Saturday 13 April 2024

கோவில் திருவிழாவிற்கு ஊர்வலத்தை விட்டுக்கொடுத்த இசுலாமியர்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிராமம் கெங்குவார்பட்டி.. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தி பாடல்கள் தினந்தோறும் காலை, மாலை என இருவேளை ஒளிபரப்பப்படும்.
அதேநேரம் பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்படும் போது கோவிலில் ஒலிக்கும் பக்தி பாடல்களை நிறுத்தி விடுவார்கள்.
 மேலும் திருவிழாவின் கடைசி நாளில் பள்ளிவாசலுக்கு தனியாக பிரசாதம் கோவில் நிர்வாகத்தால் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கெங்குவார்பட்டி முத்தலாம்மன் கோவில் திருவிழா நேற்று உற்சாகத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.
 வெளியூர்களில் வாழும் கெங்குவார்பட்டி மக்கள் மொத்தமாக சொந்த ஊர் வந்து விழாவினை சிறப்பித்தனர். கிராம மக்கள் பலர் முத்தலாம்மனுக்கு பூச்சட்டி எடு்த்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வெள்ளிக்கிழமையான இன்று திருவிழா நிறைவு பெற்றது.
இதனிடையே முத்தாலம்மன் கோவிலில் இருந்து சுமார் 50 அடி தொலைவில் பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. 
நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஒன்று கூடி ஊர்வலமாக மஞ்சளாறு கரையோரத்தில் உள்ள தோப்புக்கு செல்வது வழக்கமாகும்.
ஆனால் நேற்று முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் என எண்ணி ஊர்வலம் செல்வதை முஸ்லிம்கள் தவிர்த்தார்கள். 
அவர்கள் தனித்தனியாக பள்ளிவாசல் தோப்புக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர். 
பின்பு அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். 
இந்த சம்பவத்தை பார்த்த கெங்குவார்பட்டி ஊர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
 மேலும் இ்ந்த சம்பவம் மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துகாட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: oneindia இணையம்

Friday 5 April 2024

தொடரும் வந்தேறிகளின் தமிழின அடையாள வெறுப்பு

தொடரும் வந்தேறிகளின் தமிழின அடையாள வெறுப்பு

அண்ணாதுரை முதல் ஸ்டாலின் வரை தொடரும்  தமிழர் அடையாள வெறுப்பு 

 1968 இல் அண்ணாதுரை போட்ட இருமொழிக் கொள்கை அரசாணைக்கும்
2021 இல் ஸ்டாலின் போட்ட அயலகத் தமிழர் நலக் கொள்கை அரசாணைக்கும் 
 என்ன ஒற்றுமை?!
 இரண்டிலுமே தமிழர், தமிழ்மொழி என்கிற வார்த்தைகள் இல்லை.

 1968 இல் நீதிக் கட்சி கொண்டுவந்திருந்த மும்மொழிக் கொள்கையைக் கைவிட்டு (இந்தியை கைவிட்டு) அண்ணாதுரை தனது இருமொழிக் கொள்கையைக் கொண்டுவந்த போது
"தமிழ் மற்றும் ஆங்கிலம்" என்று தெளிவாக கூறவில்லை மாறாக  "ஆங்கிலம் மற்றும் தாய்மொழி" என்று கூறி தாய்மொழி என்பற்கு "பிராந்திய மொழி (தமிழாம்!) அல்லது பிராந்திய மொழி அல்லாத இந்திய மொழி" என்று வரையறை செய்தார்.
 அதாவது தமிழ் என்றே அரசாணையில் வரவில்லை!
எப்படி ஆங்கிலம் என்று தெளிவாக கூறி தமிழ் என்பதை உச்சரிக்க அண்ணாவுக்கு நாக்கு கூசியதோ அதேபோல மு.க.ஸ்டாலினுக்கும் கூசுகிறது.

 2021 இல் ஸ்டாலின் தனது மொழிவழிச் சிறுபான்மை நலக் கொள்கையில் தெளிவாக "மொழிவழிச் சிறுபான்மை என்போர் முக்கிய மொழி (principle language! அதாவது தமிழ்!) அல்லாத மொழி பேசுவோர் அவர்களில் தெலுங்கு, கன்னடம், உருது, சௌராஷ்ட்ரா பேசுவோர்  கணிசமானோர்" என்று தமிழரைத் தவிர பிறரை தெளிவாக மொழி அடையாளத்துடன் வரையறுத்துள்ளார். 
இதிலும. தமிழ் என்று வரவில்லை.

 தமிழர் என்பதற்கான ஒரு வரையறையும் வேறொரு ஆவணத்தில் ஸ்டாலின் அரசு வரையறுத்துள்ளது  அதாவது "தமிழ்நாட்டார் யார்" என்ற வரையறை!

 அது அயலகத் தமிழர் நலக் கொள்கை வரையறையில் "தமிழ்நாட்டில் பிறந்த அல்லது 3 ஆண்டுகள் வாழ்ந்த எவரும் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்தால்" என்று அயலகத் தமிழருக்கான வரையறையைச் செய்கிறார். 
 அதாவது தமிழகத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அவர் தமிழர், அல்லது தமிழகத்தில் மூன்றாண்டு வாழ்ந்தாலே அவர் தமிழர்!
 இங்கே மட்டும் மொழி வரவில்லை!

மேற்கண்ட கருத்துகள் fine time media இல் திரு. அறிவன் ஸ்ரீனிவாசன் கொடுத்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்டன.

 இதிலிருந்து தெரிவது என்ன?!
இன்றும் தொடர்கிறது வந்தேறிகளின் தமிழின அடையாள வெறுப்பு! 

Wednesday 3 April 2024

பாமக இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது

பா.ம.க இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது 

2013 இல் எழுதப்பட்ட பதிவு 

பாட்டாளி மக்கள் கட்சியின் 'இப்தார்' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள்!
பழனி பாபா அவர்களால் வளர்க்கப்பட்ட பா.ம.க, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட போது, 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம்களை வேட்பாளராக்கி முஸ்லிம்களின் பணம் பொருளை வீணாக்கியது.

 திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அகரம் கான் என்ற முஸ்லிமை தான் களத்தில் இறக்கியது.
ஆனால், 2001ல் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளைப் பெற்றபோது (20 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்) ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை.

 2006ல் திமுக கூட்டணியில் 31 இடங்கள் பெற்றபோது (17 எம் எல் ஏக்கள் வெற்றி பெற்றனர்) கூட ஒரு முஸ்லிமும் நிறுத்தப் படவில்லை.

2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் ஒரு முஸ்லிமுக்கும் வாய்ப்புத்தரவில்லை.

குறிப்பாக, ஏற்கனவே முஸ்லிம்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,க்களாக இருந்த தொகுதிகள் உள்ளிட்ட 'நிச்சய வெற்றி' தொகுதிகளில் கூட முஸ்லிம்கள் நிறுத்தப் படவில்லை.
1. புவனகிரி
2.திண்டுக்கல்
3.பூம்புகார்
4.ஆற்காடு
5.ஆலங்குடி
6. திண்டிவனம்
7.நெய்வேலி
8.திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) போன்ற தொகுதிகளை தன் வசம் வைத்திருந்த பாமக, ஒரு இடத்தில் கூட முஸ்லிம்களை நிறுத்தாமல் 'ஓரவஞ்சனை' செய்தது.

திமுக கூட்டணியில் கணிசமான உள்ளாட்சி இடங்கள் கிடைத்த போதும் முஸ்லிம்களை
புறக்கணித்த கட்சி தான், பாமக.
நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே நிலை தான்.
Maruppu - மறுப்பு
05.08.2013

Sunday 31 March 2024

பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்

பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்!
இனப்படுகொலை நடத்த காத்திருக்கும் கன்னடர்!
அமைதியாக வேடிக்கை பார்க்கும் திராவிடம்!

 தலைக்கு ஒருநாளுக்கு 108 லிட்டர் கையிருப்பு வைத்துள்ளது கர்நாடகா!
 தரவேண்டிய நீரில் பாதி தான் தந்துள்ளது!
உச்ச நீதிமன்றம் கூறினாலும் தண்ணீர் தரமுடியாது என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டது கர்நாடக அரசு!

கீழ்க்காண்பது விகடன் 29.03.2024 இல் வெளியிட்டுள்ள கட்டுரை

 பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: 
உண்மைகளும் உருட்டுகளும்!

மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு கர்நாடகம் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.
 அதன் ஒரு கட்டமாக கடந்த சில மாதங்களாக பெங்களூரு மாநகரில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்ற தகவலை பரப்பி வருகிறது கர்நாடக அரசு.
 கர்நாடகம் சொல்வதெல்லாம் உண்மையா, இல்லை வழக்கம்போல உருட்டுகளா என்பது குறித்து தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தில் மாநிலச் செயலாளர் முனைவர் வீரப்பனிடம் பேசியபோது, “சென்ற ஆண்டு (2023) பருவமழை மிகக் குறைவாகப் பெய்ததால் பெங்களூரு மாநகர மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கிறது கர்நாடக அரசு.
 அம்மாநில துணை முதலமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் 'கர்நாடகாவில் இந்த ஆண்டு மிகக் குறைவாகவே மழை பெய்தது.  பெங்களூருவில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீரும் தேவைக்கேற்ப வழங்க முடியவில்லை. எனவே காவிரி நதியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை காவிரி மேலாண்மை ஆணையம், ஏன் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தினாலும், ஒரு சொட்டுத் தண்ணீரையும் கர்நாடகா வழங்க முடியாது' என்று தெரிவிக்கிறார். 
அதே சமயம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் 67.16 டி.எம்.சி கொண்ட நீர்த்தேக்கத்தைக் கட்டியே தீருவோம் என்றும் முழங்குகிறார். 
இத்தனையும் பார்த்துக் கொண்டு தமிழ்நாடு அரசு மிக மிக அமைதியாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையிலும் காவிரி டெல்டா பகுதி உழவர் சங்கங்களும் காவிரி உரிமை மீட்புக் குழுவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. 
இருப்பினும் தமிழ்நாட்டின் உயர் அலுவலர்களும் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்களும் இன்னும் குறிப்பாக இந்நிலை பற்றி உரத்துப் பேச வேண்டிய காவிரி தொழில் நுட்பக் குழுமமும் உண்மைநிலை பற்றிப் பேசாமல் இருப்பது நம்மைப் போன்றோர்க்குப் பெரும் கவலையளிக்கிறது.


இணையதளத்தில் தேடினால் கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் (2019 - 2023) பெய்த மழையளவு கிடைக்கிறது. நம்மைப் பொறுத்த வரை கர்நாடகா மாநில முழுமையும் பார்க்காமல் காவிரி ஆறு பாயும் பகுதியிலுள்ள மழைப் பொழிவை மட்டும் பார்த்தால் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 714 மி.மீ. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் ஆண்டு சராசரியை விடக் (+75 சதவிகிதம் வரை) கூடுதலாகவே மழைபெய்துள்ளது. ஆனால் 2023-ல் பெய்த மழை அளவு 572 மி.மீ. இது சராசரி மழைப்பொழிவை விட 20 சதவிகிதம் குறைவு.
இதன்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு 177.25 – டிஎம்சியில் 20 சதவிகிதம் (34.35 டிஎம்சி) குறைத்து 137.80 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட்டிருக்க வேண்டும். 
நமக்கு பில்லிகுண்டுலுவில் வந்த காவிரி நீரின் அளவோ வெறும் 78.10 டி.எம்.சி மட்டுமே. 
பொய்யான யதார்த்த கள நிலவரத்திற்கெதிராக அரசியல் நாடகமேடை நிகழ்வுகளை காவிரியில் நமக்குத் தராமலிருக்கவும் மேக்கேதாட்டூ அணையினைக் கட்டவும் அழுத்தம் தர அரங்கேற்றிவருகிறது.
 இத்தகைய பொய்ப்புனைவுப் பரப்புரைகளை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. 
காலதாமதமின்றி அலட்சியமாக இல்லாமல் உடனே செயற்படவேண்டும். 
அப்பொழுதுதான் நம் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட முடியும். 
சட்டநடவடிக்கைகளைக் கர்நாடகா அரசு எப்போதும் சட்டை செய்வதில்லை.

எனவே இந்திய அரசியல் சட்டப் பிரிவு 365-இன்படி குடியரசுத் தலைவருக்குக் கடுமையான அழுத்தம் தரவேண்டும். 
தமிழக அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும், காவிரி உரிமை மீட்புக்குழுவும் தங்களுக்குள்ள அரசியல் பக்திப் பரவசங்களை ஒதுக்கிவிட்டு கர்நாடகாவின் பொய்ப்பரப்புரைகளை மேற்குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மறுத்து விளக்கித் தொடர் எழுச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும்.

காவிரியிலிருந்து பெங்களூரு மாநகரத்திற்கு நாள் ஒன்றுக்கு 1450 எம்எல்டி அளவுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக காவிரி ஐந்தாம் நிலை திட்டத்திலிருந்து 750 எம்எல்டி குடிநீர் வழங்கிடப் பணிகள் நடந்துவருகின்றன. 2023-ல் பெங்களூரு மாநகரின் மக்கள் தொகை 1 கோடியே 29 லட்சம். ஓர் ஆளுக்கு, நாள் ஒன்றிற்கு 108 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னை மாநகர் (2023) மக்கள் தொகை 1 கோடியே 18 லட்சம். வழங்கப்படும் குடிநீரின் அளவு 1000 எம்.எல்.டி. 
ஓர் ஆளுக்கு, நாள் ஒன்றிற்கு 85 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.

சென்னை மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக சென்னைக் குடிநீர் வாரியமோ செய்தி ஏடுகளோ தமிழகத் தொலைகாட்சிகளோ பரப்புரை செய்யவில்லை. ஆனால், சென்னை மக்களைவிடக் கூடுதலாகக் குடிநீர் பெறும் பெங்களூரு மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக நாள்தோறும் பரப்புரை செய்வதை ஏன் தமிழ்நாடு அரசு மறுதலித்துப்பேசவில்லை. இதிலிருந்தே கர்நாடகா அரசு எப்படி நாடகமேடைகாட்சிகளை அரங்கேற்றுகிறது என்று தெளிவாகப் புரியும்.

நம் சென்னைக் குடிநீர் வழங்கு வாரியம் 15-03-2024-ல் வெறும் 10.11 டிஎம்சி அளவுக்குத் தண்ணீர் இருப்பை வைத்துக் கொண்டு தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாமல் வரும் 9 மாதங்களுக்கு வழங்குவோம் என்று தெரிவிக்கிறது. ஆனால் கர்நாடகா அரசோ காவிரி அணைகளில் 60 டிஎம்சி க்குமேல் தண்ணீரை இருப்பில் வைத்துக் கொண்டு பெங்களூரு மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது என்று வேண்டுமென்றே நாடகமாடுகிறது. 

 நம் தமிழக அரசு ஏன் இதை வெளிப்படுத்தி மறுத்து அறிக்கை விடவில்லை என்பது புதிராக உள்ளது.
உண்மை நிலைமை இப்படியிருக்கும்போது செய்தி இதழ்களும் நம் ஊர் தொலைகாட்சிகளும் கூட பெங்களூருவில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கின்றன. 
இவற்றைப்பார்த்து அமெரிக்க நண்பர் இச்செய்தி உண்மையா என கேட்கிறார். 
கர்நாடகத்தின் பொய் பிரசாரங்களை தமிழக அரசு கண்டிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது” என்றார்.
 பெங்களூரில் எங்களுடைய தொடர்பில் குடும்பத்தினர்களும் பணிபுரிபவர்களும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்.

Also Read
மேக்கேதாட்டூ... நெருங்கிவிட்ட ஆபத்து... காவிரி ஆணையம் அனுமதி! துணைபோகிறதா தமிழக அரசு?

Also Read
மேக்கேதாட்டூ அணை விவகாரம்: அடித்து ஆடும் கர்நாடக காங்கிரஸ் அரசு... அமைதி காக்கிறதா திமுக?

Also Read
பெங்களூரு தண்ணீர் பஞ்சம்... கேவலமான அரசியல்!

Also Read
`தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர நாங்கள் முட்டாள்கள் அல்ல'-கடுகடுக்கும் சிவக்குமார், மௌனம் காக்கும் திமுக

Saturday 16 March 2024

The TamBrahs

The TamBrahs

இன்று நாம் தமிழ்குடிகள் பிற வந்தேறிகளுடன் பொதுவான குடி அடையாளத்தில் அடைக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கிறோம்.
 இணைய யுகத்தில் இதை முதலில் தொடங்கியது பார்ப்பனர்கள் தான்.
  இன்று குலாலா அடையாளத்தில் இருந்து குயவர்களும்
 நரிக்குறவர் அடையாளத்தில் இருந்து குறவர்களும்
 யாதவர் அடையாளத்தில் இருந்து கோனார்களும் தமது இன அடையாளத்தை  மீட்க குரல் எழுப்புகிறோம்.

  இப்படி பொதுவான 'பிராமணர்' அடையாளத்தில் வெகுகாலமாக அடைக்கப்பட்டிருந்த பார்ப்பனர்கள் தம்மை தனிப்படுத்த  'தமிழ் பிராமணர்' அதாவது 'தம்பிராஸ்' என்ற நவீன பெயருடன் தமது இன அடையாளத்தை தனித்து காட்ட முற்பட்டனர்.

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதை (பெரும்பாலும்) அமெரிக்காவில் நன்கு செட்டில் ஆகிவிட்ட தமிழே தெரியாத மாடர்ன் பார்ப்பன பிள்ளைகள் செய்துள்ளனர்!
 உலகப் பார்ப்பனர் இதைப் பின்பற்றி ட்ரென்டிங் இல் வைத்துள்ளனர்.

 இது ஆதிக்க சாதிவெறி என்றால் அவர்கள் 'பிராமணர்' என்றாலே போதுமானது!
 தமிழ் என்கிற இன அடையாளத்தை அதில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை!
 ஆனாலும் இயல்பாகவே இது நடந்துள்ளது!
 
இயல்பானது இனம்!
பார்ப்பனர் தமிழரே!
 

Saturday 2 March 2024

சாந்தன் இன்னொரு திலீபன்

சாந்தன் இன்னொரு திலீபன்

 அன்று திலீபன் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தபோது ஈவு இரக்கமே இல்லாமல் சாகவிட்டது ஹிந்தியம்!
 ஆனால் சாந்தனை 30 ஆண்டுகள் அனுஅனுவாக வதைத்து சாகும் தருவாயில் கொஞ்சம் கருணை காட்டியது ஹிந்தியம்!
 ஆனால் அதையும் விடாத திராவிடம் அவரை பிடித்து மேலும் வதைத்து அவர் குற்றுயிராக தன் ஊருக்குத் திரும்ப இருந்த கடைசி நாளில் கொன்று முடித்தது!

 பிரபாகரன் பிறந்த வயிற்றை வைத்திருந்தார் என்பதாலேயே பார்வதியம்மாள் மரணத் தருவாயில் சிகிச்சைக்கு வந்தபோது அவரைத் திருப்பி அனுப்பி கொன்ற திராவிடம் ஹிந்தியத்தை விட கொடூரமானது! 

 போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று வெளிப்படையாகவே கூறிய திராவிடம் சட்டத்திற்கு புறம்பாக ஈழத் தமிழரை வதைக்கவே கட்டியுள்ளது சிறப்பு முகாம் எனும் கொட்டடி சிறை!

  நீதிமன்றம் விடுதலை செய்த 5 பேரை சட்டவிரோதமான  கோட்டடியில் இறுக பூட்டி 2 பேரை சாகடித்துவிட்டது!
இன்னும் 3 பேர் சாவுக்கு காத்திருக்கின்றனர்!

 இதேபோல கர்நாடகா விலும் தூக்குமேடை வரை போன 4 தமிழர்கள் கதை இருக்கிறது!
 செய்யாத தவறுக்கு கைதாகி ஹிந்தியாவிலேயே அதிக நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டவர் வீரப்பன் அண்ணன் மாதையன்!

  கொட்டடியில் அடைக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரில் 2 பேர் இறந்துவிட்டனர். மீதி 2 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் சிறையில் சாவின் விளிம்பில் நிற்கின்றனர்.

 தமிழர்களை 'வைத்திருந்து கொல்வது' ஹிந்தியமும் திராவிடமும் இன்பமடைய சிறந்த வழியா?!

 33 ஆண்டுகளாக பார்க்க முடியாத தன் மகன் வரப்போகிறான் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் அந்த முதிய தாயின் கண்முன் உருக்குலைந்து இறந்த மகனது பிணத்தை போட்டு எக்காளமிட்டு சிரிக்கிறது திராவிடம்! 

கூடவே கைகொட்டி கூத்தாடும் இந்தியமும் சிங்களமும்!

 இதற்கு தீர்வு இல்லையா?!

இதற்குத்தானா தங்கை செங்கொடி தன்னை தீயில் போட்டு அலறி நம்மை அறியாமையில் இருந்து எழுப்பினாள்?!

 சங்கரலிங்கனார் தொடங்கி சாந்தன் வரை ஒரு தமிழன் அவன் இந்திய குடிமகனோ இலங்கை குடிமகனோ அறவழியோ ஆயுதவழியோ ஆணோ பெண்ணோ அப்பாவியோ எவனாக இருந்தாலும் வதைபட்டு சாவதுதான் விதியா?!

 
 

 

Thursday 29 February 2024

திராவிட மாடல் ஆட்சியின் அதிர்ச்சிகள்

திராவிட மாடல் ஆட்சி 
அதிர்ச்சிகளும் ஆறுதல்களும்

நாள்: 29.02.2024

  முரசொலி மூலப் பத்திரம் சர்ச்சையில் 'அரசியலில் இருந்தே விலகுவேன' என்று வாய்ச் சவால் விட்டதில் இருந்து ஸ்டாலின் தீவிரமாக அரசியல் களத்திற்கு வருகிறார்.
  தேர்தல் பிரச்சாரத்தின் போது குனியமுத்தூர் பிரச்சாரத்தில் கேள்விகேட்ட பெண்ணை வேலுமணி ஆள் என்று கூறி வெளியேற்றிய அன்றிலிருந்து மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி ஏற்படுத்துவது தொடங்கிவிட்டது.

 இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் நடந்த அதிர்ச்சிகள்...
* 380 கோடி கொடுத்து பிரசாந்த் கிஷோர் வரவழைப்பு
* நால்வர் விடுதலை ஆனதும் சிறப்பு முகாமில் அடைப்பு
* விவசாயிகள் மீது குண்டாஸ்
* nlc க்காக விளைந்து நின்ற நிலம் அழிப்பு
* இசுலாமியர் விடுதலைக்கு எதிராக அறிக்கை 
* வேங்கைவயல் குடிநீரில் மலம்
* தூத்துக்குடி காதல் திருமணம் ஆணவக்கொலை
* சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து கதறல்
* நெல் கொள்முதல் நிலைய கொட்டகைக்கு நிதி ஒதுக்காமை
* மேயர் பிரியா ரங்கநாத நாயுடுவால் பொதுவெளியில் பாலியல்  சீண்டல்
* பேனா சிலை
* பாடபுத்தகத்தில் திராவிட புரட்டு
* நீட் கையெழுத்து நாடகம் 
* உச்ச நிலையில் கனிமவள கொள்ளை
* கர்நாடக சென்று காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் 
* ஆனாலும் காவிரி நீர் மறுப்பு காய்ந்து போன அணை
* மின்கட்டண உயர்வு
* பால் விலையேற்றம் மில்லி குறைப்பு
* தாலி தங்கம், லேப்டாப் , ஸ்கூட்டி போன்ற அதிமுக மகளிர் திட்டங்கள் நிறுத்தம்
* டாஸ்மாக் 10ரூ அதிகம் வாங்கிய செந்தில் பாலாஜி 
* வேலைவாங்கித் தருவதாக பணம் வாங்கிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது
* திமுக வாக்களித்த நிலம் கிடைக்காத அஸ்வினி எனும் நரிக்காரர் பேட்டி அளித்த பிறகு அடிதடி வழக்கில் கைது
* சாலிகிராமம் கூட்டத்தில் பெண் போலீஸ் மீது திமுக தொண்டர்கள் பாலியல் அத்துமீறல்
* ஈரோடு இடைத்தேர்தல் காளியம்மாள் மீது பீர் பாட்டில் வீச்சு
* ஈரோடு இடைத் தேர்தல் மக்களை அடைத்துவைத்து  விருந்து மற்றும் இன்ப சுற்றுலா 
* மாலைத்தீவு ராணுவம் தமிழக மீனவர் கைது
* ரயில் வடவர் பெண்ணிடம் அத்துமீறல் 
கஞ்சா 
* குட்கா தடை நீக்கம்
* கள்ளசாராய மரணம் அதற்கு 10 லட்சம் நிவாரணம்
* குடிகாரர் திருந்தினால் அரசுவேலை
* சென்னை ஆர்.ஏ.புரம் 40 ஆண்டுகால குடியிருப்பு இடிப்பு பா.ம.க தொண்டர் தீக்குளிப்பு
* உதயநிதி சினிமாவை அரசு ஊழியர் பார்க்க கட்டாயப்படுத்தல்
* அனைத்து திரைப்பட வியாபார உரிமையையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பிடுங்குதல்
* கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மர்ம மரணம்
* நாங்குநேரி பள்ளி மாணவர் கஞ்சா போதையில் சக மாணவர் மாணவி மீது அரிவாள் வெட்டு 
* ரேசன் கடைகளில் செறிவூட்ட அரிசி 
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை இல்லை
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஐ.ஜி யாதவ் பதவி உயர்வு 
* மொடக்குறிச்சி வடவர் போலீஸ் ரகுபதி மீது தாக்குதல்
* தவறான சிகிச்சையால் அரசு மருத்துவமனையில் கை அழுகி குழந்தை இறப்பு
* குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு அமைச்சர் மனோ தங்கராஜ் குழந்தை தொழிலாளர் பற்றிய news 24x7 புகாரை ஏற்க மறுப்பு 
* அரசு அலுவலகம் புகுந்து மணல் மாபியா வி.ஏ.ஓ வெட்டிக் கொலை
* துடியலூர் அரசுப் பள்ளியில் இசுலாமிய மாணவியை செருப்பை சுத்தம் செய்யவைத்த ஆசிரியர்கள்
* விமான நிலையம் அமைக்க பரந்தூர் விளைநிலஙகள் பிடுங்குதல் அதனால் பெரிய போராட்டம் அதற்கு வேலி போட்டு போலீஸ் அடக்குமுறை
* அம்பாசமுத்திரம் பலர் பல் பிடுங்கிய போலீஸ் பல்வீர் சிங் அவரது இடைநீக்கம் ரத்து
* தொடர்ந்து 9 லாக்கப் மரணங்கள்
* நெல்லை ஆற்றில் கஞ்சா போதையில் பட்டியல் சிறுவர் மீது சிறுநீர் கழித்த ஆதிக்க சமூகத்தினர்
* உதயநிதி சினிமாவில் பிசி அதனால் 2023 தேசிய விளையாட்டுக்கு 503 தமிழக மாணவர் அனுப்பப் படவில்லலை
* குறவர் பெண் ஆந்திரா போலீசால் வன்புணர்வு பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி சித்திரவதை 
* பள்ளி மாணவருக்கு அழுகிய முட்டை அதற்கு ஓடு மீதுள்ள கறுப்பு அச்சு உள்ளே சென்றுவிட்டதாக மழுப்பல்
* காஞ்சிபுரம் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் அது காக்கா முட்டை என்று மழுப்பல்
* மதுரை பெருங்குடி 6 வயது சிறுவன் உட்பட 5பேர் ஆதிக்க சாதிவெறியரால் வெட்டிக் கொலை
* சென்னை வெள்ளம் வரலாறு காணாத பாதிப்பு மிக அசட்டையாக நடந்துகொண்ட அரசு
* வெள்ள நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர்
* உதயநிதி திரைப்படம் நடிப்பு
* தென்காசிக்கு சலூன் கோச் சொகுசு பெட்டியில் ஸ்டாலின் பயணம்
* ஜெயலலிதா மரணம் குறித்த குழப்பமான அறிக்கை 
* குறவருக்கு சாதிச் சான்றிதல் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டி மகனுக்கு வேலை கிடைக்காமல் தந்தை தற்கொலை
* இதனால் குறவர் உரிமைக்காக 6 நாள் உண்ணாவிரதம் இருந்த இரணியன் மற்றும் தென்காசி எம்.பி தனுஷ் குமார் KKSSRR வீட்டில் நிற்கவைத்து சாதிய ரீதியில் அவமரியாதை
* பத்திர பதிவு கட்டண உயர்வு
* ஓட்டல் தமிழ்நாடு எமரால்டு என பெயர்மாற்றம்
* செய்யாறு சிப்காட் ஆதரவுப் போராட்டம் பணம் கொடுத்து வெளியூர் நபர்களை விவசாயிகள் போல நடிக்க வைத்தது
* சத்துணவு தனியார் மயமாக்க முயற்சி
* வேலை நேரம் 12 மணிநேரமாக்க முயற்சி
* மவுன்ட் ரோடில் பொதுமக்களுக்கு இடையூறாக தெலுங்கு நடிகர் அல்லி அர்ஜூன் கார் ரேஸ் நடத்த மைதானம் அமைத்தல்
* செஸ் போட்டி பிரக்யானந்தா புறக்கணிப்பு
* இசுலாமிய அமைச்சர் 3 ல் 2 பதவி பறிப்பு 
* பி.டி.ஆர் விரட்டி அடிப்பு உதயநிதிக்கு பதவி
* விளையாட்டு மைதானஙகளில் மது அனுமதி 
* அரசு பஸ் மீது திமுக குடும்பம் நடத்தும் பீர் விளம்பரம்
* நகரங்களில் நோய்தாக்கிய தெருநாய் கடிகள்
* முதலீடு ஈர்ப்பு என்கிற பெயரில் அரபுநாடு, ஸ்பெயின், சிங்கபூர் என மக்கள் வரிப்பணத்தில் ஸ்டாலின் குடும்ப சுற்றுலா
* அதானி உடன் ஒப்பந்தம் சென்னை துறைமுகம் தாரைவார்ப்பு
* மீண்டும் எட்டுவழி சாலை திட்டம் நடைமுறையில்
* திருப்பதி டோல் மாணவர் தாக்குதல் 
* திருமாவளவன் பிளாஸ்டிக் சேரில் அமர வைப்பு
* அரசு நீண்டநேர பஸ் விலையேற்றம்
* ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு
* கடன்சுமை பல மடங்கு உநர்ந்து இந்தியாவில முதலிடம்
* மாற்றுத்திறனாளி உலக்கோப்பை வாங்கியதாக முதல்வரையே ஏமாற்றியது
* துர்கா ஸ்டாலின் மினரல் வாட்டர் ஆலை
* குவாரி டென்டர் கேட்ட பட்டியல் சாதி நபர் ஆடை அவிழ்ப்பு
* சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கம் _ பொன் மாணிக்கவேல் 
* கலாசேத்ரா பாலியல் புகார்
* CAA எதிர்ப்பு போராட்டம் ஆனால் வாக்கெடுப்பில் ஆதரவு கையெழுத்து 
* புளியந்தோப்பு இறந்த குழந்தை உடல் அட்டைபெட்டியில் 
* புழல் பெண் கைதி தப்பி ஓட்டம்
* கருணாநிதி சிலை வைக்க மாடர்ன் தியேட்டர் நிலம் பிடுங்கல்
* ஒரே நேரத்தில் 140 பள்ளிகளில் லேப்டாப் திருட்டு
* எண்ணூர் எண்ணெய் கழிவு கடலில் கலப்பு
* பாட்டாக்குறிச்சி மலை அழித்து மைதானம்
* நெல்லை, தூத்துக்குடி  வெள்ளம் மாரி செல்வராஜ் மீட்புப் பணி
* தூத்துக்குடி தத்தளித்த நேரம் டெல்லி சென்று கூட்டணி பேச்சுவார்த்தை
* பொன்முடி மனைவியுடன் கைது
* எண்ணூர் ஆலை அமோனியா கசிவு நள்ளிரவில் மக்கள் வெளியேற்றம்
* ஆதி திராவிடர் நலத்துறை நிதி பயன்படுத்தாமல் வைத்திருந்தது
* எம்பிளாய்மென்ட் இல் பதிந்து வேலை கிடைக்காத இளைஞர் உதவித்தொகை நிறுத்தம்
* நிறித்தப்பட்ட கெயில் குழாய் மீண்டும் மோடி அடிக்கல் நாட்டினார்
* அடிப்படை வசதிகள் இல்லாமல் கிளாம்பாக்கம் திறப்பு
* கிளாம்பாக்கம் ரயில்நிலையம் வெற்று அறிவிப்பு
* பள்ளிகளில் தமிழ்மன்றம் அமைத்து கருணாநிதி பெயர்
* கவுன்சிலர் புருசன்கள் அடாவடி
* எதிர்கட்சியாக 5000 ரூ பொங்கல் தொகுப்பு கேட்டு தற்போது 1000 ரூ கூட தரமுடியாமல் திணறல்
* கேலோஇந்தியா உதயநிதி டெல்லி சென்று மோடி அழைப்பு 
* முரசொலி மூலப் பத்திரம் வழக்கு ஆவணங்களைக் காட்டமுடியாமல் திணறல் 
* புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த ஈவேரா வீட்டுக்கு பட்டா வழங்கல் இளங்கோவனிடம் கையளிப்பு
* கிண்டி ரேஸ் கோர்ஸ் 700 கோடி வரி பாக்கி
* பல கோடி செலவில் கூட்டமே இல்லமால் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞரணி மாநாடு 
* பழைய பென்சன் முறை நடைமுறைக்கு கொண்டுவராமை 
* ஓட்டுநர் இல்லாமல் தினம் 6000 பஸ் நிற்கிறது
* ஓட்டுநர் காலி பணியிடம் 8 ஆண்டுகள் நிரப்பவில்லை என போக்குவரத்து ஊழியர் போராட்டம்
* முதியோர் பென்சன் நிறுத்தம்
* மோசமான நிலையில் இருந்த அரசு பஸ் RTo விடம்  ஒப்படைத்தவர் மீது நடவடிக்கை
* ஜல்லிக்கட்டு போராளிகள் மீதான வழக்கு ரத்து இல்லை 
* சல்லிக்கட்டு போராட்டத்தில் இறந்த மாணவருக்கு நிவாரணம் இல்லை
* ஆனால் ஜல்லிக்கட்டு மைதானம் கலைஞர் பெயர்
* பள்ளிகளுக்கு தனியார் நிதி வேண்டல்
* மார்வாடி தெலுங்கர் உடன் சமத்துவ பொங்கல் கூத்து
* பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி குடும்பம் பெண் மீது கொடுமை
* நாகர்கோவில் நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் கொலை
* சென்னை ஆசிரியர் போராட்டம் இரவு தடியடி
* செவிலியர் போராட்டம் 
* திமுக பெண்களை இழிவு படுத்தி பலமுறை பேச்சு 
* 5 ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி நாடக பேட்டி அதை அண்ணாமலை அநாகரீக விமர்சனம்
* மும்பையில் நயன்தாரா வழக்கில் அரசு வக்கீல்
* சட்டசபை நேரலை ஒளிபரப்ப முடியாது என்று மறுப்பு
* வேடந்தாங்கல் அருகே தொழிற்சாலை 
* அதானி முதலீடு வரவேற்பு
* பல்லடம் செய்தியாளர் கூலிப்படை வெட்டு
* தமிழ் பேசிய மாணவன் காது கிழிப்பு 
* ஆசிரியர் பணி தேர்வில் மொழிப்பாடமாக 'தமிழ் அல்லது தென்னிந்திய மொழிகள்' என திருத்தம்
* தண்டாரம்பட்டு  ஆதிக்க சமூகம் தனி கோவில் 
* தொடரும் ரேசன் அரிசி பதுக்கல் 100 கிலோ வுக்கு மேல் ரேசன் அரிசி கடத்தல் 5 முறை பிடிபட்டது
* வள்ளலார் பக்தர்கள் எதிர்ப்பை மீறி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைத்தல்
* மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா அறிவிப்பு ஆழ்ந்த உறக்கத்தில் தமிழக முதல்வர்
*கன்னியாகுமரி கனிமவள லாரிகள் ஏற்படுத்தும்வதொடர் விபத்து,  ஒரே மாதத்தில் 4 வது விபத்து நடந்தது
* போதைப் பொருள் கடத்தல்
*யூட்யூப் விளம்பரம்
* பார்வையற்றோர் போராட்டம் தடியடி
* சட்டவிரோத முகாம் சாந்தன் இறப்பு


ஆறுதல்கள்....
* மகளிர்  பேருந்து இலவசம்
* மகளிர் உரிமைத் தொகை
* ரம்மி தடை
* கோகுல் ராஜ் சிறை
* கீழடி அருங்காட்சியம்
* காலை உணவு
* வெள்ள நிவாரண தொகை
* கூட்டுறவு நகைக்கடன் 3ல் 1 பங்கினர் ரத்து

_ Athimoolaperumal


Sunday 18 February 2024

வந்தேறிகளின் நீலிக்கண்ணீர்

வந்தேறிகளின் நீலிக்கண்ணீர் 

 தமிழர்கள் வந்தேறிகளின் சதியை உணர்ந்து குரல் எழுப்பினால் உடனே நீலி கண்ணீர் வடித்துக் கொண்டு வந்தேறிகள் உருட்டும் வழக்கதான உருட்டுகள் மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளன 

 முதலாக தமிழ்நாடு என்று நாடே இல்லை மூவேந்தர்கள் ஒற்றுமையாக இல்லை என்கிற ஒரு உருட்டு.  இதை இலக்கியச் சான்றுகளுடன் கல்வெட்டு சான்றுகளுடன் முறியடித்துவிட்டோம்.
 இலக்கியத்தில் தமிழரின் நிலம் தமிழ்நாடு என்று மொழியின் பெயரால் நாடாகவே குறிக்கப்பட்டுள்ளது.
 அதன் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.
 அதேபோல தமிழ் இனமும் அதன் பண்புகளும் குறிக்கப்பட்டுள்ளன.
 மூவேந்தர்களும் மௌரியர் படையெடுப்பில் கரிகாலனின் தந்தை தலைமையில் தமிழர் கூட்டணி அமைத்து வென்றனர். இதை காரவேலன் கல்வெட்டு தமிர் சங்காந்த் என்று கூறுகிறது.
 இக்கூட்டணி தமிழர் ஆட்சி வீழும்வரை இருந்தது.
பல்வேறு மன்னர்களை அடக்கிக் கப்பம் கட்ட வைத்து பல்வேறு அரசர்களுடன் மண உறவுகள் செய்து கொண்டு மிகப்பெரிய பேரரசை கட்டியாண்ட ராஜேந்திர சோழனும் சுந்தர பாண்டியனும் தங்களுடைய ராஜமுத்திரையில் வில் மீன் புலி ஆகிய மூன்றை மட்டுமே வைத்திருந்தனர்.
 ஆக நாடு என்கிற உணர்விலும் இனம் என்கிற உணர்விலும் தமிழர்கள் ஒற்றுமையாகவே இருந்துள்ளனர். நிலத்தை மொழியின் பெயரால் குறித்த முதல் இனம் தமிழினமே!

  அடுத்த ஒரு உருட்டு சென்னை மாகாணத்தில் எல்லா மொழியினரும் இருந்தனர் அதுவே தெலுங்கர் இங்கு குடியிருப்பதற்கு காரணம் என்ற உருட்டு.
 சென்னை மாகாணத்தில் தமிழர் நிலப்பகுதியும் தெலுங்கு நிலப்பகுதியும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததால் தமிழர்கள் இழந்தது அதிகம்.
 முதலமைச்சர் பதவியில் ஆங்கிலேயருக்கு சாமரம் வீசிய தெலுங்கு ஜமீன்தார்களே இருந்தனர்.
 மாதிலங்கள் பிரிந்தபோது திருப்பதி காளகஸ்தி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வளமான தமிழர் நிலப்பரப்புகள் தெலுங்கர்களிடம் பறி போனது. சென்னை வரைக்கும் விழுங்க துடித்த தெலுங்கர்களிடமிருந்து தமிழர்கள் தலைநகரை படாத பாடுபட்டு காப்பாற்றி பிறகு திருத்தணி வரை மீட்டனர்.

 இன்னொன்று தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கருக்கு தெலுங்கே தெரியாது அவர்கள் பேசும் மொழி தெலுங்கு அல்ல என்று உருட்டுவது.
 இது முழு உண்மை இல்லை. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தெலுங்கர்கள் பேசும் தெலுங்கு பழைய கால சுத்தமான தெலுங்கு.
 இது ஆந்திர தெலுங்கர்களுக்கு புரியாது ஆனால் தமிழ்நாட்டு தெலுங்கர்கள் ஆந்திரா தெலுங்கை புரிந்துகொள்ளும் அளவு அப்டேட்டாக இருக்கிறார்கள்.
 மதுரையில் உள்ள ஒரு தெலுங்கர் ஹைதரபாத் போனால் தெலுங்கை பேச முடியும் புரிந்து கொள்ள முடியும்.
  உலகிலேயே வேறு ஒரு தேசத்தில் குடியேறி 500 ஆண்டுகள் ஆகியும் தன் தாய் மொழியை அதுவும் இலக்கிய இலக்கண வளம் இல்லாத ஒரு மொழியை 15 தலைமுறையாக விடாமல் பேசி வருவது தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கர் மட்டுமே!
 ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு தொடர்ச்சியாக குடியேற்றமும் மண உறவுகளும் நடந்து வருவது மற்றும் தெலுங்கு பேசுவதை ஆண்ட பரம்பரை அடையாளமாக நினைப்பதும் இதற்கு காரணம் ஆகும்.

  தமிழர்களின் மொழிப் போரிலும் தமிழர்களின் எல்லை மீட்புப் போராட்டத்திலும் ஈழப் போராட்டம் நடந்த காலகட்டத்திலும் தற்போது தமிழர் அரசியல் உரிமை கேட்டு பேசி வரும் காலகட்டத்திலும் எந்த தெலுங்கரும் ஆதரவு தெரிவிப்பது இல்லை.
 இவர்களால் காட்ட முடிந்த ஒரே ஒரு உதாரணம் கீழ் தஞ்சையில் சீனிவாச ராவ் நடத்திய கம்யூனிஸ்ட் போராட்டங்கள் மட்டுமே.
 அவர் ஒரு விதிவிலக்கு என்றுதான் ஆகும்.
 தமிழர் ஸ்டேன் சாமி சத்தீஸ்கர் பழங்குடிகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி சாகவில்லையா?!
அதே கீழ் தஞ்சையில் கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற தெலுங்கு ஜமீன்தார்கள் விவசாயக் கூலிகளை கொடுமைப் படுத்தியதை கண்டு கர்நாடகாவில் இருந்துதான் ஒரு தெலுங்கர் வந்து போராடினார் அருகில் உள்ள வந்தேறித் தெலுங்கர் போராடவில்லை. அப்படி கீழ் தஞ்சையில் விவசாய கூலிகளுக்காக களத்தில் இறங்கி குண்டடிப்பட்டது 5 பேரும் தமிழர்கள் தான். கொன்றது தெலுங்கு வந்தேறி முதலமைச்சர் அனுப்பிய போலீஸ்தான்.
 
 தமிழகத்தின் உள்ளிருக்கும் தெலுங்கர்கள் இன்னொரு உருட்டும் வைத்துள்ளனர்.
 அது பஞ்சம் பிழைக்க வந்தோம் நாங்கள் பாவம் என்கிற மாதிரி உருட்டுவது.
 ஆரம்பத்தில் இவர்கள் பஞ்சத்தாலும் இஸ்லாமிய படை எடுப்பாலும் அகதிகளாக வந்தனர்.
 அதன் பிறகு விஜயநகர அரசு எழுந்தபோது தெலுங்கர் பகுதிகளுக்கு பரவாமல் தமிழர் பகுதிக்கு அவர்கள் படையெடுத்து பாண்டிய நாட்டை பிடிக்க காரணம் இங்கே ஏற்கனவே குடி இருந்த தெலுங்கர்கள் தான்.
  இதன் காரணமாக விஜய நகரத்தின் கீழ் பெரும் ஆதிக்கத்தையும் அதன் பிறகு பாளையங்களையும் நிலவுடைமையையும் பெற்று அகதிகளின் வாரிசுகள் ஆதிக்க சாதியாக மாறினார்கள்.
 பாஞ்சாலங்குறிச்சி, ராஜபாளையம் வரைக்கும் இவர்கள் ஆதிக்கம் இன்று வரை கொடிகட்டி பறக்கிறது.

 தமிழகத்தில் இருக்கும் தெலுங்கர்களை தமிழர்கள் வெறுக்க காரணம் தமது இருப்புக்கு அதிகமாக ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல தமிழர் தமது உரிமைகளுக்காக குரல் எழுப்பும்போது ஆதரவு தெரிவிக்கா விட்டாலும் எதிர்ப்பது அல்லது குழப்புவது அது மட்டுமல்லாமல் தானாக கிடைக்க இருப்பதையும் கெடுத்து விடுவது.
 இப்படி தொடர்ச்சியாக உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது இன்று உதயநிதி வரை தொடர்கிறது.

 உலகத்தில் இப்படி ஒரு நன்றிகெட்ட இனம் இருப்பதாகத் தெரியவில்லை.

 இவர்கள் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, வைகோ போன்றோரை போராளிகள் என்று கட்டிவைத்த பிம்பம் இன்று உடைந்துவிட்டது.
 இதனால் சீனிவாச ராவை தூக்கிக்கொண்டு வருகின்றனர்.

 போராளி வேடம் கலைந்தவுடன் அப்பாவி வேடம் போடுகின்றனர்.
 தமிழர் ஏமாற வேண்டாம்.

 

Friday 16 February 2024

திராவிட மாடல் ஆட்சி அதிர்ச்சிகளும் ஆறுதல்களும்

திராவிட மாடல் ஆட்சி 
அதிர்ச்சிகளும் ஆறுதல்களும்

  முரசொலி மூலப் பத்திரம் சர்ச்சையில் 'அரசியலில் இருந்தே விலகுவேன' என்று வாய்ச் சவால் விட்டதில் இருந்து ஸ்டாலின் தீவிரமாக அரசியல் களத்திற்கு வருகிறார்.
  தேர்தல் பிரச்சாரத்தின் போது குனியமுத்தூர் பிரச்சாரத்தில் கேள்விகேட்ட பெண்ணை வேலுமணி ஆள் என்று கூறி வெளியேற்றிய அன்றிலிருந்து மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி ஏற்படுத்துவது தொடங்கிவிட்டது.

 இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் நடந்த அதிர்ச்சிகள்...
* 380 கோடி கொடுத்து பிரசாந்த் கிஷோர் வரவழைப்பு
* நால்வர் விடுதலை ஆனதும் சிறப்பு முகாமில் அடைப்பு
* விவசாயிகள் மீது குண்டாஸ்
* nlc க்காக விளைந்து நின்ற நிலம் அழிப்பு
* இசுலாமியர் விடுதலைக்கு எதிராக அறிக்கை 
* வேங்கைவயல் குடிநீரில் மலம்
* தூத்துக்குடி காதல் திருமணம் ஆணவக்கொலை
* சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து கதறல்
* நெல் கொள்முதல் நிலைய கொட்டகைக்கு நிதி ஒதுக்காமை
* மேயர் பிரியா ரங்கநாத நாயுடுவால் பொதுவெளியில் பாலியல்  சீண்டல்
* பேனா சிலை
* பாடபுத்தகத்தில் திராவிட புரட்டு
* நீட் கையெழுத்து நாடகம் 
* உச்ச நிலையில் கனிமவள கொள்ளை
* கர்நாடக சென்று காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் 
* ஆனாலும் காவிரி நீர் மறுப்பு காய்ந்து போன அணை
* மின்கட்டண உயர்வு
* பால் விலையேற்றம் மில்லி குறைப்பு
* தாலி தங்கம், லேப்டாப் , ஸ்கூட்டி போன்ற அதிமுக மகளிர் திட்டங்கள் நிறுத்தம்
* டாஸ்மாக் 10ரூ அதிகம் வாங்கிய செந்தில் பாலாஜி 
* வேலைவாங்கித் தருவதாக பணம் வாங்கிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது
* திமுக வாக்களித்த நிலம் கிடைக்காத அஸ்வினி எனும் நரிக்காரர் பேட்டி அளித்த பிறகு அடிதடி வழக்கில் கைது
* சாலிகிராமம் கூட்டத்தில் பெண் போலீஸ் மீது திமுக தொண்டர்கள் பாலியல் அத்துமீறல்
* ஈரோடு இடைத்தேர்தல் காளியம்மாள் மீது பீர் பாட்டில் வீச்சு
* ஈரோடு இடைத் தேர்தல் மக்களை அடைத்துவைத்து  விருந்து மற்றும் இன்ப சுற்றுலா 
* மாலைத்தீவு ராணுவம் தமிழக மீனவர் கைது
* ரயில் வடவர் பெண்ணிடம் அத்துமீறல் 
கஞ்சா 
* குட்கா தடை நீக்கம்
* கள்ளசாராய மரணம் அதற்கு 10 லட்சம் நிவாரணம்
* குடிகாரர் திருந்தினால் அரசுவேலை
* சென்னை ஆர்.ஏ.புரம் 40 ஆண்டுகால குடியிருப்பு இடிப்பு பா.ம.க தொண்டர் தீக்குளிப்பு
* உதயநிதி சினிமாவை அரசு ஊழியர் பார்க்க கட்டாயப்படுத்தல்
* அனைத்து திரைப்பட வியாபார உரிமையையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பிடுங்குதல்
* கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மர்ம மரணம்
* நாங்குநேரி பள்ளி மாணவர் கஞ்சா போதையில் சக மாணவர் மாணவி மீது அரிவாள் வெட்டு 
* ரேசன் கடைகளில் செறிவூட்ட அரிசி 
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை இல்லை
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஐ.ஜி யாதவ் பதவி உயர்வு 
* மொடக்குறிச்சி வடவர் போலீஸ் ரகுபதி மீது தாக்குதல்
* தவறான சிகிச்சையால் அரசு மருத்துவமனையில் கை அழுகி குழந்தை இறப்பு
* குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு அமைச்சர் மனோ தங்கராஜ் குழந்தை தொழிலாளர் பற்றிய news 24x7 புகாரை ஏற்க மறுப்பு 
* அரசு அலுவலகம் புகுந்து மணல் மாபியா வி.ஏ.ஓ வெட்டிக் கொலை
* துடியலூர் அரசுப் பள்ளியில் இசுலாமிய மாணவியை செருப்பை சுத்தம் செய்யவைத்த ஆசிரியர்கள்
* விமான நிலையம் அமைக்க பரந்தூர் விளைநிலஙகள் பிடுங்குதல் அதனால் பெரிய போராட்டம் அதற்கு வேலி போட்டு போலீஸ் அடக்குமுறை
* அம்பாசமுத்திரம் பலர் பல் பிடுங்கிய போலீஸ் பல்வீர் சிங் அவரது இடைநீக்கம் ரத்து
* தொடர்ந்து 9 லாக்கப் மரணங்கள்
* நெல்லை ஆற்றில் கஞ்சா போதையில் பட்டியல் சிறுவர் மீது சிறுநீர் கழித்த ஆதிக்க சமூகத்தினர்
* உதயநிதி சினிமாவில் பிசி அதனால் 2023 தேசிய விளையாட்டுக்கு 503 தமிழக மாணவர் அனுப்பப் படவில்லலை
* குறவர் பெண் ஆந்திரா போலீசால் வன்புணர்வு பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி சித்திரவதை 
* பள்ளி மாணவருக்கு அழுகிய முட்டை அதற்கு ஓடு மீதுள்ள கறுப்பு அச்சு உள்ளே சென்றுவிட்டதாக மழுப்பல்
* காஞ்சிபுரம் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் அது காக்கா முட்டை என்று மழுப்பல்
* மதுரை பெருங்குடி 6 வயது சிறுவன் உட்பட 5பேர் ஆதிக்க சாதிவெறியரால் வெட்டிக் கொலை
* சென்னை வெள்ளம் வரலாறு காணாத பாதிப்பு மிக அசட்டையாக நடந்துகொண்ட அரசு
* வெள்ள நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர்
* உதயநிதி திரைப்படம் நடிப்பு
* தென்காசிக்கு சலூன் கோச் சொகுசு பெட்டியில் ஸ்டாலின் பயணம்
* ஜெயலலிதா மரணம் குறித்த குழப்பமான அறிக்கை 
* குறவருக்கு சாதிச் சான்றிதல் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டி மகனுக்கு வேலை கிடைக்காமல் தந்தை தற்கொலை
* இதனால் குறவர் உரிமைக்காக 6 நாள் உண்ணாவிரதம் இருந்த இரணியன் மற்றும் தென்காசி எம்.பி தனுஷ் குமார் KKSSRR வீட்டில் நிற்கவைத்து சாதிய ரீதியில் அவமரியாதை
* பத்திர பதிவு கட்டண உயர்வு
* ஓட்டல் தமிழ்நாடு எமரால்டு என பெயர்மாற்றம்
* செய்யாறு சிப்காட் ஆதரவுப் போராட்டம் பணம் கொடுத்து வெளியூர் நபர்களை விவசாயிகள் போல நடிக்க வைத்தது
* சத்துணவு தனியார் மயமாக்க முயற்சி
* வேலை நேரம் 12 மணிநேரமாக்க முயற்சி
* மவுன்ட் ரோடில் பொதுமக்களுக்கு இடையூறாக தெலுங்கு நடிகர் அல்லி அர்ஜூன் கார் ரேஸ் நடத்த மைதானம் அமைத்தல்
* செஸ் போட்டி பிரக்யானந்தா புறக்கணிப்பு
* இசுலாமிய அமைச்சர் 3 ல் 2 பதவி பறிப்பு 
* பி.டி.ஆர் விரட்டி அடிப்பு உதயநிதிக்கு பதவி
* விளையாட்டு மைதானஙகளில் மது அனுமதி 
* அரசு பஸ் மீது திமுக குடும்பம் நடத்தும் பீர் விளம்பரம்
* நகரங்களில் நோய்தாக்கிய தெருநாய் கடிகள்
* முதலீடு ஈர்ப்பு என்கிற பெயரில் அரபுநாடு, ஸ்பெயின், சிங்கபூர் என மக்கள் வரிப்பணத்தில் ஸ்டாலின் குடும்ப சுற்றுலா
* அதானி உடன் ஒப்பந்தம் சென்னை துறைமுகம் தாரைவார்ப்பு
* மீண்டும் எட்டுவழி சாலை திட்டம் நடைமுறையில்
* திருப்பதி டோல் மாணவர் தாக்குதல் 
* திருமாவளவன் பிளாஸ்டிக் சேரில் அமர வைப்பு
* அரசு நீண்டநேர பஸ் விலையேற்றம்
* ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு
* கடன்சுமை பல மடங்கு உநர்ந்து இந்தியாவில முதலிடம்
* மாற்றுத்திறனாளி உலக்கோப்பை வாங்கியதாக முதல்வரையே ஏமாற்றியது
* துர்கா ஸ்டாலின் மினரல் வாட்டர் ஆலை
* குவாரி டென்டர் கேட்ட பட்டியல் சாதி நபர் ஆடை அவிழ்ப்பு
* சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கம் _ பொன் மாணிக்கவேல் 
* கலாசேத்ரா பாலியல் புகார்
* CAA எதிர்ப்பு போராட்டம் ஆனால் வாக்கெடுப்பில் ஆதரவு கையெழுத்து 
* புளியந்தோப்பு இறந்த குழந்தை உடல் அட்டைபெட்டியில் 
* புழல் பெண் கைதி தப்பி ஓட்டம்
* கருணாநிதி சிலை வைக்க மாடர்ன் தியேட்டர் நிலம் பிடுங்கல்
* ஒரே நேரத்தில் 140 பள்ளிகளில் லேப்டாப் திருட்டு
* எண்ணூர் எண்ணெய் கழிவு கடலில் கலப்பு
* பாட்டாக்குறிச்சி மலை அழித்து மைதானம்
* நெல்லை, தூத்துக்குடி  வெள்ளம் மாரி செல்வராஜ் மீட்புப் பணி
* தூத்துக்குடி தத்தளித்த நேரம் டெல்லி சென்று கூட்டணி பேச்சுவார்த்தை
* பொன்முடி மனைவியுடன் கைது
* எண்ணூர் ஆலை அமோனியா கசிவு நள்ளிரவில் மக்கள் வெளியேற்றம்
* ஆதி திராவிடர் நலத்துறை நிதி பயன்படுத்தாமல் வைத்திருந்தது
* எம்பிளாய்மென்ட் இல் பதிந்து வேலை கிடைக்காத இளைஞர் உதவித்தொகை நிறுத்தம்
* நிறித்தப்பட்ட கெயில் குழாய் மீண்டும் மோடி அடிக்கல் நாட்டினார்
* அடிப்படை வசதிகள் இல்லாமல் கிளாம்பாக்கம் திறப்பு
* கிளாம்பாக்கம் ரயில்நிலையம் வெற்று அறிவிப்பு
* பள்ளிகளில் தமிழ்மன்றம் அமைத்து கருணாநிதி பெயர்
* கவுன்சிலர் புருசன்கள் அடாவடி
* எதிர்கட்சியாக 5000 ரூ பொங்கல் தொகுப்பு கேட்டு தற்போது 1000 ரூ கூட தரமுடியாமல் திணறல்
* கேலோஇந்தியா உதயநிதி டெல்லி சென்று மோடி அழைப்பு 
* முரசொலி மூலப் பத்திரம் வழக்கு ஆவணங்களைக் காட்டமுடியாமல் திணறல் 
* புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த ஈவேரா வீட்டுக்கு பட்டா வழங்கல் இளங்கோவனிடம் கையளிப்பு
* கிண்டி ரேஸ் கோர்ஸ் 700 கோடி வரி பாக்கி
* பல கோடி செலவில் கூட்டமே இல்லமால் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞரணி மாநாடு 
* பழைய பென்சன் முறை நடைமுறைக்கு கொண்டுவராமை 
* ஓட்டுநர் இல்லாமல் தினம் 6000 பஸ் நிற்கிறது
* ஓட்டுநர் காலி பணியிடம் 8 ஆண்டுகள் நிரப்பவில்லை என போக்குவரத்து ஊழியர் போராட்டம்
* முதியோர் பென்சன் நிறுத்தம்
* மோசமான நிலையில் இருந்த அரசு பஸ் RTo விடம்  ஒப்படைத்தவர் மீது நடவடிக்கை
* ஜல்லிக்கட்டு போராளிகள் மீதான வழக்கு ரத்து இல்லை 
* சல்லிக்கட்டு போராட்டத்தில் இறந்த மாணவருக்கு நிவாரணம் இல்லை
* ஆனால் ஜல்லிக்கட்டு மைதானம் கலைஞர் பெயர்
* பள்ளிகளுக்கு தனியார் நிதி வேண்டல்
* மார்வாடி தெலுங்கர் உடன் சமத்துவ பொங்கல் கூத்து
* பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி குடும்பம் பெண் மீது கொடுமை
* நாகர்கோவில் நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் கொலை
* 5 ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி நாடக பேட்டி அதை அண்ணாமலை அநாகரீக விமர்சனம்
* மும்பையில் நயன்தாரா வழக்கில் அரசு வக்கீல்
* சட்டசபை நேரலை ஒளிபரப்ப முடியாது என்று மறுப்பு
* வேடந்தாங்கல் அருகே தொழிற்சாலை 
* அதானி முதலீடு வரவேற்பு
* பல்லடம் செய்தியாளர் கூலிப்படை வெட்டு
* தமிழ் பேசிய மாணவன் காது கிழிப்பு 
* ஆசிரியர் பணி தேர்வில் மொழிப்பாடமாக 'தமிழ் அல்லது தென்னிந்திய மொழிகள்' என திருத்தம்
* தண்டாரம்பட்டு  ஆதிக்க சமூகம் தனி கோவில் 
* தொடரும் ரேசன் அரிசி பதுக்கல் 100 கிலோ வுக்கு மேல் ரேசன் அரிசி கடத்தல் 5 முறை பிடிபட்டது
* வள்ளலார் பக்தர்கள் எதிர்ப்பை மீறி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைத்தல்
* மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா அறிவிப்பு ஆழ்ந்த உறக்கத்தில் தமிழக முதல்வர்

ஆறுதல்கள்....
* மகளிர்  பேருந்து இலவசம்
* மகளிர் உரிமைத் தொகை
* ரம்மி தடை
* கோகுல் ராஜ் சிறை
* கீழடி அருங்காட்சியம்
* காலை உணவு
* வெள்ள நிவாரண தொகை
* கூட்டுறவு நகைக்கடன் 3ல் 1 பங்கினர் ரத்து

Tuesday 13 February 2024

குலாலா மட்டும் இல்லன்னா

குலாலா மட்டும் இல்லன்னா

 "கலம் செய் கோவே" அதாவது "பானை செஞ்சு தாங்க மகாராசா" என்கிற மாதிரி மரியாதையாக கூப்பிட்டு 'எனக்கு தகுந்த ஈமத்தாழி செய்து தா' என்று கணவனை இழந்த துக்கத்தில் பாடுகிறாள் ஒருத்தி (புறநானூறு 256).

 ஒரு தேர்ந்த குயவர் மண்ணை தன் விருப்பம் போல வளைத்து பானை செய்வது போல மன்னன் நாட்டை வடிவமைத்ததாக புறநானூறு (32) கூறுகிறது.
 
 கம்ப ராமாயணம் (3980) 'வன் தோள் குயவன் திரி மட்கலத்து' என்று தோள்வலிமை கொண்ட குயவர் சக்கரத்தைச் சுற்றுவது போல என்று மரியாதையுடன் உவமை காட்டுகிறது.

 பெரியபுராணம் 'திருநீலகண்டத்து குயவனாருக்கு' என்றும் 
 சித்தர் பாடல் 'நாலாறு மாதமாய் குயவனை வேண்டி' என்றும் குயவரை மரியாதையுடன் குறிக்கின்றன.

 கிபி 1837 இல் அமெரிக்க பயணி வரைந்த குயவர் ஓவியம் கொசவன் என்ற தலைப்புடன் இருக்கிறது அதில் பூணூல், கடுக்கன், தலைப்பாகை அணிந்த குயவர் பானை செய்வது போல உள்ளது (Seventy-two Specimens of Castes in India).

 ஆனா இவனுக சொல்ற கதைய பாருங்க!
 தமிழர்கள் சாதிவெறியோட குயவரை "கொசப்பய" னு சொன்னோமாம்!
சாதிக் கொடுமை பண்ணோமாம்!
 உடனே தெலுங்கு குலாலா ஓடிவந்து 'இனி நீங்களும் குலாளர் என்று அழைக்கப் படுவீர்களாக' னு தங்களோட பெயரை குயவருக்கு சூட்டி மரியாதை வாங்கித் தந்தானுகளாம்!

குயவர் என்கிற பெயரையும் வேளார் என்கிற பட்டத்தையும் மீட்க குயவர் குரல் எழுப்பினால் சாதி ஒற்றுமை கெட்டுவிடுமாம்!

 அதனால் அரசின் சாதிப் பட்டியலில் உள்ளபடி 'குலாலா சாதியின் ஒரு பிரிவுதான் குயவர்' னு ஒத்துக்கிட்டு வேளார் பட்டம் போடாம ஒற்றுமையா இருக்குற இடம் தெரியாம  இருக்கணுமாம்!

 இந்த அநியாயத்த கேக்க யாருமில்லயா?! 
 

 

 

Sunday 4 February 2024

மீனவர் கொலை இலங்கையை கண்டித்த விஜய்

மீனவர் கொலை இலங்கையை கண்டித்த விஜய் 

 2011 இல் மீனவர் படுகொலை அதிகம் நடந்தபோது நாகைப்பட்டிணத்தில் இலங்கை அரசைக் கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் நடத்திய கூட்டத்தில் விஜய் பேசினார்.

அதன் சாராமசம்,

 "தமிழனாக இங்கே வந்திருக்கிறேன்"
"540 மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் 1000 மீனவர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்"
"மத்திய மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பது புரியவில்லை"
"பொறுமையை சோதிக்காதீர்கள் இலங்கை என்கிற நாடு வரைபடத்தில் இல்லாமல் போய்விடும்"
"ரசிகர்கள் பிரதமருக்கும் முதல்வருக்கும் தந்தி கொடுககும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டுகிறேன்"
 

மேலும், 2009 இல் ஈழம் இனப்படுகொலை க்கு உள்ளான போது கண்டுகொள்ளாமல் இருந்தது தமிழ் திரைத்துறை!
 ஏனென்றால் அது வந்தேறிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது!
இருந்தும் திரைத்துறையில் முதன்முதலாக தனி மனிதனாக தன் தாயுடன் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தவர் விஜய்!
 

Wednesday 24 January 2024

தமிழ்தேசிய பார்வையில் அயோத்தி பிரச்சனை

தமிழ்தேசிய பார்வையில் அயோத்தி பிரச்சனை

 முதலில் இயல்பிலேயே தனி நாடான தமிழகத்திற்கும் அயோத்தி பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை கூறிவிடுகிறேன்.

 ஆனால் கரிகாலன் காலத்தில் இருந்து வள்ளலார் காலம் வரை தமிழ் இலக்கியத்தில் இராமன் பற்றி உயர்வான வகையில் குறிப்புகள் இருக்கின்றன என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

 இங்கே நாம் பேசப்போவது வடயிந்திய ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையேயான மோதல் பற்றி மட்டுமே!
 இந்த பிரச்சனையில் ஹிந்தி மொழிக்குடும்ப ஹிந்து மற்றும் முஸ்லிம்களுக்கும் தமிழக இந்து மற்றும் இசுலாமியருக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்கிற வகையில் வெளியில் நின்று (தமிழனாக) மூன்றாவது நபரின் பார்வையில் இதை அலசுகிறேன்.

 குழப்பத்தைத் தவிர்க்க இங்கே அயோத்தி என்றே தற்போதைய அயோத்தியைக் குறிக்கிறேன். அதன் பழைய பெயர் வேறு.

 அயோத்தி என்கிற பெயர் சிலப்பதிகாரத்தில் வருகிறது. இமயமலை அடிவாரத்தில் இருந்து கங்கை வரை ஔத் அல்லது அவத் எனும் பகுதி இருந்துள்ளது. ஔதி அல்லது அவதி வட்டார மொழி பேசப்பட்டது. இதுவே புராணங்களில் வரும் அயோத்தி நகரம் (இந்தியில் அயோத்யா) என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. 

 பாபர் மசூதிக்கும் பாபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.
 இப்ராஹிம் லோடியை தோற்கடித்து பாபர் ஆட்சிக்கு வருகிறார். கிபி 1526 - 1530 என நான்கு ஆண்டுகள்தான் இவர் ஆட்சியே செய்கிறார். பாபர்நாமா என்று இவரது சுயசரிதை கூட இருக்கிறது. இவர் கோவிலை இடித்ததாக எந்த சான்றும் இல்லை. பொ.மு. 1528 இல் இவர் கோவிலை இடித்ததாக ஆங்கிலேயர் தமது அரசிதழில் தவறான கருத்தை பதிவு செய்ததே குழப்பத்திற்கு காரணம்!
 இது அவர்கள் ஆரம்பத்தில் சிதைந்து போன கல்வெட்டுகளை அரைகுறையாக ஆய்ந்து மொழிபெயர்த்தபோது ஏற்பட்ட தவறு.

 william foaster என்பவர்  'early travels of india' (1583-1619) எனும் புத்தகம் வெளியிட்டுள்ளார். இது அக்பர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த 7 ஆங்கிலப் பயணிகளின் குறிப்புகளின் தொகுப்பு ஆகும். இதில் அயோத்தி வருகிறது ஆனால் ராமர் கோவில் பற்றியோ அல்லது மசூதி பற்றியோ குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் இந்த 7பேரில் 2 பேர் இங்கே அழிந்து போன பழமையான ராணிச்சந்த் எனும் கோட்டையின் சிதிலங்கள் இருந்ததாக பதிவு செய்துள்ளனர். இதில் பிராமணர்கள் பானைகளை வைத்துக்கொண்டு வரும் பக்தர்களின் பெயரைக் கேட்டு ஏதோ சடங்கு செய்ததாகவும் பதிவு செய்கின்றனர்.
 அருகில் ஆறும் ஓடுவதால் இது இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது போன்ற சடங்காக இருக்கலாம்.
 மேலும் thomas coryat என்பவர் "உலகிலேயே முகலாயர் ஆட்சியில்தான் ஒரு கிறித்துவனாகிய நான் மதங்கள் பற்றி சுதந்திரமாக பேச முடிகிறது. இங்கு போல நான் முகமது (நபி) பற்றி பாரசீகத்திலோ(ஈரான்) துருக்கியிலோ பேசியிருந்தால் உயிரோடு கொளுத்தியிருப்பார்கள்" என்று 1620 களில் பதிவு செய்துள்ளார்.

 இதிலிருந்து பாபர் கோவிலை இடித்து மசூதி கட்டவில்லை என்பதும் அக்பர், ஜஹாங்கிர் காலம் வரை மதவெறியுடன் இல்லாமல் அரசாட்சி நடந்ததும் புலனாகிறது.

 கி.பி. 1660 இல் 15 கோவில்களை இடிக்கச் செய்தவர் அவுரங்கசீப். அயோத்தியில் மசூதி கட்டியவரும் இவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு உறுதியான சான்றுகள் இல்லை.

 கி்பி 1672 இல் லால் தாஸ் என்பவர் 'அவத விலாசம் (awadh vilas)' எனும் புத்தகத்தில் இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று கூறுகிறார். இதிலும் கோவில் பற்றியோ மசூதி பற்றியோ குறிப்பு இல்லை. ஆனால் திடீரென்று அந்தப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒருவர் எழுதக் காரணம் அங்கே ஓரு மசூதி கட்டப்படப் போவதாக தகவல் பரவியதால் இருக்கலாம். 

ஔரங்கசீப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி செய்த ராஜபுத்திர மன்னர் ஸவாய் ஜெய் சிங் (ஜெய்ப்பூர் நகரை நிர்மணித்தவர்)  என்பவர் ஆதரவுடன் கிபி 1717 இல் இந்த மசூதியின் முன்பும் பக்கவாட்டிலும் ஹிந்துக்கள் இடம் வாங்கி (கோவில் என்றில்லாமல்) அங்கே ராமர் கோட்டம் எனும் திடல், சீதை சமையலறை எனும் மேடை, அனுமன் வாயில் எனும் நுழைவு வாசல் என மூன்று சிறிய கட்டமைப்புகளைக் கட்டி பூஜைகள் நடத்தினர் என்று கூறுகின்றனர். இதற்கு சான்றுகள் இல்லை. ஜெய் சிங் காலத்தில் வரைந்த பாபர் மசூதி போன்ற மூன்று கோபுரம் கொண்ட கோவில் வரைபடம் கூட இருக்கிறது. இது பாபர் மசூதி கட்டப்பட்டதும் அது போல ஹிந்துக் கோவில் ஒன்று கட்டப்பட போடப்பட்ட திட்ட வரைபடம் போலவே தெரிகிறது.

 ஐரோப்பிய ஏசு சபை (european jesuit missionary) சார்பாக இந்த வட்டாரத்தில்  தங்கியிருந்த Joseph Tiefenthaler "ஔரங்கசீப் ராமரின் பிறப்பிடம் என்று நம்பப்படும் ராம்கோட் கோட்டையை இடித்து மசூதி கட்டினார் ஆனால் சிலர் பாபர்தான் இதைச் செய்தார் என்று கூறுகின்றனர்"  என 1767 இல் முதன்முதலாக பதிவு செய்கிறார்.

 [என்னுடைய யூகம் முகலாயர் வருகைக்கு முன்பே கங்கைக் கரையில் ஒரு சிறிய குன்றின் மீது அழிந்துபோன பழமையான  கோட்டையின் அஸ்திவாரம்  இருக்கிறது. ஊருக்கு வெளியே இருந்த அந்த இடத்தில் பிராமணர்கள் சில சடங்குகளைச் செய்து வந்துள்ளனர்.
 அந்த அஸ்திவாரத்தின் மேலே ஒரு மசூதியை ஔரங்கசீப் காலத்தில் முஸ்லிம் அதிகாரி யாரோ கட்டியிருக்கிறார்.
 இது கட்டப்பட்ட காலம் 1690-1710.
 அதைப் பார்த்து அதுபோல தானும் கோவில் கட்ட ராஜஸ்தான் மன்னர் திட்டமிடுகிறார்.
மசூதி இருக்கும் குன்றின் பெயர் ராம் கோட் என்று இருந்தது முதல் குழப்பத்திற்கு காரணம்.
 அப்பகுதி அவ்த் என்கிற பெயரில் வழங்கப்பட்டதும் புராணங்களில் ராமர் பிறப்பிடம் அயோத்யா என்று இருந்ததும் அடுத்த குழப்பம்.
 இந்த 'ராமர் பிறந்த இடத்தில் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டினர்' எனும் கருத்து ஏசு சபையின் மதமோதலை ஏற்படுத்தி மதமாற்ற உள்நோக்கம் கொண்டதாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாக தெரிகிறது.
 தாங்கள் சடங்குகள் செய்யும் காலி இடத்தில் மசூதி வந்ததால் பிராமணர்கள் மேற்படி கருத்தை ஆதரித்து பேசத் தொடங்கியுள்ளனர்.]

  பிற்காலத்தில் தோன்றிய மசூதிகள் நல்ல வளர்ச்சி அடைந்திருக்க இந்த முகலாயர் கால மசூதி அந்த வட்டாரத்தில் கூட பிரபலம் ஆகவில்லை. வட்டார முஸ்லிம்கள் இந்த மசூதியை பெரிதாக ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் அங்கே மிகச் சிறுபான்மை என்பதும் ஒரு காரணம். ஊருக்கு வெளியே இது இருப்பதும் இதை பொதுமக்கள் அவ்வளவாக பயன்படுத்தாமல் விட்டுவிடக் காரணமாக இருக்கலாம்.

மசூதியின் முதல் புகைப்படம் (ஓவியம்) பொ.மு 1783 இல் william hodges என்பவர் வரைந்தது. இதுவே மசூதி இருந்தது பற்றிய முதல் வலுவான சான்று.
 
 முகலாயர் வீழ்ந்து ஆங்கிலேயர் ஆட்சி வந்தபோது இப்பகுதியில் அகழ்வாய்வு செய்யப்பட்டது.
 1813 இல் பச்சனான் (buchanan) என்பவர் இப்பகுதியில் கல்வெட்டு ஆய்வுசெய்து பாதியில் விட்டுவிட்டார் (இதை பிற்காலத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தேடி எடுத்த எழுத்தாளர் கிஷோர் குணால் என்பவர் அது தொடர்பான செய்திகளை வெளியிட்டார். அதில் சிதைந்து கிடந்த கல்வெட்டுத் துண்டுகளில் பாபர் பெயரும் ஔரங்கசீப் பெயரும் இருப்பதை கண்டறிகிறார். ஆனால் காலத்தை கணிக்க முடியவில்லை.
 அப்போதே அந்த மசூதி பராமரிப்பின்றி கல்வெட்டுகள் சிதைந்து போய் இருந்துள்ளன).

 அகழ்வாராய்ச்சி முடிவுகளை எதிர்பார்த்திருந்த இரு தரப்பினரும் ஏமாற்றம் அடைந்து அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
இதுவே ஹிந்து முஸ்லிம் என மதரீதியான சட்டரீதியான முதல் மோதல்.
  1838 இல் மான்ட்கோமரி மார்ட்டின் என்பவரை ஆங்கிலேயர் நியமித்து இது பற்றி அறிக்கை கேட்டனர்.
 இவர் விசாரித்து ஆராய்ந்து மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்தது உண்மைதான் ஆனால் அதை இடித்து மசூதி கட்டியதாக கூறமுடியாது என்று குழப்பமான அறிக்கையை வெளியிடுகிறார்.
அதாவது அஸ்திவாரம் பழமையானது மசூதி கொஞ்சம் புதியது என்பதால் இப்படி கூறியிருக்கலாம்.
 ஆனால் அயோத்தி ஒரு ஹிந்துக்கள் பெரும்பான்மைப் பகுதி என இவர் குறித்துள்ளார். 
 
 இதுவரை சட்டப்படி அமைதி வழியில் நடந்த பிரச்சனை 1853 இல் முதன்முதலாக மசூதியில் இருந்து சிறிது தூரத்தில் இருந்த அனுமன் கோவில் மற்றும் அதை நிர்வகிக்கும் நிர்முகி அகாடா எனும் அமைப்பு 'ராமர் கோவிலை மீட்போம்' என்று மசூதியை நோக்கி பேரணியாக சென்றனர். இப்போது முதல் மதமோதல் ஏற்படுகிறது.
 அதாவது முதல் அடாவடியான நடவடிக்கையை ஹிந்துக்கள்தான் தொடங்கியுள்ளனர்.

 1855 இல் பதிலுக்கு 'அனுமன் கோவில் மசூதியை இடித்து கட்டியது' என்று ஷா குலாம் ஹுசைன் என்பவர் தலைமையில் 500 முஸ்லிம்கள் அனுமன் கோவிலை நோக்கி சென்றனர். அப்போது அங்கே 8000 ஹிந்து பைராகி சாமியார்கள் திரட்டப்பட்டு இருந்தனர். இருவரும் மோதிக்கொள்ள 75 முஸ்லிம்கள் இறக்கின்றனர். இதுவே முதல் ரத்தக் களரியான கலவரம் (இதற்குப் பிறகு முஸ்லிம்கள் ஏறத்தாழ கடைசிவரை களத்தில் இறங்கவே இல்லை).

 இதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் மசூதி நிலத்திற்கும் ஹிந்துக்கள் பூஜை செய்யும் இடத்திற்கும் இடையே தடுப்பு சுவர் கட்டுகின்றனர்.
 பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

 1858 இல் பஞ்சாபில் இருந்து 25 பேர் கொண்ட சீக்கியர் குழு ஒன்று மசூதியை முற்றுகை இட்டு மசூதி வளாகத்தில் நுழைந்து வேள்வி நடத்துகின்றனர். மசூதி சுவர்களில் ராம் ராம் என்று எழுதுகின்றனர்.
 ஹிந்து பகுதியை மணல் நிரப்பி உயர்த்தி பூஜைகள் செய்கின்றனர்.
 
 இது பற்றி மசூதி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளிக்கிறது. பிறகு காவல்துறை வந்து சீக்கியர்களை அப்புறப்படுத்துகிறது.

 1885 இல் மகந்த் ரகுவர் தாஸ் எனும் ராமர் கோட்டத்து பூசாரி ராமருக்கு ஹிந்து இடத்தில் சிறிய கோவில் கட்ட அனுமதி கேட்டு வழக்கு போடுகிறார். 'அவர் நிலத்தின் முதலாளி இல்லை எனவே கோவில் கட்ட உரிமை இல்லை' என்று கூறி வழக்கு தள்ளுபடி ஆகிறது.

 வெகுகாலம் அமைதியாக இருந்த பின் 1934 இல் ஒரு பசு மாடு அயோத்தி அருகே ஷாஜகான்பூர் எனும் முஸ்லீம் பகுதியில் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடிக்கிறது.
 இப்போது ஹிந்துக்கள் திரண்டு வந்து மசூதியில் மதில் சுவரை உடைத்து மசூதியையும் இடிக்க முயற்சிக்கின்றனர். ஆங்கில அரசு கலவரக்காரர்களை அடித்து விரட்டி உடைந்த பகுதிகளை சரிசெய்து அளிக்கிறது.

 1949 இல் ஹிந்து அமைப்பு ஒன்று ராமர் கோட்டத்தில் ராமாயண கச்சேரி நடத்துகிறது இவர்கள் இரவோடு இரவாக பயன்பாட்டில் இல்லாத மசூதியின் உள்ளே திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்துவிட்டு சிலை தானே தோன்றியதாக வதந்தி பரப்புகின்றனர்
(இந்த சிலை கடைசி வரை அகற்றப் படவில்லை).
 
 இப்போதும் சன்னி வக்பு வாரியம் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். மசூதி பூட்டப்படுகிறது. ராமர்சிலையை வெளியே எடுக்க நேரு மற்றும் வல்லபாய் படேல் உ.பி அரசுக்கு உத்தரவிட உ.பி மாநில அரசு கலெக்டருக்கு உத்தரவிட அதை நிறைவேற்ற மறுத்து அன்றைய வட்டார காவல்துறை தலைமை அதிகாரி மற்றும் கலெக்டர் ஆன கே.கே.நாயர் மறுக்கிறார். மக்கள் கூடும்வரை சிலையை எடுக்காமல் தாமதிக்கிறார். கடைசியில் ராஜினாமாவும் செய்கிறார். இதனால் சிறிது நாட்களில் ஹிந்துக்கள் பகுதியும் சேர்த்து பூட்டப் படுகிறது.

 ஆனாலும் பூசாரிகள் மட்டும் உள்ளே சென்று ராமர் கோட்டத்தில் பூஜை செய்ய அனுமதிக்கிறது. 

 இனி நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இப்படியே தொடரும் என்று அறிவிக்கிறது்

 1950 இல் எல்லா வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே வழக்காக நடக்கிறது. ஹிந்து தலைமையாக நிர்மூகி அகாடா முஸ்லிம் தலைமையாக சன்னி வக்பு வாரியம் என வழக்கு நடக்கிறது.

 1984 வரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ரத யாத்திரை தொடங்குகிறது.
 வெவ்வேறு நகரங்களில் இருந்து ராமர் தேர் போன்று அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் ஊர்வலமாக அயோத்தி நோக்கி செல்கின்றன.

 இந்த நேரத்தில் ஹிந்து பொதுமக்கள் உள்ளே சென்று தங்கள் இடத்தில் பூஜை செய்யலாம் என்று தீர்ப்பு வருகிறது. 

 இந்த நேரத்தில் முஸ்லிம்கள் 'பாபர் மசூதி செயல் குழு' என்று ஒன்றைத் தொடங்கினர் ஆனால் ராமர் சிலையை அகற்ற கோரிக்கை வைத்ததைத் தவிர அவர்கள் பெரிதாக செயல்படவில்லை.

 1989 இல் பகவான் இராமர் இந்த வழக்கில் பங்கேற்கிறார். அதாவது கோவில் தொடர்பான வழக்குகளில் தெய்வத்தின் சார்பாக ஒரு பக்தர் ஆஜராகி கோவில் தரப்பு நியாயங்களை அந்த தெய்வம் வாதிடுவது போலவே வாதிடலாம் என்ற சட்டத்தை பயன்படுத்தி தியோகி நந்தன் அகர்வால் எனும் முன்னாள் நீதிபதி ராமரை இந்த வழக்கில் சேர்க்கிறார் (இந்த ராமர்தான் வழக்கை வெற்றி பெற்றதாக இறுதி தீர்ப்பு வந்தது)

 1989 கும்ப மேளாவில் ஹிந்து அமைப்புகள் கூட்டாக ராமர் கோட்டத்தில் அஸ்திவாரக் கல் வைக்கும் போராட்டத்தை அறிவிக்கின்றன. இதன்பிறகு சாமி கும்பிட வரும் பக்தர்கள் ஒரு செங்கலில் ராம் என்று எழுதி ராமர் கோட்டத்தில் வைத்தனர். இப்படி மூன்றரை லட்சம் செங்கற்கள் சேர்ந்தன. இதை உள்துறை அமைச்சர் முன்னிலையில் அடித்தளமாக அடுக்கி பூஜை செய்தனர்.

 இப்போது வாஜ்பாய் நீக்கப்பட்டு அத்வானி தலைமையில் பாஜக இந்த விடயத்தில் குதிக்கிறது.
இதற்கு காரணம் அன்று இந்த விடயத்தில் ஹிந்துக்கள் காட்டிய பேராதரவு.
  அத்வானி தலைமையில் மோடி திட்டமிடலில் VHP செய்தது போலவே குஜராத்தில் இருந்து ஒரு  ரத யாத்திரை அயோத்தி நோக்கி தொடங்குகிறது. இது செல்லுமிடங்களில் கலவரங்கள் மூண்டன இதனால் 1990 இல் இது பீகாரில் நுழைந்த போது லாலு பிரசாத் யாதவ் தடுக்கிறார். அத்வானியை கைது செய்கிறார்.

 ஆனாலும் RSS தொண்டர்கள் யாத்திரை நின்ற இடத்தில் இருந்து தொடங்கி அயோத்தி நோக்கி வந்தனர். தடைகளை மீறி ராமர் கோட்டத்துக்குள் நுழைய முயன்ற அவர்கள் மீது முலாயம் சிங் உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இதில் 30 பேர் உயிரிழக்கின்றனர்.

 2 தொகுதிகளை வென்றிருந்த பாஜக அடுத்த தேர்தலில் ஹிந்துக்களின் பேராதரவோடு நான்கு மாநிலங்களில் 85 தொகுதிகளில் வெல்கிறது. 

 1991 இல் உத்திர பிரதேச தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது.
கல்யாண் சிங் முதலமைச்சர் ஆகிறார். இவர் பிரச்சனைக்குரிய மொத்த நிலத்தையும் அரசின் சுற்றுலா தளம் அமைப்பதாக கூறி கையகப்படுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் ஒரு அறக்கட்டளைக்கு வெறும் ஒரு ரூபாய் க்கு குத்தகைக்கு விடுகிறார். இங்கே சுற்றுலா தளமாக ராமாயணப் பூங்கா வரவுள்ளதாக அறிவிக்கிறார். 

 இப்போதும் முஸ்லிம்கள் வழக்கு போடுகின்றனர். நீதிமன்றம் கல்யாண் சிங் முயற்சிகளுக்கு தடை விதிக்கிறது.  
 
 கல்யாண் சிங் இப்பகுதியில் இருந்த தடுப்பு வேலிகளை அகற்றி பாதுகாப்பைக் குறைக்கிறார்.

 1992 பிப்ரவரியில் RSS, VHP, BJP, Bajrang dal ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் கூடி மசூதியை உடைக்க திட்டம் தீட்டுகின்றனர்.

 இதை உளவுத்துறை மத்திய அரசிடம் கூறுகிறது ஆனாலும் காங்கிரஸ் அரசு பேசாமல் இருந்து விடுகிறது.

 கல்யாண் சிங் "ஆட்சியே போனாலும் ராமர் கோவில் கட்டுவேன்" என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.

 1992 மத்தியில் VHP தலைவர் "மூன்று மாத காலத்திற்குள் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை என்றால் அடுத்த கட்டத்திற்கு செல்வோம்" என்று அறிவிக்கிறார்.

 VHP "மசூதி இருக்கும்வரை கோவில் கட்டமுடியாது" என்று பரப்புரை செய்கிறது.

 1992 நவம்பரில் டெல்லியில் கூடிய ஹிந்து அமைப்புகள் பாபர் மசூதியை டிசம்பர் 6 இல் இடிப்பதாக முடிவு செய்கின்றனர்.

 அந்த தேதியில் தொண்டர்களைத் திரட்டி அனைவரும் கைப்பிடி அளவு மணல்  அள்ளி குவிக்கும் போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு தொண்டர்கள் திரட்டப்படுகின்றனர்.

 இது தொடர்பான வழக்கில் கல்யாண் சிங் நீதிமன்றத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று உறுதியளிக்கிறார். இதை நிறுத்தினால் கலவரம் வரலாம் என்றும் கூறுகிறார்.

 டிசம்பர் 6 அன்று கல்யாண் சிங் காவல்துறைக்கு துப்பாக்கிச்சூடு மட்டும் நடத்தக் கூடாது என்று உத்தரவிடுகிறார். இதன் பொருள் 'வேடிக்கை மட்டும் பார்' என்பதாகும்.

அங்கே எல்லா ஹிந்து அமைப்புகளும் கூடி இருந்தன. மேடையில் பேசும்போது அத்வானி 'தொண்டர்கள் பலி கொடுக்கத் தயாராகுங்கள்' என்கிறார். வாஜ்பாய்  'இந்த நிலம் நாம் உட்கார முடியாமல் இருக்கிறது. இதை சம மட்டம் ஆக்குங்கள்' என்கிறார்.

 அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு கும்பல் எழுந்து மசூதியை உடைக்கத் தொடங்குகிறது. பிறகு மொத்த கூட்டமும் அப்படியே சென்று மசூதியை உடைக்கின்றனர். அனைவருக்கும் இடிக்கும் கருவிகள் வழங்கப்படுகின்றன.

 11:30 - 4:00 மணி வரை இடிக்கும் செயல் நடக்கிறது. மசூதி முழுவதுமாக இடிக்கப்பட்டு பந்தல் போடப்பட்டு ராமர் சிலை வைத்து பூஜை நடக்கிறது.

 பிறகு 6:00 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்படுகிறது. 
 ஆட்சியைக் கலைக்கும் முன் கல்யாண் சிங் தாமே ராஜினாமா செய்துவிடுகிறார்.
 பாஜக ஆளும் மூன்று மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்படுகிறது.

செய்தி பரவியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மதக் கலவரம் வெடிக்கிறது. 2000 பேர் இறக்கின்றனர்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

 இந்த இடிப்பு சம்பவம் பற்றி விசாரிக்க லிபரான் அயோத்தி கமிஷன் நியமிக்கப்பட்டு இது திட்டமிட்ட செயல் என்று அறிக்கை வருகிறது.

 பிறகு வழக்கு சிபிஐ வசம் போய் இது திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் படுகின்றனர்.

1993 இல் பிரச்சனைக்குரிய நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தி இந்திய அகழ்வாய்வுத் துறை மூலம் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு அதன்படி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. 

 ஆனாலும் 2003 இல் தான் அகழ்வாய்வு தொடங்குகிறது.
 இதில் அடித்தளம் ஆராயப்பட்டு அது முகலாயர் பாணியில் இல்லை என்பது அறிவிக்கப்படுகிறது.
ஆனால் முகலாயர் இதை இடித்துதான் மசூதி கட்டினர் என்று கூறமுடியாது என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
 
 2005 இல் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் இந்த தற்காலிக கோவிலைத் தாக்க முயல்கின்றனர். CRPF படை அவர்களைக் கொல்கிறது.

 2010 இல் உயர்நீதிமன்றம் பிரச்சனைக்குரிய நிலத்தை பிரித்து சன்னி வாரியம், ராமர், நிர்மூகி அகாடா ஆகிய மூவருக்கு வழங்குகிறது.
 
 மூவருமே மேல்முறையீடு செய்கின்றனர். ஆனால்
2017 இல் தான் மீண்டும் வழக்கு தொடங்குகிறது. 
 
 2019 இல் இறுதித் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமாக வருகிறது.

இதற்கு மூன்று காரணங்கள் முக்கியமானவை
1) இந்திய பாணி அஸ்திவாரம் இருக்கிறது என அகழ்வாய்வுத் துறை தந்த அறிக்கை.
 இதன்மூலம் நிலம் ஹிந்துக்களுக்கு சொந்தம் என்று உறுதியானது.

2) அக்பர் கால ஆங்கிலேயப் பயணிகள் புற முஸ்லிம் தளங்களைக் குறித்தது போல அயோத்தியை முஸ்லிம் புனித தலமாக குறிக்காதது
அதேவேளை பிராமணர் இருந்ததைக் குறித்தமை.

3) பாபர் மசூதி பெரும்பாலும் இயக்கத்தில் இல்லாமலே இருந்தது.
ஆனால் ஹிந்துக்கள் அங்கே பூஜை செய்வதை எப்போதுமே நிறுத்தவில்லை.

 எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால் உத்திர பிரதேச முஸ்லிம்கள் இந்த பிரச்சனையில் அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஹிந்துக்கள் ஒற்றுமையாக தீவிரமாக தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்ததே இங்கே அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. 

 ராமர் சிலையை அகற்றாமல் விட்டது,  அகழ்வாராய்ச்சி நடத்தாமலே இருந்தது, 
மசூதியை இடிக்கும் வரை வேடிக்கை பார்த்தது என இந்த பிரச்சனையை காங்கிரஸ் கையாண்ட விதம் ஏற்கும் வகையில் இல்லை. இவ்வளவு நீண்டகாலம் இழுத்தடித்து வேறு பிரச்சனைகள் முற்றும் போது மக்களை மடைமாற்ற இந்த பிரச்சனையை பயன்படுத்தி வந்துள்ளது.

பாஜக இதை வைத்து எல்லா பிரச்சனைகளையும் மடைமாற்றம் செய்து அரசியல் செய்து வந்துள்ளது. 
 
 
  முடிவாக, 
ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்பது முழுக்கப் பொய்!
மசூதியை இடித்தது கண்டிப்பாக குற்றச்செயல்!
தற்போது ராமர் கோவில் கட்டப்படுவது குறுக்குவழியில் கிடைத்த வெற்றி!

 
பி.கு: இணையத்தில் தேடி ஆராய்ந்து எனது யூகத்தை எழுதியுள்ளேன். 
 சான்றுகளைக் காட்டினால் எனது கருத்துகளை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

நன்றி:-
Nitish rajput (yt)
இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு நகல்
விக்கிபீடியா

 

Thursday 18 January 2024

திமுகவும் ஜல்லிக்கட்டும்

திமுகவும் ஜல்லிக்கட்டும்

 2017 இல் தமிழர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராடி ஜல்லிக்கட்டு தடையை உடைத்தனர்.
 ஆனால் அப்போது முக்கியமான போராட்டஙகள் செய்தவர்கள் மீது போடப்பட்ட வழக்கு இப்போது வரை நடந்து வருகிறது.
 ஜல்லிக்கட்டுக்கு தடை 2006 இல் போடப்பட்டு சில மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்தது.
 அப்போதில் இருந்து 2017 வரை திமுக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குறிப்பிடத் தகுந்த ஆதரவு நடவடிக்கை எதையும் செய்யவில்லை (அப்படி செய்ததாக காட்டிக்கொள்ள கார்த்திகேய சிவசேனாபதி யை விலைக்கு வாங்கியது).
 திமுக ஜூலி போன்றவர்களை அனுப்பி போராட்டத்தில் புகுந்து விளம்பரம் மட்டும் தேடிக் கொண்டனர்.
 தற்போது ஆட்சிக்கு வந்தபிறகும் ஜல்லிக்கட்டில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் செய்துவருகின்றனர்.
 உச்சகட்டமாக ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அதற்காக துரும்பையும் அசைக்காத கருணாநிதி பெயரை வைத்துள்ளது.
 ஆனால் போராடியவர்கள் 1000 பேர் வரை இன்றும் 7 ஆண்டுகளாக நீதிமன்றம் அலைந்துகொண்டு இருக்கின்றனர்.
 (அதிமுக தேர்தலுக்கு முன் சிறுசிறு சிவில் வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டது)
 இவர்களில் சிபிசிஐடி வழக்கு உள்ள 150 க்கும் மேற்பட்டோர் அடக்கம். இவர்களுக்கு ஆதரவாக  ‘ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக்குழு’ ஒன்றை தன்னார்வ வழக்கறிஞர்கள் உருவாக்கி வழக்கு நடத்தி வருகின்றனர்.
 ஜல்லிக்ககட்டு போராட்டத்திலேயே குறிப்பிடத் தகுந்த போராட்டம் பாலத்தில் ரயிலை மறித்த மாணவர் போராட்டம். இதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். அதில் முன்னணியில் நின்ற 24 பேர் வழக்கு பாய்ந்தது. அவர்களை இக்குழு 2022 இல் அவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது.
 2023 இல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழக சட்டதிருத்தம் திருத்தம் செல்லும் என்று இறுதி தீர்ப்பு வழங்கிவிட்டது.
 இதைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் உட்பட பலரும் அரசுக்கு போராட்டக்காரர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்க கோரிக்கை வைத்தனர்.
 திமுக அரசு ஒரு நியாயமான அரசு என்றால் தமிழக அரசு போட்ட வழக்குகளை வாபஸ் வாங்கி சிபிசிஐடி வழக்குகளைத் தாமே நடத்தி மேற்கண்ட போராட்டக் காரர்களை விருது வழங்கி கவுரவப்படுத்தி வழக்கு நடத்திய காலத்துக்கு நிவாரணம் வழங்கியிருக்கவும் வேண்டும். ஆனால் ஜல்லிக்கட்டுக்காக இன்னுயிரை ஈந்த சேலம் மாணவர் யோகேஸ்வரனுக்கு கூட இந்த அரசு நிவாரணம் வழங்கவில்லை (ஆனால் ராகவா லாரன்ஸ் வீடு கட்டி கொடுத்தார்). 
 
தமிழகத்தில் மொழிப்போர் காலத்தில் இருந்து எந்தவொரு போராட்டத்தையும் மக்கள் திரண்டு நடத்துவதும் கடைசியில் திமுக அதன் மீது தன் போர்வ்வையைப் போர்த்தி அமுக்கிக் கொள்வதும் தொட்டர்ச்சியாக நடக்கிறது.
 மொழிப்போர் தியாகிகள் இன்றுவரை கௌரவிக்கப் படவில்லை. சிலைகள் இல்லை. அவர்களது கல்லறைகள் கழிவிடங்கள் போல ஆகிவிட்டன. குமரியை மீட்ட தியாகிகளும் கடைசிவரை நிவாரணம் கேட்டு அலைந்து செத்துப் போயினர். 

 இப்படியான பின்னணி கொண்ட திமுக நம் கண் முன்னே  ஜல்லிக்கட்டு மைதானத்திலும் பரிசுகளிலும் உடைகளிலும் தனது முகரைக் கட்டையை ஒட்டுவது எவ்வளவு அயோக்கியத்தனம்?!  
 நடிகைகளை மட்டும் அடக்கத் தெரிந்த உதயநிதி ஒய்யாரமாக ஜல்லிக்கட்டு பார்ப்பது எவ்வளவு கொடுமை?!
 தமிழர்கள் இனியும் தாமதிக்காமல் ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
 

Saturday 6 January 2024

பேருந்து நிலைய அரசியல்

பேருந்து நிலைய அரசியல்

 *தினமும் 6000 பஸ்கள் ஓட்டுநர் நடத்துநர் பற்றாக்குறையால் ஓடாமல் நிற்கின்றன.

* இதில் அதிகம் சென்னை பஸ்கள் (600 - 900)

*போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் 8 ஆண்டுகளாக நிரப்பப் படவில்லை.

*பணியில் இறந்தவர்களின் வாரிசுகள் அந்த வேலைக்காக 13 ஆண்டுகளாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

*புதிய பென்சன் முறையை எதிர்த்து வழக்கு நடப்பதால் கடந்த எட்டு ஆண்டுகளில் ஓய்வு பெற்ற ஓட்டுநர் நடத்துநர் பென்சன்  பெறவில்லை.

*கடந்த 8 ஆண்டுகளாக பணியில் இறந்தவர்களுக்கு பழைய முறைப்படி பென்சன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அது நடக்கவில்லை.

*இருக்கும் ஓட்டுநர் நடத்துநர்களும் அதிகமான வேலைப்பளுவில் உள்ளனர்.

*ஓடும் பேருந்துகளும் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் உள்ளன.

*பஸ்கள் குறைந்து மக்கள் பைக், வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது தனியாருக்கு லாபம்.

*பஸ் பயணம் இல்லாமல் தனித்தனியாக பயணிப்பது சுற்றுச் சூழலுக்கும் கேடு, போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும்.
 
*பஸ்சை நம்பியிருக்கும் அடித்தட்டு மக்கள் வேலை, தொழில் பாதிப்பு.

மேற்கண்டவை CITU சௌந்தர்ராஜன் பேட்டி மூலம் அறியக் கிடைப்பவை.

 இது மட்டுமில்லை கடும் நட்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்துத் துறையில் மகளிர் இலவசம் என்பது அதன் உயிர்மூச்சை நிறுத்தும் செயல்.
 இதனால் இந்த ஆண்டில் மட்டும் போக்குவரத்து துறை 5341 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
 
சுருக்கமாகக் கூறினால் தினமும் 6000 பஸ்கள் ஓட்ட ஆளில்லாமல் தண்டமாக நிற்கின்றன. அதில் பெரிய பாதிப்பு சென்னைக்கு. 8 ஆண்டுகளாக இருக்கும் பஸ்களை ஒழுங்காக ஓட்ட துப்பில்லாத திராவிட அரசுகள் பிரம்மாண்ட பெரிய பேருந்து நிலையம் கட்ட காரணம் என்ன?!

 அதிலும் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டு மாவட்டத்தில் போய் விவசாய நிலத்தை கையகப்படுத்தி பெரும் பொருட்செலவில் கட்டியது ஏன்?!

அது பிரயோஜனம் இல்லை என்று மக்கள் எதிர்ப்பு வந்தபிறகு மாநில நிதியில் அருகே ரயில் நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது சரியா?!

 சென்னை நகர மத்தியில் மிகப்பெரிய அரசு நிலத்தை குதிரைப் பந்தயம் விட்டு அனுபவித்து கொண்டு பல கோடி வாடகை பாக்கி வைத்திருக்கும் கிண்டி ரேஸ் கோர்ஸ் ஏன் பேருந்து நிலையமாக மாற்றப்பட வில்லை?!

 எதற்கு நகர மத்தியில் அல்லு அர்ஜுன் நிறுவனம் நடத்தும் கார் ரேஸ் மைதானம்? அதற்கு அரசு பணம் 14 கோடி செலவு?!

கோயம்பேடு பழைய பஸ் ஸ்டான்ட் நிலத்தை லூலூ மால் கட்ட தனியார் கார்ப்பரேட் டுக்கு தாரை வார்க்க திட்டம் உள்ளதாக சீமான் வைக்கும் குற்றச்சாட்டு உண்மையா?!

 நகர மத்தியில் பெருமுதலாளிகள் சுகமாக இருக்க பொதுமக்கள் பேருந்து இல்லாமல், பேருந்து நிலையம் இல்லாமல், இடைஞ்சலான சாலைகளில் வடிகால் வசதி இல்லாமல் அவதி படுவதுதான் திராவிட மாடலா?