசன் எழுதிய உண்மை

அண்ணாதுரையும் கருணாநிதியும் தெலுங்கரே!
- பாரதிதாசன் எழுதிய உண்மை

குயில் இதழில் (28.10.1958) பாரதிதாசன் எழுதுகிறார்....

"தங்களது இயக்க கூட்டங்களில் எனது பாடலை வாசித்து விட்டு, மக்களின் உணர்ச்சியை தூண்டி,
பின்னர் எனை முன்னாள் (மாசி) கவிஞன் என்கிறார்கள்.
குடும்பத்தில் தந்தை பணம் கொடுக்க இயலாத வறியவன் ஆகி போனால்,
வேறொருவன் புதிதாக பணம் தந்தால் அவன் இந்நாள் தந்தையும், முன்னவன் முன்னாள் தந்தையும் ஆக மாட்டன்!
ஒருவேளை அண்ணாத்துரையும், கருணாநிதியும் அப்படி குடும்பத்தில் இருந்து வந்தவர்களோ?
அண்ணாத்துரையும், கருணாநிதியும், டி.என்.ராமனும் தங்களின் 'தெலுங்கு குல மேளத்தை' நன்றாகத்தான் வாசித்து அரசியல் செய்கிறார்கள்".

நன்றி: Ranga Rasu Ra

முழுப்பதிவு கீழே....

அண்ணாத் தொரையின், திராவிடத்தின் லட்சணம் இதுதான்.
இப்போதெல்லாம் பல தமிழ்த் தேசிய தோழர்களே அண்ணாத்துரைக்கு அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு உள்ளிட்ட உரிமங்களை அச்சடித்து கொடுத்து அண்ணாத்துரையை தமிழன் என்கிறார்கள்.
ஆனால் இந்த அண்ணாத்துரை யார் என்பதை பாரதிதாசன் விளக்கி இருக்கிறார்.
முதலில், அண்ணாதுரை ஈவெராவின் மாணவன், கருணாவின் ஆசான் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்!

இந்த அண்ணாத்துரை பற்றி திராவிட கவிஞன், பாவலன், பாவேந்தன், புரட்சி கவிஞன் என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகத்தால் போற்றப்பட்ட பாரதிதாசன் தன்னுடைய 'குயில்' எனும் பத்திரிக்கையில் எழுதி இருக்கும் குறிப்பு இங்கே...

''அண்ணாத்துரை, தன் சகோதரி மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும், இன்ப விளையாட்டு முடியும் வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும், அண்ணாத்துரையின் காஞ்சி வாழ்வு தொண்டுகளில் ஒன்று'.'

''துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் வளர்ப்பு சிற்றண்ணை ராஜாமணி என்று அண்ணாத்துரை அப்போது புலம்புவார்!
அன்னையோ சென்னையில் ஐயரோடு;
காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.
பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் செல்வந்தர் பொன்னப்பா தரும் சிறுதானம்''.

"இந்த நிலையில் அண்ணாத்துரை பெரியாரின் செல்வ நிலை கண்டு மலைத்தார்.
அவரின் தொண்டராகி நிலைத்தார்.
குடும்பம் குலைத்தார்.
பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.
இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும்.
திரு. குத்தூசி குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்!"
-குயில் இதழ் (30-9-1958)

"விழாக்களில் எனக்கு வழங்கப்படும் பொற்கிழிகளையும், பொன்னாடைகளையும் தனது என்பார்.
தன் ஏற்பாடு என்பார்.
என்னோடு பங்கு பெரும் நிகழ்வுகளை மறக்காது நிழற்படம் எடுத்து விளம்பரம் செய்துகொள்வார் அண்ணாத்துரை.
என்னிடம் மன்றாடி என்னோடு ராஜபாளையம் வந்தார்.
ராஜபாளையத்தில் நடந்த விழாவில் பொருள் காப்பாளராக தானாக ஆகி கொண்டார்.
ஆனால் அண்ணாத்துரை தன்னுடைய பொன்னாடை என்று சொன்னதை ஒரு விருந்தினர் தனது தறியில் எனக்காக பிரத்யேகமாக நெய்தது என்றார்.

ஒரு சிங்கப்பூர்க்காரர் பலமுறை பல பத்தாயிரங்கள் எனக்கு அனுப்பியதை அண்ணாத்துரை பெற்றுக் கொண்டார் என்றார்.

குயில் இதழ் துவங்குவதற்கு பல ஆயிரம் ரூபாய்களை வாங்கி கொண்டு சென்னை சென்றார் அண்ணாத்துரை.
இந்த வேலையை நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் கவலையை விடுங்கள் என்று சொல்லி போனவர் போனவர்தான்.
ஐகோர்ட்டில் குயில் இதழ் முதலீட்டாளர்களால் வழக்கானது.
பணத்தை திருடுவது மட்டுமன்றி என்னுடைய குயில் இதழை முடக்க வேண்டும் என்பதும் அண்ணாதுரையின் நோக்கமாக இருந்திருப்பது வழக்கின் போது விளங்கியது".
- குயில் இதழ் (14-10-58).

"தங்களது இயக்க கூட்டங்களில் எனது பாடலை வாசித்து விட்டு, மக்களின் உணர்ச்சியை தூண்டி, பின்னர் எனை முன்னாள் (மாசி) கவிஞன் என்கிறார்கள்.
குடும்பத்தில் தந்தை பணம் கொடுக்க இயலாத வறியவன் ஆகி போனால், வேறொருவன் புதிதாக பணம் தந்தால் அவன் இந்நாள் தந்தையும், முன்னவன் முன்னாள் தந்தையும் ஆக மாட்டன்!
ஒருவேளை அண்ணாத்துரையும், கருணாநிதியும் அப்படி குடும்பத்தில் இருந்து வந்தவர்களோ?
அண்ணாத்துரையும், கருணாநிதியும், டி.என்.ராமனும் தங்களின் 'தெலுங்கு குல மேளத்தை' நன்றாகத்தான் வாசித்து அரசியல் செய்கிறார்கள்
-குயில் இதழ் (28-10-58).
மேலே பதிவாகி இருக்கும் கருத்துக்கள் யாவும், இன்னும் மேலும், திராவிடர்களால் திராவிட கவிஞன் என்று கொண்டாடப்படும் பாரதிதாசனால் தனது 'குயில்' இதழில் வெளியிடப்பட்டவை.
ஈவேராவின் மாணவனும், கருணாவின் ஆசானும் வேறு என்ன சும்மாவா இருந்திருப்பார்?

அண்ணாதுரை பற்றிய உண்மைகளை அறிய,
தேடுக: நொண்ணாதுரை வேட்டொலி

4 comments:

  1. அண்ணாதுரை தெலுங்கர் கிடையாது. தமிழ் முதலியார்.

    ReplyDelete
  2. போட்டி பொறாமை.சூது வாது போன்றகுணங்களுக்கு சாதாரண மனிதனாவது பெரிய கவிஞனாவது.... எல்லாம் ஒண்ணுதான்னு காட்டுது....

    ReplyDelete
  3. போட்டி பொறாமை.சூது வாது போன்றகுணங்களுக்கு சாதாரண மனிதனாவது பெரிய கவிஞனாவது.... எல்லாம் ஒண்ணுதான்னு காட்டுது....

    ReplyDelete