Thursday 28 December 2017

கிறிஸ்துமஸ் உண்மைகள்

கிறிஸ்துமஸ் உண்மைகள்

ஏசு பிறக்கும் முன்பே Yule என்ற பெயரில் கொண்டாடப்பட்டுவந்த விழா கிறித்துவ மதம் பரவியபிறகு கிறிஸ்துமஸ் என்று ஆக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
பிறகு அதுவே இயேசு பிறந்தநாள் என்று கதைகட்டப்பட்டது.

ஆனால் ஏசு பிறந்தது கோடைகாலம்.
மரியாளும் யோசேப்பும் ரோமானியப் பேரரசின் கணக்கெடுப்பிற்காக வந்திருந்தபோது ஏசு பிறந்ததாக விவிலியம் (Luke 2: 1-4) கூறுகிறது.
அந்த கணக்கெடுப்பு பனிக்காலத்தில் நடப்பதில்லை.
அப்போது மேய்ப்பர்கள் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்ததாக பைபிள் (Luck 2: 7-8) கூறுவது மேலும் ஒரு சான்றாகும்.

அதேபோல கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி விவிலியத்தில் எந்த குறிப்பும் இல்லை.
அந்த கற்பனை கதாபாத்திரம் 300 ஆண்டுகள் முன்பு உருவாக்கப்படுள்ளது.

  கிறிஸ்துமஸ் தாத்தாவின் இன்றைய உருவம் 150 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வரையப்பட்டு பிறகு 1930களில் cocacola கம்பெனியால் தனது விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது.

இன்றைய ஏசுநாதர் உருவமும் கற்பனையே!
ஏசுவின் உருவம் எப்படி இருந்துருக்கும் என்பதை ஆய்வு செய்து Dr.Neave என்பவர் ஒரு உருவத்தை வடிவமைந்துள்ளார்
(பார்க்க படம்).

அவர் பிறந்து வளர்ந்த இடத்தை கருத்தில் கொண்டால் ஏசு பச்சைக் கண்களுடன் செம்பட்டை முடியுடன் கூர்மையான மூக்குடன் வெளுத்த தோலுடன்  ஒரு ஐரோப்பியர் போல இருந்திருக்க வாய்ப்பில்லை.

பைபிளோ ஏசுவின் தலை மற்றும் முடி பஞ்சுபோல வெள்ளையாக இருந்ததாக கூறுகிறது (Revelation 1:14).

ஆனால் ஏசு இறக்கும்போதோ அவருக்கு 35 வயது.

Thursday 21 December 2017

2ஜி விடுதலை ஹிந்திய ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டு

2ஜி விடுதலை
ஹிந்திய ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டு

ஏறத்தாழ 121கோடி பேர்
தலைக்கு ரூ.1446 போட்டு 1,75,000 கோடி கொடுத்து கருணாநிதி குடும்பத்தை வாழவைத்துள்ளனர்.

கருணாநிதி வாரிசுகள் ஆயிரம் தலைமுறைக்கு உழைக்கவேண்டியதில்லை.

ஊழலில் உலகச்சாதனை புரிந்து இது போல பல ஊழல்கள் மூலம் உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த கருணாநிதி குடும்பத்தை எதுவும் செய்யமுடியாதா?

நாளை அமையும் தமிழர்நாட்டு உளவுத்துறை கருணாநிதி குடும்பத்தையும் அதன் வாரிசுகளையும் வம்சாவழிகளையும் விடாமல் துரத்தி துன்புறுத்தி இந்த பணத்தை திரும்பக்கொண்டு வந்தால் உண்டு.

Saturday 16 December 2017

சேரன் அண்ணனுக்கு நன்றி

சேரன் அண்ணனுக்கு நன்றி

குழித்துறை மீனவர் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது,
இருந்தாலும் இதை எழுதாமல் விடமுடியவில்லை.

இயக்குநரும் திரைத்துறையில் தமிழர்களின் குரலுமான  சேரன் அவர்களின் பேட்டியை இப்போதுதான் பார்க்க முடிந்தது.

தலைமையைக் கைப்பற்றியிருக்கும் விசாலை எதிர்த்து துணிச்சலான அவரது நடவடிக்கை காலத்தால் தமிழர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

அதன் தொடர்பாக எடுக்கப்பட்ட பேட்டியில் அவர் தெரிவித்த  வெளிப்படையான கருத்துகள் அவரது இனப்பாசத்தை காட்டுவதாக அமைந்தது.

அவர் தெரிவித்த கருத்துகள் கீழ்க்கண்டவாறு,

விசால் ஒரு தெலுங்கர்.

அவர் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் எதையும் செய்யவில்லை.

அவர் தமிழர்களை ஆள நினைக்கக்கூடாது.

அவரினத்து மக்கள் ஆர்.கே.நகரில் உள்ளனர்.
அதற்குத்தக்க தொகை பேசி வாங்கவே அவர் தேர்தலில் குதித்தார்.

நாம்தமிழர் போன்ற திட்ட வரைவு விசால் உட்பட யாரிடமும் இல்லை.

(07.12.2017)

Thursday 14 December 2017

முதல் நெருப்பு

ஈழத்தமிழர் உயிர் காக்க "தீ மூட்டிய முதல் நெருப்பு" அப்துல் ரவூப் நினைவு நாள்

15.12.1995
1995ஆம் ஆண்டு சிங்கள இனவெறி பிடித்த சந்திரிகா அரசாங்கம்  தனது இராணுவ நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை யாழ்குடா நாட்டிலிருந்து வெளியேற்றி கொண்டிருந்தது. ஒருபுறம்  தெற்காசிய விளையாடுப் போட்டிக்காக சிங்கள கிரிக்கெட் அணி இந்திய அரசின் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டில் விளையாட  தயாராகிக் கொண்டிருந்தது.

மறுபுறம் தொலைக்காட்சியில் 150 விடுதலைப்புலிகள் சிங்கள இராணுவத் தாக்குதலில் மரணமடைந்தனர் என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. இதையெல்லாம் காணப்பொறுக்காமல்  இருபத்தி நான்கு வயதுடைய இளைஞன் ஒருவன் மனச்சோர்வோடு காணப்பட்டான்.

1995,டிசம்பர் 15ஆம் நாள் பொழுது புலர்ந்தது. தான் பணிபுரிந்து வந்த லண்டன் கணினி பயிற்சிப் பள்ளிக்குச் சென்றான். அங்கிருக்கும் ஒரு அறைக்குச் சென்று தாம் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யை தன்னுடலில் முழுவதும் ஊற்றினான் . நனைந்த ஆடையோடு அருகிலுள்ள காமராசர் வளைவுக்கு ஓடோடி வந்தான். தீயை தன்னுடலில் பற்ற வைத்தான். கருகிக் கொண்டிருக்கும் உடலைக் கண்டவுடன் நண்பர்கள் சிலர் காப்பாற்ற ஓடோடி வந்தனர்.

அப்போது அந்த இளைஞன் பின்வருமாறு கூறினான்: " என்னைக் காப்பாற்றாதீர்கள்: ஈழத்தமிழரை காப்பாற்றுங்கள்" என்று உருக்கமாக பேசி சரிந்தான். 

அரசு மருத்துவ மனையில்  உடல் முழுவதும் வெந்த நிலையில் சேர்க்கப்பட்டான். காவல் துறையினர் மோப்பம் பிடித்து வாக்கு மூலம் பெற ஓடோடி வந்தனர். " தம்பி! நீ எந்த கட்சியப்பா என்றதும், கட்சிகள் பேரைச் சொல்லி கொச்சைப்படுத்தாதீர்! முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுக்காகத்தான் தீக்குளிச்சேன்" என்று இறுதி வாக்கு மூலம் தந்தான்.

அவன் பெயர் அப்துல் ரவூப். 5.12.1971ஆம் ஆண்டு பிறந்தான். தந்தை பெயர் அசன்முகம்மது. பெரம்பலூர்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர். தி.மு.க. ஆதரவாளரும் கூட.

அப்துல் ரவூப் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். சிறுவயது முதலே   எதையும் தீவிமாக சிந்திக்கும் குணமுடையவன். யாரிடமும் அதிமாக பேச மாட்டான். ஆனால் எதைப் பற்றிக் கேட்டாலும் தெளிவாக பதில் தருவான். தாய் மீது மிகுந்த பாசம் கொண்டவன். புத்தக வாசிப்பு நிறைய உண்டு.

ஒருமுறை கிரிக்கெட்டில் இந்தியா தோற்ற போது  விம்மிவிம்மி அழுது தனது இந்திய தேசப்பற்றை வெளிக்காட்டினான். அப்போது  தமிழினத்தை அழித்தொழிக்கும் சிங்கள அரசின் கொடூரக் கொலைகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதற்காக இந்தியாவின் கல்மனம் கரையாதிருப்பது கண்டு மிகவும் வருத்தம் கொண்டான். அன்றிலிருந்து சிங்கள அரசோடு இந்தியாவையும் சேர்த்து வெறுக்க கற்றுக் கொண்டான்.

அப்துல் ரவூப் நாகப்பட்டினம் ஐ.ஐ.டி.யில் சுருக்கெழுத்தர் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஒருநாள் காணாமல் போனான். பரிதவித்து வந்த தந்தையார் அசன் முகம்மதுக்கு மும்பையில் உள்ள "கொலாபா" பகுதியில் இருப்பதாக தகவல் வந்தது. சமாதானம் பேசி ஒருவழியாய்  அசன்முகமது தனது மகனை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். அப்போது தந்தையிடம் அப்துல் ரவூப் பின்வருமாறு கூறினார்: " நான் பிராபாகரன் அணியில சேர்ந்து போராடறதுக்காகப் போனேன். என் இலட்சியத்தை வீணடித்து விட்டீர்களே? " அவன் சொன்ன பதில் தந்தையை திகைக்க வைத்தது. அப்துல் ரவூப்பிற்கு ஈழ விடுதலை உணர்வு நெஞ்சில் கணன்று கொண்டிருப்பதை புரிந்து கொண்டார்.  சாவின் விளிம்பிலும் கூட அப்துல் ரவூப்பின்  கண்ணில் ஈரம் கசிய வில்லை என்பதை பல பேட்டிகளில் வெளிப்படுத்தினார்.

அப்துல் ரவூப்  ஈழ விடுதலை மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தீராப் பற்றுக் கொண்டதை பாராட்டும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சுப் பணியகம் விடுத்த அறிக்கை பின் வருமாறு: "கலந்திருக்கும் சுவாசக் காற்றில் நஞ்சைத் தூவக் காத்திருப்பவைகள் யாவும் சத்தின்றி சருகாகப் போகும் என்பதைத் தான் அப்துல் ரவூப்பின் தியாகம் எடுத்துரைக்கிறது" 

அப்துல் ரவூப் ஏந்திய தீப்பந்தம் இன்னும் அணைய வில்லை. அது எதிரிகளை எரிக்கும்.  தன்பகை முடிக்கும். வெல்லும் தமிழீழம்!

செய்தி உதவி:  நந்தன் வழி மாதமிருமுறை ஏடு
(டிசம்பர் 1-15 , 1997)

நன்றி: கதிர் நிலவன்

Wednesday 13 December 2017

என்றுமில்லாத கொள்ளை

என்றுமில்லாத கொள்ளை

2011ல் தமிழகத்தின் கடன் ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி.
(தலைக்கு ஏறத்தாழ ரூ.14000)

2017ல் தமிழகத்தின் கடன் மூன்று லட்சத்து பதினான்காயிரம் கோடி.
(தலைக்கு ஏறத்தாழ ரூ40,000)

அதாவது வெறும் 6 ஆண்டுகளில் மூன்று மடங்கு கடனாளி ஆபியுள்ளோம்.

தற்போது தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை 40,000 ரூபாய் கடனாளியாகப் பிறக்கிறது.

(அண்ணன் அன்புமணி அவர்களின் உரையிலிருந்து)

Tuesday 12 December 2017

உடுமலை சங்கரின் கிராமத்தில் சாதிமறுப்பு திருமணங்கள்

உடுமலை சங்கர்

படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கிராமம் உடுமலை அருகே கொமரலிங்கம்.

மொத்தம் 1600 குடும்பங்கள் வரையுள்ள அந்த கிராமத்திலேயே 30 குடும்பங்கள் வரை சாதி தாண்டி திருமணம் செய்தவர்கள் என்று
தலித்திய வெறி ஊடகமான வினவே பதிவு செய்துள்ளது.
(தலைப்பு: சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்)

வினவு செய்த ஒரு திரிபு வேலை அவரை பள்ளர் என்று பதிவு செய்தது.
(கொமரலிங்கம் 1500 குடும்பங்கள் வரை பள்ளர் வாழும் கிராமம்)

உண்மையில் சங்கர் ஒரு (தெலுங்கர்) சக்கிலியர் ஆவார்.

Saturday 9 December 2017

நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்

நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்

ஆர்.கே.நகரில் நாம்தமிழர் மேடையில் தெலுங்கில் பேசி வாக்குசேகரித்த காணொளி பரவலாகி வருகிறது.

ஒரு தெலுங்கரை தெலுங்கு அடையாளத்தோடு கட்சியில் சேர்த்து
அவரைவிட்டு தெலுங்கில் பேசவைத்து தெலுங்கரிடம் ஓட்டுக் கேட்பது தவறில்லைதான்.

ஆனால் 'நாம் தமிழர்' என்று பெயரை வைத்துக் கொண்டு இவ்வாறு செய்வதற்கான அவசியம் என்ன என்றுதான் புரியவில்லை.

  முதலில் தெலுங்கரைத் தவிர்த்துவிட்டு இங்கே அரசியல் செய்யமுடியாது என்ற நிலை இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழர் பாதிக்கு பாதி வாழ்ந்த எல்லைப் பகுதிகளை அண்டைமாநிலங்கள் பறித்துக்கொண்டுவிட்டன.
இதனாலேயே பிற மாநிலங்களை விட அதிக 'மண்ணின் மைந்தர் பெரும்பான்மை' தமிழகத்திடம் உள்ளது.

(இதையும் விடாது வந்தேறிகள் குடியேற்றம் தொடர்ந்து நடத்தப்பட்டு தமிழகத்தில் தமிழர் செறிவு நீர்த்துப்போக அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படுகின்றன.
தற்போது 4 தொகுதிகளில்

நா.த.க முதலில் தமிழரை (மட்டும்) முழுமையாக ஓரணியில் திரட்டும் முயற்சியைச் செய்யுங்கள்.
வந்தேறிகள் கடைசியில் தானாக வந்து ஒட்டிக் கொள்வார்கள்.

பிறமொழியாளருக்கு இப்போதே (234 இல்) 15 இடங்களில் நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று உங்கள் வியனரசு வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர்களெல்லாம் நீங்கள் அவரவர் மொழியில் பேசியதால்தான் உங்கள் கட்சி சார்பில் நிற்க முன்வந்தார்களா?

ஒருபேச்சுக்கு தெலுங்கர் 15% க்கு மேல் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் தமிழ் தெரிந்தவர்கள்தானே?!
தமிழிலேயே வாக்கு கேட்கவேண்டியதுதானே?!

தெலுங்கருக்கு உங்கள் கட்சி என்ன செய்யும்? அவர்களிடம் என்ன நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தமிழிலேயே விளக்குங்கள்.

இலங்கை உட்பட முழு தென்னிந்திய துணைக்கண்டமும் தமிழ் புரியும்.
எல்லாவனும் வெட்டி பந்தாவுக்கு தமிழ் புரியாதமாதிரி நடிக்கத்தான் செய்கிறான்.

நீங்கள் பிற மொழியில் பேசி வாக்கு கேட்பதை தமிழக எல்லைக்கு வெளியே வாழும் தமிழர்களிடம் வேண்டுமானால் செய்யுங்கள்.
ஆனால் தமிழகத்திற்கு உள்ளே தெலுங்கு பேசி உங்கள் கட்சியை வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை.

"இல்லைங்க!
எங்களுக்கு மொழிவெறி இல்லைனு வெளிய காட்டிக்கணும்!
தமிழர்கள் எங்க மேல வைச்சிருக்க நம்பிக்கை குறைஞ்சாலும் பரவாயில்ல!
தெலுங்கர் மனசுலயும் துண்டுபோட்டு வெப்போம்!" என்றால், நீங்கள் மாநில ஆட்சியைப் பிடிப்பது அதிசயமாக நடந்தாலும் நடக்கும்,
தமிழர் மனதில் இடம்பிடிப்பது நடக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Friday 8 December 2017

மதுசூதனன் நாயுடு

ஆர்.கே.நகர் மக்களே!
மதுசூதனன் நாயுடு வருகிறார்!
இதற்கு தயாராக இருங்கள்!
(நாம்தமிழர் இந்த படத்தை பரப்புரையின்போது பயன்படுத்தலாம்)

Thursday 7 December 2017

குமரி மீனவரும் ராமேஸ்வரம் மீனவரும்

குமரி மீனவரும் ராமேஸ்வரம் மீனவரும்

அதுல பாருங்க...
வேதாரண்ய மீனவன சிங்களவன் சுட்டா
மத்த மீனவன் வேடிக்கை பாப்பான்.

ராமேஸ்வரம் மீனவன சிங்களவன் பிடிச்சிட்டு போகும்போதும்
அவன் சொத்தையா ஒருநாள்  வேலைநிறுத்தம் நடத்தும்போதும்
மத்த மீனவன் வேடிக்க பாப்பான்.

இவ்வளவுநாள் மத்த மீனவன் போராட்டத்த ஒருவரிச் செய்தியா படிச்சிட்டு கொட்டாவி மட்டுமே விட்ட குமரி மீனவன் இப்போ புயலால் பாதிக்கப்பட்டு போராடவேண்டிய நிலமை.

ஆனா மத்த மீனவனுகள விட குமரி மீனவன் சூடு சொரணை உள்ளவன்.
இப்போ 5000 பேர் சேந்து குழித்துறையை ஸ்தம்பிக்க வச்சிட்டான்.

சென்னைல வெள்ளம் வந்தப்ப அரசாங்கத்த காறிதுப்பிட்டு மக்களே அனுப்பிவச்ச நிவாரண பொருட்களகூட மறிச்சு ரெட்டல சின்னத்த ஒட்டுன அடிமை நாய்க ஆளுற சூழ்நிலைல
அவன விட மோசமானவன்னு தமிழ்நாடே ஒதுக்கின பாஜகவுக்கு ஓட்டையெல்லாம் போட்டுட்டு கேரளாவோட சேத்துருங்கனு பேசுறான்.
கொழுப்ப பாத்தீங்களா?!

ஆனா பாருங்க
கோவத்துல பேசுறான்னு தமிழகமே கவலைப்படுது.

ஆனா மத்த மீனவனுக மட்டும்  பெரிய மனசோட குழித்துறைல சேர்ந்து போராட  வரமாட்டானுக.

இதுல கடற்கரையெல்லாம் சேர்த்து ஒரே மாவட்டம், அதில் தொகுதி, கட்சி வேணும்னு வாய்கிழிய கேப்பானுக!

ஒலகத்துலயே சொரணையே இல்லாத,
மீசைவச்சு வேட்டி கட்ட தகுதியில்லாத பொட்டையான ஒரு சமூகம் உண்டுனா அது ராமேசுவரம் மீனவ சமூகம்தான்.

அவன நடுக்கடல்ல சிங்களவனும் ஹிந்தியனும் அடிச்சு, தொவச்சு, அம்மணமாக்கி, திருக்கமீன போடவிட்டு, அப்பனுக்கும் மகனுக்கும் முதலிரவு நடத்தி, குனியவச்சு பின்னால் ஏறி, கைகால வெட்டி கடல்ல தள்ளி, பொருளலாம் கொள்ளையடிச்சு, இலங்கைக்கு கொண்டுபோய் அடைச்சு இஸ்டத்துக்கு சித்ரவதை பண்ணி,
ஒலகத்துல இல்லாத கொடுமையெல்லாம் பண்ணிட்டு இருக்கான்.

ஆனா கரைக்குவந்து ஒப்பாரி வைப்பானுகளே ஒழிய ஒரு சிங்களவன செவுள்ல அறைய துப்பு இருந்தது கிடையாது.

இப்பல்லாம் சிங்கள கடற்பட கூட வரவேண்டாம் சிங்கள மீனவனே வெறுங்கையால அடிச்சு தொவச்சு அம்மணமாக்கி விரட்டிடறான்.

இவனுக சேலய கட்டிகிட்டு கடலுக்கு குடும்ப பொம்பளைங்கள அனுப்பலாம்.
அவளுக சிங்களவன அடக்கக்கூட வாய்ப்பு இருக்கு.

நா கேக்குறேன்
மீனவ சமூகம் மனசுவச்சா எவ்வளவு பெரிய போர்க்கப்பலா இருந்தாலும் அவங்கள மீறி அந்த கடல கடந்து போகமுடியுமா?

எந்த எந்த பொருள் எப்படி எப்படி கடத்தணும் எந்த எந்த வழியா கொண்டுவரணும்னு அவனுக்கு தெரியாததா?

ஒரு சின்ன படகுல வெடிகுண்டோட ஒரு கரும்புலி மட்டும் கடல்ல எறங்கி நின்னா பெரிய பெரிய சிங்கள போர்க்கப்பல்லாம் அந்த திசை பக்கமே வராது.

புலிகள பக்கத்துல இருந்து பாத்தும் பாடம் படிக்காத ராமேஸ்வரம் மீனவனுக்கு
குமரி மீனவன பாத்தா சொரண வரப்போகுது?!

Monday 4 December 2017

கன்னியாகுமரி மீட்பில் தினமலர் (வரைபடம்)

கன்னியாகுமரி மீட்பில் தினமலர் (வரைபடம்)

மார்சல் நேசமணி தலைமையில் நடந்த மண்மீட்பு போராட்டத்தில் அன்று டி.வி.ஆர் தலைமையில் இயங்கிய தினமலர் நாளிதழ் தமிழர்களுக்கு பல்வேறு தடைகளையும் மீறி முழு ஆதரவை வழங்கியது.

1954 இல் தினமலர் வெளியிட்ட வரைபடம் மற்றும் கட்டுரைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
---------------

ஐக்கிய கேரளமும் ஐக்கிய தமிழகமும் - 1

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் வரை திருவிதாங்கூரில் மலையாளிகளும், தமிழர்களும் அண்ணன், தம்பி முறையில் சகோதரர் களாக வாழ்ந்து வந்தார்கள். எந்தவித இன வேறுபாடுகளும் கிளம்பியதே இல்லை. தென்திருவிதாங்கூரிலுள்ள தமிழர்களில் சிலர் ஒரு காலத்தில், தங்கள் பள்ளிக்கூடங்களில் மலையாளம்தான் போதிக்கப்பட வேண்டும், அப்படியானால்தான் ராஜ்ஜிய நிர்வாகப் பதவிகளில் கூடுதல் பங்கு கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு உயர்தரப் பாடசாலைகளில் ஒரு தமிழ்ப் பண்டிதர் இருந்தால், நான்கு மலையாளப் பண்டிதர்கள் இருப்பார்கள்.
விளவங்கோடு, நெய்யாற்றங்கரை மக்களில் இன்று கூட அநேகருக்கு மலையாளம்தான் தெரியும்.
அவர்களில் சிலர் மலையாள நடையுடை பாவனைகளையே அனுஷ்டித்தும் வந்தார்கள்.
பெண்கள்கூட தங்கள் தமிழ் மரபுச் சேலைகளைக் கைவிட்டுவிட்டு, வெள்ளை ‘முண்டு’ அணிந்து பெருமை கொண்டாடினர்கள்.
இன்னும் ஒருபடி போனால் மாவேலிக்கரை, மூணாறு, தொடுபுழை, வைக்கம் முதலான இடங்களில் வசிக்கும் பெருவாரியான தமிழர்கள், நடையுடை பாவனைகளில் எந்தவித மாறுபாடும் காட்டாமல் மலையாளிகளாகவே காட்சியளித்து வந்தார்கள்.
ஆனால், கல்யாணம் போன்ற சடங்குகளில் மட்டும் தமிழ் மரபைக் கடைப்பிடித்து வந்தார்கள்.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது.
இரும்பு உள்ளம் படைத்த நமது ஒப்பற்ற தலைவர் வல்லபாய் படேல், திருவிதாங்கூரையும், கொச்சியையும் ஒன்றாக இணைத்தார்.
இந்த இரு சுதேச ராஜ்ஜியங்களும் அப்படியே இருந்தால், பிற்காலத்தில் அவை மூலம் நாட்டிற்கு ஏதாவது கேடுகள் சம்பவிக்கலாம் என்பதும் இணைப்பிற்கு ஒரு காரணமாகும்.
அது மட்டுமல்ல, கிரமமாக சுதேச ராஜ்ஜியங்களை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் காங்கிரசின் நெடுநாளைய கனவு.
அக்கனவுதான் வல்லபாயை அவ்வாறு செய்யத் துண்டியது.
இந்த இரண்டு இராஜ்ஜியங்களும் சேர்ந்த பிறகும் தமிழர் - மலையாளி உறவு பாதிக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

இன்று திரு - கொச்சியில் இருக்கும் 90 லட்சம் ஜனத்தொகையில் தமிழர் 20 லட்சத்திற்கு மேல் இருக்கிறார்கள்.
இந்தக் கணக்கிற்கு, ‘சென்சஸ் ’ ஆதாரம் கிடையாது.
ஏனெனில் மலையாளம் பேசும் தமிழர்களை எல்லாம் மலையாளிகளாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது.
தோவாளை, அகஸ் தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய ஏழு தாலுகாக்களிலும் முழுக்க முழுக்கத் தமிழர்களே இருக்கிறார்கள்.
நெய்யாற்றங்கரையில் நூற்றுக்கு அறுபது தமிழர்கள்.
சித்தூரிலும் அப்படியே.
இதுதவிர நெடுமங்காடு, பத்மனாபபுரம் தொடங்கி மலையிலுள்ள தோட்டங்களில் வேலை செய்யும் முக்காலே மூணு வீசம் பேர் தமிழர்கள். திருவனந்தபுரத்தில் பாதிப்பேர் தமிழர்கள்.
மற்றும் கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், கொச்சி முதலான நகரங்களிலும், நிறையத் தமிழர்கள் குடியிருந்து வருகிறார்கள்.
சிறு சிறு ஊர்களிலும் தமிழர்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கிறார்கள்.
இவர்களை எல்லாம் சரியாகக் கணக்கு எடுத்துப் பார்ப்பதாக இருந்தால், இந்நாட்டில் நான்கில் ஒரு பங்கினர் தமிழர்கள் என்பது புலனாகும்.
15 இலட்சம் தமிழர்கள் என்று சொல்வது நமக்கே நம்முடைய கணக்கு தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.
தமிழர் கணக்கு இவ்வாறு இருக்கிறது என்பதை மனத்தில் கொள்வோம்.

மக்களாட்சி ஏற்பட்டதிலிருந்து ஒவ்வொரு சம்பவத்தையும் கவனிப் போம்.
முதலாவதாகப் பட்டம் தாணுப்பிள்ளை மந்திரி சபை அமைத்தார்.
அதில் ஒரு நாயர், ஈழவர் (சி.கேசவன்), ஒரு கிறிஸ் துவர் (டி.எம்.வர்கீஸ் ) ஆகிய மூவரும் மந்திரிசபையில் அங்கம் வகித்தார்கள்.
தமிழருக்குப் பிரதிநிதியாகப் பி.எஸ் . நடராஜபிள்ளையை எடுத்தார்கள்.
ஆனால், அவருக்கு அன்று ஒரு தினம் மட்டுமே மந்திரியாக இருக்க முடிந்தது.
பின் வெவ்வேறு பதவிகளைக் கொடுத்தார்களே தவிர, மந்திரி பதவி கொடுக்கவில்லை.
இந்த இடத்தை நேயர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும்.
பட்டத்தின் சகாக்களுக்குப் பி.எஸ் .நடராஜபிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால், வேறு ஒரு தமிழனை எடுத்தால் என்ன?
அப்படியும் எடுக்கவில்லை. காங்கிரஸ் பதவிக்கு வந்ததும் ஜாதி வாரியில்தான் மந்திரிகள் வந்தார்களே ஒழிய, காங்கிரசின் அடிப்படை இலட்சியங் களுக்கு ஒப்ப மந்திரிகளைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
ஒரு நாயரும், ஒரு கிறிஸ்துவரும் இருக்கக்கூடாதா . . .
அல்லது இரு நாயரும், ஒரு கிறிஸ்துவரும் இருக்கக்கூடாதா . . .
இல்லை, திரு - கொச்சி அரசியலில் அப்படிப்பட்ட ஒரு ஜாதி, மத பேதமற்ற ஆட்சியை ஸ்தாபிக்க முடியவில்லை.
ஜாதி வாரியாகத்தான் எடுக்க முடிந்தது.
அப்படியானால், நான்கில் ஒரு பங்கு ஜனத்தொகை உள்ள தமிழனுக்கு இடம் ஏன் கொடுக்கவில்லை?
மலையாளிகளை விட, பழைய காங்கிரசில் தமிழனே கணக்கரிய தியாகங்களைத் திருவிதாங்கூரில் புரிந்திருக்கிறான் என்பது வெள்ளிடைமலை.
அப்படிப்பட்ட தமிழர்களை அலட்சியம் செய்வது, மக்களாட்சி ஏற்பட்ட முதல் கட்டத்தில் தமிழர்களுக்குக் கிடைத்த முதல் அடியாகும்.
அந்த முதல் அடி விவேகமுள்ள தமிழர்களை எவ்வளவு தூரத்திற்குப் புண்படுத்தி இருக்கும் என்பதை விளக்க வேண்டியது இல்லை.
அதற்குப் பின் உள்ள அரசியல் சூழ்நிலைகளையும், சம்பவங்களையும் நாளைய தலையங்கத்தில் தொடர்ந்து ஆராய்வோமாக.
(ஜூலை 23, 1954 ‘தினமலர்’ தலையங்கம்).
--------------------------
ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும் - 2

மக்களாட்சி ஏற்பட்ட முதல் கட்டத்திலேயே பட்டம் மந்திரி சபையினர் தமிழர்களுக்குத் தந்த, ‘முதல் அடியை’ நேற்று விளக்கியிருந்தோம்.
அதன்பிறகு ஏற்பட்ட சம்பவங்களைப் பார்ப்போம்.
பட்டம் மந்திரி சபை குடைசாய்ந்ததும், டி.கே.நாராயணப்பிள்ளை அதிகாரத்திற்கு வந்தார்.
அவரது மந்திரி சபையிலும் தமிழனைக் கவனிக்கவில்லை.
அடுத்தபடியாக, சி.கேசவன் தலைமையில் மந்திரி சபை அமைக்கப்பட்டது.
அவரது பதவிக் காலத்திலும் பழைய சொக்கன் சொக்கனே. இந்த மூன்று மந்திரி சபைகளிலும் தமிழர்களது நியாயமான உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வந்தன.
சட்டசபைத் தலைமைப் பதவி என்ற இரண்டாம் வகுப்பு மார்க்கம் கூட தமிழருக்குக் கொடுக்கப்படவில்லை.
அதற்கெல்லாம் கூடத் தமிழர்கள் தங்கள் பிறப்புரிமையை வற்புறுத்தாமல் வாய்பேசாப் பிராணிகளாகவே இருந்தார்கள்.

இரண்டாவது பொதுத் தேர்தல் வந்தது.
திருவிதாங்கூர் தமிழ் நாட்டுக் காங்கிரசிற்குப் பெருவாரியான ஸ்தானங்கள் கிடைத்தன.
அப்பொழுதும் அவர்கள் கவனிக்கப்படவில்லை.
இதற்கிடையில் காங்கிரசாருக்குள்ளே சண்டை வந்தது.
காங்கிரஸ் மந்திரி சபையே திவாலாகி விடும் என்று பயப்படும்படியான நிலை ஏற்பட்டது.
அதைத் தவிர்க்க, வேண்டாவெறுப்புடன் தமிழர்களின் பிரதிநிதியாக, ஏ.சிதம்பரநாத நாடாரை மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டார்கள்.

பஞ்சாயத்துத் தேர்தல் வந்தது. அத்தேர்தலில் காங்கிரசிற்குப் பெருவாரியான ஸ்தானம் கிடைத்தது.
கம்யூனிஸ்டுகள் கை வெகுவாகத் தாழ்ந்தது.
உடனே காங்கிரசில் உள்ள மலையாளிகளின் மனம் மாற ஆரம்பித்து விட்டது.
சிதம்பரநாதன் அவசியம் இல்லாமலேயே காங்கிரசின் சொந்த பலத்தால், ‘அடியந்திரம்’ நடத்தி விடலாம் என்று மலையாளிகள் நம்பினர்.
எனவே, மற்றொரு தேர்தல் நடத்தவேண்டும்.

தேர்தல் நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தைச் சிருஷ்டிக்கவேண்டும் என்பதற்காகக் காங்கிரசார் தங்களுக்குள்ளேயே ஒரு சண்டையைக் கிளப்பிக்கொண்டனர்.
தி.த.கா., தங்களுடன் நிபந்தனையின்றி இணையவேண்டும்; இல்லையேல் வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தி.த.கா., விற்கு ஒரு தனி பி.சி.சி., அந்தஸ்து கேட்டார்கள்.
கடைசியில் ஒரு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி அந்தஸ்தாவது கிடைக்குமா என்று கூடப் பார்த்தார்கள்.
ஒன்றும் பயனில்லை.
தங்களை வெளியேற்ற திரைமறைவில் பல சூழ்ச்சிகள் நடந்துவந்தன என்பது அவர்களுக்குத் தெளிவாகிவிட்டது.
உடனே அவர்கள் மானமாகப் பதவியை உதறித் தள்ளிவிட்டு வெளியே வந்தார்கள்; சட்டசபையும் கலைக்கப்பட்டது.
அடுத்த தேர்தலும் நடந்தது.

ஆனால், ஒரு ஆச்சரியம். . .
காங்கிரஸ் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வி அடைந்தது.
117 பேர் கொண்ட சட்டசபையில் 45 பேர்தான் வந்தார்கள்.
தி.த.கா.,விற்குப் பெரும் வெற்றி கிடைத்தது.
எட்டாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
மக்களின் ஆட்சியில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அரசியல் குரோதங்களை எடுத்துக்காட்டவே இங்ஙனம் பழைய சம்பவங்களை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
இவை இத்தோடு நிற்கட்டும் .

மொழிவாரிப் பிரிவினைக் கிளர்ச்சி, தூங்கியவன் கதை போல சப்பென்று இருந்தபோது, பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணமும், அதைத் தொடர்ந்து ஆந்திர ராஜ்ஜியம் அமைந்ததும் இந்தியாவுக்கே புது உத்வேகத்தை ஊட்டியது.
நேருஜியைக் கூடப் பலமாக உறுத்த ஆரம்பித்துவிட்டது.
அந்த உத்வேகத்தை எப்படியாவது தணிக்க வேண்டும் என்பதற்காக, மூவர் கொண்ட ஒரு ராஜ்ஜிய புனர் அமைப்புக் கமிஷனை நேருஜி நிறுவினார்.

கேரள ராஜ்ஜியம் அமைக்க வேண்டுவதையும், அவர்கள் குறிப்பிடும் எல்லைகளையும் நினைக்கும் போது நமக்கு வருத்தம் ஏற்படுவதோடு சிரிப்பே அதிகம் ஏற்படுகிறது.
கேரளத்தில் இருந்து ஒருவர் சொல்கிறார்,
‘இது மேற்குக் கரை ராஜ்ஜியமாக இருக்க வேண்டும்’
அதாவது, குமரி முனை முதல் பம்பாய் வரை அவருக்குத்தானாம்.
இன்னொருவர் சொல்கிறார்,
‘காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையிலும் கேரளம்’.
ஆனால், நீலகரி, கோயம்புத்தூர், குடகு இந்த மூன்றும் இந்த ராஜ்ஜியத்தில் சேர்ந்தால்தான் கேரள ராஜ்ஜியம் சிறப்பாக அமைய முடியுமாம்.
அவர்களில் யோக்கியமானர்கள், இரண்டு மாவட்டங் களைக் கொண்ட மலபாரையும், திரு - கொச்சியையும் சேர்ந்த ஒரு கேரள ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஏனைய்யா . . . தெற்கு கிழக்கு பாகங்களிலும், மலைகளிலும் தமிழர்கள் இருக்கிறார்களே அவர்கள் கதி என்ன என்று கேட்டால்,
‘பரசுராமன் கோடரி எறிந்து உண்டாக்கிய எல்லையில் யாருக்குமே தலை போட உரிமை இல்லை’ என்று சொல்கிறார்கள்.
கன்னியா குமரியில் சென்னை கவர்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.
கன்னியாகுமரியில் ரோட்டரி கிளப்பினர் கொடுத்த விருந்து ஒன்றில் கவர்னர் பேசுகையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்,
அசாம் மக்களும் உங்கள் திரு - கொச்சியைப் போல் பரசுராமன்தான் அவர்களது நாட்டைச் சிருஷ்டித்ததாகக் கூறுகிறார்களாம்.
நல்லவேளை, இந்தத் தாமோதர மேனன் ஒருவரும் அங்கு இல்லையே என்று மகிழ்ந்தேன்.
அவர் இதைக் கேட்டால் அசாமையும், கேரளத்தோடு சேர்க்க வேண்டுமென்று கிளர்ச்சி ஆரம்பித்து விடுவார்களே! அப்பொழுது நம்மைப் பிடித்து இருக்கும் தலைவலி அவர்களையும் பிடிக்குமே என்று நினைத்தேன்.

பரசுராமர் கதையை இழுத்து அர்த்தமற்ற விவாதத்தைக் கேரளியர்கள் கிளப்புகிறார்கள் என்பதை நாம் சொல்லவில்லை.
சென்னை கவர்னர் சொல்கிறார் என்பதற்காகவே மேற்கண்ட பிரசங்கத்தை எடுத்துக்காட்டினோம்.
திரு - தமிழ்பிரதேசம் பிரியக்கூடாது என்பதற்குக் கேரளியர்கள் கூறும் பல விதண்டாவாதங்களை நாளை சொல்வோம்.
(ஜூலை 24, 1954 ‘தினமலர்’ தலையங்கம்.)
------------------------

ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும் - 3

திரு - கொச்சி தமிழ்ப் பிரதேசத்தைப் பிரிக்கக் கூடாது என்று கேரளியர்கள் கூறுவதற்குரிய காரணங்களைப் பார்ப்போம்.
1) பரசு ராமன் சிருஷ்டித்தது.
2) இயற்கையான சகியமலைத் தொடருக்குள் இந்தப் பகுதி இருப்பது.
3) தமிழ்ப் பிரதேசங்களைப் பிரித்துவிட்டால் நெல், ரப்பர், தேயிலை, ஏலம், மின்சார நிலையங்கள் உற்பத்திகளை இழக்கவேண்டி வருவதால் பட்ஜெட்டைச் சரிக்கட்ட முடியாது.
4) அப்படியே தமிழர்கள் தங்களுடன் இருக்க இஷ்டப்படாவிட்டால் இந்தப் பகுதியை விட்டுப் போய் விடட்டும். அவர்கள் இங்குப்பிழைக்க வந்தவர்கள்தான்.
5) இனி ஒரு விசித்திரமான காரணத்தையும் கேளுங்கள்.
"நீங்கள் அங்குப் போக வேண்டும் என்று சொல்கிறீர்களா?
தமிழ்நாட்டில் இதுபோல பள்ளிக்கூடம் உண்டா?
ஆஸ் பத்திரி கள் உண்டா?
போலீஸ் பாதுகாப்பு உண்டா?
அடிப்படைத் தீர்வை உண்டா?
இவ்வளவு சாலைகள் உண்டா?
இவையெல்லாம் இதுபோல் உங்களுக்கு அங்கு ஏற்பட வேண்டுமானால் இன்னும் நூறு வருடம் ஆகுமே?!"

இதையெல்லாம் நாம் ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

1) பரசுராமர் காலத்தைப் பார்ப்போம்:
இப்பொழுதுள்ள ஆப்கானிஸ்தானம், பாரதத்திலுள்ள காந்தார ராஜ்ஜியம்.
காந்தார ராஜனின் மகள்தான் காந்தாரி.
ஆகையினால், எந்த வகையிலும் ஆப்கானிஸ்தானத்தை நாம் விடக்கூடாது.
அதேபோல் இப்பொழுது இருக்கும் மேற்குப் பாகிஸ்தான் புராதன பாரதத்தின் ஹிருதயஸ்தானம்.
ஆதலால், அதையும் நாம் திரும்ப அடைய வேண்டும்.
அசாமும், பரசுராமனுடைய சிருஷ்டி ராஜ்ஜியமானதால் அதையும் கேரளத் துடன் சேர்க்கவேண்டும்.
இதெல்லாம் சரிதான் என்றும் நடக்கக்கூடியதென்றும் கருதுவதாயிருந்தால் கேரளமும் சரிதான்.

2) மேற்கு மலைத்தொடருக்கு மேற்கே அமைந்திருக்கும் இடம் என்றால், மலைத் தொடருக்குக் கிழக்கே அமைந்திருக்கும் இடம் அத்தனையும் ஒருங்கே சேர்க்கவேண்டாமா?
அப்படியானால் ஆந்திரம் எப்படி சாத்தியம்?
இன்னும் மேற்கு மலைத் தொடருக்குள் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றனவே அவற்றையும் சேர்க்கவேண்டாமா
இது என்ன அபத்த வாதம்.

3) ஒரு மக்களைக் கூட்டாகக் கொண்ட ஒரு பகுதிக்குச் சவுகரியங்கள் வேண்டுமென்றால் அதற்கு இன்னொரு பகுதி என்ன பழி செய்தது.
ஒருவருக்கு வீடில்லை என்பதற்காக இன்னொருவருடைய வீட்டை பறித்துக் கொடுப்பார்களா?
பயிருக்காகத் தந்த தண்ணீரிலே கொஞ்சம் மின்சாரம் எடுக்கிறேன் என்றால் விடுகிறார்களா பாருங்கள்.
‘கிருஷ்ணா நதியில் தண்ணீர் பாழாய்ப் போகிறது.
எங்கள் ஆற்காட்டிற்குக் கொஞ்சம் கொடு ஐயா’ என்று ஆந்திரர்களைக் கேட்டுப்பாருங்கள்; அப்போது தெரியும்.
இன்னொரு பகுதி செழிப்பாய் இருக்கவேண்டும் என்பதற்காக யாராவது தன்னிடத்தை விட்டுக்கொடுப்பார்களா?

4) ‘கூலிகள் . . . பிழைக்க வந்தவர்கள்’ என்று அற்பத்தனமாய், ‘மனோரமா’ போன்ற பத்திரிகைகள் எழுதுவது வெட்கக்கேடானது.
இங்கு வாழும் தமிழர்கள், மலையாளிகளையும் விடப் பூர்வகுடிகள்.
மேலும், உண்மையிலேயே கூலிகளாய் இலங்கைக்குப் போன இந்தியர்களை நாம் திரும்ப அழைக்கத் தயாரா?
‘எந்த நியாயத்தில் கூடாது?’ என்பதை நாம் பல பத்திரிகைகளிலும் சர்ச்சை செய்ததை அறிவோம்.

5) நாங்கள் கேட்கிறோம் . . . ‘நீங்கள் மலபார் மக்களோடு சேர்ந்து வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா?
அங்குப் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, சாலை, பாலம், போலீஸ் , அடிப்படைத் தீர்வை எல்லாம் உண்டா?’
அது மலேரியா நிறைந்த காடாச்சே!
திரு - கொச்சித் தமிழர்களும் இதுநாள்வரை சும்மாதான் இருந்தார்கள்.
எவ்வளவோ அவமதித்தும் கூட, உங்களுக்கு மலபார் பைத்தியம் பிடித்தவுடன்தான் எங்களுக்கும் தமிழ்நாடு பித்துப் பிடித்தது!
ஒன்றுமே இல்லாத மலபாரை நீங்கள் விருத்தி செய்யலாம் என்று நினைக்கிறீர்களல்லவா?
அதுபோல் தரிசாய்க் கிடக்கும் தமிழ்நாட்டையும் பொன் விளையும் பூமி ஆக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை...
‘மற்ற ஏழு தாலுகாக்களையும் கூட விடலாம்;
தேவிகுளம், பீர்மேடு என்ற இடத்தை எப்படி விடுவது?’ என்கிறது ஒரு குரல்.
ஒரு விஷயத்தை மக்கள் நன்றாகப் பதிய வைக்கவேண்டும்.
அதவாது, பள்ளிவாசல் என்ற இடத்தைத் தமிழர்கள் கேட்கவில்லை.
அதைத் தவிர உள்ள இடத்தைத்தான் கேட்கிறார்கள்.
எனவே, மின்சாரத் திட்டம் போய்விடும் என்று மக்கள் மனத்தைக் குழப்பவேண்டாம்.
மேலும், திவான் வாட்ஸ் காலத்திற்கு முன் திருவிதாங்கூர்காரருக்கு இப்படி ஓர் இடம் இருப்பதாகவே தெரியாது.
நேரியமங்கலம் பாலம் வந்தபிறகுதான் திருவிதாங்கூர் மக்கள் அந்த இடத்தைப் பற்றி அறியத் தொடங்கினார்கள்.
அங்கு இன்னும் பெரும்பான்மைத் தோட்ட முதலாளிகள் தமிழர்களும், வெள்ளையர்களும்தான்.
கண்ணன்தேவன் மலைத் தோட்டத்தில் ஆரம்ப காலந்தொட்டு,
அதாவது கடந்த நூறு வருடமாய் நூற்றுக்கு நூறு தமிழர்கள்தான் தொழிலாளர்கள்.
ஆதலால், தமிழர்கள் அதைக் கேட்பதில் ஒரு தவறும் இல்லை.
எந்தக் குருடனும் அதற்குச் சம்மதிப்பான்.
ஆகையால், ஐக்கிய கேரளம் வேண்டுமென்று என்ன முறையில் கேட்கிறார்களோ, அதே நியாயம் ஐக்கிய தமிழகத்துக்கும் பொருந்தும்.

‘நீங்கள் ஐக்கிய கேரளம் என்ற பூதத்தைக் கிளப்பி விட்டீர்கள்;
அதற்குரிய பலியைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அது உங்களை விடாது.
(ஜூலை 25, 1954 ‘தினமலர்’ தலையங்கம்)