Showing posts with label குயவர். Show all posts
Showing posts with label குயவர். Show all posts

Tuesday, 13 February 2024

குலாலா மட்டும் இல்லன்னா

குலாலா மட்டும் இல்லன்னா

 "கலம் செய் கோவே" அதாவது "பானை செஞ்சு தாங்க மகாராசா" என்கிற மாதிரி மரியாதையாக கூப்பிட்டு 'எனக்கு தகுந்த ஈமத்தாழி செய்து தா' என்று கணவனை இழந்த துக்கத்தில் பாடுகிறாள் ஒருத்தி (புறநானூறு 256).

 ஒரு தேர்ந்த குயவர் மண்ணை தன் விருப்பம் போல வளைத்து பானை செய்வது போல மன்னன் நாட்டை வடிவமைத்ததாக புறநானூறு (32) கூறுகிறது.
 
 கம்ப ராமாயணம் (3980) 'வன் தோள் குயவன் திரி மட்கலத்து' என்று தோள்வலிமை கொண்ட குயவர் சக்கரத்தைச் சுற்றுவது போல என்று மரியாதையுடன் உவமை காட்டுகிறது.

 பெரியபுராணம் 'திருநீலகண்டத்து குயவனாருக்கு' என்றும் 
 சித்தர் பாடல் 'நாலாறு மாதமாய் குயவனை வேண்டி' என்றும் குயவரை மரியாதையுடன் குறிக்கின்றன.

 கிபி 1837 இல் அமெரிக்க பயணி வரைந்த குயவர் ஓவியம் கொசவன் என்ற தலைப்புடன் இருக்கிறது அதில் பூணூல், கடுக்கன், தலைப்பாகை அணிந்த குயவர் பானை செய்வது போல உள்ளது (Seventy-two Specimens of Castes in India).

 ஆனா இவனுக சொல்ற கதைய பாருங்க!
 தமிழர்கள் சாதிவெறியோட குயவரை "கொசப்பய" னு சொன்னோமாம்!
சாதிக் கொடுமை பண்ணோமாம்!
 உடனே தெலுங்கு குலாலா ஓடிவந்து 'இனி நீங்களும் குலாளர் என்று அழைக்கப் படுவீர்களாக' னு தங்களோட பெயரை குயவருக்கு சூட்டி மரியாதை வாங்கித் தந்தானுகளாம்!

குயவர் என்கிற பெயரையும் வேளார் என்கிற பட்டத்தையும் மீட்க குயவர் குரல் எழுப்பினால் சாதி ஒற்றுமை கெட்டுவிடுமாம்!

 அதனால் அரசின் சாதிப் பட்டியலில் உள்ளபடி 'குலாலா சாதியின் ஒரு பிரிவுதான் குயவர்' னு ஒத்துக்கிட்டு வேளார் பட்டம் போடாம ஒற்றுமையா இருக்குற இடம் தெரியாம  இருக்கணுமாம்!

 இந்த அநியாயத்த கேக்க யாருமில்லயா?! 
 

 

 

Thursday, 5 October 2017

பூணூல் போட்டக் குயவர்

பூணூல் போட்டக் குயவர்
---------------------------------------

வேறு எந்த சாதியையும்
அவன்-இவன்,
அந்த பய -இந்த பய,
அந்த புத்தி - இந்த புத்தி,
அதுக - இதுக
என்று பேசினால் பிற்போக்கு

ஆனால்,

பார்ப்பனர்களை
பாப்பான்,
பாப்பாரப்பய,
பார்ப்பன புத்தி, குடுமி,
பூணூல்,
அவாள்,
என்றெல்லாம் பேசினால் அது மட்டும் முற்போக்கு!

இப்பொது முற்போக்கிற்கு வந்த சோதனையைப் பாருங்கள்!

1837 ல் வரையப்பட்ட இந்த ஓவியம் பூணூல் போட்டபடி ஒரு குயவர் பானை செய்யும் காட்சியை கண்முன் நிறுத்துகிறது.
"Seventy-two Specimens of Castes in India" எனும் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது.

நம்புங்க மக்களே!
பூணூல்னா பார்ப்பான்!
ஒரு பூணூல் ஒரு கோடி ரூபாய்!
அது போட்டவன் உயர்ர்ர்ர்ர்ர்சாதி!
சமஸ்கிருத ஆரியனின் அடையாளம்!
பூணூல்! பூணூல்! பூணூல்!