வந்தேறி பெண்கள்
"அனிதா நல்ல மார்க் எடுத்திருந்தால் அட்மிஷன் கிடைத்திருக்கும்.
அனிதா சாகவேண்டும் என்பது அவரது தலைவிதி.
இதில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட முடியாது."
_ லலிதா குமாரமங்கலம்
( தலைவர் - தேசிய மகளிர் ஆணையம் )
இவரும் தமிழர் கிடையாது.
இவரது தாயார் ஒரு வங்காளி பிராமணர்.
தேர்தலிலேயே போட்டியிடாமல் பாதுகாப்பு அமைச்சராக ஆகியுள்ள நிர்மலா சீதாராமன் ஒரு தெலுங்கு பிராமணர்.
இவர் கர்நாடகத்தில் தனது அடையாளத்தை மறைத்து பதவியில் இருந்துகொண்டு காவிரி தமிழகத்துக்கு கிடைக்க கூடாது என்று பேசிவந்தவர்.
இவருக்கு தமிழச்சி பட்டம் கொடுத்து வாழ்த்திய பா.ஜ.க மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் ஒரு கன்னடர் (ஒக்கலிக கவுடா)
கிருஷ்ணசாமி எனும் தெலுங்கரை அவரது மகளுக்கு குறுக்குவழியில் டாக்டர் சீட் வாங்கிய விவகாரத்தில் அம்பலப்படுத்திய முன்னாள் ச.ம.உ பாலபாரதி கூட ஒரு கன்னட ஒக்கலிகா கவுடா ஆவார்.
மாநில, தேசிய அளவில் பெரிய பெரிய பதவிகளில் தமிழகத்தில் பிறந்த வேற்றின வந்தேறிகளே உள்ளனர்.
பெண்களும் இதில் விதிவிலக்கு கிடையாது.
இவர்கள் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டும் வருகின்றனர்.
Friday, 8 September 2017
வந்தேறி பெண்கள்
Thursday, 20 April 2017
குழந்தைத் திருமணம் தெலுங்கர் கொள்கையே!
குழந்தைத் திருமணம் தெலுங்கர் கொள்கையே!
பெண்கள் மீதான அடக்குமுறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.
அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.
1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.
அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும்
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.
தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை.
Sunday, 16 April 2017
அதிகாரிச்சி
அதிகாரிச்சி
:=:=:=:=:=:=:=:
"பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தமிழ்ச் சமூகம் அனுமதிக்கவில்லை"
_ஈ.வே.ரா பக்தர்
"அப்டியாப்பா?
அதிகாரிச்சி அப்டினா என்னு தெரியுமா?
1000 ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜ சோழன் காலத்து அரசாங்க அதிகாரிகளில் பெண்களும் இருந்தனர் அவர்கள்தான் அதிகாரிச்சி.
அதிகாரிச்சி 'சோமயன் அமிர்தவல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.
180 பேரை வைத்து வேலைவாங்கிய அதிகாரிச்சி 'எருதன் குஞ்சரமல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.
இவர்களைப் பற்றி (ராஜராஜ சோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய கோவிலான) திருவையாறு கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.
இது போக கோவிலுக்கு தனது சொத்திலிருந்து கொடை வழங்கிய பெண்கள் விபரமும் உள்ளது.
உங்கள் பெண்ணுரிமை கருத்துகளான
கர்ப்பப்பை நீக்குதல்,
ஆண் போல முடிவெட்டுதல்,
ஆசைநாயகர்கள் வைத்துக்கொள்ளல் போன்றவற்றை
வேறு எங்காவது போய் பரப்பவும்."
படம்: ராஜராஜசோழன் மற்றும் ஒலோகமாதேவி
(அகமதாபாத் அருங்காட்சியகம்)
Tuesday, 24 January 2017
இதற்கு பிறகுமா காவல்துறையை நம்பவேண்டும்?
இதற்கு பிறகுமா காவல்துறையை நம்பவேண்டும்?
ஆண்போலீஸ் பெண்போலீஸ் வேடிக்கை பார்க்க ஒரு பெண்போலீசே மாணவியின் உடைகளைக் கிழிக்கிறாள்.
ஜார்ஜ்தான் மலையாளி!
உங்களில் ஒரு தமிழன் கூடவா இல்லை?
ஒருத்தன் கூடவா அக்காதங்கச்சியோட பொறக்கல?
ஆட்டோவுக்கு தீவைக்கறதும்
குடிசைக்கு தீவைக்கிறதும்
வயித்துல மிதிச்சு கருவ சிதைக்கிறதும் னு
எளிய மக்கள்ட வீரத்த காட்டுனீங்க
இப்ப மானத்துலயும் கைவச்சிட்டீங்களேடா?
நாயிங்களா
தெரிஞ்சு போச்சுடா
எவ்வளவுதான் நேர்மையா போராடுனாலும் கடைசில ஈவிரக்கமில்லாத பதிலடியும்
கெட்டபேரும்தான் கெடைக்கும்னு
அடுத்த போராட்டம் அமைதிப் போராட்டமா இருக்காது.
மொதல்ல போலீஸ்காரன பொளந்திட்டு காக்கிச்சட்டைல ரத்தம் பாத்த பிறகுதான் போராட்டமே ஆரம்பிக்கும்.
Tuesday, 25 October 2016
தேவரடியாரும் தேவதாசிகளும்!
தேவரடியாரும் தேவதாசிகளும்!
-சில கல்வெட்டுச் சான்றுகள்
ம.செந்தமிழன்
இக்கட்டுரையில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர், கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த களப்பிர, பல்லவர்களை மட்டுமே. பிற்காலத்தில் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்ட, விஜயநகர, நாயக்க மன்னர் குலங்களையும் ‘திராவிடர்’ எனும் சொல் குறிக்கிறது.
இன்றைக்குத் தமிழகத்தில் வாழும் சாதி வழிப்பட்ட ஆந்திர, கன்னட மூதாதையர்களின் குலத்தவரைக் குறிக்கவில்லை. அவர்களை ‘திராவிடர்’ என அழைப்பது தவறானதும், வரலாற்று நோக்கம் அற்றதும் என்பது என் கருத்து.
தமிழகத்தில் அக்கால திராவிட குலத்தவர் படையெடுப்பு நடத்தியபோது, பல்வேறு காரணங்களுக்காகக் ஆந்திர, கன்னடப் பகுதிகளில் இருந்து குடியமர்த்தப்பட்ட பொதுமக்களை இன்றைக்கும் திராவிடர் என வகைப்பிரிப்பது தவறு.
எந்தச் சமூகத்திலும் படையெடுப்பு நிகழும்போது இவ்வாறான குடியேற்றங்களும், இனக்கலப்பும் ஏற்படத்தான் செய்யும். ஆக, இக்கட்டுரை, ‘திராவிடர்; எனக் குறிப்பிடுவது, வரலாற்று நோக்கில், அவ்வரலாறு நிகழ்ந்த காலத்தைய அயல் குலத்தவரைத்தானே அன்றி, நிகழ்காலத்தவரை அல்ல!
தேவரடியாரும் தேவதாசிகளும்
தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.
இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.
’தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’
(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17)
தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.
சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.
தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.
தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.
குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.
’தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334)
பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.
’கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது’
(கர். கல் VAK 105)
(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19)
இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர். மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை,ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.
இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.
தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.
தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.
தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;
’கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ (மேலது நூல் /பக் 22)
அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.
பெண்களின் நிலை:
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.
கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்
நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)
மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?
இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?
லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.
’கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன’ என்கிறார் அவர்.
கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.
விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.
கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில்தான். இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே!
இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழியப் பணிகளைச் செய்தார்.
Friday, 21 October 2016
சேலைக்குள் வாள்
சேலைக்குள் வாள்
சங்ககாலத்தில் போர்களம் வரை சென்ற பெண்கள் நேரடியாகக் களத்திற்கு செல்லாவிடினும் போர்ப் பாசறையில் பாவை விளக்கு ஏற்றிவைத்து அது அணையாமல் பார்த்துக்கொண்டு காத்திருப்பார்கள்.
இப்பெண்கள் தங்கள் மேலாடையில் (கச்சு), பளபளப்பான வாளினைச் சேர்த்துக் கட்டியிருந்தனர்.
‘திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்’
(முல்லைப்பாட்டு 46-45)
படம்: ஓலைச் சுவடி எழுதும் பெண்
Monday, 30 May 2016
சங்ககாலப் பெண்பாற்புலவர்கள்
சங்ககாலப் பெண்பாற்புலவர்கள்
(1)ஔவையார் -
புறநானூறு 33 பாடல்கள்
(87 – 104,
140, 187, 206, 231, 232, 235, 269, 290,
295, 311, 315, 367, 390, 392)
நற்றிணை 7
பாடல்கள்
(129, 187, 295, 371, 381, 390, 394)
குறுந்தொகை 15 பாடல்கள்
(15, 23, 28, 39, 43, 80, 91,
99, 102, 158, 183, 200, 364, 388),
அகநானூறு 4 பாடல்கள்
(11, 147, 273, 303) -
மொத்தம்
59
பாடல்கள்
(2) அஞ்சில் அஞ்சியார் -
நற்றிணை 1 (90)
(3) அஞ்சியத்தை மகள் நாகையார்–
அகநானூறு 1 (356)
(4)அள்ளூர் நன்முல்லையார் -
அகநானூறு 1
(46) ,
புறநானூறு 1 (306),
குறுந்தொகை 9
(32, 67, 68, 96, 140, 157, 202, 237)
(5) அணிலாடு முன்றிலார் -
குறுந்தொகை 1
(41)
(6) ஆதிமந்தி -
குறுந்தொகை 1 (31)
(7) ஊண் பித்தையார் -
குறுந்தொகை 1 (232)
(8) ஒக்கூர் மாசாத்தியார் -
அகநானூறு 2
(324, 384),
புறநானூறு 1 (279),
குறுந்தொகை 5
(126, 139, 186, 220, 275)
(9) ஓரிற் பிச்சையார் -
குறுந்தொகை 1 (277)
(10)கச்சிப்பேட்டு நன்னாகையார் -
குறுந்தொகை 6
(30, 172, 180, 192, 197,
287)
(11) கழார்க்கீரன் எயிற்றியார் –
அகநானூறு 4,
குறுந்தொகை 3 (35, 261,
330) ,
நற்றிணை 2 (281, 312)
(12) காக்கைப்பாடினி நச்செள்ளையார் –
புறநானூறு 1 (278),
குறுந்தொகை 1 (210),
பதிற்றுப்பத்து 10 (51 – 60)
(13) காவற்பெண்டு -
புறநானூறு 1 (86)
(14 )காமக்கணி நப்பசலையார் -
அகநானூறு 2
(204) ,
நற்றிணை 2 (243, 304)
(15) குறமகள் குறிஎயினி -
புறநானூறு 1
(157),
நற்றிணை 1 (357)
(16) குமுழி ஞாழல் நப்பசையார் -
அகநானூறு 1
(17) தாயங்கண்ணியார் -
புறநானூறு 1 (250)
(18)பாரிமகளிர் -
புறநானூறு 1 (112)
(19) பூங்கணுத்திரையார் (பூங்கண்
உத்திரையார்) -
புறநானூறு 1 (277),
குறுந்தொகை 2 (48, 171)
(20) பெருங்கோப்பெண்டு -
புறநானூறு 1
(246)
(21) பேய்மகள் இளவெயினியார் –
புறநானூறு 1 (11)
(22) பொன்மணியார் –
குறுந்தொகை 1 (391)
(23) பொன்முடியார் -
புறநானூறு 3 (299,
310, 312)
(24) பொதும்பில் புல்லளங்கண்ணியார் -
அகநானூறு 1
(25) பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் -
அகநானூறு 1 (252),
புறநானூறு 3 (83, 84,
85),
நற்றிணை 2 (19, 87)
(26) நல்வெள்ளியார் -
அகநானூறு 1 (32),
குறுந்தொகை 1 (365),
நற்றிணை 2 (7)
(27) நன்னாகையார் –
குறுந்தொகை 2 (118,
325)
(28) நெடும்பல்லியத்தையார் –
குறுந்தொகை 1
(178)
(29) மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
-
நற்றிணை 2 (250, 369)
(30) மதுரை நல்வெள்ளியார் –
குறுந்தொகை 1
(365)
(31) மாற்பித்தியார் -
புறநானூறு 2 (251,
252)
(32) மாறோகத்து நப்பசலையார் -
புறநானூறு 7
(37, 39, 126, 174, 226, 280,
383)
நற்றிணை 1 (304)
(33) முடத்தாமக் கண்ணியார் –
பொருநராற்றுப்படை 1(பத்துபாட்டில்
ஒன்று)
(34) முள்ளியூர் பூதியார் – 1 அகநானூறு 1
(35) வருமுலையாரித்தி –
குறுந்தொகை 1
(176)
(36) வெறி பாடிய காமக்கண்ணியார் –
புறநானூறு 1 (271),
அகநானூறு 2 (22,
98),
நற்றிணை 1 (268)
(37) வெண்மணிப்பூதியார் –
குறுந்தொகை 1
(299)
(38)வெள்ளி வீதியார் -
அகநானூறு 2 (45,
362),
குறுந்தொகை 8
(26, 44, 58, 130,146,
149, 169, 386), நற்றிணை 3 (70, 335, 348)
நன்றி Kamakshi Narayan
Monday, 13 July 2015
ஆண்களும் அணிந்த தாலி
ஆண்களும் அணிந்த தாலி
! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : !
தாலி என்பது கழுத்து நகையைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
இதை பழங்காலத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்தனர்.
ஒரு பெண் ஒரு ஆணை "நான் உன்னைக் கட்டிக்கொள்கிறேன்" என்று கூறுவது முரண்பாடான ஒன்று கிடையாது.
ஆணுக்கு பெண் தாலி அணிவிக்கும் வழக்கத்தையே குறிக்கிறது.
பிறகு இதுவே ஆணின் காலில் பெண் மெட்டி அணிவிக்கும் வழக்கம் வந்தது.
பிறகு அதுவும் பெண்களுக்கு போனது.
புலிப்பல் "தாலி" என்ற அணியைஆண், பெண்
இரு பாலாரும் அணிந்திருந்தனர்
என்பது பண்டைத்தமிழ் இலக்கியங்களில்
இருந்து தெரியவருகிறது .
ஆதிமனிதர் தாம் வேட்டையாடிய சில விலங்குகளின் எலும்புகள் , பற்கள் , நகங்கள் போன்றவற்றை அணிகலன்களாக்கி அணிந்தணர்.
குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த வேட்டுவர்கள் தமது பிள்ளைகளுக்குப் புலிப்பல் தாலி அணிவித்தது சங்க இலக்கியங்களிலிருந்தும் தெளிவாகிறது.
ஆனால், சிறுவரும், சிறுமியரும் புலிப்பல் தாலி அணிந்தமையால் மறக் குலத்தின் வழிவந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக அணிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவ்வழக்கமே பிற்காலத்தில் "ஐம்படைத் தாலியாக" வளர்ச்சியடைந்தது.
புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது ஆகும்.
ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும்.
சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது .
புறநானூற்றுப் பாடல் ஒன்றில் "தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்" மிக இளம் வயதிலேயே போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக,
"தாலி களைந்தன்று மிலனே"
என்று அவன் தாலியை இன்னும் களையாத சிறுவயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் களைந்துவிட்டே கால்களில் கழல் அணியும் வழக்கம் இருந்தது .
"தாலம்" என்ற சொல் புல்வகையைச் சார்ந்த பனை போன்ற தாவரங்களைக் குறிப்பது.
ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.
நோய்வராமல் தடுப்பதற்காக மந்திர ஓலைச் சுருளைக் கை,கால், கழுத்து போன்ற உறுப்புக்களில் அணிந்துகொள்வது பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.
எனவே "தாலம்" என்ற சொல்லிலிருந்து காப்பு அணிகளைக் குறிக்கும் "தாலி".என்ற பொதுச் சொல் தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.
தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாகத்.தெரியவில்லை.
(பெரிய இடத்து இளைஞர்கள் புலிப்பல் போன்ற அமைப்பை சங்கிலியில் அணிவது காணப்படுகிறது.
இதை மைனர் செயின் என்கிறார்கள்)
மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது.
ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது.
யாழ்ப்பாணத்து நகைக்கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப்.பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும்.
இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு.
சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந்தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக, சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.
இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது (!!)
பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது.
பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர்.
குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் துடக்குக் கழிவுச் சடங்கின்போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது.
http://ta.m.wikipedia.org/wiki/புலிப்பல்_தாலி
http://ta.m.wikipedia.org/wiki/ஐம்படைத்_தாலி