Tuesday, 15 July 2025
காமராஜரை 6 முறை பெண்ணாக வரைந்த கருணாநிதி
Monday, 8 March 2021
துப்பாக்கியால் பேசும் தி.மு.க
துப்பாக்கியால் பேசும் தி.மு.க
நவ 06, 2010
கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே இடப்பிரச்னை தொடர்பான விவகாரத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக தி.மு.க., பிரமுகர் மிசா செந்தில் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...
20 sep 2012
ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவரும், திமுக பிரமுகருமான ஜி.என்.ஆர். குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்...
தூத்துக்குடியில் கள்ளத் துப்பாக்கி வாங்கியது உள்ளிட்ட வழக்குகள் ஜி.என்.ஆர். குமார் மீது நிலுவையில் உள்ளன...
1 பிப்., 2014
மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரான எஸ்.ஆர் கோபியின் பண்ணை வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் துப்பாக்கி, அரிவாள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஏப் 29, 2014
காங்கயம்: துப்பாக்கி முனையில் மகளை கடத்தியதாக கூறப்படும், தி.மு.க., பிரமுகரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
செப் 28, 2015
சென்னை : தி.மு.க.,வை சேர்ந்த துாத்துக்குடி தொகுதி முன்னாள் எம்.பி., ஜெபதுரையிடம், சென்னை விமானநிலையத்தில் ஒரு துப்பாக்கி, 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
17 oct 2015
கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்போது, லாரியில் துப்பாக்கி கடத்திய வழக்கு தொடர்பாக, தி.மு.க.வைச் சேர்ந்த அட்டாக் பாண்டி, அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆக் 09, 2017
சென்னை: கள்ள துப்பாக்கி விற்க, போலீசாரிடம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு, 'டீலிங்' பேசிய, தி.மு.க., முன்னாள் நிர்வாகி உட்பட, நான்கு பேர், சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
5 ஆகஸ்ட், 2018
தி.மு.க பிரமுகர் வி.கே.குருசாமி கைது ..
கள்ள துப்பாக்கி வைத்திருந்தார்...
19 நவம்பர், 2018
துப்பாக்கி, தோட்டாக்களுடன் வந்த தி.மு.க முன்னாள் எம்.பி! - கோவை விமான நிலைய பரபரப்பு..
25 ஏப்ரல் 19
தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திமுக நிர்வாகி பில்லா ஜெகன் ...
Aug 27, 2019
நாமக்கலில் திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...
December 20, 2019
துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் திமுக எம்எல்ஏவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் ரூபாய் அபராதம்....
June 24, 2020
மதுரை: துப்பாக்கி காட்டி மிரட்டிய திமுக MLAவின் புகைப்படத்தை செருப்பால் அடித்த பாஜக மகளிர் அணி.!
21, May 2020
தி.மு.க வை சேர்ந்த ர.கோட்டி 20க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் வாலிபரின் தம்பி மற்றும் நண்பர்களை துப்பாக்கி வைத்து மிரட்டி இரவுக்குள் அந்த காதல் ஜோடியை கண்டுபிடித்துவிட்டனர்....
ஜூலை 12, 2020
திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., கைது! கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் துப்பாக்கிச்சூடு!
#கள்ளத்துப்பாக்கி_திமுக
#கள்ளத்துப்பாக்கிதிமுக
#கள்ளதுப்பாக்கிதிமுக
முகநூலில் 13.07.2021
Monday, 10 February 2020
மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி தினமணி
ஏற்கனவே தமிழ்மொழி மீதுள்ள வெறுப்பினால் கன்னடர் மற்றும் ஹிந்தியர் மைசூர் தலைமை கல்வெட்டியல் அலுவலகத்தில் உள்ள 70,000 தமிழ் கல்வெட்டுகளை அழியவிடுவது பற்றி ஜூனியர் விகடன் (18.06.2006), விகடன் (02.05.2013), மற்றும் தினமலர் (04.02.2018) ஆகிய பத்திரிக்கைகள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
* மைசூரில் ஒரு லட்சம் கல்வெட்டு படிகள் உள்ளன; அவற்றில் 65 ஆயிரம் தமிழ்க் கல்வெட்டுகள்.
* 1908 க்குப் பிறகு படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அச்சில் கூட வெளிவரவில்லை.
* 1920 க்குப் பிறகு கல்வெட்டுகள் அச்சில் வருவது ஏறத்தாழ நின்றுவிட்டது
* 1961 இல் தமிழக அரசு முயற்சி செய்தும் எதுவும் நடக்கவில்லை
*கல்வெட்டு எண்ணிக்கையில் தமிழே பெரும்பான்மை மற்றும் முதலிடம்.
* 1966 லேயே தமிழ்க் கல்வெட்டுகள் எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டிவிட்டது.
இரண்டாவது இடம் கன்னடம் என்றாலும் 1993 இல் தான் கன்னட கல்வெட்டுகள் 10,500 ஐத் தாண்டின.
* 1967 இல் சேகரிக்கப்பட்ட 70,000 படிகள் அழியும் தருவாயில் உள்ளன
* 1997 வரை கல்வெட்டுகள் பற்றி சிறு குறிப்புகளுடன் வெளிவந்த கல்வெட்டியல் துறை ஆண்டறிக்கை கூட நின்றுபோனது
* 2010 இல் தஞ்சை பல்கலை கல்வெட்டுகளை டிஜிட்டல் ஆக்கும் பணிக்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் மைசூர் நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை.
எதையுமே செய்யாமல் கொடுக்கப்பட்ட 22 லட்சத்தில் 20 லட்சத்தை திருப்பித் தந்துள்ளனர்.
* தமிழகத்தில் இருந்து யார் சென்று எதைக் கேட்டாலும் இல்லை என்கின்றனர். அல்லது இழுத்தடிக்கின்றனர்.
*பாதுகாக்கப் பட்டிருந்த 50% தமிழ் கல்வெட்டுப் படிகள் அழிந்துவிட்டன.
இன்னும் 20 ஆண்டுகளுக்குள் மொத்தமாக அழிந்துவிடும் நிலை.
--------
கோவில் முதலிய பொதுக் கட்டடங்களின் சுவர்களிலும், பாறைகள் மீதும், கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
நம்நாட்டில் கல்வெட்டுகளைப் படித்தறிந்து, வரலாற்றுச் சான்றுகளாக அவற்றை உருவாக்கிய பெருமை மேலைநாட்டவரையே சாரும்.
ஜேம்ஸ் பிரின்செப் - 1837 இந்தியாவில் கல்வெட்டாய்வு ஆரம்பிக்கப்படுவதற்கு இவரே முக்கிய காரணம் ஆவார்.
அலெக்சாந்தர் கன்னிங்காம் 1871 முதல் 1885 வரை அசோகர் காலத்து கல்வெட்டுகள் என்ற தனித் தொகுப்பை வெளியிட்டார்.
டாக்டர் யூஜின் ஹால்ட்ஸ் (1857 - 1906) தென்னிந்திய கல்வெட்டுகளின் முதல் தொகுப்பினை 1903 ல் வெளியிட்டார்.
மேலும் ராபர்ட் சிவல் (1868 - 1894) டாக்டர் கில்ஹார்ன், டாக்டர் ஜார்ஜ் பூலர் (1837 - 1898), ஜான் பிளீட் (1874 - 1917), ஜேம்ஸ் பர்கஸ் ( 1822 - 1917), டாக்டர் ப்ர்னல், காலின் போன்றோர்களின் ஊக்கமும் உழைப்பும் ஆர்வமும் இல்லை எனில் நமது வரலாற்றினை அறிந்திருக்க வாய்ப்புகள் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்னும் பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளன.
நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் தம் கால நிகழ்வுகளை கல்லில் செதுக்கி வைப்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கோயில், குளக்கரை, மலைகள், குகைகள் போன்ற இடங்களில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India-ASI) மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு ‘படி எடுத்தல்‘ முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகிறது.
இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் அவ்வப்போது பதிப்பித்து தொகுதிகளாக வெளியிடுகிறது ASI.
இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், நம் நாடு முழுவதிலும் உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், 1860 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் எனும் ஆங்கிலேயரால் ASI உருவாக்கப்பட்டது.
இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகம் சார்பில் காகித நகல்களாக 1889-ம் ஆண்டு முதல் படி எடுக்கப்படுகிறது.
இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் இந்திய தொல்லியல் ஆய்வகம் அவ்வப்போது பதிப்பித்து வெளியிடுகிறது.
இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகளை படி எடுத்து பதிப்பிப்பதற்கும் தொல்லியல் ஆய்வகத்தின் மைசூரு அலுவலகத்தில் தனியாக கல்வெட்டு தலைமையகம் ஒன்று இயங்குகிறது.
அதன் இயக்குநராக பொறுப்பேற்ற மைசூரை சேர்ந்த ஒரு அதிகாரி அதை தம் சொந்த ஊருக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் பராமரிக்கவும், கல்வெட்டுப் படிகளைப் பாதுகாக்கவும், படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுதுவடிவமாக்கவும், பதிப்பிக்கவும் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் அரசு நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதற்கென பிரத்யேகமாக மைசூரில் செயல்படும் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளை அலுவலகம் இந்த தரவுகளை முறையாகப் பராமரிக்கிறதா?
சுமார் 400 ஆண்டுகள் பழைமையான இத்தரவுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளனவா?
1909 ஆம் ஆண்டு முதல் இவை ஏன் நூலாக பதிப்பிக்கப்படவில்லை?
1908 ஆம் ஆண்டுவரை பதிப்பிக்கப்பட்ட நூல்களும் பிற கல்வெட்டு படி பிரதிகளும் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் மின்தரவாக (digital document) கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளதா?
இது போன்ற கேள்விகளுக்கு அறிஞர்கள் சொல்லும் தீர்வு என்ன?
இந்திய கல்வெட்டியல் பேரவையின் (Epigraphical Society of India-ESI) இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India), மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அதிகாரபூர்வமான தொல்லியல் ஆய்வு அமைப்பு.
இவ்வமைப்பு நிர்வாக வசதிக்காகவும் தொல்லியல் சின்னங்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பதற்காக இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது.
தமிழ்நாடு சென்னை வட்டத்தின் (Chennai Circle) கீழ் வருகிறது.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கியது.
இந்தியாவில் 1887 முதல் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டன.
இந்தியாவின் முதல் கல்வெட்டியலாளரும் (Epigraphist) இவரே.
இந்த அலுவலகம் இந்தியாவில் பல பாகங்களில் பரவிக்கிடந்த கல்வெட்டுகளை அளவீடு செய்தது.
இதனைத் தொடர்ந்து செந்தமிழ், தமிழ்ப்பொழில் முதலான இதழ்களிலும் கல்வெட்டுகளைப் பற்றிய குறிப்பும் நிழற்படமும் வெளிவரலாயின.
இவ்வாறு படி எடுக்கப்படும் பிரத்யேக காகிதங்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை.
சேகரித்த கல்வெட்டுகளைப் படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுத்துவடிவமாகவும், பதிப்பிக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டன.
பல நூல்கள் கல்வெட்டியல் துறை தொடர் வெளியீடுகளாகவே (Publication Series) பிரசுரிக்கப்பட்டன.
1887 முதல் 1995-1996 ஆம் ஆண்டு வரையிலான கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் பற்றிய அறிக்கை.
மிகச் சுருக்கமான செய்திகள் ஆங்கிலத்தில் உள்ளது.
1882 – 1977 ஆண்டுகளுக்கிடையே பதிப்பிக்கப்பட்ட ஆவணம்.
1892 முதல் 1920 வரை இது காலாண்டு இதழாக வெளி வந்தது.
எட்டு பாகங்கள் (parts) ஒரு தொகுதியாக்கபட்டன (volumes).
இதுவரை 42 தொகுதிகள் வெளிவந்துள்ளன.
பல வம்சங்களைப்பற்றிய கல்வெட்டுகள் இந்த பதிப்புத் தொடரில் வெளியிடப்பட்டன.
தென்னிந்திய கல்வெட்டுகளின் ஆவணங்களுக்காக ஒரு தனி தொடர் பதிப்பு 1890 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
1961 இல் ஆரம்பிக்கப்பட்டது. கல்வெட்டுகளை நகலெடுத்தல், கல்வெட்டுகளில் உள்ளவற்றை அச்சிடுதல், மற்றும் புத்தக வடிவில் அவற்றை வெளியிடுதல் என்பது இந்நிறுவனத்தின் பணிகளுள் ஒன்று.
1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டின் கல்வெட்டுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் மொழிவாரியாகவும், அகரவரிசைப்படியும், எண்ணிக்கையின்படியும் வகைப்படுத்தியதில் தமிழ் நாடு இந்திய மாநிலங்களுள் முதலிடத்தில் உள்ளது.
இந்திய மாநிலங்களிலேயே தமிழ் நாட்டில்தான் அதிக அளவில் கல்வெட்டுகள் உள்ளன என்று இந்தக் கணக்கெடுப்பின் மூலம் நாம் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
1966 ஆம் ஆன்டிலேயே தமிழில் 20000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கன்னடம் 10,600;
சம்ஸ்கிருதம் 7,500;
தெலுங்கு 4500.
(ஆதாரம்: Journal of the Epigraphical Society of India Volume 19 : 1993).
இங்கு உள்ள ஒரு லட்சம் கல்வெட்டில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன.
இக்கல்வெட்டுகள் இந்திய வரலாற்றை, குறிப்பாக தமிழகத்தின் தொன்மை வரலாற்றை எடுத்துரைக்கும் முதன்மை சான்றாகும்.
இவற்றுள் 1908ம் ஆண்டு வரை கண்டறியப்பட்ட படிகள் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
1909ம் ஆண்டுக்கு பின் கண்டறியப்பட்ட கல்வெட்டுப்படிகள் இன்னும் முழுமையாக பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படவில்லை.
டாக்டர் எ. சுப்பராயலு அவர்கள் தம் ஆய்வில் தமிழ்க் கல்வெட்டுகளை காலநிரல்படி பகுப்பாய்வு செய்து ஒரு அட்டவணையினை வெளியிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள அனைத்து மொழிகளின் கல்வெட்டுகளையும் மின்தரவாக்கம் (டிஜிடைஸ்) செய்து ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய தொல்லியல் அளவீட்டு துறையுடன் (ஏ.எஸ்.ஐ.,) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தஞ்சை தமிழ் பல்கலை துணை வேந்தர் ராசேந்திரன், மைசூர் கல்வெட்டுப் பிரிவின் இயக்குனர் (பொறுப்பு) ரவிசங்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தமிழக அரசு இப்பணிக்காக தமிழ் பல்கலைக்கு 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியாவில் மைசூரில் மட்டுமே உள்ள கல்வெட்டுப்படிகள் இனி தஞ்சை தமிழ் பல்கலையிலும் இடம் பெறவும், அவற்றை ஆய்வாளர் கணினி தொழில் நுட்ப வசதியுடன் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதி செய்யும்.
அவற்றை மீண்டும் படி எடுக்க வேண்டும் எனில் அதன் மூல ஆதாரங்கள் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளை கோயில், குளம் எனத் தேடித் திரட்ட வேண்டும்.
இது மிகச் சிரமமான ஒன்று.
கல்வெட்டுக்களில் படி எடுக்கப்பட்டு மைசூர் அலுவலகத்தில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள பலவும், நூறு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படிகள் ஆகும்.
படி எடுக்கப்படும் தாள்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை.
இப்போது அவையும் வீணாகப் போகும் நிலை உருவாகி உள்ளது.
கல்வெட்டுகளைப் படிக்க முறையான கல்வெட்டியலாளர்களின் பற்றாக்குறை அதிகமாகி விட்டது.
இதை முன்கூட்டியே அறிந்தும் மைசூர் அலுவலகம் குறிப்பிட்ட காலத்தில் அந்த குறைகளை நிவர்த்தி செய்யத் தவறி விட்டது.
மற்றவை சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, உருது, தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் மலையாள மொழிகளில் எழுதப்பட்டவை.
இந்த மொழி கல்வெட்டுகள் பதிப்பிக்கும் கல்வெட்டாளர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் அதன் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இன்றும் கூட தமிழகத்தில் கல்வெட்டுகள் அவ்வப்போது கிடைத்து வருவதால், தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை கூடி வருகிறது.
இதனால், தமிழக வரலாறு மைசூரிலேயே முடங்கும் சூழல் நிலவுகிறது.
அவை, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவற்றை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, மத்திய அரசும் நியமிக்கவில்லை.
அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப்படிகள், தமிழ் தெரியாத, தமிழ் கலாச்சாரத்தின் மீது வெறுப்பு உடைய அலுவலர்களால் அழிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
அவற்றை, ஜி.எஸ்.கை என்ற, தலைமை கல்வெட்டு ஆய்வாளர் 1967 இல், மைசூருவில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தின், கல்வெட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாறு, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு சார்ந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன.
தமிழகம் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருவுக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர்.
மேலும், எதைக்கேட்டாலும், அவை, ஏற்கெனவே காணாமல் போய்விட்டன என்கின்றனர்.
தொல்லியல் துறை படியெடுத்த கல்வெட்டு செய்திகளை, புத்தகமாக பதிப்பித்து, தொல்லியல் துறை நூலகத்தில் வைக்க வேண்டும்.
தமிழக ஆய்வாளர்கள் பார்க்க வசதியாக, சென்னையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவுக்கு, அந்த ஆவணங்களை அனுப்பி, பராமரிக்க வேண்டும்.
மைசூர் அலுவலகத்தில் ஏற்கெனவே படிகளாக எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை படித்து தொகுக்க உதவும்படி தமிழ்நாடு தொல்லியல் ஆய்வகத்திற்கு (Tamilnadu State Dept of Archaeology -TNSDA) உத்தரவிட்டு சில லட்சங்களை ஒதுக்கியது தமிழக அரசு.
அப்போது TNSDAயின் கமிஷனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரின் சொந்த முயற்சியினால் ஒரு வருடத்திற்கான கல்வெட்டுக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டது.
ஆனால், ஒரு வருடத்தில் தொகுக்கப்பட்டதை வெளியிட ASI, ஐந்து வருடம் எடுத்து கொண்டது.
இதுவும் முடியாமல் அடுத்த கட்டமாக, ஏற்கனவே படி எடுக்கப்பட்ட சுமார் 50,000 தமிழ் கல்வெட்டுகளை டிஜிட்டல் (Digitalistion) ஒளிப்பதிவு செய்து பாதுகாக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு வேறு வழியின்றி மைசூர் அலுவலகம் சம்மதித்தது.
இதற்காக தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துடன் மைசூர் கல்வெட்டியல் தலைமையகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.
இதற்காக ஒதுக்கப்பட்ட ஒருவருட காலத்தில், கிழிந்து போன படிகளை ஒட்டுவதிலேயே எட்டு மாதமானது.
இதனால், தமிழக அரசு ஒதுக்கிய 25 லட்சத்தில் ரூபாய் 22 லட்சங்களை தமிழ் பல்கலைகழகம் திருப்பி அளிக்க வேண்டியதாயிற்று.
உதயசந்திரன் பள்ளிக்கல்வித் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத் துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார்.
கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார்.
புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார்.
பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட உதயசந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவார்கள்.
அறிஞர் ஐராவதம் மகாதேவன் இல்லாவிட்டாலும், பூங்குன்றன், பேராசிரியர் வை.சுப்பறாயலு, பேராசிரியர் இராஜவேலு மற்றும் கலாநிதி இரகுபதி , பத்மாவதி, புலவர் ராசு என பல அறிஞர் பெருமக்கள் தமிழகத்தில் உள்ளனர்.
Thursday, 28 March 2019
அண்ணாதுரையும் கருணாநிதியும் தெலுங்கரே - பாரதிதாசன் எழுதிய உண்மை
அண்ணாதுரையும் கருணாநிதியும் தெலுங்கரே!
- பாரதிதாசன் எழுதிய உண்மை
குயில் இதழில் (28.10.1958) பாரதிதாசன் எழுதுகிறார்....
"தங்களது இயக்க கூட்டங்களில் எனது பாடலை வாசித்து விட்டு, மக்களின் உணர்ச்சியை தூண்டி,
பின்னர் எனை முன்னாள் (மாசி) கவிஞன் என்கிறார்கள்.
குடும்பத்தில் தந்தை பணம் கொடுக்க இயலாத வறியவன் ஆகி போனால்,
வேறொருவன் புதிதாக பணம் தந்தால் அவன் இந்நாள் தந்தையும், முன்னவன் முன்னாள் தந்தையும் ஆக மாட்டன்!
ஒருவேளை அண்ணாத்துரையும், கருணாநிதியும் அப்படி குடும்பத்தில் இருந்து வந்தவர்களோ?
அண்ணாத்துரையும், கருணாநிதியும், டி.என்.ராமனும் தங்களின் 'தெலுங்கு குல மேளத்தை' நன்றாகத்தான் வாசித்து அரசியல் செய்கிறார்கள்".
நன்றி: Ranga Rasu Ra
முழுப்பதிவு கீழே....
அண்ணாத் தொரையின், திராவிடத்தின் லட்சணம் இதுதான்.
இப்போதெல்லாம் பல தமிழ்த் தேசிய தோழர்களே அண்ணாத்துரைக்கு அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு உள்ளிட்ட உரிமங்களை அச்சடித்து கொடுத்து அண்ணாத்துரையை தமிழன் என்கிறார்கள்.
ஆனால் இந்த அண்ணாத்துரை யார் என்பதை பாரதிதாசன் விளக்கி இருக்கிறார்.
முதலில், அண்ணாதுரை ஈவெராவின் மாணவன், கருணாவின் ஆசான் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்!
இந்த அண்ணாத்துரை பற்றி திராவிட கவிஞன், பாவலன், பாவேந்தன், புரட்சி கவிஞன் என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகத்தால் போற்றப்பட்ட பாரதிதாசன் தன்னுடைய 'குயில்' எனும் பத்திரிக்கையில் எழுதி இருக்கும் குறிப்பு இங்கே...
''அண்ணாத்துரை, தன் சகோதரி மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும், இன்ப விளையாட்டு முடியும் வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும், அண்ணாத்துரையின் காஞ்சி வாழ்வு தொண்டுகளில் ஒன்று'.'
''துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் வளர்ப்பு சிற்றண்ணை ராஜாமணி என்று அண்ணாத்துரை அப்போது புலம்புவார்!
அன்னையோ சென்னையில் ஐயரோடு;
காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.
பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் செல்வந்தர் பொன்னப்பா தரும் சிறுதானம்''.
"இந்த நிலையில் அண்ணாத்துரை பெரியாரின் செல்வ நிலை கண்டு மலைத்தார்.
அவரின் தொண்டராகி நிலைத்தார்.
குடும்பம் குலைத்தார்.
பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.
இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும்.
திரு. குத்தூசி குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்!"
-குயில் இதழ் (30-9-1958)
"விழாக்களில் எனக்கு வழங்கப்படும் பொற்கிழிகளையும், பொன்னாடைகளையும் தனது என்பார்.
தன் ஏற்பாடு என்பார்.
என்னோடு பங்கு பெரும் நிகழ்வுகளை மறக்காது நிழற்படம் எடுத்து விளம்பரம் செய்துகொள்வார் அண்ணாத்துரை.
என்னிடம் மன்றாடி என்னோடு ராஜபாளையம் வந்தார்.
ராஜபாளையத்தில் நடந்த விழாவில் பொருள் காப்பாளராக தானாக ஆகி கொண்டார்.
ஆனால் அண்ணாத்துரை தன்னுடைய பொன்னாடை என்று சொன்னதை ஒரு விருந்தினர் தனது தறியில் எனக்காக பிரத்யேகமாக நெய்தது என்றார்.
ஒரு சிங்கப்பூர்க்காரர் பலமுறை பல பத்தாயிரங்கள் எனக்கு அனுப்பியதை அண்ணாத்துரை பெற்றுக் கொண்டார் என்றார்.
குயில் இதழ் துவங்குவதற்கு பல ஆயிரம் ரூபாய்களை வாங்கி கொண்டு சென்னை சென்றார் அண்ணாத்துரை.
இந்த வேலையை நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் கவலையை விடுங்கள் என்று சொல்லி போனவர் போனவர்தான்.
ஐகோர்ட்டில் குயில் இதழ் முதலீட்டாளர்களால் வழக்கானது.
பணத்தை திருடுவது மட்டுமன்றி என்னுடைய குயில் இதழை முடக்க வேண்டும் என்பதும் அண்ணாதுரையின் நோக்கமாக இருந்திருப்பது வழக்கின் போது விளங்கியது".
- குயில் இதழ் (14-10-58).
"தங்களது இயக்க கூட்டங்களில் எனது பாடலை வாசித்து விட்டு, மக்களின் உணர்ச்சியை தூண்டி, பின்னர் எனை முன்னாள் (மாசி) கவிஞன் என்கிறார்கள்.
குடும்பத்தில் தந்தை பணம் கொடுக்க இயலாத வறியவன் ஆகி போனால், வேறொருவன் புதிதாக பணம் தந்தால் அவன் இந்நாள் தந்தையும், முன்னவன் முன்னாள் தந்தையும் ஆக மாட்டன்!
ஒருவேளை அண்ணாத்துரையும், கருணாநிதியும் அப்படி குடும்பத்தில் இருந்து வந்தவர்களோ?
அண்ணாத்துரையும், கருணாநிதியும், டி.என்.ராமனும் தங்களின் 'தெலுங்கு குல மேளத்தை' நன்றாகத்தான் வாசித்து அரசியல் செய்கிறார்கள்
-குயில் இதழ் (28-10-58).
மேலே பதிவாகி இருக்கும் கருத்துக்கள் யாவும், இன்னும் மேலும், திராவிடர்களால் திராவிட கவிஞன் என்று கொண்டாடப்படும் பாரதிதாசனால் தனது 'குயில்' இதழில் வெளியிடப்பட்டவை.
ஈவேராவின் மாணவனும், கருணாவின் ஆசானும் வேறு என்ன சும்மாவா இருந்திருப்பார்?
அண்ணாதுரை பற்றிய உண்மைகளை அறிய,
தேடுக: நொண்ணாதுரை வேட்டொலி
Monday, 26 November 2018
1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி
1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி
அச்சத்தை உடைத்து நொறுக்கிய பிரபாகரன் பதாகை!
1991ஆம் ஆண்டு இராசீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
அதனையொட்டி தமிழீழ ஆதரவு இயக்கங்களும், ஈழ ஆதரவாளர்களும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.
அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தவர் செயலலிதா.
அவர் இராசீவ் படுகொலையைச் சொல்லி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியிருந்தார்.
அவர் தில்லி மீதான விசுவாசத்தை தமது ஒடுக்குமுறை மூலம் காட்டிக் கொண்டிருந்தார்.
அன்றைக்கு எந்தக் கட்சியும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேச மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
அப்போது, மருத்துவர் இராமதாசு "ஏழாண்டுகள் என்ன, எழுபதாண்டுகள் ஆனாலும் புலிகளை ஆதரிப்பேன்; என்னை கைது செய்யுங்கள்!" என்று பேசினார்.
இத்தகையப் பேச்சு தமிழீழ ஆதரவாளர்களுக்கு முழு உற்சாகத்தை தந்தது.
1992இல் சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு தமிழர் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தி "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" ஒன்றை சென்னையில் பா.ம.க. நடத்தியது.
அப்போது மதுரையில் பா.ம.க. வில் பொறுப்பு வகித்த அண்ணன் வேலுச்சாமி தலைமையில் நான் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்களோடு தனி வண்டியில் சென்னைக்கு கிளம்பினோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படங்கள் ஆயிரக்கணக்கில் அச்சடித்து வண்டியில் வைத்திருந்தோம்.
சென்னையை நெருங்கும் வேளையில், பல்வேறு திசைகளிலிருந்து பா.ம.க. மாநாட்டிற்கு வண்டிகள் அணி வகுத்து வந்து கொண்டிருந்தன.
பெரும்பாலான வண்டிகளை நிறுத்தி பிரபாகரன் படத்தை கண்ணாடிகளில் ஒட்டி விட்டோம். வந்திருந்த தோழர்கள் பிரபாகரன் படத்தை சட்டையில் குத்திக் கொண்டனர்.
படத்தை விரும்பிக் கேட்டவர்களுக்கு சட்டையில் குத்தியும் விட்டனர்.
ஒரு சில தோழர்கள் கைக்குட்டையை நெற்றியில் கட்டி அதன் மீது பிரபாகரன் படத்தை அணிந்திருந்தனர் (படத்தின் இடது புறத்தில் இரண்டாவதாக நான் உள்ளேன்).
தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு வி.பி.சிங், இராம் விலாசு பசுவான், உள்ளிட்ட பல்வேறு வட நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மாநாட்டுப் பேரணி தொடங்கும் போது , பிரபாகரன் கையில் துப்பாக்கி ஏந்திய முழு உருவ துணிப் பதாகை ஒரு தோழர் மூலம் கையில் கிடைத்தது.
ஒரு தேனீர் கடையில் நாங்கள் நின்று கொண்டிருந்த போது ஊன்றப்பட்ட நிலையில் இரண்டு கம்புகள் காட்சி அளித்தன.
உடனடியாக தோழர்கள் கம்புகளை உருவி, பிரபாகரன் பதாகையை கம்புகளுக்கு நடுவே கட்டி உயரமாகத் தூக்கினர்.
எல்லோரின் கண்களிலும் பிரபாகரன் ஒளிவிட்டார்.
ஊடகத்தினர் மோப்பம் பிடித்து , பிரபாகரனை சுற்றி வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
பேரணி முழுவதும் பிரபாகரன் படம் பற்றியே பேச்சு.
பிரபாகரன் வாழ்க! தமிழீழம் வெல்க! என்ற முழக்கம் விண்ணை எட்டியது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பிரபாகரன் பதாகைப் படமே அனைவரையும் ஈர்த்தது.
மறுநாள் செய்தி ஊடகங்களில், "பயங்கரவாத புலிகள் மாநாடு" என்று தலைப்பு எழுத்துகளில் வெளியிடப்பட்டன.
காங்கிரசு கட்சியினர் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள் பலர் இதனை சாக்காக வைத்து "பா.ம.க.வை தடை செய்ய வேண்டும்" என்று கூச்சல் எழுப்பினர்.
இந்தியா டுடே ஏடு "புலிகளின் முதுகில்" என்று தலைப்பிட்டு விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தை வெளிக் காட்டிக் கொண்டது.
புலி வேடம் போட்டு கலை நிகழ்ச்சி நடத்தியவர்களைக் கூட "புலி ஆதரவாளர்கள்" என்று கூச்சலிட்டது.
மாநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்ததற்காக மருத்துவர் இராம்தாசு, பண்ருட்டி இராமச்சந்திரன், தோழர் தியாகு, பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அன்றைக்கு பிரபாகரன் படத்தை கொண்டு சென்றதன் மூலம் இந்திய- தமிழக அரசுகளின் ஒடுக்குமுறையின் இறுக்கம் களையப்பட்டது உண்மை!
அச்சம் உடைக்கப்பட்டது உண்மை!
அன்று ஒரு படம் ஏந்தினோம்!
இன்று ஆயிரமாயிரம் படங்களை ஏந்தி நடந்திட எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும்!
அச்சமூட்டுபவரை அடி பணிய வைப்பதே தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிமுறையாகும்!
பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடும் இன்றைய இளைய தலைமுறையினரின் முதல் தாரக மந்திரமாக இது இருக்கட்டும்!
நன்றி: கதிர் நிலவன்
1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி
1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி
அச்சத்தை உடைத்து நொறுக்கிய பிரபாகரன் பதாகை!
1991ஆம் ஆண்டு இராசீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
அதனையொட்டி தமிழீழ ஆதரவு இயக்கங்களும், ஈழ ஆதரவாளர்களும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.
அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தவர் செயலலிதா.
அவர் இராசீவ் படுகொலையைச் சொல்லி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியிருந்தார்.
அவர் தில்லி மீதான விசுவாசத்தை தமது ஒடுக்குமுறை மூலம் காட்டிக் கொண்டிருந்தார்.
அன்றைக்கு எந்தக் கட்சியும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேச மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
அப்போது, மருத்துவர் இராமதாசு "ஏழாண்டுகள் என்ன, எழுபதாண்டுகள் ஆனாலும் புலிகளை ஆதரிப்பேன்; என்னை கைது செய்யுங்கள்!" என்று பேசினார்.
இத்தகையப் பேச்சு தமிழீழ ஆதரவாளர்களுக்கு முழு உற்சாகத்தை தந்தது.
1992இல் சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு தமிழர் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தி "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" ஒன்றை சென்னையில் பா.ம.க. நடத்தியது.
அப்போது மதுரையில் பா.ம.க. வில் பொறுப்பு வகித்த அண்ணன் வேலுச்சாமி தலைமையில் நான் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்களோடு தனி வண்டியில் சென்னைக்கு கிளம்பினோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படங்கள் ஆயிரக்கணக்கில் அச்சடித்து வண்டியில் வைத்திருந்தோம்.
சென்னையை நெருங்கும் வேளையில், பல்வேறு திசைகளிலிருந்து பா.ம.க. மாநாட்டிற்கு வண்டிகள் அணி வகுத்து வந்து கொண்டிருந்தன.
பெரும்பாலான வண்டிகளை நிறுத்தி பிரபாகரன் படத்தை கண்ணாடிகளில் ஒட்டி விட்டோம். வந்திருந்த தோழர்கள் பிரபாகரன் படத்தை சட்டையில் குத்திக் கொண்டனர்.
படத்தை விரும்பிக் கேட்டவர்களுக்கு சட்டையில் குத்தியும் விட்டனர்.
ஒரு சில தோழர்கள் கைக்குட்டையை நெற்றியில் கட்டி அதன் மீது பிரபாகரன் படத்தை அணிந்திருந்தனர் (படத்தின் இடது புறத்தில் இரண்டாவதாக நான் உள்ளேன்).
தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு வி.பி.சிங், இராம் விலாசு பசுவான், உள்ளிட்ட பல்வேறு வட நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மாநாட்டுப் பேரணி தொடங்கும் போது , பிரபாகரன் கையில் துப்பாக்கி ஏந்திய முழு உருவ துணிப் பதாகை ஒரு தோழர் மூலம் கையில் கிடைத்தது.
ஒரு தேனீர் கடையில் நாங்கள் நின்று கொண்டிருந்த போது ஊன்றப்பட்ட நிலையில் இரண்டு கம்புகள் காட்சி அளித்தன.
உடனடியாக தோழர்கள் கம்புகளை உருவி, பிரபாகரன் பதாகையை கம்புகளுக்கு நடுவே கட்டி உயரமாகத் தூக்கினர்.
எல்லோரின் கண்களிலும் பிரபாகரன் ஒளிவிட்டார்.
ஊடகத்தினர் மோப்பம் பிடித்து , பிரபாகரனை சுற்றி வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
பேரணி முழுவதும் பிரபாகரன் படம் பற்றியே பேச்சு.
பிரபாகரன் வாழ்க! தமிழீழம் வெல்க! என்ற முழக்கம் விண்ணை எட்டியது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பிரபாகரன் பதாகைப் படமே அனைவரையும் ஈர்த்தது.
மறுநாள் செய்தி ஊடகங்களில், "பயங்கரவாத புலிகள் மாநாடு" என்று தலைப்பு எழுத்துகளில் வெளியிடப்பட்டன.
காங்கிரசு கட்சியினர் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள் பலர் இதனை சாக்காக வைத்து "பா.ம.க.வை தடை செய்ய வேண்டும்" என்று கூச்சல் எழுப்பினர்.
இந்தியா டுடே ஏடு "புலிகளின் முதுகில்" என்று தலைப்பிட்டு விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தை வெளிக் காட்டிக் கொண்டது.
புலி வேடம் போட்டு கலை நிகழ்ச்சி நடத்தியவர்களைக் கூட "புலி ஆதரவாளர்கள்" என்று கூச்சலிட்டது.
மாநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்ததற்காக மருத்துவர் இராம்தாசு, பண்ருட்டி இராமச்சந்திரன், தோழர் தியாகு, பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அன்றைக்கு பிரபாகரன் படத்தை கொண்டு சென்றதன் மூலம் இந்திய- தமிழக அரசுகளின் ஒடுக்குமுறையின் இறுக்கம் களையப்பட்டது உண்மை!
அச்சம் உடைக்கப்பட்டது உண்மை!
அன்று ஒரு படம் ஏந்தினோம்!
இன்று ஆயிரமாயிரம் படங்களை ஏந்தி நடந்திட எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும்!
அச்சமூட்டுபவரை அடி பணிய வைப்பதே தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிமுறையாகும்!
பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடும் இன்றைய இளைய தலைமுறையினரின் முதல் தாரக மந்திரமாக இது இருக்கட்டும்!
நன்றி: கதிர் நிலவன்