Showing posts with label அணை. Show all posts
Showing posts with label அணை. Show all posts

Friday, 6 June 2025

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல்

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல் 

 இதே நாம் தனிநாடாக வல்லரசாக இருந்திருந்தால் கன்னடர் தமது மொழி தமிழில் இருந்து வந்தது என்பதை ஒத்துக்கொண்டு இருப்பார்கள்!
 கன்னடம் தமிழில் இருந்து வரவில்லை என்று கன்னடர் சொல்வது ஒருவன் தனக்கு அப்பன் பெயரே தெரியாது என்று சொல்வதைப் போன்றதாகும்!
 கன்னடரை நாம் குறைத்து எடைபோடக் கூடாது!
நமக்கு அழிவு அவர்களால்தான் நடக்கப் போகிறது!
 இது 2000 ஆண்டுகள் தொடரும் பகை!
 அதாவது கரிகாலன் தந்தை காலத்தில் இந்திய துணைக்கண்டத்தை விழுங்கிவிட்டு எஞ்சியிருந்த தமிழகத்தை நோக்கி வந்த மௌரிய பேரரசை வழிநடத்தி வந்தது கர்நாடகப் பகுதி வடுகரே! 
 அன்று மூவேந்தர் கூட்டணிப்படை பெரும்பாடுபட்டு இப்படையெடுப்பை முறியடித்தது!  
 கர்நாடகத்தின் பாழி நகரில் இருந்த படைமையத்தை அழித்தே போர்முடிவுக்கு வந்தது.
 அப்போது கன்னடம் ஒரு தனிமொழியாகவே இல்லை திரிந்த மொழியாக இருந்தது!
 அதாவது கன்னடர் கன்னடராவதற்கு முன்பே நமக்கு எதிரிகளாகி விட்டனர்.
 அதன் பிறகும் கன்னடர் மூன்று முறை தமிழகத்தைப் புரட்டிப்போட்டு உள்ளனர்!
 வடதமிழகம் தவிர்த்து பாண்டிய நாடு வரை பிடித்த களப்பிரர் கன்னடரே! 
 விஜய நகர அரசாக தமிழகத்தைப் பிடித்ததும் கன்னடர்தான்!
 (கன்னடரால் நாயக்கர்களாக நியமிக்கப்பட்ட தெலுங்கர் பிறகு தனியரசுகளை நிறுவினர்.
 இந்த நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பெருமளவு ஆந்திராவிலிருந்து தெலுங்கர் குடியேறி நிலவுடைமை பெற்று தமிழகத்தில் வலுவாக நிலைபெற்றனர்)
 நாயக்கர் காலத்திலும் தென்தமிழக பாண்டிய சிற்றரசுகளை ஒழிக்க முடியாமல் திணறிய தெலுங்கு நாயக்கர்கள் வித்தலராயன் (அ) வெங்கலராசன் எனும் கன்னட தளபதியை அழைத்து வந்தே பாண்டிய வாரிசுகளை இல்லாதொழித்தனர்.
 இந்த படுகொலைக்கு பரிகாரமாக திருநெல்வேலியில் இவன் வெட்டியதே கன்னடியன் கால்வாய் எனும் மாபெரும் கால்வாய் என்று நம்பப்படுகிறது! 
 வித்தலராயன் பற்றி மறைத்து தாமே பாண்டியரை வென்றதாக நாயக்கர்கள் காட்டிக்கொண்டனர்!
 கன்னடியன் கால்வாய்க்கு வேறொரு கட்டுக்கதையை எழுதிவைத்தனர்! 

 தமிழரும் சளைத்தவர் இல்லை!
 இந்திய துணைக்கண்டத்தின் மையம் அதாவது கன்னோசி வரை வென்ற புலிகேசி தமிழகத்தில் பல்லவ நாட்டை நிர்மூலமாக்கிவிட்டு பாண்டிய நாடு வரை வந்து கொடி நாட்டிச் சென்றவன்!
 நமக்கு ராசராசன் போல கன்னடருக்கு புலிகேசி!
 பல்லவர் மீண்டெழுந்து பாண்டியருடன் கைகோர்த்து சாளுக்கிய அரசை வென்று தலைநகர் வாதாபியை அழித்து புலிகேசியின் கொட்டம் அடக்கினர். 
 ராசேந்திரன் படையெடுத்த காலத்தில் கன்னட நாட்டு பிராமணரையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றதாக அந்த நாட்டு கல்வெட்டு கூறுகிறது!
 (சில ஆண்டுகளுக்கு முன் அன்னிகேரி எனுமிடத்தில் பல எலும்புக்கூடுகள் ஓரிடத்தில் கிடைத்த போது இந்த படுகொலை சோழர் செய்தது என்று கன்னடர் வதந்தி பரப்பினர்)
 மைசூர் அரசு திருமலை நாயக்கர் காலத்தில் தமிழகத்தின் மீது படையெடுத்து மதுரைக்கு மிக அருகேவரை முன்னேறி வந்தபோது ராமநாதபுரம் மறவர் படைகள் வந்துதான் அப்படையெடுப்பை திருப்பியடித்து புறப்பட்ட இடத்திற்கே தள்ளியது!
 இப்படி வரலாறு நெடுக தமிழரும் கன்னடரும் மோதிக்கொண்டே இருந்துள்ளனர்!
 தமிழக கன்னட எல்லையும் கூட இழுபறியிலேயே இருந்து வந்துள்ளது!
 அதாவது நம் எல்லையை அவர்கள் ஆக்கிரமிப்பதும் நாம் மீட்பதும் என!
 கர்நாடகத்திற்குள் ஏறத்தாழ அம்மாநில மத்தியில் உள்ள தமட்டக்கல் எனுமிடத்தில் 6 ஆம் நாற்றாண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது! 
 அதில் ஏழூர் சாத்தன் எனும் பெயருள்ளது.
 அப்போது அங்கே தமிழர் அரசாட்சி பரவியிருக்கவும் இல்லை! 
தமிழகத்தினுள் இத்தகைய பழமையான கன்னட சான்று எதுவும் கிடையாது!
 1956 இல் தமிழகத்திற்கு சேரவேண்டிய எல்லை மாவட்டங்களை எத்தனையோ சான்றுகள் இருந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவிடாமல் பறித்த கன்னடர் ஏற்கனவே இருந்த எல்லையைத் தாண்டி அன்றைய கோவை மாவட்ட ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டனர்!
 திராவிட மாயையில் கிடந்த , கிடக்கும் தமிழர் இதை மீட்க முயலவே இல்லை!
 இதுவே நமது இன்றைய தோல்விக்குக் காரணம்!
 குடகு மொழி பேசும் கொடகர் பகுதியில் காவிரி உற்பத்தி ஆகிறது! 
 அவர்களையும் அடக்கி ஒடுக்கிவிட்ட கன்னடர் காவிரி நீரை மறித்து தேவையில்லாமல் தேக்கி தமது மாநில தொழிற்சாலைகளுக்கு வழங்கியும் தமிழகத்தில் அவர்களின் பங்காளிகளான திராவிட அரசுகள் நீரில்லாத ஆற்றில் மணலை அள்ளி விற்றும் மனிதத்தன்மை அற்ற அரசியல் செய்கின்றனர்!
 கேட்டால் கன்னடர்கள் நல்லவர்களாம் சில கன்னட வெறியர்கள் இப்படி அரசியல் செய்கின்றனராம்!
 எனவே நாம் இருவருமே சண்டை போடாமல் இருக்க வேண்டுமாம்!
 இதுவும் ஒரு திராவிடப் பிரச்சாரம்!
அடிப்பவனையும் அடிவாங்குபவனையும் ஒரே தரத்தில் வைப்பது!
 ஒரு உயிருக்கு தண்ணீரை மறுப்பது எவ்வளவு பெரிய பாவம் என்று விலங்குகளுக்கு கூட புரியுமே?!
 கன்னட இனத்தில் ஒருவருக்கு கூடவா இந்த அறிவும் இரக்கமும் இல்லை!
 கர்நாடக ஆறுகள் ஆண்டுக்கு ஆயிரம் டிஎம்சி கடலில் சென்று கலக்கின்றன. 
 ஆனால் தமிழகத்துக்கு வரும் 100 டிஎம்சி நீரை மறித்து அரசியல் செய்கின்றனர்.
 கேட்டால் கடலில் கலக்கும் 10 டிஎம்சி காவிரி நீரை சேமிக்கிறார்களாம்.
 கன்னடரோ உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டது இல்லை!
 அவர்கள் பணிந்தது வீரப்பனார் நீட்டிய துப்பாக்கிக்கு மட்டும்தான்!
 இன்றுவரை தமிழகத்தை ஒரு வெள்ள வடிகாலாக ஒரு சாக்கடையாகவே  பயன்படுத்துகின்றனர் கன்னடர்.
 இதனால் நெற்களஞ்சியமான டெல்டா விவசாயம் பெரும்பங்கு அழிந்துவிட்டது.
 மன்னார்குடி வரை நிலத்தடியில் கடல் நீர் புகுந்துவிட்டது.
 ஹிந்திய அரசு இதைத் தட்டிக்கேட்கவில்லை.
 ஹிந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இத்தனை ஆண்டுகால பகையிருந்த போதும் இப்போது வரை சிந்து நதியை மறிக்கவில்லை!
 தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனரே தவிர நடைமுறையில் எதுவும் செய்யவில்லை! 
 ஹிந்தியாவை நம்பி பல ஆண்டுகளாக போராடி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தையும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.
 பாகிஸ்தானுக்கு தண்ணீர் விடும் ஹிந்தியருக்கு ஒரு தமிழ்க் குழந்தை தண்ணீர் குடிப்பதில் உடன்பாடில்லை!
 ஹிந்தியர் ஆதரவுடன் காவிரி ஆணையத்திலேயே தீர்மானத்தை நிறைவேற்றி மேகதாது அணை கட்ட கன்னடர் தயாராகிவிட்டனர். 
 இந்த ஆணையம் சூழ்ச்சியாக டெல்டா கால்வாய்களைத் தூர்வார கடன் பெற்றுத்தருவதாக ஒரு அம்சத்தைச் சேர்த்து தமிழக அரசை ஆணைய கூட்டத்திற்கு வரவழைத்து மேகதாது கட்ட தீர்மானம் கொண்டுவந்து தமிழகமும் புதுச்சேரியும் எதிர்த்தும் கூட அத்தீர்மானம் நிறைவேறியுள்ளது.
 இதன் மூலம் வெளிநாட்டு கடனாக தமிழக அரசுக்கு கிடைக்கும் 1400 கோடியில் ஏறத்தாழ 40% திமுகவுக்கு கமிசன் கிடைக்கும்.
 இந்த பணத்திற்காக தீர்மானம் நிறைவேறும் என்று தெரிந்தும் பல ஆண்டுகள் செய்தது போல புறக்கணிப்பு செய்யாமல் கூட்டத்தில் கலந்துகொண்டு பிறகு வெளியே வந்து அயோக்கித்தனம் செய்துவிட்டார்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாடகமாடி பேட்டி கொடுக்கிறார்.
 அதாவது இன்னும் சில ஆண்டுகளில் சொட்டு நீர் கூட தமிழருக்கு கிடைக்காது.
 5கோடி தமிழர்களுக்கு தண்ணீர் இருக்காது!
 இது ஒரு வெளிப்படையான இனப்படுகொலை ஆகும்.
 இந்த இனப்படுகொலை குற்றவாளிகளைத் தான் அதுவும் அவர்கள் வெளிப்படையாக இனவெறுப்பு பேசிக் கொண்டிருந்த போது தான்  தமிழக முதலமைச்சரே நேரில் சென்று பிரச்சாரம் செய்து ஆட்சியில் அமர்த்தினார்.
 ஈழத்தில் ஹிந்தியாவும் சிங்கள அரசும் செய்த இனப்படுகொலைக்கு துணைநின்றது போலவே 
 தமிழகத்திலும் ஹிந்தியரும் கன்னடரும் செய்யவுள்ள நேரடி இனப்படுகொலைக்கு திமுக துணை நிற்கிறது.
 நியாயப்படி தமிழர்தான் கன்னடரை கொலைவெறி கொண்டு அடிக்க வேண்டும்.
 ஆனால் கன்னடர் தொடர்ந்து தமிழரை அடிப்பதும் கொல்வதும் நடக்கிறது.
1982 இல் கன்னடத் திணிப்பை எதிர்த்து போராடிய நான்கு கோலார் தமிழர்களை சுட்டுக் கொன்றதன் மூலம் தொடங்கியது கொலைத் தாண்டவம். 1991 இல் மிகப்பெரிய கலவரம் நடத்தி நூறு பேர் வரை கொன்று பல நூறு பேரை முடமாக்கி 2 லட்சம் தமிழரை அடித்து விரட்டிவிட்டனர் கன்னடர்.
 தொடர்ச்சியாக அவ்வப்போது தமிழரைத் தாக்கியே வந்துள்ளனர்.
 2016 இல் கூட தமிழர்களைக் குறிவைத்து கலவரம் நடந்தது.
 தற்போது நடந்த கிரிக்கெட் மோதல்களையும் இதில் சேர்க்கலாம்.
 இப்படி முழுவெறியுடன் இருக்கும் கன்னடர் மேகதாது அணையைக் கட்டிவிட்டால் தமிழர் அழிவுக்காலம் தொடங்கிவிடும்.
 நாம் குடகு மழைக்குப் போகும் மழை மேகங்களை தடுத்து செயற்கை முறையில் மழை பொழிய வைப்பதைத் தவிர வேறு வழியிருக்காது!
 அப்படிப் பொழிந்தாலும் அது அமில மழையாகவே இருக்கும்!
 திராவிடத்தை வீழ்த்தி இனப்பற்றுள்ள தமிழரை ஆட்சியில் அமர்த்தி மேகதாது அணையைத் தடுக்க வேண்டும்! 
 கன்னடர் கொட்டமடக்க இன்னொரு வீரப்பன் உருவாக வேண்டும்! 
 இந்த தேர்தலை விட்டால் மேகதாது கட்டப்படும்! தமிழகத்தில் நிரந்தர பஞ்சம் வரும்!
 நாம் இன்னொரு சோமாலியா ஆக வேண்டியதுதான்! 
 அதன்பிறகு எத்தனை வீரப்பன்கள் உருவானாலும் பலனில்லை! 
 
 
 
 

Saturday, 17 August 2024

அத்திக்கடவு அவிநாசி திட்டம் அறிவோம்

அத்திக்கடவு அவிநாசி திட்டம் அறிவோம் 

 காமராசர் வகுத்த திட்டம் வேறு!
இன்று நிறைவேறியிருப்பது  வேறு!

  மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றும் பவானி ஆறு மேட்டுப்பாளையத்திலுள்ள பில்லூர் அணைக்குப் பக்கத்திலிருக்கும் அத்திக்கடவுக்குள் நுழைகிறது. இந்த ஆறு ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையை அடைந்து, பின்னர் 75 கிலோமீட்டர் பயணித்து பவானியருகில் காவிரியில் கலக்கிறது.

 இப்படி கலக்கும் பவானி ஆற்றின் உபரிநீரை (அன்றைய ஒருங்கிணைந்த) கோவை மாவட்ட விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டுமென 1957 இல் காமராஜர் திட்டம் வகுத்தார்.

 அதாவது பவானி ஆற்றின் உபரிநீரை கால்வாய்கள் வெட்டி திசைதிருப்பி, அன்றைய கோவை மாவட்டத்திலுள்ள வறண்ட நீர்நிலைகளில் நிரப்ப வேண்டும் என்பது திட்டம்.

 காமராசருக்குப் பின் கிடப்பில் கிடந்த இத்திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ல் முதல்வராக இருந்த கருணாநிதியால் `அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் மறுசேர்ப்பு மற்றும் குடிநீர் வழங்கல் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
 
 பிறகு மீண்டும் 32 ஆண்டுகள் கழித்து கருணாநிதி ஆட்சியில் 2009-ல் நீரியல் வல்லுநர் மோகனகிருஷ்ணன் தலைமையில் ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டது. இக்குழு 'வெள்ளப் பெருக்கின்போது 2 டி.எம்.சி அடி நீரை திசைதிருப்ப முடியும்' என்று அறிக்கை கொடுத்தது. 
 "ஆகா அப்படியா அவ்வளவு நல்லது செய்ய நிதி இல்லை" என்று கிடப்பில் போட்டார் கருணாநிதி!

 பிறகு 5 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா 2014-ல் (மனந்திருந்தி மக்கள் பக்கம் ஏறெடுத்துப் பார்த்த கடைசி காலம்) அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் இந்தத் திட்டம் நிறைவேறும் என்று அறிவித்தார்.

 பிறகும் 5 ஆண்டு கிடப்பு!  எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் திட்டம் அடிப்படையே மாற்றப்பட்டு உபரி நீர் கால்வாய்கள் மூலம் திருப்பப் படாமல் பவானி ஆற்றின் கீழுள்ள காளிங்கராயன் அணைக்கட்டுக்கு போய்ச் சேர்ந்த பின் அதிலிருந்து பம்பிங் செய்யப்பட்டு ஏரி, குளங்கள் நிரப்ப அனுப்பப்படும் திட்டம் வகுத்தார்.
 2019 இல் அடிக்கல் நாட்டி 80 சதவீத பணிகளை முடித்தார்.

 மீதி 20% பணிகள் முடிக்கப்பட்டு இந்த திட்டம் ஸ்டாலின் ஆட்சியில் தற்போது  நிறைவேற்றப்பட்டது.

 ஒரு நல்ல திட்டம் 65 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு அடிப்படையே தகர்க்கப் பட்டு நிறைவேறியுள்ளது.
 
 இருந்தாலும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள 1,045 குளம், குட்டைகளில் நீர் பாய்ச்ச இத்திட்டம் உதவும் என்பது மகிழ்ச்சி! 

தகவல்களுக்கு நன்றி: விகடன்






 

Sunday, 31 March 2024

பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்

பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்!
இனப்படுகொலை நடத்த காத்திருக்கும் கன்னடர்!
அமைதியாக வேடிக்கை பார்க்கும் திராவிடம்!

 தலைக்கு ஒருநாளுக்கு 108 லிட்டர் கையிருப்பு வைத்துள்ளது கர்நாடகா!
 தரவேண்டிய நீரில் பாதி தான் தந்துள்ளது!
உச்ச நீதிமன்றம் கூறினாலும் தண்ணீர் தரமுடியாது என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டது கர்நாடக அரசு!

கீழ்க்காண்பது விகடன் 29.03.2024 இல் வெளியிட்டுள்ள கட்டுரை

 பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: 
உண்மைகளும் உருட்டுகளும்!

மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு கர்நாடகம் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.
 அதன் ஒரு கட்டமாக கடந்த சில மாதங்களாக பெங்களூரு மாநகரில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்ற தகவலை பரப்பி வருகிறது கர்நாடக அரசு.
 கர்நாடகம் சொல்வதெல்லாம் உண்மையா, இல்லை வழக்கம்போல உருட்டுகளா என்பது குறித்து தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தில் மாநிலச் செயலாளர் முனைவர் வீரப்பனிடம் பேசியபோது, “சென்ற ஆண்டு (2023) பருவமழை மிகக் குறைவாகப் பெய்ததால் பெங்களூரு மாநகர மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கிறது கர்நாடக அரசு.
 அம்மாநில துணை முதலமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் 'கர்நாடகாவில் இந்த ஆண்டு மிகக் குறைவாகவே மழை பெய்தது.  பெங்களூருவில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீரும் தேவைக்கேற்ப வழங்க முடியவில்லை. எனவே காவிரி நதியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை காவிரி மேலாண்மை ஆணையம், ஏன் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தினாலும், ஒரு சொட்டுத் தண்ணீரையும் கர்நாடகா வழங்க முடியாது' என்று தெரிவிக்கிறார். 
அதே சமயம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் 67.16 டி.எம்.சி கொண்ட நீர்த்தேக்கத்தைக் கட்டியே தீருவோம் என்றும் முழங்குகிறார். 
இத்தனையும் பார்த்துக் கொண்டு தமிழ்நாடு அரசு மிக மிக அமைதியாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையிலும் காவிரி டெல்டா பகுதி உழவர் சங்கங்களும் காவிரி உரிமை மீட்புக் குழுவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. 
இருப்பினும் தமிழ்நாட்டின் உயர் அலுவலர்களும் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்களும் இன்னும் குறிப்பாக இந்நிலை பற்றி உரத்துப் பேச வேண்டிய காவிரி தொழில் நுட்பக் குழுமமும் உண்மைநிலை பற்றிப் பேசாமல் இருப்பது நம்மைப் போன்றோர்க்குப் பெரும் கவலையளிக்கிறது.


இணையதளத்தில் தேடினால் கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் (2019 - 2023) பெய்த மழையளவு கிடைக்கிறது. நம்மைப் பொறுத்த வரை கர்நாடகா மாநில முழுமையும் பார்க்காமல் காவிரி ஆறு பாயும் பகுதியிலுள்ள மழைப் பொழிவை மட்டும் பார்த்தால் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 714 மி.மீ. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் ஆண்டு சராசரியை விடக் (+75 சதவிகிதம் வரை) கூடுதலாகவே மழைபெய்துள்ளது. ஆனால் 2023-ல் பெய்த மழை அளவு 572 மி.மீ. இது சராசரி மழைப்பொழிவை விட 20 சதவிகிதம் குறைவு.
இதன்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு 177.25 – டிஎம்சியில் 20 சதவிகிதம் (34.35 டிஎம்சி) குறைத்து 137.80 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட்டிருக்க வேண்டும். 
நமக்கு பில்லிகுண்டுலுவில் வந்த காவிரி நீரின் அளவோ வெறும் 78.10 டி.எம்.சி மட்டுமே. 
பொய்யான யதார்த்த கள நிலவரத்திற்கெதிராக அரசியல் நாடகமேடை நிகழ்வுகளை காவிரியில் நமக்குத் தராமலிருக்கவும் மேக்கேதாட்டூ அணையினைக் கட்டவும் அழுத்தம் தர அரங்கேற்றிவருகிறது.
 இத்தகைய பொய்ப்புனைவுப் பரப்புரைகளை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. 
காலதாமதமின்றி அலட்சியமாக இல்லாமல் உடனே செயற்படவேண்டும். 
அப்பொழுதுதான் நம் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட முடியும். 
சட்டநடவடிக்கைகளைக் கர்நாடகா அரசு எப்போதும் சட்டை செய்வதில்லை.

எனவே இந்திய அரசியல் சட்டப் பிரிவு 365-இன்படி குடியரசுத் தலைவருக்குக் கடுமையான அழுத்தம் தரவேண்டும். 
தமிழக அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும், காவிரி உரிமை மீட்புக்குழுவும் தங்களுக்குள்ள அரசியல் பக்திப் பரவசங்களை ஒதுக்கிவிட்டு கர்நாடகாவின் பொய்ப்பரப்புரைகளை மேற்குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மறுத்து விளக்கித் தொடர் எழுச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும்.

காவிரியிலிருந்து பெங்களூரு மாநகரத்திற்கு நாள் ஒன்றுக்கு 1450 எம்எல்டி அளவுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக காவிரி ஐந்தாம் நிலை திட்டத்திலிருந்து 750 எம்எல்டி குடிநீர் வழங்கிடப் பணிகள் நடந்துவருகின்றன. 2023-ல் பெங்களூரு மாநகரின் மக்கள் தொகை 1 கோடியே 29 லட்சம். ஓர் ஆளுக்கு, நாள் ஒன்றிற்கு 108 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னை மாநகர் (2023) மக்கள் தொகை 1 கோடியே 18 லட்சம். வழங்கப்படும் குடிநீரின் அளவு 1000 எம்.எல்.டி. 
ஓர் ஆளுக்கு, நாள் ஒன்றிற்கு 85 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.

சென்னை மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக சென்னைக் குடிநீர் வாரியமோ செய்தி ஏடுகளோ தமிழகத் தொலைகாட்சிகளோ பரப்புரை செய்யவில்லை. ஆனால், சென்னை மக்களைவிடக் கூடுதலாகக் குடிநீர் பெறும் பெங்களூரு மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக நாள்தோறும் பரப்புரை செய்வதை ஏன் தமிழ்நாடு அரசு மறுதலித்துப்பேசவில்லை. இதிலிருந்தே கர்நாடகா அரசு எப்படி நாடகமேடைகாட்சிகளை அரங்கேற்றுகிறது என்று தெளிவாகப் புரியும்.

நம் சென்னைக் குடிநீர் வழங்கு வாரியம் 15-03-2024-ல் வெறும் 10.11 டிஎம்சி அளவுக்குத் தண்ணீர் இருப்பை வைத்துக் கொண்டு தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாமல் வரும் 9 மாதங்களுக்கு வழங்குவோம் என்று தெரிவிக்கிறது. ஆனால் கர்நாடகா அரசோ காவிரி அணைகளில் 60 டிஎம்சி க்குமேல் தண்ணீரை இருப்பில் வைத்துக் கொண்டு பெங்களூரு மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது என்று வேண்டுமென்றே நாடகமாடுகிறது. 

 நம் தமிழக அரசு ஏன் இதை வெளிப்படுத்தி மறுத்து அறிக்கை விடவில்லை என்பது புதிராக உள்ளது.
உண்மை நிலைமை இப்படியிருக்கும்போது செய்தி இதழ்களும் நம் ஊர் தொலைகாட்சிகளும் கூட பெங்களூருவில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கின்றன. 
இவற்றைப்பார்த்து அமெரிக்க நண்பர் இச்செய்தி உண்மையா என கேட்கிறார். 
கர்நாடகத்தின் பொய் பிரசாரங்களை தமிழக அரசு கண்டிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது” என்றார்.
 பெங்களூரில் எங்களுடைய தொடர்பில் குடும்பத்தினர்களும் பணிபுரிபவர்களும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்.

Also Read
மேக்கேதாட்டூ... நெருங்கிவிட்ட ஆபத்து... காவிரி ஆணையம் அனுமதி! துணைபோகிறதா தமிழக அரசு?

Also Read
மேக்கேதாட்டூ அணை விவகாரம்: அடித்து ஆடும் கர்நாடக காங்கிரஸ் அரசு... அமைதி காக்கிறதா திமுக?

Also Read
பெங்களூரு தண்ணீர் பஞ்சம்... கேவலமான அரசியல்!

Also Read
`தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர நாங்கள் முட்டாள்கள் அல்ல'-கடுகடுக்கும் சிவக்குமார், மௌனம் காக்கும் திமுக

Thursday, 13 December 2018

மேகதாது அணை அல்லது கன்னடரின் கொடூரத்தனம்

மேகதாது அணை அல்லது கன்னடரின் கொடூரத்தனம் 

சினிமாவில் ஒரு வில்லன்
அப்பாவி மக்களை ஓர் அறையில் அடைத்து
அவர்களுக்கு உணவு கொடுக்காமல்
சாகும்வரை பட்டினிபோட்டு
பார்த்து ரசிக்கும் காட்சி வந்தால்
அவனை எவ்வளவு கொடூரமானவன் என்று நினைப்போமோ....
அதே அளவு கொடூரமானோர் ஒவ்வொரு கன்னடரும்!

70 டி.எம்.சி!

கடந்த ஜூன் மாதம் அணைகள் அனைத்தும் உடையுமளவு மழை கொட்டித் தீர்த்தும் நமக்கு கிடைத்த தண்ணீர் இவ்வளவுதான்!

67 டி.எம்.சி!
இதுவே தமிழக எல்லைக்கு மிக அருகே அவர்கள் கட்டப்போகும் மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவு!

அதாவது தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட போகக்கூடாது என்பதில் கன்னடர் குறியாக இருக்கின்றனர்.

கன்னடவர் சட்டத்திற்கும் மனித நேயத்திற்கும் புறம்பாக அணை கட்டி தேவையில்லாமல் தண்ணீரைத் தேக்கிவைத்து அந்த நிரம்பிய அணைகள் மீது உட்கார்ந்து நாம் நீரும் உணவும் இல்லாமல் பஞ்சத்தில் சாவதை ரசிக்கப் போகிறார்கள்.

இதுவே குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வோரு கன்னடரின் கனவு!

உண்மை என்னவென்றால் இந்த கனவு முக்கால்வாசி நிறைவேறிவிட்டது.

ஆம். தமிழகத்தில் முப்போகம் விளைந்து 32 ஆண்டுகள் ஆகின்றன.

இருபோகம் விளைந்து 16 ஆண்டுகள் ஆகின்றன.

பல தகராறுகள் செய்து ஒரு போகத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.
இனி அதுவும் கிடைக்காது.

ஏற்கனவே நலிந்துபோய் தற்போது கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கும் நெற்களஞ்சியமான டெல்டா பகுதி மக்கள் இனி நிமிரவே முடியாது.

கன்னடவர் நேரம் பார்த்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளனர்!

'தமிழகத்தின் சம்மதம் இன்றி அணை கட்டக் கூடாது' என்கிற இறுதித் தீர்ப்பை மீறும் இச்செயலை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கையும் இன்று (13.12.2018) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை!

மலையாளிகள் காட்டை அழித்து அதன் விளைவாக வந்த வெள்ளத்திற்கு
எந்த பாவமும் அறியாத முல்லைப்பெரியாறு அணையின் மீது பழி போட்டு
நீர்மட்டத்தை குறைத்தனரே அதை விட மோசமான செயல் இது!

மேக்கேதாட்டு அணை கட்ட அவர்கள் சொல்லும் காரணம் 'பெங்களூருக்கு குடிநீர்' வழங்குவது.
பெங்களூர் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடித்து 3 முறை குளித்து தீர்த்தாலும் அதற்கு 3 டி.எம்.சி அணை போதும்.
கடைசியாக தீபக் மிஸ்ரா வழங்கிய அநியாயமான தீர்ப்பில்  தமிழகத்தின் பங்கான 192 TMC இலிருந்து 147 TMC ஆக குறைக்கப்பட்டபோது பெங்களூர் நகர குடிநீருக்கு பங்கு ஒதுக்கியே கணக்கு காட்டப்பட்டது.

'மின்சாரம் எடுப்பதற்காக' என்று இன்னொரு காரணம் சொல்கின்றனர்.
கர்நாடகம் முழுவதும் ஆண்டுக்கு ஏறத்தாழ 410 டி.எம்.சி கடலில் கலக்கிறது.
அங்கேயெல்லாம் மின்சாரம் எடுக்காமல் அணை கட்டாமல் தமிழர்களுக்கு செல்லும் தண்ணீரை முற்றுமுழுதாக மறித்து நம் இனத்தையே ஒழித்துக்கட்ட இவ்வாறு செய்கிறார்கள்.

இந்த விடயத்தில் மட்டும் கன்னடவர் கட்சி, சாதி, மத, வட்டார பேதங்கள் தாண்டி உறுதியாக இருக்கின்றனர்.

2015 இலேயே இந்த அணைக்கு நிதி ஒதுக்கி கள ஆய்வும் செய்துவிட்டனர்.
ஆனால் யானை வழித்தடங்கள் அழிக்கப்படும் என்றும் எங்கள் கிராமங்கள் மூழ்கிவிடும் என்றும் அப்பகுதி பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதைப் பற்றியும் கவலைப்படாத கன்னட காட்டுமிராண்டிகள் தங்கள் கொடூரத்தனத்தை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

இதே நாளில் 1991 இல் பெங்களூர் நகரில் 50% ஆக இருந்த தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து,
1000 பேர் வரைக் கொன்று,
பல கோடி சொத்துகளைக் கொள்ளையடித்து,
ஒன்றரை லட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு கன்னடரால் விரட்டப்பட்டனர்.
அதற்காக இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மேகதாது 1956 வரை கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருந்த கொள்ளேகால் வட்டத்தின் பகுதி.
1900களின் ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளேகால் நகரத்தைச் சுற்றி கன்னடர் குடியேறி குடியேறி அந்த தாலுகாவின் பெரும்பான்மை ஆகினர்.
1956 இல் கொள்ளேகால் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டபோது அந்நகரத்தில் பாதிக்கு பாதி தமிழர்கள் இருந்தனர்.

1924 இலிருந்து ஒவ்வோரு நீதிமன்றத் தீர்ப்பும் தமிழருக்கு எதிராகவே வந்து,
தண்ணீர் படிப்படியாகக் குறைக்கப்பட்டு,
சட்டவிரோதமாக அணைகள் வரிசையாகக் கட்டப்பட்டு,
அந்த அநியாயமான தீர்ப்பில் கூறிய தண்ணீரைக் கூட தராமல் அடாவடி செய்து,
அப்பாவிகள் மீது வன்முறை ஏவப்பட்டு,
இன்று கடைசிச் சொட்டு நீரும் மறுக்கப்படும்போதும்
கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கிறது ஜனநாயகம்.

இதற்கு தீர்வுதான் என்ன?

வீரப்பனார் காட்டிய அதிரடி வழிதான்.

பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின!
மேதாவிகள் பல புத்தகங்கள் போட்டனர்!
ஜனநாயகப் போராளிகள் பல முறை கத்தி கதறி சிறை சென்று மீண்டனர்!
நீதிமன்றங்கள் குழுக்கள் பல அமைத்து தீர்ப்புகள் பல வாசித்தன!

எதற்குமே பணியாத வெறிபிடித்த கன்னட இனம்,
50 பேரும் பத்து துப்பாக்கிகளும் வைத்திருந்த
வீரப்பனார் அனுப்பிய ஒரு பத்து ரூபாய் கேசட்டுக்கு பணிந்து காவிரியைத் திறந்துவிட்டது கண்முன் நடந்த வரலாறு.

எந்தக் கன்னடனும் கர்நாடகாவைத் தாண்டி பஞ்சம் பிழைக்க செல்வதில்லை.
அங்கே விவசாயிகள் வசதியாக உள்ளனர்.
எல்லாமே தமிழர்களிடமிருந்து பிடுங்கியது.
அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் தமிழன் தட்டிலிருந்து பிடுங்கப்பட்டது.
அவர்கள் கட்டிடம் கட்டும் ஒவ்வொரு செங்கலும் தமிழன் வீட்டிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டது.

நீர், உணவு, ஆற்று மணல், அரசியல் பதவி, விவசாயம் என அனைத்தையும் கன்னடரிடம் பறிகொடுத்துவிட்டு ஊர் ஊராக நாடுநாடாக பஞ்சம் பிழைக்க ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

இனி மனிதநேயம் பேசி பலனில்லை!

ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு கன்னடருக்கும் எதிரி!

உங்களுக்கு கன்னட நண்பர் இருந்தால் அவரை கைவிடுங்கள்!

கன்னட பணியாள் இருந்தால் வேலையை விட்டு தூக்குங்கள்!

கர்நாடகா வங்கிகளையும் நிறுவனங்களையும் புறக்கணியுங்கள்!

பிரச்சனை வந்தால் கன்னடர் சொத்துக்களை அடித்து உடையுங்கள்!

அங்கே ஒரு தமிழரைத் தாக்கினால் இங்கே இரண்டு கன்னடரைத் தாக்குங்கள்!

கன்னடர் இங்கே வாழ அசௌகரியமான சூழலை உருவாக்குங்கள்!

தமிழகத்து புலிகள் ஒருநாள் அணையை குண்டு வைத்து தகர்க்க நிதி கேட்டு வருவார்கள் அப்போது பணம் கொடுத்து உங்கள் வீட்டு இளைஞர்களைத் துணைக்கு அனுப்புங்கள்.

இதுதான் தீர்வு!

இல்லையென்றால் நாம் இன்னொரு சோமாலியா ஆகித்தான் தீரவேண்டும்!

இது கன்னட இனத்திற்கும் தமிழ் இனத்திற்கும் நடக்கும் போர்!

இரண்டில் ஒன்று அழியும் வரை இது தொடரும்!

Wednesday, 24 October 2018

இரண்டு புதிய அணைகள் - முல்லைப்பெரியாறு அணை டம்மியாக்கப்பட்டு உடைக்கப்படும்

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக மேலும் இரண்டு அணை
- அனுமதி வாங்கியது கேரளா

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடந்த வரலாறு காணாத மழை ஏற்படுத்திய சுவடுகள் இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லை.
அதற்குக் காரணமாக மலையைக் குடைந்து கட்டடங்கள், சாலைகள் எனப் பலவற்றை அமைத்திருந்ததும், கிட்டத்தட்ட 43 அணைகள் கட்டியிருந்ததையும் சுற்றுச் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டினர்.
இதனால் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டதையும், வீடுகள் இடிந்ததையும் சுட்டிக் காட்டினர்.
ஆனால், கேரள அரசோ முல்லைப் பெரியாறு அணையின்மீது குற்றம் சாட்டியது.
இதற்குப் பல எதிர்ப்புகள் எழுந்தபோதும், தனது திசையைத் திருப்பாமல் முல்லைப் பெரியாறு அணையின் கீழே மேலும் ஒரு புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது.

இந்தப் புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, மஞ்சுமலை கிராமத்தில் அமையவிருக்கிறது.
இந்த இடம் வண்டிப் பெரியாரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது.

இதற்கான சுற்றுச்சூழல் அறிக்கை தயாரிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நாடி அனுமதியும் வாங்கிவிட்டது கேரளா.

இதனை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது.
2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும்.
"அணை தொடர்பான சிக்கல்களுக்குத் தமிழகமும், கேரளாவும் ஒரு மனதுடன் முடிவெடுத்து நீதிமன்றத்தை அணுகலாம்.
கேரளா தனியாக அணையைக் கட்ட விரும்பினால், தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தைப் பெற்று, அதைச் சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தோடு இணைக்க வேண்டும்" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு நேர்மாறாக கேரளா தனித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்து சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கையைத் தயார் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறது கேரளா.

இதுபற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.
"தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்ய கேரள ந அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது மிகப்பெரும் சூழலியல் பேரிடராகும்.

கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை பொழிவினால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு ஒட்டுமொத்த மாநிலமே நீரில் மிதந்ததற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளை குடைந்து பல சுரங்கங்கள், சாலைகள், ரிசார்ட்டுகள் என அமைத்ததே முக்கியக் காரணமாகும்.

மேலும் தேவையே இல்லாத இடங்களில் மின்சார உற்பத்திக்காக அணைகள் கட்டியதும் இப்பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
உலக நாடுகள் பலவும் இப்பிரச்னையை உணர்ந்து பல ஆண்டுகளுக்குமுன் கட்டிய அணைகளை இடித்து வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது எனப் (reservoir induced seismicity ) பல ஆய்வுகளும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு போன்ற சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இன்னொரு அணையைக் கட்டுவது அறிவார்ந்த செயல் கிடையாது.

அதுமட்டுமன்றி முல்லைப் பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நீர்த்தேவையினையும், பல கோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காமல் போய்விடும்.

மேலும் 2014-ம் ஆண்டு, முல்லைப் பெரியாறு வழக்கில் ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் 'இரண்டு மாநிலங்களும் ஒருமனதாக புதிய அணை கட்ட முடிவு எடுத்து நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும், கேரள அரசு அணை கட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதைச் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்துத்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் இந்த முதற்கட்ட அனுமதி வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பாகும்.
தமிழக மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தற்போது இருக்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1,200 அடி கீழ்த்திசையில் புதிய அணை அமைக்கப்படவுள்ளதால் நிச்சயமாக தமிழகத்துக்கு நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அணையின் உயரம் 174.6 அடி, நீளம் 1,214 அடி.
இதற்குத் துணை அணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு 663 கோடியாகும்.
இந்த அணை கட்டுவதால் 0.017 டி.எம்.சி நீரை மட்டுமே அதிகமாக தேக்கி வைக்க முடியும்.
0.502 சதுர கிலோமீட்டர் மட்டுமே நீர்ப்பிடிப்பு பகுதி அதிகரிக்கும்.

ஆனால் முல்லைப் பெரியாறு புலிகள் சரணாலயத்தின் 123 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இந்தச் சிறிய அளவு நன்மைக்காக மிகப்பெரும் சூழலியல் சீர்கேட்டை அனுமதிக்க முடியாது.
புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணையானது பகுதி பகுதியாகச் செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும்,
அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்கத் திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

கேரளா, "முல்லைப் பெரியாறு அணையின் வாழ்நாள் முடிந்துவிட்டது,
அண்மைக் காலமாக கேரளாவில் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன,
அதனால் புதிய அணை தேவைப்படுகிறது,
புதிய அணை கட்டினால் மக்களைப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள முடியும்" என்று தனது கோரிக்கையை முன் வைத்துள்ளது.

இதற்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு அணை முழுப் பலத்தோடு இருக்கிறது என்று அறிக்கை கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளா, தமிழக அரசோடு ஆலோசிக்காமல் இரண்டு அணைகளைக் கட்ட சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கிவிட்டது.

இதில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இனி முடிவு தமிழக அரசின் கைகளில்...!

நன்றி: Tamilri.com (TRI)

Thursday, 23 August 2018

142 இனி 139

142 இனி 139

மலையாள பாம்புக்கு ஓடி ஓடி பால்வார்த்த இளிச்சவாய் தமிழர்களே!

இதோ அது கடித்துவிட்டது!

இன்று முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 139 அடியாகக் குறைக்கப்பட உள்ளது.

முன்பே சொன்னேன் இந்த இனவெறியர்களுக்கு உதவி செய்யாதீர்கள் என்று.

இடுக்கி மாவட்டம் 95% தமிழர் வாழும் பகுதி.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே நமக்கு சொந்தமானதுதான்.

அதை மீட்க களம் இறங்குங்கள்!

ஒரு வாரம் கேரளாவுக்கு செல்லும் உணவை தடுத்து நிறுத்துங்கள் போதும்.

Sunday, 19 August 2018

பேராசையில் மூழ்கிய மலையாளிகள்

பேராசையில் மூழ்கிய மலையாளிகள்

கேரளாவில் ஆண்டுதோறும் பெய்யும் மழையைப் போல இம்முறை 2.5 மடங்கு அதிகம் மழை பெய்துள்ளது.

வெள்ளத்திற்கு முக்கிய காரணம் இதுவல்ல.

1905 இல் கேரளாவின் மொத்த நிலப்பரப்பில் 44% காடுகள்.
(தமிழகத்திற்கு சேரவேண்டிய எல்லைப் பகுதிகளை கேரளாவோடு சேர்த்துக் கொண்டனர்)

இன்று காடுகளின் பரப்பு 29% ஆக சுருங்கிவிட்டது.

மலையாளிகளின் பேராசைக்கு இரையான அம்மாநில வளங்களில் காடுகள் உட்பட எதுவும் தப்பவில்லை.

ஏனென்றால் காட்டை அழித்து அதில் குடியிருப்புகள், சொகுசு விடுதிகள் என கட்டிக்கொண்டே போனார்கள்.

இது போக கணக்கு வழக்கில்லாமல் சுரங்கம் தோண்டி கனிமங்களை எடுத்து பணத்தில் கொழித்தார்கள்.

வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக துபாய்க்கு (UAE) வேலைக்குச் சென்று நல்ல வருமானம் ஈட்டினர்.

போதாக்குறைக்கு அவர்கள் செய்யும் தம்மத்தூண்டு விவசாயத்திற்காக 42 அணைகள் கட்டி ஆற்று நீரையெல்லாம் தேவையில்லாமல் தேக்கிவைத்தனர்.

இவை பெரும்பாலும் தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை மறிக்கும் நோக்கத்தில் கட்டியவை.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் ஊடகங்கள் கவனம் அங்கிருக்க அவசர அவசரமாக அணைகட்டி பவானி ஆற்றுத் தண்ணீரை மறித்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அணை கட்டி மறித்தது போக தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்து ஆக்கிரமிப்பு, வழிபாட்டிற்கு செல்லும் அப்பாவித் தமிழர்களைத் தாக்கி இனவெறியைத் தணித்துக் கொள்வது,
தமிழகத் தண்ணீரைத் தடுத்து தமிழகத்திற்கே திருப்பும் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க அலைந்தது,
மூணாறு தேயிலைத் தோட்டத்திற்கு சென்ற தமிழ்ப் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்தது என மலையாளி செய்யாத இனவெறிச் செயலே இல்லை.

2011 இல் மாதவ் கட்கில் தலைமையிலான குழு ஆய்வு செய்து கேரளா மேற்குத் தொடர்ச்சி மலையை வரைமுறையில்லாமல் அழித்துவருவதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்தது.

அதன் பரிந்துரைகளைக் காலில் போட்டு மிதித்தது கேரளா.

2016 இல் கஸ்தூரிரங்கன் குழு கட்கில் பாதுகாக்கக் கூறிய பகுதிகளை பாதியாகக் குறைத்து இதை மட்டுமாவது மிச்சம் வையுங்கள் என்று கெஞ்சியது.

அப்போது 1700 குவாரிகள் அமைத்து வெறித்தனமாக மலைகளைக் குடைந்துகொண்டிருந்த மலையாளிகள் அந்த பரிந்துரையையும் குப்பைத் தொட்டியில் போட்டனர்.

பிற மாநிலங்களிலும் இத்தகைய இயற்கை அழிப்பு நடக்கிறது என்றால் அரசாங்கம் அதற்கு நேரடியாக ஒப்புதல் அளிப்பதில்லை.
ஆனால் கேரள அரசே முன்னின்றுதான் தனது வளங்களைச் சுரண்டிக்கொள்ளச் சொன்னது.

இப்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட குடியேறவேகூடாத பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள்.

நிலச்சரிவு எல்லாம் ஏற்கனவே மூடச்சொன்ன குவாரிகள் குடைந்ததன் விளைவுதான்.

இயற்கையை அழித்து மலையாளிகள் சேர்த்த சொத்தெல்லாம்
அவர்கள் தேக்கிவைத்த பயன்படுத்தாத தண்ணீராலேயே அழிந்தது.

இப்போதுவரை நட்டம் 20,000 கோடியாம்.
2 லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனராம்.
பலி எண்ணிக்கை 200 வரை என்று சொல்கிறார்கள்.

   மழை அதிகம் பெய்யும் என்று முன்னெச்சரிக்கை விடுத்தும் மலையாளிகளின் தான்தோன்றித்தனமான, இயற்கையை மதிக்காத போக்கும்
மெத்தனமான, அசட்டையான மனப்பான்மையும்
இயற்கை தந்த அதிக மழையே வெள்ளமாக மாறி தண்டிக்க காரணமானது.

ஆ.. ஊ.. என்றால் கேரளாவைப் பார் என்று கைகாட்டிய மேதாவிகள்,
  பணவெறி பிடித்து
தனது மண்ணை அழித்து
அண்டை மாநிலமான தமிழகத்தைச் சுரண்டி
பணக் கொழுப்பெடுத்து
அடங்காத் திமிருடன் அலைந்த மலையாளிகளைத்தான் அப்போது உதாரணம் காட்டினோம் என்று இப்போது அறிந்திருப்பர்.

உண்மையிலேயே கேரளா கடவுளின் தேசமாகவே இருந்தாலும் இயற்கையின் முன் மண்டியிட்டுதான் ஆகவேண்டும்.

இத்தனை நடந்தும் மலையாளிகள் திருந்துவார்களா என்றால் நிச்சயம் திருந்தமாட்டார்கள்.

ஆனால் இது இயற்கை விடுத்த 'வரப்போகும் பிரளயத்தின்' முன்னறிவிப்பு மட்டும்தான்.