Showing posts with label மாண்டியா. Show all posts
Showing posts with label மாண்டியா. Show all posts

Monday, 8 May 2017

பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே!

பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே

படத்தில் 1901 ல் எடுக்கப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பு விபரம் காட்டப்பட்டுள்ளது.

இதில் மைசூர் நகரம், பெங்களூர் நகரம், பெங்களூர் மாவட்டம்,   கோலார் தங்கவயல் நகரம், கோலார் மாவட்டம், ஆகிய பகுதிகளில் தமிழர் குடியிருப்புகளே (Residence) கன்னடரை விட அதிகம்.

ஆனால் பிறகு குடிவந்த வந்தேறிகளால் மக்கட்தொகையில் தமிழர்கள் பின்தங்கிவிட்டனர்.
ஆனால் நிலம் தமிழர்கள் கையில்தான் இருந்தது.

அட்டவணையில் உள்ள விபரம் (பத்தாயிரத்தால் வகுக்கப்பட்டது)
கீழே,

மைசூர் நகரம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 371 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 97 ×10,000

பெங்களூர் நகரம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 841 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 54 ×10,000

பெங்களூர் மாவட்டம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 2365 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 1238 ×10,000

கோலார் தங்கவயல் (நகரம்) :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 1252 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 18 ×10,000

கோலார் மாவட்டம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 2341 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 146 ×10,000

மேற்கண்ட பகுதிகள் வரைபடத்தில் பழுப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.

சான்று : Census of india 1901,
Volume 24, Part 1. (Page 446)
_ T. Ananda Row.

கீழே ஒட்டுமொத்த மக்கட்தொகை அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கோலார் தங்கவயலில் மட்டுமே தமிழர் அதிகம் உள்ளனர்.

(கன்னடர், தமிழர் தவிர பிற இனங்களுக்கு இந்த பகுதியில் உரிமை இல்லை என்பதால் அவர்களை ஒப்பிடவில்லை)

---------------

17.09.2017

தவறுக்கு வருந்துகிறேன்.

மேற்கண்ட தரவுகள் படி வரைந்த வரைபடத்தில் பிழை உள்ளது.

பெங்களூர் நகரம் மற்றும் மாவட்டம் குடியிருப்புகள் தமிழர் கையில் இருந்தது. 

மைசூர் நகரம் மட்டுமே தமிழர் கையில் இருந்தது. மைசூர் மாவட்ட நிலம் நம் கைவிட்டு போயிருந்தது.

படத்தில் பெங்களூர் மாவட்டத்தை விட்டுவிட்டு மைசூர் மாவட்டத்தை தமிழர் கையிலிருந்ததாக தவறாக வரைந்துவிட்டேன்.

விரிவாக அறிய 

search பெங்களூர், மைசூர், கோலார் சரியான வரைபடம் (தவறுக்கு வருத்தம்) 

Monday, 25 July 2016

மாண்டியாவும் தமிழும் மாலியமும்

மாண்டியாவும் தமிழும் மாலியமும்

தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பார்,

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் "மேல்கோட்டை" எனும் ஊரில் உள்ள "செல்லப்பிள்ளை" கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்றுவரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்துகொண்டு பிறகு சிந்திக்கவும்.

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி,
செல்லப்பிள்ளை செலுவநாராயணா ஆகி,
சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.)

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறியபிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்தபெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்தபோது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்.

அவர்கள் இன்றும் தமிழராகத்தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது.

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின.
ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்கவேண்டாம்.
நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்.
அதாவது வைணவ பார்ப்பனர்கள்.
அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்.

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே.

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது.
பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப்போராடியது.

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.