Showing posts with label மக்கட்தொகை கணக்கீடு. Show all posts
Showing posts with label மக்கட்தொகை கணக்கீடு. Show all posts

Friday, 31 January 2020

பெங்களூர் எங்களூர் - 2










பெங்களூர் எங்களூர் -2

 பெங்களூர் நகரை நிர்மாணித்தவர் கேம்பே கவுடா (1526 - 1574) என்பவர்.

 இவர் உண்மையில் வன்னியக் கவுண்டர் ஆவார்.

 கன்னடருக்கு தமிழர் என்று சொல்லவராமல் திகிளர் என்றுதான் கூறுவார்கள்.
 கேம்பே கவுடா ஒரு திகிளப் பள்ளி என்று குறிக்கப்படுகிறார்.

 இவர் பூர்வீகம் காஞ்சிபுரம்.
அங்கிருந்து 'முரசு ஒக்கல்' எனும் குடியினர் கன்னடநாட்டிற்கு போய் குடியமர்ந்தனர்.
 இவர்கள் இன்று முரசு ஒக்கலிகர் என்று அறியப்படுகின்றனர்.
 இவர்களின் குலதெய்வம் காஞ்சி காமாட்சி.

 மேலும் ஒரு சான்று உள்ளது.
கேம்பே கவுடா வம்சாவழியான மும்முடி தம்மபூப்பா என்பவர் "ராஜேந்திர சோழ சரித்தா" எனும் நூல் எழுதியுள்ளார்.
 [Mysore gazetteer, Vol 5, page 45, 1930.]

 தென் கர்நாடகத்தின் ஆதிகுடிகளான தமிழர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழை மறந்துவிட்டனர்.
 இவர்கள் திகிளர் என்றே இப்போது அழைக்கபடுகின்றனர்.
 பெங்களூரில் கொண்டாடப்படும் பச்சைக் கரகத் திருவிழா இவர்கள் நடத்துவதே ஆகும்.

 கைகளில் வாளேந்தி "பவளமலை எங்கள் மலைநாடே!" என்று தமிழில் பாடியவாறே பச்சைக் கரகத்தை தலையில் ஏந்துவர்.

 1930 இல் பெங்களூர் மாவட்ட மக்கட்தொகை 3,07,124 ஆகும்.
 இதில் திகிளர் 31,644 பேர்.

 (பெங்களூர் எங்களூர் -1 இல் உள்ள வரைபடத்தை ஒருமுறை பார்க்கவும்)

 1799 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு ஆங்கிலேயர் கைக்கு பெங்களூர் வந்தது முதல் 1947 வரை மைசூர் அரசுக்கும் இந்த பெங்களூர் மைய நகருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 மைசூர் அரச அதிகாரம் புறநகர் பகுதியான பேட்டை வரை மட்டுமே.
 மற்றபடி பெங்களூர் சென்னை மாகாணத்தின் கீழ்ஆங்கிலேயரின் நேரடி நிர்வாகத்தில் இருந்தது.

 ஆம். 1809 இல் ஆங்கிலேயர்களது படைமுகாமாக பெங்களூர் தண்டு பகுதி (cantonment) இருந்தது.

 1815 இல் மன்னர் எழுத்துப் பூர்வமாக இதை ஆங்கிலேய தூதமைச்சருக்கு தனிச் சொத்தாகக் கொடுத்து வரிவசூலிலும் தலையிட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார் (release deed).

 அவ்வாறு மைசூர் மன்னர் கொடுத்தது அன்று 22 ஊர்களாக இருந்தது.
 அவை
அலசூர்,
ஆடுகோடி,
செல்லகட்டா,
தொம்மளூர்,
உப்பாரப்பள்ளி,
குப்பசந்திரா,
மாவள்ளி,
குறமங்கலம்,
நீலசந்திரா,
பேடரள்ளி,
சொன்னேனள்ளி
ஆகியனவாகும்.

 1881 இல் பெங்களூர் கோட்டையை மட்டும் ஆங்கிலேயர் மன்னருக்கு கொடுத்தனர்.
 இதே ஆண்டில் cantonment என்று அழைக்கப்பட்டதை மாற்றி civil and military என்று பெயர் மாற்றினர்.

 1906 ஆம் ஆண்டு தற்போது "இந்திய அறிவியற்கூடம் (Indian institute of science)" இருக்கும் நிலமும் சேர்க்கப்பட்டு ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிப்பகுதி பரப்பளவு 13.54 சதுரக்கல் (சதுரமைல்) என விரிந்தது.

 ஆங்கிலேயர் தமது நிர்வாகப் பகுதியை ஆறு பிரிவுகளாக பகுத்திருந்தனர்.
அவை
1.அலசூர்
2.தென்பகுதி
3.கிழக்கு பொது அங்காடி (east general bazaar)
4.மேற்கு பொது அங்காடி (west general bazaar)
5.கிளீவ்லன்ட் நகர்
6. மேட்டுத்திடல் (high ground)

 அதாவது இன்றைய பெங்களூரின்
வடக்கே பாரதி நகர்,
நடுவில் சிவன்செட்டி வட்டம்,
தெற்கே நீலசந்திரா மற்றும் ஆடுகோடி
கிழக்கே அலசூர் உட்பட்ட நிலப்பரப்பு.

 இதில் தற்போதைய
தொம்மளூர்,
கப்பன் பூங்கா,
தூதமைச்சரக (residency) சாலை,
 தலைமை அஞ்சலகம்,
சூளை,
ரிச்மண்ட் நகர்,
ரசல் அங்காடி,
அணிவகுப்பு திடல் (parade ground),
 தூய யோவான் குன்று,
 கிளீவ்லேண்ட் நகர்,
காக்ஸ் நகர்,
புகையிலைத் தொழிலகம்,
ஃபிரேசர் நகர் (பாப்பிரெட்டி பாளையம்),
பிளாக் பள்ளி,
பெங்களூர் கிழக்கு (Bangalore east),
ரிச்சர்ட் நகர்
முதலியன அடங்கும்.

 மைசூர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பேட்டை பகுதி 11 சதுரக்கல் பரப்பளவு மட்டுமே இருந்தது.
 இதில் கோட்டை, சிக்கபேட்டை, தொட்டபேட்டை, சாமராஜப் பேட்டை, சங்கரபுரம், பசவன்குடி, சேசாத்திரிபுரம், மல்லேஸ்வரம், அரண்மனை ஆகியன இருந்தன.

 1947 வரை தண்டுப் பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் இடையில் 6 சுங்கச்சாவடிகள் இருந்தன.
 அவை இன்றுள்ள
கண்டீரவா விளையாட்டரங்கம் எதிரிலும்
 ஓசூர் சாலையில் உள்ள கிறித்துவர் கல்லறைக்கு அருகிலும்
ராமநாரயண் செல்லாராம் கல்லூரி மூலையிலும்
 பழைய சென்னை சாலையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை பக்கத்திலும்
 கன்னிங்காம் சாலையிலும்
 தொம்மளூரிலும்
தலைமை அஞ்சலகம் அருகிலும்
 இருந்தன.

  1948 வரை தண்டு பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் தனித்தனி நீதிமன்றங்கள் இருந்துள்ளன.
 தண்டுப் பகுதிக்கான சிறை வேலூர் சிறைதான்.

 1948 வரை இப்பகுதியில் பள்ளிகளில் கன்னடம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.

 1948 இல் மன்னர் வருகை தந்தபோது தண்டு மக்கள் மைசூர் அரசரை முதன்முதலாக பார்த்தனர்.

 1950 இல் தான் தண்டு நகராட்சியும் பேட்டை நகராட்சி இணைக்கப்பட்டு பெங்களூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
 அப்போதும் தமிழரே பெரும்பான்மையாக இருந்தனர்.

 1956 வரை இப்பகுதி கல்வி நிர்வாகம் சென்னை பல்கலை மற்றும் சென்னை அரசிடம் இருந்து வந்தது.

 1956 இல் எந்த பொருத்தமும் இல்லாமல் பெங்களூர் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.
 அப்போது அந்த மாநாகராட்சி எல்லைக்கும் தமிழக இல்லைக்கும் இடையே 4 கிலோமீட்டர் தொலைவுதான் இருந்தது.

 நன்றி: அறிஞர் குணா அவர்கள் எழுதிய
விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)






Monday, 26 August 2019

பெங்களூர் எங்களூர் - 1

பெங்களூர் எங்களூர் -1
1981 இல் கர்நாடகாவில் வாழும் தமிழர் எண்ணிக்கை 90லட்சம் ஆகும் [1].
இன்று அது 1.5 கோடியைத் தாண்டும்.
இவர்கள் கன்னடர்களின் பார்வையில் வந்தேறிகள் என்று இருப்பதுகூட பரவாயில்லை
ஆனால், தமிழகத் தமிழர் சிலரும் இவர்களை 'அங்கு போய் குடியேறியவர்கள்' என்று கூறுவது மன்னிக்க முடியாத வரலாற்று அறியாமை ஆகும்.
1991 இல் ஏறத்தாழ ஒரு கோடித் தமிழர்கள் தமிழகத்தின் எல்லையை ஒட்டிய பெங்களூர், கோலார் தங்கவயல், குடகு, பெல்லாரி, கொள்ளேகால் போன்ற பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் அப்பகுதிகளின் பூர்வ குடிகள்தாம்.
இவர்கள் தவிர பத்திராவதி, சிவமுகா, சித்திர துர்கம், சிக்கமளூர் போன்ற பகுதிகளிலும் தமிழர்கள் உண்டு.
இவர்கள்தான் பிறகு குடியேறியவர்கள்.
அதுவும் ஆங்கிலேயர்களால் இரும்புச் சுரங்களிலும், உருக்கு ஆலைகளிலும், தோட்டவேலைக்காகவும் கொண்டுசெல்லப்பட்டவர்கள்.
இவர்கள் இன்னமும் தமிழர் என்ற அடையாளத்துடன் கர்நாடக கடலில் பண்பாட்டுத் தீவுகளாக தனித்து வாழ்ந்துவருகின்றனர்.

மேற்கண்டவர்களையும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கூட்டங்கூட்டமாக வந்தேறி இன அடையாளத்தை மறைத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழரை ஏமாற்றிவரும் தெலுங்கரையும் ஒப்பிடுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.

எடுத்துக்காட்டாக தமிழக எல்லையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள பெங்களூர் பற்றி அறிவோம்.
1891 இல் பெங்களூர் மைய நகர் (cantonment அல்லது civil and military பகுதி) தமிழர் 39%, கன்னடர் 6.7%, 
என்றவாறு வாழ்ந்து வந்தனர்
[மொத்தம் 100081 பேர், தமிழர் 39079, கன்னடர் 6746].
ஆனால் மைய நகருக்கு வெளியே பேட்டைப் பகுதியில் (pettah அல்லது city பகுதி)
தமிழர் 23%, கன்னடர் 31%
என வாழ்ந்துவந்தனர்
  [மொத்தம் 69447 பேர், தமிழர் 15755, கன்னடர் 21936].
அதாவது பெங்களூர் நகரை கட்டி அதில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தது தமிழரே!
கன்னடர் அந்நகருக்கு வெளிப்புறத்தில் குடியேறி தமிழரை விட சிறிது அதிகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இரண்டு பகுதிகளையும் சேர்த்து பார்த்தாலும் தமிழரே அதிகம்.
1911 இல் பெங்களூர் மொத்தமும் சேர்த்து பார்க்கும்போது தமிழர் 32%, கன்னடர் 17% என்றே வரும் (தெலுங்கர் 25%).
இந்த முக்கியமான பெருநகரத்தைத் தமிழகத்துடன் சேர்க்காமல் கன்னடருக்கு வாரிக் கொடுத்துவிட்டது ஹிந்திய அரசு.
மக்கட்தொகை அடிப்படையில் தமிழருக்கு வந்திருக்கவேண்டும்.
அல்லது இரண்டாவது பெரும்பான்மையான தெலுங்கருக்காவது போயிருக்கவேண்டும்.
வரலாற்று ரீதியில் ஆராய்ந்து அது கன்னடருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதுபற்றி ஆராய்வோம்.
பெங்களூர் மாவட்டத்தின் ஒசக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகள் கி.பி 997 இல் பல்லவரிடம் இருந்து சோழ அரசன் இராராசதேவனால் வெல்லப்பட்டது [2].
பெங்களூர் மாவட்டத்தின் மாகடி பட்டணத்தை 1139 ஆம் ஆண்டு நிறுவியது சோழர்களே! [3].

இன்று 'எலவங்கா' என்றழைக்கப்படும் பெங்களூர் பகுதி பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழரால் உருவாகப்பட்ட 'இராசேந்திர சோழவளநாட்டின்' பிரிவுகளில் ஒன்றான 'இலைப்பாக்க நாடு' ஆகும்.
இது ஒய்சளர் காலத்தில் 'எலவக்கா' என்றாகி 'எலவங்கா' என்று திரிந்தது [4].
பெங்களூர் மாவட்டத்தில் உள்ள 'தோட்டபல்லாபூர்' பண்டைநாளில் 'காடனூர் எழுபது' என்கிற பெயரில் வழங்கி வந்தது [5].
மைசூர் மாவட்டத்தின் 'தலைக்காடு' பகுதியை ஆண்டுவந்த கங்கர்கள் தமிழே பேசிவந்ததால் 'தமிழ்க் கங்கர்' எனப்பட்டனர் [6].
பெங்களூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அப்படி கிடைத்துள்ள ஊர்களாவன
அகரம்,
ஐகண்டபுரம்,
ஆவதி,
பைச்சபுரம்,
பேகூர்,
பிண்ணமங்கலா,
தொம்மளூர்,
கங்காவரம்,
அலசூர்,
அசிகலா,
எக்குண்டா,
ஒசக்கோட்டை,
கொண்டரள்ளி,
கூடலூர்,
குப்பேப்பள்ளி,
மாகடி,
மண்குண்டா,
மண்ணே,
நந்தகுடி,
நெலமங்கலா,
திருமலை,
ஓகட்டா,
வணக்கணள்ளி,
வரநாயக்கனள்ளி.

[மேற்கண்ட ஊர்களில் நூற்றுக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
எண்ணிக்கை அடிப்படையில் பாதியளவுகூட கன்னடக் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை.
எல்லையோர மாவட்டங்கள் முழுவதுமே தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்து உள்ளன.
கிடைத்த இடங்களை வரைபடமாக ஏற்கனவே "பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)" எனும் பதிவாக இட்டுள்ளேன்.]

மேற்கண்ட ஊர்ப் பெயர்கள் தற்காலப் பெயர்கள்தாம். அதாவது திரிந்த தமிழ்ப் பெயர்கள்.
அதாவது,
அகரம் அருகேயுள்ள 'இப்பலூர்' உண்மையில் 'இருவுளியூர்' ஆகும் [7].
'ஐகண்டபுரம்' உண்மையில் 'ஐவர்கண்டபுரம்' ஆகும் [8].
'ஆவதி' உண்மையில் 'ஆகுதி' ஆகும் [9].
'பிண்ணமங்கலா' உண்மையில் 'விண்ணமங்கலம்' ஆகும் [10].
'தொம்மளூர்' உண்மையில் 'தும்பளூர்' ஆகும் [11].
'காண்கானள்ளி' உண்மையில் 'காணிக்காரன்பள்ளி'  [12].
'கூடலூர்' கல்வெட்டில் 'இராசராச சதுர்வேதி மங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது  [13].
'மாலூர் பட்டணம்' கல்வெட்டில் 'நிகரிலி சோழபுரம்' என்று குறிக்கப்பட்டுள்ளது  [14].
'மண்குண்டா' என்பது உண்மையில் 'மணலூர்'  [15].
'மண்ணே' என்பது 'மண்ணைநாடு'  [16].
'நந்தகுடி' என்பது 'நொந்தகுழி'  [17].
'மடவாளம்' என்பது 'மடவளாகம்',  'ஓகட்டா' என்பது 'ஓவட்டம்' அதேபோல்
'வணக்கனள்ளி' என்பது 'வண்ணக்கார பட்டணம்' [18].
பெங்களூர் பகுதி கல்வெட்டில் 'விக்கிரமசோழ மண்டலம்' என்ற பெயரில் குறித்துள்ளனர்  [19].
இன்றும் பெங்களூரில் 'கங்கைகொண்ட சோழனள்ளி' உண்டு.
பெங்களூருக்கு வடக்கே 'சோழநாயக்கனள்ளி' மற்றும் 'சோழதேவனள்ளி' ஆகிய பெயர்களுடைய பகுதிகள் உள்ளன.
இன்று கன்னடருக்கு ஆதரவாக
சோழர் கல்வெட்டுகளை விட பழமையான ஒரு கன்னட நடுகல் கல்வெட்டு மிகவும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்தது.
அதைவிடவும் பழமையான தமிழ்க் கல்வெட்டு கிடைக்காமல் இருந்திருக்காது.
அது மறைக்கப்பட்டிருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
  மைசூரில் தென்னிந்திய கல்வெட்டுத் துறை தலைமைச் செயலகம் இருப்பதால் அங்கு பல தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த இனவெறிப் போக்கு பற்றி ஜூனியர் விகடன் (18.06.2006), விகடன் (02.05.2013), மற்றும் தினமலர் (04.02.2018) ஆகிய பத்திரிக்கைகள் கட்டுரைகளும் வெளியிட்டுள்ளன.
[1] தமிழும் தமிழரும், முனைவர் ந. கடிகாசலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1982, பக் 27.
[2 - 19] Mysore Gazetteer, Vol V, ed., C.Hayavadana Rao, 1930, pp 38-39, 342, 39, 369, 76-77, 86, 168, 94, 189, 194, 38-39, 202-03, 205, 239 land 39.
பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி,
நூல்: விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர்: குணா
காலகட்டம்: 1991

வரைபடம்: பெங்களூர்
காலகட்டம்: 1914
(காண: https://vaettoli.wordpress.com/2019/08/27/பெங்களூர்-எங்களூர்-1/ )
அடுத்த பகுதி விரைவில்...


Saturday, 24 August 2019

திருநெல்வேலி வரை தெலுங்கர்

திருநெல்வேலி வரை தெலுங்கர்

தெலுங்கரின் திட்டமிட்ட குடியேற்றம் ஆந்திரத்துக்கு அண்மையில் உள்ள எல்லை மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம் வரை நடந்துவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 1881 லேயே அதன் மக்கட்தொகையில் 15% வந்தேறிகள்.
அவர்களில் தெலுங்கர் 8.6% இருந்துள்ளனர்.
(இவர்களில் பெரும்பாலோர் கம்மா ஆவர்).

இது அம்மாவடத்தில் தமிழ்ச் சாதிகளில் எந்தவொரு பெரிய சாதிக்கும் சளைக்காத எண்ணிக்கை ஆகும்.
அன்றைய நிலையில் திருநெல்வேலியில் தமிழ்ச் சாதியினர்
சாணார் 13.7%
பள்ளர் 11.1%
மறவர் 9.1%
வேளாளர் 8.2%
பறையர் 5.6%
இடையர் 5.3%
கம்மாளர் 4%
என்றவாறு இருந்தனர்.

வடக்கில் கோவை மாவட்டமே தெலுங்கர் குடியேற்றத்திற்கு அதிகம் இலக்காகி உள்ளது.
1921 லேயே மக்கட்தொகையில் 15% தெலுங்கர் இருந்துள்ளனர்.
(இவர்களில் மிகப் பெரும்பாலோர் சக்கிலியர் ஆவர்).

இதற்கு இணையானது சென்னை.
1961 நிலவரப்படி சென்னை மக்கட்தொகையில் 14.1% தெலுங்கர் ஆவர்.

1965 வாக்கில் இந்தியாவில் தெலுங்கு இனத்தின் 18% மக்கள் (67 லட்சம்) ஆந்திராவுக்கு வெளியே வாழ்ந்துவந்தனர்.
இதில் ஏறத்தாழ 9% (34 லட்சம்) மக்கள் தமிழகத்தில் குடியேறியுள்ளனர்.

அதாவது சுருக்கமாகக் கூறினால் தெலுங்கரில் பத்தில் ஒருவர் தமிழகத்தில் இருக்கிறார்.

இதன் பிறகுதான் திராவிடம் ஆட்சிக்கு வருகிறது!

தமிழகத்தில் தெலுங்கு வந்தேறிகளின் குடியேற்றமும் பொற்காலமும் உச்சத்திற்கு சென்றது.

என்றால் தற்போதைய நிலையை யூகியுங்கள்!

(புள்ளிவிபரங்கள் அறிஞர் குணா எழுதிய "விழுதுகள்" நூலில் இருந்து எடுக்கபெற்றன)

வரைபடம்
https://vaettoli.wordpress.com/2019/08/24/திருநெல்வேலி-வரை-தெலுங்க/

Thursday, 26 July 2018

தமிழகத்தில் பிறமொழி பேசுவோர் (2011)

தமிழகத்தில் பிறமொழி பேசுவோர் (2011)

தமிழகத்தில் பிறமொழி பேசுபவர்கள் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (census) எவ்வளவு பேர் எனும் விவரம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏறக்குறைய 6 கோடியே 40 இலட்சம் பேர் தமிழ் நாட்டில் தமிழ் பேசுகிறார்கள்.

அடுத்த படியாக, ஏறக்குறைய 42 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தெலுங்கு பேசுகின்றனர்.

ஏறக்குறைய 4 இலட்சம் பேர் இந்தி பேசுபவர்களாக இருக்கின்றனர்.

2001 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2011 ஆம் ஆண்டில் தமிழகத்தில் வங்காள மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 160 % அதிகரித்துள்ளது (அதாவது 1.6 மடங்கு).

அதே போல் தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்கள் தொகை 107 % வளர்ந்துள்ளது.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறைகளில் இங்குள்ள வேலை வாய்ப்பு
மேற்கு வங்காளம், வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களிலுள்ள நடுத்தர வர்க்கக் கல்வி கற்றவர்களைத் தமிழகத்தை நோக்கி ஈர்த்துள்ளது.

மேலும் இடம் பெயர் மக்கள் குறித்து 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி,
20.9% பேர் போர்டு, ஹுண்டாய், பிஎம்டபுள்யூ மற்றும் நிசான் தொழிற்சாலைகளில் பணியாற்றிக் கொண்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் வாழ்கின்றனர்.

இடம் பெயர் தொழிலாளர்களில் 51.3% பேர் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

ஜவுளி மற்றும் அது தொடர்பான தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள காரணத்தால், தமிழகத்திலுள்ள மொத்த இடம்பெயர் தொழிலாளர்களில் கோவையில் 12.1 % பேரும், திருப்பூரில் 9 % பேரும் பணியாற்றி வருகின்றனர்.

வீட்டுமனை வணிகம், மெட்ரோ இரயில் மற்றும் கட்டடத் தொழிலில் அண்மைக்காலமாக வெளி மாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்துவருகின்றனர்.

இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பிறமொழி பேசுபவர்கள், தமிழகத்தில் திடீரென அதிகரித்து வருவதைத் தமிழகம் கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்ற அரசியல் சட்டம் அனைவருக்கும் உரிமை வழங்கியுள்ளது.

இருப்பினும், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி, அவர்களை முறையாகக் கண்காணிக்க வேண்டிய மாபெரும் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

அரசு இந்த விடயத்தில் கருத்தூன்றிச் செயல்படாவிட்டால், பிற மாநிலங்களில் இருந்து வரும் பிறமொழி பேசக் கூடியவர்களால் இங்கு பல்வேறு சிக்கல்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது.

அரசு மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் தமிழக மக்களும் இச்சிக்கலில் கவனம் குவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பதிவர்: கண. குறிஞ்சி
--------------------

வந்தேறிகள் நம்மிடம் வாழ்வு பெறுவதும் பிறகு ஏறிமிதிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

ஒரு இனத்தின் மத்தியில் வேற்றினத்தார் குடியேறுவது போல ஒரு மோசமான பாதிப்பு அந்த இனத்திற்கு வேறில்லை.

குடியேறும் வெளிமாநிலத்தார் சட்டப்படி வைத்திருக்கவேண்டிய அடையாள அட்டை மற்றும் குடியேறல் சான்று என எதையும் வைத்திருப்பதில்லை.

குடும்பத்திற்கு தெரியாமல் இங்கே திருட்டு, கொள்ளை, வழிப்பறி, கொலை ஆகிய செயல்படுகின்றனர்.

இங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து இங்கேயே ரேசன்கார்டு வாங்கி குடிமகன் ஆகிவிடுகிறார்கள்.

வேலைவாய்ப்புகளிலும் தேர்வுகளிலும் குறுக்குவழியில் வெற்றி பெறுகின்றனர்.

கூலி வேலையைக் கூட தட்டிப்பறிக்கின்றனர்.

இதை இப்படியே விட்டால் நாமும் ஹிந்தியராக ஹிந்தியாவின் அங்கமாக ஆகி இவர்களைப் போல மாறவேண்டியதுதான்.

Thursday, 20 April 2017

குழந்தைத் திருமணம் தெலுங்கர் கொள்கையே!

குழந்தைத் திருமணம் தெலுங்கர் கொள்கையே!

பெண்கள் மீதான அடக்குமுறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும்
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை.

Tuesday, 18 April 2017

மொழி வரைபடம் (1928)

மொழி வரைபடம் (1928)

----------------------------------------

ஆங்கில ஆட்சியில்கீழ் இந்தியாவில் முதன்முதலாக மொழிவாரி கணக்கெடுப்பு நடத்திய க்ரையெர்ஸன் (Grierson) என்பார் வெளியிட்ட Linguistic Survey of India என்ற நூலில் உள்ள வரைபடம் (அதன் ஒரு பகுதி).

1928வாக்கில் கையால் வரையப்பட்ட இந்த வரைபடத்துடன் தற்போதைய தமிழக மாநிலத்தின் வரைபடத்தைப் பொருத்திப்பார்க்கையில் ஓரளவு நாம் இழந்த பகுதிகளை அறியமுடிகிறது.

( Madras Presidency என்ற தலைப்பில் சென்னை மாகாணம் பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் இதுவே நிறமில்லாத வடிவில் இடம்பெற்றுள்ளது)

ஆனாலும் இது முழுமையாக சரியென்று சொல்லமுடியாது.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கன்னடம் பேசும் பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மாவட்டத்தில் தமிழர்களும் அல்லர் காடர் போன்ற (தமிழ்)பழங்குடி மக்களும் சில பகுதிகளில் மலையாளிகளுமே இருக்கின்றனர்.

அதேபோல மைசூர் தமிழர் பெரும்பான்மை நகரம்

அதுவும் இதில் இல்லை.

அதேபோல ஈழத்தின் கிழக்குபகுதி சிங்களப் பகுதியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

கிரையர்சன் வடமொழிகளில் மிக மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

தனது நூலின் முதல் தொகுதியில் தொடக்கத்திலேயே தனது ஆய்வில் தென்னிந்தியா இடம்பெறவில்லை என்பதை வரைபடம் மூலம் குறிப்பிட்டும் உள்ளார்.

அதாவது தென்னிந்தியாவில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை என்று கூறலாம்.

ஆந்திரா மற்றும் கேரளா பறித்துக்கொண்ட தமிழ் நிலத்தினை ஓரளவு அறிந்துகொள்ள இந்த வரைபடம் உதவுகிறது.

இவ்வரைபடத்தின் படி

தற்போதைய ஆந்திராவின்

சித்தூர் மாவட்டத்தில் பாதி

தமிழர் பெரும்பான்மை கொண்டது.

தற்போதைய கர்நாடகத்தின் கோலார் கால்பகுதி

மற்றும் பெங்களூர் மாவட்டத்தில் கால்வாசி

ராமநகரா கால்வாசி

சாம்ராஜ்நகர் பாதி

தமிழ் பெரும்பான்மை உடையன.

தற்போதைய கேரளத்தின் பாலக்காடு முழுவதும்

இடுக்கி பாதியும்

திருவனந்தபுரம் முழுவதும்

தமிழ் பெரும்பான்மை உடையன.

(இவ்வரைபடம் ஏற்கனவே 03.03.16 அன்று இதே வலையில் போடப்பட்டிருந்தது.

ஆனால் படம் அழிந்துவிட்டது பதிவு மடடும் இருந்தது அதனால் மீண்டும் பதவிடப்படுகிறது)

Wednesday, 20 April 2016

மக்கட்தொகை குறைப்பு மூலம் இனவழிப்பு

மக்கட்தொகை குறைப்பு மூலம் இனவழிப்பு

ஹிந்தியாவிலேயே "மக்கள் தொகை கட்டுப்பாடு" விகிதத்தில் முதல் இடத்திற்கு வந்துவிட்டது தமிழகம்.

தமிழ் பெண்கள் குழந்தை பெறும் விகிதம் குறைந்துவிட்டது.
அதாவது பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.7 என்று ஆகிவிட்டது.

அதாவது இந்த தலைமுறையில் இருபது பேர் இருந்தால் அடுத்த தலைமுறையில் 17 பேர்தான் இருப்பார்கள்.

இது இனவழிப்பன்றி வேறென்ன?

மற்ற மாநிலங்களை விட குடும்பக்கட்டுப்பாடு தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் செய்யப்படுவது ஏன்?

இதே மற்ற ஹிந்தியர்கள் 2.7 என்ற வகையில் குழந்தை பெறுகிறார்கள்.
அதாவது இந்த தலைமுறையில் 20 பேர் இருந்தால் அடுத்த தலைமுறையில் 27பேர் இருப்பார்கள்.

வடயிந்தியரிலும் குறிப்பாக ஹிந்தி மக்கள் 3.5 என்ற விகிதத்தில் பெருகிவருகின்றனர்.

அதாவது ஹிந்தி மக்கள் 20 பேர் அடுத்த தலைமுறையில் 35 பேர் ஆவார்கள்.

இதுவே ஹிந்தி மக்கள் மற்ற மாநிலங்களில் பெருமளவு குடியேற வழிவகுக்கிறது.
இன்னும் 6 தலைமுறைகளில் இந்தியா உண்மையிலேயே ஹிந்திநாடு ஆகிவிடும்.

தமிழகத்தினுள் இன்று பல குட்டி ஆந்திராக்களும் சில குட்டி கர்நாடகாக்களும் காணக்கிடைக்கின்றன.
அதற்காவது தெலுங்கு ஆட்சி தமிழகம் வரை பரவியிருந்தது காரணமாக இருக்கலாம்.

ஆனால் எந்த வரலாற்றுக் காரணமும் இல்லாமல் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரு கிராமம் விடாமல் மூலை முடுக்கெல்லாம் மார்வாடிகள் குடியேறி உள்ளனர்.
உருது இனத்தவரும் அப்படியே.
வட தமிழகத்தில் சௌகார்பேட்டை போன்ற குட்டி ஹிந்தியாக்கள்  உள்ளன.
தென் தமிழகத்தில் குட்டி மஹாராஷ்ட்ராவும், குட்டி குஜராத்தும், குட்டி சௌராஷ்ட்ராவும் உண்டு.
சௌராஷ்ட்ரா இனத்தவர் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியையே தாய்நிலம் போல ஆக்கிவிட்டனர்.

தற்போது ஹிந்தியர்கள் தமிழகத்தின் சிறுநகரங்கள் வரை குடியேறிவருகின்றனர்.

இப்படியான 'பெருகி- குடியேறி- ஆக்கிரமிக்கும்' திட்டத்தின் மூலமே தமிழகத்தின் வடக்குப் பகுதி தெலுங்கு கன்னடவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
தென்பகுதி இலங்கையும் இவ்வாறே ஆக்கிரமிக்கப்பட்டது.

சிங்களவரின் மூதாதையருக்கு இலங்கையில் இடம் கொடுத்து குடிவைத்தது தமிழர்கள்.
சிறுபான்மையாக இருந்த சிங்களவர்கள் பெரும்பான்மைத் தமிழர்களை விட அதிக குழந்தைகள் பெற்று பெரும்பான்மை ஆனார்கள்.
1700 களில் சிங்களவர் தமிழர்களுக்கு சம எண்ணிக்கைக்கு வந்தனர்.
தொடர்ந்து தமிழ்நிலத்தில் சிறிது சிறிதாகக் குடியேறி நிலத்தையும் ஆக்கிரமித்தனர்.
இன்று சிங்களவர் பெரும்பான்மை.

இலங்கைத் தீவில் 1/3 பகுதியில் 30லட்சம் தமிழர்கள் வாழ
அத்தீவின் 2/3 பகுதியில் ஆறு மடங்கு அதிகமாக ஒன்றரை கோடி சிங்களவர்கள் நெருக்கடித்துக்கொண்டு வாழ்கின்றனர்.

இதனாலேயே தமிழர்களைக் கொன்று விரட்டி அடித்து மேலும் நிலத்தை விழுங்கத் துடியாய்த் துடிக்கிறது சிங்களம்.

சரி நாமும் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாமா?

இந்தியாவில் தமிழகம் மக்கள் நெருக்கம் அதிகமான பகுதி ஆகும்.
(தமிழர்கள் மக்கள்தொகை பெருகியபோது தாய்நிலத்திலேயே செறிவாகக் குடியேறியுள்ளனர்)
இங்கே நாம் அதிகமாகக் குழந்தைகள் பெறுவதும் ஆபத்துதான்.

தவிர சிங்களவரோ ஹிந்தியரோ இந்த 'பெருகி- குடியேறி- ஆக்கிரமிக்கும்' திட்டத்தால் அவர்களுக்கே நன்மை விளையப்போவதில்லை.
வறுமை, பற்றாக்குறை, நெருக்கடி போன்றவை அப்படியேதான் இருக்கும்.

ஒரு இனத்தின் பலம் அதன் மக்கள்தொகையையே பெரும்பாலும் சார்ந்துள்ளது.

ஆகவே குழந்தை பிறப்பு 2 முதல் 2.5 என்றவகையில் இருக்குமாறு தமிழர்கள் குறைந்தது இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
எந்தநாட்டில் இருந்தாலும் எவ்வளவு வறுமையில் இருந்தாலும் இதனைச் செய்யவேண்டும்.
இதனால் மக்கட்தொகை கூடவும் செய்யாது குறையவும் செய்யாது.

அதே நேரத்தில் வேற்றினத்தவர் நம் குடியேறுவதைத் தடுக்கவும் வேண்டும்.

பஞ்சம் பிழைக்க வந்த ஒரு குடும்பத்தை நாம் இடங்கொடுத்து வாழவைத்தால் அவர்கள் நமக்கு நன்றியுடன் இருப்பார்கள்.
ஆனால் அவர்களுடைய மகனோ பேரனோ நன்றியுடன் இருக்கமாட்டார்கள்.

அந்தமானில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தபோது வங்கதேச விடுதலை போர் நடந்ததால்  வெளியேறிய அகதிகளை அந்தமானில் குடிவைக்க தமிழர்கள் முழு ஆதரவும் கொடுத்தனர்.
வங்காளிகள் தமிழரை விட பெரும்பான்மை ஆயினர்.
இதே மலையக அகதிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் அந்தமானில் குடிவைக்க திட்டமிடப்பட்டபோது கொதித்தெழுந்த வங்காளிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து அதைத் தடுத்து நிறுத்தியதால் வேறுவழியின்றி நீலகிரியில் குடிவைக்கப்பட்டனர்.

வரலாற்றிலிருந்து பாடம் கற்பது அவசியம்.
இன்று செயாலலிதா, கருணாநிதி போன்ற அகதிகள் தமிழினத்தை ஆள இந்த மண்ணின் மகன் இலங்கை அகதி என்று கொடுமைப்படுத்தப்படும் நிலை.
இதற்கு நம் தாராள மனம்தான் காரணம்.

நம் தாய்நிலம் நாளுக்குநாள் சுருங்கிக்கொண்டே வருகிறது.
கொழும்பு, கண்டி, கதிர்காமம், அனுராதபுரம், திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, இடுக்கி, மைசூர், பெங்களூர், கோலார், சித்தூர்,திருப்பதி, நெல்லூர், கடப்பை என தமிழ் நகரங்கள் பறிபோயின.

இன்று தமிழ்த் தாய்நிலத்தின் இதயம் வரை வேற்றின உள்நுழைவுக்கு நடந்தேறி வருகிறது.
வேலியின்றி திறந்து கிடக்கும் நம் வீடு வந்தேறிகளின் வேட்டைக்காடாகி விட்டது.

இன்றைய தமிழகத்திலும் தமிழரை விட அதிகமாக வேற்றினத்தார் வாழும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
ஓசூரை ஆந்திரா விழுங்கிவிட்டது.
உதகமண்டலத்தை கர்நாடகா விழுங்கவுள்ளது.
கோயம்புத்தூரை கேரளா விழுங்கவுள்ளது.
கச்சத்தீவு வரை சிங்களவன் விழுங்கிவிட்டான்.
சிங்களம் திருகோணமலையை கூடியவிரைவில் விழுங்கி வடக்கு கிழக்கைத் துண்டித்துவிடும்.

இனியேனும் விழிப்போம் இருப்பதையாவது காப்போம்.

இனியும் தமிழகத்தில் உள்ள வேற்றினத்தவரை ஆதரிக்கவேண்டாம்.
மும்பையிலும் டெல்லியிலும் குடியேறி வாழும் தமிழர்களை அவ்வவ்வினத்தார் ஆதரிப்பதே இல்லை.
அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்துதரவில்லை.

நாம் திண்ணை வரை கொடுத்தாயிற்று.
வீட்டையாவது காப்போம்.
இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்கும் காலமிது.

"தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்"

படங்கள்:
1. மக்கட்தொகைக் குறைப்பு மாநிலவாரியாக
2.தென்னிந்திய தாய்-சேய் விகிதம்
3.மக்கட்தொகைக் குறைப்பு வட்டார வாரியாக
4.மக்கள் நெருக்கம் இந்தியாவில்
5.மக்கள் நெருக்கம் இலங்கையில்

Thursday, 7 January 2016

தமிழகத்தில் மொழிவாரி மக்கள் தொகை

தமிழகத்தில் மொழிவாரி மக்கள் தொகை

தமிழ்=89.43%
தெலுங்கு=5.65%
கன்னடம்=1.68%
உருது=1.51%
மலையாளம்=0.89%
குஜராத்தி=0.32%
ஹிந்தி=0.30%
மராத்தி=0.1%

2001 எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்நிலவரம்.

மகிழ்ச்சியடைய எதுவுமில்லை.
நாம் இவ்வளவு பெரும்பான்மையாக இருக்கக் காரணம் தமிழர் 50% 60% வாழ்ந்த பகுதிகளை மற்ற மாநிலத்தவர் பிடுங்கிக் கொண்டதுதான்.