Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts

Thursday, 28 December 2017

கிறிஸ்துமஸ் உண்மைகள்

கிறிஸ்துமஸ் உண்மைகள்

ஏசு பிறக்கும் முன்பே Yule என்ற பெயரில் கொண்டாடப்பட்டுவந்த விழா கிறித்துவ மதம் பரவியபிறகு கிறிஸ்துமஸ் என்று ஆக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
பிறகு அதுவே இயேசு பிறந்தநாள் என்று கதைகட்டப்பட்டது.

ஆனால் ஏசு பிறந்தது கோடைகாலம்.
மரியாளும் யோசேப்பும் ரோமானியப் பேரரசின் கணக்கெடுப்பிற்காக வந்திருந்தபோது ஏசு பிறந்ததாக விவிலியம் (Luke 2: 1-4) கூறுகிறது.
அந்த கணக்கெடுப்பு பனிக்காலத்தில் நடப்பதில்லை.
அப்போது மேய்ப்பர்கள் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்ததாக பைபிள் (Luck 2: 7-8) கூறுவது மேலும் ஒரு சான்றாகும்.

அதேபோல கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி விவிலியத்தில் எந்த குறிப்பும் இல்லை.
அந்த கற்பனை கதாபாத்திரம் 300 ஆண்டுகள் முன்பு உருவாக்கப்படுள்ளது.

  கிறிஸ்துமஸ் தாத்தாவின் இன்றைய உருவம் 150 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வரையப்பட்டு பிறகு 1930களில் cocacola கம்பெனியால் தனது விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது.

இன்றைய ஏசுநாதர் உருவமும் கற்பனையே!
ஏசுவின் உருவம் எப்படி இருந்துருக்கும் என்பதை ஆய்வு செய்து Dr.Neave என்பவர் ஒரு உருவத்தை வடிவமைந்துள்ளார்
(பார்க்க படம்).

அவர் பிறந்து வளர்ந்த இடத்தை கருத்தில் கொண்டால் ஏசு பச்சைக் கண்களுடன் செம்பட்டை முடியுடன் கூர்மையான மூக்குடன் வெளுத்த தோலுடன்  ஒரு ஐரோப்பியர் போல இருந்திருக்க வாய்ப்பில்லை.

பைபிளோ ஏசுவின் தலை மற்றும் முடி பஞ்சுபோல வெள்ளையாக இருந்ததாக கூறுகிறது (Revelation 1:14).

ஆனால் ஏசு இறக்கும்போதோ அவருக்கு 35 வயது.

Thursday, 5 October 2017

பூணூல் போட்டக் குயவர்

பூணூல் போட்டக் குயவர்
---------------------------------------

வேறு எந்த சாதியையும்
அவன்-இவன்,
அந்த பய -இந்த பய,
அந்த புத்தி - இந்த புத்தி,
அதுக - இதுக
என்று பேசினால் பிற்போக்கு

ஆனால்,

பார்ப்பனர்களை
பாப்பான்,
பாப்பாரப்பய,
பார்ப்பன புத்தி, குடுமி,
பூணூல்,
அவாள்,
என்றெல்லாம் பேசினால் அது மட்டும் முற்போக்கு!

இப்பொது முற்போக்கிற்கு வந்த சோதனையைப் பாருங்கள்!

1837 ல் வரையப்பட்ட இந்த ஓவியம் பூணூல் போட்டபடி ஒரு குயவர் பானை செய்யும் காட்சியை கண்முன் நிறுத்துகிறது.
"Seventy-two Specimens of Castes in India" எனும் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது.

நம்புங்க மக்களே!
பூணூல்னா பார்ப்பான்!
ஒரு பூணூல் ஒரு கோடி ரூபாய்!
அது போட்டவன் உயர்ர்ர்ர்ர்ர்சாதி!
சமஸ்கிருத ஆரியனின் அடையாளம்!
பூணூல்! பூணூல்! பூணூல்!

Wednesday, 5 April 2017

ஆளி (யாளி) - தமிழர் பழமைக்குச் சான்று

ஆளி (யாளி) 
- தமிழர் பழமைக்குச் சான்று

யாளியின் படத்தை எளிய ஓவியமாக வரைந்துள்ளேன்.
இதை கோவில் தூண்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
எல்லா கோவில் தூண்களிலும் இருக்கும்.
(தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை)

யானையை விட பெரிய உருவம், சிங்கத்தைப் போன்ற முகமும் உடலும்,
அதோடு துதிக்கையும் தந்தமும் இருக்கும் அதிசய விலங்கு யாளி.
இந்த யாளி யானையைக் கொன்ற குறிப்புகள் இலக்கியங்களில் வருகின்றன.

-----------------
ஆளி நன்மான் அணங்குடை யொருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்

ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு, வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த,
அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் (தந்தம்) பறித்து,
குருத்தினைத் தின்னும் அச்சம் தரும் அச்சுரத்திடத்தே.

_ மதுரை இளங்கெளசிகனார் (அகநானூறு 381: 1-4)
-----------------------

மூரித்தாள் ஆளி யானைத் தலை
நிலம் புரள வேண்டுகோடு
உண்டதே போன்று”

யானையின் தலை நிலத்தில் புரள (அதைக் கீழே தள்ளி) அதன் தந்தத்தைப் பறித்து யாளி உண்ணும்
(சீவகசிந்தாமணி 2554 :1-2)
--------------------

மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே.

யானையை வேட்டையாட எண்ணிய ஆளி யானை கிடைக்கவில்லை என்று எலியை வேட்டையாடக் குறி பார்க்காது.
நான் பாடிய பாடல் இளவெளிமான் செவியில் ஏறிவிட்டது.
பலன் கிடைக்கப்போகிறது என எண்ணியிருந்தேன்.
ஆனால் சோறு சமைத்த பானை நெருப்பைத் தருவது போல் இவன் தருகிறான்.
ஆறு போல் பாய்ந்து வேறு இடத்தில் பரிசில் பெற்றுக்கொள்ளலாம்.

_ பெருஞ்சித்திரனார்
(புறநானூறு 207 : 8)
-----------------------
வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும்

ஆளியானது (யாளி) பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

– நக்கண்ணையார்,
(அகநானூறு 252 : 1-4)
------------------------
இரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட கண்டவேலா

இரத்த சேற்றில் தேர்ப்படை, குதிரைப்படை, யாளிப்படை மூன்றையும் ஒழித்து கடல்சூழ்ந்த சூரமலையை தூளாக்கிய வேலன்

(திருப்புகழ் 477)
----------------
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி கழையோனி

யானையைக் கொன்று அதன் உடுத்திய கயிலை மலை (அதாவது கைலாசமலையின்) யாளி என்று சிவனைக் கூறுகிறது.
(திருப்புகழ் 577)
-----------------
இதே போல யானையையே விழுங்கும் மாசுணம் (அல்லது அசுணமா) என்ற பாம்பு (அல்லது விலங்கு) பற்றியும் குறிப்புகள் உள்ளன.

அனகோன்டா என்ற சொல்லானது 'யானைகொன்றான்' என்ற (ஈழத்)தமிழ்ச் சொல்லை ஆங்கிலேயர் எடுத்துக்கொண்டது.
(ஆனகொன்டான் என்றே உச்சரிப்பர்)
சான்று:
Ophidia Taprobanica or the Snakes of Ceylon, Wall, Frank (1921)

The deriviation of "Anaconda", Ferguson, Donald (1897)

Monday, 9 January 2017

ஏறுதழுவதல் மற்றும் குதிரை பயன்பாடு கற்காலத் தமிழர் ஓவியம்

கற்காலம் முதலேயே மஞ்சு விரட்டும் பரியேற்றமும் தமிழர்கள் செய்து வந்தது தான். இதற்கான சான்றுகள் தமிழகத்தில் 5000 ஆண்டுகள் முன்னரேயே இருந்து வந்துள்ளன.
பீட்டா, ஆரிய, திராவிட, தலித்தியக்கதைகள் என்ன சொல்லும்னா ஏறுதழுவல் ஒரு சாதிக்கூறியதுன்னும் அது அனைத்து தமிழர்களும் விளையாட்டில்லைன்னும் அதனால் அது தமிழர் விளையாட்டில்லைன்னும் சொல்லும்.
ஆரியன் தான் தமிழ்நாட்டுக்கு குதிரையையே கொண்டுவந்தான்னும் அதுக்கு முன்னாடி தமிழருக்கு பரியேற்றமே தெரியாதுன்னும் கண்டபடி கதை விட்டுக்கொ(ல்லு
)ள்ளும்.
குதிரை இந்திய விலங்கே கிடையாதுன்னும் அதை ஆரியர்கள் வட இந்தியாக்கு கி.மு. 1500 அளவில் குடிபுகுந்த போது கொண்டுவந்தனர்னு உச்சபச்ச நகைச்சுவை காமெடிகளை அவிழ்த்துவிடும்.

தமிழ்நாட்டில் பரி வரையபட்டதற்கான சான்றுகள் 5000 ஆண்டுகள் முன்னரயே கிடைக்கின்றனவே என கீழுள்ள ஓவியங்களை வைத்து கேட்டுப்பாருங்கள்.
அது உடனே வேற்றுக்கிகவாசிகள் கொண்டுவந்ததுனு கதைவிட ஆரம்பிச்சுருவாங்க.
ஏற்கனவே கூர்ங்கோட்டவர் பக்கத்தில் வேற்றுக்கிரகவாசிகள் கதையை அமெரிக்க வந்தேறிகள் தென்னமெரிக்க மண்ணின் மைந்தர்களின் பழைய சான்றுகளை எல்லாம் வேற்றுக்கிரகவாச
ிகளுடையதுன்னு கதைவிட்டதையும் இந்தியத்தொல்லியல் துறையும் கூட பழங்குடிகளின் வரைபடத்தை வேற்றுக்கிரகவாசிகளா என அறிய நாசாவுக்கு அனுப்பிய அவலத்தையும் பதிவு செய்திருந்தேன்.
அந்த பதிவு இந்த இணைப்பில்
வேற்றுக்கிரகவாசி கதைகளை கட்டுவதன் மூலம் மண்ணின் மைந்தர்களின் சான்றுகளை எல்லாம் வஞ்சகமாக திரிப்பதற்கு மிகப்பெரிய உலக சதிகள் அரங்கேறி வருகின்றன.
இதனால் மண்ணின் மைந்தர்கள் கூட அந்த இடத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள் என கதை கட்டி இன தேசியம் எழவிடாமல் பார்த்துக்கொள்வது உலக வந்தேறிகளின் வழக்கம்.
அதாவது தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு திராவிடர்களாக கி.மு. 1500 அப்போதே வந்தனர் என்பது போன்ற கதைகளும் தென்னமெரிக்க பழங்குடிகளுக்கு அறிவை கற்றுத்தந்ததே தற்போதைய வேற்றுக்கிரகவாசிகளான அம்மண்ணின் முன்னால் பூர்விக மக்கள்னும் அந்த வேற்றுக்கிரகத்துக்கு போன முன்னால் பூர்விக மக்களிடம் தற்கால செவ்விந்தியர் குடியேறி பிச்சை எடுத்து அனைத்து கதைகளையும் கற்றது போலவும் என்பது போன்ற கதைகளும் இந்த இரகம்.

இன்னும் தமிழர்கள் விலங்குகள் மூலம் வழிபாடு, மெய்யியல், போர் கலை போன்றவற்றை எப்டிக்கற்றனர் என்பதுலாம் தொகுத்து எழுதினால் பெரிய நூலே வெளியிடலாம்.
இது ஏறுதழுவல் காலம் என்பதால் மஞ்சுவிரட்டு, குதிரையேற்றம் தொடர்பாக தமிழகத்தில் 5000 ஆண்டுகள் முன்னரேயே இருக்கும் இரண்டு வரலாற்றுப்பதிவுகள் பற்றி மட்டும் தற்போது படமாக கீழே தந்திருக்கிறேன்.
- தென்காசி சுப்பிரமணியன்

Thursday, 14 January 2016

புலிகளுக்கு நான் கூறவிரும்புவது

புலிகளே!
உங்களுக்கு நான் கூறவிரும்புவது ஒன்றுதான்.

"ஈழத்தில் இருக்கும் இறுக்கமான கண்கானிப்பு நம் தமிழகத்தில் இல்லை".

உலகநாடுகளே வெளியேறுங்கள்

உலகநாடுகளே வெளியேறுங்கள்
நீங்கள் தலையிட்டதால்தான் இத்தனை அழிவு
ஓரமாய் நின்று வேடிக்கையை மட்டும் பாருங்கள்
இனியும் தலையிட்டால் தலையறுபடுவீர்கள்