Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Thursday, 30 August 2018

பெறாத பெற்றோர்

பெறாத பெற்றோர்

நேற்று உறவினர்கள் கூடி  எங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று எங்கள் மகளுக்கு மொட்டை போட்டு தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தினோம்.
சர்க்கரைப் பொங்கலிட்டு அனைவருக்கும் அளித்து உண்டோம்.
தமிழர் பண்பாட்டில் காதுகுத்து சடங்கானது மிக முக்கியமான ஒன்றாகும்.

இது கிறித்துவர்களின் ஞானஸ்நானம் (baptism),
யூதர்களின் பிரிட் மிலா (brit milah) மற்றும்
சீனர்களின் காண் டீ (gan die) அல்லது கை மா (kai ma) ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

அதாவது ஒரு குழுந்தைக்கு பெற்றோருக்கு அடுத்த நிலையில் ஒரு உறவை நியமிப்பது.
அவர் அந்த குழந்தையின் "பெறாத  பெற்றோர்" ஆவார்.

தமிழர் பண்பாட்டில் இந்த உறவு "தாய்மாமன்" ஆவார்.

பெற்றோருக்கு அடுத்து ஒரு குழந்தையைக் காக்கும் பொறுப்பு தாய்மாமனுடைது ஆகும்.

தாய்மாமனிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து சுற்றத்திற்கு அதனை அறிவிக்கும் சடங்குதான் தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தும் விழா.

கிறித்துவ நாடுகளில் குழந்தைக்கு ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு அளித்து குழந்தையின் god father ஆக ஒருவர் நியமிக்கப்படுவார். (பெண் என்றால் god mother).
இந்த ஞானத் தந்தை குடும்ப உறுப்பினராகவோ அல்லது குடும்ப நண்பராகவோ இருக்கலாம்.

யூத மத வழக்கத்தில் சன்டெக் (santek) என்று அழைக்கப்படும் "பெறாத பெற்றோர்" மடியில் வைத்து குழந்தையின் ஆணுறுப்பின் முன்தோல் அகற்றும் சடங்கு நடக்கிறது.

சீனரில் அனைத்து மதத்தினரும் பெறாத பெற்றோர் நியமிக்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.
ஆனால் பெரும்பாலும் தாத்தா பாட்டி அல்லது வயது முதிர்ந்தோரை நியமிக்கின்றனர்.

நமது வளைகாப்பு சடங்கு ஐரோப்பிய நாடுகளில் Baby shower எனும் சடங்குடன் ஒத்துப் போகிறது என்பது கூடுதல் தகவல்.

நகர்ப்புறங்களின் மறைந்துவரும் இத்தகைய சடங்குகளை அதன் முக்கியத்துவம் உணர்ந்து அழியாமல் காப்பது நமது கடமையாகும்.

Monday, 6 August 2018

சிசேரியன் பிரசவ மரணங்களைக் குறைத்ததா?

சிசேரியன் பிரசவ மரணங்களைக் குறைத்ததா?

1994 ல் இந்தியாவில் ஆன பிரசவங்களில் 61.6% பிரசவங்கள் வீட்டில் நடந்துள்ளன.
பிரசவமானோரில் டாக்டர் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டோர் 21.6 சதவீதம் மட்டுமே.[9]

பிரசவ மரணங்கள் (தாய் உயிரிழப்பு) அப்போது லட்சத்திற்கே 437 தான் இருந்தது.
அதாவது 'மொத்த பிரசவங்களின்' எண்ணிக்கையில் 'தாயின் மரணத்தில் முடிந்த பிரசவங்களின்' எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது 0.43% ஆகும்.
இந்த அரைசதவீத மரண வாய்ப்பும்  இந்தியாவின் நிலைதான்.[9]

பேறுகால கவனிப்பில் (Antenatal care) தமிழகம் அப்போது மூன்றாம் இடத்தில் இருந்தது.
அதாவது 94% தமிழக கர்ப்பிணிகள் பேறுகால கண்காணிப்பு மற்றும் கவனிப்பு பெற்றிருந்தனர்.
37% இந்திய கர்ப்பிணிகளின் மட்டுமே பிரசவ கால கண்கானிப்பு பெற்றிருந்தனர்.[9]

எனவே தமிழகத்தில் பிரசவ மரணங்கள் மூன்று மடங்கு குறைவாக இருந்திருக்க வேண்டும்.
அதாவது லட்சத்திற்கு 180 வரை இருந்திருக்கும் என அனுமானிக்கலாம்.
புரிந்துகொள்ளும் வகையில் கூறினால் பிரசவமான ஆயிரம் தாய்மார்களில் (தோராயமாக) இருவர் இறந்துள்ளனர்.

நியாயப்படி இந்த ஆயிரத்தில் இருவரைக் காப்பற்றத்தான் சிசேரியன் செய்யப்படவேண்டும்.

ஆனால் தற்போதைய நிலை என்ன?

அதிகரித்து வந்த சிசேரியன் கலாச்சாரத்தைக் கருத்தில் கொண்டு அதை நெறிப்படுத்தும் விதமாக World health organisation (WHO) 1985 இல் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதிலுள்ள பரிந்துரைப்பின்படி[1] பிரசவங்களில் சிசேரியனின் சதவீதம் 10-15% க்குள் இருக்கவேண்டும்.

ஆனால் 2005 லேயே தமிழ்நாட்டில் "பிரசவத்தில் சிசேரியன் சதவீதம்" 20% ஆகிவிட்டிருந்தது. [2]

2015 ல் இது 34% ஆக உயர்ந்து இந்தியாவில் நான்காம் இடத்தைப் பிடித்தது தமிழ்நாடு.[3]

2015 நிலவரப்படி தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆன பிரசவங்களில் 10 ல் 2 சிசேரியன் ஆகும்.
ஆனால் தமிழக தனியார் மருத்துவமனைகளில் 10 ல் 6 சிசேரியன் ஆகும்.[4]

ஆயிரத்தில் இரண்டு எங்கே?!
பத்தில் ஆறு எங்கே?!

(இத்தனைக்கும் தமிழகத்தின் தற்போதைய பிரசவ மரணங்கள் லட்சத்திற்கு 62)

மாவட்ட வாரியாகப் பார்த்தால் தமிழகத்தின் கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் இந்திய அளவில் 2 வது மற்றும் 3 வது இடத்தில் உள்ளன.[4]

இதிலிருந்து சிசேரியன் பெரும்பாலும் தேவையற்றது என்பதும் அதில் தமிழகம் முன்னணியில் உள்ளதையும் அறிகிறோம்.

இதுமட்டுமல்லை,
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பால் மிக முக்கியமானதாகும்.

தமிழகத்தில் 2015 ல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில்,
பிறந்த ஒருமணி நேரத்தில் பால் கொடுப்பெற்ற குழந்தைகள் 54.7% சதவீதம் ஆகும். [3]

இதற்கு முக்கிய காரணம் சிசேரியன்.

பிரசவத்தின்போது, தாயின் உடலில் சுரக்கும் திரவத்தில் இருக்கும் (நல்ல)பாக்டீரியாக்கள் குழந்தைக்கு போராடும் சக்தியையும் நோயெதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.
இந்த சக்தி ஓராண்டு வரை குழந்தை நோய்களிலிருந்து பிழைத்துவாழ உதவுகிறது.

ஆனால் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு இது கிடைப்பதில்லை.
எனவே அது விரைவில் நோயாளி ஆகிறது.
(மேலைநாடுகளில் இதை சமன் செய்ய தாயின் பிறப்புறுப்பில் சுரக்கும் திரவத்தை சிசேரியன் குழந்தைக்கு பூசும் vaginal seeding செய்கிறார்கள்.
ஆனால் இது தற்காலத் தீர்வுதான்). [10]

தொப்புள்கொடி அறுப்பதும் கூட உடனடியாகச் செய்யப்படுவதால் குழந்தைக்கு பிரசவத்திற்குப் பிறகு தொப்புள்கொடி மூலம் இறங்கவேண்டிய அந்த ஸ்டெம் செல்கள் நிறைந்த ரத்தம் கிடைப்பதில்லை.
(மேலை நாடுகளில் இதை சேமித்து பத்திரமாக வைக்கின்றனர்).

அதாவது சிசேரியன் குழந்தை நலனையும் பெறுமளவு பாதிக்கிறது.

தமிழகத்தில் நிலை மட்டும்தான் இப்படியா என்றால் இல்லை.

  உலகளாவிய கருத்துக்கணிப்பும் புள்ளிவிபரங்களும் சிசேரியன் பற்றி எச்சரிக்கின்றன.

பிரசவத்தின்போது அரிதாக நிகழும் தாயின் மரணத்தைக் காரணம் காட்டி பயமுறுத்தி பெரும்பான்மையான சிசேரியன்கள் தேவையில்லாமல் செய்யப்படுகின்றன.

சிசேரியன் மூலம் பிரசவ மரணங்கள் குறைந்தது என்பது முற்றிலும் தவறான கருத்து ஆகும்.

இந்த உண்மையை 2006 நவம்பரில் WHO வெளிப்படுத்தி உள்ளது.
119 நாடுகளில் 1991 முதல் 2003 வரையான தரவுகளைத் திரட்டி வெளியிடப்பட்ட ஆவணத்தில் சிசேரியனுக்கும் பிரசவ மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது. [6]

2011 இலும் இதேபோல 193 நாடுகளில் 2000 - 2009 வரையான தரவுகளை வைத்து தேவையற்ற சிசேரியன்கள் அதிகரித்து வருவதை எச்சரித்தது. [8]

2015 இலும் இதேபோல 194 நாடுகளில் 2005 - 2012 வரையான தரவுகளை வைத்து சிசேரியன் செய்வது பிரசவ மரணங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்றும்
அது பெரும்பாலும் தேவையற்ற நிலையில் செய்யப்படுவதாகவும் அடித்துக் கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு (WHO). [7]

உலகளாவிய தரவுகளுடன் இந்த உண்மையை பல அறிஞர்களும் ஐ.நா நிறுவனஙகளும் சேர்ந்து 24.08.2015 அன்று உலகிற்கு அறிவித்துள்ளன. [5]

சிசேரியன் கலாச்சாரம் அதிகரித்து வருவதற்கு இன்றைய வாழ்க்கை முறை, பெண்களின் உடல்வலு குன்றியமை, தேவையற்ற பயம், கர்ப்பிணிகளின் கவனக்குறைவு என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கார்ப்பரேட் மயமான மருத்துவமனைகளின் லாபவெறி இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் ஆகும்.

எனவே கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உறவினர்கள் கூடுமானவரை சிசேரியனுக்கு மறுப்பு தெரிவித்து
சுகப்பிரசவத்தை எதிர்கொண்டு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. Robson classification, 1985

2. National family health survey 3 (2005 - 2006)

3. National family health survey 4 (2015 - 2016)

4. Live Mint 06.01.2016

5. Association between rates of caesarean section and maternal and neonatal mortality in the 21st century: a worldwide population based ecological study with longitudinal data.

6. Cesarean section rates and maternal and neonatal mortality in low-, medium-, and high-income countries: an ecological study.

7. Relationship Between Cesarean Delivery Rate and Maternal and Neonatal Mortality.

8. Correlation of Cesarean rates to maternal and infant mortality rates: an ecol

9. National family health survey 1 (1992 - 1993)

10. ஜேம்ஸ் காலகெர், பிபிசி - அறிவியல் மற்றும் சுகாதாரப் பிரிவு

Thursday, 20 April 2017

குழந்தைத் திருமணம் தெலுங்கர் கொள்கையே!

குழந்தைத் திருமணம் தெலுங்கர் கொள்கையே!

பெண்கள் மீதான அடக்குமுறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும்
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை.

Wednesday, 20 April 2016

மக்கட்தொகை குறைப்பு மூலம் இனவழிப்பு

மக்கட்தொகை குறைப்பு மூலம் இனவழிப்பு

ஹிந்தியாவிலேயே "மக்கள் தொகை கட்டுப்பாடு" விகிதத்தில் முதல் இடத்திற்கு வந்துவிட்டது தமிழகம்.

தமிழ் பெண்கள் குழந்தை பெறும் விகிதம் குறைந்துவிட்டது.
அதாவது பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.7 என்று ஆகிவிட்டது.

அதாவது இந்த தலைமுறையில் இருபது பேர் இருந்தால் அடுத்த தலைமுறையில் 17 பேர்தான் இருப்பார்கள்.

இது இனவழிப்பன்றி வேறென்ன?

மற்ற மாநிலங்களை விட குடும்பக்கட்டுப்பாடு தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் செய்யப்படுவது ஏன்?

இதே மற்ற ஹிந்தியர்கள் 2.7 என்ற வகையில் குழந்தை பெறுகிறார்கள்.
அதாவது இந்த தலைமுறையில் 20 பேர் இருந்தால் அடுத்த தலைமுறையில் 27பேர் இருப்பார்கள்.

வடயிந்தியரிலும் குறிப்பாக ஹிந்தி மக்கள் 3.5 என்ற விகிதத்தில் பெருகிவருகின்றனர்.

அதாவது ஹிந்தி மக்கள் 20 பேர் அடுத்த தலைமுறையில் 35 பேர் ஆவார்கள்.

இதுவே ஹிந்தி மக்கள் மற்ற மாநிலங்களில் பெருமளவு குடியேற வழிவகுக்கிறது.
இன்னும் 6 தலைமுறைகளில் இந்தியா உண்மையிலேயே ஹிந்திநாடு ஆகிவிடும்.

தமிழகத்தினுள் இன்று பல குட்டி ஆந்திராக்களும் சில குட்டி கர்நாடகாக்களும் காணக்கிடைக்கின்றன.
அதற்காவது தெலுங்கு ஆட்சி தமிழகம் வரை பரவியிருந்தது காரணமாக இருக்கலாம்.

ஆனால் எந்த வரலாற்றுக் காரணமும் இல்லாமல் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரு கிராமம் விடாமல் மூலை முடுக்கெல்லாம் மார்வாடிகள் குடியேறி உள்ளனர்.
உருது இனத்தவரும் அப்படியே.
வட தமிழகத்தில் சௌகார்பேட்டை போன்ற குட்டி ஹிந்தியாக்கள்  உள்ளன.
தென் தமிழகத்தில் குட்டி மஹாராஷ்ட்ராவும், குட்டி குஜராத்தும், குட்டி சௌராஷ்ட்ராவும் உண்டு.
சௌராஷ்ட்ரா இனத்தவர் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியையே தாய்நிலம் போல ஆக்கிவிட்டனர்.

தற்போது ஹிந்தியர்கள் தமிழகத்தின் சிறுநகரங்கள் வரை குடியேறிவருகின்றனர்.

இப்படியான 'பெருகி- குடியேறி- ஆக்கிரமிக்கும்' திட்டத்தின் மூலமே தமிழகத்தின் வடக்குப் பகுதி தெலுங்கு கன்னடவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
தென்பகுதி இலங்கையும் இவ்வாறே ஆக்கிரமிக்கப்பட்டது.

சிங்களவரின் மூதாதையருக்கு இலங்கையில் இடம் கொடுத்து குடிவைத்தது தமிழர்கள்.
சிறுபான்மையாக இருந்த சிங்களவர்கள் பெரும்பான்மைத் தமிழர்களை விட அதிக குழந்தைகள் பெற்று பெரும்பான்மை ஆனார்கள்.
1700 களில் சிங்களவர் தமிழர்களுக்கு சம எண்ணிக்கைக்கு வந்தனர்.
தொடர்ந்து தமிழ்நிலத்தில் சிறிது சிறிதாகக் குடியேறி நிலத்தையும் ஆக்கிரமித்தனர்.
இன்று சிங்களவர் பெரும்பான்மை.

இலங்கைத் தீவில் 1/3 பகுதியில் 30லட்சம் தமிழர்கள் வாழ
அத்தீவின் 2/3 பகுதியில் ஆறு மடங்கு அதிகமாக ஒன்றரை கோடி சிங்களவர்கள் நெருக்கடித்துக்கொண்டு வாழ்கின்றனர்.

இதனாலேயே தமிழர்களைக் கொன்று விரட்டி அடித்து மேலும் நிலத்தை விழுங்கத் துடியாய்த் துடிக்கிறது சிங்களம்.

சரி நாமும் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாமா?

இந்தியாவில் தமிழகம் மக்கள் நெருக்கம் அதிகமான பகுதி ஆகும்.
(தமிழர்கள் மக்கள்தொகை பெருகியபோது தாய்நிலத்திலேயே செறிவாகக் குடியேறியுள்ளனர்)
இங்கே நாம் அதிகமாகக் குழந்தைகள் பெறுவதும் ஆபத்துதான்.

தவிர சிங்களவரோ ஹிந்தியரோ இந்த 'பெருகி- குடியேறி- ஆக்கிரமிக்கும்' திட்டத்தால் அவர்களுக்கே நன்மை விளையப்போவதில்லை.
வறுமை, பற்றாக்குறை, நெருக்கடி போன்றவை அப்படியேதான் இருக்கும்.

ஒரு இனத்தின் பலம் அதன் மக்கள்தொகையையே பெரும்பாலும் சார்ந்துள்ளது.

ஆகவே குழந்தை பிறப்பு 2 முதல் 2.5 என்றவகையில் இருக்குமாறு தமிழர்கள் குறைந்தது இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
எந்தநாட்டில் இருந்தாலும் எவ்வளவு வறுமையில் இருந்தாலும் இதனைச் செய்யவேண்டும்.
இதனால் மக்கட்தொகை கூடவும் செய்யாது குறையவும் செய்யாது.

அதே நேரத்தில் வேற்றினத்தவர் நம் குடியேறுவதைத் தடுக்கவும் வேண்டும்.

பஞ்சம் பிழைக்க வந்த ஒரு குடும்பத்தை நாம் இடங்கொடுத்து வாழவைத்தால் அவர்கள் நமக்கு நன்றியுடன் இருப்பார்கள்.
ஆனால் அவர்களுடைய மகனோ பேரனோ நன்றியுடன் இருக்கமாட்டார்கள்.

அந்தமானில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தபோது வங்கதேச விடுதலை போர் நடந்ததால்  வெளியேறிய அகதிகளை அந்தமானில் குடிவைக்க தமிழர்கள் முழு ஆதரவும் கொடுத்தனர்.
வங்காளிகள் தமிழரை விட பெரும்பான்மை ஆயினர்.
இதே மலையக அகதிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் அந்தமானில் குடிவைக்க திட்டமிடப்பட்டபோது கொதித்தெழுந்த வங்காளிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து அதைத் தடுத்து நிறுத்தியதால் வேறுவழியின்றி நீலகிரியில் குடிவைக்கப்பட்டனர்.

வரலாற்றிலிருந்து பாடம் கற்பது அவசியம்.
இன்று செயாலலிதா, கருணாநிதி போன்ற அகதிகள் தமிழினத்தை ஆள இந்த மண்ணின் மகன் இலங்கை அகதி என்று கொடுமைப்படுத்தப்படும் நிலை.
இதற்கு நம் தாராள மனம்தான் காரணம்.

நம் தாய்நிலம் நாளுக்குநாள் சுருங்கிக்கொண்டே வருகிறது.
கொழும்பு, கண்டி, கதிர்காமம், அனுராதபுரம், திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, இடுக்கி, மைசூர், பெங்களூர், கோலார், சித்தூர்,திருப்பதி, நெல்லூர், கடப்பை என தமிழ் நகரங்கள் பறிபோயின.

இன்று தமிழ்த் தாய்நிலத்தின் இதயம் வரை வேற்றின உள்நுழைவுக்கு நடந்தேறி வருகிறது.
வேலியின்றி திறந்து கிடக்கும் நம் வீடு வந்தேறிகளின் வேட்டைக்காடாகி விட்டது.

இன்றைய தமிழகத்திலும் தமிழரை விட அதிகமாக வேற்றினத்தார் வாழும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
ஓசூரை ஆந்திரா விழுங்கிவிட்டது.
உதகமண்டலத்தை கர்நாடகா விழுங்கவுள்ளது.
கோயம்புத்தூரை கேரளா விழுங்கவுள்ளது.
கச்சத்தீவு வரை சிங்களவன் விழுங்கிவிட்டான்.
சிங்களம் திருகோணமலையை கூடியவிரைவில் விழுங்கி வடக்கு கிழக்கைத் துண்டித்துவிடும்.

இனியேனும் விழிப்போம் இருப்பதையாவது காப்போம்.

இனியும் தமிழகத்தில் உள்ள வேற்றினத்தவரை ஆதரிக்கவேண்டாம்.
மும்பையிலும் டெல்லியிலும் குடியேறி வாழும் தமிழர்களை அவ்வவ்வினத்தார் ஆதரிப்பதே இல்லை.
அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்துதரவில்லை.

நாம் திண்ணை வரை கொடுத்தாயிற்று.
வீட்டையாவது காப்போம்.
இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்கும் காலமிது.

"தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்"

படங்கள்:
1. மக்கட்தொகைக் குறைப்பு மாநிலவாரியாக
2.தென்னிந்திய தாய்-சேய் விகிதம்
3.மக்கட்தொகைக் குறைப்பு வட்டார வாரியாக
4.மக்கள் நெருக்கம் இந்தியாவில்
5.மக்கள் நெருக்கம் இலங்கையில்