Wednesday 31 October 2018

RSS பரப்பும் தேவர் பற்றிய பொய்

RSS பரப்பும் தேவர் பற்றிய பொய்

ஆர்.எஸ்.எஸ் தலைவரான கோல்வால்கர் மதுரை வந்தபோது தேவர் அவரைச் சந்தித்து பொன்முடிப்பு வழங்கியதாக இந்துத்துவ வெறியர்கள் பொய் பரப்புரை செய்துவருகின்றனர்.

தேவர் வெறுப்பு அரசியல் செய்வோரும் இதை முக்கிய குற்றச்சாட்டாக வைக்கின்றனர்.
"காந்தியைக் கொன்றவருக்கு பணமுடிப்பு கொடுத்தார்" என்றெல்லாம் கலங்கம் கற்பிக்கின்றனர்.

இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டும் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இதில் இருப்பவர் தேவரே இல்லை என்பது தெளிவு.

1951 முதலே தேவர் மீசையில்லாமல் நீளமான முடியுடன் தோற்றமளித்தார்.
இதற்கு பல சான்றுகள் உண்டு.

1955 இல் தேவர் பர்மா சென்றபோது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட காணொளிகள் புகைப்படங்கள் இன்றும் உண்டு.
அதில் அவர் மீசையில்லாமல் நன்கு நீண்ட தலைமுடியுடன் உள்ளார்.
கடைசிவரை அப்படியே தொடர்ந்தார்.

கோல்வால்கர் மதுரை வந்தது 1956 இல்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தேவர் என்று காட்டப்படும் நபர் மீசையுடனும் நன்கு வெட்டப்பட்ட தலைமுடியுடனும் காணப்படுகிறார்.

தேவருடைய வாழ்க்கை வரலாறு என்று முதலில் வந்த நூல் "முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர்" என்கிற நூலே ஆகும்.
அந்த நூலை எழுதிய திரு.ஏ.ஆர். பெருமாள் தனது சிறு வயது முதல் தேவருடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார்.
அதில் தேவருடைய இந்து மதப்பற்று பற்றியும் வருகிறது.
ஆனால் கோல்வால்கர் பற்றியோ ஆர்.எஸ்.எஸ் பற்றியோ எதுவுமில்லை.

திரு.காவ்யா சண்முகசுந்தரம் என்கிற எழுத்தாளர் தேவர் பற்றி வெளிவந்த 24 சிறிய பெரிய நூல்களை ஆராய்ந்து தொகுத்து "பசும்பொன் சரித்திரம்" எனும் தேவரின் முழுமையான சுயசரிதை எழுதியுள்ளார்.
அதிலும் கோல்வாக்கர் சந்திப்பு சேர்க்கப்படவில்லை.

தேவர் வாழ்க்கை வரலாறு பற்றி ஆராய்ந்து தகவல்களைத் திரட்டிவைத்திருக்கும் ஆய்வாளர் திரு.நவமணி கோல்வால்கர் - தேவர் சந்திப்பு பொய் என்று கூறிவிட்டார்.

தேவருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

எனவே ஆதாரமற்ற இந்த பொய்பிரச்சாரத்தை யாரும் நம்பவேண்டாம்.

Monday 29 October 2018

தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி

தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி

டெல்லியில் தமிழக மாணவி ஸ்ரீமதி தற்கொலை!

தொடரும் தமிழர் மீதான டெல்லியின் வன்மம்!

இது நான்காவது சம்பவம்!

2016 இல் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் "சரவணன்" வீச ஊசி போடப்பட்டு மர்மச்சாவு
[டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு]
இடதுகைப் பழக்கமில்லாத இவர் வலதுகையில் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
தற்கொலை என்று பதிவான வழக்கு பிரேத பரிசோதனைக்குப் பிறகு கொலைவழக்காக எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

2017 சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த "மாணவர் முத்துக்கிருஷ்ணன் (எ) ரஜினி கிரிஷ்" தூக்கில் தொங்கியநிலையில் மர்மச்சாவு
[டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் (JNU) பி.எச்.டி]
சேர்க்கையிலும் வாய்மொழித் தேர்விலும் பாரபட்சம் காட்டப்படுவதாக கடைசி முகநூல் பதிவு செய்துள்ளார்.

2018 திருப்பூரைச் சேர்ந்த மாணவர் "சரத் பிரபு" மர்மச்சாவு
[டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு]
இவரது உடலில் காயங்கள் இருந்தன.

2018 பிப்ரவரியில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ண பிரசாத் மர்மச்சாவு
[பட்ட மேற்படிப்பிற்கான மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (PGIMER) சண்டீகர்]
இவர் மாணவர் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியநிலையில் இறந்து கிடந்தார்.
இந்தி தெரியாததால் தனிமைப்பட்டு மன உளைச்சலில் இருப்பதாக தன் தந்தையிடம் கடைசியாகப் பேசும்போது கூறியுள்ளார்.

இறந்த எவருமே கடிதம் எழுதிவைக்காமல் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

இதேபோல 2018 ஜனவரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த "மாரிராஜ்" தற்கொலை முயற்சி
[அகமதாபாத் பி.ஜே மருத்துவக் கல்லூரி, குஜராத்]
சாதி மற்றும் இனத்தைக் காட்டி தொடர்ச்சியாக அவதானப்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் ஐ.ஏ.எஸ் தேர்வாகி பயிற்சியில் இருந்த சத்தியமங்கம் ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்த அதிர்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறை 95 சதவீதம் வடயிந்தியர்

வருமான வரித்துறை 95℅ வடயிந்தியர்

  கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த "வருமான வரித்துறை அதிகாரி" மற்றும் "உதவி வருமான வரித்துறை அதிகாரி" ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் சென்னை மண்டலத்திற்கு தேர்வான "வருமான வரித்துறை அதிகாரிகள்" 92 பேர்.

இதில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்.

அதேபோல சென்னை மண்டலத்திற்கு தேர்வான "உதவி வருமான வரித்துறை அதிகாரிகள்" 233 பேர்.

இதில் 17 பேர் மட்டுமே தமிழர்கள்.

தகவல்களுக்கு நன்றி: Sun News

எந்த மாநிலத்தை எடுத்தாலும் மத்திய அரசு பதவிகள் அனைத்திலும் ஹிந்தி பேசுவோரே நிறைந்து வழிகின்றனர்.

அத்தனைபேரும் குறுக்குவழியில் நுழைந்த திறமையற்ற நபர்கள்.

Friday 26 October 2018

தனியீழம் சாத்தியமில்லை

தனியீழம் சாத்தியமில்லை

"ஈழம் தமிழர்நாட்டின் ஒரு பகுதி.
தமிழ்நாடும் இந்தியாவால் சுரண்டப்படுகிறது.
எனவே நாம் சேர்ந்து தனிநாட்டுக்காகப் போராடுவோம்"

என்று எனக்குத் தெரிந்து ஒரு ஈழத்தமிழன் கூட சொல்லவில்லை.

தனியீழம் சாத்தியமேயில்லை!

தனித் தமிழர்நாடுதான் சாத்தியம்!

ஒரு நாடு அமைய அதன் இனம் முழுவதும் ஒன்று திரள வேண்டும்.

ஈழப் போராட்டம் தோல்வியில் முடிய காரணம் இதுதான்.

அது தோல்வியா என்று கேட்போருக்கு பதில்தான் ராஜபக்ச தற்போது பிரதமர் ஆன நிகழ்வு.

நான் பலமுறை கூறிவிட்டேன்.

புலிகளே தமிழகம் வாருங்கள்!

களம் எங்களிடம் இருக்கிறது!

அனுபவம் உங்களிடம் இருக்கிறது!

நாம் தமிழகத்திலும் ஈழத்திலும் ஒரே நேரத்தில் ஆயுதம் தாங்கி போராடுவோம்!

தமிழர்நாட்டை விடுதலை செய்வோம்!

Wednesday 24 October 2018

இரண்டு புதிய அணைகள் - முல்லைப்பெரியாறு அணை டம்மியாக்கப்பட்டு உடைக்கப்படும்

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக மேலும் இரண்டு அணை
- அனுமதி வாங்கியது கேரளா

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடந்த வரலாறு காணாத மழை ஏற்படுத்திய சுவடுகள் இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லை.
அதற்குக் காரணமாக மலையைக் குடைந்து கட்டடங்கள், சாலைகள் எனப் பலவற்றை அமைத்திருந்ததும், கிட்டத்தட்ட 43 அணைகள் கட்டியிருந்ததையும் சுற்றுச் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டினர்.
இதனால் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டதையும், வீடுகள் இடிந்ததையும் சுட்டிக் காட்டினர்.
ஆனால், கேரள அரசோ முல்லைப் பெரியாறு அணையின்மீது குற்றம் சாட்டியது.
இதற்குப் பல எதிர்ப்புகள் எழுந்தபோதும், தனது திசையைத் திருப்பாமல் முல்லைப் பெரியாறு அணையின் கீழே மேலும் ஒரு புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது.

இந்தப் புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, மஞ்சுமலை கிராமத்தில் அமையவிருக்கிறது.
இந்த இடம் வண்டிப் பெரியாரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது.

இதற்கான சுற்றுச்சூழல் அறிக்கை தயாரிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நாடி அனுமதியும் வாங்கிவிட்டது கேரளா.

இதனை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது.
2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும்.
"அணை தொடர்பான சிக்கல்களுக்குத் தமிழகமும், கேரளாவும் ஒரு மனதுடன் முடிவெடுத்து நீதிமன்றத்தை அணுகலாம்.
கேரளா தனியாக அணையைக் கட்ட விரும்பினால், தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தைப் பெற்று, அதைச் சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தோடு இணைக்க வேண்டும்" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு நேர்மாறாக கேரளா தனித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்து சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கையைத் தயார் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறது கேரளா.

இதுபற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.
"தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்ய கேரள ந அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது மிகப்பெரும் சூழலியல் பேரிடராகும்.

கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை பொழிவினால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு ஒட்டுமொத்த மாநிலமே நீரில் மிதந்ததற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளை குடைந்து பல சுரங்கங்கள், சாலைகள், ரிசார்ட்டுகள் என அமைத்ததே முக்கியக் காரணமாகும்.

மேலும் தேவையே இல்லாத இடங்களில் மின்சார உற்பத்திக்காக அணைகள் கட்டியதும் இப்பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
உலக நாடுகள் பலவும் இப்பிரச்னையை உணர்ந்து பல ஆண்டுகளுக்குமுன் கட்டிய அணைகளை இடித்து வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது எனப் (reservoir induced seismicity ) பல ஆய்வுகளும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு போன்ற சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இன்னொரு அணையைக் கட்டுவது அறிவார்ந்த செயல் கிடையாது.

அதுமட்டுமன்றி முல்லைப் பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நீர்த்தேவையினையும், பல கோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காமல் போய்விடும்.

மேலும் 2014-ம் ஆண்டு, முல்லைப் பெரியாறு வழக்கில் ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் 'இரண்டு மாநிலங்களும் ஒருமனதாக புதிய அணை கட்ட முடிவு எடுத்து நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும், கேரள அரசு அணை கட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதைச் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்துத்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் இந்த முதற்கட்ட அனுமதி வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பாகும்.
தமிழக மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தற்போது இருக்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1,200 அடி கீழ்த்திசையில் புதிய அணை அமைக்கப்படவுள்ளதால் நிச்சயமாக தமிழகத்துக்கு நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அணையின் உயரம் 174.6 அடி, நீளம் 1,214 அடி.
இதற்குத் துணை அணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு 663 கோடியாகும்.
இந்த அணை கட்டுவதால் 0.017 டி.எம்.சி நீரை மட்டுமே அதிகமாக தேக்கி வைக்க முடியும்.
0.502 சதுர கிலோமீட்டர் மட்டுமே நீர்ப்பிடிப்பு பகுதி அதிகரிக்கும்.

ஆனால் முல்லைப் பெரியாறு புலிகள் சரணாலயத்தின் 123 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இந்தச் சிறிய அளவு நன்மைக்காக மிகப்பெரும் சூழலியல் சீர்கேட்டை அனுமதிக்க முடியாது.
புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணையானது பகுதி பகுதியாகச் செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும்,
அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்கத் திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

கேரளா, "முல்லைப் பெரியாறு அணையின் வாழ்நாள் முடிந்துவிட்டது,
அண்மைக் காலமாக கேரளாவில் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன,
அதனால் புதிய அணை தேவைப்படுகிறது,
புதிய அணை கட்டினால் மக்களைப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள முடியும்" என்று தனது கோரிக்கையை முன் வைத்துள்ளது.

இதற்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு அணை முழுப் பலத்தோடு இருக்கிறது என்று அறிக்கை கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளா, தமிழக அரசோடு ஆலோசிக்காமல் இரண்டு அணைகளைக் கட்ட சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கிவிட்டது.

இதில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இனி முடிவு தமிழக அரசின் கைகளில்...!

நன்றி: Tamilri.com (TRI)

Monday 22 October 2018

நான்மறை படைத்தது தமிழரே!

நான்மறை படைத்தது தமிழரே!

நான்மறை என்றாலே ரிக்,யஜூர், சாமம், அதர்வணம் என்று தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

வடக்கே வேதங்கள் என்றாலே ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்றுதான்.
ரிக் வேதத்திலும், மனுஸ்மிருதியிலும் வேதம் மூன்று (வேதம் த்ரியே) என்றே வருகிறது.
நாம் "நான்மறை" என்றழைப்பதுபோல வடவர் "த்ரிவேதா" என்றே அழைக்கின்றனர்.
(திரிவேதி எனும் வடயிந்திய பிராமணப் பட்டம் இதைக் குறிப்பதே)
‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116)

உண்மையில் நான்மறை என்பது தமிழ் மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ஆகும்.
--------------

கி.பி.1050 இல் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை அந்தணர்கள் நான்மறையை எழுதிவைக்காமல் வாய்வழிக் கல்வியாகவே கற்பித்துவந்தனர்.
(குறுந்தொகை 156 பார்ப்பனர் ஓதுவதை 'எழுதாக் கற்பு' என்றே கூறுகிறது)
அந்த மறைகளை வள்ளுவர் முப்பாலாக எளிமையாக எழுத்தில் எழுதினார் என்று உள்ளது.

"ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”

இதிலிருந்து வள்ளுவர் இயற்றிய திருக்குறள் அந்தணர் கற்பித்துவந்த நான்மறைதான் என்பது தெளிவாகிறது
----------------------

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பார்ப்பனரான திருஞானசம்பந்தர் இதையே கூறியுள்ளார்.

"...சைவவேடம் தான் நினைந்து ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு
அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே"

அதாவது அந்தணர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு சொல்லிக்கொடுத்த சிவனை போற்றுகிறார் அவர்
----------

கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் மறை ஓதும் பார்ப்பனரை 'வண்டமிழ் மறையோர்' என்று குறிப்பிடுகிறது.

இது பற்றிய கட்டுரைக் காதை பாடல் வருமாறு,

"வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு"

இதன் பொருள்,
பார்ப்பனரான பராசரன் என்பவர் வளமான தமிழ்மறைகளில் வல்லவரான மறையோருக்கு வானளவு பொருள் கொடுத்து உதவிய, உறுதியான வளமிகுந்த நீண்ட வேலுடைய, சேரனைக் காண காடு, நாடு, ஊர் என அனைத்தையும் கடந்து உயர்ந்த பொதியமலையும் பின்னால் இருக்கும்படி (கடந்து) வெகு தூரம் சென்று அவனைச் சந்தித்தார்.

இதிலிருந்து மறைகள் தமிழில் இருந்தது என அறியலாம்.
அவற்றை ஓதிய பார்ப்பனருக்கு சேரன் கொடையளித்ததைக் கேட்டு பராசரன் எனும் பார்ப்பனரும் அவனை நாடிச் சென்றதையும் அறியலாம்.
-------------
  தொல்காப்பியம் (பிறப்பியல் 20) கூறுகிறது,

"..வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே"

அதாவது ஒரு எழுத்தின் உச்சரிப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை அந்தணர் ஓதும் மறைகளை வைத்து முடிவு செய்யுமாறு கூறுகிறது.

பழமையான தமிழின் முதன்மையான இலக்கண நூலே அந்தணரின் ஓதும் உச்சரிப்பை வரையறையாகக் கூறுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
------------

என்றால் சமஸ்கிருதம் எப்படி ஓதப்படும் மொழியாக ஆனது?!

வேதங்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன.
அதற்கு பொருளே தெரியாமல் இருந்ததால் யாரும் அவற்றை விரும்பவில்லை.

(நம்மாழ்வார் இயற்றிய நான்கு பாசுர நூல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியன நால்வேதத்தின் சாரமாக இருப்பதாகக் கூறி அவரை 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று மதுரகவியாழ்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மேற்கண்ட பாசுர நூல்களுக்கும் சமஸ்கிருத வேதங்களுக்கும் பொருத்தம் இல்லை)

இன்று நான்கு வேதங்களுக்கு கிடைக்கும் ஒரே விளக்க உரை சாயனர் எனும் கன்னடர் எழுதிய விளக்க உரை மட்டுமே!

இவர் யாரென்றால் வேதாரண்யரின் உடன்பிறந்தவர் ஆவார்.

வேதாரண்யர் யார்?!

கிபி 14 ஆம் நூற்றாண்டில் சிருங்கேரி மடத்தின் 12வது சங்கராச்சாரியார் வேதாரண்யர்.
கன்னடரான இவரும் வடமொழியில் சிறந்த புலவர்.
சம்ஸ்கிருதத்தில் பல படைப்புகளைத் தந்தவர்.

இவரே தமிழகத்தில் வடுகர் ஆட்சி அமையக் காரணமானவர்.
பாண்டியப் பேரரசு வாரிசுரிமைப் போரில் சிக்கியிருந்தபோது டெல்லி சுல்தான்கள் பாண்டியரை வீழ்த்தி மதுரை வரை முன்னேறினர்.
அப்போது மதுரை சுல்தானிய படைத்தளபதிகளான ஹரிஹர, புக்கரை மனம் மாற்றி மதுரை மீது ஏவியர் வேதாரண்யரே!
அவர்கள் துருக்கியரை விரட்டி மதுரையைக் கைப்பற்ற காரணமானவர்.
விஜயநகர பேரரசு க்கு அடித்தளமிட்டவர்.

கோயில்கள் பிராமண மயமானதர்க்கும் சமஸ்கிருத மயமானதற்கும் மூல காரணம் விஜயநகர பேரரசு மற்றும் அதன் வழிவந்த நாயக்கர் அரசுகளே!

தமிழகத்து நாயக்கர் ஆட்சியை சமஸ்கிருதத்தின் பொற்காலம் என்றே கூறலாம்.

சோழர் காலத்தில் தாய்லாந்து சென்ற தமிழ்ப் பார்ப்பனர் இன்றும் தமிழில் ஓதிதான் அந்நாட்டு மன்னருக்கு முடிசூட்டுகின்றனர்.

ஆக தமிழ் மறைகளை புறக்கணித்து சமஸ்கிருதத்தைப் புகுத்தியது தமிழரல்லாத ஆட்சியே!
----------
பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி
-----------

Saturday 20 October 2018

தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்

தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்

“எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்!"

என்ற தலைப்பில், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் குவிந்து வருவதைப் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்கட்டுரையில் தோழர் பெ. மணியரசன் அளித்துள்ள செவ்வியும் வெளியாகியுள்ளது.

அக்கட்டுரையின் முக்கிய கருத்துகள் கீழே,

//கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே "வெளிமாநிலத்தார் குடியேற்றத்தில்" தமிழகம் முதலிடம் //

 //2011 இல் மக்கட்தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்'  44 லட்சம்//

//தற்போது 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்' எண்ணிக்கை ஒரு கோடி தாண்டும்//

//கர்நாடகா, குஜராத், மேற்குவங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் குடியேற்றம் தொடர்பாக கடுமையான சட்டம் வைத்துள்ளன//

//நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகியவற்றில் வெளியார் குடியேற 'இன்னர்லைன் பெர்மிட்' எனும் மத்திய நடுவணரசு அனுமதி கட்டாயம்//

//தமிழகத்தில் எந்த குடியேற்றக் கட்டுப்பாடும் இல்லை//

//வடவர் குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன//

//சென்னை பொருளாதாரம் பல ஆண்டுகளாக ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி பணக்காரர்கள் கைகளில்//

//அம்பத்தூர் தொழிற்பேட்டை வேலைவாய்ப்பு 70% வந்தேறி வடவர்களால் ஆக்கிரமிப்பு //

//சென்னை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர வேலைவாய்ப்பு 50% வடயிந்தியர் ஆக்கிரமிப்பு//

படம்: குமுதம் ரிப்போர்ட்டர் (23.10.2018)
தலைப்பு: எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்! - சிக்கலில் தமிழகத் தொழிலாளர்கள்

இதேபோல நக்கீரன் வெளியிட்ட கட்டுரையைப் படிக்க,

"2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்" என்று தேடுக.