கூட்டணிக்காக நடந்த கோவை குண்டுவெடிப்பு 
 கோவை மண்டலம் தொழில் வளர்ச்சி பெற்றபோது கோயம்புத்தூரில் நாயுடுகள் திருப்பூரில் கவுண்டர்கள் தொழிலில் கோலோச்சுகின்றனர்.
 கோயம்புத்தூரில் இசுலாமியரும் வர்த்தகத்தில் கோலோச்சுகின்றனர்.
இவர்களுக்கு போட்டியாக மார்வாடிகளும் இருக்கின்றனர்.
 தொழிலாளர் அமைப்புகள் அங்கே அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றனர்.
 இப்போது வடக்கே பாஜக ஆட்சிக்கு வருகிறது.
இங்கே திமுக ஆட்சியில் இருக்கிறது.
 1997 ஆண்டு இறுதியில் அதிமுக பாஜக வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்கிறது.
திருப்பம்-1
 தொழிலாளர் அமைப்புகள் வளர்ச்சி பிடிக்காத முதலாளிகள் இங்கே மத அரசியலைக் கொண்டுவரத் தீர்மானிக்கின்றனர்.
 முதலில் திட்டமிட்டு திராவிட அமைப்பினர் கோவை இசுலாமியர் பகுதிகளில் கூட்டம் போட்டு நாத்திகம் பேசுகிற பெயரில் இந்து மதத்தை கேவலமாக பேசுகின்றனர்.
திருப்பம்-2
 பிறகு இதற்கு எதிர்வினை ஆற்றுவதாக இந்து அமைப்பினர் கோவை இந்துக்கள் பகுதிகளில் கூட்டம் நடத்தி இசுலாமிய மதத்தை கேவலமாக பேசுகின்றனர்.
 இது இசுலாமியர் ஆதரவுடன் நடப்பதாகக் காட்டப்படுகிறது
திருப்பம்-3
 இப்படி இந்து அமைப்பினருக்கும் இசுலாமிய அமைப்பினருக்கும் மோதல் உருவாக்கப்படுகிறது.
 அப்போது இங்கே இருந்த போலீசார் இந்து அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இசுலாமியரிடம் கெடுபிடியுடனும் நடந்துகொள்கின்றனர்.
திருப்பம்-4
 ஒரு இசுலாமிய ரவுடிக்கும் ஒரு டிராபிக் போலீசுக்ககும் தகராறு ஏற்படுகிறது.
 இதன் அந்த டிராபிக் போலீஸ் 1997 நவம்பர் இறுதியில் இசுலாமிய ரவுடிகளால் கொல்லப்படுகிறார்.
திருப்பம்-5
 இதனால் இந்து முசுலீம் கலவரம் வருகிறது!
இசுலாமிய நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீவைக்கப்படுகின்றன.
 பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு இசுலாமியல்களை போலீசும் சேர்ந்து கொலை செய்கிறது.
 இந்த கலவரத்தில் 18 இசுலாமியர்கள் 2 இந்துக்கள் கொல்லப்படுகின்றனர்.
திருப்பம்-6
 இதன் தொடர்ச்சியாக இசுலாமிய இயக்கம் அத்வானியின் தமிழக வரவை எதிர்க்கும் வகையில் 21 பொது இடங்களில் குண்டுவைக்கிறது.
 இதில் 12 குண்டுகள் வெடிக்கின்றன. மீதி கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்படுகின்றன.
 இந்த பயங்கரவாத சம்பவத்தில் 58 பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நேரம்.
திருப்பம்-7
 இப்போது நடந்த (1998 பிப்ரவரி) தேர்தலில் அதுவரை இல்லாத வகையில் பாஜக வேட்பாளர் (சி.பி.ராதாகிருஷ்ணன்) பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்.
திருப்பம்-8
 ஒரு ஆண்டுக்குள் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்து 1999 இல் திமுக - பாஜக கூட்டணி உருவாகிறது (2004 வரை தொடர்கிறது).
 கோவை மண்டலத்தில் பாஜக ஆதிக்கம் பெறுகிறது.
தொழிலாளர் அமைப்புகள் வலுவிழக்கின்றன.
கொங்கு மண்டலத்தில் வடவர்கள் குவியத் தொடங்குகின்றனர். 
முதலாளி தொழிலாளி என இருதரப்பும் வடவர் கைக்கு போகிறது.
 இன்றைய நிலையில் இருந்து கூர்ந்து நோக்கினால் அன்று இது மத்திய அரசும் மாநில அரசும் திட்டமிட்டு செய்த செயல் என்பது விளங்கும்.
ஏனென்றால் சம்பந்தமே இல்லாத திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.
நாத்திக அமைப்புகள் இந்து மதத்தை திட்டினால் இந்து அமைப்பினர் சம்பந்தமே இல்லாமல் இசுலாமிய மதத்தை திட்டுகின்றனர்.
 அப்படி நடந்ததற்கு இஸ்லாமியர் சம்பந்தமே இல்லாத போலீசை  கொல்கின்றனர். 
 இதற்கு சம்பந்தமே இல்லாமல் இந்து - முஸ்லீம் கலவரம் வருகிறது.
 இதற்கு சம்பந்தமே இல்லாமல் அத்வானியைக் கொல்ல இஸ்லாமியர் திட்டமிடுகின்றனர்.
அதற்கு சம்பந்தமே இல்லாத பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்கிறார்கள்.
 ஒரு பணக்கார மரக்கடை வியாபாரி (எஸ்.ஏ.பாட்ஷா) அரசுக்கே தெரியாமல் வளைகுடா நாடுகளில் கோடிக்கணக்கில் பணம் திரட்டி ஒரே நேரத்தில் 21 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வைத்து 3 மனித வெடிகுண்டுகளும் தயார் செய்தார் என்பது அரசின் அறிக்கை! 
 இதில் எதிலுமே லாஜிக் இல்லை!
 இதில் நடந்த நிகழ்வுகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
 அரசியல்வாதிகள் மக்களைப் பிரித்தாள மதவாத இயக்கங்களையும் காவல்துறையையும் பயன்படுத்தி சதி செய்துள்ளனர்!
 பொறுமையாக சிந்தித்தால் இது தமிழகத்தின் ஒரு பகுதியை வடவருக்கு தாரைவார்க்க தி.மு.க வும் பா.ஜ.க வும் இணைந்து நடத்திய நாடகம் என்பதும் விளங்கும்!
 சமீபத்தில் நடந்த கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவமும் இத்தகையது.
 தேசிய புலனாய்வு (NIA) கண்கானிப்பில் இருக்கும் ஒருவர் (ஜமேஷா முபின்) இந்திய ராணுவத்தில் மட்டுமே கிடைக்கும் வெடிபொருள் மற்றும் இந்தியாவிற்குள் கிடைக்க வாய்ப்பில்லாத வெளிநாட்டு வெடிபொருள் வைத்திருந்தார் என்பதும் இதற்கு சான்று.
 ஆனால் எப்படியோ அதிர்ஷ்ட வசமாக இந்த கோவை குண்டுவெடிப்பு பார்ட்-2 தோல்வியில் முடிந்துள்ளது. 
நன்றி: பத்திரிக்கையாளர் மணி அவர்களது பேட்டி
No comments:
Post a Comment