Showing posts with label கர்நாடகா. Show all posts
Showing posts with label கர்நாடகா. Show all posts

Thursday, 24 October 2024

வீரப்பனார் கருத்தியல்

வீரப்பனார் கருத்தியல்

 ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு வீரப்பன் தேவை!
எப்படி என்று பார்ப்போம்,!

 வீரப்பனார் பலமுறை காவல் அல்லது வனத்துறை அதிகாரிகளை கடத்திவைத்துக் கொண்டு பல்வேறு நிபந்தனைகள் விதித்தார்.
 ஒவ்வொரு முறையும் கர்நாடகா, தமிழ்நாடு அரசுகள் பொய்யான வாக்குறுதிகள் அளிப்பதும் வீரப்பன் பிணையக் கைதிகளை விடுதலை செய்வதும் தொடர்ந்தது.
 பிறகு அப்படியான நிபந்தனைகள் அனைத்தையும் சேர்த்து ஒரே நிபந்தனையாக ஆக்கினார்.
 அதாவது தம் மீதான அனைத்து வழக்குகளை ஒரே வழக்காக ஆக்கி தமிழகத்திற்கு மாற்றி தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவும் அதன் தீர்ப்பு மூலம் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடும் விரைந்து கிடைக்கச் எ கோரினார்.

 அதாவது தானும் தனது கூட்டாளிகளும் செய்த குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் தண்டனையும் அதிரடிப் படை செய்த கொலைகளுக்கும் குற்றங்களுக்கும் தண்டனையும் கிடைக்க வேண்டும்.

 அத்துடன் தனது கூட்டாளி என்று கொல்லப்பட்ட அல்லது சிறையில் வாடும் அப்பாவிகள், செய்யாத குற்றத்துக்கு சிறையில் இருக்கும் தனது அண்ணன் மாதையன் மற்றும் அப்பாவிகள், சிறையில் இருந்து சிறை மாற்றும்போது சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட தனது தம்பி, அதிரடிப் படை வன்புணர்வு செய்த ஆதிவாசி பெண்கள், சுட்டுக்கொல்லப்பட்ட சேத்துக்குளி கோவிந்தன் மனைவி, சட்டவிரோத காவலில் இருக்கும் தனது மனைவி என பெண்கள் பலர், மேலும் அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

 இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் தான் தனது கூட்டாளிகளுடன் சரணடைவதாக வீரப்பன் அறிவித்தார்.

 இது ஒரு ஓபன் சேலஞ்ச்!

 யார் பக்கம் நியாயம் என்பது சட்டப்படியே முடிவாகி உலகத்திற்கு தெரியவரும்!

 வீரப்பன் சட்டத்தை மீறியவர் என்பவர்கள் சட்டபடி அவரை சந்திக்க இந்த கொடுங்கோல் அரசுகள் தயாராக இல்லை என்பதை அறியுங்கள்.
 
 இதையடுத்தது 10 கன்னட வன ஊழியர்களை வீரப்பனார் கடத்தி அரசாங்கங்களை இந்த கோரிக்கையை நோக்கி தள்ளினார்.

  [அதுவரை எப்போதுமே காவிரி விடயத்தில் தமிழக முதல்வர் கெஞ்சுவார் கன்னட முதல்வர் மிஞ்சுவார்.
 வீரப்பன் விடயத்திலும் தமிழக அரசை விட அதிக முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு.
 
 ஆனால் இப்போது கர்நாடக முதல்வர் நேரில் வந்து தமிழக முதல்வரிடம் கெஞ்சும் நிலை!]

 இறுதியாக 70 கர்நாடக வழக்குகள் தமிழகத்துக்கு மாற்றபட்டு மொத்தம் 106 வழக்குகள் ஒரே வழக்காக ஆக்கப்பட்டு தமிழகத்தில் சிறை வளாகத்திலேயே தனி நீதிமன்றம் அமைக்க முயற்சிகள் தொடங்கின!

  ஒரு வழியாக "வீரப்பன்" பிரச்சனை முடிவுக்கு வருவதாக இருந்தது.

 நீதிமன்றத்தில் அரச பயங்கரவாதம் வெளிச்சத்திற்கு வரும் என்று அனைவரும் எண்ணியிருந்த நிலையில் அலறியடித்துக் கொண்டு ஹிந்தியம் ஓடி வந்தது.

 ஏன்?! வீரப்பன் விடயம் சமாதானம் அடைவதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை?!

 ஹிந்தியாவுக்கு கன்னடரும் தமிழரும் தமக்குள் அடித்துக்கொண்டு இருக்க வேண்டும்!
 அப்போதுதானே இவ்விரு மாநிலங்களை சுரண்ட வசதியாக இருக்கும்!
 ஹிந்திய அரசு நினைத்தால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையைத் தீர்க்கலாம்! 
 ஆனால் அவர்களது பிரித்தாளும் மூளை அதற்கு விடாது!

 இன்று வீரப்பன் பிரச்சனை தீர்ந்துவிட்டால் இதே போல காவிரி பிரச்சனையும் தீர்க்கப்படுமே?!
 அதன்பிறகு இவ்விரு இனங்களும் தங்களுக்குள் மோதிக் கொள்ளாமல் உண்மையான வில்லன் இந்திய அரசை நோக்கித் திரும்புவார்களே?!

 இதைவிட காவிரித் தண்ணீரை மலையிலே மறித்து ஆலைகளுக்கு எடுத்துக் கொள்ளும் கர்நாடக தொழிற்சாலைகளும்
 தண்ணீர் ஓடாத ஆற்றில் மணலை அள்ளி கொழுக்கும் தமிழக அரசியல்வாதிகளும்
 தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழிந்த பிறகு அந்த நிலத்தை விழுங்க குறிவைத்துள்ள கார்ப்பரேட் முதலைகளும் இந்த நல்ல காரியத்தை நடக்க விடுவார்களா?!

 இந்த கண்ணுக்கெட்டாத மேல்தட்டு அதிகாரங்கள் தமது பிரதிநிதியாக சுப்பிரமணிய சுவாமி யை அனுப்பியது.

 அவர் வந்து இரு மாநில அரசுகள் வீரப்பனை மன்னித்தாலும் மத்திய அரசு மன்னிக்காது என்று கூறினார்.
 ஏன்? வீரப்பனுக்கும் மத்திய அரசுக்கும் என்ன பிரச்சனை?!

 1993 இல் கர்நாடக அரசு கோரியதன் அடிப்படையில் இந்திய எல்லைக் காவல் படை (BSF) 400 பேர் ஒரு ஆண்டு காலம் வீரப்பனைப் பிடிக்க முயன்றனர்.
 இந்த நடவடிக்கையின் போது இருதரப்புக்கும் சேதம் விளைந்தது. 
 சரியான காரணம் எதுவும் சொல்லாமல் bsf பின்வாங்கியது.
வீரப்பன் நடத்திய தாக்குதலில் ஒரு BSF வீரர் (Bhupender kumar)  இறந்தார் (உண்மையில் இறந்தது 20 இராணுவ வீரர்கள். இதை மறைத்துவிட்டனர்).
 எனவே வீரப்பன் பிரதமரிடமும் பொதுமன்னிப்பு பெறவேண்டும் என்றார் சு.சாமி!

  வீரப்பன் சரணடைந்து வழக்கு நேர்மையாக நடந்துவிட்டால் கர்நாடக, தமிழக அரசுகளின் அட்டூழியங்கள் வெளிச்சதுக்கு வந்துவிடுமே என்று பயந்துபோய் இருந்த இரு மாநில முதலமைச்சர்களும் இந்திய அரசு மீது பழியைப் போட்டுவிட்டு பின்வாங்கினர்!

 இந்த நிலையிலும் அந்த 10 பேரையும் விடுவித்தார் மாவீரன் வீரப்பன்!

 இது நடந்தபோது அதாவது 1990 களில் ஒரு நாளைக்கு 4 லட்சம் செலவு செய்து வீரப்பனை பிடிக்க முயன்றது அதிகார வர்க்கம்!
 ஏறத்தாழ 220 கோடி ரூபாய் வீரப்பனாரைப் பிடிக்க செலவு செய்யப்பட்டுள்ளது! 
 ஆனால் வீரப்பனை சட்ட ரீதியாக சந்தித்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்படவருக்கு இழப்பீடும் தர அரசுகளுக்கு துப்பு இல்லை! 
 தங்களுக்கு சந்தன கட்டை கடத்துவதில் உதவவில்லை என்று வாச்சாத்தி என்ற ஒரு மலைக் கிராமத்தையே கொழுத்தி அங்கே அத்தனை பெண்களையெல்லாம் வன்புணர்வு செய்த அரச பயங்கரவாதத்தை சட்ட ரீதியாக சந்தித்த இந்த பழங்குடிகள் 30 வருடம் கழித்து அநீதி (தாமதமான நீதி) பெற்றனர்.
 இதுதான் இங்கே நீதி கிடைக்கும் லட்சணம்! 
 
 தனக்கு இனி காடுதான் நிரந்தரம் என்றும் தாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று உணர்ந்துகொண்ட வீரப்பன் தானே மனுநீதி சோழனாக மாறி தீர்ப்பு தந்தார்.
 அதற்குப் பிறகு அவர் செய்த கடத்தல்களில் தனக்கென யோசிக்காமல் பாதிக்கப்பட்ட தமிழ் இனத்துக்கு பழங்குடிகளுக்கு எதையாவது பெற்றுத்தர முயன்றார்!
 தமிழ்தேசிய ஆயுதக் குழுக்களை ஒன்றுதிரட்டினார்.
 உச்சநீதிமன்றத்தையே மதிக்காத கர்நாடக அரசை ஒரு கேசட் அனுப்பி பணிய வைத்தார்.
 அப்படி கிடைத்த காவிரி நீர் இன்றும் தமிழர்கள் உடலில் ஓடுகிறது.

 இந்திய அரசுக்கு எதிராக உண்மையிலேயே போர் புரிந்துவரும் நக்சலைட்டுகளை புரட்சியாளர்கள் நம்பி கடைசியில் அவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு வீழ்ந்துபோனார்!
 இந்திய கம்யூனிசம் இன்னொரு ஹிந்தியம்!
அங்கே மார்க்ஸ் கூறிய தேசிய உரிமைக்கெல்லாம் இடமில்லை!

 வீரப்பனாரை வீழ்த்தியதில் அவரது நெருங்கிய உறவினர்கள், அவரது சாதியினர், திராவிட அரசியல், கன்னட இனவெறி, ஹிந்திய சர்வாதிகாரம், இசுலாமிய இயக்கங்கள், கம்யூனிசம் என எல்லா சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன.

 அவருக்கு கடைசி வரை பக்க பலமாக இருந்தது சில மனசாட்சி உள்ள மனிதர்களும் பழங்குடி மக்களும்தான்!

  தமிழின மக்களும் தமிழின அரசியல்வாதிகளும் தமிழ்தேசிய ஆயுதக் குழுக்களும் ஏன் புலிகளும் கூட  அவரை ஆதரிக்க துப்பு இல்லாமல் கைவிட்டுவிட்டனர்.

 அவர் காலத்தில் அவரது அருமை யாருக்கும் தெரியவில்லை!
 இன்று வீரப்பன் எனும் பெயர் தனிநபரைக் குறிப்பது இல்லை! அது ஒரு சித்தாந்தம்! 
சாமானிய குடிமகன் நினைத்தால் அரச பயங்கரவாதத்தை திருப்பி அடிக்க முடியும் என்பதுதான் அதன் சிந்தனை!

  அப்படி வீரப்பனாரை ஒழித்ததில் பெரிய பங்கு யாருக்கு என்பதை அரசாங்கம் வீரப்பன் இறந்த பிறகு அளித்த வெகுமதிகளை வைத்து தீர்மானிக்கலாம்!

 752 பேர் தமிழக அதிரடிப்படை வீரர்களுக்கு இரட்டை பதவி உயர்வு மற்றும் வீட்டு மனை வழங்கப்பட்டு 3 லட்சம் வரை பணமும் வழங்கப்பட்டது. 
தமிழக காவல்துறை உளவாளிகளுக்கு எதுவும் செய்யவில்லை அல்லது செய்வதாகக் கணக்கு காட்டி அதிகாரிகள் விழுங்கிவிட்டனர்.
 அப்போது வீரப்பன் தலைக்கு விலை 5 கோடி!

 754 பேருக்கு கர்நாடகா பணமாகவே 40 கோடி வரை வாரி வழங்கி இருக்கிறது!
 சிறிய அளவில் உளவு சொன்னவர்களை கூட நினைவு வைத்து 2000 ரூ வரை கூட வெகுமதி அளித்துள்ளது!

 என்றால் அதிக வெகுமதி யார் வாங்கியது!
கர்நாடக அரசு மத்திய எல்லைக் காவல் படைவீரர்களுக்கு வழங்கியதுதான் அந்த வெகுமதி!  

 ஏனென்றால் தோற்று ஓடினாலும் வீரப்பனுக்கு மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியது  BSF ராணுவம்தான்!
 என்றால் வீரப்பன் ஒட்டுமொத்த இந்திய கட்டமைப்பின் எதிரி என்றுதானே பொருள்?!

 இன்று கர்நாடகாவின் கொட்டம் அதிகரித்து விட்டது!
ஹிந்தியத்தின் கொட்டம் பல மடங்கு அதிகரித்து விட்டது!
திராவிடம் உச்சக்கட்ட ஆட்டத்தில் இருக்கிறது!

இனியொரு வீரப்பன் பிறந்தால்தான் இதற்கு முடிவா?!


 

Friday, 17 April 2020

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

  ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழியினர் உரிமை கோர முதன்மையான தேவை இலக்கியச் சான்று ஆகும்.

 அப்படி இலக்கிய அடிப்படையில் தற்போதைய கேரளா மட்டுமல்லாது அதையும் தாண்டி கர்நாடகாவின் மைசூர், கூர்க் ஆகியவற்றுடன் சிக்கமகளூர் வரை நமக்குச் சொந்தமானது என்றாகிறது.

 மைசூர் எனும் எருமைநாடு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
 தற்போது மலைகள் பற்றி பார்ப்போம்.

நளிமலை :-

 நீலகிரி மாவட்டத்தில் ஒருபக்கத்தில் இருந்து கன்னடரும் இன்னொரு பக்கத்திலிருந்து மலையாளிகளும்  குடியேறி இன்று தமிழரை விட அதிகமாகிவிட்டனர்.
 இப்பகுதி அரசியல் தலைமைகளும் வேற்றினத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டது.

 நீலகிரி சங்ககாலத்தில் நளிமலை என்று அழைக்கப்பட்டது.
 நளி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
 தமிழர் நிலத்திலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் இதுவே!

 குளிர்ந்த நளிமலை பற்றியும் அதை ஆண்ட வேட்டுவ குலத்தைச் சேர்ந்த நள்ளி (முழுப் பெயர்:  கண்டீரக் கோப்பெருநள்ளி இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன்) எனும் காட்டு அரசன் பற்றியும் புறநானூறு (148 - 150) கூறுகிறது.

 சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவன் 'நீலகிரி' வந்து தங்கியிருந்தது பற்றியும்
அப்போது மிக்கரிய நிறமுடைய 'கொங்கணக் கூத்தர்' மற்றும் 'கருநாடர்' ஆகியோர் தமக்கே உரிய தனிப்பட்ட கலாச்சாரத் தோற்றத்துடன் வந்து 'மாதர்ப் பாணி' எனும் காதல்கலந்த பாடலைப் பாடி ஆடினர் என்று குறிப்பு உள்ளது
(இதை கன்னடர் தமது சான்றாக முன்வைக்கலாம்).
 இதேபோல குடகர்களும் ஓவர்களும் வந்து ஆடிப்பாடி சேரனை மகிழ்வித்து பரிசு பெற்றுச் சென்றனர்.

 --------------

கண்டீரமலை :-

  நீலகிரி மலைகளில் ஒன்று கண்டல் மலை.
இதுவே சங்ககாலத்து கண்டீரமலை ஆகும் (ஈரம் துண்டுதுண்டாக அதாவது பனிக் கண்டுகள் கிடக்கும் மலை என்று பொருள்).
 புறநானூறு 151 இல் நள்ளியின் தம்பி கண்டீரக்கோன் பற்றி உள்ளது.
---------

தோட்டிமலை :-

 தொட்டபெட்டா சிகரம் தோட்டி என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தோட்டி என்பது யானையை செலுத்த பாகன் பயன்படுத்தும் கோலைக் குறிக்கும்.
 அதைப்போன்ற கூரிய வளைந்த தோற்றம் உடைய மலைச் சிகரம் என்கிற பொருள்படும்படி தோட்டிமலை என்று அழைக்கப்பட்டது.

 இந்த தோட்டி மலையை ஆயர் தலைவன் 'கழுவுள்' என்பவன் சேரனிடம் போரில் இழந்தான் என்று பதிற்றுப்பத்து (8 - 71) கூறுகிறது.

 பரிபாடல் (5-86) இம்மலையை இருந்தோட்டி என்று குறிப்பிடுகிறது.
------------

 குதிரைமலை :-

தற்போதைய சிக்கமகலூரு மாவட்டத்தில் உள்ள Kudremukh எனும் குதிரைமுக மலை பற்றி இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
 குதிரை முகம் போன்ற அமைப்புடைய உயர்ந்த மலையை ஒட்டி போக்குவரத்துக்கான ஒரு கணவாய் இருந்துள்ளது.
  அது பற்றியும் அம்மலையை ஆண்ட பிட்டன் பற்றியும் அகநானூறு (143) கூறுகிறது.

 பிட்டனின் மகன் பிட்டங்கொற்றன் பற்றி புறநானூறு (168) கூறுகிறது.
 அதில் ஊராக் குதிரை என்று குறிப்பிடப்படுகிறது குதிரைமலை. அங்கு வாழ்ந்த குறவர் பற்றியும் விலங்குகள் பற்றியும் தாவரங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.

 நீண்ட பாதையைக் கொண்ட குதிரைமலையை ஆண்ட அஞ்சி என்ற அரசன் பற்றி அகநானூறு (372) கூறுகிறது.

 உயர்ந்த குதிரைமலையை ஆண்ட எழினி பற்றி புறநானூறு (158) கூறுகிறது.

 குதிரைமலையின் மக்கள் மழவர் ஆவர்.
 ஆறு மலைமுகடுகளை உடைய யானை போன்ற மலையான  பொதினி (பழனி) மலையின் அரசன் முருகனிடம் தோற்றனர் என்று அகநானூறு (1) கூறுகிறது.

 Kutremukh என்பதற்கு கன்னடத்திலும் குதிரை முகம் என்றே பொருள்.
 அதன் பெயர் குதிரைமுகம் போன்ற தோற்றத்தினால் ஏற்பட்டது என 1908 இல் வெளிவந்த Imperial Gazetteerof Mysore & coorg ல் பக்கம் 233 மற்றும் 109 ல் பதிவாகியுள்ளது.
---------

ஏழில்மலை :-

 ஏழு மலைமுகடுகளைக் கொண்ட மலை என்பதால் ஏழில் மலை என்றழைக்கப்பட்டது.
 இதனூடாகவும் ஒரு மலைப்பாதை இருந்துள்ளது.
 சமஸ்கிருதத்தில் இது சப்தகிரி என்று அழைஐக்கப்பட்டது.
 பத்தாம் நூற்றாண்டிலிருந்து எலிமலை என்று மாறிவிட்டது.
 பிற்கால ஐரோப்பியர் குறிப்பிலும் எலி எனும் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளது.
 (ஆனால் மலையாளத்தில் ezhi அதாவது எழி என்றே எழுதுகின்றனர்).

 இதை ஏழில்குன்றம் என்று குறிப்பிடும் நற்றிணை (391),
 கொங்காண அரசன் நன்னன் வளமான இம்மலையை ஆண்டு வந்தான் என்றும் கூறுகிறது.

[கொங்காண நாடு என்பது கொங்குநாட்டின் வடக்கே இருந்த நாடு.
 கொள் விளையும் காட்டுப் பகுதி என்று பொருள்.
 இன்றைய கர்நாடகத்தின் தென்மேற்கு பகுதியே இது.
 இங்கே எருமைகள் மிகுதி.
 கோவா மற்றும் அதைச் சுற்றி பேசப்படும் மொழி கொங்கணி ஆகும்.
 இவர்கள் கொங்கணர் என்கிற வேற்றினத்தவராக இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளனர்.
 இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
 கொங்காணத்தை ஆண்ட நன்னன் தமிழரான வேளிர் குலத்தவனே!
 இதற்குச் சான்றாக நன்னனை "வேண்மான்" என்று அகநானூறு (97) கூறுகிறது.
 "நன்னன் உதியன்" என்பவன் தொன்மையான வேளிர் குலத்தின் செல்வங்களை தன் பாழி நகரில் வைத்து பாதுகாத்தான் என்று அகநானூறு (258) கூறுகிறது]

 ஏழில் குன்றத்து கணவாய் பற்றியும் அங்கிருக்கும் யானைகள் பற்றியும் அகநானூறு (349) கூறுகிறது.

 யானைகளைப் பரிசாக அளிக்கும் வழக்கமுடைய நன்னனின் நாட்டில் மயில்கள் நிறைந்த ஏழில்மலை உள்ளதென்று அகநானூறு (152) கூறுகிறது.

 ஏழில்குன்றத்து பெண்கள் வேங்கைப் பூவைப்பிண்ணி இடையில் அணிவர் என்று அகநானூறு (345) கூறுகிறது.
--------

முதுமலை:-

 சங்ககாலத்தில் முதிரம் என்று அழைக்கப்பட்டது.
 மூங்கில்களும் பலாமரங்களும் குரங்குகளும் காய்கனிகளும் நிறைந்த இம்மலையை வள்ளலான குமணன் ஆண்டான் என்று புறநானூறு (158, 163) கூறுகிறது.
-----------

 குடகு மலை:-

 குடகு மலை தற்போது கொடகு என்றும் (ஆங்கிலத்தில் coorg அங்கே வாழும் இனத்தவர் கொடவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 குடகுமலையை குடமலை என்று குறிப்பிட்டு அங்கே காவிரி பிறக்கிறது என்று மலைபடுகடாம் (527) கூறுகிறது.

 குடமலையில் சந்தனமும் அகிலும் கிடைக்கும் என்று பட்டினப்பாலை (188) குறிக்கிறது.

 குடகுமலை உச்சியை (குடகக் கவடு) பிளந்து சோழன் காவிரியைக் கொண்டு வந்ததாக விக்கிரமசோழன் உலா (24) கூறுகிறது.

 காவிரி குடமலையில் பிறந்து கடலில் கலப்பதை சிலப்பதிகாரம் (10: 106) பாடுகிறது.

 குடமலையில் உள்ள மாங்காடு எனும் ஊரில் வாழ்ந்த அந்தணர் பற்றி சிலப்பதிகாரம் (11) கூறுகிறது.

 குடகுமலையை 'மேற்கில் இருக்கும் பொன்பதித்த மலை' எனுமாறு 'குடாஅது பொன்படு நெடுவரை' என்றழைத்து அங்கே காவிரி பிறப்பதாக புறநானூறு (166) கூறுகிறது.

 ஏற்கனவே கூறியதுபோல குடகர் சேரன் முன்பு நடனமாடி பரிசு பெற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் வருகிறது.
 ஆனால் அதில் கொங்கணரும் கருநாடரும் தனித்த தோற்றத்துடன் இருந்ததைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள்,
 ஓவர் (ஓவியர்) மற்றும் குடகர் தனித்த தோற்றம் உடையவரென எதுவும் கூறவில்லை.
 என்றால் இவ்விருவரும் தமிழரில் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டும்.

 அதாவது சேரன் இமயமலைக்குச் செல்ல படையுடன் தனது தலைநகரிலிருந்து புறப்பட்டு நாட்டின் எல்லையான நீலகிரிக்கு வருகிறான்.
 அப்போது அருகாமை இனத்தவரான கருநாடரும் கொங்கணரும் சேரநாட்டுக்குள் வந்து கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
 சேரநாட்டின் எல்லைப்புறத்து மக்களான குடகரும் ஓவியரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

 இதன்பிறகு சேரனின் நட்புநாட்டவரான "நூற்றுவ கன்னர்" (சாதவாகனர்) மிக அதிகளவு பரிசுகளுடன் நூற்றுக்கணக்கான கூத்தாடிகளையும் சஞ்சயன் எனும் தூதுவன் தலைமையில் அனுப்பி
"ஒரு கல்லுக்காக ஏன் இமயம் போகிறீர்கள் நாங்களே எடுத்துக்கொண்டுவந்து தருகிறோம்" என்று செய்தி சொல்ல வைக்கின்றனர்.
 இது எதைக் காட்டுகிறது என்றால் சேரன் இன்னும் தனது எல்லையைவிட்டு படையுடன் வெளியேறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

 கன்னடர் மற்றும் மலையாளிகள் நாம் காட்டிய இலக்கியச் சான்றினை விட பழமையான தமது மொழியின் இலக்கியச் சான்றினைக் காட்டினாலொழிய நாம் மேற்கண்ட மலைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

Tuesday, 7 April 2020

இலக்கியத்தில் எருமையூர்


இலக்கியத்தில் எருமையூர்
 
புராணங்களின் படி மகிஷாசுரனை மகிஷாசுரமர்த்தினி வதம் செய்த இடம் என்று கருதப்பட்டு மைசூருக்கு மகிஷாசுரமர்த்தினிபுரம் என்ற பெயர் இருந்ததாகவும் பிறகு சுருங்கி மகிஷபுரம் என்றாகி பிற்பாடு மைசூர் என்றானதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இது பொருத்தமான வாதமாகத் தோன்றவில்லை.
உண்மையில் மகிஷாசுரமர்த்தினி பற்றி வட இந்தியாவிலேயே கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கர்நாடகத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சான்றே காணப்படுகிறது.
மைசூர் என்பது உண்மையில் எருமையூர் ஆகும்.
எருமைகள் மிகுந்த ஊர் என்று பொருள்கொள்ளலாம்.
கர்நாடகம் இன்று எருமை வளர்ப்பில் பின்தங்கிவிட்டாலும் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் உள்ளது.
நமக்கு சல்லிக்கட்டு போல கன்னடர்க்கு எருது போட்டி (மரபணு ஆய்வின் படி உலகிலேயே பழமையான எருது வகை இந்திய நீர் எருமைகள் தான்).
எருமை என்பதற்குச் சமற்கிருதச் சொல் மகிஷம்.
எருமையூர் என்பது மகிசூர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று என்பர்.

  ஆனால் எருமையூர் மையூர் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
மையூர் என்பதே மைசூர் என்று ஆகியிருக்கவேண்டும்.
இதுவே இயல்பான மாற்றமாகப் படுகிறது.
இதற்கு இலக்கியச் சான்றாக வேளிர் குடியைச் சேர்ந்த 'மையூர் கிழான்' என்பவர் சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராக இருந்ததாக பதிற்றுப்பத்து கூறுகிறது (காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு).
மைசூர் நகரின் பெயராலே அம்மாநிலம் முழுவதும் 1980 வரை வழங்கப்பட்டது.
பிறகுதான் கர்நாடகா என்று மாற்றினர்.
எருமையூர் பற்றி இலக்கியங்களில் உள்ள குறிப்புகள்,
வடிகட்டப்பட்ட கள் கிடைக்கும் எருமையூர் எனுமாறு
"நார் அரி நறவின் எருமையூரன்" அகநானூறு (36) கூறுகிறது.
குடநாடு என்பது சேரநாட்டின் வடபகுதி.
இதில் நுண்வேலைப்பாடு நிறைந்த பூண் அணிந்த (கொம்புகளை உடைய) எருமை மாடுகள் நிறைந்திருந்தன என்பதை 'நுண்பூண் எருமை குடநாட்டன்ன' (அகநானூறு 115) எனும் வரிகள் உணர்த்தும்.
சேரநாட்டு வளத்தைக் கூறும் சிறுபாணாற்றுப்படை (41- 46) செங்கழுநீர்ப் பூக்களை எருமைகள் மிகுதியாக மேய்ந்துவிட்டு பலாமர நிழலில் உறங்கின என்று கூறுகிறது.
அதாவது சேரநாட்டிலும் அதையொட்டிய எருமைநாட்டிலும் எருமைகள் அதிகளவு இருந்தன.
ஆனால் அயிரி ஆறு (ஹரங்கி ஆறு) பாயுமிடத்தில் வடுகரின் எருமை நாடு இருந்தது எனுமாறு,
"வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாடு"
என்று அகநானூறு (253) கூறுகிறது.
இதில் கூறப்பட்டுள்ள
'வடுகர் பெருமகன் எருமை நன்னாடு' என்பதை
'வடுகப் பெருமான் ஆளும் எருமை நாடு'
என்று பொருள் கொண்டால் 'எருமைநாடு' என்பது வடுகரின் நாடு என்றாகிறது.
இதை கன்னடர் தமது தரப்பு சான்றாக வைக்கக்கூடும்.
ஆனால் 'வடுகனான எருமை என்பான் ஆளும் நாடு'
என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும்.
ஏனென்றால் இப்பாடல் வரிகள் முதலில் அவனது பண்புகளைக் கூறி அத்தகைய எருமையின் நாட்டில் அயிரியாறு பாய்கிறது என்று அவனைப் பற்றித்தான் கூறுகிறதே தவிர அவனது நாட்டைப் பற்றி கூறவில்லை.

எருமை என்பவன் இரவில் தாக்குபவன் என்றும்
மாடுகளை மேய்க்கும் போது கோவலர் எழுப்பும்  ஒலிகளைக் கற்றுக்கொண்டு அதுபோல் ஒலியெழுப்பி காளைகளையும் கன்றுடன் பசுக்களையும் கவர்ந்து சென்று தனது மண்டபம் நிறைய கட்டிவைத்திருப்பவன் என்றும்
வலிமையான தோள்களை உடையவன் என்றும் கூறி
அவனை வடுகர் பெருமகன் என்றும் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட குடியின் தலைவனை அக்குடிப் பெயருடன் 'பெருமகன்' என்று சேர்த்துக் கூறுவது வழக்கம்.
எ.கா: ஆவியர் பெருமகன் (பேகன்)
கள்வர் பெருமகன் (தென்னன்)
குறவர் பெருமகன் (ஏறைக்கோன்)
ஆக 'வடுகரின் தலைவனான எருமை' என்று பொருள்கொள்வதே சரி!
அயிரி ஆறு எனும் ஹரங்கி ஆறு காவிரி உற்பத்தி ஆகி சிறிது தூரம் ஓடியதும் அதில் வந்து கலக்கும் குறுகிய நீளமுள்ள ஆறு ஆகும் (717 கி.மீ).
அயிர் என்பது நுண்ணிய அல்லது மிகச்சிறிய என்ற பொருளைத் தரும்.
எனவே இந்த ஆறுக்கு இது பொருத்தமான பெயரே!
(இவ்வாறு பற்றி அகநானூறு 177 இலும் வருகிறது)
இந்த சிற்றாறு எருமை ஆண்ட நாட்டின் முக்கிய நதி என்று கூறுவதன் மூலம் அவனது நாடு மிகவும் சிறியது என்பதையும் ஊகிக்கலாம்.
என்றால் குடகு வரை சேரர் ஆண்டதும்.
அதற்கு வடக்கே வடுகரின் மொழிபெயர் தேயம் இருந்ததையும் ஊகிக்கலாம்.
அதாவது தற்போதைய கூர்க் மாவட்டம் பாதிவரை சேரநாட்டுடையது.
பிற்பாடு ஹொய்சள அரசர் சாசனத்திலும் எருமை என்னும் பெயரால் மைசூர் குறிக்கப்பட்டுள்ளது
(சான்று: Epigraphia Carnatica., Vol X c. w. 20).
எனவே மகிஷூர் என்பது மைசூரின் பழைய பெயர் இல்லை.
படம்: எருமைநாடு மற்றும் அதனருகில் வடுகர் நாடு


Monday, 10 February 2020

மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி தினமணி


மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி தினமணி
-------
ஏற்கனவே தமிழ்மொழி மீதுள்ள வெறுப்பினால் கன்னடர் மற்றும் ஹிந்தியர் மைசூர் தலைமை கல்வெட்டியல் அலுவலகத்தில் உள்ள 70,000 தமிழ் கல்வெட்டுகளை அழியவிடுவது பற்றி ஜூனியர் விகடன் (18.06.2006), விகடன் (02.05.2013), மற்றும் தினமலர் (04.02.2018) ஆகிய பத்திரிக்கைகள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
இதேபோல தினமணி 27.08.2019 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
இக்கட்டுரையில் முக்கியமானவை,

* மைசூரில் ஒரு லட்சம் கல்வெட்டு படிகள் உள்ளன; அவற்றில் 65 ஆயிரம் தமிழ்க் கல்வெட்டுகள்.
* 1908 க்குப் பிறகு படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அச்சில் கூட வெளிவரவில்லை.
* 1920 க்குப் பிறகு கல்வெட்டுகள் அச்சில் வருவது ஏறத்தாழ நின்றுவிட்டது
* 1961 இல் தமிழக அரசு முயற்சி செய்தும் எதுவும் நடக்கவில்லை
*கல்வெட்டு எண்ணிக்கையில் தமிழே பெரும்பான்மை மற்றும் முதலிடம்.
* 1966 லேயே தமிழ்க் கல்வெட்டுகள் எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டிவிட்டது.
இரண்டாவது இடம் கன்னடம் என்றாலும் 1993 இல் தான் கன்னட கல்வெட்டுகள் 10,500  ஐத் தாண்டின.
* 1967 இல் சேகரிக்கப்பட்ட 70,000 படிகள் அழியும் தருவாயில் உள்ளன
* 1997 வரை கல்வெட்டுகள் பற்றி சிறு குறிப்புகளுடன் வெளிவந்த கல்வெட்டியல் துறை ஆண்டறிக்கை கூட நின்றுபோனது 
* 2010 இல் தஞ்சை பல்கலை கல்வெட்டுகளை டிஜிட்டல் ஆக்கும் பணிக்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் மைசூர் நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை.
எதையுமே செய்யாமல் கொடுக்கப்பட்ட 22 லட்சத்தில் 20 லட்சத்தை திருப்பித் தந்துள்ளனர்.
* தமிழகத்தில் இருந்து யார் சென்று எதைக் கேட்டாலும் இல்லை என்கின்றனர். அல்லது இழுத்தடிக்கின்றனர்.
*பாதுகாக்கப் பட்டிருந்த 50% தமிழ் கல்வெட்டுப் படிகள் அழிந்துவிட்டன.
  இன்னும் 20 ஆண்டுகளுக்குள் மொத்தமாக அழிந்துவிடும் நிலை.

--------
மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்: உதயசந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?
நம்நாட்டின் தொன்மை வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் தொல்லியல் சான்றுகளில் ஒன்று கல்வெட்டுகள் ஆகும்.
கோவில் முதலிய பொதுக் கட்டடங்களின் சுவர்களிலும், பாறைகள் மீதும், கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
இக்கல்வெட்டு எழுத்துக்களை அறிந்து அவற்றின் பொருளை விளக்கும் கலையே கல்வெட்டியல் எனப்படும்.
நம்நாட்டில் கல்வெட்டுகளைப் படித்தறிந்து, வரலாற்றுச் சான்றுகளாக அவற்றை உருவாக்கிய பெருமை மேலைநாட்டவரையே சாரும்.
அவர்களில் முக்கியமானவர்கள்.
ஜேம்ஸ் பிரின்செப் - 1837 இந்தியாவில் கல்வெட்டாய்வு ஆரம்பிக்கப்படுவதற்கு இவரே முக்கிய காரணம் ஆவார்.
அலெக்சாந்தர் கன்னிங்காம் 1871 முதல் 1885 வரை அசோகர் காலத்து கல்வெட்டுகள் என்ற தனித் தொகுப்பை வெளியிட்டார்.
டாக்டர் யூஜின் ஹால்ட்ஸ் (1857 - 1906) தென்னிந்திய கல்வெட்டுகளின் முதல் தொகுப்பினை 1903 ல் வெளியிட்டார்.
மேலும் ராபர்ட் சிவல் (1868 - 1894) டாக்டர் கில்ஹார்ன், டாக்டர் ஜார்ஜ் பூலர் (1837 - 1898), ஜான் பிளீட் (1874 - 1917), ஜேம்ஸ் பர்கஸ் ( 1822 - 1917), டாக்டர் ப்ர்னல், காலின் போன்றோர்களின் ஊக்கமும் உழைப்பும் ஆர்வமும் இல்லை எனில் நமது வரலாற்றினை அறிந்திருக்க வாய்ப்புகள் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவர்கள் தவிர கோபிநாத்ராவ், வெங்கையா, சுப்ரமணிய ஐயர், கிருஸ்ணசாஸ்திரி இந்திய கல்வெட்டாய்வுக்கு பெரும் துணை புரிந்துள்ளனர்.
1861 முதல் இதுவரையில் சுமார் எழுபத்தைந்தாயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்னும் பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளன.
படி எடுத்தல் (Estampage):-
நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் தம் கால நிகழ்வுகளை கல்லில் செதுக்கி வைப்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கோயில், குளக்கரை, மலைகள், குகைகள் போன்ற இடங்களில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India-ASI) மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு ‘படி எடுத்தல்‘ முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகிறது.
இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் அவ்வப்போது பதிப்பித்து தொகுதிகளாக வெளியிடுகிறது ASI.
இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், நம் நாடு முழுவதிலும் உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், 1860 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் எனும் ஆங்கிலேயரால் ASI உருவாக்கப்பட்டது.
மைசூரு அலுவலக பின்னணி:-
இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகம் சார்பில் காகித நகல்களாக 1889-ம் ஆண்டு முதல் படி எடுக்கப்படுகிறது.
இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் இந்திய தொல்லியல் ஆய்வகம் அவ்வப்போது பதிப்பித்து வெளியிடுகிறது.
இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகளை படி எடுத்து பதிப்பிப்பதற்கும் தொல்லியல் ஆய்வகத்தின் மைசூரு அலுவலகத்தில் தனியாக கல்வெட்டு தலைமையகம் ஒன்று இயங்குகிறது.
ஆரம்பத்தில் சென்னையில் இருந்த அந்த அலுவலகம், தட்பவெட்பநிலை காரணமாக எடுத்தபடிகள் வீணாகப் போய் விடும் என ஊட்டிக்கு மாற்றப்பட்டது.
அதன் இயக்குநராக பொறுப்பேற்ற மைசூரை சேர்ந்த ஒரு அதிகாரி அதை தம் சொந்த ஊருக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆங்கிலேயர் நமக்கு அளித்த பொக்கிஷம் இக்கல்வெட்டுகளின் படிகள் (copies).
தமிழ்நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் பராமரிக்கவும், கல்வெட்டுப் படிகளைப் பாதுகாக்கவும், படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுதுவடிவமாக்கவும், பதிப்பிக்கவும் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் அரசு நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பதிவு கடந்த 1890 ஆம் ஆண்டு முதல் அரும்பாடுபட்டு படியெடுத்து சேகரித்து, படித்து, தமிழ் எழுதுவடிவமாக்கி, ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 75,000 தமிழக் கல்வெட்டுகளின் நிலை பற்றியது.
இதற்கென பிரத்யேகமாக மைசூரில் செயல்படும் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளை அலுவலகம் இந்த தரவுகளை முறையாகப் பராமரிக்கிறதா?
சுமார் 400 ஆண்டுகள் பழைமையான இத்தரவுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளனவா?
1909 ஆம் ஆண்டு முதல் இவை ஏன் நூலாக பதிப்பிக்கப்படவில்லை?
1908 ஆம் ஆண்டுவரை பதிப்பிக்கப்பட்ட நூல்களும் பிற கல்வெட்டு படி பிரதிகளும் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் மின்தரவாக (digital document) கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளதா?
இது போன்ற கேள்விகளுக்கு அறிஞர்கள் சொல்லும் தீர்வு என்ன?

இந்திய கல்வெட்டியல் பேரவையின் (Epigraphical Society of India-ESI) இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India), மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அதிகாரபூர்வமான தொல்லியல் ஆய்வு அமைப்பு.
இவ்வமைப்பு நிர்வாக வசதிக்காகவும் தொல்லியல் சின்னங்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பதற்காக இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது.
தமிழ்நாடு சென்னை வட்டத்தின் (Chennai Circle) கீழ் வருகிறது.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கியது.
இந்தியாவில் 1887 முதல் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டன.
இந்திய தொல்லியல் துறையின் (Archaeological Survey of India) கல்வெட்டியல் பிரிவு (Epigraphy Branch) கி.பி. 1886 ஆம் ஆண்டு பெங்களூரில் டாக்டர். ஹுல்ஷ் (Dr.E. Hultzsch) தலைமையில் துவங்கப்பட்டது.
இந்தியாவின் முதல் கல்வெட்டியலாளரும் (Epigraphist) இவரே.
இந்த அலுவலகம் இந்தியாவில் பல பாகங்களில் பரவிக்கிடந்த கல்வெட்டுகளை அளவீடு செய்தது.
தொடக்க காலத்தில் இக்கல்வெட்டுகளை ஆங்கிலேய அரசு மட்டுமல்லாது சிற்றரசுகளும் (சமஸ்தானங்கள் உதாரணம்: புதுக்கோட்டை, திருவிதாங்கூர், மைசூர் ஆகியன) தொகுக்கும் பணியில் ஈடுபட்டன.
இதனைத் தொடர்ந்து செந்தமிழ், தமிழ்ப்பொழில் முதலான இதழ்களிலும் கல்வெட்டுகளைப் பற்றிய குறிப்பும் நிழற்படமும் வெளிவரலாயின.
இந்திய தொல்லியல் அளவீட்டு துறை அலுவலர்கள் இக்கல்வெட்டுகளை பிரத்யேக காகிதத்தில் மையொற்றி படிகளாக மாற்றி ஆய்வுக்குப் பயனுள்ள வகையில் ஆவணப்படுத்தும் பணியில் 1890 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு படி எடுக்கப்படும் பிரத்யேக காகிதங்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை.

சேகரித்த கல்வெட்டுகளைப் படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுத்துவடிவமாகவும், பதிப்பிக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டன.
பல நூல்கள் கல்வெட்டியல் துறை தொடர் வெளியீடுகளாகவே (Publication Series) பிரசுரிக்கப்பட்டன.
இந்திய கல்வெட்டியல் ஆண்டு அறிக்கை (Annual Report on Indian Epigraphy):-
1887 முதல் 1995-1996 ஆம் ஆண்டு வரையிலான கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் பற்றிய அறிக்கை.
மிகச் சுருக்கமான செய்திகள் ஆங்கிலத்தில் உள்ளது.
எபிகிராபியா இண்டிகா (Epigraphia Indica):-
1882 – 1977 ஆண்டுகளுக்கிடையே பதிப்பிக்கப்பட்ட ஆவணம்.
1892 முதல் 1920 வரை இது காலாண்டு இதழாக வெளி வந்தது.
எட்டு பாகங்கள் (parts) ஒரு தொகுதியாக்கபட்டன (volumes).
இதுவரை 42 தொகுதிகள் வெளிவந்துள்ளன.
கார்பஸ் இன்ஸ்கிருப்ஸ்னம் இண்டிகேரம் (Corpus Inscriptionum Indicarum):
பல வம்சங்களைப்பற்றிய கல்வெட்டுகள் இந்த பதிப்புத் தொடரில் வெளியிடப்பட்டன.
தென்னிந்திய கல்வெட்டுகள் (South Indian Inscriptions (S.I.I.):
தென்னிந்திய கல்வெட்டுகளின் ஆவணங்களுக்காக ஒரு தனி தொடர் பதிப்பு 1890 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (Department of Archaeology Government of Tamil Nadu) :-
1961 இல் ஆரம்பிக்கப்பட்டது. கல்வெட்டுகளை நகலெடுத்தல், கல்வெட்டுகளில் உள்ளவற்றை அச்சிடுதல், மற்றும் புத்தக வடிவில் அவற்றை வெளியிடுதல் என்பது இந்நிறுவனத்தின் பணிகளுள் ஒன்று.
1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டின் கல்வெட்டுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் மொழிவாரியாகவும், அகரவரிசைப்படியும், எண்ணிக்கையின்படியும் வகைப்படுத்தியதில் தமிழ் நாடு இந்திய மாநிலங்களுள் முதலிடத்தில் உள்ளது.
இந்திய மாநிலங்களிலேயே தமிழ் நாட்டில்தான் அதிக அளவில் கல்வெட்டுகள் உள்ளன என்று இந்தக் கணக்கெடுப்பின் மூலம் நாம் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
1966 ஆம் ஆன்டிலேயே தமிழில் 20000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மற்ற மொழிக் கல்வெட்டுகள்:-
கன்னடம் 10,600;
சம்ஸ்கிருதம் 7,500;
தெலுங்கு 4500.
(ஆதாரம்: Journal of the Epigraphical Society of India Volume 19 : 1993).
இந்தியாவில் இதுவரை 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டி.சி. சர்கார் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1887 முதல், சுமார் நானூறு ஆண்டுகளாக, கண்டறியப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களின் படிகள் இந்த இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் மைசூர் அலுவலகத்தில் உள்ளன.
இங்கு உள்ள ஒரு லட்சம் கல்வெட்டில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன.
இக்கல்வெட்டுகள் இந்திய வரலாற்றை, குறிப்பாக தமிழகத்தின் தொன்மை வரலாற்றை எடுத்துரைக்கும் முதன்மை சான்றாகும்.
இவற்றுள் 1908ம் ஆண்டு வரை கண்டறியப்பட்ட படிகள் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
1909ம் ஆண்டுக்கு பின் கண்டறியப்பட்ட கல்வெட்டுப்படிகள் இன்னும் முழுமையாக பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படவில்லை.
டாக்டர் எ. சுப்பராயலு அவர்கள் தம் ஆய்வில் தமிழ்க் கல்வெட்டுகளை காலநிரல்படி பகுப்பாய்வு செய்து ஒரு அட்டவணையினை வெளியிட்டுள்ளார்.
கி.மு. 300 – கி.பி. 500-க்கு இடைப்பட்டவை  = 400;
கி.பி. 501 – கி.பி. 850-க்கு இடைப்பட்டவை = 900;
கி.பி. 851 – கி.பி. 1300-க்கு இடைப்பட்டவை = 19,000;
கி.பி. 1300 – கி.பி. 1600-க்கு இடைப்பட்டவை = 6,000;
கி.பி. 1600 – கி.பி. 1900-க்கு இடைப்பட்டவை = 2,000;
வெளிநாட்டில் கிடைத்த கல்வெட்டுகள் = 300.
இவற்றை ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மின்தரவாக்கம் (Digitize) செய்து கொள்வதற்கான முயற்சியை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மேற்கொண்டது.
2010 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள அனைத்து மொழிகளின் கல்வெட்டுகளையும் மின்தரவாக்கம் (டிஜிடைஸ்) செய்து ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய தொல்லியல் அளவீட்டு துறையுடன் (ஏ.எஸ்.ஐ.,) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தஞ்சை தமிழ் பல்கலை துணை வேந்தர் ராசேந்திரன், மைசூர் கல்வெட்டுப் பிரிவின் இயக்குனர் (பொறுப்பு) ரவிசங்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தமிழ் கல்வெட்டுக்கள் மட்டுமின்றி இந்நிறுவனத்தில் உள்ள அனைத்து மொழிக் கல்வெட்டுக்களையும் மின்தரவாக்கம் செய்யப்பட உள்ளன.
தமிழக அரசு இப்பணிக்காக தமிழ் பல்கலைக்கு 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியாவில் மைசூரில் மட்டுமே உள்ள கல்வெட்டுப்படிகள் இனி தஞ்சை தமிழ் பல்கலையிலும் இடம் பெறவும், அவற்றை ஆய்வாளர் கணினி தொழில் நுட்ப வசதியுடன் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதி செய்யும்.
சமீபத்தில் மைசூர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் 50 சதவீத கல்வெட்டுப் படிகள் பதிப்பிக்கப்படாமலேயே அழிந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2008- மார்ச்சில் மைசூர் தொல்லியல் அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது, அங்கு படி எடுக்கப்பட்டு பாதுகாப்பாக பல நூறு தமிழ் கல்வெட்டுகள் வீணாகப் போய் விட்டன.
அவற்றை மீண்டும் படி எடுக்க வேண்டும் எனில் அதன் மூல ஆதாரங்கள் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளை கோயில், குளம் எனத் தேடித் திரட்ட வேண்டும்.
இது மிகச் சிரமமான ஒன்று.
கல்வெட்டுக்களில் படி எடுக்கப்பட்டு மைசூர் அலுவலகத்தில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள பலவும், நூறு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படிகள் ஆகும்.
படி எடுக்கப்படும் தாள்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை.
இப்போது அவையும் வீணாகப் போகும் நிலை உருவாகி உள்ளது.
கல்வெட்டுகளைப் படிக்க முறையான கல்வெட்டியலாளர்களின் பற்றாக்குறை அதிகமாகி விட்டது.
இதை முன்கூட்டியே அறிந்தும் மைசூர் அலுவலகம் குறிப்பிட்ட காலத்தில் அந்த குறைகளை நிவர்த்தி செய்யத் தவறி விட்டது.
இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும் பாலானவை தமிழ் மொழியில் எழுதப்பட்டவை.
மற்றவை சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, உருது, தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் மலையாள மொழிகளில் எழுதப்பட்டவை.
இந்த மொழி கல்வெட்டுகள் பதிப்பிக்கும் கல்வெட்டாளர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் அதன் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதில், தமிழ் கல்வெட்டுகள் அதிகம் என்பதால் மற்ற மொழி கல்வெட்டுகளை விட, தமிழ் கல்வெட்டு படிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றும் கூட தமிழகத்தில் கல்வெட்டுகள் அவ்வப்போது கிடைத்து வருவதால், தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை கூடி வருகிறது.
இதனால், தமிழக வரலாறு மைசூரிலேயே முடங்கும் சூழல் நிலவுகிறது.
மைசூர் கல்வெட்டு ஆவணங்கள் மைசூருவில் உள்ள, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆவணங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதால், தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கல்வெட்டு ஆய்வுகளில், இது வரை, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், மைபடிகளாகவும், எழுத்துப்படிகளாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
அவை, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவற்றை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, மத்திய அரசும் நியமிக்கவில்லை.
அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப்படிகள், தமிழ் தெரியாத, தமிழ் கலாச்சாரத்தின் மீது வெறுப்பு உடைய அலுவலர்களால் அழிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
மத்திய தொல்லியல் துறை சார்பில், மஹாராஷ்டிரா முதல் கன்னியாகுமரி வரை, கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள், நேரடியான எழுத்துப்படிகளாகவும், மை படிகளாகவும் சேகரிக்கப்பட்டன.
அவற்றை, ஜி.எஸ்.கை என்ற, தலைமை கல்வெட்டு ஆய்வாளர் 1967 இல், மைசூருவில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தின், கல்வெட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாறு, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு சார்ந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன.
அப்போது, கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல, தற்போது இல்லை.
தமிழகம் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருவுக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர்.
மேலும், எதைக்கேட்டாலும், அவை, ஏற்கெனவே காணாமல் போய்விட்டன என்கின்றனர்.
தொல்லியல் துறை படியெடுத்த கல்வெட்டு செய்திகளை, புத்தகமாக பதிப்பித்து, தொல்லியல் துறை நூலகத்தில் வைக்க வேண்டும்.
தமிழக ஆய்வாளர்கள் பார்க்க வசதியாக, சென்னையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவுக்கு, அந்த ஆவணங்களை அனுப்பி, பராமரிக்க வேண்டும்.
தமிழக அரசின் முயற்சிகள்:-
மைசூர் அலுவலகத்தில் ஏற்கெனவே படிகளாக எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை படித்து தொகுக்க உதவும்படி தமிழ்நாடு தொல்லியல் ஆய்வகத்திற்கு (Tamilnadu State Dept of Archaeology -TNSDA) உத்தரவிட்டு சில லட்சங்களை ஒதுக்கியது தமிழக அரசு.
அப்போது TNSDAயின் கமிஷனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரின் சொந்த முயற்சியினால் ஒரு வருடத்திற்கான கல்வெட்டுக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டது.
ஆனால், ஒரு வருடத்தில் தொகுக்கப்பட்டதை வெளியிட ASI, ஐந்து வருடம் எடுத்து கொண்டது.
இதுவும் முடியாமல் அடுத்த கட்டமாக, ஏற்கனவே படி எடுக்கப்பட்ட சுமார் 50,000 தமிழ் கல்வெட்டுகளை டிஜிட்டல் (Digitalistion) ஒளிப்பதிவு செய்து பாதுகாக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு வேறு வழியின்றி மைசூர் அலுவலகம் சம்மதித்தது.
இதற்காக தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துடன் மைசூர் கல்வெட்டியல் தலைமையகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.
இதற்காக ஒதுக்கப்பட்ட ஒருவருட காலத்தில், கிழிந்து போன படிகளை ஒட்டுவதிலேயே எட்டு மாதமானது.
இதனால், தமிழக அரசு ஒதுக்கிய 25 லட்சத்தில் ரூபாய் 22 லட்சங்களை தமிழ் பல்கலைகழகம் திருப்பி அளிக்க வேண்டியதாயிற்று.
தொல்லியல் துறையின் இயக்குநர் உதயசந்திரன்:-
உதயசந்திரன் பள்ளிக்கல்வித் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத் துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார்.
கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார்.
புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார்.
பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட உதயசந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவார்கள்.
அறிஞர் ஐராவதம் மகாதேவன் இல்லாவிட்டாலும், பூங்குன்றன், பேராசிரியர் வை.சுப்பறாயலு, பேராசிரியர் இராஜவேலு மற்றும் கலாநிதி இரகுபதி , பத்மாவதி, புலவர் ராசு என பல அறிஞர் பெருமக்கள் தமிழகத்தில் உள்ளனர்.
தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிற அவர் மைசூர் கல்வெட்டு ஆவண அழிப்பை, தடுத்து நிறுத்தி, தமிழகம் மீட்டு, பிரசுரம் செய்ய, தமிழக அரசின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Friday, 31 January 2020

பெங்களூர் எங்களூர் - 2










பெங்களூர் எங்களூர் -2

 பெங்களூர் நகரை நிர்மாணித்தவர் கேம்பே கவுடா (1526 - 1574) என்பவர்.

 இவர் உண்மையில் வன்னியக் கவுண்டர் ஆவார்.

 கன்னடருக்கு தமிழர் என்று சொல்லவராமல் திகிளர் என்றுதான் கூறுவார்கள்.
 கேம்பே கவுடா ஒரு திகிளப் பள்ளி என்று குறிக்கப்படுகிறார்.

 இவர் பூர்வீகம் காஞ்சிபுரம்.
அங்கிருந்து 'முரசு ஒக்கல்' எனும் குடியினர் கன்னடநாட்டிற்கு போய் குடியமர்ந்தனர்.
 இவர்கள் இன்று முரசு ஒக்கலிகர் என்று அறியப்படுகின்றனர்.
 இவர்களின் குலதெய்வம் காஞ்சி காமாட்சி.

 மேலும் ஒரு சான்று உள்ளது.
கேம்பே கவுடா வம்சாவழியான மும்முடி தம்மபூப்பா என்பவர் "ராஜேந்திர சோழ சரித்தா" எனும் நூல் எழுதியுள்ளார்.
 [Mysore gazetteer, Vol 5, page 45, 1930.]

 தென் கர்நாடகத்தின் ஆதிகுடிகளான தமிழர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழை மறந்துவிட்டனர்.
 இவர்கள் திகிளர் என்றே இப்போது அழைக்கபடுகின்றனர்.
 பெங்களூரில் கொண்டாடப்படும் பச்சைக் கரகத் திருவிழா இவர்கள் நடத்துவதே ஆகும்.

 கைகளில் வாளேந்தி "பவளமலை எங்கள் மலைநாடே!" என்று தமிழில் பாடியவாறே பச்சைக் கரகத்தை தலையில் ஏந்துவர்.

 1930 இல் பெங்களூர் மாவட்ட மக்கட்தொகை 3,07,124 ஆகும்.
 இதில் திகிளர் 31,644 பேர்.

 (பெங்களூர் எங்களூர் -1 இல் உள்ள வரைபடத்தை ஒருமுறை பார்க்கவும்)

 1799 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு ஆங்கிலேயர் கைக்கு பெங்களூர் வந்தது முதல் 1947 வரை மைசூர் அரசுக்கும் இந்த பெங்களூர் மைய நகருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 மைசூர் அரச அதிகாரம் புறநகர் பகுதியான பேட்டை வரை மட்டுமே.
 மற்றபடி பெங்களூர் சென்னை மாகாணத்தின் கீழ்ஆங்கிலேயரின் நேரடி நிர்வாகத்தில் இருந்தது.

 ஆம். 1809 இல் ஆங்கிலேயர்களது படைமுகாமாக பெங்களூர் தண்டு பகுதி (cantonment) இருந்தது.

 1815 இல் மன்னர் எழுத்துப் பூர்வமாக இதை ஆங்கிலேய தூதமைச்சருக்கு தனிச் சொத்தாகக் கொடுத்து வரிவசூலிலும் தலையிட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார் (release deed).

 அவ்வாறு மைசூர் மன்னர் கொடுத்தது அன்று 22 ஊர்களாக இருந்தது.
 அவை
அலசூர்,
ஆடுகோடி,
செல்லகட்டா,
தொம்மளூர்,
உப்பாரப்பள்ளி,
குப்பசந்திரா,
மாவள்ளி,
குறமங்கலம்,
நீலசந்திரா,
பேடரள்ளி,
சொன்னேனள்ளி
ஆகியனவாகும்.

 1881 இல் பெங்களூர் கோட்டையை மட்டும் ஆங்கிலேயர் மன்னருக்கு கொடுத்தனர்.
 இதே ஆண்டில் cantonment என்று அழைக்கப்பட்டதை மாற்றி civil and military என்று பெயர் மாற்றினர்.

 1906 ஆம் ஆண்டு தற்போது "இந்திய அறிவியற்கூடம் (Indian institute of science)" இருக்கும் நிலமும் சேர்க்கப்பட்டு ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிப்பகுதி பரப்பளவு 13.54 சதுரக்கல் (சதுரமைல்) என விரிந்தது.

 ஆங்கிலேயர் தமது நிர்வாகப் பகுதியை ஆறு பிரிவுகளாக பகுத்திருந்தனர்.
அவை
1.அலசூர்
2.தென்பகுதி
3.கிழக்கு பொது அங்காடி (east general bazaar)
4.மேற்கு பொது அங்காடி (west general bazaar)
5.கிளீவ்லன்ட் நகர்
6. மேட்டுத்திடல் (high ground)

 அதாவது இன்றைய பெங்களூரின்
வடக்கே பாரதி நகர்,
நடுவில் சிவன்செட்டி வட்டம்,
தெற்கே நீலசந்திரா மற்றும் ஆடுகோடி
கிழக்கே அலசூர் உட்பட்ட நிலப்பரப்பு.

 இதில் தற்போதைய
தொம்மளூர்,
கப்பன் பூங்கா,
தூதமைச்சரக (residency) சாலை,
 தலைமை அஞ்சலகம்,
சூளை,
ரிச்மண்ட் நகர்,
ரசல் அங்காடி,
அணிவகுப்பு திடல் (parade ground),
 தூய யோவான் குன்று,
 கிளீவ்லேண்ட் நகர்,
காக்ஸ் நகர்,
புகையிலைத் தொழிலகம்,
ஃபிரேசர் நகர் (பாப்பிரெட்டி பாளையம்),
பிளாக் பள்ளி,
பெங்களூர் கிழக்கு (Bangalore east),
ரிச்சர்ட் நகர்
முதலியன அடங்கும்.

 மைசூர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பேட்டை பகுதி 11 சதுரக்கல் பரப்பளவு மட்டுமே இருந்தது.
 இதில் கோட்டை, சிக்கபேட்டை, தொட்டபேட்டை, சாமராஜப் பேட்டை, சங்கரபுரம், பசவன்குடி, சேசாத்திரிபுரம், மல்லேஸ்வரம், அரண்மனை ஆகியன இருந்தன.

 1947 வரை தண்டுப் பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் இடையில் 6 சுங்கச்சாவடிகள் இருந்தன.
 அவை இன்றுள்ள
கண்டீரவா விளையாட்டரங்கம் எதிரிலும்
 ஓசூர் சாலையில் உள்ள கிறித்துவர் கல்லறைக்கு அருகிலும்
ராமநாரயண் செல்லாராம் கல்லூரி மூலையிலும்
 பழைய சென்னை சாலையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை பக்கத்திலும்
 கன்னிங்காம் சாலையிலும்
 தொம்மளூரிலும்
தலைமை அஞ்சலகம் அருகிலும்
 இருந்தன.

  1948 வரை தண்டு பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் தனித்தனி நீதிமன்றங்கள் இருந்துள்ளன.
 தண்டுப் பகுதிக்கான சிறை வேலூர் சிறைதான்.

 1948 வரை இப்பகுதியில் பள்ளிகளில் கன்னடம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.

 1948 இல் மன்னர் வருகை தந்தபோது தண்டு மக்கள் மைசூர் அரசரை முதன்முதலாக பார்த்தனர்.

 1950 இல் தான் தண்டு நகராட்சியும் பேட்டை நகராட்சி இணைக்கப்பட்டு பெங்களூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
 அப்போதும் தமிழரே பெரும்பான்மையாக இருந்தனர்.

 1956 வரை இப்பகுதி கல்வி நிர்வாகம் சென்னை பல்கலை மற்றும் சென்னை அரசிடம் இருந்து வந்தது.

 1956 இல் எந்த பொருத்தமும் இல்லாமல் பெங்களூர் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.
 அப்போது அந்த மாநாகராட்சி எல்லைக்கும் தமிழக இல்லைக்கும் இடையே 4 கிலோமீட்டர் தொலைவுதான் இருந்தது.

 நன்றி: அறிஞர் குணா அவர்கள் எழுதிய
விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)






Wednesday, 29 January 2020

காத்திருக்கும் தங்கம் - 1

காத்திருக்கும் தங்கம் -1

-------
காலம்: கி.பி. 1790

 "நமது 33 வது ரெஜிமண்ட் திப்பு சுல்தானோடு போரிட நேரும் என்று நினைக்கிறாயா?"

 "ஆம். நிச்சயம். அதோ அங்கே பார்.
இவர்கள்தான் அதற்கு காரணம்"

 "என்ன?! ஆற்று மணலை அள்ளி வாணாலியில் போட்டு சலித்துக் கொண்டிருக்கும் இவர்களா இதற்கு காரணம்?!"

 "ஆம் இவர்களுக்கு அரிப்பறையர் என்று பெயர்.
 இவர்கள் ஆற்று மணலைப் பார்த்தே அதில் தங்கத் துகள்கள் இருக்குமா என்று கணித்து அதை சலித்து எடுக்கும் திறமை உள்ளவர்கள்.
 இவர்களைப் பார்த்துதான் நம் தளபதி இந்த பகுதியில் தங்கம் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இங்கிலாத்திற்கு அறிக்கை அளித்துள்ளார்.
 கட்டாயம் திப்புவை வீழ்த்தி தங்கத்தை தோண்டி எடுக்காமல் விடமாட்டார்கள்"

--------------
காலம்: கி.பி. 1802

 "இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு திப்பு சுல்தானை தோற்கடித்தோம்.
 மகாராஜா நீங்கள் ராஜாவாகவே இருக்க வேண்டுமானால் கோலார் தங்க வயல் எங்களுக்கு வேண்டும்.
 உங்களுக்கு 5% கமிசன் கொடுத்து விடுகிறோம்"

 "சரி சரி 7% கொடுத்துவிடலாம்.
நாங்கள் ஆங்கிலேயர்.
வாக்கு தவறமாட்டோம்.
 உங்கள் மைசூர் ராஜ்யத்தின் மொத்த வருவாயில் இது மூன்றில் ஒரு பங்காக இருக்கும்"

-----------
காலம்: 1860

 "கிடைத்துவிட்டது! ஆகா கிடைத்துவிட்டது"

 "என்ன கேப்டன் பிளம்மர் என்ன கிடைத்துவிட்டது"

 "மைசூர் சுரங்கத்திற்கு மேற்கே 173 அடி ஆழத்தில் தங்க மலையே இருக்கிறது.
 ஏற்கனவே சோழர்கள் காலத்தில் வெட்டி எடுத்த தடத்தை வைத்து கண்டுபிடித்து விட்டேன்"

 "அப்படியா?! அது என்ன தடம்"

 "ஆம். வட ஆற்காடு மாவட்டத்தின் ஜவ்வாது மலை மீது இருந்து பார்த்தேன்.
 கோலாரிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு பாதை மலைகளுக்கு நடுவே தமிழ் பகுதி வரை வருவது தெரிகிறது"

 "எனதருமை பிளம்மர்!
 உன் விடாமுயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது.
 இனி இந்த தற்காலிகச் சுரங்கம் உலகமே அறியும் இடமாக ஆகப்போகிறது"

--------
காலம்: கி.பி. 1880

 "பூமிக்கடியில இந்த தங்க மலைத் தொடர் (lode) வடக்கு நோக்கி நீள்கிறது.
 வெட்டி எடுத்தால் உலகத்தின் மொத்த தங்க தேவையையே பூர்த்தி செய்யலாம்"

 "நல்லது மிஸ்டர் ஆர்.பி.பூட்!
 நம் நாட்டிலிருந்து வல்லுநர்களை வரவழைத்து முழுவீச்சில் சுரங்கம் தோண்டிவிட வேண்டியதுதான்.
 நீ என்ன சொல்கிறார் ஹெய்டன்?!"

 "நாம் முதலில் மதராஸ் மாகாணத்தில் இருந்து தமிழர்களை வரவழைக்கலாம்.
 அவர்கள்தான் உலோக தொழில்நுட்பத்தில் உலகிற்கே முன்னோடி.
 இப்போது கடும் பஞ்சம் நிலவுவதால் குறைந்த கூலிக்கு அழைத்து வரலாம்.
 இங்கே ஏற்கனவே கால்வாசி தமிழ் பேசுபவர்களும் இருக்கிறார்கள்.
 குறிப்பாக சேலத்தில் கட்டிப் பறையர் என்றொரு சாதி உண்டு.
அவர்கள் செய்த தனித்துவமான எஃகு மூலம் செய்யப்பட்ட டமாஸ்கஸ் வாளைத்தான் அலெக்சாண்டர் வைத்திருந்தார் என்று சொன்னால் நம்புவீர்களா?!"

---------
 காலம்: கி.பி. 1905

 "இந்தியாவிலேயே முதன்முதலாக மின்சார உற்பத்தி செய்த சாதனைக்குப் பிறகு
 இந்த ஆண்டு நாம் 27 டன் தங்கத்தை எடுத்துள்ளோம்.
 இப்போது கோலார் உலகிலேயே பெரிய தங்கச் சுரங்கம் என்ற பெயர்பெற்றுள்ளது.
 இது பின்னாட்களில் மாறலாம்.
 ஆனால் ஓராண்டில் இவ்வளவு டன் தங்கம் வேறு எங்கும் கிடைக்குமா என்று கேட்டால் அதற்கு வாய்ப்பில்லை என்றுதான் கூறவேண்டும்.
 நமது கம்பனியான ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் அதன் பொற்காலத்தில் இருக்கிறது"

 "இனி நம் திட்டங்கள் என்ன?"

 "பத்தாண்டுகள் முன்பு மைசூர் அரசிடம் பேசி சுரங்கங்களுக்கு தனி இரயில் பாதை போட்டு மெட்ராஸ் பெங்களூர் ரயில் பாதையுடன் இணைத்தோம்.
 அதிலிருந்து நமக்கு அமோக வளர்ச்சிதான்!
 இதுவரை இங்கே ஆண்கள் மட்டும் இருந்த காரணாத்தால் கிளப், விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்கு திடல் என கட்டினோம்.
 ஆனால் தற்போது 100 ஆங்கிலேயக் குடும்பங்கள் குடியேறியுள்ளன.
 எனவே நமது பிள்ளைகளுக்கு ஒரு சிறிய ஆங்கில பள்ளியும்
 வேலைசெய்யும் தொழிலாளர்களுக்காக ஒரு மருத்துவமனையும் கட்டவுள்ளோம்"

 "இது எத்தனை ஆண்டுகள் தொடரும்?!"

 "கணிப்புப்படி இன்னும் 50 ஆண்டுகள் வரை இதில் தங்கம் கிடைக்கும்.
 ஆனாலும் விரிவாக்க ஆய்வுகள் நடந்துவருகின்றன."

------

 காலம்: 1920

 "கோலாரின் மக்கட்தொகை ஒரு லட்சத்தை நெருங்கவுள்ளது.
 இருபத்தி நாலாயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.
 கோலார் சுரங்கம் 1200 அடி ஆழம் வரை சென்றுவிட்டது.
 இதுவே உலகின் முதலாவது ஆழமான சுரங்கம்.
 உலகப் போர் காரணமாக தங்கத்தின் விலை மேன்மேலும் கூட்டிக்கொண்டே போகுமாம்.
 இதெல்லாம் தெரியுமா உனக்கு?!"

 "இதில் என்ன பெருமை முருகேசா?!
 இங்கே 400 ஆங்கிலேயர்கள் 600 ஆங்கிலோ இந்தியன்கள் பதவியில் இருக்கிறார்கள்.
 இதுபோக 23000 பேர் தொழிலாளர்கள்.
 பெரும்பாலும் தமிழர்கள்.
 அதிலும் குறிப்பாக நம் போன்ற பறையர்கள்.
 நமக்கு மிஞ்சியது என்ன?!
கூரைவேய்ந்த லைன் வீடுகளில்தான் வசிக்கிறோம்.
 15 மணிநேரம் வேலை.
நாட்டிலேயே முதன்முதலாக மின்சாரம் இங்கே வந்தது.
 30 ஆண்டுகள் தாண்டியும் நம் வீடுகளில் இன்னமும் மின்சாரம் வரவில்லையே!"

-------
காலம்: 1953

 "கோலாரில் காலம் முடிந்துவிட்டது.
முதன்முதலாக உரிகையம் சுரங்கத்தை மூடிவிட்டனர்.
 இனி படிப்படியாக எல்லாவற்றையும் மூடிவிடுவார்களாம்.
 டெய்லர் கம்பனி வெளியேறவுள்ளது.
 இந்த சுரங்கத்தை நாட்டுடைமை ஆக்கி அரசே எடுத்துக் கொள்ளுமாம்"

 "ஆம். இந்திய அரசு எடுத்துக் கொள்ளுமாம்.
 ஆங்கிலேயர் மைசூர் அரசுக்கு கமிசனாவது கொடுத்தனர்.
 இனி கர்நாடக அரசுக்கு சல்லிக்காசு கொடுக்காது மத்திய அரசு என்று கூறுகிறார்கள்".

 "என்றால் மத்திய அரசும் மாநில அரசும் சுரங்கத்தை நம்பி வாழும் ஒரு லட்சம் பேரை கதியில்லாமல் ஆக்கப் போகிறார்கள் என்று சொல்"

--------

காலம்: 1983

 "கன்னடத்தை கட்டாயமாக்கும் கோகாக் அறிக்கைக்கு கோலார் தமிழர்கள் எதிர்ப்பா?!
 
 "ஓகோ! அவ்வளவு திமிராகி விட்டதா?!"

 "அதற்கு தக்க பாடம் கற்றுக்கொண்டனர்.
 தமிழில் கல்வி வேண்டி நடந்த போராடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரைக் கொலை செய்தாயிற்று"

"ஹா! ஹா! ஹா!"

 "மாரிக்குப்பம் பகுதியில் தமிழர்கள் ரயில் நிலையத்தையும் அஞ்சல் அலுவலகத்தையும் கொளுத்திவிட்டனர்"

 "என்ன?!"

"இனி அவர்கள் அஞ்சலகமே இல்லாமல் அல்லாட வேண்டியதுதான்"

 "தங்கவயலை விரைவில் மூடிவிட்டால் இவர்கள் கொட்டம் அடங்கிவிடும்"

-------------
 காலம்: 1989

 " என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் நடராஜன் ஐயர்?!
கோலாரில் ஒரு கிராம் தங்கம் எடுக்க 668 ரூபாய் ஆகிறதா?!
பம்பாயில் ஒரு கிராம் தங்கமே 350 ரூபாய்தானே?!"

 "ஆம். 1960 இல் உற்பத்தி செலவு கிராமுக்கு 12 ரூபாய்தான்.
 1972 இல் 33 ரூபாய்.
 தற்போது தங்கம் கிடைப்பது சிக்கலாகவும் அப்படியே கிடைத்தாலும் தரம் குறைந்ததாகவும் இருக்கிறது.
 அதாவது நாம் வெட்டிவரும் தங்கமலை ஆழத்தை நோக்கி செல்கிறது"

 "என்றால் இதை மூடிவிடலாமா?!"

 "மூடிவிடலாம்தான். ஆனால் இதை நம்பியிருக்கும் பத்தாயிரம் தொழிலாளருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன பதில் சொல்வது?
 நூறு ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துவரும் அவர்களை எங்கே போகச் சொல்வது?
 ஆழ்சுரங்கம் வெட்டுதல் மற்றும் குடைந்து வழி அமைத்தல் ஆகியவற்றில் இவர்கள் திறமை வேறு எவருக்கும் வராது"

 "அதெல்லாம் கவலை இல்லை.
அவர்கள் வந்தேறிகள்.
 இதை நடத்தி லாபம் வந்தாலும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது.
 அதனால்தான் இவர்களுக்கு மாநில மின்துறை கூட சலுகை விலையில் மின்சாரம் வழங்குவது கிடையாது.
 தொழிற்சங்க தலைவரை கூப்பிட்டு இவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று எழுதித் தரச்சொல்லி
 ஏதோ பெயருக்கு மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தி சிலபேருக்கு மாற்று வேலை வழங்கிவிட்டு அப்படியே கைகழுவி விடலாம்"

 "ஐயா! என்னால் அப்படி முறைகேடாக செயல்பட முடியாது"

 "நீங்கள் செய்துதான் தீரவேண்டும்"

 "என்னை வற்புறுத்தினால் எனது சுரங்க தொழில்நுட்ப இயக்குநர் பதவியை ராஜினாமா செய்வேன்"

 "நீங்கள் இப்படி பலமுறை மிரட்டி காரியத்தை சாதிக்கிறீர்கள்.
 உங்களைப் போன்ற சிலர்தான் எப்போதோ மூடியிருக்க வேண்டிய தங்கவயலை மூடவிடாமல் பெரும் தடையாக இருக்கிறீர்கள்.
 ஓ! நீங்களும் அந்த இனம்தானே!?"

 "ஐயா நான் நியாயத்தைப் பேசுகிறேன்.
சென்ற 4 ஆண்டுகளாக நான் நடத்திய ஆய்வுப்படி இதன் அருகிலேயே இன்னொரு தங்க மலை புதைந்து இருக்கிறது.
 அங்கே சுரங்கம் தோண்டினால் 6000 பேருக்காவது வேலை கொடுக்கலாம்.
 15 ஆண்டுகள் மூடுவது பற்றி யோசிக்க வேண்டாம்"

 "சரி! இது இறுதி வாய்ப்பு! தங்கம் இருந்தால் மட்டும் போதாது குறைந்த செலவில் எடுக்க முடியுமா என்பதுதான் முக்கியம்"

----------
காலம்: 1990
இடம்: அசோகா விடுதி, பெங்களூர்.

 "கனிம வளத்துறை செயலர் பி.கே. லாஹிரி அவர்களே!
 கோலார் சுரங்க தலைவர் ஐ.எம். ஆகா அவர்களே!
 மேலாண்மை இயக்குநர் பி.ஏ.கே. ஷெட்டிகர் அவர்களே!
 மற்றும் அதிகாரிகளே!
 நாம் இங்கு கூடியிருப்பது தங்கவயல் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கத்தான்"

 "அது பற்றி மேற்கொண்டு விவாதிக்க என்ன இருக்கிறது மிஸ்டர் ஐயர்?!"

 "நாம் வெட்டியெடுத்து தீர்ந்துபோன சாம்பியன் படிவத் தொடர்க்கு கீழே 3000 அடி ஆழத்தில் 200 கிலோ தங்கம் தரவல்ல மேலும் ஒரு தங்க மலை இருப்பது பற்றி நான் கூறியபோது ஆழம் அதிகம் என்று காரணம் காட்டி  நீங்கள் மறுத்துவிட்டீர்கள்.
அதனால் தற்போது ஆழம் குறைந்த இடத்தில் மேலும் இரண்டு தங்க படிவங்களை நான் கண்டறிந்துள்ளேன்.
 இங்கே Shallow depth mining செய்யலாம்"

 "குறைந்த ஆழம் என்றால் செலவு குறைவு எனவே யோசிக்கலாம்.
கூறுங்கள் பார்ப்போம்"

 "மைசூர் சுரங்கப் பகுதியில் இருந்து நந்திதுர்க்க சுரங்கப் பகுதிவரை குறைந்த ஆழத்தில் தங்க படிவத்தொடரின் கிளைகள் உள்ளன"

 "குறைந்த செலவு என்கிற நமது கொள்கை அதற்கு பொருந்துமா?!"

 "இதற்குப் பொருத்தமாக இருப்பது மைசூர் சுரங்கத்தில் உள்ள பல தங்கப் படிவத் தொடர்களில் ஒன்றான பிரவுன் படிவத்தொடர்.
 இது அங்கு புதைந்துள்ள தங்கமலையின் அடிப்பரப்பு வரை செல்கிறது.
 diamond drilling செய்து ஆராய்ந்தால் இதை உறுதிசெய்யலாம்"

 "சரி இரண்டாவது?"

 "இரண்டாவதுதான் மிக முக்கியமானது.
தற்போது வெட்டியெடுத்த அதே தங்கமலைத் தொடருக்கு இணையாக 400 அடி ஆழத்தில் தங்கம் இருக்கிறது.
 இது 5000 அடி வரை நீள்கிறது.
இங்கே ஒரு டன் தங்க கனிமம் எடுத்தால் அதில் குறைந்தபட்சம் 10 கிராம் முதல் அதிகபட்சம் 35 கிராம் வரை தங்கம் கிடைக்கும்.
 சுருக்கமாகக் கூறினால் 1934 இல் கோலார் இருந்த அதே நிலையை எட்டலாம்"

 "முதல் இடத்திற்கு அருகிலேயே என்றால் இதுபற்றி முதலில் யோசிக்கலாம்.
 எங்கே என்று தெளிவாக சொல்லமுடியுமா?"

 "McTaggart's Inclined shaft இருக்குமிடம் தொடங்கி அதாவது பாரத மண்வாரித் தொழிலகம் அமையப்போகிற இடத்தில் இருந்து கோல்கொண்டா Shaft இருக்கும் இடம்வரை ஏற்கனவே வெட்டியெடுத்த சாம்பியன் தங்கப்படிவ ஓட்டத்திற்கு இணையான போக்கில் இது இருக்கிறது.
 இதை வெட்டியெடுத்தால் 6000 பேருக்கு 15 ஆண்டுகள் வரை வேலைவாய்ப்பு கிடைக்கும்"

 "வேலைவாய்ப்பு பற்றி பிறகு பேசலாம்.
 இவை இரண்டுதானா?! மேலும் உண்டா?!"

 "குறைந்த ஆழத்தில் என்றால் மூன்றாவது ஒன்று உண்டு.
 ஆனால் அதை முழுமையாக ஆராயவில்லை.
 நந்திதுர்க்க சுரங்கத்தின் தலைப்பகுதி Oriental Lode எனும் படிவத்தொடர்.
 இதன் அடிப்பரப்பு கிளை அதாவது foot- wall தான் அந்த மூன்றாவது இடம்"

 "சரி. மிஸ்டர் லாகிரி!
இவர் கூறுவதை செய்யலாமா?"

 "அது வந்து...
எனக்கு இவர் சொல்வது ஒன்றுமே புரியவில்லை"

 "என்னது புரியவில்லையா?! நியாயப்படி நீங்கள்தான் இந்த இடத்தில் நின்று இதையெல்லாம் விளக்கவேண்டும்!
 மிஸ்டர் ஐயர் இதை எழுத்துப் பூர்வமாக விரிவாக சமர்ப்பிக்க முடியுமா?"

 "ஏன் அதை ஒரு வல்லுநர் குழு நியமித்து ஆராயப் போகிறீர்களா?"

 "சரியாகச் சொன்னீர்கள்"

"ஆக இங்கிருக்கும் யாருக்குமே நான் சொன்னது புரியவில்லை"

-------
(தொடரும்)









Friday, 15 February 2019

பெருமாள் சிலையா? இல்லை கன்னடர் திமிரா?

தமிழக மலையைப் பெயர்த்து
சாலை வளையங்களை தகர்த்து நீக்கி
வீடுகளை இடித்து சேதப்படுத்தி
போக்குவரத்தின் கழுத்தை நெறித்து
புதிய பாலமெல்லாம் கட்டிக்கொண்டு
சுங்கச்சாவடி இடையூறு இல்லாமல்
தமிழக காவல்துறை பாதுகாப்புடன்
தடையின்றி கர்நாடகம் நோக்கி
ஊர்ந்து செல்லும் இது

பெருமாள் சிலையா?
இல்லை கன்னடர் திமிரா?

Thursday, 4 October 2018

கன்னடர் கேட்ட கர்நாடகா

கன்னடர் கேட்ட கர்நாடகா

1928 இல் கன்னடர் ஒன்றுகூடி ஒரு குழுவை நியமித்தனர்.

அக்குழு கன்னடர் வாழும் பகுதிகளை கணக்கில் கொண்டு வரைபடம் ஒன்றைத் தயாரித்தனர்.

இந்தியாவை விட்டு வெள்ளையர் சென்றபிறகு தமக்கென மொழிவாரி மாநிலம் கேட்டுப் பெற இந்த முன்னெடுப்பைச் செய்தனர்.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைபடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் நீலகிரி, கொள்ளேகால், ஓசூர் ஆகியன சேர்க்கப்பட்டிருந்தன.
இதில் கொள்ளேகாலம் அவர்களிடம் போய்விட்டது.

Thursday, 22 February 2018

பெங்களூர் உதவி

பெங்களூர் உதவி

கன்னட வாரிசு கமலஹாசன் காவிரி பிரச்சனைக்கு "உக்காந்து பேசுவோம்" என்கிறார்.

அப்படி செய்தால் கன்னடன் ரத்தத்தைக் கூட தருவானாம்.

உதாரணத்திற்கு வெள்ளதின்போது பெங்களூரில் இருந்து உதவி வந்ததைக் கூறுகிறார்.

பெங்களூர் மக்கட்தொகையில் பாதிக்குமேல் தமிழர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் அனுப்பிய உதவியை கன்னடவன் அனுப்பியதாக மலஹாசன் திரிக்கிறார்.

மேலும் பெங்களூரில் இருந்து வந்து எவனோ இரத்ததானம் செய்ததை எல்லாம் சொல்லிக்காட்டுகிறார்.

கன்னடவரிடம் அடிப்படை மனிதநேயம் கூட கிடையாது என்பது பச்சிளம் தமிழ்க் குழந்தைக்கும் தெரியும்.

மராத்தியர் ரஜினியை "ஒரு நிமிசம் தலே சுத்திருச்சு" என கழுவி கழுவி ஊற்றியது போல
இங்கே பிறந்து வளர்ந்தாலும் தன் கன்னட இனத்திற்கு உண்மையாக இருக்கும் மலஹாசனை "உக்காந்து பேசுவோம்" என வைத்துசெய்ய வேண்டுகிறேன்.

#உக்காந்து_பேசுவோம்

Friday, 16 February 2018

கலவரம் வேண்டாம்! போர் செய்வோம்!

கலவரம் வேண்டாம்! போர் செய்வோம்!


 தமிழகத்திற்கு அடிப்படை உரிமைகளான அன்னம், தண்ணீர் கூட கிடைக்காத காரணம் என்ன?

 

 ஏனென்றால்,

தமிழனுக்கு என்னதான் சலுகை கொடுத்தாலும் உரிமைகள் வழங்கினாலும் நாட்டின் பிரதமர் பதவியே கொடுத்தாலும் இறுதியில் தமிழ்நாடு தனிநாடு ஆகத்தான் போகிறது.


 ஏனென்றால் நாம் தனித்தனமை கொண்டவர்கள்.

 இதுவே வரலாறு கூறும் பாடம்.


 அதனால்தான் நமக்கு எதையும் தரமாட்டார்கள்.


 இதுவரை ஹிந்திய ஜனநாயகத்தில் குறைந்தபட்ச கருணைகூட தமிழர்களுக்கு காட்டப்படாமைக்கு காரணம் இதுவே.


 நாம் சோற்றுக்கே போராடிக்கொண்டு இருந்தால் எப்படி விடுதலையைப் பற்றி சிந்திப்போம் என்று அவர்கள் கணக்கு போடுகிறார்கள்.


  அடிமைகளை அடக்கியாள பயன்பட்ட அந்த காலத்து உத்தி.


 நாம் தனிநாடு ஆவதை முடிந்த அளவு தாமதப்படுத்தி நமது இனத்தை நமது மண்ணை முடிந்தவரை உறிஞ்சிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.


 எனக்கு வெறும் காரணம் மட்டுமல்ல, இதற்கான

தீர்வும்கூட தெரியும்.


 இதற்கெல்லாம் தீர்வு ஆயுதம்.

அதனால் கிடைக்கும் விடுதலை.


 நம் கண்முன்னே உதாரணம் இருக்கிறது.

 நான் புலிகளைச் சொல்லவில்லை. 

வீரப்பனாரைச் சொல்கிறேன்.


 நான் கேட்கிறேன்,

வீரப்பனாரும் அவரது சொற்ப படையும் ஆயுதங்களும் நமக்கு பெற்றுத்தந்த நியாயத்தை 


 பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியவர்களும்

மேடை போட்டு வாய்கிழிய கத்தியவர்களும்

பத்திரிக்கைகளில் உணர்ச்சி பொங்க பேட்டி கொடுத்தவர்களும்

அலங்கார வார்த்தைகளில் தலையங்கம் தீட்டியவர்களும்

தலையணை தடிமனுக்கு புத்தகம் போட்டவர்களும்

வழக்கு நடத்தியவர்களும்

இணையம் நடத்துபவர்களும் 

பெற்றுத்தர முடிந்ததா?


ஜனநாயக வழி இங்கே தோற்கும் என்பதுதான் முன்பே தெரியுமே!


 நான் "அடிதடி செய்யுங்கள்" என்று கூறவில்லை.

அது கன்னடவன் வழி!


 கூட்டமாக சேர்ந்து ஒருவரை அடிப்பது நிராயுதபாணிகளை துன்புறுத்துவது இவையெல்லாம் நமக்கு வராது.


 நமக்கு கொலை செய்வதுதான் நன்றாக வரும்.


 தமிழனுக்கு கோபம் வராது வந்தால் பெருங்கோபம்தான் வரும்.


 எனவே ஆயுதம் எடுப்போம் கன்னடர் மீது போர் தொடுப்போம்.

இது புலிகள் வழி!


 தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் உலகையே அழிக்கசொன்னான் பாரதி.


 எட்டு கோடி தமிழருக்கு உணவைக் கொடுக்கும் தண்ணீரை மறுக்கின்ற 5கோடி கன்னடனை மொத்தமாக இனப்படுகொலை செய்வதில் என்ன பெரிய தவறு?


 சிங்களவனிடம் அடிவாங்கி 9 ஆண்டுகள் ஆகின்றன.


 ஆனால் கன்னடனிடம் அடிவாங்கி 27 ஆண்டுகள் ஆகின்றன.


 முதலில் கணக்கு தீர்க்கவேண்டியது இவர்களைத்தான். 

 

Sunday, 11 February 2018

வீரப்பனார் சின்னாம்பதி சம்பவத்திற்கு கொடுத்த பதிலடி

வீரப்பனார் சின்னாம்பதி சம்பவத்திற்கு கொடுத்த பதிலடி
(சித்தரிக்கப்பட்டது)
https://m.facebook.com/story.php?story_fbid=1151080341662284&id=100002809860739

Friday, 9 February 2018

கல்வெட்டுகளை அழிப்பதில் கன்னட, வடயிந்திய கூட்டு

ஆயிரக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

-------------------

மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்
வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்: பிப் 04,2018 01:08

சென்னை: மைசூரில் உள்ள, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆவணங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதால், தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கல்வெட்டு ஆய்வுகளில், இதுவரை, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், மை படிகளாகவும், எழுத்துப்படிகளாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

அவை, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அவற்றை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, மத்திய அரசு நியமிக்கவில்லை.

அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப் படிகள், தமிழ் தெரியாத, தமிழ் கலாசாரத்தின் மீது வெறுப்பு உடைய அலுவலர்களால் அழிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:
மத்திய தொல்லியல் துறை சார்பில், மஹாராஷ்டிரா முதல் கன்னியாகுமரி வரை, கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள், நேரடியான எழுத்துப்படிகளாகவும், மை படிகளாகவும் சேகரிக்கப்பட்டன.
அவற்றை, ஜி.எஸ்.கை என்ற, தலைமை கல்வெட்டு ஆய்வாளர், 1967ல், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தின், கல்வெட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாறு, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு சார்ந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன.

அப்போது, கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல, தற்போது இல்லை.
எங்களைப் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர்.

மேலும், எதைக்கேட்டாலும், அவை, ஏற்கனவே காணாமல் போய்விட்டன என்கின்றனர்.

தொல்லியல் துறை படியெடுத்த கல்வெட்டு செய்திகளை, புத்தகமாக பதிப்பித்து, தொல்லியல் துறை நுாலகத்தில் வைக்க வேண்டும்.
தமிழக ஆய்வாளர்கள் பார்க்க வசதியாக, சென்னையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவுக்கு, அந்த ஆவணங்களை அனுப்பி, பராமரிக்க வேண்டும்.

ஏற்கனவே, தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வு அறிக்கைகள் வெளிவராத நிலையில், இது போன்ற ஆவண அழிப்பில், துறை சார்ந்தோரே ஈடுபடுவதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்

மேலும் அறிய,
search கர்நாடகா நாசமாக்கும் தமிழ் கல்வெட்டுகள் வேட்டொலி

Sunday, 26 November 2017

தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம்! _ வி.சி.க (கர்நாடகா கிளை)

தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம்!
_ வி.சி.க (கர்நாடகா கிளை)

எனக்கு எதுவும் தெரியாது
_ திருமாவளவன்

திருமா: சென்னை நதிநீர் உரிமை மாநாடு நீரியல் வல்லுநர் விவசாய சங்கங்கள் என் தலைமையில் தோழமை கட்சிகளுடன் கூட்டுகிறோம்

நிருபர்: கர்நாடக விசிக காவிரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக படங்கள்
ஃபேஸ்புக் வாட்சப்பில் பரவுகிறதே
ரத்தத்தைக்கூட தருவோம் தண்ணீர் தரமாட்டோம் என்று

திருமா: கர்நாடகாவில் விடுதலை சிறுத்தைகள் இயங்குகிறார்கள்
அம்மாநில உரிமைகளுக்காக அவர்கள் குரல்கொடுத்திருக்கலாம்
நான் இது பற்றி விசாரித்து சொல்கிறேன்

நிருபர்: உங்களுக்கு தகவல் வரவில்லையா?

திருமா: இல்லை இதுவரை தகவல் இல்லை

VCK Karnataka Wing Protest Against Tamilnadu In Cauvery Issue - Iam Unaware
- Thol.Thirumavalavan

https://m.youtube.com/watch?v=SPtzbQ2_GE8

Red Pix 07.09.2016

காணொளி https://m.facebook.com/story.php?story_fbid=1090768697693449&id=100002809860739

Friday, 27 October 2017

காவிரி மேலாண்மை அமைக்கும் ஐடியா இல்லை - ஹிந்திய அரசு

தமிழகம்:-

எசமான்! இறுதி தீர்ப்புன்னீங்க! 

 அதுவந்து பல வருசம் ஆகுது.

மேலாண்மை வாரியம் அமைச்சு நடைமுறை படுத்துங்கையா!

காவிரி இல்லாம விவசாயம் பாதி அழிஞ்சுபோச்சு.

45 வருசமா வழக்கு நடக்குது ஆனா நியாயம் கெடைக்கல.

எங்கள ஏறெடுத்து பாருங்க எசமான்.

 பிள்ள குட்டியோட பட்டினியா கெடக்கோம்.


ஹிந்திய அரசு:-

இறுதி தீர்ப்பாவது?! 

நடுவர் மன்றமாவது?!

மேலாண்மையாவது?!

ஹெ ஹெ ஹெ ஹெ

போங்கடா போக்கத்த தமிழனுகளா!

காவிரிய தெறந்து விட்டா நாங்க எப்படி மணல் அள்ளி, மீத்தேன் எடுத்து, நிலக்கரி எடுத்து பணக்காரன் ஆகிறது?

எவ்வளவு திமிர் இருந்தா குடிக்க தண்ணி கேப்ப?!

டேய் சத்ரியா இவன் வீட்ட ரெண்டா ஒடச்சு வடக்க பாதி நீ எடுத்துக்க.


தமிழகம்: ?!!?


(செய்தி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் இல்லை 

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்)

Sunday, 24 September 2017

பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)

தமிழ் மொழியிலான கல்வெட்டுகள் அதிகமாக பழைய மைசூர் நாட்டின் எல்லை மாவட்டங்களான கோலார்,பெங்களூரூ,மைசூரின் பகுதிகளில்,
வட-தென் பெண்ணையாறுகளின் படுக்கை பிரிவுகள் தொடங்கி தென்மேற்காக காணப்படுகின்றன.

Source:Tribes and castes of Mysore (Vol.1) by L K A Iyer

நன்றி: சிவ் விஸ்வநாதன்.

Sunday, 17 September 2017

பெங்களூர், மைசூர், கோலார் சரியான வரைபடம் (தவறுக்கு வருத்தம்)

தவறுக்கு வருந்துகிறேன்.

8 May 2017 அன்று
பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே!
எனும் பதிவு இட்டிருந்தேன்.

அதில் Census of india 1901,
Volume 24, Part 1. (Page 446)
_ T. Ananda Row. தரவுகள் படி வரைந்த வரைபடத்தில் பிழை உள்ளது.

பெங்களூர் நகரம் மற்றும் மாவட்டம், கோலார் நகரம் மற்றும் மாவட்டம் குடியிருப்புகள் தமிழர் கையில் இருந்தது. 

ஆனால் மைசூர் நகரம் மட்டுமே தமிழர் கையில் இருந்தது. மைசூர் மாவட்ட நிலம் நம் கைவிட்டு போயிருந்தது.

படத்தில் பெங்களூர் மாவட்டத்தை விட்டுவிட்டு மைசூர் மாவட்டத்தை தமிழர் கையிலிருந்ததாக தவறாக வரைந்துவிட்டேன்.

கீழே உள்ளதே சரியான வரைபடம்.

பழுப்பு நிறமிட்ட பகுதிகளின் குடியிருப்பு நிலம் தமிழருக்கு சொந்தமாக இருந்தது.
(Residents were tamils)

Tuesday, 6 June 2017

கன்னடர்தான் வைரவிழா எடுக்கவேண்டும்

கன்னடர்தான் வைரவிழா எடுக்கவேண்டும்

'' நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்...
கபினி , ஹேமாவதி ,ஹேரங்கி அணைகள் மட்டுமல்ல..
இன்னும் எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கர்நாடகம் கட்டிக்கொள்ளட்டும்...
எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...
நாங்கள்  உங்களைப்போல ( அதாவது காங்கிரஸ்காரர்கள்) நிலச்சுவான்தார்கள் அல்ல... பாட்டாளிகள்...
கன்னடர்கள் எங்கள் திராவிட சகோதர்கள்...
நாங்கள் அவர்களோடு பேசி தமிழகத்துக்கு தேவையான நீரைப்பெற்றுக்கொள்வோம்... (அதாவது அணை கட்டியபிறகு) 
நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவேண்டாம்...'' 

[ 06.03.1970 அன்று தமிழக சட்டசபையில்   கருணாநிதி எதிர்க்கட்சித்தலைவரான கருத்திருமன் அவர்களுக்கு அளித்தபதில்.... ]

இதன்பிறகு கர்நாடகா விதிமுறைகளை மீறி அணைகளைக் கட்டிக்கொண்டது.
பிறகு விவசாய சங்கம் வழக்கு தொடுத்தது.
அதிலும் தமிழக அரசு சேர்ந்துகொண்டது.
பேச்சுவார்த்தைக்கு வர வழக்கை திரும்பப்பெற கர்நாடகா நிபந்தனை விதிக்க அதையும் செய்தது கருணாநிதி அரசு.

தண்ணீர் கிடைக்காமல் தமிழக விவசாயம் 40% அழிந்தது.
கர்நாடக விவசாய நிலம் இருமடங்கு ஆனது.
 
ஆக வைரவிழா எடுக்கவேண்டியவர்கள் தமிழர்கள் அல்ல.... கன்னடர்கள்...!

நன்றி: சரவணக்குமார்.

Monday, 8 May 2017

பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே!

பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே

படத்தில் 1901 ல் எடுக்கப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பு விபரம் காட்டப்பட்டுள்ளது.

இதில் மைசூர் நகரம், பெங்களூர் நகரம், பெங்களூர் மாவட்டம்,   கோலார் தங்கவயல் நகரம், கோலார் மாவட்டம், ஆகிய பகுதிகளில் தமிழர் குடியிருப்புகளே (Residence) கன்னடரை விட அதிகம்.

ஆனால் பிறகு குடிவந்த வந்தேறிகளால் மக்கட்தொகையில் தமிழர்கள் பின்தங்கிவிட்டனர்.
ஆனால் நிலம் தமிழர்கள் கையில்தான் இருந்தது.

அட்டவணையில் உள்ள விபரம் (பத்தாயிரத்தால் வகுக்கப்பட்டது)
கீழே,

மைசூர் நகரம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 371 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 97 ×10,000

பெங்களூர் நகரம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 841 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 54 ×10,000

பெங்களூர் மாவட்டம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 2365 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 1238 ×10,000

கோலார் தங்கவயல் (நகரம்) :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 1252 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 18 ×10,000

கோலார் மாவட்டம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 2341 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 146 ×10,000

மேற்கண்ட பகுதிகள் வரைபடத்தில் பழுப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.

சான்று : Census of india 1901,
Volume 24, Part 1. (Page 446)
_ T. Ananda Row.

கீழே ஒட்டுமொத்த மக்கட்தொகை அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கோலார் தங்கவயலில் மட்டுமே தமிழர் அதிகம் உள்ளனர்.

(கன்னடர், தமிழர் தவிர பிற இனங்களுக்கு இந்த பகுதியில் உரிமை இல்லை என்பதால் அவர்களை ஒப்பிடவில்லை)

---------------

17.09.2017

தவறுக்கு வருந்துகிறேன்.

மேற்கண்ட தரவுகள் படி வரைந்த வரைபடத்தில் பிழை உள்ளது.

பெங்களூர் நகரம் மற்றும் மாவட்டம் குடியிருப்புகள் தமிழர் கையில் இருந்தது. 

மைசூர் நகரம் மட்டுமே தமிழர் கையில் இருந்தது. மைசூர் மாவட்ட நிலம் நம் கைவிட்டு போயிருந்தது.

படத்தில் பெங்களூர் மாவட்டத்தை விட்டுவிட்டு மைசூர் மாவட்டத்தை தமிழர் கையிலிருந்ததாக தவறாக வரைந்துவிட்டேன்.

விரிவாக அறிய 

search பெங்களூர், மைசூர், கோலார் சரியான வரைபடம் (தவறுக்கு வருத்தம்) 

Wednesday, 3 May 2017

கன்னடன் சுட்டுக்கொன்ற தங்கத் தமிழர்

கன்னடன் சுட்டுக்கொன்ற தங்கத் தமிழர்

மறைக்கப்பட்ட தமிழினக் கொலைகளில் ஒன்று

1982 சூலை மாதம் கர்நாடகாவில் உள்ள தமிழர் தாய்நிலமான கோலாரில் தமிழ்மொழிக் கல்விக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு தமிழர், காணாமல் அடிக்கப்பட்ட 15 தமிழர்.

அறிக்கை: கர்நாடகத்தில் மொழிக் கொள்கை, கன்னடர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் கோகாக் குழுவின் பரிந்துரைகளை அப்போது முதல்வராக இருந்த மறைந்த குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசு 1982-ம் ஆண்டு அமல்படுத்தியது.

இதனால் மொழிச் சிறுபான்மையினருக்குத் தாய்மொழி கல்வி உரிமையைப் பறிக்க அப்போதைய அரசு முயன்றது.

இதை எதிர்த்து தமிழில் கல்வி கற்க உரிமை கோரி கர்நாடகத்தில் சிறுபான்மைத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் தங்க வயலில் இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாக நடந்தது.
அறவழியில் நடந்த இந்தப் போராட்டத்தை காவல்துறை அத்து மீறி அடக்க முயன்றது.
போராட்டம் நடத்திய தமிழர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர்.
காவல் துறையின் இந்த அட்டூழியத்தைப் பொறுத்துக்கொண்டு உரிமைக்காக தமிழர்கள் தொடர்ந்து போராடினர்.
இதனால் குண்டுராவ் அரசு தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை அடக்க உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தங்கவயலில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பால்ராஜ், உதயகுமார், மோகன், பரமேஸ்வரன் ஆகியோர் குண்டுபாய்ந்து இறந்தனர்.
பலர் காயம் அடைந்தனர்.
போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட பலர் இன்று வரை வீடு திரும்பவில்லை.
அவ்வாறு காணாமல் போனவர்கள் மட்டும் 15 பேர்.

நன்றி:-
http://kgftamils-mani.blogspot.in/2008/10/blog-post_9351.html?m=1

http://naamtamilar.org/கட்சி-செய்திகள்/பெரும்-எழுட்சியுடன்-நடை%E0%AE-3

(2 பிப்ரவரி 2014 அன்று முகநூல் பதிவாக இட்டது.)