Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Thursday, 30 May 2024

சுயமரியாதைத் திருமணம் எனும் கேலிக்கூத்து

சுயமரியாதைத் திருமணம் எனும் கேலிக்கூத்து

 25.09.1928 ரெங்கசாமி ரெட்டியார் என்கிற தெலுங்கர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார்.
 பார்ப்பனர் அல்லாமல் ஈவேரா முன்னிலையில் எந்த மத சடங்குகளும் இல்லாமல் நடந்த இதுவே முதல் முற்போக்குத் திருமணம் என்று ஈவேரா பக்தர்கள் இன்றுவரை பிரச்சாரம் செய்கின்றனர்.

 ஆனால் இதற்கு 39 ஆண்டுகள் முன்பே காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான தஞ்சாவூர்
திரு.ஜி.சுப்பிரமணியம் 1889 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டு மேடையில் இளம் வயதில் கணவனை இழந்த தன் மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்து மறுமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 அதை ஒப்பிடும்போது இந்த ரெட்டியார் ரெண்டு தாலி கட்டி மூவராக முதலிரவு அறைக்குள் சென்ற சுயமரியாதை திருமணம் ஒரு கேலி கூத்து.

 சட்டப்படி செல்லாது என்றாலும் இப்படியே திருமணம் செய்யுமாறு ஈவேரா வலியுறுத்த அதை பின்பற்றி 1930 களில் பல ஈவேரா தொண்டர்கள் இதே போல சட்டப்படி செல்லாத திருமணம் செய்து கொண்டனர்.
 திமுக 1967 இல் ஆட்சிக்கு வரும் வரை அதாவது ஏறத்தாழ 40 ஆண்டு காலம் இவர்கள் சட்டப்படி திருமணம் ஆகாதவர்கள் என்கிற வகையில் இவர்களுக்கு குடும்ப அட்டை கூட கிடைக்கவில்லை. இவர்களின் குழந்தைகள் சட்டப்படி தாய் தகப்பன் இல்லாத அனாதைகளாக இருந்தனர். 

 இப்படி பலர்  உரிய சான்றிதழ்கள் இல்லாமல் அல்லாடிய நிலையில் 1948 இல் ஈவேரா மணியம்மை திருமணம் சட்டப்படி செல்லும் திருமணமாக நடந்தது.
 ஈ.வே.ரா தம் வளர்ப்பு மகள் மணியம்மையை சுயமரியாதை திருமணம் செய்யவில்லை ஏனென்றால் அப்போதுதான் சொத்து மணியம்மை பெயருக்கு மாறும்.

 இவர்கள் செய்யாத ஏமாற்றே இல்லை!

சில தகவல்களுக்கு நன்றி: விசுவநாதன் கரிகாலன்

Wednesday, 3 October 2018

வந்தேறிகளும் ஒழுக்கமும்

வந்தேறிகளும் ஒழுக்கமும்

திராவிடியாப் பயல்கள் பார்ப்பனர் மீது போட்ட பழியெல்லாம் வந்தேறிகள் செய்து வந்தவை!

இதற்கு சிறந்த உதாரணம் ஈ.வே.ரா மணியம்மை திருமணம்.

1928இல் வயது பொருந்தாத திருமணம் கூடாது என ஈ.வே.ரா கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்,

மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும்,
பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்
(குடியரசு 03-06-1928)

1940 இல் அண்ணாதுரை எழுதிய "தாத்தா கட்ட இருந்த தாலி" எனும் கதை வயது பொருத்தமில்லாத திருமணம் பற்றியது.

அதில் ஒரு வயதான பார்ப்பனர் இளம் கன்னியைத் திருமணம் செய்வதுபோல எழுதியிருப்பார்.

ஆனால் அதன்பிறகு ஈ.வே.ரா 72 வயதில் 26 வயதான மணியம்மையை அதாவது வளர்ப்பு மகளையே திருமணம் செய்தார்.

இதை எதிர்த்து அண்ணாதுரை கட்சியை விட்டு வெளியேறினார்.
ஈ.வே.ராமசாமியை விமர்சித்து கீழ்க்கண்டவாறு எழுதினார்.

'அப்பா! அப்பா!' என்று அம்மை  மனம் குளிர, வாய் குளிர,
கேட்போர் காது குளிரக் கூறவும்;
'அம்மா! அம்மா!' என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும்;
இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.
அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார்.
(திராவிட நாடு 03.07.1949)

இதைவைத்து அண்ணாதுரை ஒழுக்கமானவர் மானமுள்ளவர் என்ற முடிவுக்கு வரவேண்டாம்.
அண்ணாதுரை இதைவிடவும் கேவலமான பின்னணி கொண்டவர்.

அண்ணாதுரை பற்றி பாரதிதாசன் எழுதியது வருமாறு,

அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை.
அன்னையோ சென்னையில் ஐயரோடு!
(குயில் 30.09.1958)

காஞ்சிபுரம் வாராகி தெரு என்பது தேவதாசிகள் வரும் தெரு ஆகும்.
அங்கே நய்யாண்டி ஐயர் என்பவரது வைப்பாட்டி பங்காரு அம்மாள் என்கிற தேவதாசிக்கு பிறந்தவரே அண்ணதுரை.

அண்ணாதுரை பிரிந்து சென்றபோது ஈவேரா அளித்த விளக்கத்தில் பிரிந்துபோனவர்கள் ஒரே சாதி என்றும் குற்றம்சாட்டினார்.
("ஈ.வெ.ரா. சிந்தனைகள்", தொகுதி 1, பக்கம் 249-250)

ஆம். தேவதாசி சாதிகளான மேளக்கார (பிற்காலத்தில் இசைவேளாளர் என்று மாற்றிக்கொண்டனர்) சாதியைச் சேர்ந்த அண்ணாதுரை, மூவலூர் ராமாமிர்தம், கருணாநிதி ஆகியோர் பிரிந்து தொடங்கியதே தி.மு.க.

ஆக பிராமண ஆதிக்கத், உயர்சாதி வெறி, நிலவுடைமை ஆதிக்கம், விபச்சாரம், பெண்ணடிமை, ஒழுக்கமின்மை, தமிழர் வெறுப்பு என வந்தேறிகள் தாம் செய்து வந்த அனைத்தையும் பார்ப்பனத் தமிழர் மீது போட்டு அதை இவர்கள் எதிர்ப்பது போல நடித்து வந்தனர்.

Friday, 7 September 2018

தன்பாலின சேர்க்கை

தன்பாலின சேர்க்கை

ஜேம்ஸ் பேர்ரி (James Barry) என்ற ஒரு மருத்துவர் இருந்தார்.
1795 இல் பிறந்த இவர் ராணுவ மருத்துவராக பல இடங்களில் பணிபுரிந்து 1865 இல் இறந்தார்.

இவர் இறந்தபிறகுதான் அவர் உடலால் ஒரு பெண் என்பது வெளியே தெரிந்தது.
இவர் குழந்தைப் பருவத்திற்குப் பிறகு முழுக்க ஒரு ஆணாகவே வாழ்ந்துள்ளார்.

இத்தகையோரை திருநம்பி என்று அழைப்பர்.

இதேபோல ஆணுடலில் சிக்கிக்கொண்ட பெண் திருநங்கை ஆவார்.
 
இவ்விரு மூன்றாம் பாலினத்தவரை தன்பாலின விரும்பிகளோடு குழப்பிக்கொள்ளக் கூடாது.

ஒரு ஆண் ஆணை விரும்புவதும் ஒரு பெண் பெண்ணை விரும்புவதும் இயற்கையானதா என்றால்,
ஆம்.
இயற்கையில் விநோதங்களில் இதுவும் ஒன்று.

விருப்பமில்லாத ஒருவருக்கு தொந்தரவு கொடுக்காதவரை தன்பாலின விரும்பிகளை நாம் வெறுக்கவேண்டிய அவசியம் இல்லை.

தமிழர்களாகிய நாம் பழமையுடன் கூடிய ஒரு முன்னேறிய சமூகமாக இருக்கவேண்டும்.
நாம் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள தடைபோடக்கூடாது.

பெண் தம்பதிகள் ஒரு ஆணிடம் விந்தணு வாங்கி செயற்கையாக கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளவும்
ஆண் தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவும் நாம் அனுமதிக்கவேண்டும்.

(இதேபோல இருபாலின விரும்பிகளும் உள்ளனர்.
இவர்கள் ஏதேனும் ஒரு பாலினத்துடன் வாழ்க்கையை நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை)


உடலால் ஆணாகப் பிறந்து மனதளவில் தன்னைப் பெண்ணாக உணரும் திருநங்கைகள் அறுவைசிகிச்சை மூலம் ஆணுறுப்பை அகற்றி பெண்ணாக மாறிக்கொள்ளவும் நாம் அனுமதி தரவேண்டும்.

உடலால் பெண்ணாகப் பிறந்து மனதளவில் ஆணாக இருப்போருக்கும் இத்தகைய உதவிகளைச் செய்யவேண்டும்.

பாலின குணாதியங்களை வைத்து வெறுப்பதோ ஒதுக்குவதோ கூடாது.

ஒருவர் தான் என்ன பாலினம் என்பதை அவரே முடிவு செய்வதுதான் இயற்கை.
அதேபோல அவர் எந்த பாலினத்தவருடன் வாழ்வது என்பதும் அவரது தனிப்பட்ட முடிவு.

அதற்காக சமூகத்திறகு எதிரான அல்லது பிறரை பாதிக்கும் பாலியல் ஆசைகள் நியாயம் என்று அர்த்தமில்லை.

படம்: ஜேம்ஸ் பேர்ரி

Saturday, 14 July 2018

தாய்மாமன் கணவனாகலாமா?

தாய்மாமன் கணவனாகலாமா?

'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தில் அக்கா மகளை மணம் செய்ய மறுக்கும் கதாநாயகனின் குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால், அக்காவின் மகளைத் திருமணம் செய்வது தமிழரின் பண்பாடே இல்லை.

அவ்வாறு செய்தால் உறவுமுறை குழம்பிப் போகும்.

உறவுமுறையில் அத்தை அல்லது மாமன் முறையில் திருமணம் செய்வதுதான் தமிழரது பண்பாடு.

ஏனப்படி?!

நாம் பழமையான இனம்.
அப்போது மக்கட்தொகை மிகவும் குறைவு.
அதனால் உறவுமுறைக்குள் திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

ஒரு ஆண்குழந்தையும் ஒரு பெண்குழந்தையும் ஒன்றாக ஒரே வீட்டில் வளர்ந்தால் அவர்களுக்குள் அண்ணன்-தங்கை உணர்வுதான் ஏற்படும்.
இதுதான் இயற்கை விதி.
(மேற்கண்ட திரைப்படத்திலும் இதைக் கூறியுள்ளனர்).

ஒரு எடுத்துக்காட்டு கூற முடியும்.
மேலை நாட்டிலே தகப்பன் பெயரே தெரியாத ஒருத்தி தன் தந்தையையே காதலித்து பிறகு அந்த உண்மை தெரியப்பெற்று மனநல மருத்துவர்களிடம் செல்கிறாள்.
அவர்கள் அவ்விருவரையும் ஒரே வீட்டில் தந்தையும் மகளுமாக சில காலம் வாழச் சொல்கிறார்கள்.
இதன் மூலம் பிரச்சனை சரிசெய்யப்பட்டதை டிஸ்கவரியில் காட்டினர்.

தமிழரின் முறைப்படி அத்தையும் மாமியாரும் ஒரே முறை.
அங்கே சித்தியின் கணவருக்கும் தந்தையின் தம்பிக்குமே வெவ்வேறு உறவுமுறைப் பெயர்கள்.

வடக்கே அவ்வாறு கிடையாது.
மலையாளிகளிலும் அவ்வாறு கிடையாது.
(ஆனால் சிங்களவர் நமது முறையை பின்பற்றுகின்றனர்)

வடயிந்தியாவில் உறவுமுறைக்குள் திருமணம் செய்வது இல்லை.
அங்கே கோத்திரம் என்றொரு முறை உள்ளது.
அது தந்தை வழி வருவது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வதில்லை.
வெவ்வேறு கோத்திரம் என்றாலும் மணமக்கள் இருவரின் தாத்தா வரை ரத்தசொந்தம் இருக்கக்கூடாது என்பது விதி.
அதாவது அவர்கள் பழமையான இனம் இல்லை.
மக்கட்தொகை ஓரளவு பெருகிய நிலையில் உருவான இனம் ஆதலால் இப்படி செய்யமுடிகிறது.
(பிராமணர்கள் கோத்திர முறை அவர்களது பெண்ணெடுத்துப் பெண்கொடுக்கும் 'மாட்டுப்பெண்' அதாவது 'மாற்றுப்பெண்' முறையால் ஏற்பட்டிருக்கலாம்.
மேலும் சிறுபான்மை சாதி என்பதால் நெருங்கிய உறவினைத் தவிர்க்க கோத்திர முறையை ஏற்றிருக்கலாம்)

அரேபியர் போன்ற பாலைவன இனங்களில் மக்கட்தொகை மிகவும் குறைவு.
எனவே அங்கே சித்தப்பா பெரியப்பா மாமா என எந்த குடும்பத்திலும் மணம் செய்கிறார்கள்.

ஐரோப்பாவில் உறவுமுறைக்குள் திருமணம் செய்வது ஆங்காங்கே நடந்துள்ளது.
சிறந்த எடுத்துக்காட்டு ஹிட்லர் குடும்பம்.
அவரது தந்தை அவரது தாயின் தாய்மாமன் ஆவார்.

தமிழ்ப் பண்பாட்டில் தாய்மாமன் தந்தைக்கு அடுத்த நிலையை வகிக்கிறார்.

தமிழகத்தில் 50 ஆண்டுகள் முன்புவரை கூட பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களே இருந்தன.
அண்ணனும் தம்பியும் ஒரே வீட்டிலேயே இருந்தார்கள்.
அவர்களுடைய பிள்ளைகள் ஒன்றாகவே வளர்ந்தன.
அவர்களுக்குள் உடன்பிறப்பு என்கிற எண்ணமே மேலிடும்.

பெண்கள் பெரும்பாலும் வேறொரு வீட்டிற்கு வாழ்க்கைப் பட்டிருப்பர்.
அவளது குழந்தைகள் அவள் பிறந்த வீட்டிலிருந்து பிரிந்தே வளர்வதால் பிற்பாடு பிறந்த வீட்டுடன் சம்பந்தம் செய்துகொள்ளத் தடை இல்லை.

சரி சித்தி மற்றும் பெரியம்மா கூட வேறு ஊரில்தான் வாழ்க்கைப் பட்டிருப்பர்.
அவர்கள் பிள்ளைகளும் எப்படி உடன்பிறப்பு ஆயினர்?

அப்போது அக்கா-தங்கை இருவரும் ஒரே வீட்டில் அல்லது ஒரே ஆணுக்கு வாழ்க்கைப்பட்டது  பரவலாக நடந்தது.

அப்போதெல்லாம் ஆண்கள் மக்கட்தொகை குறைவு.
பெண்கள் அதிகம்.
(காரணம் அன்றைய ஆபத்து நிறைந்த வாழ்க்கை மற்றும் போர் போன்ற காரணங்களால் ஆண்கள் அடிக்கடி இறந்தனர்.
இன்றும்கூட ஆண்களுக்கே அதிகம் இதயவலி வருகிறது.
இன்றும் பெண்களின் சராசரி ஆயுளே ஆண்களை விட அதிகம்)
எனவே இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்வது சர்வசாதாரணம்.

எனவே அக்கா-தங்கை பெற்ற பிள்ளைகளும் ஒரே வீட்டில் வளர்ந்தனர்.

அதனால் பெரியவர்கள் திருமண விதிகளை வகுக்கும்போது உடன்பிறந்தோர் ஒரே பாலினம் என்றால் அவர்கள் சம்பந்தம் செய்துகொள்ள தடை விதித்தனர்.
அதுவே இன்றும் தொடர்கிறது.

தெலுங்கரில் பிராமணரும் தேவதாசிகளும் (தேவரடியார் அல்ல) கலந்து ஒரு சாதி தோன்றியது.

இவர்களின் தொழில் விபச்சாரம்.
இவர்கள் தமது குடும்ப்ப் பெண்கள் மூலம் பகலில் ஆடலும் இரவில் விபச்சாரமும் செய்துவந்தனர்.
இச்சாதியில் உறவுமுறை என்றெல்லாம் எதுவுமே கிடையாது.
முதலில் சகோதரியை வைத்து விபச்சாரத் தொழிலைத் தொடங்கும் ஆண்கள்  பிறகு அவளது மகளை வைத்து விபச்சாரம் செய்தனர்.
அதற்கு வசதியாக அவளைத் திருமணம் செய்துகொண்டனர்.
இப்படி ஏற்பட்டதே அக்கா மகளை மணமுடித்தல் முறை.
பிற்பாடு இவர்கள் பதவி, அதிகாரம், சொத்து என செல்வாக்கு பெற்றனர் (இன்றும் அவ்வாறே).

இவர்களைப் பார்த்து தமிழரும் முறை தவறி அக்கா மகளை மணமுடிக்கத் தொடங்கினர்.
(எல்லா சாதிகளும் செய்வதில்லை.
சில சாதிகளில் இது சமீப காலமாகத்தான் நடக்கிறது)

விஞ்ஞானம் வளரத் தொடங்கியபோது உறவுமுறையில் திருமணம் செய்வது சரியா தவறா என்ற விவாதம் உலகம் முழுவதும் எழுந்தது.
இன்றும் அமெரிக்க மாகாணங்களில் பாதி உறவுமுறைத் திருமணங்களை அங்கீகரித்தும் பாதி தடைசெய்தும் சட்டமியற்றியுள்ளன.

நெருங்கிய உறவில் திருமணம் செய்வது பலவீனமான சந்ததியைத் தோற்றுவிக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.

தமிழர்கள் தொடக்கத்திலிருந்தே உறவுமுறையில் திருமணம் செய்துவந்துள்ளனர்.
உறவுமுறையில் மணமுடிக்க இயலாத சூழலில்தான் வெளியே பெண் எடுக்கின்றனர்.
  தமிழர்களின் இந்த பண்பாடு ஒற்றுமையான, நிலைத்த, "குடும்பங்களின் கூட்டு அமைப்பிற்கு" ஆதாரமாக உள்ளது.
சொந்தம் விட்டுப் போகாமல் இருக்கவும் சொத்து கைமாறாமல் இருக்கவும் அடிப்படையாக உள்ளது.

ஏதேனும் ஒரு குறையுடன் இருந்தாலும் வாழ்க்கைத் துணை கிடைக்க நமது பண்பாடு இவ்வாறு வழிசெய்துள்ளது.

நமது பண்பாட்டில் முறைப்பெண் மீதான முதல் உரிமை ஒரு ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முறையுள்ள பெண்ணை (சில சமயம் ஆணை) தூக்கிச்சென்று மணம் செய்துகொள்வதும் தவறாகப் பார்க்கப்பட்டதில்லை.

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்வது குறைகளைத் தோற்றுவிக்கும் என்ற கருத்து உண்மை என்றால் மற்ற இனங்களை விட தமிழர்கள் பலவீனமாகவும் குறையுடனும் இருக்கவேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லை.

சொந்தத்தில் திருமணம் செய்வதால் பரம்பரை நோய்கள் ஏற்படும் வாய்ப்பு 5% (மட்டுமே) அதிகம் என்று தெரியவருகிறது.
(ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்).

எகிப்து மற்றும் ஐரோப்பாவில் தனது ரத்தம் தூய்மையாக இருக்கவேண்டும் என்று ஒரே குடும்பத்தில் உடன்பிறப்புகளையே திருமணம் செய்து செய்து ஊனமாகி மனநலம் குன்றி அழிந்துபோன அரச பரம்பரைகளும் உண்டு.

நமக்கான நாடு அமையும்போது நமது முறைப்படி உறவுமுறையில் திருமணம் செய்வது பற்றியும் விரிவாக ஆராயவேண்டும்.

பாதிப்பு ஏற்படும் என்றால் இப்பழங்கால முறையைக் கைவிடுவதோடு 'ஒன்றுவிட்ட முறைமக்களுக்கு' முதல் உரிமை வழங்கவேண்டும்.
திருமணம் செய்யும் உறவுமுறைகளைச் சட்டமாக்க வேண்டும்.

அதுவரை அனைவரும் சொந்த சகோதரியின் மகளை மணமுடிக்கும் முறைதவறிய செயலைத் தவிர்க்கவேண்டும்.

இசுலாமியத் தமிழரும் சித்தி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தில் சம்பந்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

Thursday, 12 October 2017

ஈ.வே.ரா வளர்ப்பு மகளே மணியம்மை

"அப்பா! அப்பா!" என்று அம்மை
மனம் குளிர, வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும்;

"அம்மா! அம்மா!" என்று
கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும்;

இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார்.

- அண்ணாதுரை
(திராவிட நாடு 03.07.1949)
_________________________________

பெரியாரின் மறுபக்கம் தொடரில் (பாகம் 14) ஈ.வே.ரா - மணியம்மை திருமணம் பற்றி விமர்சித்து அண்ணாதுரை எழுதிய முழு கட்டுரையும் உள்ளது.

Sunday, 6 August 2017

பெண்ணுரிமை என்ற பெயரில் ஈ.வே.ரா உளறியவை

பெண்ணுரிமை என்ற பெயரில் ஈ.வே.ரா உளறியவை

"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது.
நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் – தேவையற்ற தொல்லையுமாகும்.
ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ளவேண்டும்"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும்.

பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வுகிடைத்துவிடும்.
(இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்)"
- ஈ.வே.ரா (குடியரசு, 16-11-1930)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)
--------
"100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்,
பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்"
- ஈவெரா (விடுதலை 6.3.1962)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது’’
--------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------

'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'

‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)

‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
சுருக்கமாக,
உலகத்தில் ஆண்கள் இருக்கக்கூடாது.
ஆண்கள் போல பெண்கள் மாறி அவர்கள் செய்வதை விட கூடுதலாக அட்டூழியம் செய்யவேண்டும்.
யாரும் குழந்தையும் பெறக்கூடாது.
திருமணம் செய்யாமல் ஒழுக்கமின்றி வாழவேண்டும்.

இதுதான் ஈ.வே.ரா முன்வைக்கும் பெண்விடுதலை.

Thursday, 20 April 2017

குழந்தைத் திருமணம் தெலுங்கர் கொள்கையே!

குழந்தைத் திருமணம் தெலுங்கர் கொள்கையே!

பெண்கள் மீதான அடக்குமுறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும்
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை.

Monday, 17 April 2017

கரண் தப்பினால் மரணம்

'கரணம் தப்பினால் மரணம்'

இதில் கரணம் என்பது திருமணத்தைக் குறிக்கும்.

உலகில் திருமணம் என்ற சடங்கு தோன்றியிராத காலத்தில் (ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை இருந்தது)
பெண்ணும் ஆணும் களவு நெறியில் ஈடுபடுவர். (தற்போதைய மேலைநாட்டு வழக்கமான டேட்டிங் போல) இதன் விளைவாக பெண் கருவுறுவாள்.
ஒருவேளை அந்த ஆண் அவளோடு வாழமாட்டேன் என்று கைவிட்டுவிட்டால் அந்தப்பெண் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இருந்தது.
இதுதான் கரணம் தப்பினால் மரணம் (கரண் = திருமணம்).
இத்தகைய தற்கொலைகள் அதிகமானதால் ஊரறிய திருமணம் செய்துகொள்வது விதியாக்கப்பட்டது.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரண் என்ப"
_தொல்காப்பியம்