Showing posts with label காடு. Show all posts
Showing posts with label காடு. Show all posts

Saturday, 4 April 2020

தொடரும் வன ஆக்கிரமிப்பு

தொடரும் வன ஆக்கிரமிப்பு

மலையாளிகள் தமிழகத்து காடுகளை தினமும் ஒரு ஏக்கர் ஆக்கிரமிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

தேனி மாவட்ட கம்பமெட்டு பகுதி இதற்கு நல்ல உதாரணம்.
தமிழக வனத்துறை, காவல்துறை, கலெக்டர், அமைச்சர் என அத்தனை பேர் வந்து பார்த்தும் எதுவுமே செய்யமுடியவில்லை.

கேரளா வன ஆக்கிரமிப்பு 1990 களில் மிகத் தீவிரமாக நடந்தது.
தேனி மாவட்டத்தில் குமுளியில் துவங்கி ஒன்னாம் மைல், இரண்டாம் மைல், ஆசாரிபள்ளம், கம்பமெட்டு, துாக்குபாலம், குதிரைபாஞ்சான், ராமக்கல்மெட்டு, போடிமெட்டு வரை வனப்பகுதிகள் நீள்கிறது.

குமுளி முதல் போடிமெட்டு வரை தமிழக வனப்பகுதி 700 எக்டர் வரை  ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பூகோள அமைப்பில் கேரள மாநில பகுதியில் குடியிருப்புக்களாகவும், தமிழகத்தில் வனப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன.
இதனால் அரச ஆதரவுடன் மிக எளிதாக தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்து காபி, ஏலக்காய், மிளகு, வாழை சாகுபடி செய்வது, குடியிருப்பு, சிறு தொழில், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு, சுற்றுலா, சொகுசு மாளிகைகள் என மலையாளிகள் அனுபவித்து வருகின்றனர்.

1994 ஆசாரிபள்ளம் பகுதியில் மிகப் பெரிய ஆப்பரேஷன் நடத்தி, 150 எக்டேர் வனப்பகுதியை தமிழக வனத்துறை மீட்டது.
ஆனால் எஞ்சிய பகுதிகளை மீட்கமுடியவில்லை.

கம்பமெட்டு பகுதியில் 2014 இல் மீண்டும் முழுமூச்சுடன் இறங்கிய மலையாளிகள் சிறிது சிறிதாக 500 மீட்டர் வரை ஆக்கிரமித்தனர்.

எந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் உடனடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.

2017 இல் இவர்கள் மெயின்ரோட்டில் ஒரு கன்டெயினர் வைத்து செக் போஸ்ட் அமைத்தபோது பாரஸ்டர் ராஜூ என்பவர் தட்டிக்கேட்க அவரை அடித்து கீழே தள்ளினர் மலையாள அதிகாரிகள்.
அவர் காவல்துறையை அழைத்துவர போக்குவரத்து பாதிக்கப்பட பிரச்சனை பெரிதானது.

தாசில்தார் வந்து பேசிப்பார்த்தபோதும் சர்வே எடுக்க விடாமல் மலையாளிகள் பிரச்சனை செய்தனர்.

பிறகு கலெக்டர் வந்து பேசியும் அவர்கள் வழிக்கு வராததால் அமைச்சர் உதயகுமார் நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது எடுத்த சர்வேயில் அந்தப்பக்கத்து கேரள காவல்நிலையமே தமிழக எல்லைக்குள் வருவது தெரிந்தது.

அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம் என்று சொன்னார்.

கூட்டு சர்வே தேதி அறிவித்தார்கள்.

மலையாள நாளிதழ்கள் தமிழக அரசு இப்பகுதியில் கேரள மின்சாரத்தைத் திருடுவதாக செய்திகளை வெளியிட்டன.

பல பெரிய நிலப்பரப்புடன் அரியவகை மரங்கள், விலங்குகள், ஒரு அருவி என மலையாளிகள் விழுங்கியிருப்பது மிக அதிகம்.

இடையில் தென்னிந்தியா பார்வார்டு பிளாக் சார்பில் 50 பேர் சென்று எல்லைக் கற்களைப் பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ்

பிறகு நடப்பட்ட 14 கற்களையும் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பிடுங்கி எறிந்தனர்.
[தினகரன் 23.06.2017
தலைப்பு: கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்]

1750 ஏக்கர் (700 ஹெக்டேர்) தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்தபடி அமர்ந்திருக்கும் மலையாளிகள் இன்றுவரை ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை.

இப்பிரச்சனையில் தினமலர் (தேனி மாவட்ட பதிப்பு) தொடர்ச்சியாக கவனம் செலுத்தி  வெளியிட்ட செய்தித் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கேரள ஆக்கிரமிப்புகளை
அகற்றாத தமிழக வனத்துறை
[செப் 09, 2019]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக வனப்பகுதிகள் மீட்பது எப்போது:முயற்சி கூட எடுக்காமல் வேடிக்கை பார்க்குது வனத்துறை
[செப் 20,2018]

தமிழக வனப்பகுதி
ஆக்கிரமிப்பு படிப்படியாக
அகற்ற திட்டம்
[மே 06, 2018]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக
வனப்பகுதிகள் மீட்கப்படுவது எப்போது? அதிரடியாக களம்
இறங்குமா வனத்துறை
[பிப் 02, 2018]

தமிழகம் மின்சாரம்
திருடுகிறதாம்! அவதூறு
பரப்புகிறது கேரளா
[ஆக் 07, 2017]

கம்பமெட்டில் தமிழக
வருவாய்த்துறை அமைச்சர்
ஆய்வு : வன எல்லை
நிர்ணயத்திற்கு கூட்டு சர்வே
செய்ய நடவடிக்கை
[ஆக் 05, 2017]

கம்பமெட்டில் சர்வே கற்களை
ஊன்றி போராட்டம் :
தென்னிந்திய பார்வர்டு பிளாக்
கட்சியினர் கைது
[ஜூலை 04, 2017]

தமிழக சர்வே கற்கள் அகற்றம்:
கேரள ஆக்கிரமிப்பு கும்பல்
அடாவடி
[ஜூன் 22, 2017]

தமிழக -- கேரள வன எல்லை
நிர்ணயம் ஜூன் 7ல் கூட்டு சர்வே
[ஜூன் 04, 2017]

வனப்பகுதியில்
கண்காணிப்பு கோபுரம்
அமைப்பது குறித்து இடத்தேர்வில் அதிகாரிகள் தீவிரம்
[மார் 25, 2017]

மாவட்ட வன அலுவலர்
டிரான்ஸ்பர் ஆக்கிரமிப்பு
அகற்றுவதில் தொய்வு
[மார் 10, 2017]

தமிழக வனப்பகுதி மீட்கப்படுமா -
மாவட்ட அதிகாரிகள் பாராமுகம்
[பிப் 27, 2017]

கம்பமெட்டில் செக்போஸ்ட்:அடம்
பிடிக்கும் கேரளா : தமிழக
அதிகாரிகள் ஏமாற்றம்
[பிப் 24, 2017]

தமிழக வனப்பகுதிகளில்
ஆக்கிரமிப்பு... தொடர்கிறது:
வன எல்லை நிர்ணயம் அவசியம்
[பிப் 25, 2016]

கம்பம் மெட்டு அருகே கேரள
காற்றாலைக்கு தமிழக
வனப்பகுதியை ஆக்கிரமித்து
ரோடு
[ஜூன் 23, 2014]

Wednesday, 19 December 2018

கேரளச் சுற்றுலா தமிழகத்தினுள்

கேரளச் சுற்றுலா தமிழகத்தினுள்

பல அரிய உயிரினங்கள் வாழ்கின்ற,
UNESCO ஆல் பாதுகாக்கப்பட்ட பகுதியென அறிவிக்கப்பட்ட,
தமிழக வனத்துறை வசமுள்ள,
பொதிகை மலையில் மையப் பகுதியில் கேரளா காட்டுவழி நடைபயண சுற்றுலா நடத்தி காசு பார்க்கிறது.

அதுவும் எல்லை தாண்டி தமிழகத்தினுள்.

நடுக்காட்டில் செம்மூஞ்சி என்கிற இடம் வரை நடத்தினர்.

பிறகு பாண்டிப்பத்து என்கிற இடம் வரை இன்னொரு கிளை நீண்டது.

தற்போது கேரள சுற்றுலாவின் கரங்கள் காரையாறு அணைவரை நீள்கின்றன.

ஆம் முழு காட்டையும் தாண்டி சிறப்பு மண்டலமான "முண்டந்துறை புலிகள் காப்பகம்" வழியாக காரையார் அணை வரை வந்துவிட்டது.

இதற்கென தமிழக அரசிடம் அனுமதி பெற்றதாக தெரியவில்லை.

முல்லைப்பெரியாறு அணை மற்றும் மூணாறு பகுதிகளில் அதாவது எல்லைப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தமிழக படகுகளை இயக்கவிடாமல் அடாவடி செய்து நமது சுற்றுலா வருமானத்தில் மண்ணைப் போடும் மலையாளிகள் தமிழர்களைக் கொள்ளையடிப்பதில் சிறு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை.

தமது மாநில காடுகளை அழித்து அதனால் வெள்ளத்தை வரவைத்துக்கொண்ட மலையாளி நமது காட்டிலும் உலாவ ஆரம்பித்துவிட்டான்.

இப்போது இருக்கும் காட்டுவழி
பிறகு ஒற்றையடிப்பாதை ஆகும்
பிறகு இரு சக்கர வாகனம் வரும்.
பிறகு மகிழுந்தும் பிறகு பேருந்தும் வரத்தொடங்கும்.

இவ்வாறு நமது காட்டை இரண்டாகப் பிழந்து போடவுள்ளனர்.

வானத்திலிருந்து குதித்தது போல காரையார் அணையிலிருந்து திடீரென இறங்கி வரும் மனிதர்கள் யார் என்று பொதுமக்கள் வேண்டுமானால் குழம்பலாம்.

ஆனால் தமிழக வனத்துறை கூட தடுப்பது இல்லையே?!

இவர்களுக்கும் கேரளா எலும்புத்துண்டுகளை வீசி எறிகிறதா?!

Sunday, 19 August 2018

பேராசையில் மூழ்கிய மலையாளிகள்

பேராசையில் மூழ்கிய மலையாளிகள்

கேரளாவில் ஆண்டுதோறும் பெய்யும் மழையைப் போல இம்முறை 2.5 மடங்கு அதிகம் மழை பெய்துள்ளது.

வெள்ளத்திற்கு முக்கிய காரணம் இதுவல்ல.

1905 இல் கேரளாவின் மொத்த நிலப்பரப்பில் 44% காடுகள்.
(தமிழகத்திற்கு சேரவேண்டிய எல்லைப் பகுதிகளை கேரளாவோடு சேர்த்துக் கொண்டனர்)

இன்று காடுகளின் பரப்பு 29% ஆக சுருங்கிவிட்டது.

மலையாளிகளின் பேராசைக்கு இரையான அம்மாநில வளங்களில் காடுகள் உட்பட எதுவும் தப்பவில்லை.

ஏனென்றால் காட்டை அழித்து அதில் குடியிருப்புகள், சொகுசு விடுதிகள் என கட்டிக்கொண்டே போனார்கள்.

இது போக கணக்கு வழக்கில்லாமல் சுரங்கம் தோண்டி கனிமங்களை எடுத்து பணத்தில் கொழித்தார்கள்.

வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக துபாய்க்கு (UAE) வேலைக்குச் சென்று நல்ல வருமானம் ஈட்டினர்.

போதாக்குறைக்கு அவர்கள் செய்யும் தம்மத்தூண்டு விவசாயத்திற்காக 42 அணைகள் கட்டி ஆற்று நீரையெல்லாம் தேவையில்லாமல் தேக்கிவைத்தனர்.

இவை பெரும்பாலும் தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை மறிக்கும் நோக்கத்தில் கட்டியவை.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் ஊடகங்கள் கவனம் அங்கிருக்க அவசர அவசரமாக அணைகட்டி பவானி ஆற்றுத் தண்ணீரை மறித்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அணை கட்டி மறித்தது போக தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்து ஆக்கிரமிப்பு, வழிபாட்டிற்கு செல்லும் அப்பாவித் தமிழர்களைத் தாக்கி இனவெறியைத் தணித்துக் கொள்வது,
தமிழகத் தண்ணீரைத் தடுத்து தமிழகத்திற்கே திருப்பும் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க அலைந்தது,
மூணாறு தேயிலைத் தோட்டத்திற்கு சென்ற தமிழ்ப் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்தது என மலையாளி செய்யாத இனவெறிச் செயலே இல்லை.

2011 இல் மாதவ் கட்கில் தலைமையிலான குழு ஆய்வு செய்து கேரளா மேற்குத் தொடர்ச்சி மலையை வரைமுறையில்லாமல் அழித்துவருவதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்தது.

அதன் பரிந்துரைகளைக் காலில் போட்டு மிதித்தது கேரளா.

2016 இல் கஸ்தூரிரங்கன் குழு கட்கில் பாதுகாக்கக் கூறிய பகுதிகளை பாதியாகக் குறைத்து இதை மட்டுமாவது மிச்சம் வையுங்கள் என்று கெஞ்சியது.

அப்போது 1700 குவாரிகள் அமைத்து வெறித்தனமாக மலைகளைக் குடைந்துகொண்டிருந்த மலையாளிகள் அந்த பரிந்துரையையும் குப்பைத் தொட்டியில் போட்டனர்.

பிற மாநிலங்களிலும் இத்தகைய இயற்கை அழிப்பு நடக்கிறது என்றால் அரசாங்கம் அதற்கு நேரடியாக ஒப்புதல் அளிப்பதில்லை.
ஆனால் கேரள அரசே முன்னின்றுதான் தனது வளங்களைச் சுரண்டிக்கொள்ளச் சொன்னது.

இப்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட குடியேறவேகூடாத பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள்.

நிலச்சரிவு எல்லாம் ஏற்கனவே மூடச்சொன்ன குவாரிகள் குடைந்ததன் விளைவுதான்.

இயற்கையை அழித்து மலையாளிகள் சேர்த்த சொத்தெல்லாம்
அவர்கள் தேக்கிவைத்த பயன்படுத்தாத தண்ணீராலேயே அழிந்தது.

இப்போதுவரை நட்டம் 20,000 கோடியாம்.
2 லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனராம்.
பலி எண்ணிக்கை 200 வரை என்று சொல்கிறார்கள்.

   மழை அதிகம் பெய்யும் என்று முன்னெச்சரிக்கை விடுத்தும் மலையாளிகளின் தான்தோன்றித்தனமான, இயற்கையை மதிக்காத போக்கும்
மெத்தனமான, அசட்டையான மனப்பான்மையும்
இயற்கை தந்த அதிக மழையே வெள்ளமாக மாறி தண்டிக்க காரணமானது.

ஆ.. ஊ.. என்றால் கேரளாவைப் பார் என்று கைகாட்டிய மேதாவிகள்,
  பணவெறி பிடித்து
தனது மண்ணை அழித்து
அண்டை மாநிலமான தமிழகத்தைச் சுரண்டி
பணக் கொழுப்பெடுத்து
அடங்காத் திமிருடன் அலைந்த மலையாளிகளைத்தான் அப்போது உதாரணம் காட்டினோம் என்று இப்போது அறிந்திருப்பர்.

உண்மையிலேயே கேரளா கடவுளின் தேசமாகவே இருந்தாலும் இயற்கையின் முன் மண்டியிட்டுதான் ஆகவேண்டும்.

இத்தனை நடந்தும் மலையாளிகள் திருந்துவார்களா என்றால் நிச்சயம் திருந்தமாட்டார்கள்.

ஆனால் இது இயற்கை விடுத்த 'வரப்போகும் பிரளயத்தின்' முன்னறிவிப்பு மட்டும்தான்.

Tuesday, 12 June 2018

சண்டாள ஜிண்டால்

சண்டாள ஜிண்டால்

2005 ல் ஜிண்டால் மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே நடந்த உரையாடல்

"வாழவைக்கும் ஜிண்டால் அவர்களே! வருக!"

"நமஸ்தே! என்ன விசயம்?"

"சேலத்திற்கும்  சென்னைக்கும் நடுவே இருக்கும் திருவண்ணாமலைக்கு மிக அருகில் இருக்கிறது கவுத்திமலை.
இது சாதாரண மலை இல்லை,
41% இரும்புத்தாது நிறைந்தது.
அதாவது 35 மில்லியன் டன் இரும்புத்தாது இருப்பதாக கணித்துவிட்டனர்.
இதை விற்க நல்ல ஆள் தேடிக்கொண்டு இருந்தோம்.
அதற்கு உங்கள் கார்ப்பரேட்டை தேர்ந்தெடுத்துள்ளோம்"

"அந்த இடமா?
சுத்தமாக பின்தங்கிய பகுதி.
நீதிமன்றத்தையும் அரசாங்கத்தையும் கூட விலைக்கு வாங்கிவிடலாம்.
ஆனால் படிப்பறிவில்லாத பாமர மக்களைத்தான் சமாளிக்கமுடியாது.
எவனாவது சமூகப் போராளி எடுத்துக் கூறினால் போராட்டங்களை தொடங்கிவிடுவார்கள்"

"அவர்களை நான் சமாளித்துவிடுவேன்.
ஊடகங்களை மட்டும் நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள்.
ரொம்ப போராடினால் போலீசை ஏவிவிடலாம்.
வெறிநாய்களை விட மோசமாக குதறிவிடுவார்கள்"

"மக்கள் ஆயுதம் தூக்காதவரை எப்படியும் சமாளித்துவிடலாம்.
என்னவொன்று காலம் இழுத்துக்கொண்டே போகுமே என்று யோசிக்கிறேன்.
தவிர அங்கே போதிய வசதிகளும் கிடையாது"

  "மலையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்!
வேண்டிய வசதிகளை வரிப்பணம் செலவளித்து செய்து தருகிறேன்"

"ம், எவ்வளவு நிலம் தருவாய்"

"325 ஹெக்டர் வனப்பகுதியை எழுதித் தருகிறேன்"

"வனப்பகுதியா? மரங்கள் நிறைய இருக்குமே?!"

" ஆம் 3லட்சம் மரங்கள் வரை இருக்கும்"

"மரங்களை வெட்டினால் பொதுமக்கள் எதிர்ப்பார்களே?!
சமாளித்து விடுவாயா?"

"அதற்கென்ன?! இதே அளவு மரங்களை திருநெல்வேலி மாவட்டத்தில் நட்டு ஈடுசெய்வதாக வாக்குறுதி கொடுத்தால் போயிற்று"

"ஹ.. ஹ... ஹா... ஹா... அப்படி சொன்னால் நம்பும் அளவு முட்டாள்களா இந்த மக்கள்?!"

"ஆம், மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிக்கொள்வீர்களா? நான் வெட்டித்தரவா?"

"நானே வெட்டிக்கொள்வேன்.
ஏற்கனவே எனக்கு சேலத்தில் என் மச்சான் மலைமுழுங்கி SISCOL உடன் கூட்டான ஒரு மின்சார உற்பத்தி ஆலை உள்ளது.
ஏற்கனவே எனக்கு சேலத்தில் என் மச்சான் மலைமுழுங்கி SISCOL உடன் கூட்டான ஒரு மின்சார உற்பத்தி ஆலை உள்ளது.
சாலைதான் சரியாக இல்லை."

"என்ன சொல்கிறீர்கள்?!
சேலத்திலிருந்து சென்னைக்கு ஏற்கனவே இரண்டு பெரிய சாலைகளும் ஒரு சின்ன சாலையும் ஒரு ரயில்பாதையும் இருக்கிறதே!"

"சேலத்திலிருந்து சென்னை செல்லும் இரு சாலைகளும் திருவண்ணாமலை மற்றும்  அதை ஒட்டிய மலைகளைத் தொடாமல் விலகி சுற்றியவாறு செல்கின்றன.
என்னால் எனது ஆலையை அதிலொன்றில் இணைக்கவெல்லாம் முடியாது.
தனி சாலை வேண்டும்.
கோயம்புத்தூரிலிருந்து சேலம் வரை நேரான சாலை வருகிறதே அதை அப்படியே சென்னை வரை நேராக கொண்டுசெல்லவேண்டும்"

"போட்டுத்தருகிறேன். பொதுமக்கள் வசதிக்காக பசுமையான காடு வழியே நான்கு வழிச்சாலை போடுகிறோம் என்று பிரச்சாரம் செய்தால் போயிற்று"

"எனக்கு இங்கே மக்கள் ஆயுதம் தூக்குவார்களோ என்று பயமாக இருக்கிறது."

"அதை நான் போக்குகிறேன்.
எட்டுவழிச் சாலை போட்டு தருகிறேன்.
தீவிரவாதிகள் முளைத்தால் நீங்கள் பீரங்கிகளை கொண்டுவரலாம்.
அதுவும் காடுகளை அழித்தபடி செல்லும்.
இதிலேயே ஒன்றரை லட்சம் மரங்களை வெட்டிவிடுவோம்.
மீதி ஒன்றரை லட்ச மரங்களை நீங்கள் வெட்டிக்கொள்ளுங்கள்"

"சாலை போட எதுவும் பணம் வேண்டுமா?
என் அறக்கட்டளை மூலம் நானே போட்டுவிடவா?"

"வாழவைக்கும் ஜிண்டாலே!
ஏன் உங்களுக்கு வீண் சிரமம்.
இதோ பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கிவிடுகிறேன்.
சென்னைக்குதானே நேர்சாலை கேட்டீர்கள்?!
நான் நேரே சென்னை துறைமுகம் வரை சாலையை போடுகிறேன்.
நீங்கள் இந்நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு கப்பலில் அனுப்பலாம்"

"சரி மலைகளை மட்டும் தந்தால் எப்படி?
உட்கார்ந்து வெட்டியெடுக்க மலைகளைச் சுற்றியிருக்கும் நிலமும் வேண்டும்"

"சுற்றியிருக்கும் 51 கிராமங்களின் 2700 ஏக்கர் விளைநிலங்களை உங்களுக்கு தந்துவிடுகிறேன்"

"நிறைய தண்ணீர் தேவைப்படும்.
அப்படியே அதற்கும் ஏற்பாடு செய்"

"சாத்தனூர் அணை இருக்கிறதே!
விளைநிலமே இல்லை தண்ணீரை வைத்து என்ன செய்ய?!
நேரடியாக அணையிலேயே குழாய் போட்டு உங்கள் ஆலைக்கு தந்துவிடவா?
நீங்கள் உறிஞ்சியது போக மீதிதான் குடிநீர் விநியோகம் செல்லும்"

"ஏற்கனவே 14 கோடியில் 'நந்தன் கால்வாய் திட்டம்' என்ற பெயரில் இரண்டு மாவட்டங்களுக்கு குடிநீர் தரும் திட்டத்தை போட்டுள்ளாயே?!
மலையையும் அணையையும் எனக்கு தந்துவிட்டு அந்த 36 ஏரிகளுக்கு தண்ணீர் எப்படி கொண்டு செல்வாய்?!
மக்கள் கேட்கமாட்டார்களா?!"

"அந்த திட்டத்தை ஆரம்பித்து பாதியில் நிறுத்தி மீதி நிதியை தின்றுவிட்டால் போயிற்று"

"இரும்பு தொழிற்சாலை என்றாலே காற்றில் மாசு அதிகம் இருக்கும்.
6 கி.மீ அந்த பக்கம் இருக்கும் திருவண்ணாமலை கோயில் பாதிக்கப்படுமே?!
ஆன்மீகவாதிகள் எதிர்க்குரல் எழுப்புவார்களே!"

"ஆமாம், நாம் அழிக்கவுள்ள மலைகள் அனைத்துமே மூலிகைகள் நிறைந்தவை.
அதனாலேயே அங்கே கோயில்கட்டி அவ்வப்போது மக்கள் போய்வருமாறு அந்த காலத்து ஆட்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதை சமாளிக்க 'கடவுளே இல்லை', 'கோயில்களே தேவையில்லை', 'திருவண்ணாமலை தீபம் மூடநம்பிக்கை' என்று பிரச்சனை செய்ய கருப்புசட்டை இயக்கங்களை இறக்கிவிட்டால் போதும்.
மூலிகைகள் அழிந்தால் என்ன மெடிக்கலில் மாத்திரைதான் கிடைக்கிறதே!"

"கோயிலைப் பற்றி கவலைப்படும் இந்து அமைப்புகளை சமாளிக்கவேண்டுமே?!"

"என்ன ஜிண்டால் அவர்களே!
போட்டு வாங்குகிறீர்களா?!
நீங்கள் காங்கிரஸ் குடும்பமாக இருந்தாலும் இந்து மத கட்சிகள் மற்றும் அமைப்புகள் உங்கள் சட்டைப்பையில் இருப்பதாகக் கூறுகிறார்களே?!
இந்துமத கட்சிகள் தமிழகம் என்றாலே ஒதுங்கிக் கொள்வார்களே?!"

"சரி நான் அவர்களை கவனித்துக் கொள்கிறேன்.
மேட்டூர் அருகே உள்ள என் பங்காளி மலைமுழுங்கி LMW நிறுவனத்தின் ஆலையை நான் வாங்கிவிட்டேன்.
உன் அரசுக்கு சொந்தமான சேலம் உருக்காலையையும் எப்படியாவது வாங்கிவிடுவேன்.
காங்கிரஸ் போய் பிஜேபி வந்தாலும் சரி இது நடக்கும். சேலம் உருக்காலையின் 4000 ஏக்கர் நிலமும் அதனருகே உள்ள கஞ்சமலையும் என் வசமாகும் பொறுத்திருந்து பார்"

"என்ன ஆச்சரியம்?! காங்கிரஸ் கட்சிக்காரரான உங்களுக்கு பிஜேபியில் அவ்வளவு செல்வாக்கா?!"

"ஆம், இரண்டு கட்சிகளுமே பிச்சைக்காசை விட்டெறிந்தால் போதும் எனக்கு நாயாக வேலை செய்வார்கள்.
இன்னும் சில நாட்களில் சேலம் உருக்காலை நட்டத்தில் இயங்குவதாக பிரதமர் அலுவலகமே பொய்யாக அறிவிக்கும்.
பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் அந்த ஆலை தனியார் கைக்கு வரும்.
அதாவது அது அரசாங்க உருக்காலை எனக்கு சொந்தமாகும்.
அதேவேளையில் அதற்கு தீனி போட அருகிலுள்ள கஞ்சமலையும் எனக்கு சொந்தமாகவேண்டும்.
அதற்கு நீ உதவ வேண்டும்."

"அதற்கென்ன! இதற்காகத்தானே டிம்கோ என்பதை (Tamil Nadu Iron Ore Mining Corporation TIMCO) உருவாக்கியுள்ளேன்.
நிலத்தை கையகப்படுத்துவது கடன் பெற்று தருவது போன்ற தரகர் வேலைகளை செய்துதரத்தானே அது!"

" இதில் ஒரேயொரு பயம்!
என் மலைமுழுங்கி அண்ணன் வேதாந்தா போல பாஜக வுக்கு கமிசன் கொடுத்தது அது கோர்ட் வரை போய் நாறியதுபோல் ஆகிவிடக்கூடாது"

" அட நீங்கள் வேறு!
அவர் வெளிநாட்டில் கம்பெனி நிறுவி இந்நாட்டு கட்சிக்கு நிதி கொடுத்ததால் மாட்டிக்கொண்டார்.
நீங்கள் பிறப்பாலும் தொழிலாலும் ஹிந்தியர் ஆயிற்றே!"

"சரி கவுத்தி மலையை நான் வைத்துக் கொள்கிறேன்.
முதலில் 23 ஹெக்டேர் எழுதித் தாருங்கள்.
சிறிய அளவில் ஆரம்பிப்போம் பிறகு படிப்படியாக விரிவாக்கி விடலாம்.
அந்த பகுதியில் மேலும் சில மலைகள் உள்ளன.
எல்லாம் எனக்குத்தான்!"

"உங்களுக்கில்லாமல் வேறு யாருக்கு?!
நீங்கள் கூறியதுபோலவே செய்து 23 எக்டேரில் பிள்ளையார்சுழி போட்டுவிடலாம்"

"இதற்கெல்லாம் உன் கமிசன் எவ்வளவு என்று கூறு"

"10% தரமுடியுமா ஜிண்டால்ஜி!"

"இது அதிகம்!
இவ்வளவு அதிகம் கேட்டால் நான் தி.மு.க விடம் போய்விடுவேன்.
அவர்கள் என் மலைமுழுங்கி அண்ணன் வேதாந்தாவுக்கு இருப்பது போல எனக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
நான் முறைப்படி தமிழக அரசாங்கத்திற்கும் பங்கு வேறு ஒதுக்கவேண்டும்.
அரசின் கூட்டுடன் நடப்பதாக வெளியே காட்டிக்கொள்ளவேண்டும் அல்லவா?"

"அட என்ன நீங்கள் அரசாங்க பங்கு பற்றியெல்லாம் கவலை பட்டுக்கொண்டு.
எனக்கும் என் கட்சிக்கும் தரும் கமிசனை மட்டும் ஒதுக்குங்கள்.
நீங்கள் முறைப்படி  1% பங்கு மட்டும் டிம்கோவுக்கு ஒதுக்கினால் போதும்"

"என்ன அரசாங்கத்திற்கு வெறும் 1% போதுமா?! மீதி 99% பங்கு எனக்கே எனக்கா?!"

ஜிண்டால் சந்தோசத்தில் அங்கேயே மயங்கிவிழுந்தார்.

ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் சேலம் உருக்காலை ஊழியர்களும் கஞ்சமலை கௌத்தமலை அடிவாரத்து பாமர மக்களும் இன்றுவரை போராடி போராடி ஜிண்டாலை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.

Wednesday, 29 November 2017

பறிபோன செங்கோட்டை காடு

பறிபோன செங்கோட்டை காடு


 மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.

 அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்கவேண்டும்


 ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

 

 தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.

 

 ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.


 அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக்கொண்டனர்.


 இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக்கொண்டது.

(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க,

தமிழகத்தில் கால்பங்குகூட காடு இல்லை)

 

 பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள்  பறிபோனது ஆகும்.


 1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.


 அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.


 இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.


 மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும்போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.


 இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.


இதை நாம் இழந்தோம்.

(வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது)

Saturday, 25 February 2017

ஈஷா மையம் எடுத்த உயிர்கள்

ஈஷா மையம் எடுத்த உயிர்கள்

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையம் நடத்திவரும் காடு அழிப்பால் 2006 முதல் 2011 வரையிலான காலத்தில் மட்டும் 50 யானைகள் இறந்திருக்கின்றன.
(யானைகளின் மொத்த எண்ணிக்கை தோராயமாக 350)

2006 முதல் 2012 வரையிலான காலத்தில் யானைகள் வெறிவந்து மிதித்துக் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் 57.

இவர்கள் அனைவரும் பழங்குடிகள் மற்றும்  அப்பாவி பொதுமக்கள்.

ஏனென்றால் ஈஷா மையம் மிக பத்திரமாக மின்சார வேலிக்குள் ஏ.சி, டி.வி, சோபா, மது, மாது என அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக இருக்கிறது.

(தகவல்: சவுக்கு)

Wednesday, 22 February 2017

ஜக்கி ஒழிக்க ஒரே வழி

இங்கே ஒரு ராபின் ஹுட் பிறக்கவேண்டும்...

மீண்டும் ஒரு வீரப்பனார்...

ஜக்கி வாசுதேவ் பிறர்மகளை மொட்டையடித்து போதை கொடுத்து அடிமையாக்கி

சீராட்டி பாராட்டி வளர்த்த அவனது நவநாகரீக மகளைக் கடத்தி

அவன் பணத்தையெல்லாம் பிடுங்கவேண்டும்

அந்த ஜக்கி வாசுதேவ் காடழித்து கட்டிய ஆசிரமத்தில் நுழைந்து

அவனை ஜட்டியோடு அடித்து
கர்நாடகாவிற்கே திருப்பி விரட்டவேண்டும்.

அவன் ஆசிரமத்தை குண்டு வைத்து தகர்த்து

அவன் தன் முகத்தையே நகலெடுத்து கட்டிய சிவன் சிலையை உடைத்து தூள்தூளாக்கி

அந்த வந்தேறிப்பயல் தனக்காக திருப்பிக்கொண்ட காட்டு ஓடையை பழைய பாதையில் மீண்டும் திருப்பவேண்டும்.

பரிசாக தீவிரவாதப் பட்டமும் தேசதுரோக வழக்கும் அதன் முடிவாக தூக்கோ துப்பாக்கித் தோட்டாவோ கிடைக்கலாம்

ஆனால் பழங்குடிகளும் மண்ணின் மைந்தர் குடும்பங்களும்  யானைகளும் அதன் குட்டிகளும் அவனை என்றும் வாழ்த்தும்