Showing posts with label திருநெல்வேலி. Show all posts
Showing posts with label திருநெல்வேலி. Show all posts

Saturday, 24 August 2019

திருநெல்வேலி வரை தெலுங்கர்

திருநெல்வேலி வரை தெலுங்கர்

தெலுங்கரின் திட்டமிட்ட குடியேற்றம் ஆந்திரத்துக்கு அண்மையில் உள்ள எல்லை மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம் வரை நடந்துவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 1881 லேயே அதன் மக்கட்தொகையில் 15% வந்தேறிகள்.
அவர்களில் தெலுங்கர் 8.6% இருந்துள்ளனர்.
(இவர்களில் பெரும்பாலோர் கம்மா ஆவர்).

இது அம்மாவடத்தில் தமிழ்ச் சாதிகளில் எந்தவொரு பெரிய சாதிக்கும் சளைக்காத எண்ணிக்கை ஆகும்.
அன்றைய நிலையில் திருநெல்வேலியில் தமிழ்ச் சாதியினர்
சாணார் 13.7%
பள்ளர் 11.1%
மறவர் 9.1%
வேளாளர் 8.2%
பறையர் 5.6%
இடையர் 5.3%
கம்மாளர் 4%
என்றவாறு இருந்தனர்.

வடக்கில் கோவை மாவட்டமே தெலுங்கர் குடியேற்றத்திற்கு அதிகம் இலக்காகி உள்ளது.
1921 லேயே மக்கட்தொகையில் 15% தெலுங்கர் இருந்துள்ளனர்.
(இவர்களில் மிகப் பெரும்பாலோர் சக்கிலியர் ஆவர்).

இதற்கு இணையானது சென்னை.
1961 நிலவரப்படி சென்னை மக்கட்தொகையில் 14.1% தெலுங்கர் ஆவர்.

1965 வாக்கில் இந்தியாவில் தெலுங்கு இனத்தின் 18% மக்கள் (67 லட்சம்) ஆந்திராவுக்கு வெளியே வாழ்ந்துவந்தனர்.
இதில் ஏறத்தாழ 9% (34 லட்சம்) மக்கள் தமிழகத்தில் குடியேறியுள்ளனர்.

அதாவது சுருக்கமாகக் கூறினால் தெலுங்கரில் பத்தில் ஒருவர் தமிழகத்தில் இருக்கிறார்.

இதன் பிறகுதான் திராவிடம் ஆட்சிக்கு வருகிறது!

தமிழகத்தில் தெலுங்கு வந்தேறிகளின் குடியேற்றமும் பொற்காலமும் உச்சத்திற்கு சென்றது.

என்றால் தற்போதைய நிலையை யூகியுங்கள்!

(புள்ளிவிபரங்கள் அறிஞர் குணா எழுதிய "விழுதுகள்" நூலில் இருந்து எடுக்கபெற்றன)

வரைபடம்
https://vaettoli.wordpress.com/2019/08/24/திருநெல்வேலி-வரை-தெலுங்க/

Wednesday, 19 December 2018

கேரளச் சுற்றுலா தமிழகத்தினுள்

கேரளச் சுற்றுலா தமிழகத்தினுள்

பல அரிய உயிரினங்கள் வாழ்கின்ற,
UNESCO ஆல் பாதுகாக்கப்பட்ட பகுதியென அறிவிக்கப்பட்ட,
தமிழக வனத்துறை வசமுள்ள,
பொதிகை மலையில் மையப் பகுதியில் கேரளா காட்டுவழி நடைபயண சுற்றுலா நடத்தி காசு பார்க்கிறது.

அதுவும் எல்லை தாண்டி தமிழகத்தினுள்.

நடுக்காட்டில் செம்மூஞ்சி என்கிற இடம் வரை நடத்தினர்.

பிறகு பாண்டிப்பத்து என்கிற இடம் வரை இன்னொரு கிளை நீண்டது.

தற்போது கேரள சுற்றுலாவின் கரங்கள் காரையாறு அணைவரை நீள்கின்றன.

ஆம் முழு காட்டையும் தாண்டி சிறப்பு மண்டலமான "முண்டந்துறை புலிகள் காப்பகம்" வழியாக காரையார் அணை வரை வந்துவிட்டது.

இதற்கென தமிழக அரசிடம் அனுமதி பெற்றதாக தெரியவில்லை.

முல்லைப்பெரியாறு அணை மற்றும் மூணாறு பகுதிகளில் அதாவது எல்லைப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தமிழக படகுகளை இயக்கவிடாமல் அடாவடி செய்து நமது சுற்றுலா வருமானத்தில் மண்ணைப் போடும் மலையாளிகள் தமிழர்களைக் கொள்ளையடிப்பதில் சிறு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை.

தமது மாநில காடுகளை அழித்து அதனால் வெள்ளத்தை வரவைத்துக்கொண்ட மலையாளி நமது காட்டிலும் உலாவ ஆரம்பித்துவிட்டான்.

இப்போது இருக்கும் காட்டுவழி
பிறகு ஒற்றையடிப்பாதை ஆகும்
பிறகு இரு சக்கர வாகனம் வரும்.
பிறகு மகிழுந்தும் பிறகு பேருந்தும் வரத்தொடங்கும்.

இவ்வாறு நமது காட்டை இரண்டாகப் பிழந்து போடவுள்ளனர்.

வானத்திலிருந்து குதித்தது போல காரையார் அணையிலிருந்து திடீரென இறங்கி வரும் மனிதர்கள் யார் என்று பொதுமக்கள் வேண்டுமானால் குழம்பலாம்.

ஆனால் தமிழக வனத்துறை கூட தடுப்பது இல்லையே?!

இவர்களுக்கும் கேரளா எலும்புத்துண்டுகளை வீசி எறிகிறதா?!

Sunday, 9 July 2017

கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர்

கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர்

இந்துத்துவ சார்புடைய ஒரு கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி
----------------------
அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி
June 27, 2017
- ஆர். கோபிநாத்

மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன் முதலாம் பராந்தகன் என்னும் சோழ மன்னன் காலத்தவன்.
இவன் காலம் பொ.பி. 10 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி பொ.பி.920 வரை ஆண்டதாக சொல்கிறார்கள்.
இவன் கல்வெட்டுகள் தான் சடைய மாறன் என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.
இன்றைக்கிருந்து 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திருமூலநாதர் கோயிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது.
(ஊர்மக்கள் சின்னக்கோவில் என்று அழைப்பர்)
அந்த கல்வெட்டு படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
படம் தெளிவாக இல்லாததால் அதை நானே இங்கு தருகிறேன்.

முள்ளிநாட்டு இளங்கோய்க்குடிக்கு மேற்கே புற்றும் தெற்றுமாக இருந்த ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அந்த பாழ் நிலத்தைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்.
பூவன் பறையனேன் என்று கல்வெட்டில் பெயரும் உள்ளது.

அரையன் அணுக்கர் என்பவர் அரசனின் மெய்க்காவல் படை வீரர்கள் அதாவது அந்தரங்க காவலர்கள்.
அரசனோடு அரண்மனை உட்பட அவன் போகும் இடம் அனைத்திலும் இருந்து அவனை காக்கும் பொறுப்பை ஏற்றவர்கள்.
இத்தகைய உயர்ந்த இடத்தில் இருப்பவன் இந்த பூவன் பறையன்.
இவன் தன் பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதை தானமாக கோயிலுக்கு அளித்து, அதை கல்லில் வெட்டிக்கொள்ளும் உரிமையும் பெற்றுள்ளான்.
ஆக பறையர் சாதியினர் குறைந்தது 10 ஆம் நூற்றாண்டு வரை சமூகத்தில் நல்ல நிலையில் தான் இருந்துள்ளனர்..

தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்.
வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும், 18 வகை இசை கருவிகளை வாசித்துக்கொள்ளவும் உரிமை பெற்றவர்களாய் இருந்தனர்.

இப்படி இருந்தவர்கள் தான் ஏதோ ஒரு கால மாற்றத்தில் சமூகத்தில் தாழ்வு நிலையை சந்தித்துள்ளனர்.  தமிழகத்தின் மற்றொரு முக்கிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக பள்ளர்களைக் குறித்தும் இதே போன்ற வரலாற்றுச் சான்றுகளைக் காண்பிக்க முடியும்.
-------------------

'தமிழ் ஹிந்து' இணையத்தில் உள்ள இக்கட்டுரை மேற்கொண்டு இசுலாமிய ஆட்சியையும் பிரிட்டிஷ் ஆட்சியையும் குற்றம் சாட்டுகிறது.
  எனவே பறையர் தொடர்பாக நமக்குத் தேவையான பகுதியை மட்டும் இங்கே தந்துள்ளேன்.

கட்டுரையில் 'ஏதோ ஒரு கால மாற்றத்தில்' என்று மழுப்புவது தெலுங்கர் ஆட்சி காலத்தில் நடந்த மாற்றத்தைத்தான் (அவர்கள் ஹிந்து என்பதால்!)

// பறையர் சாதியினர் குறைந்தது 10 ஆம் நூற்றாண்டு வரை சமூகத்தில் நல்ல நிலையில் தான் இருந்துள்ளனர்//

அதாவது கி.பி.1000 வரை நல்லநிலையில் பறையர்கள் இருந்தனர்.
கிபி.1070 ல் இராசேந்திர சோழனின் மகள்வழிப் பேரனான சாளுக்கிய இளவரசன் சோழர் அரியணையைக் கைப்பற்றினான்.
அதாவது பாதி கன்னடன்.
அநாபய சாளுக்கியன் என்ற பெயரை குலோத்துங்க சோழன் என்று மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தான்.

இதன்பிறகு தமிழகத்தின் வீழ்ச்சி தொடங்கியது.
பாண்டியரும், சேரரும், பல சிற்றரசர்களும் கலகம் செய்யத் தொடங்கினர்.
கன்னட தெலுங்கு அரசர்களும் தமிழகத்தில் நுழைந்தனர்.
இருநூறு ஆண்டுகள் அதாவது கி.பி 1280 வரை இந்த குழப்பநிலை நீடித்தது.

அதன்பிறகு பாண்டியர் பேரரசு அத்தனை வேற்றினத்தவரையும் அகற்றிவிட்டு தமிழகம் மற்றும் ஈழம் வரை பரவினாலும் அது 100 ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை.
பாண்டிய வாரிசுரிமைப் போர்களால் அது வலுவிழந்தது.
இந்த நேரத்தில் கி.பி.1330 ல் மங்கோலிய- துருக்கிய வம்சாவழி டெல்லி சுல்தான்களால் வட தமிழகம் கைப்பற்றப்பட்டது.
அதன்பிறகு தெலுங்கு அரசர்கள் நுழைந்தனர்.
வடதமிழகம் வேற்றின ஆட்சியிலே இருந்து பிறகு மீளவேயில்லை.

// தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்//

கிபி 1350 பிறகு தென் தமிழகத்தில் பரவியது விஜயநகர பேரரசு.
தெற்கே பாண்டியர்கள் தெலுங்கருக்கு அடங்கிய சிற்றரசுகளாக இருந்ததால் ஓரளவு தமிழர்கள் நிலை இருந்தது.
பாண்டியர் புகழ் மங்கி நலிவடைந்து கிபி 1600களில் பாண்டியர் அரசு மறைந்தது.
அதனால் 17ம் நூற்றாண்டில் தெற்கேயும் பறையர்கள் தெற்கேயும் வீழ்ந்தனர்.

சங்ககாலத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.
ஆனால் மிக மோசமான அளவில் இருந்ததில்லை.
தமிழர் ஆட்சியில் சாதிய ஒடுக்குமுறைகள் இருந்ததேயில்லை.

தமிழகத்தில் வேற்றின அரசுகளே சாதிய ஏற்றத்தாழ்வுக்கு அடித்தளமிட்டன.

முதலில் விஜயநகரப் பேரரசு அதன் பிறகு ஆங்கிலேயர் என நிலவுடைமைச் சமூகம் உருவாக்கப்பட்டு உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்டு உற்பத்தி முழுக்க சுரண்டப்பட்டு சமூகத்தில் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதன்பிறகு ஆங்கிலேயரும் நிலவுடைமை சமூகத்தை மேலும் வளர்த்துவிட்டு மக்களை ஒடுக்கி சுரண்டலை இன்னும் தீவிரமாக செய்தனர்.

தற்போது ஹிந்திய அரசு இன்னும் கொடூரமாக தனது அரசாங்க கட்டமைப்பின் மூலம் விவசாயத்தை இல்லாதொழித்து மண்ணுக்கு அடியிலுள்ள வளங்களையும் சுரண்டி விற்கத் தொடங்கிவிட்டது.

Saturday, 17 June 2017

ஆஷ்துரைக்கும் வீரவணக்கம் வைக்கும் ஆட்டுமந்தை கூட்டமா நாம்?!

ஆஷ்துரைக்கும் வீரவணக்கம் வைக்கும் ஆட்டுமந்தை கூட்டமா நாம்?!

வ.உ.சி நடத்திய மாபெரும் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கி
அவரை சிறையில் தள்ளி
அவரது கப்பல் கம்பெனியை இல்லாமல் செய்து
அந்த செம்மலை சவுக்கால் அடித்து செக்கிழுத்த வைத்த ஆஷ் துரை என்ற வெள்ளைக்காரனுக்கு

தமது அடிவருடவே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட   திராவிட வந்தேறிகள்தான் வீர(?)வணக்கம் வைக்கவேண்டும்.

வ.உ.சி ஏற்படுத்திய திருநெல்வேலி எழுச்சியை அடக்கி
நெல்லை மக்களை படாதபாடு படுத்திய ஆஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன்,
பிறப்பால் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்திற்காக சாதிவெறியோடு வெறுக்கும் மந்தை கூட்டமாக தமிழர்கள் மாறவேண்டாம்.

இந்தியா மறந்திருக்கலாம்.
தமிழகம் மறந்திருக்கலாம்.
ஆனால் நெல்லை மக்கள் அத்தனை நன்றி கெட்டவர்கள் இல்லை.

செங்கோட்டை மண்ணின் மைந்தன் வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொன்றுவிட்டு தானும் இறந்தபோது அவருக்கு வெறும் 25 வயது.
அரசாங்க வேலையை உதறிவிட்டு நிறைமாத சூலியான தனது மனைவி பொன்னம்மாளை அப்படியே விட்டுவிட்டு
புதுச்சேரி போய் பாரதிதாசனிடம் துப்பாக்கி வாங்கி வந்து ஆஷ் துரையை சுட்டுக்கொன்று தனது உயிரையும் விட்டவன்தான் வாஞ்சி.

அவரது உடல்கூட குடும்பத்தினரிடம் கொடுக்கப்படவில்லை.
என்ன செய்தார்கள் என்று இன்றுவரை தெரியாது.

அதனால் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் போய்விட்டு திரும்பிவந்த பொன்னம்மாள் தன் கணவர் இறந்ததை கடைசிவரை நம்பவில்லை.

இறக்கும்வரை சுமங்கலியாகவே இருந்து இறந்தார்.
இன்றும் செங்கோட்டை அக்கிரகாரத்தில் சுமங்கலி மாமி வீடு எது என்று கேட்டால் சொல்வார்கள்.

ஒருவேளை வாஞ்சியின் குறி தவறினால் அடுத்ததாக இன்னொரு துப்பாக்கியுடன் நின்றவர் மாடசாமிப்பிள்ளை.
இவரை கடல்வழியாக தப்பிக்கவைத்தார் பாரதிதாசன்.
அவர் அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

இதெல்லாம் நெஞ்சைத் தொடாது பார்ப்பனருக்கு எதிரான சாதிவெறி கொண்ட ஆட்டுமந்தைக் கூட்டத்திற்கு.

ஆனால் 'அக்கிரகாரத்தின் வழியாக தாழ்த்தப்பட்ட கர்ப்பிணியை அழைத்துச் சென்றதால் பார்ப்பான் கோபமாகி போட்டுத் தள்ளிவிட்டான்'
'குற்றாலம் அருவி தீண்டாமையை ஒழித்த ஆஷை மனுவாதிகள் கொன்றுவிட்டனர்' என்று திராவிடம் எழுதிய கற்பனை கதை மட்டும் நெஞ்சை வருடும்.

அதெப்படி சேரிக்கு அக்கிரகாரம் தவிர்த்த வேறு வழியே இல்லாமல் இருக்கும்?
அதெப்படி திருவிதாங்கூர் கட்டுப்பாட்டில் இருந்த குற்றாலம் அருவியில் திருநெல்வேலி மாவட்ட உத்தரவு செல்லும்?

எதையும் யோசிக்காதவர்கள் :O

நன்றிகெட்டவர்கள் >.<

Monday, 15 May 2017

தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையில் காயிதே மில்லத்

பெருமகனார் காயிதே மில்லத் 24.12.1955 அன்று மக்களவையில் ஆற்றிய உரை,

"நான் ஒரு தமிழன்.
எனது தாய்மொழி தமிழ்.
தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை.
அதேபோல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை.

தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை.
அப்பகுதியில் தமிழ்மொழி பேசுபவர்களே பெரும்பான்மை.

ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது.
தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும்,
வந்துபோகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள்.
கடந்த தேர்தலின்போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்துபோகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி.
தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது.
தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள்.
எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்.
அதுவே நியாயம்"

இத்தனைக்கும் அவர் அப்போது 'அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்' தலைவர்.
அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இசுலாமியர்களின் தலைவர்.
 
இதையெல்லாம் மீறி தன் இனத்திற்காகவும் மொழிக்காகவும் குரல்கொடுத்த தூய தமிழன்தான் காயிதே மில்லத் எனும் முகமது இஸ்மாயில்.

அதேபோல "இந்தி தேசியமொழி என்றால் காகத்தை தேசிய பறவையாக அறிவிக்கவேண்டியதுதானே?" என்று கூறியவர் அண்ணாதுரை கிடையாது காயிதே மில்லத் அவர்கள்தான்.

Wednesday, 13 January 2016

குறிஞ்சாக்குளம் அவலம் (காணொளி)

https://m.facebook.com/story.php?story_fbid=649200845183572&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.649200845183572%3Atl_objid.649200845183572%3Athid.100002809860739%3A306061129499414%3A54%3A0%3A1454313599%3A4864061701390205874

(முழு காணொளி
குறிஞ்சாக்குளம் ஒரு இனத்தின் வலி
https://m.youtube.com/watch?v=7pYZTlRx
l3I&feature=share )

Monday, 11 January 2016

குருதியில் நனைந்த குமரி -11

குருதியில் நனைந்த குமரி -11

1954 ஆகஸ்ட் 14
மாலை 7 மணி

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் பி.டி.தாணுப்பிள்ளையும் ரசாக்கும் புறப்பட்டு அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.கோசல்ராம் என்பவரை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தனர்.

"கேட்கவே வருத்தமாயுள்ளது ஐயா,
மனம் பொறுக்கவில்லை.
ஆமாம் எத்தனை பேர் இறந்தனர் உறுதிபடத் தெரிந்ததா?"

"உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் 30 பேர் வரை இருக்கலாம்"

"பதினோரு பேர் என்றல்லவா கேள்விப்பட்டேன்"

"பதினோரு பேரின் அடையாளம் தெரிந்துள்ளது.
காணாமல் போனோர் பலர்.
எத்தனை பேர் மரணமடைந்தனர் என்பது இனிதான் தெரியும்.
ஆறாண்டு முன்பே இருவரை சுட்டுக் கொன்றுவிட்டனர்.
நேற்றுதான் தகவல் வந்தது சிறையில் பழனி மாணிக்கம், திருவலங்காடு கோவிந்தசாமி என்ற இரு தமிழர்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
பல கொலைகள் மறைக்கப்பட்டுள்ளன.
அவை காணாமல் போனோர் பட்டியலில்தான் சேர்க்கப்படும்"

"இந்த தகவல்கள் எப்படி கிடைக்கின்றன?"

"அரசு பணிகளில் அடிமட்ட ஊழியர்களாக சில தமிழர்கள் உண்டு.
அவர்கள் உளவு பார்த்து கூறுவார்கள்.
சில தாழ்த்தப்பட்ட மலையாளிகள் உண்டு. அவர்கள் ஒரு காலத்தில் தமிழர்கள்தான்.
அவர்கள் உயர்சாதி மலையாளிகளை வெறுப்பவர்கள்.
அவர்களும் ஓரளவு உதவுவார்கள்.
ஆனால் ஆதரங்கள் எதையும் திரட்டமுடியவில்லை.
முதலில் பட்டம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து அடக்குமுறையை களையவேண்டும்.
அதன்பிறகு விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டி பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவேண்டும்"

"உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். நான் செய்ய தயாராக இருக்கிறேன்"

"இதற்கு காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும் என்று தோன்றுகிறதா தாணு அவர்களே?"

"நிச்சயம் கிடைக்கும்"

"நேரு சொன்னதையும் மீறி நாங்கள் போராட்டம் நடத்தியதால் அவர் உதவி கிடைக்கும் என்று தோன்றவில்லை"

"காமராசரிடம் உதவி கேட்கலாமே?!"

"அவர் எங்கள் உடன்பிறந்தவர் போன்றவர்தான்.
ஆனால் அவருக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியம்.
காங்கிரஸை நாங்கள் படுதோல்வி அடையச் செய்ததில் இருந்து அவர் எங்களை வெறுக்கிறார்.
காமராசர் உம் என்று ஒரு வார்த்தை சொன்னால் எங்கள் குறிக்கோள் மறுநொடியில் நிறைவேறிவிடாதா?"

"ஆமாம். நீங்கள் காங்கிரஸின் தமிழ்நாடு கிளையில் சேரக் கேட்டபோதே அவர் சம்மதித்திருக்க வேண்டும்.
நீங்கள் தனிக் கட்சி தொடங்கியிருக்க வேண்டியது வந்திருக்காது"

"நாங்கள் குமரி மாவட்டம் அடைந்தபிறகு தமிழக காங்கிரசில்தான் சேர்வோம்"

"ஏன் திராவிடக் கட்சியில் சேரப்போவதில்லையா?"

"அதிலே அனைவரும் தெலுங்கர் என்று பேசிக்கொள்கின்றனர்.
திராவிட கட்சிகள் தென்னிந்திய மக்கள் அனைவருக்குமானது.
தமிழருக்கான முக்கியத்துவம் அதன் கொள்கைகளில் இல்லை"

"காங்கிரஸ் மட்டும் தமிழர் முக்கியத்துவம் கொடுக்குமா"

"கொடுக்காதுதான் ஆனால் திராவிடத்தை விட அதுமேல்.
பலதரப்பட்ட இனங்கள் ஒன்றிணைவதால் ஓரளவு இனவழி முக்கியத்துவம் கிடைக்கும்.
அதன் தலைவர்கள் தமிழர்கள்.
எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று தோன்றுகிறது"

"காமராசரை ஒருமுறை சந்தித்து பேசித்தான் பாருங்களேன்"

"அவர் ரொம்ப நல்லவர்.
ஆனால் அதுதான் பிரச்சனையே.
அவரைச் சொல்லிக் குற்றமில்லை.
இந்திய மாநிலங்களில் மக்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து இருக்கவேண்டும், இனங்கள் ஒன்றுபட்டு ஒரே இந்திய இனமாக மாறவேண்டும் என்று நினைப்பவர்.
பெற்ற தாய்க்கு கூட சலுகைகள் எதுவும் செய்துதருவதில்லை.
நல்லபெயர் கெட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்.
எங்களுக்கு உதவினால் இனவாதி என்றோ சாதியவாதி என்றோ பெயர் வந்துவிடும் என்று அஞ்சுகிறார்.
அவரது நோக்கங்கள் மிக உயர்ந்தவை.
ஏடுகளில் எழுதினால் சிறப்பாயிருக்கும்.
ஆனால் நடைமுறையில் அது எதிர்மறைத் தாக்கத்தைதான் உருவாக்குகிறது"

"அவர்தானே பதவியில் இருக்கிறார்"

"அவரைப் பார்க்கத்தான் வேண்டும்.
நேசமணி ஐயாவின் கடிதத்தைக் கொடுக்கவேண்டும்.
அவர் உதவுவார் என்றால் நான் டெல்லிவரை போகவேண்டிய அவசியமிருக்காது.
ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை"

"இப்படியே போனால் காங்கிரசு தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்படத்தான் போகிறது.
அதன்பிறகு காமராசரை இந்தியர்கள் மறந்துவிடுவார்கள் என்று அடித்துச்சொல்லலாம்.
ஏதேது காங்கிரசு இன்னும் 20 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காது என்று முத்துராமலிங்கத்தேவர் கூறவது நடந்துவிடுமோ?"

"ஆம். அவரையும் சந்திக்கவேண்டும்.
தொகுதிக்கே போகாமல் வெல்வாராமே?!
காங்கிரஸ் உதவவில்லை என்றால் அவரிடம்தான் போகவேண்டும்"

"அவர் கட்டாயம் உதவுவார்"

"நாம் சந்திக்கப்போகும் கோசல்ராம் தமிழர் போல் தெரியவில்லையே"

"ஆமாம். இவர் தமிழர் கிடையாது.
திருநெல்வேலியில் எல்லாமே தெலுங்கர்கள்தான் குறிப்பாக பெரிய ஜமீன்தார்களாக இருக்கும் ரெட்டியார்கள்.
இவர் தெலுங்கு கலிங்க குலத்தவர்.
நீங்கள் பிரச்சனையை மட்டும் எடுத்துக் கூறுங்கள்.
மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்"
-----------------------------------------
இருவரும் கோசல்ராமைச் சந்தித்து பிரச்சனையை விளக்கிக் கூறினர்.

"கவலைப்படாதீர்கள் காங்கிரஸ் தலைவரிடம் இது பற்றி பேசுகிறோம்"

"ஐயா விரைவாக முடிவெடுத்தால் நலமாக இருக்கும்.
அங்கே மக்கள் படாதபாடு படுகிறார்கள்.
அதனால்தான் வந்தை இறங்கிய உடனேயே இரவென்றும் பார்க்காமல் கிளம்பிவந்தேன்"

"நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?"

"நீங்கள் அங்கே நேரில் செல்லவேண்டும்"

கோசல்ராம் சிறிது தயங்கினார்.

தாணுப்பிள்ளை உடனடியாக,
"நான் நேரில் செல்கிறேன்.
நீங்கள் காங்கிரஸ் சார்பாக பார்வையிட வருவதாக அறிவித்தால் போதும்.
அங்கே அடக்குமுறை குறையும்"

கோசல்ராம் திருநெல்வேலி எம்.எல்.ஏ சங்கர்(ரெட்டியார்) என்பவரைத் தொலைபேசியில் அழைத்தார்.
இருவரும் தெலுங்கில் பேசிக்கொண்டனர்.

"அவர்களிடம் ஆதரவளிப்பதாகக் கூறுங்கள்.
அகதிகள் கூடிக்கொண்டே போகிறார்கள்.
நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால் திருநெல்வேலி மக்களிடம் வெறுப்பைச் சம்பாதிக்கவேண்டும்"

"மலையாளிகள் எதிர்ப்பார்களே"

"அவர்கள் என்ன நமக்கு வேண்டியவர்களா?
எதிர்த்தால் எதிர்க்கட்டும்"

"என்ன இப்படி கூறிவிட்டீர்கள்?
அவர்களை பகைத்துக்கொள்வது நேருவையே பகைத்துக்கொள்வதாகுமே?"

"இப்போதைக்கு அவர்கள் கேட்கும் ஆதரவை வழங்குங்கள்.
பகுதிகளைப் பிரிக்கும்போது மலையாளிகளுடன் இணக்கமாகப் போய்விடலாம்"

பேசிவிட்டு கோசல்ராம் வந்தார்.

"சரி தாணு அவர்களே,
நாம் மூன்றுபேர் ஒரு குழுவாக போய் நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம்"

"நல்லது ஐயா நன்றி"
---------------------------------------
"தாணு அவர்களே, நான் நாளையே டில்லி கிளம்பவேண்டும்.
பயணச்சீட்டு ஏற்பாடு செய்யவேண்டும்"

"அதைச் செய்துவிடலாம்.
ரசாக் அவர்களே ஒரு வேண்டுகோள்"

"என்ன?"

"நானும் வரலாமா?"

"ஐயா உங்களுக்கு நேரமுண்டா?
10,15 நாட்கள் ஆகும்.
பலரை சந்திக்கவேண்டும்"

"ஓய்வுகூட எடுக்காமல் நீங்கள் செயல்படுகிறீர்கள்.
நான் கூட இருந்து என்னால் முடிந்த உதவி செய்கிறேனே?!"

"சரி ஐயா, தங்களின் ஆலோசனையும் உதவியும் தேவைதான்"

"யாரையெல்லாம் சந்திக்க திட்டமிட்டுள்ளீர்கள்?"

"திட்டமெல்லாம் போடவில்லை இனிதான் போடவேண்டும்"

"சரி நீங்கள் சென்னை புறப்படுங்கள்.
நான் இப்போதே கிளம்பினால் கோசல்ராம் நேரில் சென்று பார்வையிடுவதில் அக்கறைகாட்ட மாட்டார்.
காங்கிரஸ் குழு அங்கே செல்வதை உடனடியாகச் செய்துவிட்டு அடுத்த நொடி உங்களுடன் வந்து இணைகிறேன்"

"சரி ஐயா, உங்கள் இனப்பாசம் மெய்சிலிர்க்கவைக்கிறது.
நெல்லை மண்ணின் மைந்தர்கள் செய்யும் உதவியை குமரித் தமிழர்கள் நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்"

(தொடரும்)
-----------------------------------
குருதியில் நனைந்த குமரி -10
https://m.facebook.com/photo.php?fbid=647412802029043&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56