Showing posts with label சோழன். Show all posts
Showing posts with label சோழன். Show all posts

Friday, 12 July 2019

சீதையும் சோழனும்

சீதையும் சோழனும்

ஈழத்தின் மீது படையெடுத்த ஹிந்திய (அமைதி) படையை அழிவின் விளிம்பிற்குச் சென்று இறுதியாகத் தோற்கடித்தனர் புலிகள்.

என்னதான் பேரழிவைச் சந்தித்தாலும் மாபெரும் வெற்றியல்லவா இது?!

இந்த நேரத்தில் மேதகு பிரபாகரன் அவர்களை ஒரு தமிழகக் கவிஞர் சந்திக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அவர் பிரபாகரனாரை இமயம் வரை வென்ற சேரன் செங்குட்டுவனோடு ஒப்பிடாமல் டெல்லி சுல்தானுடனா ஒப்பிடுவார்?!

இதே போல கரிகாலனின் அப்பா காலத்தில் தமிழகம் தவிர்த்த முழு இந்திய துணைக்கண்டத்தையும் கைப்பற்றிவிட்ட மௌரிய பேரரசு இறுதியாக தமிழகத்தையும் கைப்பற்ற பிந்துசாரன் தலைமையில் பாழி வழியாக படையை அனுப்புகிறது.
(பாழி என்பது தற்போதைய கர்நாடகத்தில் கேரள எல்லைக்கு அருகே இருக்கும் bhatkal என்று சிலர் ஊகிக்கின்றனர்)

இந்த படையெடுப்புக்கு வழிகாட்டி, உடனிருந்து உதவி, வடுகர் அனைவரும் ஒத்துழைக்கின்றனர்.

இந்த பெரும்படையை மூவேந்தரின் கூட்டணிப்படை இளஞ்சேட்சென்னி தலைமையில் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு முறியடித்து வெற்றிவாகை சூடுகிறது.

அப்போது இளஞ்சேட்சென்னிக்கு "செருப்பாழி எறிந்த" என்ற பட்டத்தை அளித்து ஊன்பொதி பசுங்குடையார் எனும் புலவர் ஒரு பாடல்பாடுகிறார்.

இளஞ்சேட்சென்னி அகமகிழ்ந்து நல்லதொரு பரிசில் வழங்குகிறான்.

புலவரின் குடும்பம் அந்த அணிகலன்களை முன்பின் பார்த்ததில்லை.
எனவே அவர்கள் விரலில் அணியவேண்டியதைக் காதிலும்,
காதில் அணியவேண்டியதை விரலிலும்,
இடுப்பில் அணியவேண்டியதைக் கழுத்திலும்,
கழுத்தில் அணியவேண்டியதை இடுப்பிலும் அணிந்துகொண்டனராம்.

இதை புலவர் எதனுடன் ஒப்பிடுகிறார் என்றால்,
இராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற போது அவள் கழற்றி எறிந்துகொண்டே வந்த அணிகலன்களைப் பொறுக்கிய குரங்குகள் அணியத்தெரியாமல் அணிந்துகொண்டு அலைந்ததுடன் ஒப்பிடுகிறார்.
(...இராமன் உடன்புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்...
- புறநானூறு 378).

என்றால் இராமனும் சீதையும் தமிழர்தானே?!

மேலும் அறிய,

தேடுக: இராமனும் தமிழனே வேட்டொலி

தேடுக: சிவனடியாரும் போற்றும் இராமன்

Tuesday, 13 June 2017

சோழர் ஆட்சியில் மருத்துவம்

சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை எனும் இலவச மருத்துவ முகாம் இருந்துள்ளது.

மற்றும் மருந்து எழுதிக் கொடுக்கும் பணியாளரும் சல்லியக் கிரியை என்றழைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றியும் கல்வெட்டு உள்ளது.

மருந்து இட பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

 கல்வியோடு மருத்துவமும் கற்றுக்கொடுத்த கல்லூரியும் இருந்துள்ளது.

 மேற்கண்ட பணிகளுக்கு அளிக்கப்பட்ட கூலி விபரங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

நன்றி: Lokan K Nathan 

Friday, 21 April 2017

கோச்செங்கணான் சிறையில் அவமதிக்கப்பட்டு இறந்தானா?

கோச்செங்கணான் சிறையில் அவமதிக்கப்பட்டு இறந்தானா?

சோழன் கோச்செங்கணான் சேரமன்னனான கணைக்கால் இரும்பொறையுடன் போர்செய்து தோற்றுவிடுகிறான்.

பிறகு குணவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்படுகிறான்.

அப்போது குடிக்கத் தண்ணீர் கேட்டுத் தராததால் தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணி உண்ணாமல் பட்டினி கிடந்து இறந்தான் என்று கூறப்படுகிறது.

இதற்கு வலுவில்லாத ஒரு சான்று உள்ளது.
அது புறநானூறு 9 வது பாடலுக்கான அடிக்குறிப்பு ஆகும்.

(அடிக்குறிப்பு என்பது அப்பாடல் பற்றிய ஒரு செய்தி,
அது அப்பாடல் எங்கே பாடப்பட்டது, யாருக்காக பாடப்பட்டது,
எதற்காகப் பாடப்பட்டது,
யார் பாடியது போன்ற செய்தியாக இருக்கலாம்)

'உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்ற அந்த அடிக்குறிப்பு புலவர் அப்பாட்டை பாடிய புலவர் எழுதியதாகவோ அல்லது அதை ஆராய்ந்த மொழிபெயர்த்த யாரும் எழுதியதாகவோ இருக்கலாம்.
அதனால் இதை வலுவான சான்றாக எடுத்துக்கொள்ள இயலாது.

உண்மை என்னவென்றால் பொய்கையார் எனும் புலவர் சேரமான் கணைக்கால் இரும்பொறையை புகழ்ந்து பாடி அதற்குப் பரிசாக சோழன் செங்கணான் விடுதலையைக் கேட்டார்.
சேரனும் சோழனை விடுதலை செய்துவிட்டான்.

இதற்கு பல சான்றுகள் உள்ளன.

'சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று'
என்று களவழி நாற்பதுக்கு உரையெழுதிய ஆசிரியர் தனது உரையை முடிக்கிறார்.

இதுவும் வலுவான சான்று கிடையாது.

தமிழ் நாவகர் சரிதையில் ஒரு செய்யுள் புறநானுற்றுப் பாடலை (74) எடுத்தாளுகிறது.
அதில் அப்பாட்டின் அடிக்குறிப்பும் சேர்த்து அதில் உள்ளது.

'இது சேரமான் கணைக்கால் இரும்பொறை, செங்கணானால் குணவாயில் கோட்டத்துத் தளைப்பட்டபோது, பொய்கையாருக்கு எழுதி விடுத்த பாட்டு'
என்பதுதான் அது.

இதுவும் வலுவான சான்றில்லை.

அதே தமிழ் நாவலர் சரிதையின் செய்யுளுக்கான அடிக்குறிப்பு
'இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான்'
என்று உள்ளது.
இதுவும் வலுவான சான்றில்லை.

ஆனால்,

ஒட்டக்கூத்தர் தனது மூன்று உலாக்களிலும் சேரன் சோழனை விடுவித்ததைக் குறிப்பிடுகிறார்.

"மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும்" (17)

"... பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்" (18)

"நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்டகோன்" (19)

இதையே சயங்கொண்டாரும் கலிங்கத்துப் பரணியில் இராச பாரம்பரியத்தில்,

"களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்"
என்று குறிப்பிடுகிறார்.

நன்றி:
டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களின் முதல் ஆய்வுத்தொடர்.
'செந்தமிழ்ச்செல்வி' (1982 நவம்பர் - 1983 மே )

ஆகவே அதிகமான சான்றுகள் எதை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றனவோ அதுவே உண்மை.

ஆக சோழன் சிறையில் அவமதிக்கப்படவில்லை.

  இது மூவேந்தர் ஒற்றுமையின்றி அடித்துக்கொண்டனர்.
சிறைபிடித்தவனை அவமதித்து சாகடித்தனர் என்ற எண்ணத்தை விதைக்க ஒரு அடிக்குறிப்பை பெரியதாக்கி தமிழ்ப் பகைவரால் புனையப்பட்ட சூழ்ச்சிக் கதை.

Monday, 6 February 2017

இராமன் சோழன் மரபினன் - பாவாணர்

இராமன் சோழன் மரபினன் - பாவாணர்

சோழன் வேந்தனானபின், வடநாட்டில் தன் படிநிகராளியாக அமர்த்திய சோழக்குடியினன் வழிமரபே சமற்கிருத இலக்கியத்திற் 'சூரியவமிசம்' என்று சொல்லப்படுவது.
அவ்வழியில் வந்தவனே இராமன்.

நூல்: இராமாயணக்காலம்
ஆசிரியர்: ஞா.தேவநேயப் பாவாணர்

Tuesday, 25 October 2016

தேவரடியாரும் தேவதாசிகளும்!


தேவரடியாரும் தேவதாசிகளும்!

-சில கல்வெட்டுச் சான்றுகள்
ம.செந்தமிழன்

இக்கட்டுரையில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர், கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த களப்பிர, பல்லவர்களை மட்டுமே. பிற்காலத்தில் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்ட, விஜயநகர, நாயக்க மன்னர் குலங்களையும் ‘திராவிடர்’ எனும் சொல் குறிக்கிறது.

இன்றைக்குத் தமிழகத்தில் வாழும் சாதி வழிப்பட்ட ஆந்திர, கன்னட மூதாதையர்களின் குலத்தவரைக் குறிக்கவில்லை. அவர்களை ‘திராவிடர்’ என அழைப்பது தவறானதும், வரலாற்று நோக்கம் அற்றதும் என்பது என் கருத்து.

தமிழகத்தில் அக்கால திராவிட குலத்தவர் படையெடுப்பு நடத்தியபோது, பல்வேறு காரணங்களுக்காகக் ஆந்திர, கன்னடப் பகுதிகளில் இருந்து குடியமர்த்தப்பட்ட பொதுமக்களை இன்றைக்கும் திராவிடர் என வகைப்பிரிப்பது தவறு.

எந்தச் சமூகத்திலும் படையெடுப்பு நிகழும்போது இவ்வாறான குடியேற்றங்களும், இனக்கலப்பும் ஏற்படத்தான் செய்யும். ஆக, இக்கட்டுரை, ‘திராவிடர்; எனக் குறிப்பிடுவது, வரலாற்று நோக்கில், அவ்வரலாறு நிகழ்ந்த காலத்தைய அயல் குலத்தவரைத்தானே அன்றி, நிகழ்காலத்தவரை அல்ல!


தேவரடியாரும் தேவதாசிகளும்


தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

’தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’

(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17)


தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

’தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334)

பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.

’கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது’

(கர். கல் VAK 105)

(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19)

இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர். மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை,ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.
இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.

தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;

’கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ (மேலது நூல் /பக் 22)

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.


பெண்களின் நிலை:

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்
நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?





லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.

’கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன’ என்கிறார் அவர்.

கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.

கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில்தான். இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே!
இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழியப் பணிகளைச் செய்தார்.

Tuesday, 3 May 2016

தெலுங்கு நாயக்கர்களின் அற்பத்தனம்

தெலுங்கு நாயக்கர்களின் அற்பத்தனம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் கோவிலின் வலதுபக்க பிரகாரச்சுவற்றில்,
கருவறைக்கு செல்வதற்கு முன்பான மண்டபச்சுவற்றில்,
முதல் சிலையாக நிற்கும் ஒரு சிலை ஒரு நாயக்கர் சிற்பம்.

எந்த நாயக்க மன்னன் எனத்தெரியவில்லை. கிருஷ்ணதேவராயராக இருக்கவே வாய்புகள் அதிகம்.
சராசரி உயமுள்ள அரசன் என போர்த்துசுக்கீய குறிப்புகள் சொல்கின்றன.
இங்கு சிலையின் உயரமும் குறைவே.

சிலையை சுற்றி சிவகணங்கள் வணங்கியபடி அமர்ந்திருக்கின்றன. ஆனால், மன்னர்களை சிவகணங்கள் என்றும் வணங்காது.

இங்கேயிருந்த சிவன் சிலையைப் பெயர்த்து அந்த இடத்தில் நாயக்கமன்னனில் சிலையை நிறுவியிருக்கிறார்கள்.

வெட்கம் கெட்ட அற்பத்தனத்தின் அளவுகடந்த நிலை இது.

தெலுங்கு நாயக்கர்களுக்கு சோழர்கள் அளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சிலைகளைச் செய்ய திறமையில்லை என்பதற்காக இப்படியா கீழ்த்தனமாக செய்வது?

இந்த இழிவான நாயக்க "சிலை திணிப்பு" தஞ்சை பெரியகோவில் உட்பட அனைத்து பெரிய கோயில்களிலும் உள்ளது.

முதலில் தமிழ் கலைகளை 'திராவிட கலைகள்' என்று திரிப்பதை தடுக்கவேண்டும்.

இதுபற்றி முறையான ஆய்வு நடத்தி திணிக்கப்பட்ட நாயக்கர்கால சிலைகளை பெயர்த்து வெளியேற்றவேண்டும்.
----------------

இதுபற்றி எழுதிய எயில்நாடன் படங்களையும் இணைத்திருந்தார்.
அவர் எழுதிய அப்பதிவில் ( கங்கை கொண்ட சோழபுரத்தில் நாயக்கர் சிலை ) தற்போது படங்கள் நீக்கப்பட்டுவிட்டன.

கங்கைகொண்ட சோழபுரம் செல்வோர் படம் எடுக்கமுடிந்தால் எடுத்து எனக்கு அனுப்பவும்.

Thursday, 31 March 2016

சேரனையும் புகழ்வோம்

சேரனையும் புகழ்வோம்

சேரன் கருவூரில் இருந்தான். சோழன் அவனைப் பார்க்க யானைமீதமர்ந்து வந்தான்.
அவன் படையெடுத்துதான் வந்துள்ளான் என்று நினைத்து சேரனின் வீரர்கள் சூழ்ந்துகொண்டனர்.
இதனால் சோழனின் யானைக்கு மதம்பிடித்துவிட்டது.

இதை புலவரும் சேரனும் மாடத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
புலவரிடம் இவன் யார் என்று சேரன் கேட்கிறான்.
புலவர் சோழனின் புகழை எடுத்துக்கூறி அவனைக் காப்பாற்றுமாறு பாடினார்.
(எப்பிடி பாத்தாலும் நம்ம பயடா இவன்)

உடனே சேரன் போய் யானையை அடக்கி சோழனைக் காப்பாற்றினான்.

சேரனின் பெயர்: சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை

சோழனின் பெயர்: முடித்தலை கோப்பெருநற்கிள்ளி

புலவரின் பெயர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

பாடல்: புறநானூறு 13

"இவன்யார்" என்குவை ஆயின், இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம,
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

”இவன் யார்” என்று கேட்கிறாயா?
இவன் அம்புகளால் துளைக்கப்பட்ட புள்ளிகளுடன் சிதைந்து காணப்படும் புலித்தோலாலாகிய கவசத்தைத் தன் வலிய அழகிய மார்பில் அணிந்து கூற்றுவன் போல் யானைமீது வருகிறான்.
அந்த யானை வருவது கடலில் ஒருமரக்கலம் வருவதைப்போலவும்
பல விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் திங்களைப்போலவும் காட்சி அளிக்கிறது.
அந்த யானையைச் சுற்றிலும் சுறாமீன்களின் கூட்டம் போல் வாளேந்திய வீரர்கள் சூழ்ந்துள்ளனர்.
அவர்களிடையே உள்ள பாகர்கள் அறியாமலேயே அந்த யானை மதம் கொண்டது.
இவன் நாட்டில் வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெற்கதிர்களோடு சேர்த்து அள்ளிச் செல்வார்கள்.
இவன் கொழுத்த மீனையும் முதிர்ந்த கள்ளையும்,
நீரை வேலியாகவும் உள்ள வளமான நாட்டுக்குத் தலைவன்.
இவன் இன்னலின்றித் திரும்பிச் செல்வானாக.

நன்றி: https:// ta.m.wikipedia. org/wiki/சேரமான்_அந்துவஞ்சேரல்_இரும்பொறை
நன்றி: தமிழ் வளர்ப்போம் (முகநூல்)

Sunday, 13 December 2015

புலியும் சிங்கமும் மோதினால்?

சிங்கம்: ஓங்கியடிச்சா ஒன்ற டன் வெயிட்றா
புலி: நா சும்மா அடிச்சாலே ஒன்ற டன் வெயிட்றா

சிங்கம் புலியைவிட வேகமாக ஓடத்தான் முடியும்.
ஆனால், அறிவிலும் பலத்திலும் தன்னை மிஞ்சிய புலியுடன் மோதி வெல்லமுடியாது.

இது புலிகளின் செழுமையான மண்.
பாலை விலங்கான சிங்கம் அது நான்முகச் சிங்கமோ வாளேந்திய சிங்கமோ
இங்கே அடங்கித்தான் ஆகவேண்டும்.