Sunday 30 November 2014

தமிழரொற்றுமை

டி.எம்.காதர் பாட்சா பாடுகிறார்.

"சுருளிமலை மேவும் சீலா - உனைத்
தோத்தரித்தேன் சுப்ரமண்ய வேலா - பசுந்
தோகை மயில் - மீதில் ஏறி
வாகுடனே - காத்(து) அருளும்
துய்யா முரு கைய்யா"

வெள்ளையர் காலத்தில் வாழ்ந்த இசுலாமியத் தமிழர் ஒருவர் கழுகுமலை முருகனுக்கு காவடி சிந்து பாடியுள்ளார்.

அடடா! இது எதற்கு பதிலடி தெரியுமா?

“சூர்க் கொன்ற ராவுத்தனே!
மாமயிலேறும் ராவுத்தனே”

என்று முருகனை ராவுத்தராக அருணகிரிநாதர் (15ம் நூற்றாண்டு) பாடியுள்ளாரே அதற்குத்தான்.

அசூரனைக் கொன்றால் தேவன்.
என்றால் சூரனைக் கொன்ற முருகன் அசூரனா?

ஆரியர் எல்லாரும் பிராமணர் என்றால் தமிழ்ப் பார்ப்பனன் ராவணன் மட்டும் எப்படி அரக்கன் ஆனான்?

மாற்றி எழுதியது யார்?

இந்தியாவுக்கு சுதந்திரம் கேட்ட தமிழ்ப் பார்ப்பனன் பாரதி அல்லாவைப் புகழ்ந்து பாட்டெழுதினான்..
இந்தியாவைப் பிளந்த முஸ்லீம் லீக்-ன் தலைவனான தமிழ் இசுலாமியன் காயிதே மில்லத் பாராளுமன்றத்தில் தமிழை இந்திய ஆட்சிமொழியாக்க வாக்கெடுப்பு நடத்தினான்.

பாலஸ்தீனப் பிரச்சனை இசுலாமியருக்கே சரியாகப் போய்ச்சேராத 70களில் தமிழ் இசுலாமியனை முந்திக்கொண்டு லண்டன் பத்திரிக்கைகளில் குரல் கொடுத்தான் சிறிசபாரத்னம்.
யாசர் அராபத் நேரில் அழைத்துப் பாராட்டி புலிப்போராளிகளுக்கு லெபனானில் பயிற்சி தருமளவு அவன் செயல்பாடு இருந்தது..
1995ல் யாழ் தமிழர்கள் படும் இன்னல் கண்டு மற்ற தமிழனை முந்திக்கொண்டு ஒரு இசுலாமியத் தமிழன் தீக்குளித்து ரத்னாவுக்கு பதிலடி கொடுத்தான்.

இசுலாமியத் தமிழனுக்கு முன்பே இசுலாமியனல்லாதத் தமிழன் மோடியை எதிர்த்திருப்பான்..
இசுலாமியனல்லாத தமிழனுக்கு முன்பே பீஜேவை ஒரு இசுலாமியத் தமிழன் எதிர்த்திருப்பான்.

தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து ஈழத்தடிகள் சிறைசென்றார்..
ஈழத்தில் சிங்களருடன் போர்புரிந்து தமிழகத்து இளைஞன் செங்கண்ணன் கரும்புலி மாவீரன் ஆகி ஈழத்தடிகளுக்கு பதிலடி கொடுத்தான்.

தமிழகத்தில் இருந்து ஈழம் சென்று சுப.முத்துக்குமார் களமாடி பிறகு தமிழகம் திரும்பினார்..
ஈழத்திலிருந்து நெப்போலியன் தமிழரசனுடன் களமாடி பிறகு ஈழம்திரும்பினார்.

புலி மாவீரர்கள் பொன்னம்மான், திலீபன், ரோய், தனு என பலருக்கு தமிழகத்தில் நினைவிடங்கள் உண்டு..
தமிழகத்து ஈகிகள் இருபெண்கள், ஒரு கரும்புலி உட்பட 14 மாவீரர் நினைவிடங்கள் ஈழத்தில் இருந்தன.

கேணல் அப்துல்லாவின் உண்மையான பெயர் நகுலராசா..
கேப்டன் ரகுவப்பாவின் உண்மைப்பெயர் ரகுமான்.

நம்பமுடியாதவை இன்னும்  பல உள்ளன.

பறையன் நடராசன் இந்தி எதிர்ப்பில் முதல் பலி ஆனான்.

ஈழத்துப் பார்ப்பனன் கணேசன் ஈழத்தில் பிரபாகரனுக்கு முன்பே ஆயுதம் ஏந்தினான்.

பள்ளருக்கு முதல்மரியாதை நடக்கும் மீனாட்சி கோவிலில் வைத்தியநாத ஐயர் ஆலயநுழைவு போராட்டம் நடத்தினார்.

ஆஸ்கர் மேடையில் ஒரு இசுலாமியன் தமிழ் பேசினான்.

பூலித்தேவன் காலாடிப்பள்ளனுக்கு நடுகல் நட்டான்.

தமிழ் பேசவும் எழுதவும் தெரியாத குஞ்சன் நாடார் கன்னியாகுமரியை தமிழகத்தில் இணைக்கும் முயற்சியில் உடல்வதை பட்டு உயிரை இழந்தார்.

மதுரையில் பிறந்த கண்ணகிக்கு மட்டக்களப்பில் அதிகமானக் கோவில்கள் உள்ளன.

ஈழத்து சைவருக்கு தலைமைத் திருத்தலம் தமிழகத்திலுள்ள சிதம்பரம் நடராசர் ஆவார்.

ஈழத்து சைவரான நாவலர் பைபிளை தமிழில் மொழிபெயர்த்தார்.

தமிழகத்து கிறித்துவர்கள் தேவநேயப்பாவணர், மா.சோ.விக்டர் ஆகியோர் வேர்ச்சொல் ஆராய்ந்து தமிழின் பழமையை நாட்டினர்.

தமிழ் வரலாற்றில் மட்டும் எல்லாமே தலைமாற்றி நடந்துவருகிறதே!!

ஆரியன், திராவிடன், பிராமணன், சூத்திரன்,சத்ரியன், இந்தியன், சிலோன்காரன், மலேசியன், இந்து, முஸ்லீம், மேல்சாதி, தலித், இன்னும் என்னென்னவோ அடையாளத்தைத் தலையில் கட்ட முயன்றார்கள்.

சு.சாமி, சோ, ஈவேரா, கருணாநிதி, ராஜீவ்காந்தி, மோகன்தாஸ் காந்தி, வாஜ்பாய், அநாரீக,  பண்டாரநாயக, சேனநாயக, மோடி,விவேகானந்தன், பீஜே, உசைன் பாரூக், விக்னேஸ்வரன், கருணா என்று எத்தனையோ முக்கியமானவர்கள் முக்கிமுக்கி பார்த்தார்கள்.

வெறும் காற்றுதான் வந்தது.

எவன் சொன்னான் ஒற்றுமை இல்லையென்று?

இனியும் இந்த பொய்  பரப்புரைக்கு(பிரச்சாரத்திற்கு) பலியாகவேண்டாம்.

வேற்றின ஆட்சி, சாதி புகுத்தல், பொருளாதார சுரண்டல், இனப்படுகொலை, இனக்கலப்பு, வரலாறு அழிப்பு அத்தனையையும் கடந்து நிற்கிறது தமிழுணர்வு.

இம்ரான் பாண்டியன் படையணியும், கிட்டு பீரங்கிப் படையணியும், சார்லஸ் ஆண்டனி படையணியும் சேர்ந்து அடித்ததால் வல்லரசு நாடுகள் திரண்டுவந்து எதிர்த்தன.

ஒவ்வொரு தமிழனும் மதம் கடந்து ஒன்றிணைந்தால் என்ன செய்யமுடியும் இவர்களால்?

காலம் கூடிவரும் வேளையிது .
மேன்மேலும் ஓங்குக

**தமிழரொற்றுமை**

( ஈழத்திற்காக ஹிந்தியப்படையைத் தாக்கிய தமிழகம்
https://m.facebook.com/photo.php?fbid=440305376073121&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr&refid=13#440308276072831  )

Wednesday 26 November 2014

தமிழகத்தில் மாவீரர் சுவடுகள்

தமிழகத்தில் மாவீரர் சுவடுகள்.

ஒஐஒஐஒஐஒஐஒஐஒஐஒஐஒஐ

கொளத்தூர் அருகே புலியூர் என்ற ஊர் உள்ளது. கும்பாரப்பட்டி என்ற ஊர் 3 ஆண்டுகளில் 2000புலிகள் பயிற்சி எடுத்த இடம். பிறகு அந்த ஊர்மக்கள் புலிகள் மேல்கொண்ட அன்பால் ஊரின் பெயரையே புலியூர் என்று பெயர்மாற்றிவிட்டனர். இப்பகுதியில் பொறுப்பாக இருந்த புலித்தளபதி பொன்னம்மான் அவர்களின் நினைவு நிழற்கூடம் அமைப்பு சாராத பொதுமக்களால் கட்டப்பட்டு உள்ளது.
1987ல் பொன்னம்மான் மாவீரர் ஆனபோது இந்த ஊரிலிருந்து 5000பேர் கொண்ட ஊர்வலம் இங்கிருந்து புறப்பட்டது.

மேட்டூர் வனப்பகுதியில் கேப்டன் ராய் அவர்களின் நினைவிடம் உள்ளது.
(படங்கள் கிடைக்கவில்லை).
1990ல் யாழ் பலாலி சமரின்போது காயமடைந்த ராய் அவர்கள் சிகிச்சைக்காகத் தமிழகம் அழைத்துவரப்பட்டு பலன் கிடைக்காமல் மாவீரர் ஆனவர்.
இந்த நினைவிடம் இங்கே பயிற்சி எடுத்த புலிகளால் நிறுவப்பட்டு பிறகு அப்பகுதி மக்களால் பேணப்பட்டு வந்தது. தற்போது இது வனத்துறையின் கீழ் யாரும் செல்லமுடியாத பகுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

அரியலூர் மாவட்டம், குமிழியம் சிற்றூரில் பொதுமக்கள் நிழற்குடை ஒன்றை அமைத்து அதற்கு லெப்.கேணல்.திலீபனின் நினைவு நிழற்குடை என்று பெயரிட்டுள்ளனர்.
(மாநில அளவில் பெயரெடுத்த தியாகி திலீபன் கபடிக் குழுகூட வைத்துள்ளனர்)

தனு அக்காவுக்கு நினைவுக்கொட்டகை கூட தமிழகத்தில் உள்ளது. ஆனால், அது எங்கே இருக்கிறது என்ற விபரம் தெரியவில்லை.

தலைவர் பிரபாகரன் பெயரிலும் தனிப்பட்ட மக்கள் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு சொந்தமான கட்டிடங்களும்,கூடங்களும், வாகனங்களும், விற்பனையகங்களும் பற்பல உள்ளன.

மற்றபடி தமிழ்ச்செல்வன், பால்ராஜ், ஆன்டன் பாலசிங்கம், ஈழத்திற்காக தீக்குளித்த தமிழகத்தார் பெயர்களிலும் பல்வேறு நினைவுச்சின்னங்கள் உள்ளன.

மேலும் தகவலறிந்தோர் கருத்திடவும்.
அதை பதிவில் சேர்க்கிறேன்.

( ஈழப்போரில் தமிழகம்
https://m.facebook.com/photo.php?fbid=392315390872120&id=100002809860739&set=a.108935022543493.9865.10000280986073&refid=13

புலிகள்-இயக்கத்தில் தமிழக-
இளைஞர்கள்.
http://vaettoli.blogspot.com.es/2014/07/blog-post_16.html?m=1 )

பிரபாகரன் வருகைப் பத்து

***பிரபாகரன் வருகைப் பத்து***
________________________________________________
வானோங்கு தமிழினம்
வளர்ந்தோங்கச் செய்தவனே
தேனோங்கு செந்தமிழால்
தினமுன்னைப் பாடுகிறோம்
மானோங்கு தமிழர்க்கு
மருள்நீக்கும் மன்னவனே
வானோங்கு செங்கதிரே
வருவாய் இதுசமயம். .

கையில் தமிழேந்திக்
கருத்தில் உனையேந்தி
மெய்யாக வழிநடப்போம்
மேலான எம்தலைவா
பொய்யான கதைகளும்
புனையான வார்த்தைகளும்
நைந்ததென நீஎழுந்து
வருவாய் இதுசமயம். .

வஞ்சகத்தின் வலையதனில்
வகையாக மானானோம்
குஞ்சரி மணவாளா
குணமுள்ள மாதவனே
வஞ்சகத்தின் தளையறுத்து
வண்டமிழர் குலம்காக்க
வஞ்சலென வந்திடுவாய்
ஆறுதலைத் தந்திடுவாய். .

அஞ்சித்தலை குனிந்தும் அடிமைபோல் வாய்புதைந்தும்
அஞ்சலென வந்தவர்க்கு
ஆதரவு சொல்லிடவே
நெஞ்சம்
நிறைந்திருக்கும்
நீதிமனுச் சோழனே
கொஞ்சம் விரைந்திங்கே
வருவாய் இதுசமயம். .

மெய்யிருக்கும் இவ்வுயிரும்
ஏங்குதய்யா உனைக்காண
பொய்யிருக்கும் இவ்வுலகம்
பேசுதய்யா புனைக்கதைகள்
ஐயா பிள்ளைவேலு
பெற்றெடுத்த ரத்தினமே
செய்யதமிழ்க் கொண்டுவாரும்
பொய்யதனைப் பொடியாக்க. .

கூறாமற் குறைதீர்க்கும்
குறிப்பறிந்த மன்னவனே
தேறாத கவிஎனினும்
திருமுன்பு சாற்றுகிறேன்
மாறாத துயரகல
மாயவனே நீ வருவாய்
ஆறாத வடுமாற
ஆயனென நீவருவாய். .

பண்ணாறும் செந்தமிழால்
பரணியது பாடிடவே
வண்ணக் கரும்பட்டை
வாகையணி துப்பாக்கி
வன்புலிச் சின்னம்
வரைந்திட்ட தொப்பியுடன்
கண்மை நிறமீசை
கணம்பொருந்த வாருமையா. .

எண்டிசை நடுங்கவே
இன்றிங்கு வாருமே
தெண்டிரைச் சூழ்உலகில்
தென்னிலங்கைத் தேறவே
கண்ணெடுத்துப் பாருமே
கயவர்கள் சோரவே
பண்பாடி அழைக்கிறோம்
பாயஇது நல்லசமயம். .

யாரென்ன சொன்னாலும்
யான்உன்னை ஒருநாளும் ஐயுற்ற தில்லையப்பா
கார்த்திகைத் திங்களில்
கவியெடுத்துப் பாடுவேன் வல்லவன் நின்புகழை
காலெடுத்து வாருமே
கவலைகள் நிலம்புதைய. .

வாழ்க தண்டமிழர்
மீள்க தமிழர்நிலம்
ஆழ்க துயரெல்லாம்
சூழ்க நலமெல்லாம்
வாழ்க தமிழ்ப்பாவை
வெல்க தமிழ்ப்படை
வளர்க ஒற்றுமை
வருக எம்தலைவர்.

எழுதியவர்: சபரி நாதன்

#பிரபாகரன்60

https://m.facebook.com/photo.php?fbid=516968465073478&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Thursday 20 November 2014

திருமாவுக்கு சாவுமணி

திருமாவுக்கு சாவுமணி

குற்றுயிரும் குறையுயிருமாய் இருக்கும் வி.சி.க இதோடு ஒழியட்டும்.

கருணாநிதிக்கு சின்ன கருணாநிதி கடிதம்
http://savukku.blogspot.com.es/2010/08/blog-post_8096.html?m=1

பரத்தையும் பரத்தனும்

பரத்தையும் பரத்தனும்.

சங்ககாலத்தில்... என்றாலே

ஓடிவிடுகிறான் இன்றைய தமிழன்

வரலாறு படிப்பது ஏன் என்று கொஞ்சம் பார்ப்போமா?

நேரடியாக மோதமுடியாத வல்லரசான ரோமன் பேரரசை சுற்றுப்பாதையில் சென்று ஆல்ப்ஸ்  பனிமலையை ஏறி இறங்கி  ஹனிபல்  நிர்மூலமாக்கினான்.
இது நடந்து 2000 ஆண்டுகள் கழித்து மாவீரன்  நெப்போலியன் அதேபோல ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சுற்றுப்பாதையில் சென்று ஆஸ்திரியாவை வென்றான்.
ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான்.
பிறகு நெப்போலியன் ரஷ்யநாட்டின் மீது குளிர்காலத்தில் படையெடுத்துச்சென்றதால் தோற்றான்.
இதுநடந்து 150ஆண்டுகள் கழித்து ஹிட்லர் ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான். நெப்போலியனின் வரலாறை ஹிட்லர் கவனத்தில் கொண்டிருந்தால் வெற்றி மேல் வென்றி குவித்த நாஜிப்படைகள் வலிமைகுறைந்த ரஷ்ய படையிடம் குளிர்காலத்தில் தோற்று மண்ணைக்கவ்வியிருக்காது.

பழங்காலத்தில் நடந்ததை அறிவது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தவே ஐரோப்பாவரை செல்லவேண்டிவந்தது.
மற்றபடி இந்தப் பதிவு போர்பற்றியது அன்று. நாகரீகம் பற்றியது. இல்லறம் பற்றியது.
-----------------

சங்ககாலத்தில் குடும்பம் என்கிற அமைப்பு தோன்றாதபோது கூட்டமாக வாழ்ந்த இனங்களில் எவரும் எவருடனும் சேர்ந்து பிள்ளைபெறலாம் என்ற நிலை இருந்தது.
பிறகு ஒருவனுக்கு ஒருத்தி என்கிற முறை, திருமணம், நிலையான இடத்தில் வாழ்க்கை, குடும்ப அமைப்பு ஆகியன தோன்றின.
ஆனாலும், பழைய முறைப்படி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தவர்களும் இருந்தனர். இப்படிப்பட்டோர் பரத்தை என்றும் இவர் ஊரில் வாழ்ந்த பகுதி 'பரத்தைச் சேரி' (சேரி=சேர்ந்துவாழும் இடம்) அழைக்கப்பட்டது.
இவர்கள் குடும்பமாக வாழ்வோரைப் போலவே மதிக்கப்பட்டனர்.
--------------
பரத்தை ஒருத்தி தன் தோழியிடம் தன்னை நாடிவரும் தலைவனைப் பற்றிக் கேலியாகப் பின்வருமாறு கூறுகிறான்.

எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே.
(குறுந்தொகை:8)

என் வீட்டிற்கு வந்தால், "தான் அப்படி, தான் இப்படி" என்றெல்லாம் ஓங்கி பேசுவான். ஆனால் தன் வீட்டிற்குப் போய் விட்டாலோ, அங்குள்ள தன் மகனின் தாயாகிய அவனது மனைவியிடம் எப்படி நடந்துகொள்வான் தெரியுமா?? நாம் நம் கையையும் காலையும் தூக்கத் தானும் அது போலவே தூக்கும், கண்ணாடியில் தெரியும் நிழற்பாவைபோல அவள் விருப்பப்படியெல்லாம் ஆடுவான்.

பரத்தைக்குத் தலைவன் வீட்டுக்குச் சென்றுவரும் உரிமைகூட இருந்ததோ என்னவோ?
----------------------
தலைவன் பரத்தையை நாடிச் சென்றுவிட்டு வீடு திரும்புகிறான். அவனை வீட்டுவாசலிலேயே நிறுத்தி தலைவி கேள்வி கேட்கிறாள். தலைவன் உடனே தலைவியின் காலில் விழுந்து தான் பரத்தை வீட்டுக்குச் சென்றது தவறுதான் என்றும் அதற்காக பொறுத்தருளுமாறும் மன்றாடுகிறான். உள்ளம் உருகிப்போன தலைவி அவனை தூக்கி "நீ இப்படிக் காலில் விழுவதை நீ காதல் கொண்ட என் தங்கைகளான பரத்தைகள் கண்டால் சிரிப்பார்களே?!" என்று கேலியாகக் கூறுகிறாள்.

அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி
காதல் எங்கையர் காணின் நன்று என...

தொல்காப்பியம் (கற்பியல்:6)

பரத்தைகளை தங்கைகள் என்று அக்காலப்பெண்கள் குறிப்பிடும் அளவுக்கு அப்பெண்களுக்கு மதிப்பு இருந்துள்ளது.
---------------
மேற்கண்ட இருபாடல்களிலிருந்தும் ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு அடங்கிநடந்தது தெரிகிறது. அதுபோல, அக்காலத்தில் வேட்டையாடுதலிலும்  போர்புரிவதலிலும் ஆண்கள் ஈடுபட்டதால் ஆண்களின் உயிரிழப்பு பெண்களின் உயிரிழப்பைவிட அதிகமாக இருந்திருக்கலாம். அதனால் பெண்கள் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருந்திருக்கும். அப்போது தலைவன்(கிழவன் அதாவது ஆண்) தலைவி(கிழத்தி)யை மணமுடித்தோடு  காமக் கிழத்தி (வைப்பாட்டி)கூட வைத்துக்கொண்டனர்.
அப்போதைய சூழலுக்கு அது சரியாக இருந்தது.
இதனால் பெண்கள் அடிமைநிலையில் வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
திருமணச்சீர் (வரதட்சணை) வாங்கும் பழக்கமானது அப்போது இல்லை. மாறாக பரிசம் (பணம்) கொடுத்து மணப்பெண்ணை அழைத்துவரும் முறை இருந்துள்ளது.
-------------------
பரத்தைப் பெண்கள் மட்டுமன்றி ஆண் பரத்தர்களும் இருந்துள்ளனர்.

பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
திருக்குறள்:1311

'புலவி நுணுக்கம்' என்ற அதிகாரத்தில் வள்ளுவர் பெண்கள் எப்படியெல்லாம் சின்னச் சின்ன காரணங்களைக்கொண்டு தலைவனிடம் ஊடல் செய்வார்கள் என்று விவரிக்கிறார். அதில் மேற்காணும் குறள் வருகிறது.
தலைவனை பெண்கள் பலரும் விரும்புவதைக் கண்டு பொறாமை கொண்டு தலைவி தலைவனிடம்,
பெண் இயல்பு உள்ள அனைவரும் பொதுப்பொருள் போல உன்னை தன் கண்களால் விழுங்குகிறார்கள் (பார்த்து ரசிக்கிறார்கள்) பரத்தனுக்கு ஈடான உன்னை (உன் மார்பை) நான் இனித் தழுவமாட்டேன்" என்று சினந்துகூறுகிறாள்.

சிலப்பதிகாரத்தில் . "வம்பப் பரத்தர் வறுமொழி யாளர்' என்ற சொற்றொடர் வருகிறது.
கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்போது, கவுந்தியடிகளும் சேர்ந்துகொண்டார். அப்போது வழியில் இரு பரத்தர்கள் அவர்களைச் சந்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, சங்ககாலத்தில் தமிழர் வாழ்வியலில் பெண்ணடிமை நிலவியதாகக் கூறவியலாது.

கற்பு என்பது காலத்திற்கு காலம் மாறுவது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.

போரும் அரசியலும் கற்பியலும் மிகப் பழமையானவையும் நெருங்கிய தொடர்புடையவையும் ஆகும்.

Politics is war without blood,war is politics with blood.

Politics is the second oldest profession,and the first is prostitution.

தெலுங்கு கடற்படைத் தாக்குதல்

தெலுங்கு கடற்படைத் தாக்குதல்

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

சலிப்பாக இல்லையா?

எத்தனை நாட்களுக்குத்தான் ராமேஸ்வரம் மீனவர்கள் சிங்களவர்களால் சுடப்பட்டு சாவதையும் அதன்பிறகு அவர்கள் நடத்தும் (மானங்கெட்ட) ஒருநாள் வேலைநிறுத்தத்தையும் படிப்பது?

சென்னை மீனவன் அடிவாங்கும் கதையைச் சொல்லவா?

12,ஏப்ரல்,2014 .

100க்கும் மேற்பட்ட படகுகளில் 2000க்கும்(!!) மேற்பட்ட தெலுங்கர்கள் திடீரென தமிழக எல்லைக்குள் இருக்கும் 'சின்ன மாங்கோடு'  குப்பம் நோக்கி ஈட்டி, கத்தி, அரிவாள், கையெறி குண்டு, பெட்ரோல் குண்டுகளோடு கடல்வழி வந்து இறங்கி கண்ணில்பட்டத் தமிழனையெல்லாம் தாக்கத்தொடங்கினர்.
பீதியடைந்த தமிழக மீனவமக்கள் போட்டது போட்டபடி அருகேயிருந்த  தேவங்கோடு குப்பம் நோக்கி ஓட ஆரம்பித்தனர்.
ஏற்கனவே தகராறு நடைபெற்று வந்ததால் அங்கே பாதுகாப்புக்காக காவல்துறையினர் கொஞ்சம் இருந்தனர். ஆனால், இத்தனை பெரிய தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
வந்தவர்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்த
ஏ.டி.எஸ்.பி.ஸ்டாலின்,
இன்ஸ்பெக்டர்.ராஜா ராபர்ட்,
எஸ்.ஐ.காமராஜ் உட்பட அங்கிருந்த காவலர்களை சரமாரியாகத் தாக்கினர். இதில் 6காவலர்கள் வலுத்த காயமடைந்தனர்.
கண்ணில் பட்டவர்களை அடித்து உதைத்தவாறு அங்கே இருந்த குடியிருப்புகளில் பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்தனர்.
அங்கே இருந்த மீனவப் படகுகள் அத்தனையும் நாசமாக்கினர். உடைத்து நொறுக்கியது போக கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பினர்.
சின்னமாங்கோடு, பெரிய மாங்கோடு, பொன்னேரி ஆகிய இடங்களில் இருந்த தமிழ் மீனவர்கள் வெளியேறி ஆங்காங்கே அடைக்கலம் தேடிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
( http://dinakaran.com/News_Detail.asp?Nid=87349
http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=54966
http://www.dinamani.com/tamilnadu/2014/04/16/சின்னமாங்கோடு-கலவரம்-13-தமிழக-/article2171086.ece?service=print )

இந்த நிகழ்வுக்கு மூலகாரணம் தெலுங்கர்களின் அத்துமீறல்தான்.
தமது பகுதியில் மீன்வளம் இருந்தும் தெலுங்கர்கள் பெருமளவில் எல்லைதாண்டி தமிழக எல்லைப்பகுதிகளில் வந்து மீன்பிடித்துவந்தனர். தமிழக மீனவர்கள் தட்டிக்கேட்டால் தாக்கவும் செய்தனர். இதனால் அடிக்கடி அங்கே மோதல்கள் நடந்துவந்தன.
கடற்கொள்ளையர்கள் போலக் குழுவாக சேர்ந்துகொண்டு ஆயுதங்களை வைத்துக்கொண்டு தனியாக வரும் தமிழக படகுகளை நிறுத்தி கொள்ளையடிப்பது, தமது படகில் வேலைகள் எதாவது செய்துதரச் சொல்வது, ஆள்கடத்தல் செய்து ஆந்திராவுக்குள் அழைத்துச்சென்று மறைத்து பணம் பெற்றபிறகு விடுவிப்பது என்று அட்டூழியங்கள் கடந்த 4ஆண்டுகளாக அதிகரித்துவவருகின்றன.
( http://www.dinamalar.com/news_detail.asp?id=791776&Print=1
http://m.oneindia.in/tamil/news/2008/06/03/tn-100-kasimedu-fishermen-kidnapped-by-ap.html
http://m.oneindia.in/tamil/news/2008/08/28/tn-168-kasimedu-fishermen-rescued-from-ap.html )

இவர்களுக்கு வழிகாட்டி சிங்கள மீனவர்கள்.
தமிழக மீனவர்கள் கச்சத்தீவையே நெருங்கமுடியாத போது சிங்க மீனவர்கள் வசதியாக முழுதமிழகத்தையும் தாண்டி ஆந்திராவரை வந்து மீன்பிடிக்கிறார்கள். தட்டிக்கேட்க யாருமே கிடையாது. அப்படியே பெயருக்கு சிறைபிடிக்கப்பட்டாலும் 'மாப்பிள்ளை'போல சென்னை ஆட்சித்தலைவர் முன்னிறுத்தப்பட்டு 'மறுவீடு' செல்வதுபோல புழல்சிறையில் ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு விடுதலையாகிவிடுகிறார்கள்.
அதிலும் இந்த சிங்கள மீனவர்களிடம் ஹிந்திய கடற்படைக்கு இருக்கும் காதலை விவரிக்க எழுத்தாளர் சாண்டியல்யனால்கூட முடியாது.

ஆந்திரா அருகே சிங்களரைக் கண்டதும் இந்தியக் கடற்படையினர் ஓடிஞ்சென்று கைகுலுக்கி ராஜபக்சவின் நலம் விசாரித்துவிட்டு வருவார்கள். எப்போதாவது பெயருக்கு கைது(?) செய்து ஆந்திராவுக்குக் கொண்டுபோகாமல் தமிழகத்துக்குக் கொண்டுவருவார்கள்.
ஏன் தெரியுமா? ஆந்திர அரசிடம் ஒப்படைத்தால் நூறாயிரம் (ஒரு லக்சம்) ரூபாய் வரை தண்டம் விதிப்பார்கள். இதை ஹிந்தியர்களின் மனம் தாங்குமோ?!
தமிழன் இளிச்சவாயன் தானே! இட்டளி சாம்பாரோடு விருந்து கவனித்து வீட்டுக்கு அனுப்ப தமிழகமே சிறந்த இடமன்றோ!

ஹிந்தியன்தான் தமிழக மீனவன் நடமாட்டத்தை சிங்களவனுக்கு காட்டிக்கொடுப்பான் உடனே சிங்கள கடற்படை வந்து சுடும், தமிழக மீனவனை விரட்டிவிட்டபிறகு சிங்கள மீனவன் வந்து மீன் அள்ளிப்போக வசதியாக இருக்கும்.
இதோடு நில்லாமல் சிங்களவருக்காகத் தமிழக மீனவனை தாக்கக்கூட செய்துள்ளது ஹிந்திய கடற்படை.
( http://m.oneindia.in/tamil/news/2013/08/02/tamilnadu-indian-navy-attacks-karaikal-fisher-180421.html )

ஹிந்தியனும், தெலுங்கனும், சிங்களனும் கூட்டுச்சேர்ந்து தமிழனைக் கொள்ளையடித்துவருகின்றனர். அதன் ஒரு வடிவம் இந்த கடல் கூட்டணி.
கூடிய விரைவில் மலையாளியும் இக்கூட்டணியில் இணைவனாக.

ஹிட்லர் சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.
"ராணுவமில்லாத இனம் அனாதை இனமே".

நல்லவேளையாக எல்லாத் தமிழனும் சுரணையற்றவன் என்ற முடிவுக்கு வரவிடாமல் சில நிகழ்வுகள் தடுக்கின்றன.

தாக்கிய சிங்களரைத் துரத்திப் பிடித்த காசிமேடு மீனவர்கள்
http://m.oneindia.in/tamil/news/2008/04/12/tn-10-lankan-fishermen-nabbed-by-chennai-fishermen.html
மீனவர் தாக்குதலுக்குப் பதிலடியாக எழும்பூர் புத்த மடாலயம் தாக்குதல்
http://www.yarl.com/forum3/index.php?/topic/81280-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/